தென்னிலங்கையில் கோர விபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்!!

மாத்தறை, ஹக்மனை, வேபத்தைர, கட்டுபெலே சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடனும் கார் ஒன்றுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹக்மனை, பெலியத்த வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஏஷான் பிரபோத என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் 16 வயதுடைய தனுக்க தேஜான் என்பவராகும். இருவரும் மாத்தறை மெதடிஸ்த மத்திய மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹக்மனை – வலஸ்முல்ல வீதியில் பயணித்த சிறிய லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டு பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

இதன்போது லொறிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறியுடன் மோதியுள்ளது.

இந்த நிலையில் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயமடைந்த மாணவன் கங்கொடகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறி மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இந்த ஆண்டு (2026) டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் 56 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை, நாடு முழுவதும் 6,752 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது கடந்த ஆண்டு (2025) ஜனவரியில் பதிவான 4,970 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

இதன்படி, மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் 3,149 நோயாளிகள் உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,662 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 983 பேரும், கொழும்பு மாநகர சபைப் பகுதியில் 524 பேரும் பதிவாகியுள்ளனர்.

சமீபத்திய பாதகமான வானிலை காரணமாக நுளம்பு இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழல் உருவாக்கப்படுவது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே காய்ச்சல் அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக வைத்தியரை அணுகுவது, இரத்த பரிசோதனைகள் செய்துகொள்வது மற்றும் சரியான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை எச்சரிக்கின்றனர்.

டெங்குவை எதிர்த்துப் போராட சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் நீர்நிலைகளை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகள் பெரும்பாலும் மழையற்றதாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40) கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது (45-50) கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் கடல் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாக இருக்கும்.

நாட்டை சுற்றியுள்ள பிற கடல் பகுதிகள் மிதமான கொந்தளிப்பாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத மாற்றத்தை பதிவு செய்த தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை உச்சம்தொட்டுள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று (28.01.2026) நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை $5250 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று காலை கொழும்பு தங்கச் சந்தை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தங்கத்தின் மொத்த விலை ரூ.10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று, ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.374,600 ஆக பதிவாகியுள்ளது.

இதே நேரத்தில், நேற்று ரூ.394,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.405,000 ஆக அதிகரித்துள்ளதாக தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகை வாங்குபவர்கள் விலை குறையும் வரை காத்திருக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக சர்வதேச சந்தை போக்கு மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொழும்பில் அரச வங்கி ஒன்றில் போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய் மோசடி!!

கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 முறை திட்டமிட்டு இத்தகைய மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

அதற்கமைய, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, குற்றப் புலனாய்வு பிரிவினர் முகாமையாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, போலிப் பொருட்களை தங்கமாக அடகு வைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெறவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அறியவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய வரலாறு படைக்கும் தங்கம் : பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!!

பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான சில கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

அவரது கணிப்பின்படி, உலக அளவில் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு வங்கிகள் பாதிக்கப்படலாம் என சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகும் என்று பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் தள்ளும். இதனால், தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து ஒரு புதிய உச்சத்தை எட்டும் என்றும் சில கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால், பாபா வங்காவின் இந்தக் கணிப்புகள் வெறும் யூகங்களே தவிர, அவற்றுக்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமோ அல்லது வரலாற்றுப் பதிவுகளோ இல்லை என்று ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

வட்டி விகிதங்கள் உலக வட்டி விகிதங்கள், பணவீக்கம், அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்கைகள் எனப் பல காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகவே, முதலீட்டாளர்கள் வெறும் வதந்திகளைக் கேட்டு பீதியடையாமல், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதேவேளை இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலையில் நான்கு இலட்சம் ரூபாவை கடந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி இன்றைய நிலவரப்படி (28.01.2026) உலக சந்தையில் தங்கத்தின் விலை 5250 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 374,600 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 405,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தகாத உறவால் 24 வயது யுவதி கொடூரமாக கொலை!!

தகாத உறவால் அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஆவார். சம்பவத்தன்று, குறித்த யுவதி தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்

இதன்போது சந்தேக நபர் யுவதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சிறுவர் சமூக வலைத்தளத்தை தடை செய்ய அரசாங்கம் தீவிர பரிசீலனை!!

இணையத்தளங்களில் பாடசாலை மாணவர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான விடயங்கள் கட்டுப்பாடின்றி பரவி வரும் நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் ஊடாக கடந்த காலங்களில் பதிவான பாரிய அளவிலான அசம்பாவிதங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தடை குறித்த ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும் இறுதி முடிவு வெகுஜன ஊடக அமைச்சு அல்லது கல்வி அமைச்சினால் எடுக்கப்பட வேண்டும். கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டதும், அதனை அமுல்படுத்துவதற்கான முழுமையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கத் தயார் என ர பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு பாடசாலை ஒன்றின் தலைமை மாணவர் மற்றும் மூன்று ஆசிரியைகளுக்கு இடையிலான நெருக்கமான உறவு குறித்த கானொளிகள் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவாதம் வலுப்பெற்றுள்ளது.

