புறக்கோட்டையில் கார் ஒன்றினுள் நடத்தி வரப்பட்ட நடமாடும் விபசார விடுதி ஒன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு மூன்று யுவதிகள் மற்றும் இரு ஆடவர்களைக் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காலி முகத்திடல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர் செய்யப்பட்ட போது 100 ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதவது,
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வெளி நாட்டவர்களுக்கு விற்பனைச் செய்வது தொடர்பில் புறக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் குழுவொன்ரு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி தொலைபேசி ஊடாக தரகரை தொடர்புகொண்டுள்ள பொலிஸார் தாம் யார் என்பதை அறிவிக்காது விபசாரிகளை நாடுபவர்கள் போல உபாயமாக கதைத்துள்ளனர்.
இதனையடுத்து ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்துக்கு அமைவாக காலி முகத்திடல் பிரதேசத்துக்கு வாடிக்கையாளராக நடித்த பொலிஸாரை வருமாறும் தரகரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து காலி முகத்திடல் பிரதேசத்துக்கு சென்ற பொலிஸார் அங்கு மறைந்திருந்ததுடன் அங்கு கார் ஒன்றில் வந்த மூன்று யுவதிகள் இரு ஆடவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், பொதுவாக குறித்த பெண்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு பெண் தொடர்பில் 45 அமெரிக்க டொலர்கள் (6383 ரூபா) கட்டணமாக அறவிடப்படுவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைதான ஐவரையும் புறக்கோட்டை பொலிஸார் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது அந்த ஐவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே தலா 100 ரூபா அபராதம் விதித்த நீதிவான் அவர்களை விடுதலைச் செய்துள்ளார்.