வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய ஆறாம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று ம 31-03 -2017 வெள்ளிகிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் நடராஜ பெருமானுக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகங்கள் முதலியன இடம்பெற்று 10.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் தனி தனி வாகனங்களிலும் நடராஜரும் பார்வதியும் அசைந்து ஆடி ஆடி வீதி வலம் வந்தமை இன்றைய தினம் விசேட அம்சமாகும்.

ஈற்றில் நடராஜ பெருமானுக்குரிய யாகம் கலைக்கப்பட்டு வழமையான மதிய பூஜையுடன் பகல் திருவிழா நிறைவு பெற மாலை மமீண்டும் வழமை போல நான்கரை மணிக்கு மகா யாகம் தொடங்கப்பட்டது .
அதன் பின் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப்  வாகனத்திலும் திருவீதி உலா வந்து மாலை திருவிழா இரவு ஒன்பது மணியளவில் நிறைவு பெற்றது.


பிரபல மொடல் அழகி விடுதி அறையில் மர்ம மரணம்!!

மாலைத்தீவின் பிரபல மொடல் அழகி வங்கதேச மருத்துவ கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் மருத்துவ கல்லூரில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் 21 வயதான Raudha Athif மொடல் அழகியே இவ்வாறு இறந்துள்ளார். பிரபல மொடல் அழகியான Raudha Athif பெண்கள் விடுதியில் தங்கி மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தின் போது Raudha Athifயின் அறை அடைக்கப்பட்டிருந்ததை கண்ட மாணவியர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

Raudha Athif தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

2014ம் ஆண்டு ப்ளூ நிற கண்களுடன் எடுக்கப்பட்ட Raudha Athifயின் மொடல் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி பிரபலமடைந்தது. இந்த புகைப்படத்தை கண்ட மாலைத்தீவு முன்னாள் பிரதமர் Raudha Athifவை புகழ்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பிரபல பத்திரகையான VOGUE அட்டை படத்தில் Raudha Athifயின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கையில் வளர்ந்த காது : செயல்பட வைத்து மருத்துவர்கள் சாதனை!!

 
சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில் வளர்த்து, அதை பொருத்தி வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள்.

3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் வளர்க்கப்பட்டது. இது ஜியின் கையில் பல மாதங்களுக்கு வளரக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் ஜி காதை வளர்க்க தொடங்கினார். கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது.

அந்தக் காது அவரது உடலில் ஒட்டி வளர ஆரம்பித்துவிட்டதாம். வளரவளர அந்தக் காது உணர்ச்சியுள்ள காதாக மாறிவிட்டதாக மருத்துவர் குவோ தெரிவித்துள்ளார்.

தற்போது நன்கு வளர்ச்சி அடைந்த அந்த காதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி காது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியுள்ளனர்.

சுமார் ஏழு மணி நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொருத்தப்பட்ட அவரது காது தற்போது நன்றாக கேட்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொல்லையால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை : கடிதத்தால் வெளியான உண்மை!!

சென்னையில் பாலியல் தொல்லை காரணமாக 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் கைப்பட எழுதி படுக்கையில் வைத்திருந்த கடிதத்தை குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், தனது சாவுக்கு பள்ளியின் தாளாளர் சரவணன் தான் காரணம் என சிறுமி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் அதிரச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் அவரது அத்தை வீட்டுக்காரரான சரவணன் பள்ளியின் தாளாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு சிறுமி அவரது வீட்டிற்கு சென்ற போது சரவணன் மயக்க மருத்து கொடுத்து சிறுமியை சீரழித்துள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்து சரவணனின் பாலியல் தொல்லை தாங்க முடியாத சிறுமி இரண்டு மாதத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, உண்மையை கண்டறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சரவணனை உறவினர் என்பதால் தண்டிக்காமல் விட்டுள்ளனர். இதனையடுத்தும் சரவணன் மீண்டும் மீண்டும் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுமியின் அத்தை கணவரான சரவணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தனது காதலை நிரூபிக்க இந்த இளைஞர் செய்ததென்ன தெரியுமா?

 
தான் காதலித்து வந்த மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து, தன்னுடைய காதல் புனிதமானது என்பதை இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படித்து வந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஃபயஸ் மற்றும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அங்கீதாவும் பார்த்த முதல் பார்வையில் காதலிக்கத் துவங்கி விட்டனர்.

