வவுனியா கனகராயன்குளம் முருகன் ஆலயத்திற்கு வடமாகாணசபை உறுப்பினரால் நிதிஉதவி!!

நேற்று (07.11.2015) வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா கனகராயன்குளம் முருகன் ஆலயத்திற்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா கனகராயன்குளம் முருகன் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபனத்திற்கான காசோலை முருகன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.ஜெ.ஜெயரூபன் அவர்க்ளிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் அங்கத்தவர்கள் ஆலய பக்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10

3வது போட்டியிலும் வெற்றிபெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!

SL

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இழந்தது.

மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரண்டில் வெற்றி பெற்ற இலங்கை 2-0 என முன்னிலையில் இருந்ததோடு தொடரையும் வசப்படுத்திய நிலையில், நேற்று மூன்றாவதும் இறுதியுமான போட்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை இரு முறைகள் மழை குறுக்கிட்டமையால், போட்டி 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்த மேற்கிந்திய தீவுகள் 206 ஓட்டங்களைப் பெற்றது.

அதிரடியாக ஆடிய அந்த அணியின் சாமுவேல்ஸ் 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

பின்னர் டக்வெல்த் லூயிஸ் முறைப்படி இலங்கைக்கு 190 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 32.3 ஓவர்களில் இலங்கை ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மீண்டும் மழை பெய்தமையால், டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சாமுவேல்சும் தொடரின் சிறப்பாட்டக்காரராக குசல் பெரேராவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நல்லாட்சியிற்கு வித்திட்ட மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்!!

Sobitha

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவரது உடலை இன்று காலை 09.15 அளவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்னாரது இறுதிக் கிரியைகளை பூரண அரசு மரியாதையுடன் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தல அஜித்தின் வேதாளம் பட டிக்கெட் ரூ.500! ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!!

ajith_poster_002

 

தல அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வேதாளம் படத்தின் டிக்கெட் ரூ.500க்கு விற்கப்படுவதாக அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வேதாளம்’.

அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது, இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் ரூ.500க்கு விற்கப்படுவதாக மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

அதில், முதல்வருக்கு வேண்டுகோள், அஜித்தின் 56-வது படமான வேதாளம் படத்தின் ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுகிறது.

வல்லமை வாய்ந்த தாங்கள், வேதாளம் படத்தின் டிக்கெட் நியாயமான விலையில் கிடைக்க ஆட்சியருக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள்!!

478426117Untitled-1

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை ஆறு இலட்சத்து 64, 537 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, கடந்த வருடம் ஐந்து இலட்சத்து 70,409 பேரே சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தனர் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 87,128 பரீட்சார்த்திகள் அதிகளவில் தோற்றவுள்ளனர்.

இவர்களில் நான்கு இலட்சத்து 3,442 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் இரண்டு இலட்சத்து 60,895 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் பாடசாலை மூலமாக மூன்று இலட்சத்து 70, 487 பேர் தோற்றியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இம்முறை 4,670 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு கடந்த வருடம் 4,279 பரீட்சை மத்திய நிலையங்களே இயங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும்!டக்ளஸ் தேவானந்தா!

1914377319Untitled-1

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், தங்களது விடுதலை கோரி உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளிடம், இம்மாதம் 07ம் திகதிக்கு முன்பதாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அக் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், இவர்களது விடுதலை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பிரதானப்படுத்தி தொடர்ந்து வந்த பல தேர்தல்களிலும் மக்களிடம் வாக்குகளைக் கேட்டு, இன்று அரசாங்கத்தில் பதவிகள் பெற்று, இணக்க அரசியலில் பங்கெடுத்து வருபவர்கள், தங்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் பொறுப்பில்லை என்ற வகையில் அரசு தரப்பை மாத்திரம் குற்றஞ்சாட்டி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் இப் பொறுப்பில் இருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என தங்களது வழமையான அணுகுமுறையையே இவர்கள் இப்போதும் மேற்கொள்ள முற்படுகின்றனர்.

ஆனால், எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாறப் போவதில்லை என்பதை இந்த சுயநல அரசியல்வாதிகள் உணர்ந்து செயற்பட வேண்டும். அந்த வகையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முழுமையான பொறுப்பை ஏற்று, தங்களது இணக்க அரசியல் மற்றும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி அரசுடன் கலந்துரையாடி, பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவில் சாத்தியமாக்க முன்வர வேண்டும்.

ஏற்கனவே கடந்த காலத்தில் அரசின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய அரிய வாய்ப்பு கிட்டியிருந்தும், அதனை தங்களது சுயநலன்களுக்காக சரிவரப் பயன்படுத்தத் தவறியவர்கள், தற்போதும் சாக்குப் போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காமல் உரிய செயற்பாடுகளில் இறங்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாகதீபத்தை மீண்டும் நயினாதீவாக மாற்றகோரி வடமாகாண சபையில் தீர்மானம்!

