பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகும் விஜயின் சிசிடிவி காட்சிகள்!!

கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தின் போது இடம்பெற்ற துயரசம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவற்றை கொடுக்க தவெக தலைவர் விஜய் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இதற்கான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்,ரோடு ஷோக்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்றையதினம்(3) விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, நாமக்கல், கரூர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும்,

குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்பிக்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் குழந்தை : அநுராதபுரத்தில் சம்பவம்!!

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், இப்பலோகம மஹவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது, இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது.

இதனை அவதானித்த ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த பையை சோதனையிட்டு பார்த்த போது பைக்குள் குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளது.

இதனையடுத்து ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த குழந்தையை நிக்கவெரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை வீட்டு வாசலில் யார் விட்டுச் சென்றது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியை கடக்க முயன்றவர் பேரூந்தில் மோதி உயிரிழப்பு!!

ஹபரணை – தம்புள்ளை வீதியில் ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (02) மாலை 07.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் பயணித்த பஸ் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் யாழில் இருந்த வந்த பேருந்து – டிப்பர் வாகனம் கோர விபத்து!!

கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது, அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிளிநொச்சியில் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு!!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் 47 வயதுடைய ஆசிரியரே எரி காயங்களுடன் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.

ஆசிரியர் , ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸா கூறியுள்ளனர் .

இச் சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணம்!!

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரெனவும் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளன. இவ்வாறு உயிரிழந்த 28 வயதான திலினி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் அலுபோமுல்லவில் நடைபெற்றுள்ளது.

மற்றைய யுவதியான 19 வயதான மலிஷாவின் இறுதிச் சடங்குகள் வாதுவையின் வெரகாமாவில் நடைபெற்றுள்ளன.

திலினியின் மரணத்திற்குக் காரணம் அவரது உடலின் முக்கிய இரத்த நாளத்தில் உருவான இரத்த உறைவு (த்ரோம்பஸ்) எனவும் இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும் அதிகப்படியான சோர்வு, மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

உயிரிழப்பதற்கு முன்பு உணவை உட்கொண்ட பிறகு அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாணந்துறை பொது சுகாதார ஆய்வாளர், யுனிச்செலாவின் சமையலறையை ஆய்வு செய்து, அங்கிருந்து உணவு மாதிரிகளை எடுத்து, இரண்டு ஊழியர்களின் திடீர் மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பினார்.

எனினும் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நேற்று முன்தினம் நோய்வாய்ப்பட்டு பாணந்துறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு!!

வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (03.10.2025) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

 

 

துர்க்கை அம்மன் சிலையை கரைக்கச் சென்றபோது 11 பக்தர்கள் பலி!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகள் அனைத்தும் முடித்து சிலைகள் ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றிருந்தனர்.

அதன் படி டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர்.

ஆனால் 11 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வேறு யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா? என தீவிரமாக சிகிச்சைக்காக தேடபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூஜைக்கான பொருட்களை வாங்கியபின் மீதி பணத்தில் குடித்த கணவன் : குடத்தால் அடித்தே கொன்ற மனைவி!!

ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிய பின்னர் மீதமிருந்த பணத்தில் மது குடித்த தொழிலாளியை அவரது மனைவி குடத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் கடலூர் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(36). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11),

வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வேல்முருகனிடம் ரூ.1,000யை வள்ளி கொடுத்தார்.

அதன்படி வேல்முருகனும் கடைக்கு சென்று பூஜை பொருட்களை வாங்கினார். அதில் மீதம் இருந்த பணத்துக்கு அவர், டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார்.

பின்னர் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனது மனைவியிடம் பூஜை பொருட்களை கொடுத்தார். பொருட்கள் வாங்கியது போக மீதமுள்ள பணத்தை தருமாறு வள்ளி கேட்டார்.

அதற்கு அவர் செலவாகி விட்டதாக கூறினார். அந்த பணத்தில்தான், தனது கணவர் மதுகுடித்து விட்டு வந்ததை அறிந்து கொண்ட வள்ளி அவருடன் வாக்குவாதம் செய்தார்.

மேலும் வேல்முருகனுக்கு சாப்பாடு கொடுக்காமல், அவரை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு வள்ளி இரவில் தூங்கி விட்டார். வேல்முருகன் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கினார்.

