45 டொலருக்கு பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்த நடமாடும் விபச்சார விடுதி!!

Prostitution

புறக்­கோட்­டையில் கார் ஒன்­றினுள் நடத்தி வரப்­பட்ட நட­மாடும் விப­சார விடுதி ஒன்­றினை பொலிஸார் முற்­று­கை­யிட்டு மூன்று யுவ­திகள் மற்றும் இரு ஆட­வர்­களைக் கைதுசெய்­துள்­ளனர். பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் காலி முகத்­திடல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்­யப்­பட்­ட­தா­கவும் பின்னர் அவர்கள் மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர் செய்­யப்­பட்ட போது 100 ரூபா அப­ராதம் செலுத்­திய பின்னர் விடு­தலைச் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­த­வது,

பெண்­களை விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்தி வெளி நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­பனைச் செய்­வது தொடர்பில் புறக்கோட்டை பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து பொலிஸ் குழு­வொன்ரு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. அதன்­படி தொலை­பேசி ஊடாக தர­கரை தொடர்­பு­கொண்­டுள்ள பொலிஸார் தாம் யார் என்­பதை அறி­விக்­காது விப­சா­ரி­களை நாடு­ப­வர்கள் போல உபா­ய­மாக கதைத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட இணக்­கத்­துக்கு அமை­வாக காலி முகத்­திடல் பிரதேசத்துக்கு வாடிக்­கை­யா­ள­ராக நடித்த பொலி­ஸாரை வரு­மாறும் தர­கரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இத­னை­ய­டுத்து காலி முகத்­திடல் பிர­தே­சத்­துக்கு சென்ற பொலிஸார் அங்கு மறைந்­தி­ருந்­த­துடன் அங்கு கார் ஒன்றில் வந்த மூன்று யுவ­திகள் இரு ஆட­வர்­களை சுற்றி வளைத்து கைதுசெய்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், பொதுவாக குறித்த பெண்கள் வெளிநாட்­ட­வர்­க­ளுக்கு விற்பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் ஒரு பெண் தொடர்பில் 45 அமெ­ரிக்க டொலர்கள் (6383 ரூபா) கட்­ட­ண­மாக அற­வி­டப்­ப­டு­வதும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நிலையில் கைதான ஐவ­ரையும் புறக்­கோட்டை பொலிஸார் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது அந்த ஐவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே தலா 100 ரூபா அபராதம் விதித்த நீதிவான் அவர்களை விடுதலைச் செய்துள்ளார்.

கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றோர் கலாநிதி எனப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்!!

PhD

கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்கள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் ‘கௌர­வ’ என்ற சொற்ப­த­மின்றி கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வதை தடை­செய்ய வேண்­டு­மென புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இது குறித்து புத்­தி­ஜீ­விகள் குறிப்­பி­டு­வ­தா­வது,

நாட்டில் போலி டாக்­டர்கள் போன்று போலிக் கலா­நி­தி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ளது. அரச அல்­லது தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குச் சென்று இள­மாணி, முது­மாணி கற்­கை­நெ­றி­களைப் பூர்த்தி செய்து பட்­டங்­களைப் பெற்ற பின் சொற்ப எண்­ணிக்­கை­யி­லானோர் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து தங்­க­ளது துறைசார் துறை­களில் கலா­நிதி கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கலா­நிதிப் பட்­டங்­களைப் பெறு­கின்­றனர்.

இவ்­வாறு கலா­நிதி கற்­கையைப் பூர்த்தி செய்து பட்­டங்­களைப் பெறு­கின்­ற­வர்கள்; தங்­க­ளது பெயர்களுக்கு முன்னால் கலா­நிதி எனப் பயன்­ப­டுத்தி வரு­கையில், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத நிறு­வ­னங்­க­ளினால் கௌர­வத்­திற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற கௌரவ கலா­நிதிப் பட்­டத்தை, துறைசார் கலா­நி­திகள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கலா­நிதி எனப் பயன்படுத்துவது போன்று, கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்­களும் கலா­நிதி எனப் பயன்படுத்துவது உண்­மை­யான கலா­நிதிப் பட்­டம் பெற்­ற­வர்­களின் தியா­கத்­தையும் முயற்சியையும் சாத­னை­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும்.

அத்­துடன், கௌரவ கலா­நி­திகள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கௌரவம் என்ற பதத்தைத் தவிர்த்து கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வது ஒரு­வ­கையில் சாதா­ரண பொது­மக்­களை ஏமாற்றும் செய­லா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய நிலை­மை­களைக் கருத்­திற்­கொண்டு, கௌரவ கலா­நிதிச் சான்­றி­தழ்­களைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் அவர்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கௌரவ கலா­நிதி என்று பயன்­ப­டுத்­து­வதை உறுதி செய்­யவும் அவ்­வாறு பயன்­ப­டுத்­தா­த­வர்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கவும் உயர்­கல்வி அமைச்சும் பொது ­நிர்­வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சும் முன்­வர வேண்டும்.