ஆனால், இந்த காதலுக்கு அங்கீதாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அங்கீதாவின் பெற்றோர் அரியானாவில் உள்ள ஹிசாரில் வசித்து வருகின்றனர்.

அங்கீதாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ”அங்கீதாவை மதம் மாற வலியுறுத்த மாட்டேன். மாமிச உணவுகள் சாப்பிட வற்புறுத்த மாட்டேன். அவரது வாழ்க்கையை அவர் வாழலாம்” என்று அங்கீதாவின் பெற்றோரிடம் சொல்லிப் பார்த்துள்ளார் ஃபயஸ். ஆனால், அங்கீதாவின் பெற்றோரை சமாதனப்படுத்த முடியவில்லை.

இதற்குப் பின்னர் ஒருவரை பிரிந்து ஒருவர் இந்த உலகில் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்த காதலர்கள் இருவரும், முதலில் மகாலட்சுமி நகரில் உள்ள ராமர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

இரண்டாவது நீதிமன்றத்தில் திருமணம் செய்துள்ளனர். மூன்றாவது முஸ்லிம் முறைப்படி கோவாவில் திருமணம் செய்துள்ளனர்.

நான்காவது முறையாக கோவா பீச்சில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

தங்களது காதலை நிரூபிக்க அங்கீதாவை ஃபயஸ் நான்கு முறை திருமணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் என்ன நடந்தாலும் இவர்களது திருமணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அங்கீதாவின் தந்தை சபதம் செய்து பங்ககேற்கவில்லையாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்கள் தம்பதிகளாக அனைத்து இந்து மற்றும் முஸ்லிம் விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அங்கீதாவின் பெற்றோர், ”நாங்கள் பார்த்து இருந்தால் கூட இந்தளவிற்கு பொருத்தமான மாப்பிள்ளையை பார்த்து இருக்க முடியாது. ஃபயஸ் எங்களது மகன் போன்றவர் என்று புகழ்ந்து பேசுகின்றனராம்.

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்!!

ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற சசிகலா ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக நேற்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி திறந்த ஜீப்பில் நின்று தொப்பி சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்னு சொல்லிட்டு பிணமாக தானே கொண்டு வந்தீங்க என அவரை நோக்கி கூச்சலிட்டனர்.

அப்போது இதை பார்த்து அங்கு வந்த பெண்கள், கீழே கிடந்த அழுகிய தக்காளி, காய்கறிகளை எடுத்து சரஸ்வதி மீது வீசினார்கள். இதையடுத்து அவர் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விட்டார்

அமெரிக்காவில் பொலிசாருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

6 வயது சிறுவனை சுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் மார்க்ஸ்வெல்லி பகுதியில் Chris Few என்பவர் தனது ஆறு வயது மகன் Jeremy Mardis உடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது பொலிசார் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு வயது மகன் Jeremy Mardis பரிதாபமாக பலியானார். Chris Few படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அது தொடர்பான வழக்கு நடந்து வந்த வேளையில் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில் 6 வயது சிறுவனை சுட்டு கொலை செய்த Derrick Stafford என்ற பொலிசாருக்கு நீதிமன்றம் 55 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முச்சக்கர வண்டியில் மீட்டர் மற்றும் பற்றுசீட்டு இன்று முதல் கட்டாயம்!!

பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிக்காக பின்பற்ற வேண்டிய புதிய பல சட்டத்திட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானிக்கமைய இந்த சட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த புதிய சட்டங்களை செயற்படுத்தும் தினம் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படாத நிலையில் விசேட வர்த்தமானி வெளியிட்டு இந்த புதிய சட்டத்தை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வாடகைக்கு அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும், முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களினால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுத்தப்படும் டெக்ஸி மீட்டர் பொருத்தப்பட்டிப்பது கட்டாயமாகும்.

மேலும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்க விசேட வர்த்தமானிக்கமைய கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான பற்று சீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனங்கள் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!!

இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என்று எரிபொருள் விற்பனை நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையினால் பெற்றோல் தாங்கிகள் வெடிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக உரிய நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இதனால் பெற்றோல் தாங்கியின் அரைவாசியை மாத்திரம் பெற்றோலால் நிரப்புமாறும் ஏனைய பகுதியை வெற்றிடமாக விடுமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்திருக்கிறது.

