ஈழவள மநாட்டில் வடபால் நிகழும் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில் திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கு நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் இருபத்து மூன்றாம் நாள் (08.09.2016) வியாழகிழமை காலை 6.50 முதல் 8.40 மணிவரையுள்ள கன்னி லக்கினமும் அனுஷ நட்சத்திரமும் பூர்வபட்ச சப்தமியும் சித்தயோகமும் கூடிய சுப புண்ணிய வேளையில் விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும் நடைபெரும் வகையில் விநாயகபெருமான் திருவருள்பாலித்துள்ளார்.
எனவே அடியார்கள் அனைவரும் இறை சிந்தனையுடன் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து பேரருள்பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
கும்பாபிசேக நிகழ்வுகள் யாவும் ஓம் TV ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்!
யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா நேற்று 04.092016 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பான முறையில் இடம்பெற்றது.
ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க தவறுதல் அல்லது ஜாதகம் தொலைந்துப் போவதால் அவர்களது பிறந்த நாளின் பொதுப் பலனை வைத்து பெண் பார்பார்கள்.
இந்த பிறந்த நாள் வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. எப்படி ஜாதகத்திற்கு என்று தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருக்கிறதோ, அவ்வாறே பிறந்த தேதியை வைத்து பார்ப்பதற்கும் பொது பலன்கள் மற்றும் பொருத்தங்கள் இருக்கின்றன.
இந்த திகத்தியில் பிறந்தவர் எந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும், இருக்காது என்ற பலன் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்.
1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள்
1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1ஆம் எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 1, 10, 19, 28 திகதிகளும், 6, 15, 24 திகதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும்திகதிகளிலும் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிக்கும்.
2,11,20,29 ம் திகதியில் பிறந்தவர்கள்
2,11,20,29 ம் திகதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ம் திகதி பிறந்த பெண் மிகவும் சிறந்தவள் என்ற கருது நிலவுகிறது. 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பிறகு வாழ்வே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்,இவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டிருப்பார்கள். நல்ல வழித் துணையாகவும் அமைவாள். 2,11,20,29 ம் திகதியில் பிறந்தவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 திகதிகளும், மற்றும் 1, 6, 7 என்ற கூட்டு எண்ணாக வரும் நாட்களிலும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.
3,12,21,30 ம் திகதியில் பிறந்தவர்கள்
3,12,21,30 ம் திகதியில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும். 2ஆம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்துக் கொள்ளலாம், இவர்கள் உங்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31 ம் திகதியில் பிறந்தவர்கள்
4,13,22,31 ம் திகதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும். மற்றும் 5, 6 எண்களில் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். மேலும் 4ம் திகதியில் பிறந்த ஆண்கள், 6ஆம் திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1, 6 எண்ணாக வரும் திகதிகளில் செய்துக் கொண்டால் திருமண வாழ்க்கை இன்பமையமாக அமையும்.
5,14,23 ம் திகதியில் பிறந்தவர்கள்
5,14,23 ம் திகதியில் பிறந்தவர்கக்கு காதல் மீது அதிக மோகம் இருக்கும். தைரியமாக காதலில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய திகதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் திகதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
6,15,24 ம் திகதியில் பிறந்தவர்கள்
6,15,24 ம் திகதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும். 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்துவிடுவது நல்லது. மற்றும் திருமண நாளை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய திகதிகள் அல்லது 1, 6, 9 போன்ற கூட்டு எண் வரும் நாட்களில் செய்துக் கொண்டால் நல்ல நன்மை பெறலாம்.
7,16,25 ம் திகதியில் பிறந்தவர்கள்
7,16,25 ம் திகதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8ம் திகதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.
8,17,26 ம் திகதியில் பிறந்தவர்கள்
8,17,26 ம் திகதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம்செய்துக் கொள்ளலாம். 2, 7 மற்றும் 8ஆம் என்னில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. 9ஆம் திகதியில் பிறந்த பெண்கள் இவர்களை அடக்கி ஆள முயல்வார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் இல்வாழ்க்கை செழிக்கும்.
9,18,27 ம் திகதியில் பிறந்தவர்கள்
9,18,27 ம் திகதியில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த நாட்டமும், முனைப்பும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் அதிகம். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால் திருமண வாழ்க்கை துயரமாக அமைய வாய்ப்புகள் உண்டு. 3, 6, 9, 1 ஆகிய நாட்களில் திருமணம் செய்துக் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்.
வவுனியா வன்னி பட்டறை சமூக அமைப்பினரின் தொடர்பகத்தில் யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்க கனடாவில் வசிக்கும் நிரஞ்சனி சந்திரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
யுத்தத்தினால் கணவனை இழந்து பிள்ளைகள், வறுமமைக்கோடு காரணமாக கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளாதிருக்கும் மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழ்ஙகிவைக்கப்பட்டது.