அவ்­வா­றான நட­வ­டிக்கை பல்­வேறு சாவல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து கால நேரங்­களை விரயம் செய்து உரிய கல்வி நிறு­வ­னங்­களில் கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்­களைக் கௌரப்­ப­டுத்­து­வ­தாக அமை­யு­மெ­னவும் குறிப்பிடுகின்ற புத்திஜீவிகள், இவ்விடயத்தில் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் உண்மை நிலையைக் கருத்திற்கொண்டு, கலாநிதிப் பட்டம் எத்தகையது என்பதை உறுதி செய்து அவற்றை செய்திகளின்போது வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

புகையிரத மிதிபலகையில் பயணிப்பவர்கள் இனி கவனம்!!

Train

புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அந்த திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

புகையிரதம் பயணிக்கும் வேளைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யுவதி ஒருவரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர்!!

Shooting

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் யுவதி ஒருவரும் இன்னொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை, வெவஹமந்துவை பிரதேசத்தில் டீ56 ரக துப்பாக்கியால் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரும் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை, வெவஹமந்துவை பிரதேசத்தில் வசிக்ககூடிய 26 வயதுடைய யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கோட்டேகொடை, பாதேகம பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பதுடன், தங்காளை, கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த டீ56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தின் நரகாசூர சம்காரம்! (வீடியோ படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தில் இன்று(10.11.2015) நரகாசூர சம்ஹாரம் சிறப்பாக இடம் பெற்றது.தீபாவளி அன்று வைணவ ஆலயங்களில் நரகாசூரன் போர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டு நரகாசுரன் போர் பக்தி பூர்வமாய் இடம்பெற துணை புரிந்தனர்.சிறுவர்களும்  நரகாசுரனுக்கு பக்கபலமாக  அசுரர்கள் போன்று வலம்வந்த நிகழ்வும் இடம்பெற்றது .

11049448_1486541488318159_9105636876167648374_n 11221600_780542382068172_3674751239134637587_n 12115449_780540958734981_3918397264291163738_n 12190858_780541405401603_4012668964881862716_n 12191662_1486541608318147_2155773474193114219_n 12195814_1486541748318133_712658740413055049_n 12208679_780540955401648_6402740442893891250_n 12227743_1486541604984814_8808426371910049239_n 12234943_780542275401516_5893119733656529481_n 12239600_780541355401608_6535270515755379290_n 12239603_780542055401538_6741951837877356560_n 12240129_780540948734982_7592627236876371792_n 12241474_780542635401480_7649760032663914354_n 12243365_1486541531651488_6609529436455798218_n

வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயம்!!

Fire

வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பிரமானங்குளம் பகுதியில் வீட்டொன்றில் ஏற்றிவைத்த விளக்கு தீடிரென தீப்பற்றியுள்ளது இதன்போது வீட்டில் இருந்த சுரேஸ்ராஜா என்பவர் காயமடைந்துள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

நியூ­ஸிலாந்திற்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலியா அபார வெற்றி!!

Aus

அவுஸ்­தி­ரே­லிய – நியூ­ஸி­லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்­டியில் ஆஸி. அபார வெற்­றி­பெற்­றது.

இந்­தப்­போட்­டியில் முத­லா­வதாக துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி. 4 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 556 ஓட்­டங்­களைக் குவித்து டிக்ளேர் செய்­தது. நியூ­ஸி­லாந்து தனது முதல் இன்­னிங்ஸில் 317 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தது.

அதன்­பி­றகு 2ஆவது இன்­னிங்ஸை விளை­யா­டிய ஆஸி. 4 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 264 ஓட்­டங்­களைப் பெற்று மீண்டும் டிக்ளேர் செய்­தது. இதனால் நியூஸி.க்கு 504 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

நேற்று போட்­டியின் 5ஆவது நாள் ஆட்­டத்தை தொடர்ந்த நியூ­ஸி­லாந்து அணி வீரர்கள் ஆஸி. வீரர்­களின் அபா­ர­மான பந்து வீச்சை சமா­ளிக்க முடி­யாமல் திண­றி­னார்கள். இறு­தியில் நியூஸி. 88.3 ஓவர்­களில் 295 ஓட்­டங்­களுக்கு சுருண்­டது.

இதனால் ஆஸி. 208 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ஆஸி.யின் வோர்னர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.

12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம்!!

SL

12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டை ஒன்பது இலக்கங்களையும் “V” அல்லது “X” என்ற ஆங்கில எழுத்துடனும் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

ஆங்கில எழுத்துக்களை நீக்கிவிட்டு 12 தொடர் இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை ஒன்றை ஆட்பதிவு திணைக்களம் அறிமுகம் செய்ய உள்ளது.

