கொடிய விஷப் பாம்மை கடித்துக் கொன்ற ஒன்றரை வயது குழந்தை!!

2007559263Worldபிரேசிலில் ஒன்றரை வயது குழந்தை கொடிய விஷப்பாம்பு ஒன்றை கடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தை வீட்டின் அருகில் உள்ள புற்தரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்தக் குழந்தை பாம்பை விளையாட்டுப் பொருளாக நினைத்து கடித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. குழந்தைக்கு உணவு எடுத்து வருவதற்காக வீட்டினுள் சென்ற தாய் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையின் கை மற்றும் வாயில் இரத்தம் இருந்துள்ளதுடன் அருகில் இந்த விஷப்பாம்பும் இறந்து கிடந்துள்ளது.

உடனடியாக இறந்து கிடந்த பாம்பையும் எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதை தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகவும் பலம் வாய்ந்த நபர்களில் மோடி 9வது இடம்!!

Modi-1

உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்த பத்து நபர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது 6 இடங்கள் முன்னேறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. ஜெர்மன் தலைவி ஏஞ்சலா மெர்கல் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். மோடி பற்றி அந்த பத்திரிகையில் குறிப்பிடுகையில், ‘மக்களின் மனம் கவர்ந்த பிரதமர் மோடி, தனது முதலாமாண்டு பதவிக்காலத்திலேயே 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளார்.

அமெரிக்க, சீன அதிபர்களுடனான சந்திப்பின்போது, உலக தலைவராக தன்னை உயர்த்திக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய பையில் பெண்ணின் உடற்பாகங்கள்!!

article-0-1A625BBA000005DC-208_634x423கல்பிடிய – எரபுதுவ தீவில் கரையொதுங்கியுள்ள பையொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை மீனவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் குறித்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கல்பிடிய – ஜனசவிபுர கிராமத்தில் இருந்து 150 மீற்றர் வரையான தூரத்தில் இவை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பையில் உடற்பாகங்களை இட்டு மண்ணை நிரப்பிய பின்னர் அதனை நீரில் மூழ்கடித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பை வெடித்து அதிலிருந்த மண் வௌியேறிய பின்னர் அது கரையொதுங்கியுள்ளது.

மேலும் ஒரு வாரங்களுக்கு முன்னர் குறித்த உடற்பாகங்கள் அந்த இடத்திற்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை சடலத்தின் மேல் பாகங்கள் இல்லாமையால் மரணித்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!

1 (8)நவகத்தேகம – முல்லேகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைதானவர் முல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அவரை பிரிந்து சென்றுள்ளார். பின்னர் தனது மகனுடன் விவசாயம் செய்து அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.கடந்த முதலாம் திகதி சந்தேகநபர் தன்னை பலவந்தமாக வீட்டு அறைக்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை தான் நண்பர்களுடன் மது அருந்தியமை உண்மையே எனவும் ஆனால் பெண்ணை துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

1_115 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை – ஆராச்சிகந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கான்ஸ்டபிலான இவர் 15 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதோடு, அதில் 10 இலட்சத்தை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே கைதாகியுள்ளார்.

2013ம் ஆண்டு 10 கிராம் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு சாதகமாக சாட்சியளிக்கவே குறித்த கான்ஸ்டபில் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வௌ்ளவத்தையில் மின்னுயர்த்தி விழுந்து விபத்து – ஒருவர் பலி!!

1 (40)வேலைத்தளம் ஒன்றில் இருந்த மின்னுயர்த்தியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!

SL

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இந்தநிலையில் அந்த அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 149 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.

மீளவும் போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதனையடுத்து 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த அந்த அணி 214 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி இலங்கைக்கு டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷல் பெரேரா 99 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தினால் சதம் பெரும் வாய்ப்பை இழந்தார்.

மேலும் லகிரு திருமானே ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 36.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இலந்து 225 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் முன்று போட்டிகள் கொண்ட தொடர் 2-0 என இலங்கை வசமாகியுள்ளது.