எனினும் குறித்த நிறுவனத்தினால் முன்னெடுக்கும் பிரசாரத்தை அமைச்சர் சந்திம வீரக்கொடி முற்றாக நிராகரித்துள்ளார்.

பெற்றோல் தாங்கிகள் வெடித்துச் சிதறிய ஐந்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆனால், இதனை உறுதிப்படுத்துவதற்கான எந்தச் சான்றும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இதனால் உரிய நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வீட்டின் மீது மர்ம ஒளி தாக்கி படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!!

தமிழகத்தின் வாணியம்பாடி அருகே வானத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஒளி தாக்கியதில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்துள்ளார்.

வாணியம்பாடி அருகே துரிஞ்சாபுரம் கிராமத்தில் கடந்த 24ஆம் திகதி அதிகாலையில், புவனேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் ஒளி விழுந்தது.

அப்போது இடி விழும்போது ஏற்படும் சத்தத்தை விட, அதிக சத்தம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சக்திமிக்க ஒளி வீட்டை தாக்கியபோது வீட்டின் ஓடுகள் உடைந்து சிதறின.

இந்தச் சம்பவத்தில், புவனேஸ்வரி படுகாயமடைந்தார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நாட்றம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்பகலில் எரி கல் விழுந்து ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது

வவுனியா மாகாறம்பைக்குளத்தில் வீடுடைத்து திருட்டு!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (31.03.2017) வீடுடைத்து திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா மகாறம்பைக்குளம் கல்வியற்கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் வீட்டார்கள் திருமண நிகழ்விற்காக நேற்றையதினம் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய சமயத்தில் வீட்டின் கூறையினை உடைத்து வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டினுள் இருந்த ஒருலட்சத்தி அறுபதாயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரு தொலைபேசிகளை களவாடிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

டெஸ்ட் தரவரிசைப்படி அணிகளுக்கு பணப்பரிசுகள்!!

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட தொடரை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட தென் ஆபி­ரிக்கா 2 தர­வ­ரிசைப் புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்­றது. இதனை அடுத்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் 500,000 அமெ­ரிக்க டொலர்கள் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு பணப்­ப­ரி­சாக வழங்­கப்­பட்­டது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான 4 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2–1 என்ற ஆட்டக் கணக்கில் தன­தாக்­கிக்­கொண்ட இந்­தியா 122 புள்­ளி­க­ளுடன் தர­வ­ரி­சையில் முதலாம் இடத்தைப் பெற்­ற­மைக்­காக செவ்­வா­யன்று ஐ.சி.சி.யின் வெற்­றி­ கோலையும் 10,000,000 அமெ­ரிக்க டொலர் பணப்­ப­ரி­சையும் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை மூன்றாம் இடத்தைப் பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 300,000 அமெ­ரிக்கா டொலர்­களும் நான்காம் இடத்தைப் பெற்ற இங்­கி­லாந்­துக்கு 100,000 அமெ­ரிக்க டொலர்­களும் பணப்­ப­ரி­சாக வழங்­கப்­பட்­டது.

2016 ஏப்ரல் 1ஆம் திக­தி ­முதல் 2017 மார்ச் 31வரை­யான 12 மாத காலப்­ப­கு­தியில் ஒரு ஒற்றை டெஸ்ட் உட்­பட இந்­தியா ஐந்து தொடர்­களில் வெற்­றி­பெற்­றது. மேற்­கிந்­தியத் தீவுகள் (20), நியூ­ஸி­லாந்து (3–0), இங்­கி­லாந்து (4–0), பங்­க­ளாதேஷ் (1–0), கடை­சியாக அவுஸ்­தி­ரே­லியா (2–1) ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர்­களில் இந்­தியா வெற்­றி­பெற்­றது.

இதே காலப்­ப­கு­தியில் நியூ­ஸி­லாந்து (சொந்த மண்ணில் 1–0, அந்­நிய மண்ணில் 1–0), அவுஸ்­தி­ரே­லியா (2–1), இலங்கை (3–0), ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ரான தொடர்­களில் தென் ஆபி­ரிக்கா வெற்­றி­கொண்­டது.

