அனுஷ்காவின் கால் அழகை வர்ணித்த நடிகருக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்!!

anushka_3_0_0

தெலுங்கு பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், ஆலி. இவர் அடிக்கடி நடிகைகளை பற்றி வர்ணித்து, பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வது வழக்கம். நடிகைகளின் அங்க அசைவுகள் பற்றி ஆலி வர்ணனை செய்து, அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்கள், தெலுங்கு பட உலக நிகழ்ச்சிகளில் ஏற்கனவே நடந்துள்ளன.

ஒரு பட விழாவில் அவர், நடிகை சமந்தா பற்றி வர்ணனை செய்தபோது, அவரை சமந்தா நேரடியாகவே எச்சரித்தார். இதேபோல், அனுஷ்கா பற்றி ஆபாசமாக பேசி, ஆலி பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சைஸ் ஜீரோ’ பாடல் வெளியீட்டு விழாவில் இந்த சம்பவம் நடந்தது. அந்த விழாவில் ஆலி கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பில்லா (தெலுங்கு) படத்தில் இருந்தே நான் அனுஷ்காவின் கால்களுக்கு ரசிகர். சோனல் சவுகான் தொடைகளை விட, அனுஷ்காவின் தொடைகள் அழகானவை’’ என்று அவர் கூறினார்.

இவ்வாறு அவர் பேசும்போது, அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். சபை நாகரீகம் கருதி அனுஷ்காவும் புன்னகைத்தார். ஆனால் விழா முடிந்ததும் அவர், நடிகர் ராணாவை சந்தித்து ஆலி மீது புகார் செய்தார். உடனே ராணா, ஆலியை அழைத்து எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது. ‘‘இனிமேல் நடிகைகள் பற்றி வர்ணித்து இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடாது’’ என்று ஆலியிடம், ராணா எச்சரித்ததாக தெரிகிறது.

அனுஷ்காவின் கால்களை பற்றி ஆலி வர்ணனை செய்ததும், அவரை ராணா அழைத்து எச்சரித்ததும், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள மகளிர் அமைப்புகளும் ஆலியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், இதுபற்றி ஆலியின் மனைவி சுபைதா கூறும்போது, ‘‘என் கணவர் ஆலி நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். அவர், அருகில் அமர்ந்திருப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று விரும்புபவர். நகைச்சுவை உணர்வுடன்தான் அவர் பேசியிருக்கிறார். அதை தமாசாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், அனுஷ்காவின் கால்கள் பற்றி பேசியதற்கு ஆலி மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ‘‘ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அப்படி பேசினேன். தவறான நோக்கத்தில் பேசவில்லை. என்றாலும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நடிகைகள் பற்றி இவ்வாறு பேச மாட்டேன்’’ என்று நடிகர் ஆலி கூறியிருக்கிறார்.

சங்காவின் அதிரடியில் Sachin’s Blasters ஐ வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne’s Warriors!!

3408747489கிரிக்கெட் ஓல் ஸ்டார்ஸ் தொடரின் 2 ஆவது போட்டியில் குமார் சங்கக்கார அதிரடியில் அசத்த Sachin’s Blasters ஐ 57 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne’s Warriors அணி.

3 போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் ஓல் ஸ்டார்ஸ் இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டி கடந்த 7 ஆம் திகதி நியுயோர்க்கில் இடம்பெற்றது.இதில் வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி நேற்று ஹூஸ்டனில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி, வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதல் போட்டியைவிட இப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால், வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 21 சிக்சர்களையும் 22 பவுண்டரிகளையும் அடிக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ஓட்டங்களை குவித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணி சார்பாக மைக்கல் வோன் மற்றும் மெத்தியூ ஹெய்டன் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். மைக்கல் வோன் 30 ஓட்டங்களையும் மெத்தியு ஹெய்டன் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

மெத்யூ ஹெய்டன் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்றவேளை, மெக்ராத்தின் பந்தை தடுக்க முயன்று பந்து துடுப்புமட்டையில் பட்டு விக்கெட்டில் பட்டு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் இணைந்த கலிஸ் – சங்கக்காரா ஜோடி அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. 7 ஓவர்களில் 91 ஓட்டங்கள் விளாசப்பட்டன. கலிஸ் 23 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 ஓட்டங்களைப்பெற்று சேவாக் பந்தில் முரளியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