Nainativu.8

நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை கடந்த 05.11.2015 இல் நிறைவேற்றியிருக்கின்றது.

வட மாகாணசபையின் நேற்று முன்தின அமர்வில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீபம் வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீபம் தெற்கு எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளன.

எனவே இதன் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பெயர் மாற்றத்தை வர்த்தமானியில் உடனடியாக பிரகடனம் செய்ய ஜனாதிபதியும் உள்ளூராட்சி, மாகாணங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றியிருக்கின்றது.

வட மாகாணசபையின் நேற்று முன்தின அமர்வில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீபம் வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீபம் தெற்கு எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளன.

எனவே இதன் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பெயர் மாற்றத்தை வர்த்தமானியில் உடனடியாக பிரகடனம் செய்ய ஜனாதிபதியும் உள்ளூராட்சி, மாகாணங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வவுனியாவில் தமிழ் மக்களின் காணிகள் வன இலாகா திணைக்கத்தால் அபகரிப்பு!சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

mp3
வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும் தமது திணைக்களத்துக்கு உரித்துடைய காணிகள் எனக்கூறி வன இலாகா திணைக்களம் சுவீகரித்து வருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளுக்கு முறைப்படியான உறுதிப்பத்திரங்கள் காணப்படவில்லை.

நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக அவற்றுக்கு முறைப்படியான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடுகள் தவறவிடப்பட்டுள்ளன.

எனினும் குறித்த காணிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளென எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமன்றி மக்களுக்குச் சொந்தமான அக்காணிகளுக்கு மிகவிரைவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னரும் கூட, நீண்ட காலமாக மக்கள் குடியிருந்து வரும் அக்காணிகளை தமது திணைக்களத்துக்கு உரித்துடையவை என்று வன இலாகாவினர் தெரிவித்து எல்லைக்கற்கள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதேச செயலர்களின் உத்தரவுகளையும் மீறி இவ்வாறு எல்லையிடப்படும் வலயங்களுக்குள் பொதுமக்களின் வயல் காணிகளும், பயிர்ச்செய்கை காணிகளும் உள்ளடங்குகின்றன.

அக்காணிகளில் பல வருடங்களுக்கு முன்பே அம்மக்கள் நாட்டி இன்று பயன்தரும் தென்னை, பனை மற்றும் பழ மரங்களும் உள்ளன.

மக்கள் தமது சக்திக்கு உட்பட்டு கட்டிய பெறுமதியான வீடுகள் மற்றும் கிணறுகளும் உள்ளன. இன்று அக்காணிகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவது என்பது எவ்வாறு நியாயமான நடவடிக்கையாகும்.

அதுமட்டுமன்றி நல்லாட்சி எனக் கூறப்படும் புதிய ஆட்சிக்கும் எவ்வாறு பொருத்தமுடைதாகும். இச்செயற்பாடு எமது மக்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் ஒரு அநீதியாகவே நாம் நோக்குகின்றோம்.

இன்னும் சில இடங்களில் மக்கள் தமது நிலங்களில் முழுமையாக குடியேறி வீட்டுத்திட்டத்தையோ, தமக்கான வாழ்வாதாரத்தையோ அமைத்துக் கொள்ளாத நிலையில், அக்காணிகளையும் எல்லைக்கல் இட்டு சுவீகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் கிராம மட்ட அமைப்புகளுக்கும் குறித்த திணைக்களத்துக்கும் இடையில் பலதரப்பட்ட முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தினர், தங்களுக்கு அரச அதிபரோ, அல்லது அரச அதிகாரிகளோ, மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ எவரும் கட்டளை இடமுடியாது என்ற தோரணையில் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளை கபளீகரம் செய்கின்றனர்.

மறுபுறத்தில் அதேபோக்கிலான அதிகார தோரணையில் வன இலாகாவினரும் ஏதேச்சதிகாரமாக செயற்படுகின்றனர்.

இது தொடர்பில் கடந்த கால அரசாங்கத்திடமும், தற்போதைய புதிய அரசாங்கத்திடம் நாங்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

புதிய நல்லாட்சி அரசாங்கத்தால் கூட வன இலாகாவினரை கட்டுப்படுத்த முடியவில்லையா? காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லையா? என்ற வினாக்களே எமக்குள் தோன்றியுள்ளன.

வடக்கில் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய பூர்வீக காணிகளை சுவீகரிக்க நான்கு வகையான உத்திகள் பின்பற்றப்படுகின்றன.

