வவுனியாவில் இடம்பெறும் போராட்டம் விரைவில்  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக மாறும்!!​

 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் 107 நாட்களைக்கடந்து தொடரந்துகொண்டிருக்கும் நிலையிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று (10.06) மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எங்களுடைய பிள்ளைகள் எங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் ஆனால் போராட்டமானது 100 நாட்களையும் கடந்து 107 வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் பெருமளவான மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

எங்களுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுவதுடன் அவர்களின் எண்ணம் ஈடேறாது. எங்கள் தொடர் போராட்டம் பலரின் முகமூடியை கிழித்து எறிந்துள்ளது. ஆயிரம் நாட்களானாலும் எங்கள் பிள்ளைகள் வந்து சேரும்வரை போராட்டம் தொடரும் .

ஜனாதிபதி எங்களுக்கு பதில் வழங்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் எங்கள் போராட்டம் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமாக மாறும். காணாமல் போன எமது பிள்ளைகளின் தாய்மார் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக உள்ளனர் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் கடையொன்று தீக்கிரை : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

 
வவுனியா இரட்டைபெரியகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடையொன்று நேற்று (10.06.2017) இரவு 10.30 மணியளவில் தீக்கிரையானதில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் தீவிபத்தினால் மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டி உட்பட பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன். இத் தீ விபத்து எவ்வாறு ஏற்ப்பட்டது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதி தற்காலிகமாக முடப்பட்டுள்ளது!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத பாதையில் இருந்த புகையிரத பாதுகாப்பு கடவை உடைந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியில் போக்குவரத்துத் தடை ஏற்ப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் இன்று (10.06.2017) இரவு 9.50 மணியளவில் வவுனியாவை அண்மித்தது. இதனால் வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள ( வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில்) புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்ட சமயத்தில் கடவை உடைந்து வீழ்ந்தது. இதனால் வவுனியா – வைரவப்புளிங்குளத்திற்கான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது அவ்விடத்தில் புகையிரத சமிச்சை ஒளி சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதுடன் வைரவப்புளியங்குளம் வீதிக்கான பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வவுனியா சமளங்குளம் பாலம் இனந்தேரியாத நபர்களினால் சேதம்!!

கோவிற்குளம் – சிதம்பரபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள சமளங்குளம் பாலம் நேற்று (09.06.2017) இரவு இனந்தெரியாதநபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சமனங்குளம் பாலத்தில் கட்டுமானப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் இரவு வேளையில் அவ்விடத்தில் நின்ற இனந்தேரியாத நபர்கள் பாலத்தின் தூண்கள், வீதி சமிச்சை குறியீட்டு பலகை, பாலத்தில் கீழ் மண்ணில் பதிக்கப்பட்ட புற்கள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

அவ்விடத்தில் நேற்று இரவு இளைஞர்கள் நின்று மதுபாவணையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை! வட மாகாண கல்வி அமைச்சர்!(வீடியோ)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு வலயத்தில் நேற்று  (09.06.2017) காலை 10 மணியளவில் புதிதாக நிர்மாணிக்கபட்ட அலுவலர்கள் விடுதி வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவினால் திறந்துவைக்கப்பட்டது.

அறிவினை மையமாகக் கொண்டு பாடசாலைக் கல்வியினைப் புனரமைத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கயின் நிதி உதவியுடன் வவுனியா வடக்கு கல்வி வயலத்தில் நீண்டநாள் தேவையாக இருந்த ஊழியர்கள் விடுதியினை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா அவர்கள் திறத்து வைத்தன் பின் இடம்பெற்ற வவுனியா வடக்கின் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான அதிபர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது .


மேற்படி நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பாடசாலைகளில் வகுப்பறைகளில் அதிபர் ஆசிரியர்கள் நீண்ட நேரம் கையடக்க தொலைபேசியுடன் தான் நேரத்தை செலவிடுவதாக குறிப்பிட்டதுடன் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி தடை செய்யபட்டுள்ளமையையும் சுட்டி காட்டினார் …

வவுனியாவிலிருந்து தெற்கிற்கு நோக்கி உதவிப் பொருட்களுடன் ரயில் புறப்பட்டது!!