சேவாக் ஒரு ஓவரில் 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். குமார் சங்கக்காரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 70 ஓட்டங்களை விளாசி குளூஸ்னர் பந்தில் அக்தரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ரிக்கி பொண்டிங் களமிறங்கி தன் பங்கிற்கு 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் , 3 சிக்சர்களுடன் 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரும் குளூஸ்னர் பந்தில் விக்கெட் காப்பாளர் மஹேல ஜயவர்தனவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 7 ஓவர்களில் 108 ஓட்டங்கள் பெறப்பட்டன. இதில் சைமண்ட்ஸ் 6 பந்தில் 19 ஓட்டங்களையும் ஜெண்டி ரொட்ஸ் 8 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

263 ஓட்டங்கள் பெற்றால் என்ற வெற்றி இலக்குடன் களமிற்கிய சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி சார்பாக சேவாக் 2 சிக்சர்களுடன் 16 ஓட்டங்களை எடுத்த நிலையில் அஜித் அகார்கர் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். சச்சின் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ஓட்டங்களை விளாசி, சக்லைன் முஷ்டாக் வீசிய தூஸ்ராவில் சிக்கி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

கங்குலி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியை அடுத்தடுத்து அடித்து ஆரவாரம் காட்டினார் . இறுதியில் 12 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்று கலிஸ் பந்தில் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். ஜெயவர்தன 5 ஓட்டங்களையும் லாரா 19 ஓட்டங்களையும் குளூஸ்னர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சைமண்ட்ஸ் மற்றும் சக்லைன் ஆகியோர் விக்கெட் வேட்டையில் இறங்க, சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 16 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இறுதிநேரத்தில் களமிறங்கி வானவேடிக்கை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷோன் பொலக், 1 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார். ஸ்வா 8 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். முரளிதரன் இறுதிப் பந்தை சிக்ஸர் அடித்து நிறைவு செய்தார்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் வோர்ன் வாரியர்ஸ் அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரை வசப்படுத்தியது. சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி சார்பாக 18 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் விளாசப்பட்டன. இப் போட்டியில் மொத்தம் 39 சிக்சர்களும் 32 பவுண்டரிகளும் விளாசப்பட்டன. இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சங்கக்காரா தெரிவு செய்யப்பட்டார்.

நாய்கள் சாப்பிட்ட நிலையில் இறந்து கிடந்த முதியவர்!!

1 (40)பிரான்சில் 63 வயது முதியவர் இறந்து கிடந்j நிலையில் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.பிரான்சின் Montpellier நகரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் வசித்து வந்த முதியவர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் இறந்துள்ளார்.

ஆனால், இவர் இறந்தது குறித்து அக்குடியிருப்பில் வசித்து வந்த யாருக்கும் தெரியாத நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது,இதுகுறித்து அருகாமையில் வசிப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார் அவரது உடலை பார்த்தபோது, அவரது உடலின் கால்பகுதின் பாதியினை நாய் சாப்பிட்டுள்ளது, மேலும் துர்நாற்றம் வீசிய நிலையில் உருக்குலைந்துபோன நிலையில் அவரது உடல் கிடந்துள்ளது,

இந்த சம்பவம் குறித்து குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவர் கூறியதாவது, இந்த பகுதி வாழ்வதற்கு ஏற்ற இடமாகும், அமைதியான இந்த இடத்தில் வசிக்கும் நாங்கள் அனைவரும் ஒருவரைப்பற்றியொருவர் தெரிந்துகொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு குடியிருப்புவாசி கூறியதாவது, இறந்துகிடந்து முதியவர் எப்போதும் அந்த நாயுடன் தான் இருப்பார் என்று கூறியுள்ளார்.உடலை கைப்பற்றிய பொலிசார், இறப்பிற்கான காரணம் அறிவதற்காக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்,

வங்கியை வெடி வைத்து தகர்த்து கொள்ளை: லட்சக்கணக்கில் யூரோக்கள் சேதம்!!

mm041610a_4ஜேர்மனியில் வங்கியை வெடி வைத்து தகர்த்து கொள்ளையிட்டு சென்ற கும்பலால் அங்கிருந்த லட்சக்கணக்கான யூரோக்கள் சேதமடைந்துள்ளது.மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு வங்கியை கொள்ளையிடும் நோக்கில் அங்கிருந்த பணம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுக்கு கொள்ளை கும்பல் வெடி வைத்து தகர்த்துள்ளது.

