வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞான தினவிழா!!(படங்கள்)

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் விஞ்ஞான தினவிழா இன்று (06.11.2015) காலை நடைபெற்றது.

இவ் விழாவில் வட மாகாண சபை உறுப்பினர் G.Tலிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராசா, M.P.நடராஜ் மற்றும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், மற்றும் விஞ்ஞான பாடசம்மந்தப்பட்ட ஆலோசகர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இவ் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் G.T.லிங்கநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் ரூபா 50,000 வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் விழாவில் தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலையில் முதலிடம் பெற்ற மாணவி கவிநிலாவிற்கு சான்றிதழும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.

10378957_515418591972826_6821068425304683040_n 12065839_515418885306130_4804677374098080511_n 12105941_515418831972802_4643533646419373891_n 12189719_515418971972788_7954637060672265665_n 12190927_515418715306147_624849443521866572_n 12191450_515418858639466_8031637115391060924_n 12196042_515418505306168_8245690175557641745_n 12196186_515419028639449_3790556466521763774_n 12208335_515418758639476_8176357392085488953_n 12219469_515418918639460_3675973399697603896_n

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு,பகுதிநேர போதனாசிரியர் வெற்றிடங்கள்!!

vacancy

வவுனியா தொழில்நுட்பகல்லூரியில்; வருகை தரு  மற்றும் பகுதிநேர போதனாசிரியர்; பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியாவினால் கோரப்படுகின்றது.

சேவையின் தன்மை: தற்காலிகமானது. திருப்திகரமற்ற சேவை என இனங்காணப்படும் போது முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்படும். ஒரு வருடம் சேவைக்காலத்தை கொண்டது. ஒரு வருடத்தின் பின் மீண்டும் புதுப்பிக்கக்கூடிய வாய்ப்புடையது.

சம்பளம் :மணித்தியாலத்திற்கு 600 ரூபா முதல் 1000ரூபா வரை பெற்றுக் கொள்ளமுடியும். அனைத்து துறைகளிலிருந்தும் போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும்A/C Mechanic),electronic, electrical wiring,auto mobile   போன்ற கற்கைநெறிகளுக்கு அதிகளவிலான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

 தகமை :விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் NVQ LEVEL 5 அல்லது NDT அல்லது NCT அல்லது குறித்த துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

அனுபவம்: இத்துறையில் கற்பித்தல் அனுபவம் அல்லது தொழில் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும்.

குறிப்பு: 15.11.2015 ம்; திகதிக்கு முன்பதாக விண்ணப்பங்களை அதிபர், தொழில்நுட்பக்கல்லூரி, மன்னார் வீதி, நெளுக்குளம், வவுனியா எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பப் படிவங்களை வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம்.

 தொடர்புகளுக்கு  024 222 3664, 024 222 6720, 024 2050177

செல்பி எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட ஆன்டி செல்பி டேப்ஸ்!!

selfie1செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி டேப்ஸ் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை.

இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் ஆன்டி-செல்பி டேப்ஸ் என்ற பெயரில் (மிண்ட்ஸ்- புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன.

ஆண்களுக்கு 1 மாத்திரை, பெண்களுக்கு 5 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான சட்ட வாரம்!!

vakumoolam_CI

இம்மாதம் 23ம் திகதி முதல் 29ம் திகதி வ​ரை தேசிய சட்ட வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது. நீதி அமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து நாடு முழுவதும் பல்வேறு செயற்பாடுகளை இந்தவாரத்தில் முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் சட்ட ஆலோசனை நிலையங்களை நடத்தவுள்ளது.

இந்தவாரத்தில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளூடாக மக்களுக்கு நேரடியான சட்ட ஆலோசனைகள் வழங்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நீதித்துறை விடயங்களில் பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அறியத் தருவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0113 133 864, 0113 133 862 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய சட்ட வாரத்தின் நிறைவு விழா பிரதமர் தலைமையில் வரும் 28ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை!!