தமிழ் விருட்சம் சமூக அமைப்பின் தலைவர் திரு.திருமதி சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பொருளாலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்விற்கு தாலிக்குளம், மகாறம்பைக்குளம், பாரதிபுரம், வேப்பங்குளம், வீரபுரம், மதகுவைத்தகுளம் போன்ற பகுதியிலிருந்து பெற்றோருடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்று (05.09.2016) திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பை ரதம் வெள்ளோட்டம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதேவேளை வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா நேற்றுமுன்தினம் (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வரும் 10.09.2016 சனிக்கிழமை அன்று வேட்டைத்திருவிழாவும், 11.09.2016 ஞாற்றுக்கிழமை சப்பரத்திருவிழாவும், 12.09.2016 திங்கட்கிழமை தேர்திருவிழாவும், 13.09.2016 செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கிச் பயணித்த இளைஞனின் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன் உட்புகுந்து தொங்கிய நிலையில் பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இச் சம்பவத்தில் பலியான இளைஞன் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை நேற்று மாலை மல்லாவியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
உந்துருளியில் வேகமாக சென்றபோது உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த இளைஞன் மின்சார கம்பத்துடன் மோதுண்டு இரண்டு தூண்களுக்கு இடையில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கு 45 வயதான ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி 26 வயதான துஷாந்தினி வசித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி துஷாந்தினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன் போது அதே முகாமில் வசிக்கும் அவரது உறவினரான தயாபரன், துஷாந்தினியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
இந்நிலையில், தயாபரனிடம் இருந்து தப்பிக்க, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் துஷாந்தினி.
இதனையடுத்து, ஆபத்தான நிலையில் சென்னை அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துஷாந்தினி, நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வாலாஜாபேட்டை பொலிஸார் தயாபரனை கைது செய்துள்ளனர். உயிரிழந்த துஷாந்தினிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில் பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 மாதங்களுக்குள் பேஸ்புக் தொடர்பாக 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகஇலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழையும் சம்பவங்கள் தொடர்பாகஅதிகம் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப்பிரிவின்பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள்சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இணையங்களுக்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து அதன் தகவல்களைமாற்றியுள்ளமை தொடர்பில் 6 முறைப்பாடுகள் இந்த வருடத்திற்குள்கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இணையம் ஊடாக நிதி மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பாகவும் இதுவரை 5முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் மாடுகள் மற்றும் எருமைகளுக்கான ஓட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல மாடுகளும் எருமைகளும் இப் போட்டிகளில் பங்குபற்றின.
மாகேபுங் எனும் இவ் விளையாட்டு விழா பாலி தீவிலுள்ள மேற்கு ஜெம்ப்ரானா மாவட்டத்தில் இரு விவசாய சமூகங்களால் பாரம் பரியமாக நடத்தப்படுகிறது.
திருமணத்துக்காக கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த வாரம் ஏ.ரீ.எம். நிலையங்களுக்கு பணத்தை நிரப்ப சென்ற வேன், பணத்துடன் கடத்தப்பட்டது. அதிரடியாக பூக்கடை துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான பொலிஸ் குழு களமிறங்கி வேன் சாரதி ராஜேஷ், அவரது நண்பர் லிங்கம் ஆகியோரை கைது செய்தது.
அயனாவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ஏ.ரீ.எம் நிலையங்களுக்கு பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பாரிமுனையில் உள்ள ஏ.ரீ.எம் நிலையங்களுக்கு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது. 50 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வேனில் இருந்துள்ளது.
குறுகிய சந்தில் இருந்த ஏ.ரீ.எம் நிலையத்துக்கு வேன் செல்ல முடியாததால் வீதியில் வேனை நிறுத்தினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் பணம் ஏ.ரீ.எம் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சமயத்தில் பெரம்பூரை சேர்ந்த சாரதி ராஜேஷ் மட்டும் வேனில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வேனை விட்டு இறங்கி ராஜேஷ் பேசியுள்ளார்.
இந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் வேனை எடுத்த மர்ம நபர்கள், அங்கிருந்து சென்றுள்ளனர்.
ராஜேஷும் திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து பாதுகாவலர்கள் அங்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து வடக்கு கடற்கரை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வேன் இலக்கம் மற்றும் அடையாளம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் ராயபுரம் பகுதியில் வேன் மட்டும் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வேனை பறிமுதல் செய்த பொலிஸார், தொடர்ந்து பணம் கொண்டு சென்ற நிறுவன ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.
அப்போது சாரதி ராஜேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தனியாக பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் பொலிஸார் ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதே ராஜேஷ் என்பது பொலிஸாருக்கு தெரியவந்தது. உடனடியாக ராஜேஷை பொலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து வேனைக் கடத்திய ராஜேஷின் நண்பரான வியாசர்பாடியை சேர்ந்த லிங்கத்தையும் பொலிஸார் கைது செய்து இருவரிடமிருந்து 26 இலட்சம் ரூபாயை மீட்டனர்.