இதனால் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான யூரோக்கள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் அதிகாரிகள், பெரும்பாலான கொள்ளையர்கள் நெதர்லாந்து நாட்டில் இருந்தே வருவதாகவும்,

இப்பகுதி இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பகுதி எனவும் தெரிவித்துள்ளனர்.வங்கியை தகர்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து அள்ளிச்சென்ற பணத்தின் கணக்கை வெளியிட விசாரணை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஆனால் கொள்ளை போன பணம் லட்சக்கணக்கில் இருக்கும் என கருதப்படுகிறது.மேலும் இந்த ஆண்டு இப் பகுதியில் நடைபெறும் 45-வது வங்கி கொள்ளை என தெரிவித்துள்ள அதிகாரிகள், ஒட்டு மொத்த ஜேர்மனியில் இதுபோன்று 63 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வங்கி கொள்ளையர்களை பிடிகூடும் பணியில் 21 பொலிஸ் வாகனங்கள் பயன்படுத்தி வருவதாக கூறும் விசாரணை அதிகாரிகள், கொள்ளையர்களை விரைவில் கைது செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐபோன் ஐபாட் என்பவற்றில் யூ டியூப் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி!(வீடியோ )

iPhone 6S review (22)-970-80

மொபைல் போன் வாசகர்களின் நன்மை கருதி மிகவும் பயனுள்ள அப் ஸ்டோர்  மற்றும் ஆன்ராயிட் என்பவற்றில் காணப்படும்  அப்ளிகேசன்கள் தொடர்பான தகவல்கள்  அடிக்கடி உங்கள் வவுனியா நெற் இணையமூடாக வரும் .

ஐபோன் ஐபாட் ஆகியவற்றில் நாம்  யூ டியுப்பில்  நாம் பார்க்கும் வீடியோக்களை எவ்வாறு டவுன்லோட் செய்யலாம்.என்பதை பார்ப்போம்!

மண்பானை சமையலில் கிடைக்கும் ஆரோக்கியங்கள்!!

pot_foods_002மண்பானை சமையல் என்றாலே அப்படியென்றால் என்ன? என்று தான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள். அந்த அளவிற்கு நவீனமாய் மாறிப்போய்விட்ட உலகில் கிடைக்கும் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள்.

ஆனால், இவற்றில் சமைத்து உண்ணும் உணவினை விட மண்பானை சமையல் உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும்.இதனால் தான் அந்தகாலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அதிக வயது உயிர் வாழ்ந்தனர்.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது.

இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.
இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.

உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.

இலங்கையின் தென் பகுதிக்கு இன்று மர்மப்பொருள் விழும்!!

SL

விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த வான்பரப்புக்கு ஊடாக செல்லும் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்கான விமான பறப்பு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

கார்கள் நேருக்கு நேர் மோதல் நீதிபதி உள்பட 6 பேர் பலியான சோகம்…!

judge-deathகரூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நீதிபதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் மருத்துவர் பிரதீப் குமாரும் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அரவகுறிச்சியை அடுத்த புங்கம்பாடி பிரிவு சாலையில் சென்ற போது காரின் டயர் வெடித்து சாலை தடுப்பை உடைப்பை உடைத்து சென்று எதிரே, வேடசந்தூரில் இருந்து கொடுமுடிக்கு சென்ற கார் மீது வேமாக மோதியது.

இதில், நீதிபதி பிரகாஷ் உள்பட 6 பேர் பலியாகினர். நீதிபதியின் காரை ஓட்டி வந்த மருத்துவர் பிரதீப்குமார் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த மற்ற 3 பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் வேடசந்தூரை அடுத்த கேதைஅரும்பு என்ற இடத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!!

Train

வடக்கு ரயில் சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.

தம்புத்தேகம மற்றும் சேனரத்கம பகுதியில் ரஜரட்ட ரெஜீன ரயில் நேற்று காலை தடம்புரண்டதில் வடக்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் நேற்று இரவு வடக்கு ரயில் பாதையில் பயணிக்கவிருந்த நான்கு ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டையில் இருந்து 08.30க்கு காங்கேசன்துறை நோக்கி செல்லவிருந்த ரயில், 07.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட இருந்த ரயில் மற்றும் இரவு 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி செல்லவிருந்த ரயில் போன்றனவே இவ்வாறு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால்!இயல்பு நிலை பாதிப்பு!(படங்கள்,வீடியோ)

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருந்த வேண்டுகோளிற்கு இணங்க  வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

வவுனியா நகரின் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் இ.போ.சபை பேருந்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை. இருப்பினும் தூர இடங்களுக்கான போக்குவரத்தினை இ.போ.சபை பேரூந்துக்கள் மேற்கொள்கின்றன.

அரச அலுவலகங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகள் வழமைபோன்று இயங்குகின்றன .

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்த்தக நிலையங்களும்  மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் வவுனியா நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது.  வீதிகளில் பொலிசார் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்படுகின்றது.