1328311655Flight

தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மனைவியை நடுவீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி!! (வீடியோ)

1680164941Shoot

பிரேசில் நாட்டை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடுவீதியில் விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான சிசிடீவி காணொளி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமுற்ற பொலிஸ் அதிகாரி மனைவியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மொத்தம் 11 முறை அவர் மனைவியை துப்பக்கியால் சுட்டு உள்ளார். பிரேசில் நாட்டில் உபேர்லாந்தியா நகரில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

காரில் இருந்து இறங்கிய மனைவி தப்பி ஓடும் போதும் அந்த பொலிஸ் அதிகாரி விடாமல் துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்டுக கொன்றுள்ளார். இந்த சம்பவத்தில் பலியான பெண் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை!!

lockup_500தமிழ் அர­சியல் கைதி­களில் 62 பேரை இரண்டு கட்­டங்­க­ளாக பிணையில் விடு­விப்­பது என்றும் ஏனை­ய­வர்­களின் விடு­தலை குறித்து அமைச்­ச­ரவைக் குழு­வொன்­றினை அமைத்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற உயர்­மட்டக் குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­க­ப்பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக ஆராயும் உயர்­மட்டக் கூட்டம் நேற்று மாலை நடை­பெற்­றது.

இந்தக் கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ, புனர் வாழ்வு மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன், தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் வெளிவிவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ. சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகி­யோரும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தலை­மை­யி­லான குழு­வி­னரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர மற்றும் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகி­யோரும் இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­றனர்.இந்த கூட்­டத்­தின்­போது தமிழ் அர­சியல் கைதி­களை பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அர­சியல் கைதிகள் விட­யத்தில் இனியும் இழுத்­த­டிப்புப் போக்கு மேற்­கொள்­ளக்­கூ­டாது. இம்­மாதம் 7ஆம் திக­திக்குள் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்ற வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.

அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு அளிப்­பது கடி­ன­மாக உள்­ளது. அதனால் கட்டம் கட்­ட­மாக அவர்­க­ளுக்கு பிணை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கலாம் என்று அரச தரப்பில் கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது தெகி­வளை குண்டுத் தாக்­குதல் உட்­பட பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வது கடி­ன­மாகும் என்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சார்பில் கலந்­து­கொண்ட அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அர­சியல் கைதி­களில் 32 பேரை முதற்­கட்­ட­மாக பிணையில் விடு­தலை செய்­வது என்றும் இரண்டாம் கட்­ட­மாக 30 பேரை பிணையில் விடு­விப்­பது என்றம் ஏனை­ய­வர்கள் விடயம் தொடர்பில் அமைச்­ச­ரவை உப­கு­ழுவை அமைத்து ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றும் இந்தக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

குற்­ற­வா­ளி­க­ளா­ககக் கரு­தப்­பட்டு நீதி­மன்­றத்­தினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்தில் அர­சாங்­க­மா­னது எத்­த­கைய நட­வ­டிக்­கை­யி­னையும் எடுக்க முடி­யாது. ஜனா­தி­ப­தியே இவ்­வி­ட­யத்தில் முடி­வு­செய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­யல்­கை­தி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவானது கடந்த மாதம் 19ஆம் திகதி முதல்தடவையாக கூடி ஆராய்ந்திருந்தது. கடந்த மாதம் 26ஆம் திகதி இரண்டாவது கூட்டம் இடம்பெற்றிருந்தது. நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற மூன்றாவது கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உயர்தர பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை!!

AL-Exam_2-626x380-415x260கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 62 மத்திய நிலையங்களில் குறித்த செயல்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் இதற்காக 5074 பேர் தோற்றவுள்ளனர். குறித்த செயல்முறைப் பரீட்சை நளைய தினம் மாத்திரம் நடைபெறும்.