நேற்று காலையில் எழுந்த வள்ளி, பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். இதை கண்ட வேல்முருகன், உடனடியாக வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டார்.

இதனிடையே பால் வாங்கிவிட்டு வந்த வள்ளி, கணவரிடம் ஏன் வீட்டுக்குள் வந்தாய் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி, அங்கிருந்த எவர்சில்வர் குடத்தை எடுத்து வேல்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் அவர் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

3 வயது மகளை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் .

34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான பெனலோப் சந்திரீயுடன் வசித்து வந்தனர். இந்த குழந்தை 2023ல் டிசம்பர் 17ம் தேதி மாலையில் வீட்டிலேயே உயிரிழந்து உள்ளது.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை அந்த தம்பதி பட்டினியாக போட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தன.

பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர்.

3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி லின் டெய்டன் பிறப்பித்து உள்ளார்.

தரையிலேயே அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி : மருத்துவமனையில் அவலம்!!

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் கூட வந்ததாக தெரிகிறது.

பிரசவம் பார்க்க மருத்துவமனையில் செலுத்த அவர்களிடம் பணம் எதுவுமில்லை. அவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள். இதனால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி மேலும் அதிகமாகிக் கொண்டே வந்தது. மருத்துவ பணியாளர்கள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.

குறைந்தபட்சமாக ஒரு மறைவான இடத்தைக் கூட அவர்கள் ஒதுக்கி தரவில்லை. கர்ப்பிணியால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியாததால் அவர் அங்கேயே தரையில் அமர்ந்து, அந்த இடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்.

அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், “என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று நக்கலாக பேசி கிண்டலும், கேலியும் செய்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் தரையில் அமர்ந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், 2 நர்சுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே தனது மனைவி சிமாதேவி (35) மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் என குடும்பத்தினருடன் தங்கிருந்து அதே எஸ்டேட்டில் கடந்த 1½ மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே சிமாதேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் இது குறித்து ஜெகதீஸ் குர்ரே கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குடியிருப்புக்கு அருகே காயங்களுடன் சிமாதேவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், கழுத்தை துணியால் இறுக்கி சிமாதேவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் ஜெகதீஷ் குர்ரேக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. வீட்டில் சிமாதேவி எப்போதும் செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 27ம் தேதி இரவு இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வேண்டாம் என மனைவியை ஜெகதீஷ் குர்ரே கண்டித்து உள்ளார்.

ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் குர்ரே தனது மனைவி அணிந்திருந்த துப்பட்டாவை வைத்து, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் வீட்டுக்கு பின்புறம் உள்ள இடத்தில் உடலை வீசி விட்டு, அதன் மீது துப்பட்டாவால் மூடி வைத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து எதுவும் நடக்காதது போல ஜெகதீஷ் குர்ரே வீட்டிற்கு வந்து தூங்கினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக ஜெகதீஷ் குர்ரேவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர் தினத்தை கொண்டாடி பரிசுகளுடன் வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 04 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இந்த சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ள நிலையில், பெற்றொரின் அவதானத்தை கடந்து வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார்.

இதன்போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மர்மமான முறையில் தீக்கிரையான படகு!!

வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. நேற்று (01.10) மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தீயில் மீன்பிடி படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் முழுமையாக எரிந்துள்ளன. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தற்செயலாக இடம்பெற்றதா? அல்லது எவரேனும் தீ வைத்தனரா என்பது கண்டறிய வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவத்தின் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளமை தெரிய வருகிறது

 

நடிகை ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!!

தவெக தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சாரத்தில் , திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரட்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டார்.

முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்

இந்த பதிவானது இணையத்தில் வேகமாக பரவி விஜய்யை கைது செய்யணும் ஓவியாவின் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பதிவை ஓவியா டெலிட் செய்துவிட்டாலும், இது விஜய் ரசிகர்களை கோபமூட்டியிருக்கிறது நீ குடிச்சிட்டு காரை ஏற்றி பல பேரை கொலை செய்ய பாத்தியே உன்னை ஏன் கைது செய்யகூடாது?

இதுக்கு முன்னாடி கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்தபோது, நீ ஏதாவது பேசினாயா? முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்” என்பது உள்பட ஓவியாவுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை : 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்!!

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர்.

குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.