முப்படைகளுக்கென்றும், வன இலாகா திணைக்களத்துக்கு சொந்தமானது என்றும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கு என்றும், பறவைகள் சரணாலயத்துக்கு என்றும் வகைப்படுத்தி காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவு, வவுனியா பிரதேச செயலக பிரிவில் பூவரசங்குளம், கந்தன்குளம், புலவனூர், குருக்கள் ஊர், மடுக்குளம், வேலர்சின்னகுளம், பம்பைமடு பெரியகட்டு போன்ற பகுதிகளிலும்,

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் காடு வெட்டி களனி செய்து வந்த மக்களின் காணிகளை இந்த நான்கு உத்திகளையும் பயன்படுத்தி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க அதிபரும், பிரதேச செயலர்களும், கிராம அலுவலர்களும், வன இலாகா திணைக்கள அதிகாரிகளும் கூட்டாக கூடிப்பேசி சுமுகமான தீர்வைக்காண ஒரு அவசர சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைக் கோரியுள்ளேன்.

மக்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும், பிரதமர், காணி அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போதும் கூட பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் அவர்களுக்கு இன்று மீதமாய் உள்ள ஒரே சொத்தான காணிகளையும் பறித்தெடுப்பது என்பது நல்லாட்சிக்கு கேடாகும்.

வன்னி மாவட்ட மக்களின் வாழ்க்கைச்சூழலை பொறுத்தவரையில் அம்மக்களுக்கும், அம்மக்களின் சந்ததிகளுக்கும் உள்ள ஒரே வாழ்வாதாரம் மற்றும் உயில் சொத்து காணிகளாகும்.

எனவே அவர்களின் சந்ததிகளும் இந்த காணிகளை நம்பியே தமது எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய பாரம்பரிய வழக்கமும் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இச்செயற்பாடு பனையால் விழுந்தவரை மாடேறி மிதிப்பது போன்றதற்கு ஒப்பானதாகின்றது என்றார்.

நெடுங்கேணியில் ஆசிரியர்கள் குடிபோதையில் கலாட்டா! கைதாகி பிணையில் விடுதலை!

5938660-Drunk-Men-Stock-Vector-drunk-cartoon-people
வவுனியா வடக்கு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் செய்த கலாட்டாவினால் ஆறு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப் பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் காலையில் பாடசாலைக்கு சென்ற அதிபர் பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்ட போது காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிபரினால் வலய கல்வவிப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவரால் உத்திரவிடப்பட்ட நிலையில் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந் நிலையில் பொலிஸாரினால் விடுதியில் தங்கியிருந்த இ.சந்திரகாசன், எஸ்.பிரதீபன், எஸ்.தசபுத்திரன், து.திருக்குமரன், எஸ்.நிசாந்தன், வினோராஜ் ஆகிய 6 ஆசிரியர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீதிமன்றத்தால் குறித்த ஆறு ஆசிரியர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுவதால் வட மாகாண கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஆவண செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 நன்றி :தமிழ்வின்

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் வவுனியாவில் தொடர் போராட்டங்கள் நடத்த தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை தீர்மானம்!

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் வவுனியாவில் தொடர் போராட்டங்கள் நடத்த தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை தீர்மானித்துள்ளதாக அதன் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவரும், வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் நேற்று (07.11.2015) இடம்பெற்ற வவுனியா தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்றைய கூட்டத்தில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் ஆராயப்பட்டது.

குறிப்பாக, சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்று இன்றைய தினம் எடுக்கப்பட்டது.

குறிப்பாக கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையுடன் அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்திருந்தாலும், அது நடைபெறாத காரணத்தால் ஏற்கனவே வட மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கோருவதுடன், அவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் அவர்களின் விடுதலைக்காக வவுனியா மாவட்டத்தில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை வவுனியாவில் நடைபெறும் மீள்குடியேற்றம், தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இது தவிர, உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.ரதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சிவலிங்கம் உள்ளிட்ட வவுனியா தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள் :ஐ.யோகநாதன்

12219510_967293063338397_1774739322151780562_n 12226961_967293423338361_8575724166933952939_n vavu-tak-01 vavu-tak-03

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

IND

மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது.

இந்தியா- தென்னாபிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 68 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக முரளி விஜய் அரைசதம் கடந்து 75 ஓட்டங்கள் எடுத்தார். புஜாரா 31 ஓட்டங்களும், ஜடேஜா 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அதே 68 ஓவர்களில் 184 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 63 ஓட்டங்களும், அணித்தலைவர் அம்லா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில், அஸ்வின் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், மிஸ்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 75.3 ஓவர்களில் 200 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில், ஹார்மர், தாகிர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாய் அமைந்தது.