பணம் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சாரதி இல்லாத சமயத்தில் அங்கு பணிக்கு செல்வார் ராஜேஷ். அப்படி தான் நேற்றும் வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஷின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம். 8ஆம் தரம் வரை படித்த அவருக்கு வேன் வாங்கியதில் 4 இலட்சம் ரூபா கடன் உள்ளது.
மேலும், நேற்று முன்தினம் சிறுனியத்தில் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்துக்கு தேவையான பணமும் கையில் இல்லை. இந்த சமயத்தில் இலட்சக்கணக்கான பணத்தை பார்த்தவுடன், லிங்கத்தின் மூலம் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேஷியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ரா ஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐவரைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பலத்த தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் அன்சார், கோலாலம் பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேஷிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி டத்தோ முஹம்மத் அத்னான் அப்துல்லாஹ் மேற்படி சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் கைத செய்யப்பட்ட நபர்கள் பற்றிய மேலதிக விபரங்களை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதேவேளை மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகரை அழைத்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள வெளிவகார அமைச்சின் செயலாளர், விரும்பத்தகாத இச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு சென்றிருந்த அமைச்சர் தயா கமகேவை வழியனுப்பும் பொருட்டு மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நேற்று முன்தினம் மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற சமயமே அங்கு குழுமியிருந்த ஒரு குழுவினர் அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி. காணொளியும் மலேசிய ஊடகங்களில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற மேலாடை அணிந்திருக்கும் உயர்ஸ்தானிகர் அன்சாரை துரத்தி வரும் 5க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்குதல் நடாத்தும் காட்சி சி.சி.ரி.வி.யில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
உயர்ஸ்தானிகரை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தவாறே அவரது முகத்திலும் தலையிலும் ஐவர் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தும் காட்சியும் மற்றொருவர் உயர்ஸ்தானிகரின் வயிற்றுப் பகுதியில் கால்களால் உதைக்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
அதே சமயம் அவ்விடத்துக்கு வரும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் உயர்ஸ்தானிகரின் உதவியாளர்களும் அவரை தாக்குதல்தாரிகளிடமிருந்து மீட்டு அழைத்துச் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கொலைச் சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
48 மணி நேர தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் எட்டு பேரும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர்களை இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குரித்த சந்தேக நபர்கள் தொடர்பில் அடையாள அணிவகுப்பினை நடாத்த பொலிஸார் மன்ரை கோரியுள்ள்Kஅ நிலையில் கைதனோரின் அடையாளத்தை வெளிக்கடடாது அவர்களை முழுமையாக மறைத்த நிலையில் மன்றில் ஆஜர் செய்யவும் மீள அவர்களை சிறைக்கு கொண்டு செல்லவும் நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட வர்த்தகர் பயன்படுத்திய தொலைபேசியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்ப்வம் இடம்பெறும் போது சந்தேக நபர்கள் சிலர் அணிந்திருந்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவையும் நீதிமன்றில் வழக்குப் பொருளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.
இதனைவிட ஏற்கனவே பிரதான சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய மட்டக்குளி பகுதியின் வாடகைக் கார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்ப்ட்ட டொயாடோ ரக கார் மற்றும் 8 ஆவது சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய கடுகண்னாவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கொலைக்கு பயன்படுத்தப்ப்ட்ட கத்தி ஆகியனவும் மன்ரில் வழக்குப் பொருளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது. ஆனால் இந்த புகைப்படங்கள் அவற்றை பொய்யாகியுள்ளது.
ஜப்பானின் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்த சிங்கம் மற்றும் புலி குட்டிகள் இரண்டும் இணைப்பிரியாத நண்பர்கள் ஆகியுள்ளது. இது அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
7 வயது சிறுவன் ஒருவன் சிறிய தாயினால் சுடுநீர் முகத்தில் ஊற்றப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் (அந்தோணிமலை) தோட்டத்தில் சிறிய தாயொருவர் தனது 7 வயதான மகனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ளார்.
இவ்வாறு பாதிப்புக்குள்ளான சிறுவன் எஸ்.சிவராஜ் (7 வயது ) எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சிறுவனின் தாய் இறந்துவிட்ட பின்னர் சிறுவனின் தந்தை மறுமணம் முடித்துள்ளார். இவர்களின் இருவரிடையே வாழ்ந்து வருகின்ற குறித்த சிறுவனுக்கு தனது தந்தை இரண்டாவதாக திருமணம் முடித்த பெண்ணே இவ்வாறு சுடுநீரை ஊற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணை கைது செய்யும் நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.