அவஸ்­தி­ரே­லி­யாவின் பெறு­பே­றுகள் சிறப்­பாக அமை­ய­வில்லை. இலங்கை (0–3), தென் ஆபி­ரிக்கா (1–2), இந்­தியா (1–2) ஆகிய நாடு­க­ளிடம் அவுஸ்­தி­ரே­லியா தோல்வி அடைந்­த­துடன் பாகிஸ்­தானை (3–0) மாத்­திரம் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

நான்காம் இடத்­தி­லுள்ள இங்­கி­லாந்து 2–0 என இலங்­கையை வெற்­றி­கொண்­ட­துடன் பாகி ஸ்தான் (2–2), பங்­க­ளாதேஷ் (1–1) ஆகிய நாடு­க­ளு­ட­னான டெஸ்ட் தொடர்­களை சமப்­ப­டுத்­தி­யது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக 0–4 என தோல்வி அடைந்­தது.

டெஸ்ட் தர­வ­ரிசை (2017 மார்ச் 29 வரை)
இந்­தியா 122 (+1)
தென் ஆபி­ரிக்கா 109 (+2)
அவுஸ்திரேலியா 108 (-1)
இங்கிலாந்து 101
பாகிஸ்தான் 97
நியூஸிலாந்து 96 (-2)
இலங்கை 90
மேற்கிந்தியத் தீவுகள் 69
பங்களாதேஷ் 66
ஸிம்பாப்வே 05

(குறிப்பு: + முன்னேற்றம், – பின்னடைவு)

தனது உதவியாளராக மகள் இவன்காவை நியமிக்கவுள்ள ட்ரம்ப்!!

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் தலைமை உத­வி­யா­ள­ராக அவ­ரது மகள் இவன்கா ட்ரம்பை நிய­மிக்­க­வுள்­ள­தாக ட்ரம்ப் அறி­வித்­துள்ளார். இவன் ­காவின் கண­வ­ரான ஜெரெட் குஷ்னர் ட்ரம்பின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக பதவி வகித்து வரு­கிறார்.

அரச நிர்­வா­கத்தில் தன்­னு­டைய மக­ளான இவன்­கா­விற்கு ஆர்வம் அதி­க­மாக இருப்­பதால் வெள்ளை மாளி­கையில் இவன்­கா­விற்கு ஓர் அலு­வ­ல­கத்தை ட்ரம்ப் ஒதுக்­கினார்.

ஆனால், இது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. ‘நிர்­வாகப் பதவி எதையும் வகிக்­காமல் வெள்ளை மாளி­கையில் இவன்­கா­விற்கு அலு­வ­லகம் ஒதுக்­கு­வது தவறு’ என விமர்­சனம் எழுந்­தது.

இந்த விமர்­ச­னத்தைத் தொடர்ந்து தன்­னு­டைய முதன்மை உத­வி­யா­ள­ராக இவன்­காவை பத­வியில் அமர்த்­து­வ­தாக ட்ரம்ப் அதி­ர­டி­யாக அறி­வித்­துள்ளார்.

இதன்­மூலம் ஜனா­தி­ப­தி­யுடன் முழு நேரமும் இருப்­ப­துடன், அவ­ரு­டைய முக்­கிய நட­வ­டிக்­கை­களைக் கவ­னிக்கும் கூடுதல் பொறுப்பு தற்­போது இவன்­கா­விற்கு கிடைத்­துள்­ளது.

இந்தப் பத­வியைத் தொடர்ந்து எதிர்­கா­லத்தில் அமெ­ரிக்­காவின் அடுத்த ஜனாதிபதி பதவியில் அமர இவன்கா இப்போதே அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாத­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்கள் உயர்­த­ரத்தில் கல்வி கற்­ப­தற்குச் சந்­தர்ப்பம்!!

கல்விப் பொதுத் தரா­தர சாத­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்­க­ளுக்கும் உயர்­த­ரத்தில் கல்வி கற்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­க­வுள்­ள­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இவ்­ வே­லைத்­திட்­டத்­துக்­க­மை­வாக 26 புதிய கற்கை நெறி பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள வோட்டர் எட்ஜ் ஹோட்­டலில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், கடந்த காலங்­களில் கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்கள் தங்­க­ளது பாட­சாலை கல்­வியை கைவிட்டு சிறு தொழில் செய்யும் நிலை காணப்­பட்­டது.

இதனால் அவர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தில் எவ்­வித முன்­னேற்­றமும் இன்றி பாரிய இன்­னல்­களை எதிர்­நோக்க வேண்­டிய நிலை இருந்­தது.