“சமூக ஊடக உள்ளடக்கங்களால் சிறுவர்களின் மனநிலைக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நாடு ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்.” என எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

அதேவேளை சிறுவர்களின் மனநலம், இணையவழி அச்சுறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் தீய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கப் பல நாடுகள் ஏற்கனவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.

இதன்படி அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை கடந்த டிசம்பர் முதல் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து சீனா,பிரான்ஸ்,அமெரிக்கா (புளோரிடா) ஆகிய பகுதிகளிலும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அடுத்த மாதம் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் : பாதிப்பு ஏற்படலாம்!!

பெப்ரவரி மாதம் வானியல் மற்றும் ஜோதிடக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். வரும் பெப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள ‘சூரிய கிரகணம்’ மற்றும் கிரகங்களின் குறிப்பிட்ட நிலை ‘கிரகண யோகத்தை’ உருவாக்கும்.

ராகு அல்லது கேதுவின் செல்வாக்கில் ஒரு கிரகம் சிக்கினால், அல்லது கிரகண நிலை ஏற்படும்போது, அது ‘கிரகண யோகம்’ என அழைக்கப்படும்.இந்த காலம் 3 ராசிக்காரர்களுக்கு சோதனையின் காலமாக இருக்கும், எனவே அவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

மகரம்: பிப்ரவரியில் சூரியன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடையினாலும், கிரகண யோகத்தின் நேரடி விளைவுகள் மகர ராசியில் காணப்படும்.

உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன, குறிப்பாக கண் மற்றும் வயிற்று கோளாறுகள் அதிகரிக்கலாம். அரசாங்க வேலைகளில் தடை ஏற்படும், மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும்ஏற்படலாம். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு கருப்பு எள் தானம் செய்வதன் மூலம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்: சனி கும்ப ராசியில் இருப்பதால், சூரியன் மற்றும் ராகு-கேதுவின் நிலை கிரகண யோகத்தை மேலும் வலுப்படுத்தும். மனதில் தேவையற்ற பயம் மற்றும் பதட்டம் இருக்கும்.

தொழிலில் கூட்டாக வேலை செய்வோர் ஆவணங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும், இல்லையெனில் மோசடி ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்கள் ‘மகாமிர்துஞ்சய மந்திரத்தை’ ஜபிக்க வேண்டும், ருத்ராபிஷேகம் செய்வது நல்லது.

மீனம்: பிப்ரவரி மாதத்தின் கடைசி 15 நாட்கள் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிரமமாக இருக்கும். செலவுகள் அதிகரித்து, கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

வேலையில், ரகசிய எதிரிகள் நற்பெயரைக் களங்கப்படுத்த முயற்சிப்பார்கள். பயணத்தில் உடைமைகள் மற்றும் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து, நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும்.

தங்கத்தை வாங்கி குவிக்கும் வங்கிகள்: விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்திற்கான காரணம்!!

தங்கத்தின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டொலர்களை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

உலோகங்களின் வர்த்தக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படும் நிலையில்,தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அவுன்ஸ் ஒன்றுக்கு 105 டொலராக உயர்ந்துள்ளது.

உலகளவில் காணப்படும் நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் ஏனைய முதலீடுகளை விட தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்ற நிலையில் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் சந்தையை நிலைகுலையச் செய்துள்ளதுடன்,முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நிதிச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளன.

உயர்ந்து வரும் பண வீக்கம், அமெரிக்க டொலர் மதிப்பு வீழ்ச்சி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பது மற்றும் வட்டி விகித எதிர்பார்ப்பு ஆகியவையும் தங்கம், வெள்ளி விலையேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

மேலும் தங்கத்தின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், 2026-ம் ஆண்டின் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,400 டொலர்களைத் தாண்டும் என கணித்துள்ளது.

2026-ல் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 6,000 டொலர்களை தாண்ட வாய்ப்புள்ளதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜே.பி.மார்கன் நிறுவனமும் தங்கம் 6,000 டொலர்களைத் தொடும் எனவும் தெரிவித்துள்ளது.

யாழில் இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில் கார் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் , விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

வரதட்சணை கேட்டு சித்திரவதை : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருமணமாகி இரண்டே ஆண்டுகளில், கணவனின் பண ஆசைக்கு ஒரு இளம்பெண்ணின் உயிர் பலியாகியுள்ளது. இது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்திக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் ரூ.35 லட்சம் வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த தம்பதியினருக்கு இடையே, குருபிரசாத் சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியபோது விரிசல் ஏற்பட்டது. வீடு கட்டக் கூடுதல் பணம் தேவைப்பட்டதால், தனது மனைவியைப் பெற்றோரிடம் பணம் கேட்டு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஏற்கனவே திருமணத்திற்குப் பெற்றோர் அதிகம் செலவு செய்து விட்டதாகக் கீர்த்தி மறுத்துள்ளார். இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாகக் கூடுதல் வரதட்சணை கேட்டு குருபிரசாத் கீர்த்தியைத் துன்புறுத்தியுள்ளார்.

