மக்களுடைய வாழ்வாதாரத்தினை பாதிக்கின்ற செயற்பாட்டில் இராணுவத்தினர் செயற்படுகின்றனர்!!

 
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்று வருகின்றது.

அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே பொதுமகன் ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு தனது ஆதங்கங்களை வெளியிட்ட அவர்,

பொதுமக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் அபகரித்து வியாபார நிலையங்களை அமைத்துள்ளனர். வவுனியா குடியிருப்பில் அமைக்கப்பட்ட பொதுமண்டபத்தினை அபகரித்துள்ள இராணுவம் இன்று வரை வெளியேறவில்லை .

மக்களுகென அமைக்கப்பட்ட ஒரு பொது இடத்தினைக்கூட இராணுவம் வழங்கவில்லை. மக்களுடைய வாழ்வாதாரத்தினை பாதிக்கின்ற செயற்பாட்டில் இரானுவத்தினர் செயற்படுகின்றனர். வடக்கில் குறிப்பாக தாண்டிக்குளத்தில் இராணுவ உணவகம் காணப்படுகின்றது.

நடந்து முடிந்த முடிந்த யுத்தத்திற்குப் பின்னரான செயற்பாடுகளில் சரியான முறையில் நீதி செயற்பட வேண்டும். நீதி நாட்டில் நல்ல முறையில் இருந்தாலும் தமிழ் மக்களை பொருத்தவரையில் நீதிதுறையினரால் சரியான முறையில் நீதி கிடைக்கவில்லை.

வவுனியாவை எடுத்துக்கொண்டால் கனகராயன்குளத்தில் பாடசாலை மாணவி பாலியல் வண்புனர்வின் பின்னரான படுகொலை வழங்கு அண்மையில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் சந்தேக நபர்களை அடையாளம் கண்பித்திருந்த போதும் அந்த வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இங்கும் நீதி கிடைக்கப்படவில்லை.

வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளில் கூட நீதி கிடைக்கப்படவில்லை. பல கொலைகளைச் செய்யதவர்கள் கூட நடமாடுகின்றனர். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. 2009ம் ஆண்டு நடந்த படுகொலைகளுக்கு கூட தீர்வுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

1 DSC_0004 DSC_0006 DSC_0007

கிரிக்கெட் ரசிகர்களை வியப்பூட்டிய திமுத் கருணாரட்ணவின் ஆட்டமிழப்பு!!(காணொளி)

Dimuth

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு ஆட்டமிழப்பு இடம்பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவரும் இலங்கை அணியின் திமுத் கருணாரட்னவின் ஆட்டமிழப்பே வியப்பூட்டும் வகையில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நெதன் லியன் வீசிய பந்தில் திமுத் கருணாரட்ன விக்கெட் காப்பாளர் பீட்டர் நெவிலினால் ஸ்டம்ப் செய்து ஆட்டமிழப்பு செய்யப்பட்டார்.

குறித்த ஆட்டமிழப்பானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்பயிற்சி!!

 
முல்லைத்தீவு நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் பொலிஸ் பிரிவினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கடலில் பயணிக்கும் போது இயற்கை அனர்த்தம் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடலில் மூழ்க நேரிட்டால் இலகுவான முறையில் எவ்வாறு நீந்திக்கரை சேர்வது தொடர்பாகவே பயிற்சிகள் நடை பெற்றுள்ளதாக பாதுகாப்பன வாழ்வு பொலிஸ்பிரிவு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பயிற்சி இன்று காலை 10.00 மணியில் தொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெற்றுள்ளது.

பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு பொலிஸ்மா அதிபர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4

மறைந்த நா.முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கின்றார்கள் : தங்கர் பச்சான் வேதனை!!

Thangar Pachan

நா.முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள் என்று இயக்குனர் தங்கர்பச்சான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது..

தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே அது இதுதானா. கல்லூரியில் படிக்கின்றான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான் 1993ம் ஆண்டில் எனது வெள்ளைமாடு நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார்.

