இரவில் பாம்பாக மாறும் மனைவி :;அழுது புலம்பி கணவன் முறைப்பாடு!!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி , தன்னை கடித்துக் கொல்ல முயற்சித்ததாக கணவன் முறைப்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, ​​ தமது பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ​​மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர், “ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்” என்று கூறி முறைப்பாடு அளித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது என்னைக் கொல்லக்கூடும்” என்றும் அவர் புலம்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த முறைப்பாடு குறித்த விசாரணை செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணைப்பிரிவு நீதிபதி மற்றும் பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை!!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : சாரதிகள் இருவரும் காயம்!!

ஹட்டனில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உந்துருளிகளின் சாரதிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கியும் பயணித்த இரண்டு உந்துருளிகளும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு உந்துருளிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் குறித்த விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்!!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவர், நேற்று (7 ஆம் திகதி) காலை அலுபோமுல்ல பகுதியில் இருந்து பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி செல்லும் பேருந்தில் ஏறி மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இதன்போது ரைகம பகுதியில், கருப்பு கால்சட்டை மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்த ஒருவர் முன்பக்க கதவின் ஊடாக பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்துநோய்வாய்ப்பட்ட மாணவர் இதனையடுத்து பாடசாலைக்கு சென்றவுடன் கண் பார்வை மங்கலாகி, தலைச்சுற்றல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டமையினால் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

 

கைபேசி விற்பனை என்று போலி விளம்பரம் : இலட்சக்கணக்கான பணத்தை இழந்த யாழ். இளைஞன்!!

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழிவு விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகள் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்ட வேளை கைபேசியை வீட்டுக்கே அனுப்புவதாக கூறி முற்பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் பலர் அவரது கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்பு செய்துள்ளனர். பணத்தை வழங்கியவர்கள் அதன்பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனைப் பொலிஸார் ஊடாக குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல இருந்த நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (7) மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருமண நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா செல்ல யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணத்துக்கு புறப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் கடவுச்சீட்டு பரிசோதனை செய்த அதிகாரிகள் குறித்த நபரை தடுத்து வைத்து விமான நலைய பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுமா?

 

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற கருத்து பலரிடையே இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது கட்டுக்கதை என கூறப்படுகின்றது.

உலகளவில் தக்காளி அதிக மக்களால் உண்ணப்படும்போது, அது மட்டுமே கற்களை உருவாக்கினால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வேண்டும்.

சிறுநீரக கற்கள் உருவாக ஆக்சலேட்டுகள் காரணமாக இருப்பதுதான். தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவே ஆக்சலேட்டுகள் உள்ளன. இந்த அளவு கற்களை உருவாக்கப் போதுமானதல்ல.

நீரிழப்பு (Dehydration) உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமையே சிறுநீரகக் கற்கள் உருவாக மிக முக்கியக் காரணம். தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சில அரிய வளர்சிதை மாற்றக் கோளாறுகள் (Oxalosis) காரணமாகவும் கற்கள் உருவாகலாம்.

சிலருக்கு யூரிக் அமிலம் அதிகமாகச் சேர்வதால் கற்கள் உருவாகலாம். இவர்கள் மட்டுமே மீன், இறைச்சி போன்ற பியூரின் நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்க, தக்காளியைக் குறைப்பதை விட, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் அடிப்படை நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதுமே முக்கியம் ஆகும்.

கோர விபத்தில் பலியான இளம் தம்பதியினர் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளம் தம்பதியினரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் கடந்த (04) திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளியான காரணம்

இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பூர்ணா தினுஷ்க விதுமலின் மரணம் குறித்து ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி என்.எல். கே. லக்ஷனினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல், உயிரிழந்த எரங்கி சதுரிகா பெரேராவின் மரணம் குறித்து ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.எச். லியனகே அவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்கமைய, வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் வைத்திய அறிக்கைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களால்

ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே இருவரின் மரணத்திற்கும் காரணம் என்று ஹொரண மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன முடிவு செய்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குடும்பங்களின் உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், நான்கு மாதங்களாக கஹதுடுவா பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளனர்.

மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக நண்பரிடம் சைக்கிள் வாங்கி சுற்றுலா சென்ற போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் : நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்து குலுங்கும் நிலையில் சுற்றுலாவாசிகள் மலர்களை காண குவிந்துள்ளனர்.

2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய பூங்காவின் ஹோட்டன் சமவெளியில் அதிகமான இடங்களில் பூக்கத் துவங்கியுள்ளன. இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர்.

அதேவேளை ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இதில் பூக்கும் மலர்களே, இதன் தனித்துவமாகக் கருதப்படுகிறது.

