இலங்கை நிலப்பரப்பில் ஏற்படும் விரிசல் : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சீரற்ற காலநிலையால் மலையகமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில், கொத்மலையில் உள்ள நயபன மலையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் விரிசல் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொத்மலையில் உள்ள நயபன கிராமத்திற்கு செல்லும் வீதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு தாழிறங்கியுள்ளது.

இதன் விளைவாக, நயபன பகுதியில் இருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்தில் உள்ளனர். இதேவேளை, கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் உள்ள துனுகேவுல பகுதியில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேபோல், கம்பளை-புபுரெஸ்ஸ பிரதான வீதியில் உள்ள ராஜதலாவ பகுதியில் கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட பெரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, மீண்டும் சில இடங்களில் நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலைமைகள் பதிவாகினால், மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் காமினி ஜயதிஸ்ஸ தெரிசித்துள்ளார்.

மேலும் கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.

 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாணயத் தாள்கள் : மத்திய வங்கியின் அறிவிப்பு!!

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது நனைந்த நாணயத் தாள்களை எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்கலாம் என இலங்கை மத்திய வங்கி (CBSL) கூறியுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, நனைந்த நாணயத் தாள்களை மக்கள் மெதுவாகப் பிரித்தெடுக்கவும், அவற்றை வெப்பம், இரசாயனங்கள், அல்லது இஸ்திரிப் பெட்டிகள் மற்றும் அடுப்புகள் போன்ற அதிக வெப்பமூட்டும் மூலங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையாக உலர வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயன்படுத்த முடியாத நாணயத் தாள்களைப் பரிமாற்றம் செய்வதற்காக எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்க முடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த நாணயத்தின் மதிப்பை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெள்ளம் ஏற்படுத்திய பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து!!

கிண்ணியா – முனைச்சேனை பாலப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதியில் ஏற்பட்ட பாரிய குழியில் வீழ்ந்ததன் காரணமாக முச்சக்கர வண்டி நேற்று( 04.12.2025) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், அதன் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

​கனமழையின் காரணமாகப் பெருக்கெடுத்த வெள்ளம் வடியாத நிலையில், முறைச்சேனை பாலத்தின் அண்மித்த பகுதியில் வீதியின் ஒரு பகுதி அடியோடு சேதமடைந்தது. இதனால், வீதியில் ஒரு பெரிய பள்ளம் (குழி) திடீரென ஏற்பட்டுள்ளது.

சீரான ஒளியோ அல்லது போதுமான எச்சரிக்கை பலகைகளோ இல்லாத நிலையில், குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் இந்தப் பள்ளத்தை எதிர்பாராத விதமாக கடக்க முயன்ற போது, அதில் சிக்கி கவிழ்ந்துள்ளது.​

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்துக்கான முதன்மைக் காரணம், வெள்ளம் காரணமாக வீதி சேதம் அடைந்து, பாரிய குழி ஏற்பட்டமையே என உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் காயம் அடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவிகள் வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்ச் சேதம் எதுவும் இன்றி சாரதி உயிர் தப்பியது பெரும் ஆறுதலை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் மேலும் விபத்துகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் நோக்கில், வெள்ளத்தால் சேதமடைந்த இந்தப் பாலப் பகுதியை அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகாக இருப்பதாக 4 குழந்தைகளை கொன்ற பெண்!!

இந்தியாவில் அழகாக இருப்பதாக 4 குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை விட அழகாக இருப்பதாக நினைத்து 4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்த கொடூரப் பெண்ணை ஹரியானா பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறியதாவது,

நல்தா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது 6 வயது சிறுமி ஒருவர் மாயமாகி போனார்.

சிறுமி காணாம்ல் போனதை அடுத்து உறவினர்கள் தேடி பார்த்த போது, அந்த வீட்டின் முதல் மாடியில் இருந்த தண்ணீர் டிரம்மில் தலைகீழாக மிதந்தபடி சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் உறவினரான பூனம் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

2023ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த மகன் மற்றும் ஒரு சிறுமியையும் கொன்றுள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் உறவுக்கார சிறுமியையும் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த 3 சிறுமிகளும், தன்னுடைய மகனும் பார்ப்பதற்கு அழகாக இருந்ததாகவும், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனால், தன்னை விட அழகானவர்களாகி விடுவார்கள் என்ற பொறாமையில் அவர்களை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அதேவேளை பூனம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேக வெளியிட்டுள்ள பொலிஸார், முந்தைய கொலை வழக்கு பதிவாகியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நிவாரணம் வழங்க சென்ற கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தெய்வாதீனமாக விபத்தின் போது காயங்கள் ஏற்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நானுஓயா சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வுட்யில் இருந்து நுவரெலியா ராகலை பகுதிக்கு இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு மீண்டும் நோர்வுட் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாபா வங்கா கணித்த அடுத்த அபாயம் : அடுத்த ஆண்டில் தங்கம் விலை இதுதான்!!