24 மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதிவரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பிதான்.

அவனிடம் நான் அன்பு காட்டியதைவிட அதிகமாக திட்ட மட்டுமே செய்திருக்கின்றேன். ஓய்வற்ற அவனது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்விடும் என்பதையும் எச்சரித்திருக்கிறேன்.

அவன் உடல்நலத்தைப்பற்றி என்னைவிட கவலைப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களா எனத் தெரியவில்லை. தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து மொத்தமாக தூங்கப்போய்விட்டான் என் முத்து.

அவனது பாடல்களும், கவிதைகளும், எழுத்துகளும் மட்டுமே நமக்கு தெரியும். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக நேற்றோடு புகழ்ந்து முடித்துவிட்டோம். அப்பா என்றுகூட இன்னும் சொல்லவராத இந்த குழந்தையை வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறேன் அண்ணா என என்னைப் பிடித்துக்கொண்டு கதறிய முத்துக்குமார் மனைவியின் குரலுக்கு இங்கே என்ன பதில் இருக்கின்றது. நான் இருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது.

மீண்டும் முத்துக்குமாரைப்போல் அவனது இளந்தளிர்களும் இந்த போலியான உலகத்தில் போராடி கரைசேர வேண்டும். அவன் 1500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித்தான் என எனக்குத்தான் தெரியும்.

சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக்கொடுக்காத முத்துக்குமாருக்கு பெரும்பொருளாக அது சேரவேயில்லை. நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. பணமில்லாமல் எதுவும் நடக்காத இந்த நாட்டில் இந்த கவிஞனின் பிள்ளைகளும் அவன் போன்ற பண்புள்ள சிறந்த மனிதாக வாழ்ந்து காட்டத்தான் வேண்டும்.

இனி முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு ஒரு பெரிய கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத்தான் இந்த 15 ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான். படைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள்தான்.

எண்ணற்ற எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு நினைவுநாளில் மட்டும் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்துகொண்டு சிலைக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கிறோம்.

இவர்கள்தான் தமிழர்கள். இதுதான் தமிழ் பண்பாடு. முத்துக்குமாருக்கு இப்போது புரியும். தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்பது என்று அவர் கூறியுள்ளார்.

ஆண்களின் இல்லற வாழ்வினை சீரழிக்கும் இணையம்!!

Internet

இளைஞர்கள் இணையத்தின் ஊடாக அதிகளவில் பாலியல் படங்களை பார்ப்பதால் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருகின்றது. இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு தன்மை செயலின்மை பிரச்சினையின் நிமிர்த்தமாக வைத்தியசாலைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் மற்றும் இதய பிரச்சினைகள் காரணமாக வைத்தியசாலைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

இணையவழி மூலம் ஆபாசப் படங்களை பார்க்கக் கூடிய வசதி இப்போது எளிதாகக் கிடைப்பது சில பாலியல் உறவுகளை சேதப்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.

இணையத்தின் ஊடாக ஆபாசப் படங்களை பார்வையிடும் இளம் ஆண்களின் மூளைகள் நிஜ பெண்களை மறந்து கணினிகளில் பார்க்கக்கிடைக்கும் படங்களோடு ஒன்றிவிடுவதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

அதிருப்தியில் அப்பிள் நிறுவனம்!!

Apple

அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்கள் உட்பட ஏனைய உற்பத்திகளை பயனர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

பலத்த வரவேற்பைப் பெற்ற இவ் வசதி உலகின் பல பாகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்த வேளை பாரிய சிக்கலை அப்பிள் நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது.

