நாட்டில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்து!!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பாக மேற்கு மாகாணமும் தென் மாகாணமும் இந்த நோய்கள் பரவுவதற்கான அதிக அபாயப்பகுதிகளாக காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்பு வழி நோய்களின் பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நுளம்பு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானம் : பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு!!

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் விமானி மீண்டும் சென்னை வரை இயக்கியதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு 158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 287பறவை மோதி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

இதனையடுத்து விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பொறியாளர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தின் இயந்திரங்களில் பறவையின் சடலமொன்று சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதே விமானம் அதிகாலை 3:20 மணிக்கு கொழும்பிலிருந்து 147 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

இருப்பினும், ஏர் இந்தியா மற்றும் சென்னை விமான நிலைய பொறியாளர்கள் குழு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது விமானத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு பதிலளிக்கும் விதமாக, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

தாய் வெளிநாட்டில் : தந்தையால் மகளுக்கு நேர்ந்த கதி!!

மொனராகலையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தந்தையின் அச்சுறுத்தலுக்கு மகள் உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், தந்தையின் மோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 38 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் தந்தை மற்றும் சகோதரனுடன் குறித்த சிறுமி வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையின் கொடூரமான செயற்பாடு காரணமாக சிறுமியின் உடல் உறுப்புக்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடா செல்ல ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களிடமிருந்து 5.5 மில்லியன் ரூபாயைப் பெற்று வைத்திருந்ததாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் பியகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் பியகம பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இடைத்தரகராக செயற்பட்டு பண மோசடி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர் கைது

சந்தேக நபர் பெப்ரவரி மாதம் மாவனெல்ல பகுதியில் நபரிடம் 300000 ரூபாயையும், மற்றொரு நபரிடம் 250,000 ரூபாயையும் மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபர் அரநாயக்க பகுதியில் சிறிது காலம் வசித்து வந்தபோது அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, பின்னர் திஸ்ஸமஹாராம பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு முறைப்பாடுகள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 65 வயதுடையவர் எனவும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் அஜித் விஜேசிங்கேவின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

15 மனைவிகள், 100 வேலையாட்கள் – விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆபிரிக்க மன்னர்!!

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மெஸ்​வாட்​டி(Mswati).

1986 ஆம் ஆண்டு முதல் இவர் அந்த நாட்டின் மன்னராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் படைசூழ தனி விமானத்தில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அபுதாபி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இவரின் வருகை காரணமாக அங்கிருந்த 3 முனையங்கள் மூடப்பட்டுள்ளன.

இவருக்கு மொத்தம் 30 மனைவிகள் எனவும், இதில் 15 பேர் மட்டுமே இந்த பயணத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், பாரம்பரிய ‘ரீட் டான்ஸ் விழாவின் போது அவர் ஒரு புதிய மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், முன்னாள் மன்னரான இவரின் தந்தைக்கு 125 மனைவிகள், 210 குழந்தைகள், சுமார் 1000 பேரக்குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

எஸ்வாட்டினியின் மக்கள் 60% பேர் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மன்னர் தனி விமானத்தில் பயணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது விமர்சனத்தை பெற்றுள்ளது. இவர் மில்லியன் டொலர்கள் மதிப்பிலான வாட்ச்களையே அணிவார்.

இளம்பெண் மரணத்தில் மர்மம் : காவல் நிலையத்தில் கணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் கோபால்(29). இவர் மீது திருவொற்றியூர்,

சாத்தாங்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவருக்கு திருமணமாகி ஜோதிகா(23) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு பதற்றத்துடன் வந்த கோபால், தனது மனைவி வீட்டில் மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார், கோபால் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கோபாலின் மனைவி ஜோதிகா, வீட்டில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபால் மற்றும் ஜோதிகா இருவரும் திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் மேட்டு தெரு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கோபால், போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் தொண்டையினுள் ஏற்பட்ட பாதிப்பால் இறந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அவரது உடலில் காயம் எதுவும் இல்லாததால் இளம்பெண்ணை,

அவரது கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? அல்லது இளம்பெண்ணே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் கோபாலை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம் : முல்லைத்தீவில் தாயை இழந்த இரண்டு மாத குழந்தை!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் தெரிவிக்கையில்.,

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எனது மருமகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்திருந்தார். அதன் பின்னர் ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் கடந்த 26ம் திகதி நாரி உழைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றோம்.

பரிசோதனையில் கிட்னியிலும் இரத்தத்திலும் கிருமி தாக்கம் இருப்பதாக வைத்தியர் குறிப்பிட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு 28ம் திகதி எழுதி தந்திருந்தார்.

