வவுனியா தண்டவாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!!

வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று (27.01.2026) இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியுள்ளது.

விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது – 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுள் குரோமில் ஆபத்தான Extensions : இதையெல்லாம் உடனே Remove செய்யுங்கள்!!

கூகுள் குரோம் வெப் ஸ்டோரில் மறைந்திருந்த சில ஆபத்தான எக்ஸ்டென்ஷன்கள் காரணமாக, சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சைபர் பாதுகாப்பு ஆய்வுகளின்படி, கூகுள் குரோம் வெப் ஸ்டோரில் சில போலி எக்ஸ்டென்ஷன்கள் ஊடுருவியுள்ளன.

இவை வெளிப்படையாக பயனுள்ள டூல்கள் அல்லது VPN சேவைகள் போல தோன்றினாலும், அவற்றை இன்ஸ்டால் செய்தவுடன் பயனர்களுக்குத் தெரியாமல் பின்னணியில் செயல்பட்டு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட தொடங்குகின்றன.

இந்த எக்ஸ்டென்ஷன்கள் பயனர்களின் ‘செஷன் குக்கீஸ்’ மற்றும் ‘ஆத்தென்டிகேஷன் டோக்கன்கள்’ போன்ற முக்கியமான தரவுகளை குறிவைக்கின்றன.

இதன் மூலம் ஹேக்கர்கள் பாஸ்வேர்ட் தேவையில்லாமலேயே பயனர்களின் ஃபேஸ்புக், ஜிமெயில் மற்றும் வங்கி கணக்குகளுக்குள் நுழைய முடியும். இதுவே இந்த சைபர் தாக்குதலின் மிகப்பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது.

ஆய்வாளர்கள் கண்டறிந்த பட்டியலில் சில எக்ஸ்டென்ஷன்கள் குறிப்பாக இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் மற்றும் VPN செயலிகள் என்ற பெயரில் உலா வருகின்றன.

உதாரணமாக, AI Assistant, Web Mirror, VPNCity, ChatGPT App போன்ற பெயர்களில் சில போலி எக்ஸ்டென்ஷன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பெயர்களில் அல்லது உங்களுக்குத் தெரியாத வேறு எந்த எக்ஸ்டென்ஷனும் உங்கள் பிரவுசரில் இருந்தால், அது ஆபத்தானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

பயனர்கள் பாதுகாப்பாக இருக்க உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில், குரோம் பிரவுசரில் உள்ள எக்ஸ்டென்ஷன் பட்டியலைச் சோதிக்க வேண்டும்.

வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, Extensions என்ற பகுதியில் Manage Extensions என்பதைத் திறக்க வேண்டும். அங்கு உங்களுக்குத் தெரியாத அல்லது பயன்படுத்தாத எக்ஸ்டென்ஷன்கள் இருந்தால், உடனே அவற்றை Remove செய்து நீக்க வேண்டும்.

அதன் பிறகு, ஜிமெயில், ஃபேஸ்புக் மற்றும் வங்கி இணையதளங்களின் பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றுவது அவசியம். மேலும், கணினியை முழுமையாக ஆன்டி-வைரஸ் மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்வதும் பாதுகாப்புக்கு உதவும்.

இந்த வகையான ஆபத்தான எக்ஸ்டென்ஷன்களை கூகுள் நிறுவனம் தொடர்ந்து கண்டறிந்து நீக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், ஹேக்கர்கள் புதிய பெயர்களில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற செயலிகளை உருவாக்கி ஊடுருவி வருகின்றனர்.

எனவே, தேவையில்லாத மற்றும் நம்பகத்தன்மை இல்லாத எக்ஸ்டென்ஷன்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பயனர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இலங்கை வான் பரப்பில் தோன்றிய மர்மப் பொருள் – வெளியான தகவல்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன,

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களை (UFOs) காட்டுவதாகக் கூறப்படும் வீடியோக்கள் தொடர்ந்து தனக்கும் இலங்கையில் உள்ள தொடர்புடைய அறிவியல் நிறுவனங்களுக்கும் சமர்ப்பிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

இரணவிலவில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒருவரை ஒரு யுஎஃப்ஒ பின்தொடர்வதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியின்படி, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இரணவிலவில் உள்ள வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) பரிமாற்ற மையத்திற்கு அருகில் ஒரு யுஎஃப்ஒ என்று நம்பப்படும் கண் சிமிட்டும் பொருள் காணப்பட்டுள்ளது.