-பிராந்திய நிருபர் –

20151113_104758 20151113_104825 20151113_104830 20151113_104958 20151113_105003 20151113_105144 20151113_105159 20151113_105253 20151113_105258 20151113_105317 20151113_110431 20151113_110437 20151113_110443 20151113_110511

தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!!

Sri_Lanka_Post_logo

தபால் தொழிற்சங்கங்கள் சில 24 மணித்தியாலங்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

சேவையாளர்களை இணைத்துக் கொள்வது, பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி இன்று காலை முதல் தபால் தலைமையகத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிந்தக பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னிச்சையாக வாகனங்களை தரிப்பதற்கு கொழும்பு நகரில் புதியமுறை அமுலாகிறது!!

image-138

கொழும்பு பிர­தே­சத்தில் வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இடங்­களில் நவீன முறையில் அட்டை முறைமையினை பயன்படுத்தி வாக­னங்­களை தரித்தல் அதற்­கான கட்டணங்களை செலுத்தும் நடைமுறையினை கொழும்பு மாந­கர சபை­ அமுல்படுத்தியுள்ளது.

வெளி­நா­டு­களில் உள்­ளதைப் போன்று குறித்த வாகனத் தரிப்­பி­டங்­களில் வாகன உரி­மை­யா­ளர்கள் தன்­னிச்­சை­யா­கவே இந்த அட்­டை­களை பயன்­ப­டுத்தி வாக­னங்­களை தரித்துக் கொள்ள முடியும். அதன்பின் குறித்த அட்­டை­களை காண்­பித்து தன்­னிச்­சை­யா­கவே வெளி­யேறக் கூடியதாக இருக்கும்.

கொழும்பு மேயர் ஏ.ேஜ.எம். முஸம்மில் நேற்று நடத்திய ஊடக மாநா­டொன்றில் இத்திட்டம் சம்­பந்­த­மாக விளக்கிக் கூறினார். முதற்­கட்­ட­மாக கலதாரி ஹோட்­டலில் இருந்து வெள்­ள­வத்தை வரை­யி­லான பாதைகள், மற்றும் டுப்­ளிக்­கேஷன் வீதிவரை இத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இதற்­காக சுவிட்ஸர்லாந்து ­நாட்டில் இருந்து 1.5 மில்­லியன் யூரோ நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இதற்­காக ரீங்கா கார் பார்க் தனியார் நிறு­வ­னமும் கொழும்பு மாந­கர சபையும் எதிர்வரும் 8 வரு­டத்­திற்­காக ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட்­டன. 850 கார் தரிப்­பி­டங்களில் சுமார் 5000 கார்கள் தரிக்கும் இடங்கள் இந்தக் கம்­ப­னிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இக்கம்­ப­னியின் வரு­மா­னத்தில் ஒரு மாதத்­திற்கு 3.4 மில்­லியன் ரூபாவை மாந­கர சபைக்குச் செலுத்தல் வேண்டும். அத்­துடன் விளம்­பரம் மற்றும் இதர இலா­பத்­திலும் 40 வீதத்தை மாநகர சபைக்கு செலுத்தல் வேண்டும். இதற்காக 140 இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இக்கம்பனியினால் தருவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!!

harthalதழிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுடறுத்தி, தழிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன்படி யாழ் மாவட்டத்தில் இன்று காலை 09.00 மணியளவில் இருந்து இரவு 09.00 வரை அனைத்து சந்தைக் கடைத்தொகுதிகள், வியாபார தளங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

யாழ் மாவட்ட பேருந்துகளின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக யாழ் மாவட்டத்தில் அனைத்து இடங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் வாத்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் மூடப்படடிருந்தன.

நீண்ட தூர மற்றும் குறுய தூர போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை. ஹர்த்தால் காரணமாக நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளது.

பொது மன்னிப்பு குறித்து திங்களன்று தீர்மானம்- முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

maithreepala

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­கள் குறித்து தனது முடிவை எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை அறிவிப்பதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங் கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் வட­மா­காண அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நேசன், ரி.குரு­கு­ல­ராஜா, டாக்டர் பி.சத்­தி­ய­லிங்கம்இ பி.டெனீஸ்­வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் ஜனா­தி­ப­தி­யுடன் அவ­ரது ஆலோ­சகர் கரு­ணா­ரட்­ணவும் இந்தப் பேச்­சுக்­களில் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பின்போது வட­மா­காண சபை எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், தேவைகள், மத்­திய அர­சாங்­கத்­தினால் ஏற்படுத்தப்படும் தடைகள் என்­ப­வற்றை விளக்கும் விரி­வான அறிக்கை ஒன்றை முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரன் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்தார். இதி­லுள்ள விட­யங்கள் தொடர்­பா­கவும் விளக்­க­ம­ளித்த முத­ல­மைச்சர்இ தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சினை தொடர்பில் முக்­கி­ய­மாக ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட விக்கினேஸ்வரன்,

