ஐரோப்பாவில் கடும் குளிர் காலநிலை : இலங்கையர்கள் ஐவர் உட்பட பலர் பலி!!

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் கடுமையான குளிர் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் ஐந்து இலங்கையர்களும் அடங்குகின்றதாக கூறப்படுகின்றது.

பிரான்ஸ், இத்தாலி, ருமோனியா ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் பதிவாகி உள்ளன. கடும் குளி காலநிலையால் ருமெனியாவில் மட்டும் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வீட்டற்ற நிலையில், பூங்காவில் வசித்து வந்த இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் இலங்கையர்கள் அல்லாத மேலும் ஐந்து பேர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை ருமேனியாவில் பணிக்காக சென்ற நிலையில், கடும் குளிரை தாக்க முடியாத நிலையில் மூன்று இலங்கையர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் பாகைக்கும் குறைவாகச் சென்றுள்ளதால், திறந்தவெளிகளிலும் தற்காலிக இடங்களிலும் தங்கியிருப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இவ்வாறான மரணங்கள் பதிவாவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு குளிரின் வீச்சு அதிகமாகக் காணப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில நாட்களாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன.

 

மட்டக்களப்பில் மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இரண்டு நாட்களுக்கு முன்னர் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தின்போது தோணியிலிருந்த இளம் மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போனார்.

அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை களுவன்கேணி கடற்கரையோரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்திய தங்கத்தின் திடீர் சரிவு : இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய கடும் சரிவுக்கு பின்னர் மீண்டும் உச்சம்தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கம் ஒரே நாளில் ஒரு அவுன்ஸிற்கு கிட்டத்தட்ட $500 சரிந்ததால், பங்குச் சந்தையில் பெரும் பதற்றம் நிலவியிருந்தது.

இந்நிலையில், நேற்றைய கடும் சரிவுக்குப் பிறகு, இன்று (ஜனவரி 30, 2026) ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸ் $5,447 என்ற அளவில் வர்த்தகமாகியுள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிய நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : ஆபத்து தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை!!

ஆசிய நாடுகளில் பரவி வரும் ஆபத்தான நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்கள் மற்றும் குடிவரவு மையங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகின் மிக அபாயகரமான 10 வைரஸ்களில் ஒன்றாக நிபா வைரஸினை உலக சுகாதார நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸிற்கு இதுவரை முறையான தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது மட்டுமே ஒரே வழி என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுகின்றது. இந்த தொற்று ஏற்பட்ட 4 முதல் 14 நாட்களுக்குள் இதற்கான அறிகுறிகள் தென்படும் என வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 40 முதல் 75 சதவீதம் வரையிலானோர் மரணமடையும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

வௌவால்களின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் மலம் ஆகியவற்றால் அசுத்தமடைந்த பழங்கள், நீர் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளின் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.

ஆரம்பத்தில் காய்ச்சல், உடல் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், நிலைமை தீவிரமடையும் போது சுவாசக் கோளாறுகள் மற்றும் மூளை வீக்கம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகள் ஏற்படக்கூடும்.

இலங்கையில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை சுகாதார அமைச்சு நிலைமையை அண்மித்து அவதானித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் அடகு நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பலர் அதிக விலைகளை பயன்படுத்திக்கொள்ள அடகுக்கடைகளில் உள்ள தங்க பொருட்களை விற்க தூண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிலர் தங்க நகைகளை வங்கிகள் மற்றும் அடகு நிறுவனங்களில் அதிகளவு அடகுவைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அதிக விலைகளைப் பயன்படுத்திக்கொள்ள, பலர் தங்கள் வீடுகள், வங்கி பெட்டகங்கள் மற்றும் அடகுக் கடைகளில் இருந்த தங்கப் பொருட்களை விற்கத் தூண்டப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் சந்தையில் தங்கத்தின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் தங்க விலை உயர்வின் காரணமாக அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், அவற்றில் மேலதிக பணத்தை பெற தூண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றது.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய சந்தேக நபர்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சானை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து நேற்றையதினம் (29.01.2026) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த இறந்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு,

கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து நேற்றையதினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது 41) என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நேர்ந்த சோகம் : குப்பைக்கு வைத்த தீயினால் பரிதாகமாக உயிரிழந்த வயோதிபப் பெண்!!

யாழ்ப்பாணத்தில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரியாலையை சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (வயது 81) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார்.

பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்தார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது.

இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர் மீதும் தீ பற்றியது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த 18 வயது மாணவன்!!

உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பதுரலிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற இளைஞனே அகால மரணமடைந்துள்ளார். மதுகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்று வந்த அந்த மாணவன், அப்பகுதியின் வர்த்தக தம்பதிகளின் மூத்த மகனாவார்.

ஹசிது கல்வியில் மாத்திரமன்றி, விளையாட்டிலும் பாடசாலைப் புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்துள்ளார்.

கராத்தே போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் வென்றுள்ளார். பாடசாலை நீச்சல் போட்டிகளில் பலமுறை செம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

பாடசாலை கெடட் (Cadet) குழுவில் இணைந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பாடசாலைக்கு ‘ஹெர்மன் லூஸ்’ (Herman Loose) எனும் கௌரவப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த குழுவில் முக்கிய வீரராக இருந்துள்ளார்.