 
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ‘மக்கள் தொடர்பாடல்’ என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் அனுசரணையுடன் முன்னெடுத்துள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த மனிதாபிமான ரயில் பயணமானது இன்று (10.06.2017) சனிக்கிழமை காலை 6 மணிக்கு வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பமாகி காலை 10.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது

மக்களிடம் இருந்து பெறப்பட்ட பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பி, புத்தகங்கள், தலையணை, மெத்தை, நுளம்பு வலை, சவர்க்காரம், பற்பசை, சுத்தப்படுத்தும் உபகரணங்கள், கட்டில் விரிப்புக்கள், துவாய், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், பாடசாலை சீருடைகள், புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், செருப்புக்கள் மற்றும் சமயலறை உபகரணங்கள் என்பவற்றை நாளையதினம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கவுள்ளனர்.

குறித்த மனிதாபிமான ரயில் பயணமானது மதவாச்சி, அனுராதபுரம், மாஹோ, கணேவத்த, குருணாகல், பொல்காவல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயங்கொட, கணேமுல்ல, கம்பஹா, ராகம, களனி, ஹுணுப்பிட்டிய, தெமட்டகொட, மருதானை, கொழும்பு கோட்டை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய ரயில் நிலையங்களில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டு செல்லவுள்ளது.

வவுனியா பூந்தோட்டத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் எதிர் எதிரே பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் சிறிய வான் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று​ (10.06.2017)​ காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது..

வவுனியா- பூந்தோட்டம் வீதியில் பூந்தோட்டம் சந்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் எதிரே வந்த வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிடம் 38 வருட தாகத்தை தணித்துக் கொண்ட இலங்கை அணி!!

சம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து நேற்று இலங்கை அணியிடம் மோதிய இந்திய அணி, அதிக ஓட்டங்கள் குவித்தும், பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாதது தான் என்றும், அவர் இலங்கை அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்.

இருந்த போதும் அவரை ஏன் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இறக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக கடந்த 1979ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் திகதி இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில், இலங்கை அணி, இந்திய அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன்பின் கடந்த 1999 முதல் 2013 வரை, இந்திய அணி, இலங்கை அணியை இங்கிலாந்து மண்ணில் 5 முறை எதிர் கொண்டுள்ளது. இதில் அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 38 வருட தாகத்தை தற்போது தணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் 6 வயதுச் சிறுமி!!

 
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் தோல் உதிரும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி ஒருவர் அவதிப்பட்டு வரும் சம்பவம் அவரது பெற்றோரை கடுமையாக பாதித்துள்ளது.

டென்னசி மாகாணத்தில் உள்ள ஓல்டுவா பகுதியில் குடியிருந்து வருகின்றனர் Megan and Tyson குடும்பத்தினர். இவர்களது மகள் 6 வயதேயான Hanna Barrott தோல் உதிரும் அபூர்வ நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

சிறுமி ஹன்னா பிறந்ததில் இருந்தே அவரது தோல் மிக வேகத்தில் முதிர்ச்சி அடைந்து வருவதால் அது வரண்டு தினசரி உதிர்ந்து வருகிறது.

சிறுமியை தாக்கியுள்ள இந்த அபூர்வ நோயானது உலகில் 600,000 பேர்களில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடியது என அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அபூர்வ நோயால் தாக்கப்பட்டுள்ள சிறுமி ஹன்னா தினசரி இரண்டு முறை மருத்துவ சகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். இதனால் வரண்டு போகும் அவரது தோலில் வெடிப்புகள் ஏற்படாமல் காக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தோல் வரண்டு உதிர்ந்து வருவதை தடுக்க முடியவில்லை என பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து கடுமையான சொற்களை கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், சிறுமியின் நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் விளக்கம் அளிப்பதே தங்களுக்கு பெரும் வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியின் தற்போதைய நிலையில் அவரது தோலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறினால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் பெற்றோர்கள் வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வாசலில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் சடலம் : கதறிய பெற்றோர்கள்!!

உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் பாக்யஸ்ரீ. இவர் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில், தனது உடல் எடையை குறைப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹெர்போ கேர் மருத்துவமனையில் தங்கி பாக்யஸ்ரீ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலைக் குறைவால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் கொடுக்காத மருத்துவமனை நிர்வாகம், பாக்யஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் சடலத்தை தூக்கி போட்டு விட்டு சென்றுள்ளனர்.

பின்னர், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்யஸ்ரீயின் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

தமிழகத்தை ஆள ரஜினிகாந்த் கனவிலும் நினைக்க கூடாது!!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் கனவில் கூட வந்துவிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தின் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில். தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி, விஷாலாக இருந்தாலும் சரி கனவில் கூட உங்களுக்கு சிந்தனை வந்துவிடக்கூடாது.

அப்படி நடைபெற்றால் மானத்தமிழன், மராட்டியன் என தமிழ்நாட்டில் சண்டை நடைபெறும் சூழ்நிலை ஏற்படும்.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜனதா ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நெருக்கடிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார்.