நேற்றைய போட்டியின் நாயகனாக குசால் பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு வடமாகாண சபை உறுப்பினரால் நிதிஉதவி!!(படங்கள்)

வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம்.தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வவுனியா விபுலானந்தாக் கல்லூரி பண்வாத்தியக் குழு மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கினார்.

இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி. திருவருள்நேசன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் சீருடைகளை கையளித்தார். இன் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக்குழுச் செயலாளர் மாணவர்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

1 IMG_6059 IMG_6060 IMG_6061 IMG_6062 IMG_6063 IMG_6066 IMG_6068

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் வெடிகுண்டுகளைத் தேடிய பொலிசார்!!(படங்கள்)

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் வெடிகுண்டுகள் இருப்தாகத் தெரிவித்து தேடுதல் நடவடிக்கையை வவுனியா பொலிசார் இன்று (04.11) மேற்கொண்டனர்

பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து இத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இத்தேடுதல் நடவடிக்கைக்காக வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியை பொலிசார் கோரிப்பெறப்பட்டபின்னர் இன்று காலை முதல் மதியம் வரை தேடுதல் மயானத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டது, இத்தேடுதலுக்காக நகரசபையின் டோசர் பயன்படுத்தப்பட்டது.

இத்தேடுதலையொட்டி பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

20151104_123946 20151104_124022 20151104_124054 20151104_124100 20151104_124107 20151104_124113

மற்றுமொரு ரஷ்ய விமானம் விபத்து : 17 பேர் பலி!!(படங்கள்)

ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானமொன்று தென்சூடானில் விபத்திற்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்சூடதனில் அமைந்துள்ள ஜுபா விமானநிலையத்தில் என்டனோவ் – 12 என்ற குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தென்சூடான் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட தென்சூடானைசை் சேர்ந்த 15 பேர் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் விமானத்தில் இருந்தவர்களில் 17 பேர் உயிரிழந்ததோடு, இருவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள தென்சூடான் ஜனாதிபதியின் பேச்சாளர் எனினும் இதனை உறுதிப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் விமானத்தின் ஒரு இயந்திரம் பழுதடைந்திருந்ததை அவதானித்தமைக்கான சாட்சி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 2 3 4

ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வர­வேற்புப் பெண்!!

robo_0

ஜப்­பா­னிய டோக்­கியோ நக­ரி­லுள்ள விற்­பனை நிலை­ய­மொன்றில் வர­வேற்புப் பெண்­ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடி­வான ரோபோ கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி ரோபோ வாடிக்­கை­யா­ளர்­களை வர­வேற்­பதை படத்தில் காணலாம்.

ஜப்­பா­னிய இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ரொஷி­பாவால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்த ரோபோ, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஆங்­கிலம், சீன மற்றும் ஜப்பானிய மொழிகளில் வழிகாட்டல் குறிப்புகளை வழங்குகிறது.

தாடி வளர்த்தவர்கள் மனைவிக்கும் காதலிக்கும் துரோகம் செய்பவர்கள்!!

man-with-beard-smilingதாடி வளர்ப்­பது ஆண்­களின் நவ­நா­க­ரிக செயற்­பா­டுகள் சார்ந்த ஒன்­றா­கவே கரு­தப்­பட்டு வரு­கி­றது. ஆனால் அமெ­ரிக்கா மற்றும் இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட புதிய இரு ஆய்­வுகள் இவ்­வாறு தாடி வளர்த்­துள்ள ஆண்கள் ஆபாச சிந்­தனை மிகுந்­த­வர்களாகவும் சண்­டை­களில் ஈடு­ப­டு­வதில் ஆர் ­வ­முள்­ள­வர்களாகவும் தமது மனை­வி­யையும் காத­லி­யையும் ஏமாற்றி அவர்­க­ளுக்கு துரோகம் செய்­ப­வர்களாகவும் திரு­டு­ப­வர்களாகவும் உள்ள தாக தெரி­விக்­கின்­றன.