ஆனால், அதனை மாற்­றி­ய­மைத்து நாட்டில் அனை­வ­ருக்கும் சிறந்த கல்­வியை ஏற்­ப­டுத்­து­வதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும். இதற்­கா­கவே நாம் கடந்த காலத்தை விடவும் அதி­க­மாக கல்­வித்­து­றைக்கு முத­லீடு செய்­துள்ளோம்.

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரணத் தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்­க­ளுக்கும் உயர்­கல்­வியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். இதன்­மூலம் குறித்த சித்­தி­ய­டை­யாத மாண­வர்­களும் உயர்­த­ரக்­கல்­வியை தொடர்ந்தும் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்­பேற்­படும்.

அவர்­க­ளுக்­கான விளை­யாட்டு தொழி­நுட்பம் உள்­ளிட்ட 26 தொழில் ரீதி­யான கற்­கை­நெறி பிரி­வுகள் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. குறித்த 26 கற்கை நெறிபிரிவுகளில் மாணவர்கள் மூன்று பாடங்களில் தங்களது கற்கை நெறியினை தொடருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இத் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக் காட்டினார்.

இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு இரண்டு சர்வதேச கிரிக்கெட் விருதுகள்!!

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் 2016ம் வரு­டத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான சேர் கார்வீல்ட் சோபர்ஸ் விருதை இந்­தி­யாவின் ரவிச்­சந்­திரன் அஷ்வின் பெற்­றுக்­கொண்டார்.

இந்­தி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான கடைசி டெஸ்ட் போட்டி முடிவில் இந்த விருதை இந்­திய உலக சம்­பியன் (1983) அணித் தலைவர் கபில் தேவ் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக வழங்­கினார்.

இந்த விரு­துடன் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் அதி சிறந்த டெஸ்ட் வீர­ருக்­கான விரு­தையும் அஷ்வின் பெற்­றுக்­கொண்டார். இந்த விருதை சுனில் காவஸ்கர் வழங்கினார்.

சம்சுங் S8, S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்!!

சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட சம்சுங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் நேற்றிரவு அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

சம்சுங் S8 மற்றும் S8+ என இரு ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனையும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சம்சுங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்சுங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அந்நிறுவனத்தின் குரல் சார்ந்த வெர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸ்பி (Bixby) என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை முதன் முதலாக சம்சுங் S8 சீரிசில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று சம்சுங் பிக்ஸ்பி அப்பிளின் சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா மற்றும் அமேசானின் அலெக்சா உள்ளிட்ட சேவைகளுக்குப் போட்டியாக அமைந்துள்ளது.

கேலக்ஸி S8 ஸ்மார்ட்ஃபோன்களில் பிக்ஸ்பி சேவையை சப்போர்ட் செய்யும் செயலிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சம்சுங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்களில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ஐரிஸ் ஸ்கேனர் இருப்பதால் பல்வேறு சேவைகளைப் பாதுகாப்பாக இயக்க உங்களது கண் பார்வை மட்டுமே போதுமானது. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு வழங்க இரு மாடல்களிலும் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மைக்ரோசொப்ட் காண்டினியம் போன்ற வசதியை புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் சாம்சங் வழங்கியுள்ளது. சாம்சங் டெக்ஸ் (Samsung Dex) என அழைக்கப்படும் இந்த சாதனம் உங்களது ஸ்மார்ட்ஃபோனை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்த வழி செய்யும். சாம்சங் டெக்ஸ்-இல் புதிய S8 ஸ்மார்ட்போனினை வைத்தால் கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம்.

முந்தைய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களைப் போன்றே புதிய ஸ்மார்ட்ஃபோனிலும் Water and dust proof வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்ஃபோன்களும் அண்ட்ரோய்ட் 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த சாம்சங் UI கொண்டு இயங்குகிறது.

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்ஃபோனில் 5.8 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும், S8+ ஸ்மார்ட்ஃபோனில் 6.2 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும் வழங்கப்பட்டுள்ளது. இவை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இத்துடன், இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் இதர சர்வதேச சந்தைகளில் எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெமரியைப் பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஒப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்களில் Fast Charging வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், S8+ ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

சம்சுங் கேலக்ஸி S8 விலை 750 டொலர்கள் எனவும் S8+ ஸ்மார்ட்ஃபோன் விலை 850 டொலர்கள் எனவும் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.