உலகையே பயமுறுத்திய பல நிகழ்வுகளை பல தசாப்தங்களுக்கு முன்பே கணித்தவர்கள் வரலாற்றில் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ‘பால்கன்ஸின் நோஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வாங்கா.

அதன்படி, இப்போது 2026 தொடர்பான அவரது கணிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் போது,

​​மக்கள் முதலீட்டிற்காக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கித் திரும்புவார்கள் என்று இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன.

பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரம் மிகவும் நிலையற்றதாக இருக்கும்,

மேலும் உலகளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இது பாரம்பரிய வங்கி முறையை கடுமையாக சேதப்படுத்தும்.

வைரலாகி வரும் இந்த கணிப்புகள், வங்கித் துறையில் உறுதியற்ற தன்மை, நாணய மதிப்பு தேய்மானம் மற்றும் சந்தையில் பணப்புழக்கம் குறைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கின்றன.

வழக்கமாக, இதுபோன்ற பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் போது, ​​மக்கள் முதலீட்டிற்காக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கித் திரும்புவார்கள்.

தேவை அதிகரிப்பதால், 2026ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன.

பெரிய இயற்கை பேரழிவுகள்: 2026 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயங்கரமான இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். இது உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

செயற்கை நுண்ணறிவு ஒரு பெரிய அச்சுறுத்தல்: 2026 ஆம் ஆண்டில் AI தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியைக் காணும்.

ஆனால் அது மனித வாழ்க்கைக்கு ஒரு பெரிய சவாலாக மாறக்கூடும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவும்.

முதல் முறை வேற்றுகிரகவாசி தொடர்பு: மனித வரலாற்றில் முதல் முறையாக, வேற்றுகிரகவாசிகளுடன் நேரடி தொடர்பு சாத்தியமாகும் என்பது அவரது மிகவும் வியக்கத்தக்க கணிப்பு. இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்று.

புதிய எரிசக்தி ஆதாரங்களின் சகாப்தம்: அணுசக்தியின் சிக்கல்களுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் பசுமை எரிசக்தி மற்றும் இணைவு உலைகளை நோக்கி வேகமாக நகர்கின்றன.

இந்த புதிய எரிசக்தி ஆதாரங்கள் எதிர்காலத்தில் மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் நாட்டில் குவியும் உதவிகள்!!

இலங்கையை மீள கட்டியெழுப்பும் நிதியத்திற்கு 19,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பணம் செலுத்தியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி வரை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க வெளிநாட்டு இலங்கையர்கள் ஒரு வாய்ப்பை கோரியுள்ளதாகவும், நிதி அமைச்சு மற்றும் பிற அரசு நிறுவனங்கள் அவர்கள் சார்பாக இரண்டு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சூரியப்பெரும கூறியுள்ளார்.

நிதி உதவி

முதல் திட்டத்திற்கமைய, வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவிக்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்பு கணக்கு எண் அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது திட்டத்தின் கீழ், குறைந்த ஆவணங்களுடன் மற்றும் எந்த கட்டணமும் இல்லாமல் பொருட்களை நாட்டிற்கு அனுப்பும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நிவாரணமாக அனுப்பப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறினார்.

கட்டுப்பாடுகள் தளர்வு

இந்த திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக சுங்க பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு பணிக்குழு நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்களை எளிதாக விடுவிக்க முடியும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை மையத்தின் பெயரில் பொருட்களை அனுப்புவதன் மூலம் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் எனவும் இது குறித்த மேலதிக தகவல்கள் ஏற்கனவே சுங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆண், பெண் கொடூரமாக வெட்டிக்கொலை : மேலும் இருவர் ஆபத்தான நிலையில்!!

நுரைச்சோலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை மற்றும் மற்றொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவக்கடுவ பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த காயங்களுக்குள்ளான ஆணும் பெண்ணும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஆண் 38 வயது எனவும் உயிரிழந்த பெண் 35 வயது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிப்படை தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் திடீரென உடைந்து வீழ்ந்த வீடுகளால் பரபரப்பு!!