“மகனுக்கு உந்துருளிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பழைய உந்துருளிகளை வாங்கி, சில நாட்கள் ஓட்டிவிட்டு, நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்வார்.

பின்னர் அவற்றை மீண்டும் விற்றுவிடுவார். எதிர்காலத்தில் வாகன வியாபாரி ஆக வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது” என அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். கடந்த ஜனவரி 22 ஆம் திகதி தனது 18 ஆவது பிறந்தநாளை ஹசிது கொண்டாடியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் (23) இரவு நண்பர் ஒருவருடன் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பதுரலிய – களுக்கலை வீதியில் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹசிது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் விபத்துக்குள்ளான உந்துருளியை வாங்கி இரண்டு வாரங்கள் கூட நிறைவடையவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திறமைமிக்க ஒரு மாணவனின் இந்த திடீர் மறைவு, பல மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி : திருமணமான காதலன் கைது!!

கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய யுவதியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவ, குடா வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹேஷலா காவிந்தி சில்வா என்ற 24 வயதான யுவதி துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவியை பிரிந்து வாழும் திருமணமான சந்தேக நபர் கடந்த 8 மாதங்களாக உயிரிழந்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர் கடும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் இந்த யுவதியையும் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டியுள்ளதால், யுவதியின் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்க மறுத்துள்ளனர்.

சந்தேக நபரின் சகோதரர் மற்றும் தாய் ஆகியோர் அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். யுவதிக்குத் தேவையான உணவை சந்தேக நபர் தனது தாய் அல்லது சகோதரரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மாலை சயுர அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் உள்ள கொன்க்ரீட் தளத்தில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், யுவதியை துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

மறுநாள் மதியம், கொன்க்ரீட் தளத்தில் யுவதி ஒருவர் விழுந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

யுவதியின் உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதுடன், உடல் நீல நிறமாக மாறியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியின் சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

கண்டி – ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹதரலியத்த டி. பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி கண்டியில் மேலதிக வகுப்புக்கு சென்று மீண்டும் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இதன் போது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் அவர் கீழே விழுந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநரான பிரபாத் மேகசூரிய என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் கலகெதர நீதவான் நுவான் குணசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவி அப்சரா தசநாயக்கவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.

 

குடும்பப் பெண்ணை காப்பாற்ற முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி : பறிபோன உயிர்கள்!!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பெண் மற்றும் உயிரிழந்தவரின் மனைவி இருவரும் மீன் வாங்குவதற்கு புலையவெளி ஆற்றுக்கு சென்ற போது வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலிக்கு மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன் போது உயிரிழந்த பெண் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியில் விழுந்துள்ளனர். நீரில் விழுந்தவரை காப்பாற்றுமாறு அழைத்துள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த ஆணும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை அயலவர்கள் உடனடியாக துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீதி விபத்தில் இளம் பெண் பரிதாபமாக மரணம்!!

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி உயிரிழந்துள்ளார்.

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த எத்திமலை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிப்பர் லொறி மோதி காயமடைந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 39 வயதான தமயந்தி குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மொனராகலையில் இருந்து சியம்பலாண்டுவ நோக்கி தனது உறவினருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ​​சியம்பலாண்டுவ திசையில் இருந்து வந்த லொறி அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உலகில் தலை சுற்ற வைக்கும் தங்கத்தின் விலை : 5600 டொலர்களை எட்டியது!!

உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,600 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்,

மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

அங்குலானை கொலைச் சம்பவம் : தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!!

அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி 24 வயதுடைய யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவில ்ஈடுபட்டிருந்த நபருடன் ஏற்பட்ட தகராறில் 24 வயதுடைய குறித்த யுவதி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அங்குலானை, சயுருபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

24 வயதுடைய யுவதி காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை!!

24 வயதுடைய யுவதி ஒருவர், காதலன் என கூறிக்கொண்ட ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அங்குலான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் வாதுவ, குடா வஸ்கடுவ, லிப்பன்ஸ் வட்டத்தைச் சேர்ந்த ஹேஷலா கவிந்தி சில்வா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், தலைமறைவான சந்தேகநபர், தனது மனைவியை பிரிந்து வசித்து வருவதாகவும், யுவதியுடன் சுமார் எட்டு மாதங்களாக உறவில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேகநபர், இதற்காக யுவதியை குறிவைத்து வந்துள்ளார். இதன் காரணமாக, யுவதின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்ல மறுத்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தலைமறைவு

சந்தேகநபரின் சகோதரர் அங்குலான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதுடன், அதே நேரத்தில் தாய் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும் சந்தேகநபர் மற்றும் யுவதிக்கு அவரது தாயார் அல்லது சகோதரரின் வீட்டிலிருந்து உணவு வழங்குவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் புதிய உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி இன்றைய தினம் (29.01.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 384,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 420,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபா உயர்ந்து ஒரு சவரன் ரூ 134,400 இற்கும், கிராமுக்கு 1190 ரூபா உயர்ந்து ஒரு கிராம் 16,800 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டது. நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.