கீர்த்தியின் பெற்றோர் ஏற்கனவே கடன் வாங்கி ரூ.8 லட்சம் கொடுத்தும், குருபிரசாத் திருப்தியடையாமல் மீண்டும் கீர்த்தியை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

கடந்த 24-ம் தேதி இரவு தம்பதிக்குள் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் விரக்தியடைந்த கீர்த்தி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்த கீர்த்தி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கீர்த்தியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பனசங்கரி போலீசார் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கணவர் குருபிரசாத்தைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியச் சட்டப்படி வரதட்சணை கேட்பது மற்றும் கொடுப்பது இரண்டுமே தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாகத் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தால்,

அது வரதட்சணை மரணமாகக் (Dowry Death – Section 304B IPC) கருதப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படும். பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் வரதட்சணை தொடர்பான மரணங்கள் மற்றும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் குறையவில்லை என்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம் : அதிர்ச்சியில் கர்ப்பிணி மனைவி!!

புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்வில, மோதரவெல்ல பகுதியில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சம்பவித்துள்ளது. உயிரிழந்தவர் குருநாகல், வேவரவு பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலிந்த சதுரங்க அனுருத்த மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அலுவலக பணியாளர்களுடன் நேற்று முன்தினம் வெஹெர பகுதியில் இருந்து பேருந்தில் சிலாபம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதன்போது தல்வில பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் அலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அலைகளில் சிக்கிய 47 வயதுடைய ஒரு பெண்ணையும் அவரது 16 வயது மகளையும் அங்கிருந்த வெளிநாட்டு குழுவொன்று மீட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை காரணமாக உயிரிழந்தவர் மீது எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. எனினும் குழுவில் அவர் காணவில்லை என்பதை அறிந்து கொண்டு கடலில் மூழ்கியவரை தேடிப் பிடித்துள்ளனர்.

உடனடியாக மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் காணாமல்போன மாணவர் நிட்டம்புவ பகுதியில் கண்டுபிடிப்பு!!

புதிய இணைப்பு : திருகோணமலையில் நேற்று (26) காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன், இன்று நிட்டம்புவ பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய மாணவன், பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் மகனான எம்.எல். முன்சித் என்ற மாணவனே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.

நேற்று (26) பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட இம்மாணவன், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்து, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.

குறித்த மாணவன் மீட்கப்படும் போது உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் திருகோணமலையிலுள்ள மாணவனின் பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்த பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக நிட்டம்புவ நோக்கி விரைந்துள்ளனர்.

நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில், சமுத்திரகம பகுதியில் அவரது சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, மாணவன் நிட்டம்புவையில் மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவருடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மற்றொரு தகவல் குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

திருகோணமலை பேருந்து தரிப்பிடத்தில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட 22 வயதுடைய யுவதி ஒருவர், தனது காதலனுடன் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த யுவதியின் சம்பவத்திற்கும், மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மாணவன் எதற்காகக் கடத்தப்பட்டார்? கடத்தல்காரர்கள் யார்? என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. நேற்றையதினம்(26) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, திருகோணமலை நீதிமன்ற வீதியை சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் பாடசாலை மாணவர் நேற்று (26) காலை முதல் காணாமல்போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

திருகோணமலையில் உள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில்,மாலை நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் எண்ணியிருந்தனர்.​

இருப்பினும், மாணவர் நேற்று பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்கும் சமூகமளிக்கவில்லை என்பதை அறிந்த பாடசாலை நிர்வாகம், இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.​

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்திற்கு அருகிலுள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.​

காணாமல் போன மாணவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த மாணவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸாரும் உறவினர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மற்றும் மாணவி ஒருவர் ஆகியோரும் இவ்வாறு காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த்த முச்சக்கரவண்டி சாரதி கடும் காயங்களோடு மயக்கமடைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பரபரப்படைய வேண்டாம் என்றும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் கழுத்தை வெட்டியவரை கண்டு பிடிக்க உதவிகோரும் பொலிசார்!!

கூரிய ஆயுதத்தால் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

மத்துகம – தொலஹேன பகுதியில், 2025.04.18 திகதியன்று 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குற்றம் தொடர்பான உண்மைகள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சந்தேகநபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச்சென்று தலைமறைவாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

பெயர் – பிராமணகே தொன் சனத் ரவீந்திர நிலந்த முகவரி – இலக்கம் 78-01, இஹலகந்த, அகலவத்த தேசிய அடையாள அட்டை இலக்கம் – 840321401X சந்தேகநபர் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரியுமாயின் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார்,

பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். தொலைபேசி இலக்கம் பொலிஸ் தலைமையக ஆய்வாளர் – மத்துகம (071 – 8591701) தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவு – மத்துகம (071-8594381)

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, நேற்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.