கொழும்பில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாரிய தூண் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஐந்து வீடுகள் உடைந்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியிலுள்ள ஐந்து வீடுகளே இவ்வாறு நேற்றிரவு உடைந்து வீழ்ந்துள்ளன.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அந்தப் பகுதியிலுள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டு கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்சதார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் கொழும்பு மாநகரசபை மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி உதவிகள், நீண்டகால பாதுகாப்பு வீட்டு திட்டங்கள் போன்ற விடயங்களில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகர சபை உறுப்பினர் ஆனந்தக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வீட்டு வசதிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கனமழை காரணமாக மண் சரிவு மற்றும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 146வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் குறித்த நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மீண்டும் மழைக்கான சாத்தியம்!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தற்போது படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருகின்றது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான, மிதமான அல்லது பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இதன்மூலம் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றிரவு வரை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை!!

மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (05) பிற்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின் போது மின்னலால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

இலங்கையர்களைக் கண்டு பிரமிக்கும் சுற்றுலாப் பயணிகள் : ஒஸ்திரிய இளைஞன் நெகிழ்ச்சி!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் மக்களின் செயற்பாடு குறித்து ஒஸ்திரிய இளைஞன் ஒருவர் நெகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். ஒஸ்திரியாவை சேர்ந்த டோபி என்பவர் நேற்றை இளைஞர் சேவை மன்றத்திற்கு சென்றிருந்த போது இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதனை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மிகவும் நல்ல மனிதர்கள், ஒஸ்திரியாவில் இதுபோன்றதொரு செயற்பாட்டை தான் கண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் நல்ல மனிதர்கள் உள்ளனர். இவ்வாறான ஒரு நெருக்கடியின் போதும் மக்கள் அடுத்தவருக்கு உதவுவதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் ஒரு சுற்றுலா பயணியாக இலங்கை வந்தேன். தற்போது நிவாரண பணிகளை பார்வையிட வந்தேன். ஆனாலும் மக்கள் இந்த புயலினால் அவதிப்படுவதனை ஊடகங்களில் பார்க்கும் மிகவும் வேதனையாக உள்ளது.

இப்படியான நிலையில் நான் சுற்றுலா மேற்கொள்ள நினைக்கவில்லை. இந்த மக்களுடன் உதவியாக பயணிக்கவே விரும்புகிறேன்.

என்னை போன்று சக சுற்றுலா பயணிகளும் இந்த நெருக்கடியின் போது உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என டோபி மேலும் தெரிவித்துள்ளார்.

பேரழிவை சந்தித்துள்ள இலங்கை : 7 வயது சிறுவனின் பிரம்மிப்பூட்டும் செயல்!!

திருகோணமலை – முள்ளிப்பொத்தானை 8ம் குளனியை சேர்ந்த சிறுவன் தான் சேமித்த உண்டியலை உடைத்து வெள்ள நிவாரண நிதிக்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாஹில் முஆத் என்ற 7 வயதுடைய சிறுவனே வெள்ள நிவாரண நிதிக்காக 1184 ரூபாவை கொடுத்துள்ளார்.

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட பலருக்காக பல இடங்களில் உலர் உணவுப் பொதிகள் உட்பட அத்தியவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இவ்வாறான உதவி பெரிதும் பாராட்டத்தக்கதாக கருதப்படுகிறது.

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து : எச்சரிக்கும் பேராசிரியர் நா.பிரதீபராஜா!!

இலங்கை மிக கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கைக்கு அண்மித்த கவசத்தகடுகளில் மிகச்சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றன.

மிகச்சிறிய அளவில் அதிகளவில் இடம்பெறும் நிலநடுக்கங்கள் பாரிய அளவில் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்.அது தொடர்பிலும் இனி கவனம் செலுத்த வேண்டும்.

டிட்வா புயல் இலங்கையில் இன்னும் ஒருநாள் நிலைத்திருந்தாலும் தற்போதை உயிரிழப்பை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகமான உயிரிழப்பை சந்தித்திருக்க வேண்டும்.

கடந்த 17ஆம் திகதி என்னுடைய முகநூலில் இந்த அனர்த்தம் தொடர்பில் பதிவொன்றையிட்டேன், அதனை தொடர்ந்து வட மாகாணத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆனால் வளிமண்டலவியல் திணைக்களம் ஏனைய மாகாணங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் ஒரு படிப்பனையாக கொண்டு இனிவரும் அனர்த்தங்களில் செயற்பட வேண்டும். இந்தவிடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..