வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்!!

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்ர ஆகியோரின் தலைமையில் இன்று (02.12.2025)நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 6509 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 43 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர். இவர்களிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2100 வீதம் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.

டிட்வா புயலால் 6,123 குடும்பங்களைச் சேர்ந்த 20,282 பேர் பாதிக்கப்பட்டனர். வவுனியா, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் வெள்ளத்தில் சிக்கி பலி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் (01.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இருதினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார்.

பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காலணாளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு : அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி!!

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொச்சிக்கடை ஓயா வீதியைச் சேர்ந்த சின்னையா பாக்கியம் என்ற 77 வயது பெண்மணியும், பள்ளியா வீதியைச் சேர்ந்த ஏ.எச். ஸ்ரீ நமன் என்ற 55 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேவேளை வயதான பெண் வீட்டினுள் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துளார்.

மற்றைய நபரை கவனித்துக் கொள்ள இருந்த நபர் வெளியே சென்ற வேளையில் தனியாக இருந்த நபர் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வெள்ளத்தில் சிக்கி பல கால்நடைகள் உயிரிழப்பு!!

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பல கால்நடைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தொடர்ச்சியான கனமழையால் குளங்கள் நிரம்பி வழிவந்து, வவுனியாவின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட பல கால்நடைகள் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள், கால்நடைகள் உயிரிழந்ததன் காரணமாக பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கண்டி மண்சரிவு : 8 பேரின் உடல்கள் மீட்பு : பல சடலங்கள் மண்ணுக்குள்!!

கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடுகளுக்கு செல்ல வேண்டாம் : மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, தமது முடிவை வழங்கும் வரை, அதாவது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கலாநிதி வசந்த சேனாதீர கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார்.

நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

இலங்கையில் பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டவர் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு சென்ற டிட்வா புயலின் பாதிப்பால் முழு நாடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மண்சரிவிலும் வெள்ளத்திலும் , சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை கனவத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர் மீடுப்பு பணியில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் குறித்த வெளிநாட்டவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று (01.12.2025) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காணாமல் போயிருந்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தற்போது அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் குடும்பம் : பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பெண் குழந்தை!!

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தாய், தந்தை உயிரழந்த நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் கடந்ந வியாழக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் அடித்து செல்லப்பட்டனர்.

இந் நிலையில் அவர்களது இரண்டு வயது மதிக்கதக்க குழந்தை உயிருடன் அருகில் உள்ள தோட்டத்தில் மீட்கப்பட்டது. இந்நிலையில் தாயின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதுடன் தந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோரை பிரிந்து தவிக்கும் பிஞ்சு குழந்தையுடன் குடும்பம் தவித்துக்கொண்டிருக்கின்றது. குறித்த பெற்றோரின் சடலங்கள் இராகலையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது!!

சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுண்டிக்குளம், சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது. குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.

 

வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக்கிழமை(28) தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள்.

காணாமல் போனவர்களை தேடும் பணி நேற்றையதினம்(30) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று(1) காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அவர்களின் புகைபடங்கள் வெளியாகியுள்ளன.

நீரில் மூழ்கியுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தற்போதைய நிலை!!

கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆலய செயற்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக நான்காவது நாட்களை கடந்தும் மின்சாரம், தொலைபேசிகளுக்கான இணைப்பு சில பிரதேசங்களில் வழங்கப்படாதுள்ளதுடன் , வழங்கப்பட்ட பிரதேசங்களிலும் ஒழுங்கான முறையில் இதுவரை சீர்செய்யப்படவில்லை.

அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இருளில் மூழ்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!!

முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதனால் கடல் நீர்மட்டமானது உயர்வடைந்த நிலையில் முல்லைத்தீவு கொக்குளாய் திருகோணமலை பிரதான வீதியான செம்மலை பகுதியில் உள்ள நாயாற்றுபாலம் முற்றாக கீழிறங்கியுள்ளது.

முற்றாக தடை

இதனால் கொக்குளாய், கொக்குதொடுவாய், கர்நாட்டுக்கேணி திருகோணமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

 

3000 மணித்தியாலங்களுக்கும் மேலான பயண அனுபவம் கொண்ட விமானியை இழந்த இலங்கை!!

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் உலங்குவானூர்தியை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (30.11.2025) சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக உலங்குவானூர்தி ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உலங்குவானூர்தி அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் உலங்குவானூர்தியில் இருந்துள்ளனர்.

பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென உயிரிழந்த இந்த விமானி குறித்து சமூக ஊடகங்களில் பல உருக்கமான குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த பதிவில் , “ஒரு இளம் மகனின் அன்பான தந்தையான நிர்மல், நேற்று டித்வா சூறாவளியால் அகால மரணமடைந்த இலங்கையர்களின் வரிசையில் இணைந்தார். விலைமதிப்பற்ற இலங்கை விமானியாக நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை விட்டுச் சென்றார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவிப்பு!!

பெரும் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைக் குடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறியுள்ளார்.

வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்குமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சிறு குழந்தைகளுக்கும் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் வீடுகளைச் சுற்றி நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இல்லையெனில், டெங்கு மற்றும் சிக்குன்யா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் என்று சமில் முத்துக்குட மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த கார் கடற்படையினரால் மீட்பு!!

கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மதவாச்சி – மன்னார் வீதியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.

அதன்படி, வெள்ளத்தில் சிக்கிய கார் கடற்படை அனர்த்த வாகனம் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.