அதாவது அவுஸ்திரேலியாவை சேர்ந்த குறித்த சில வங்கிகள் Apple Pay முறையினை ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு காரணம் அத் தொழில்நுட்பத்தினை குறித்த வங்கிகள் விளங்கிக்கொள்ளாமையே என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இத் திட்டத்தினை அமல்ப் படுத்துவதற்கான பிரேரணையில் கைச்சாத்திட்ட போதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அவ் வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

இதேவேளை Apple Pay முறைமை எவ்வாறு செயல்படுகின்றது என்ற தெளிவினைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவுஸ்திரேலியாவிலும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஐ.எஸ் அமைப்பின் புதிய மரண தண்டனை!!

iraq isis 4.jpg

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை மனிதாபிமானமின்றி கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் தூக்கிப் போட்டு கொல்லும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் ஷரியா நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர், ஈராக்கின், மொசூல் நகரில் 6 கைதிகளை தார் டேங்கில் தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர்.

இதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 25 கைதிகளை ஆசிட்டில் தூக்கிப் போட்டு கொன்ற மனிதாபிமானமற்ற செயலும் நடந்துள்ளது.

மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்த அவர்கள் கண் முன் இந்தக் கொடுமையை ஐஎஸ் தீவிரவாதிகள் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் இச்செயல்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மக்களை நாய் இறைச்சி சாப்பிட வலியுறுத்தும் வட கொரியா ஜனாதிபதி!!

Dog1

நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

வட கொரியாவை சேர்ந்த அரசு ஊடகங்களான DPRK Today, Tongil Voice உள்ளிட்ட சேனல்கள் இந்த பரபரப்பு தகவலை மக்களிடம் பரப்பி வருகின்றன.

ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத அளவிற்கு நாய் இறைச்சியில் அதிகம் விட்டமின் உள்ளது.

எனவே, இவற்றை குடிமக்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என ஜனாதிபதி கிம் யோங் –அன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு நாயை சித்ரவதை செய்து கொன்ற பிறகு அதன் இறைச்சியை சாப்பிட்டால் அது மேலும் சுவையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் நாய்களை அடித்து துன்புறுத்திய பிறகு தான் கொல்ல வேண்டும் என அந்த ஊடகம் வலிறுத்தியுள்ளது.

வட கொரியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், குறிப்பாக, நாய்க் குட்டிகளின் மிருதுவான இறைச்சி நோயாளிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது என தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்!!

kerela

ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என கேரள மாநில கலால் வரித்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் உள்ள கொச்சி நகரில் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலால் வரித்துறை ஆணையரான ரிஷிராஜ் சிங் நேற்று பங்கேற்று பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

அப்போது, ‘நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. நாட்டில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகள் முறைத்து பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்பது நாட்டில் பலருக்கும் தெரியவில்லை.

பெண்கள் பற்றி தகாத முறையில் பேசுவது அநாகரீகமாக பேசுவது உள்ளிட்டவற்றை பெண்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாது. இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்கள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்’ என ஆணையர் பேசியுள்ளார்.

எனினும், ஆணையரின் இந்த பேச்சு ஆண்கள் மத்தியில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது.

இது குறித்து இணையத்தளவாசிகள் கருத்து தெரிவித்தபோது, ‘ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் தொடர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு மீண்டும் 13 விநாடிகள் பார்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பெண்ணை பார்க்கும் ஒரு ஆண் கண்ணாடி அணிந்திருந்தால் அவர் எவ்வளவு நேரம் பார்க்கிறார் என எப்படி நிரூபிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணையரின் இந்த கருத்து குறித்து சட்ட வல்லுநரான உதயபானு என்பவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஒரு பெண்ணை வெறுமனே பார்த்தால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இல்லை.

பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டினால் அல்லது அவர்களை கண்ணியக்குறைவாக நடத்தினால் மட்டுமே அவர் மீது வழக்கு பதிவு செய்ய இந்தியச் சட்டத்தில் இடம் உள்ளது’ என உதயபானு தெரிவித்துள்ளார்.

பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளால் காதல் களமானது ஒலிம்பிக் மைதானம்!!(படங்கள்)

1

ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை.

வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார்.