இந்த ஆய்­வு­க­ளா­னது வர்த்­தக நிறு­வ­னங்கள் மற்றும் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு இணை­யத்­தள ஆய்வு மென்­பொ­ருளை வழங்கும் குவால்ட்றிக்ஸ் நிறு­வ­னத்தால் இந்­தியா மற்றும் அமெ­ரிக்­கா­வி­லுள்ள 18 வய­துக்கும் 72 வய­துக்­கு­ம் இ­டைப்­பட்ட வய­து­டைய 500 ஆண்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த ஆய்வுகளில் 86 சத­வீத இந்­திய ஆண்­களும் 65 சத­வீத அமெ­ரிக்க ஆண்­களும் முகத்தில் ஏதா­வது ஒரு விதத்தில் முடியைக் கொண்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் மேற்­படி ஆய்வுகளில் பங்­கேற்ற தாடி வைத்­துள்­ள­வர்கள் முகத்தில் எது­வித முடி­யையும் கொண்­டி­ரா­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் ஆபா­ச­மான கூற்­று­க­ளுக்கு இணக்­கப்­பா­டு­டை­ய­வர்­க­ளாக இருந்­ததாக தெரி­விக்கும் இந்த ஆய்­வு­களில் பங்­கேற்ற ஆய்­வா­ளர்கள், தமது ஆய்­ வுகள் தாடிக்கும் பாலின வகிபாக நம்பிக்கைகளுக்கும் தொடர்பு இருப் பதை காண்பிப்பதாக உள்ளன எனவும், ஆனால் இந்தத் தொடர்புக்கான சரியான காரணத்தை அறியமுடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியா வருவார் தமன்னா- முகம் சுழித்த ரசிகர்கள்!!

beautiful_tamanna_gorgeous_wallpapers_in_saree_0320தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் பாகுபலி படத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு சினிமா விருது விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த தமன்னா மிகவும் கவர்ச்சிகரமான ஆடையை அணிந்து வந்தார்.

இந்த படங்கள் நெட்டில் வர பலரும் ‘இப்படியா பொது இடத்திற்கு வருவார்’ என கமெண்ட் அடித்தனர். மேலும், இந்த விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த திகதி உறுதியானது!!

bobysimha_140715mபாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. முதலில் பலரும் இதை வதந்தி என கூற, அவர்களும் மௌனம் சாதித்தனர்.தற்போது வந்த தகவலின் படி இவர்களுக்கு நவம்பர் 8ம் திகதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாம். இதற்கு பல திரைப்பிபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

டுவிட்டரில் இத்தகவலை கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்தனர். பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது என கூறப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டருக்கு இன்றைய போட்டியில் விளையாடத் தடை!!

jasonholdernew4850-450x303

கொழும்பில் கடந்த முதலாம் திகதி நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த அணியின் தலைவர் என்ற முறையில் ஜாசன் ஹோல்டருக்கு 40 சதவீதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 20 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் போதும் இதே போன்று மெதுவாக பந்து வீசிய பிரச்சினையில் ஜாசன் ஹோல்டர் நடவடிக்கைக்குள்ளானார். ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக இத்தகைய புகாரில் சிக்கி இருப்பதால் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஜாசன் ஹோல்டருக்கு பதிலாக சாமுவேல்ஸ் அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

ரஷ்ய விமான விபத்தில் அஸ்தமித்த காதல் ஜோடியின் கதை!!

79910-Lover-s-Hands

ரஷ்ய விமான விபத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்த காதல் ஜோடியும் பலியான விஷயம் தெரியவந்துள்ளது.ரஷ்யாவை சேர்ந்த 29 வயது ரோமனும், 27 வயது டாடியானாவும் நீண்ட நாட்களாக காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் விதி வேறுவிதமாக முடிவு செய்திருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில நாட்களுக்கு முன்பாக எகிப்தின் சினாய் பகுதியில் விபத்துக்குள்ளான மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ரோமன், டாடியானா இருவரும் பரிதாபமாக பலியானார்கள். அன்பு மகன் ரோமனை இழந்து சூன்யமாகிவிட்ட தங்களின் எதிர்காலத்தை நினைத்து கலக்கத்துடன் இருக்கும் ரோமனின் வயதான பெற்றோர், மாஸ்கோவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் தனது மகனின் உடலை அடையாளம் காட்டுவதற்காக, இரண்டு நாட்களாக கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.

முன்னதாக, 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானம் (ஏ–321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில், 224 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.