அதன்படி 28ம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்தோம். தனியார் வைத்தியர் வழங்கிய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும், மாஞ்சோலை வைத்தியசாலையில் சாதாரண நோயாளர் வாட்டில் வைத்திருந்தார்கள்.

29ம் திகதி பிற்பகல் வரை சேலன் மட்டுமே ஏற்றியிருந்தார்கள். வேறு எந்தவித சிகிச்சையும் வழங்கப்படவில்லை. பின்னர் மாலை யாழ்ப்பாணம் மாற்றியிருந்தார்கள்.

அங்குள்ள வைத்தியர்கள் தாமதமாக வந்ததனால் பாதுகாக்க முடியாது என்று தெரிவித்தனர். எனது குடும்பத்தில் இருந்து மருமகளை இழந்திருக்கின்றேன்.

இதில் எந்தவொரு மருத்துவரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறினால் தகுதியானவர்கள் என்னை மன்னிக்கவும், தகுதியற்றவர்கள் என்மீது கோபப்படலாம் எனத் தெரிவித்தார்.

எமது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் போதுமான துறைசார் வைத்தியர்கள் இல்லை. அரச மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. 25 வைத்தியர்கள் நியமிக்கப்படுகிறார்கள், ஆனால் மொழி தெரியாமல் சேவை செய்வதற்காகவே காலம் கடக்கிறது.

அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் மிகக் குறைவு. மக்களுக்கான மருத்துவ விடுதிகளை விட காரியாலய கட்டிடங்களே அதிகம்.” முல்லைத்தீவில் 80 வீதம் வேற்று மொழி பேசுவோரும், 20 வீதம் தமிழர்களும் நிர்வாகிகளாக உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியாகப் புரியப்படவில்லை. ஒரு பெண் சில மணி நேரங்களில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுவே மருத்துவ அமைப்பின் தோல்வியே.

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு செல்லும் மக்களே, உங்கள் பிள்ளைகளின் நிலையை ஒருநாள் நினைத்துப் பாருங்கள். எனது மருமகளின் மரணத்திற்கு நான் நியாயம் கேட்கவில்லை.

ஆனால் இனி இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். யாரும் இதனை கேட்கவில்லை என்றாலும், இது திட்டமிட்ட தவறாகவே தோன்றுகிறது.

அதோடு ஊடகங்கள் அரசியல்வாதிகளின் பக்கம் திருப்பும் கமராவை, மக்களின் மருத்துவ துயரங்களை நோக்கி ஒருதரம் கமராவை திருப்புங்கள். நூற்றில் தொண்ணூறு வீதமானோர் அழுகுரலாகவே வாழ்கின்றனர்.

33 வயதில் இரண்டு மாத குழந்தையை தாயின்றி விட்டுச் சென்றது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் காணாமல்போன இளைஞன் கண்டுபிடிப்பு!!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

இந் நிலையில், குறித்த இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையிலே இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கு இளைஞரை பல பகுதியில் தேடுதல் மேற்கொண்ட நிலையில்,குறித்த இளைஞன் இன்று (7) காலை அயல் கிராமத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் Tiktok பெண் கணவனால் எரித்துக்கொலை : விவாகரத்து கேட்டது காரணமா?

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ரிக்ரொக் சமூக ஊடக பிரபலமான 29 வயதுடைய இளம் தாயாவார்.

பெண்ணின் கணவர் வீட்டின் கூரையை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, பெட்ரோல் போத்தலைக் கொண்டு வந்து தனது மனைவியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதன் பின்னர் குழந்தைகளுக்கு தீ பரவிவிடும் என அஞ்சி அவர்களை வீட்டு கூரையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.

இதன் காரணமாக, சந்தேக நபருக்கு எதிராக அவர் பொலிஸில் பல முறை முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சந்தேக நபர் மது வாங்குவதற்காக அடிக்கடி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மீது அந்தப் பெண் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய கணவனை கைது செய்ய வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி!!

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.

சாலையைக் கடக்க முயன்ற நான்கு பெண்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு விகாரையில் ஒரு மத நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்ற பெண் சிகிச்சைக்காக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய இளம் காதலர்கள் : காதலி பலி!!

பின்னவல பொலிஸ் பிரிவில் ஹட்டன்-பலாங்கொடை வீதியில் நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடயில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது காதலியும் பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி காதலி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அரநாயக்கவைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து : 18 வயது இளைஞன் மரணம், இருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்றது. வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி இவ்வாறு வாகனம் ஓட்டுபவர்கள், தம் உயிரை போக்குவது மட்டுமன்றி வீதியில் செல்வோரிற்கும் உயிராபத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்!!