யாழில் சூடு பிடித்துள்ள றம்புட்டான் வியாபாரம்!!

 
றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்டபகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. ஒருறம்புட்டான் பழம் 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு

யாழில் கடும் வெப்பமுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் றம்புட்டான் பழங்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்னிலங்கையில் மல்வானைப் பகுதியிலிருந்தே அதிகளவான றம்புட்டான் பழங்கள் விற்பனைக்காகத் தம்மால் கொள்வனவு செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளில் றம்புட்டான் பழ வியாபாரம் மூலம் இரண்டாயிரம் ரூபாவை லாபமாகப்பெற்றுக் கொள்ளக் கூடியதாக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீதியில் றம்புட்டான் பழ விற்பனையில் ஈடுபட்டு வரும் இளம் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு : சித்தார்த்தன்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபைக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அதில் ஒன்று முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் என்ற ரீதியில் நிரந்தரமாக அஸ்மினுக்கு வழங்கப்பட்டது.

அவர் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரையிலும் ஒரு தமிழரசுக்கட்சி அங்கத்தவராகவே இருந்து வருகின்றார்.
மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ் விடயம் அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீலன் நியமிக்கப்பட்டு உறுப்பினராக 02 வருடங்கள் பதவி வகித்தார்.

அவருக்கு அடுத்ததாக ஒரு வருடகாலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த நடராஜா பதவி வகித்தார். தற்போது ரெலோ கட்சியைச் சேர்ந்த எஸ்.மயூரன் பதவி வகித்து வருகிறார். அவருடைய ஒருவருட சேவைக்காலம் எதிர்வரும் யூலை மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் அடுத்த உறுப்பினருக்கு உரிய பதவி எமது கட்சியைச் (புளொட்) சேர்ந்த உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும்.

இவ் விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.

அண்மையில் தொடர்ச்சியாக இவ் விடயம் தொடர்பில் கட்சி தலைமையிடம் கோரி வருகிறோம். அந்த வகையில் எந்த மாற்றங்களும் இடம்பெறாமல் எமது கட்சி உறுப்பினருக்கே குறித்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்படவுள்ள பேராபத்து : ஜோதிடரின் ஆரூடத்தால் சர்ச்சை!!

இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பயண நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பேஸ்புக் உட்பட இணைய ஊடகங்கள் ஊடாக குறித்த ஜோதிடர் போலி ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

இந்த சோதிடர் முன்னாள் அரச தலைவர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவராகும். தற்போதும் அவர் இந்த ஜோதிடரின் ஆலோசனை பெற்றுக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு போலி ஆரூடம் வெளியிட்டு மக்களுக்கு மத்தியில் மூட நம்பிக்கைகளை பரப்பும் இவ்வாறான ஜோதிடர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஜோதிடர் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விரும்பும் அபிருவித்தி அமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரதீப் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலி ஆரூடங்களை வெளியிட்டு, மக்களை அச்சப்பட வைத்தமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் பேராசிரியர் முன் வைத்துள்ளார்.

திருகோணமலை சென்ற இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

திருகோணமலையில் புத்தரின் உருவப்படம் பதியப்பட்ட ஆடை அணிந்திருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள நீரூற்று பார்வையிடுவதற்கு சென்ற பெண் ஒருவரினால் அந்த பிதேசத்தில் அசாதாரண நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணை பார்த்த மக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் திருகோணமலை பொலிஸார் நிலைமையை சமாதானப்படுத்தியுள்ளார்.

எப்படியிருப்பினும் புத்தரின் உருவத்துடனான ஆடை அணிந்தால் இலங்கையில் வரவேற்பு உள்ளதாக தான் நம்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பெண்ணின் ஆடையை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக மக்கள் பாதிப்பு!!

 
வவுனியாவில் தொடரும் கடும் வறட்சியான காலநிலையினால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கடந்த கால போக நெற்செய்கைக் காலப்பகுதியில் இருந்து கடும் வறட்சியுடனான காலநிலை நீடித்து வருகிறது.

இதனால் விவசாயிகளின் தோட்டச் செய்கை நடவடிக்கைகள், சிறுபோக நெற்செய்கை என்பன பாதிப்படைந்துள்ளதுடன், அவை கடுமையான வெப்பம் காரணமாக கருகி காட்சியளிக்கின்றன.

இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், விவசாயத்துடன் இணைந்ததாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் தமது கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி அவதிப்படுகின்றனர்.

இதேவேளை வவுனியாவின் பல பகுதிகளில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.