குறித்த மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இறால் பண்ணையை நடத்தும் நபர் ஒருவர் அதிகாலை 3.00 மணியளவில் இதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

முதலில் வானத்தில் ஒரு ஒளிரும் ஒளியைக் கவனித்ததாகவும், அதை ஒரு டார்ச்சைப் பயன்படுத்தி சமிக்ஞை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, வெளிச்சம் என் திசையை நோக்கி நகரத் தொடங்கியது. அது ஏதோ ஒரு கப்பல் போல் இருந்தது, ஆனால் அதன் வடிவம் தெளிவாகத் தெரியவில்லை. அது என்னை நோக்கி மிக வேகமாக வந்தபோது, ​​நான் டார்ச்சை அணைத்துவிட்டு ஓட ஆரம்பித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பண்ணையில் இருந்த மற்றொரு நபரை எச்சரித்து, அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.

“மேலும் வெளிச்சம் எங்களைப் பின்தொடர்ந்தது. நாங்கள் டார்ச்சை அணைத்தவுடன், அந்தப் பொருள் நகர்வதை நிறுத்திவிட்டு வானத்தில் நிலையாக இருந்தது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் மாணவர் மாயம் : சைக்கிள், புத்தகப்பை மீட்பு!!

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பகுதியில் பிரபலமான வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்றைய தினம் காலை 7.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியிருந்ததுடன், மாலை வரை வீடு திரும்பவில்லை.

அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் ஆரம்பத்தில் எண்ணியுள்ளனர். காணாமல்போன மாணவர், திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஷ்வரா இந்து கல்லூரியின் மாணவராவார்.

அன்றைய தினம் நடைபெற்ற பரீட்சையில் அவர் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பாடசாலை நிர்வாகம் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்து கல்லூரி மைதானத்திற்கு வெளியே உள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் அமைந்துள்ள பற்றைக்காட்டுப் பகுதியில், குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகங்களுடன் கூடிய பை ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாணவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. குறித்த மாணவர் குறித்து யாருக்காவது தகவல் இருப்பின், தயவுசெய்து திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளைஞன் மாயம் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவு சுமார் 7.00 மணியளவில், குறித்த இளைஞனின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும்,

அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை அவர் வீடு திரும்பாத நிலையில், இதுகுறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த இளைஞன் தொடர்பான தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 070 131 6536 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிறந்த நாளில் நேர்ந்த துயரம் – கோர விபத்தில் உயிரிழந்த மாணவன்!!

களுத்துறை, பதுரலிய பகுதியில் தனது பிறந்தநாளுக்கு மறுநாள், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 18 வயதான ஹசிந்து தேமியா விஜயதுங்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் C.W.W கன்னங்கர மத்திய கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது பிறந்தநாளுக்கு மறுநாள், பதுரலிய கலுகல வீதியில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ​​மோட்டார் சைக்கிள் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாணவன் உயிரிழந்துள்ளார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் இமேஷா துஷான் குமார படுகாயமடைந்து களுத்துறை – நாகொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் 12,000 ரூபாய் அதிகரித்த தங்கத்தின் விலை : நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததினால் இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை 12,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் முதன் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.

அதன்படி இன்று காலை இலங்கை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 385,000 ரூபாயாகவும் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 356,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து : சாதுர்யமாக 80 பேரின் உயிரை காப்பாற்றிய சாரதி!!

தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (26) அதிகாலை கினிகத்தேனை பகுதியில் பாரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவலை வளைவுப் பகுதியில் இப்பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் தடையாளி (Brake) கட்டமைப்பு செயலிழந்துள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிவில் இறங்கியபோது, வீதியோரமிருந்த மணல் மேடு ஒன்றின் மீது பேருந்தினை மோதச் செய்து சாமர்த்தியமாக நிறுத்தினார்.

சாரதியின் இந்த துரித மற்றும் சமயோசித செயலால் பேருந்து பள்ளத்தில் விழுவது தவிர்க்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 80 பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

விபத்தைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து பயணிகளை மற்றுமொரு பேருந்தில் ஏற்றி தங்களது இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இலங்கையில் நேர்ந்த பயங்கரம் : போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை!!

பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இது இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளியான 48 வயதுடைய உயிரிழந்தவரின் தந்தையை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பங்களாதேஷில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞர்!!