இலங்­கையில் இரண்டு தட­வைகள் ஆயு­தந்­தாங்­கிய கிளர்ச்­சியில் ஈடு­பட்ட ஜே.வி.பி.யின­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்டு அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அதே­போல தமிழ் அர­சியல் கைதி­களும் பொது­மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முத­ல­மைச்­சரின் கருத்தை ஏற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கைதி­களும் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும்இ இருந்த போதிலும் இந்த விட­யத்தில் அர­சியல் ரீதி­யாக சில பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். எனினும் இதனை தன்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்த முத­ல­மைச்சர்இ ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி கைதி­களின் விடு­த­லைக்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழ்க் கைதி­களை தொடர்ந்தும் தடுத்­து­வைத்­தி­ருப்­பதால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் அவர்கள் மட்­டு­மல்ல. கைதி­க­ளு­டைய குடும்­பத்­தி­னரும் இதனால் சொல்­ல­மு­டி­யாத துன்­பங்­களை அனு­ப­வித்­து­வ­ரு­கின்றனர். தின­சரி என்னைச் சந்­திக்கும் கைதி­களின் உற­வி­னர்கள், இது தொடர்பில் எழுப்பும் கேள்­வி­க­ளுக்கு நான் பதி­ல­ளிக்க வேண்­டி­யி­ருக்கிறது என்று முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்தார்.

இத­னை­ய­டுத்து கைதி­களின் முழு­மை­யான கோவை­க­ளையும் தனக்கு அனுப்­பி­வைக்­கு­மாறு சட்­டமா அதி­பரைப் பணித்த ஜனா­தி­பதிஇ எதிர்­வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்துக்கு தான் பதிலளிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததார்.

அத்துடன் வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றத்துக்காக எனக்கூறி காடழிக்கப்படுதல் போன்ற விடயங்கள் முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து சட்டக் கல்லூரிக்கு தெரிவான புவனேந்திரராஜா ஜனந்தன்!!

Jananthan

2015ம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கான பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்று பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியானது.

வெளியான முடிவுகளின்படி அகில இலங்கை ரீதியில் 213 மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் தமிழ் மொழியில் 18 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் 8 மாணவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம் மாணவர்களாவர்.

தமிழ் மாணவர்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மூவரும், மட்டக்களப்பிலிருந்து இருவரும், கொழும்பிலிருந்து இருவரும், வவுனியா, மன்னார், கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒருவரும் சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்குக் தோற்றுகின்றபோதும் 200-250 மாணவர்களே சட்டக் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இப் பரீட்சைக்கு குறைந்தளவிலான தமிழ் மாணவர்களே தோற்றிவருவதுடன் மிகக் குறைந்தளவிலான மாணவர்களே சட்டக் கல்லூரிக்கான அனுமதியைப் பெற்றுவருகின்றனர்.

வவுனியாவிலிருந்து இம்முறை ஜனந்தன் புவனேந்திரராஜா தெரிவுசெய்யப் பட்டுள்ளார். 122 புள்ளிகளைப் பெற்ற இவர் தெரிவுசெய்யப்பட்ட 213 மாணவர்களுள் 99ம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மற்றும் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான ஜனந்தன் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தெரிவானவர்களின் முழுமையான பட்டியல் 

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 12.11.2015 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஆரம்பமாகிய கந்த சஷ்டி விரதம் ஸ்நாபன அபிசேகத்தை  தொடர்ந்து வசந்த மண்டப பெருமானுக்கு விசேட சண்முக அர்ச்சனையுடன் எம்பெருமான் உள்வீதியாக எழுந்தருளி வந்து அருள்பாளித்தார்.

இன்றைய உற்சவத்தில்  விரதமிருக்கும் அடியார்கள் தர்ப்பை அணிந்து  கும்பத்துக்கு பூ போடும் நிகழ்வும் இடம்பெற்றது .    கந்தசஷ்டி  விரதத்தை முன்னிட்டு  தினமும்  மதியம் 1.30 மணியளவில் விசேட அபிசேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று ஆறாம் நாள் மாலை 4.00 மணியளவில் மலையடிவாரத்தில் சூரசம்கார நிகழ்வு இடம்பெறும்.

-ஈழத்து பழனி முருகன் ஆலய நிர்வாகம்-

12231550_10206521583456327_800307749_n 12231630_10206521584016341_1890648488_n Untitled-1 Untitled-2

12231348_10206521584776360_1101810811_n Untitled-3