உயர்தரப் பரீட்சையில் முதல் தடவையாக இம்முறை பொறியியல் மற்றும் உயிரியல் தொழிநுட்ப பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் முருகதாஸ் இணைய மறுத்தது ஏன்?

murugadossஇளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மைல் கல் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ்.இந்நிலையில் விஜய் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இதை முருகதாஸ் தரப்பு மறுத்துள்ளது.ஏனெனில் அகிரா படத்தை தொடர்ந்து மகேஷ் பாபுவை இயக்கும் எண்ணத்தில் முருகதாஸ் இருக்க, தற்போதைக்கு விஜய்யுடன் படம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

கபாலி படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்!!

Kabali-Movie-Stillsகபாலி படம் 75% மலேசியாவில் தான் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவே ஏதோ திருவிழா போல் உள்ளது, காரணம் சூப்பர் ஸ்டாரை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

ஆனால், தற்போது அதுவே படக்குழுவினர்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் வர, படப்பிடிப்பிற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளதாம்.இதனால், படப்பிடிப்பு தளங்களை அறிவிக்காமலேயே படப்பிடிப்பு நடத்தி வருகிறதாம் படக்குழு.

ஊளைச்சதையை குறைக்க சில வழிகள்!!

body-fat-1

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது, உடல் உழைப்பு குறைந்து போவது, சத்தான உணவு உண்ணாமை, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவை காரணமாக உள்ளது.

இது போன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எ‌ப்படி எ‌ன்று பா‌ர்‌ப்போ‌ம். சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால் தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.

இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா!!

979643இந்­திய  தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட்போட்டி இந்­தியா மொஹா­லியில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­திய அணி 201 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

தென்­னா­பி­ரிக்க அணியின் பகுதி நேர பந்து வீச்­சா­ள­ரான எல்­க­ரிடம் தடு­மா­றிய இந்­தி­யாவின் முன்­னணி துடுப்­பாட்ட வீரர்கள் சர­ண­டைந்­து­விட்­டனர். இவர் மொத்தம் 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி அசத்­தினார்.

இந்­திய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான முரளி விஜய் அதி­கூ­டிய ஓட்­டங்­க­ளாக 75 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். பின்னர் தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த தென்­னா­பி­ரிக்க அணியின் தொடக்க வீரர்­க­ளாக எல்­கரும் வோன்­சைலும் களம் இறங்­கி­னார்கள்.

ஆடு­களம் முதல் நாளி­லேயே சுழற்­பந்­து வீச்சுக்கு ஒத்­து­ழைத்­ததால் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். 5 ஓட்­டங்கள் எடுத்த சைல் அஸ்வின் பந்தில் வெளி­யே­றினார். அடுத்து டூ பிளசிஸ் களம் இறங்­கினார். இவர் ஜடேஜா பந்தில் ஆட்­ட­மி­ழந்தார்.

3-ஆவது விக்­கெட்­டுக்கு எல்­க­ருடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாளில் மேலும் விக்கெட் இழக்­காமல் பார்த்­துக் ­கொண்­டது.தென்­னா­பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்­பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. எல்கர் 13 ஓட்டங்களுடனும்இ அம்லா 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இவ்விரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடர் மற்றும் இருபதுக்கு 20 ஆகியவற்றை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் திகதி அறிவிப்பு!!

200459-Sri_Lanka_Cricket_Board_LogoPHOTO-1309551960-604-640x480இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் ஜனவரி மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியா தேசிய பாதுகாப்பின் முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு செருப்படி!

Untitled-1
இந்தியா தேசிய பாதுகாப்பின் முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு விழுந்துள்ள செருப்படி விவகாரம், அதிகார வர்க்கத்தின் மீதான அடியாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்த ஒரு கருத்தரங்கத்தை 4ம் தேதி சென்னை மியூசிக் அகாதமியில் நடத்தியது இந்து ஆங்கில நாளேட்டின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஆய்வு மையம்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் எம்.கே.நாராயணன்.