நெகிழ்ந்து போன ஹே சி, கின்னின் காதல் பரிசை ஏற்றுக்கொண்டார். கின் காயும் நீச்சல் வீரரே. அவர் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். கின்னின் காதல் பரிசு குறித்து ஹே சி கூறும்போது,

அவர் என்னிடம் இன்று தனது திருமண எண்ணத்தை தெரிவிப்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மோதிரத்தை கையில் ஏந்தியடி கின் அடுக்கடுக்கான வாக்குறுதிகளைத் தெரிவித்தார். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பேன் என கின் கூறியது என்னை மிகவும் நெகிழ வைத்தது என்றார். கின் கூறும்போது,

இன்று நான் என் திருமண ஆசையை வெளிப்படுத்துவேன், அதுவும் ஹே சி வெள்ளிப் பதக்கம் வென்றவுடன் மைதானத்திலேயே வெளிப்படுத்துவேன் என சற்றும் நினைக்கவில்லை. இவ்வளவு விரைவில் திருமண பந்தம் கைகூடும் எனவும் நினைக்கவில்லை என்றார் கண்ணில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.

இந்த சீன ஜோடிக்கு முன்னதாகவே ரியோ டி ஜெனீரோவில் பிரேசில் ஜோடி ஒன்று மைதானத்தில் காதலை பறிமாறிக் கொண்டது.

கடந்த வாரம் திங்கட்கிழமையன்று பிரேசில் ரக்பி விளையாட்டு வீராங்கனை இசாடோரா செருலோவின் காதலி மர்ஜோரி இன்யா, அவரின் விரலில் தங்க நிற ரிப்பனைக் கட்டித் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

2 3 4 5 6

பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பு!!

Body

பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பதாகவும் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை என மேலும் தெரிவித்தனர்.

பிஸ்கட், பணம் கொடுத்து 7வயதுச் சிறுவன் 18 வயது இளைஞனால் பாலியல் துஸ்பிரயோகம்!!

Boy

மட்டக்களப்பு காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது அப்பிரதேசத்திலுள்ள 18 வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதையடுத்து, வீடு வந்த சிறுவன் தாயிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுவனை அழைத்துக் கொண்டு சிறுவனின் தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதரவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணை செய்த பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.நிசாந்த தலைமையிலான பொலிஸ் குழு குறித்த சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்கைச்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனுக்கு 25 ரூபா பணமும் ஒரு பிஸ்கட் பக்கட்டும் வழங்கி அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாலாவ முகாம் வெடிப்பினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி!!

1

அவிசாவளை சாலாவ இராணுவ ஆயுத முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அதன் அருகில் காணப்பட்ட இடிபாடுகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவர் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக சாலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையத்தில் உள்ள இடிபாடுகளை 68 வயதுடைய அதன் உரிமையாளர் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதன்போது சுவர்கள் இவர் மீது திடீரென வீழ்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய நபரை மீட்ட பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு அனுமதித்த போதிலும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் கடந்த ஜுன் மாதம் திடீர் வெடிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அதனை அண்மித்த 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதடைந்ததோடு, தற்போது அவற்றை புனர்நிர்மானிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.

குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிகொடுத்த யுவதி சிறையில் அடைப்பு!!

1

கடந்த கால குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிக்கொடுத்த அமெரிக்க யுவதியொருவர், மற்றொரு குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கெய்ட்லின் சிபுவென்டஸ் எனும் இந்த யுவதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் கோர்பஸ் கிறிஸ்டி நகரின் அழகுராணியாக கடந்த ஜூன் மாதம் முடிசூட்டப்பட்டிருந்தார்.