காலி – அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்கந்துர, தனபத்தேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.எம்.மகிஷ பகாஷண என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை, மாதம்பே நகர வீதியில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞருக்கு வேறு எந்த தொற்று நோயும் இல்லை என்றும், இளைஞனின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இலங்கையர் செய்த நெகிழ்ச்சி செயல் : உலகிலேயே முதல் முறை என அங்கீகாரம்!!

கனடாவின் – ஒட்டாவா நகரானது, வெளிநாடுகளில் உள்ள புத்த கோவில்களுக்கு இலங்கையர் ஒருவரின் தலைமையில் சாலை அடையாளங்களை நிறுவும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது.

ஒட்டாவா நகரத்தின் பொதுப்பணி மற்றும் சேவைகள் துறை, போக்குவரத்து செயல்பாட்டுப் பிரிவுடன் இணைந்து, நகரத்தில் உள்ள புத்த கோவில்களை அடையாளம் காண ஒரு சாலை அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

“இதுவரை, 14 அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இலங்கை கோயில்கள் மட்டுமல்ல, கம்போடிய, வியட்நாமிய மற்றும் தாய் சமூகங்களைச் சேர்ந்த கோயில்களும் குறிக்கப்பட்டுள்ளன” என்று கனடாவின் ஒட்டாவாவில் உள்ள புத்த தூதரக அமைப்பின் நிறுவனர் மற்றும் தொழில்முனைவோர் விசிதா சிரின் லீலாரத்ன கூறியுள்ளார்.

“இது கோயில்களுக்கான வழியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கியுள்ளது, மேலும் இது ஓட்டுநர்களிடமிருந்து அதிக பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சாலை அடையாளங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் காட்டப்பட்டுள்ளன, ”என்று திட்டத்தை வழிநடத்தும் விசிதா லீலாரத்ன தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒட்டாவா நகர சபையில் புத்த கொடியை பறக்கவிடுவதற்கு ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் ஒப்புதல் அளித்தார். அதன்படி, அவர் வெசாக் மாதத்தையும் அறிவித்து அதிகாரப்பூர்வ பௌத்த சாலை அடையாளங்களை அறிமுகப்படுத்தினார்.

ஒட்டாவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் வெசாக் பண்டிகையை இலங்கை, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா, தாய்லாந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பௌத்த குழுக்கள் கொண்டாடுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே மற்றும் பிற அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அம்பலங்கொடை மற்றும் கோட்டேகொடையில் ஏற்கனவே அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த கருத்து இலங்கைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக லீலாரத்ன தெரிவித்தார்.

பத்தேகமவின் சிரின் பூங்காவில் தியான மையம் மற்றும் சுற்றுச்சூழல் தங்குமிடமான சிரின் பூங்காவை கட்டித் திறந்து வைத்த லீலாரத்ன, கனடாவில் பௌத்த பாரம்பரிய மாதத்தை நிறுவுவதற்கான தனியார் மசோதாவை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இப்போது கலந்துரையாடி வருகிறார்.

“கனேடிய நாடாளுமன்றத்தில் பௌத்த பாரம்பரியத்தை அங்கீகரிப்பது வெசாக் மற்றும் பொசன் கொண்டாட்டங்களை பெரிய அளவில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கும்.” இது பன்முகத்தன்மையில் ஒற்றுமைக்கான கனடாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது, மேலும் இது பௌத்த வம்சாவளியைச் சேர்ந்த கனேடியர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உலக வதிவிட தினத்தினை முன்னிட்டு வீடு கையளிப்பு!!

நாடு முழுவதும் உலக வதிவிட தினத்தின் 39வது ஆண்டினை முன்னிட்டு என்னுடைய இடமும் அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளில் வீடு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையிலே வவுனியா பேயாடிகூழாங்குளம் பகுதியில், ம.சிவகுமார் என்ற பயணாளிக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவினால நேற்றையதினம் வீடு கையளிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளிற்கான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கி வைத்திருந்தார்.

இதேவேளை வவுனியாவில் உள்ள நான்கு பிரதேச சபை பிரிவுகளிலும் 20 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 62 பேருக்கு உறுதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ந.கமலதாசன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட அதிகாரி தேவிகா விஜயரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாநாடு!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் மாவட்ட மாநாடு சுத்தானந்த இந்துஇளைஞர்சங்க மண்டபத்தில் நேற்று (05.10.2025) காலை இடம்பெற்றது.

உலக ஆசிரியர் தினமான நேற்று அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைகளை முறியடித்து உரிமைகளை வென்றெடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது.

சங்கத்தின் வவுனியா கிளையின் தலைவர் பா.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின், தலைவர் பிரியந்த பெர்ணான்டோ, வடமாகாண உபதலைவர் தீசன் திலீபன், உபதலைவி ரசிக்கா உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.