1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு திணைக்கள சட்ட மூலத்தின் அடிப்படையில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட உள்ளது.

கணித சூத்திரம் ஒன்றின் அடிப்படையில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு இலக்கம் வழங்கப்படுகின்றது.

இந்த கணித சூத்திரத்தை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் புதிய இலக்க முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலத்திரனியல் அடையாள அட்டை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு!!

Capture

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் முழுநேர இயல்பு நிலை தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஆதரவு வழங்குவதாக அதன் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. இந்நிலையில் தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டிய அவலநிலைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முழு நேர ஹர்த்தாலுக்கு எமது கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பொது அமைப்புக்களும் இணைந்து அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு எமது கட்சியும் தனது முழுமையான ஆதரவினை வழங்குகின்றது.

எனவே, அன்பான தமிழ் பேசும் உறவுகளே, சிறையில் வாடும் எமது உறவுகளின் விடுதலைக்காக அன்றைய தினம் தாங்களும் ஒரு கணம் சிந்தித்து ஒத்துழைப்பு வழங்கி இந்த முழுநேர ஹர்தால் மூலம் தமிழ் மக்களின் குரல்களை வலுவடையச் செய்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒன்றுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் ரசிகர்களால் போர்க்களமாக மாறிய மதுரை!!

Ajith

தீபாவளித் தினமான இன்று மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவங்களால் மதுரையில் உள்ள திரைஅரங்குகள் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. திரைஅரங்குகளில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் படத்துக்கு இரத்தத்தால் ரசிகர்கள் அபிஷேகம் செய்தனர்.

அதேநேரம் சில திரையரங்குகளில் படம் ஒளிபரப்ப தாமதம் ஆனதால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதில் 4 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும், பேருந்தில் ஏறிய ரசிகர்கள் வெடிகளை வெடித்தனர். இதனால் பயணிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.

70 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!!

ISIS

சிரியா இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 70 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் 7வது மிகப்பெரிய நகரான டெய்ர் எஸ்ஷோரின் விமானதளத்தை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியையும் இராணுவம் முறியடித்துள்ளது.

சிரியா, ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க இரு நாடுகளின் ராணுவமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் இடம்பெற்ற தாக்குதலில் 70 எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.

தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை!!

Baby

தம்புள்ளை கலேவலை வீதியில் தலகிரியாகம பிரதேசத்தில் டிபர் வாகனம் ஒன்று மோதியதில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மண் ஏற்றிக் கொண்டு வந்த டிபர் வாகனத்தின் சாரதி நித்திரையில் இருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் தலகிரியாகம பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஏ. செல்வாராஜு என்ற விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

டிபர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு சிறிய குடிசையில் வசிக்ககூடிய ஒருவர் என்பதுடன், அவருடைய சடலத்தை வைப்பதற்கு கூட அந்தக் குடிசையில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்!!

help

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் காணப்பட்டது. 2014ம் ஆண்டை விட இலங்கை ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் அதிக செல்வந்த நாடுகளை விட நடுத்தர நாடுகளே முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தப் பட்டியலில் மியன்மார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா 106வது இடத்தையும், பாகிஸ்தான் 94வது இடத்தையும் பிடித்துள்ளன.

31 தமிழ் அரசியல் கைதிகளை நாளை விடுதலை செய்ய தீர்மானம்!!

Arr

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பிணையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது

சிறைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 31 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் நாளை தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அடுத்த கட்டமாக மேலும் 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பாக நீதியமைச்சு மற்றும் சட்டடமா அதிபர் திணைக்களம் உட்பட அரச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்தைகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட சிலரை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

SL

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தில்ஷான் 56 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 40 ஓட்டங்களையும், சந்திமால் 40 ஓட்டங்களையும், மத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

216 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ப்லச்சர் 57 ஓட்டங்களையும், பொலார்ட் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பாக சச்சித்ர சேனாநாயக்க 4 விக்கட்டுக்களை வீழ்த்தியதுடன் இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா -2015 (அறிவித்தல்)

notice1

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் 12.11.2015 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தினமும் காலையில் 9.30 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பகல் பூசைகள் இடம்பெறும்.

தொடர்ந்து கந்தபுராணம் பொருள் கூறுகின்ற நிகழ்வு தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெறும் . அத்தோடு அடியார்கள் விரதகாலத்தில்  முருப்கபெருமானது அபிசேகத்துக்கு தேவையான பூக்கள் மாலை  பால் தயிர் இளநீர் மற்றும் பழவகைகளை கொடுத்துதவி முருகப்பெருமானது   அருளாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு  நிர்வாகத்தினர் கேட்டுகொள்கின்றனர்.

தகவல் :வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்த சபையினர் 

தொடர்புகளுக்கு :024-2222445

12096131_1007808112610747_394625670910915510_n