ஆனால் கெய்லின் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்டவர் என்பதும் அவர் ஏற்கெனவே திருமணம் செய்தவர் என்பதும் பின்னர் தெரிய வந்தது. இதனால் அவர் அழகுராணியாக தெரிவு செய்யப்பட்டமை விதிகளுக்கு முர ணானது என சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

கெய்ட்லின் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிராக போட்டி யாளர்களான யுவதிகள் சிலர் சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இதனால் கடந்த மாதம் கெய்ட்லின் சிபுவென்ட ஸின் அழகுராணி பட்டம் அப் போட்டி ஏற்பாட்டளர் களால் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப் போட்டியில் இரண்டா மிடம் பெற்றிருந்த வலே ரியா பரேரா எனும் யுவதி புதிய அழகுராணியாக முடி சூட்டப்பட்டார். இவரும் கெய்லினின் தெரிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 25 வயதான கெய்லின் சிபுவென்டஸ், 2013 ஆம் ஆண்டு மது போதையில் வாகனம் செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருந்தார். பின்னர் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின் பல நிபந்தனைகளின் அடிப்படையில் நன்னடத்தை கண் காணிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இரவு விடுதிகளுக்கு செல்லக்கூடாது என்பதும் இந் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

இந்நிலையில், கெய்ட்லின் இரவு விடுதியொன்றுக்கு சென்றமை தெரிய வந்ததைய டுத்து கெய்ட்லினை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்தவாரம் பொலிஸாரிடம் கெய்ட்லின் சரணடைந்தார். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அழகுராணி போட்டி தொடர்பான நிகழ்வொன்று மேற்படி இரவு விடுதியில் நடைபெற்றதாலேயே கெய்ட்லின் அங்கு சென்றார் என அவரின் சட்டத்தரணி கூறினார்.

எனினும், அவர் நன்னடத்தை விதிகளை மீறியதால் அவரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 3 4

கடத்தப்பட்ட குழந்தை 17 வயது யுவதியாக மீட்பு!!

Kidnap

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவில் குரூட் செக்குர் வைத்தியசாலையில் கடந்த 1997ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர்.

தாய் மயக்கமாக இருந்த போது ஒரு பெண் பிறந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றார். அதை தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்தார்.

இதற்கிடையே கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 17 வயது நிரம்பிய நிலையில் ஒரு பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார். அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவரது முகத் தோற்றத்தில் இருந்தார்.

எனவே உடன் படித்த இவரது தோழிகள் அந்த மாணவி உனது உடன் பிறந்த சகோதரியா? என கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் குழந்தையை கடத்திய பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது, அவள் தனது மகள் என்றாள். அவளது பதில் திருப்தி அளிக்காததால் பொலிசில் புகார் செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றில் நடந்தது. அப்போது டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் அவள் கடத்தப்பட்ட குழந்தை ஷெபானி நர்ஸ் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து நீதிமன்றம் 17 ஆண்டுகளுக்கு பிறகு கடத்தப்பட்ட சிறுமி ஷெபானி நர்ஸ்ஸை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தையை கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமைச்சரின் செருப்பை மாட்டிவிட்ட காவலர் : வீடியோவால் வெடித்த சர்ச்சை!!

Mini

ஒடிசா மாநிலத்தில் அமைச்சரின் செருப்பை காவலர் ஒருவர் மாட்டிவிட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கெயோஞ்ஜர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற 70வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒடிசா மாநில சிறு, குறுந்தொழில் துறை அமைச்சர் ஜோகேந்திர பெஹெரா கலந்துகொண்டார்.

சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை அமைச்சர் ஏற்றியுள்ளார், தேசியக்கொடி பறக்கதொடங்கியதும் அமைச்சர் கழற்றி வைத்திருந்த அவரது செருப்பை தனிப்பட்ட பாதுகாவலர் அமைச்சரின் காலில் மாட்டிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பட்டதையடுத்து, பல்வேறு கண்டங்கள் குவிந்துள்ளது, மேலும் மந்திரியின் இந்த செயல் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி தொடர்வதையே காட்டுகிறது என்றும் அமைச்சரின் செயலுக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மந்திரி ஜோகேந்திரா கூறியதாவது, ‘‘நான் மிக முக்கிய பிரமுகர். நான் தான் கொடியை ஏற்றினேன், அவர் இல்லை” என கூறியுள்ளார்.