இதற்கு எதிராக மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததால், அரங்கத்திற்குள் வரும் பார்வையாளர்கள் அத்தனை பேரையும் சோதித்து அனுப்பினர்.

கேமராக்களுக்கும் மொபைல் கேமராக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன.

கருத்தரங்கத்தில் பேசி முடித்துவிட்டு நாராயணன் வெளியேறும் போது, பார்வையாளராக கலந்துகொண்ட பிரபாகரன் என்ற இளைஞர், “”எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்” என சொல்லிக்கொண்டே செருப்பால் பளார்… பளார்… என அடித்தார்.

அப்போது அங்கிருந்த முன்னாள் டி.ஜி.பி. அலெக்ஸாண்டர், பிரபாகரனை பிடித்து தள்ளினார்.

நாராயணனை சூழ்ந்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

பிரபாகரனை போலீஸார் கைது செய்ய, “ஈழப் பிரச்சினையில் ராஜீவ் காந்தியை திசை திருப்பியவன் இவன் (நாராயணன்). ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இவன்தான் காரணம்”. என் உணர்வுகளை வெளிப்படுத்தவே அடித்தேன். ஆனாலும் என் ஆத்திரம் அடங்கவில்லை’ என்றிருக்கிறார் உணர்வுபூர்வமாக.

புதுக்கோட்டை அறந்தாங்கிக்கு அருகே உள்ள ஆவனந்தான் கோட்டையைச் சேர்ந்தவர் பிரபாகரன்.

இவரது தந்தை மெய்யப்பன், இலங்கையிலிருந்து 1973-ல் புதுக்கோட்டைக்கு வந்தவர். தாய் அன்னக்கொடியின் அரவணைப்பில் வளர்ந்தார் பிரபாகரன்.

பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பிழைப்பிற்காக மலேசியா சென்று 10 வருடம் உழைத்த பிரபாகரன் 2009-ல் சென்னை திரும்பிவிட்டார்.

அன்றிலிருந்து ஈழத்தமிழர்களுக்கான கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டார் பிரபாகரன்.

நாராயணன் மீதான தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுச்சாமி,

“இந்திய வெளியுறவுக் கொள்கையை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிலை நிறுத்தியது இந்த நாராயணன்தான். ராஜீவ் கொலை சம்பந்தமான வீடியோ ஆதாரங்களை இன்றும் மறைத்து வைத்திருக்கிறார் இவர்.

இதனை ஜெயின் கமிசனிடம் நான் கொடுத்த வாக்குமூலத்திலேயே சொல்லியிருக்கேன். அந்த வீடியோ வெளி வந்திருந்தால் ஈழத்தில் நடந்தேறிய கொடூரங்கள் நடந்திருக்காது ” என்கிறார் மிக ஆவேசமாக.

காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் உணர்வு அலை அடங்காது.

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் : மூன்று : கடைகள் சேதம்!!

வவுனியா நெடுங்கேணி – நைனாமடு பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து கடைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

நைனாமடு – கரப்புக்குத்தி வீதிக்கு அருகாமையில் இருந்த தேனீர்க்கடை ஒன்றையும் இரண்டு பலசரக்கு கடைகளினதும் சுவர்களை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதவிபரங்களை பதிவு செய்துள்ளனர்.இதேவேளை தொடர்ச்சியாக இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

1 2

வவுனியாவில் வறிய குடும்பத்திற்கு கட்டிடப்பொருட்கள் வழங்கிவைப்பு!!(படங்கள்)

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா கண்டிவீதி கற்குளியில் வசிக்கும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்திற்கு கட்டிடப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா நகரசபையில் வைத்து பயனாளியிடம் வடமாகாண மாகாணசபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன் ஆகியோர் கட்டிடப்பொருட்களை வழங்கினர்.

IMG_6072 IMG_6073 IMG_6074 IMG_6076 IMG_6077 IMG_6078 IMG_6079