இந்த மலர்களிடம் வசீகரிக்கும் வாசம் இல்லாவிடினும் ஒரு மென்மையான வாசம் இருப்பதாகவும் , பூக்கும் காலங்களில் இவற்றை 10-க்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் தேடி வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புல்வெளிகள் நிறைந்த ஹோட்டன் சமவெளி மலைப்பகுதியில் வளரும் இந்த செடிகளில் வெள்ளை ,நீலம் , ஊதா மற்றும் இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில்

பூத்து உள்ளதாகவும் அவைகள் குறைந்தபட்சம் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டன் சமவெளி உலகத்தில் மிக அரிய உயிரியல் சூழல்களுக்குள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பூத்ததாகவும் அதன் பின்னர் இவ்வருடம் (2025) பூத்து உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை நீலக்குறிஞ்சி மலர்கள் மீண்டும் 2037 ஆண்டு பூக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மேலும் தெரிவிக்கின்றனர்.

மகனுக்கு விவாகரத்து : பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாடிய தாய்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மகனுக்கு புதிய வாழ்க்கையை தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார். இணையவாசிகளை இளைஞனின் செயல் திகைக்க வைத்துள்ளது.

 

1500 கிலோ வாகனத்தை காதில் கட்டி இழுத்த யாழ் நபர்!!

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதியோர் இல்ல வளாகத்தில் 1500 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50 மீற்றர் தூரம் தனது காதில் கட்டி இழுத்து முதியோர் இல்ல முதியவர்களை இன்று (06) காலை மகிழ்வித்திருந்தார்.

62வயதான மட்டுவிலைச் சேர்ந்த செ.திருச்செல்வம் 5 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் தனது தாடி,தலை முடி,காது,உடல் ஆகியவற்றில் கனரக வாகனங்களைக் கட்டி இழுத்து சோழன் மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து!!

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

விபத்தில் கார், முச்சக்கரவண்டி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கயமடைந்த சாரதிகள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டார் விமானத்தில் பறிபோன இலங்கை வைத்தியரின் உயிர்!!

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பயணித்த தெற்கு கலிபோர்னியாவில் இருதயநோய் நிபுணராக இருந்த ஒருவர் பயணத்தின் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியர், பயணத்தின் போது விமானத்தில் சைவ உணவு கோரியுள்ள நிலையில் அது மறுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவருக்கு இறைச்சியுடன் வழங்கப்பட்ட உணவை அவர் உண்ண முற்பட்ட போது உணவு சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

85 வயதான அசோகா ஜெயவீர என்ற மருத்துவரே அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பயணித்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விமானம், ஆர்க்டிக் பெருங்கடலிற்கு மேலே பயணித்ததால் அந்த நேரத்தில் அவசர சிகிச்சைக்காக விமானத்தை தரையிறக்க முடியவில்லை என அதன் விமானி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சம்பவம் நடந்த நேரத்தில் விமானம் உண்மையில் மத்திய மேற்குப் பகுதிக்கு மேல் இருந்ததாகவும், எளிதில் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்றும் உயிரிழந்த வைத்தியரின் மகன் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து, விமானம் இறுதியில் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியபோது, ​​சைவ உணவு மாத்திரமே உண்பவரான ஜெயவீர, சுமார் மூன்றரை மணி நேரம் மயக்கமடைந்திருந்தார் என்று முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னரே அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் ஏற்கனவே அது தாமதமாகியிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நாளில் 8000 ரூபாய் அதிகரிப்பு : உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ.8,000 அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று (07.10.2025) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.290,500 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, ரூ.283,000 ஆக காட்டப்பட்ட நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சனிக்கிழமை ரூ.306,000 ஆக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று ரூ.314,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி!!

ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுங்கம, ரன்ன, வாடிகல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 28 வயதுடைய ஒருவரும் அவரது இரகசிய மனைவியும் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார். அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கொலையை யார் செய்தார்கள், எதற்காக இந்த கொலையை செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் இன்று உடல்களின் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

 

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன், தனது நான்கு வயது குழந்தையை கூரையின் மேல் வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெல்லம்பிட்டி லிசன்பொல பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்டடவர் 29 வயதுடைய துஷாரி என்ற பெண் ஆவார்.

பெண்ணின் கணவர் வீட்டின் கூரையில் ஏறி, கூரையின் தகரத்தை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, அவரது தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தை தீயில் பாதிக்கப்படும் என நினைத்து, சந்தேக நபர் குழந்தையை கூரையின் மேல் வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். கணவன்,மனைவிக்கிடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சந்தேக நபருக்கு எதிராக பெண் பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளார். சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால் விவாகரத்து வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபர் வீட்டின் நீர் விநியோகத்தை துண்டித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.