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

பங்களாதேஷில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவில் கடை மூடப்பட்ட பின்னர் வழக்கம்போல் அங்கேயே தூங்கியுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் திடீரென அந்த கடையில் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் போராட்டத்தின் பின்னர், கடைக்குள் கருகிய நிலையில் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

முதலில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தீ விபத்து என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது

இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வந்த மர்ம நபர்கள், சஞ்சல் சந்திரா, தூங்கிக் கொண்டிருந்த கடையின் ஷட்டரை வெளிப்புறமாக பூட்டியுள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவர் கடை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர கொலை என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தை இறந்த நிலையில், தனது தாய், உடல்நலம் பாதித்த அண்ணன் மற்றும் தம்பி ஆகிய மூன்று பேரையும் சஞ்சல் சந்திராவே காப்பாற்றி வந்துள்ளார். ஒற்றை ஆளாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து வந்தவரை இழந்து, அவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.

பங்களாதேஷில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதால் இந்துக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இதனால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அம்புலன்ஸ்!!

மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர்.​

ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க வைத்தியசாலைக்குச் சொந்தமான குறித்த அம்பியுலன்ஸ் வண்டி, இன்று அதிகாலை தம்புள்ளை – ஹபரணை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.​

ஏறாவூர் நகர சபை உறுப்பினரான அல்ஹாபிழ் உவைஸ், சக்கூர் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் முகம்மது சக்கூர், அவரது மனைவி, அம்பியுலன்ஸ் சாரதி முகம்மது அஸீம் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.​

விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இன்று முதல் கடுமையாகும் நடைமுறை!!

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த 3 மாத கால அவகாசம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி வாகன சாரதி மற்றும் பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகன சாரதி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணி ஆகிய இருவருக்கும் இச்சட்டம் பொருந்தும்.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் இந்த விதிமுறையை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை!!

புதிய இணைப்பு : உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (26) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் ஒரு மாதத்திற்குள் ஒரு பவுண் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 30,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

24 கரட் தங்கத்தின் விலை இன்று 397,000 ஆக பதிவானதாகியுள்ள நிலையில்,இந்த மாத தொடக்கத்தில், அதன் விலை 368,425 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை இன்று 367,000 ரூபா ஆக பதிவானதாகியுள்ள நிலையில், மாத தொடக்கத்தில் 340,400 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஜனவரி 19 அன்று ரூ. 385,000 ஆக இருந்த ஒரு தங்க நெக்லஸ் இன்று ரூ. 400,000 ஐத் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, தங்கப் பொருளின் குறைந்தபட்ச விலை ரூ. 395,000 இல் தொடங்குகிறது என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக பலர் வீடுகள், வங்கிப் பெட்டகங்கள் மற்றும் அடகுக்கடைகளில் உள்ள தங்கப்பொருட்களை விற்கத் தூண்டப்பட்டுள்ளதுடன்,சந்தையில் தங்கத்தின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு : இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (26) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலரை கடந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

இலங்கையின் தங்க நிலவரம்

இதற்கமைய, செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரங்களுக்கமைய, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 397,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கடந்த வௌ்ளிக்கிழமை24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 385,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 356,000 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவன் : மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தன் கணவனை பெண்ணொருவர் கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள Hamidpur என்னும் கிராமத்தில், பிரதீப் என்னும் நபர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குவருவதால் அவரது மனைவியான சோனி என்னும் பெண் அவரை கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளதையும், அவரது தாய் மகனின் கட்டுகளை அவிழ்த்து அவரை விடுவிக்க முயல்வதையும் அந்த வீடியோவில் காணலாம்.

இதற்கிடையில், பிரதீப்பின் தாயான சுமன், வேறொரு பகீர் செய்தியை வெளிக்கொணர்ந்துள்ளார். அதாவது, தன் மகனை அவரது மனைவியான சோனி அடித்து உதைப்பது வழக்கம் என்றும், சோனியிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளதாகவும், அதைக் காட்டி அவர் பிரதீப்பை மிரட்டுவதுண்டு என்றும் பொலிசில் புகார் செய்துள்ளார் சுமன்.

ஆயுதம் வைத்துள்ளதாகக் கூறப்படும் புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் அது தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கல்லூரி மைதானத்தில் சோகம்: கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (17). இவர் இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படித்து வந்தார்.

நேற்று மதியம் 1 மணியளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திவ்யதர்ஷினி உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

மாணவி மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அவரை மீட்டு உடனடியாகக் காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், திவ்யதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.