பிளண்டர், டுபிளசிஸ் தலா 1 ஓட்டங்களிலும், அம்லா ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாபிரிக்கா 10 ஓட்டங்களுக்கே 3 விக்கட்டுகளை இழந்தது.

பின்னர் சுழலிக்கு சாதகமான ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா தொடர்ந்து விக்கட்டுகளை வீழ்த்தினர். இதனால் தென்னாபிரிக்காவின் முன்கள துடுப்பாட்ட வரிசை சரிந்தது.

டிவில்லியர்ஸ், எல்கர் தலா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் காப்பாளர் விலாஸ் (7), ஹார்பர் (11)நிலைக்கவில்லை.வான் செய்ல் (36)ஓரளவு ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்க அணி.

இதனால் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில், சுழலில் மிரட்டிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

புற்றுநோயினை கட்டுப்படுத்தும் தக்காளி!!

hero_tomatoes_heldபுற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கத்தை குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

100 கிராம் தக்காளிப் பழத்தில் 20 கலோரி தான் உள்ளது. எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி, விட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன.

இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும்.
தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம்.இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். தக்காளி செடியின் இலைகளை பறித்த உடன் 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.

காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியவை தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும்.

காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும்.காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன.

இரவில் படுக்க போகும்போது ஒரு டம்ளர் தக்காளி சாறுடன் அதில் தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும்.முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும்.பிறகு தக்காளி சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த பயனை அளிக்கும் சிகிச்சை முறையாகும்.

முகநூல் ஊடாக முன்னாள் அரசியல்வாதி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

FB_B_21052013

முகநூல் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரை மோசமான வார்த்தைகளால் அவதூறு செய்தும் அச்சுறுத்தலும் செய்த முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக இணைய குற்றப்பிரிவு ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர் மலையகத்தின் முன்னாள் நகர சபை தலைவராக கடமையாற்றியவர் என்பது முக்கிய விடயம்.குறித்த ஊடகவியலாளர் இவரைப்பற்றிய செய்திகளை பத்திரிகையில் எழுதி வருவதாக குறித்த அரசியல் பிரமுகர் ஊடகவியலாளரின் முகநூல் உள்பெட்டியினுள் தகாத வார்த்தைகளால் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு நாகரிகமான முறையில் ஊடகவியலாளர் பதில் கூறியும் மறுபடி குறித்த அரசியல் பிரமுகர் அச்சுறுத்தும் வகையில் பதில் பதிவேற்றியுள்ளார்.சமூக வலைதளங்களில் இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களை சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை விசாரிக்கும் பிரிவினருக்கு முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதால் அதன் மூலம் முறைப்பாடு செய்து குறித்த அரசியல் பிரமுகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊடகவியலாளர் தனது நிறுவன சட்டதரணிகளின் ஆலோசனையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் வழியாக பெறப்பட்ட ஆதாரங்கள் சைபர் கிரைம் பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளன.

கடும் மழையால் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாதிப்பு!!

ratnapura-1vdxqy8பொகவந்தலாவை – செப்பல்ட்டன் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ.அமரசிறி தெரிவித்தார்.

குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 72 மாணிக்கக்கல் அகழ்வு குழிகளுக்குள் முழுமையாக வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நீரை இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி, குழிகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீரற்ற வானிலையினால் மாணிக்கக்கல் அகழ்வு குழிகளில் பணி புரியும் சுமார் 1500ற்கும் மேற்பட்ட பணியாட்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

விஷால் உருவபொம்மை எரிப்பு- 50 பேர் கைது!!

pandiya_nadu_movie_stills_vishal_lakshmi_menon_6c321f8

நடிகர் சங்க பொது செயாலளர் பதவியை ஏற்ற பிறகு விஷால் பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் காவிரி பிரச்சனைக்கு தான் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது என கூறினார்.

இதை எதிரித்து தமிழகத்தின் வளர்ந்து வரும் கட்சி ஒன்று விஷால் வீடு முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.மேலும் அவர்கள் விஷால் உருவபொம்மையை எரிக்க, காவல்துறையினர் உடனே அதை தடுத்து நிறுத்தி, 50 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாளை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ரசிகர்கள்!!

kamal-hassan_13600437935உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தள ரசிகர்கள் புதுவிதமாக கமல் பிறந்தநாளை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.டுவிட்டரில் #HBDKAMALகமல்कमलകമലಕಮಲ್కమల్ என்ற டாக் உருவாக்கி இதை இந்தியளவில் ட்ரண்ட் செய்தனர்.

இதில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என கமல் நடித்த அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி அந்த டாக்கை உருவாக்கினர்.இதனால், இந்தியா முழுவதும் கமலுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.