லண்டனிலிருந்து மலேசிய கோலாலம்பூருக்கு 378 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் கடும் குலுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்வவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த எயார் பஸ் ஏ380. எம்.எச்.1 விமானம் வங்காள விரிகுடாவிற்கு மேலாக பறக்கையில் குறுகிய நேரத்துக்கு இவ்வாறு கடுமையாக குலுங்கியதாக அந்த விமானசேவை நிறுவனம் கூறுகிறது.
தொடர்ந்து மேற்படி விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி விமானத்தில் பயணித்து காயமடைந்த பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமான நிலையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் சுமார் 34 பேர் காயமடைந்துள்ளதாக மலேசியாவிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து ஆயுதங்களும் அழிந்து போயுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
யுத்த காலத்தில் கப்பல்கள் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும் பொருத்தமாக இருந்தது.
இங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும் அங்கிருந்து ஆயுதங்கள் ஏனைய பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வந்தன.
10 வீதமான ஆயுதங்களே இங்கு எஞ்சியிருந்தன. இன்னும் ஆறுமாதகாலம் சென்றிருந்தால் இவை கூட வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும் என அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேல் மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்விபத்துக்கான காரணம் இது வரையிலும் கண்டறிப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
இராணுவ முகாமில் ஆயுதங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தகாலத்தில் சர்வதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்களே இவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இவற்றில் ஏற்கனவே, பெரும் தொகையான ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகாமில் எஞ்சியிருந்த 10 வீதமான ஆயுதங்களே இவ்வெடிப்பு சம்பவத்தில் அழிந்து போயுள்ளதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை அனுபவமாகக் கொண்டு ஏனைய பகுதிகளில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களையும் ஆய்வுசெய்வதற்கு இராணுவத்தளபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இராணுவ முகாம்கள் மாத்திரமன்றி கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களும் ஆய்வுசெய்யப்படவிருப்பதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க சுட்டிக் காட்டினார்.
விபத்து இடம்பெற்ற இராணுவ முகாமுக்குள் வேறு எந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும், முகாமிலிருந்த பிரதான கட்டடம் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வெடிவிபத்தில் வெடித்துச் சிதறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களை இராணுவத்தினர் சேகரித்து வருவதுடன், சுற்றயல் பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் மற்றும் காணிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளையும் இராணுவத்தினர் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார்.
பிரித்தானிய நாட்டில் கணிணியில் கேம் விளையாடிய 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்க்ஹம் நகரில் Karnel Haughton என்ற 12 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான்.
படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியான இந்த சிறுவன் இணையத்தளத்தில் வெளியாகும் புதிய புதிய விளையாட்டுகளை விளையாடுவது இவனது முக்கிய பொழுபோக்கு.
இந்நிலையில், இணையத்தை கலக்கி வரும் ‘Choking Game’(மூச்சை இழுத்து பிடிக்கும் விளையாட்டு) என்ற விளையாட்டு பற்றி தனது நண்பர்கள் மூலம் அறிந்துள்ளான்.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் அதிக நேரம் மூச்சு விடாமல் இழுத்து பிடித்து அதனை வீடியோவாக இணையத்தில் வெளியிட வேண்டும்.
விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் கடந்த புதன்கிழமை அன்று அவனது வீட்டில் உள்ள கணிணியில் அந்த ஆபத்தான விளையாட்டை விளையாடியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அறைக்கு அவனது தாயார் சென்றபோது, சிறுவன் சுயநினைவின்றி தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சிறுவனை மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது, அவனது மூளைக்கு சுவாசம் செல்லாமல் தடையானதால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சிறுவன் மட்டும் தனியாக விளையாடினானா? அல்லது அவனது வீட்டில் மற்றவர்களும் சேர்ந்து விளையாடினார்களா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து பலியான சிறுவனின் குடும்ப நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சிறுவர்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள்? எந்தெந்த விளையாட்டுகளை கணிணியில் விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூச்சை இழுத்து பிடித்து விளையாடும் இந்த விளையாட்டால் கடந்த பெப்ரவரி மாதம் 14 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் மற்றும் 20 ஓவரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக கோஹ்லி தெரிவு செய்யப்படவுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, அவர் கோபமடைந்து வெளியேறியுள்ளார்.
கோஹ்லி அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் டோனி, யுவராஜ் சிங் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்க கோஹ்லி குறித்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார். கோஹ்லி அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட ஸ்மைல் அறக்கட்டளை விருப்பம் தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவராஜ் சிங்கிடம் கோஹ்லி குறித்து பரவி வரும் வதந்தி குறித்து சொய்தியாளர் கேட்டுள்ளார், அதற்கு தான் இங்கு நிகழ்ச்சியை குறித்தே பேச வந்துள்ளதாகவும், கிரிக்கெட்டை குறித்து இல்லை எனக் கூறி கோபத்துடன் யுவராஜ் சிங் வெளியேறியுள்ளார்.
மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்ட யுவராஜ் சிங்கிடம், செய்தியாளர் குறித்த கேள்வியை கேட்டது தவறு என பலர் விமர்சித்து வருகின்றனர்.
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது குறித்து அவரை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதி வருகிறார்.
வீரப்பனுக்கு எதிரான வேட்டையை தலைமை தாங்கி வழிநடத்திய அப்போதைய சிறப்பு அதிரடிப்படை தலைவர் விஜயகுமார், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தெளிவான, சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன் என்றார்.
இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக, சிலரது பெயர்களை குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன். மற்றபடி, அனைத்து தகவல்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன்.
பொலிஸ், வனத்துறையினர் உட்பட 180 பேரை கொலை செய்ததாகவும், 200க்கும் மேற்பட்ட யானைகளை கொன்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தியதாகவும் வீரப்பன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2004ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி, வீரப்பன் தனது கண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.
அவரை வீரப்பன் கும்பலில் இருந்த பொலிஸ்காரர், காட்டை விட்டு வெளியே அழைத்து வந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஆம்புலன்ஸ் போல் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வேனுக்கு கூட்டி வந்தார்.
வீரப்பனும், கூட்டாளிகளும் ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தவுடன், அப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.
சரண் அடைந்து விடுமாறு முதலில் எச்சரிக்கை விடுத்தை பொருட்படுத்தாத வீரப்பன் கூட்டாளிகள், துப்பாக்கியால் சுடவே அதிரடிப்படையினரும் துப்பாக்கியால் திருப்பி சுட்டனர்.
அதில், சம்பவ இடத்திலேயே வீரப்பன் பலியானார். அவருடைய கூட்டாளிகள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர்.
அவிசாவளை, கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பத்தினால், சுமார் 70ஆயிரம் இராணுவ தற்காலிக படையினரின் ஆவணங்கள் அழிந்துப்போயுள்ளன. படைத்தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆவணங்களை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றும் இராணுவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் தற்காலிக படைவீரர்களின் தலைமையகம் சாலவ இராணுவ முகாமிலேயே அமைந்துள்ளது.
கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் வைத்து சின்னலெப்பை அலாவுதீன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை குற்றச்சாட்டில் முதலாம் குற்றவாளியான கொலை செய்யப்பட்டவரின் மனைவியான கலந்தர் ரூபியாவே இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும், இக்கொலை குற்றச்சாட்டில் இரண்டாம் குற்றவாளியாக பெயரிடப்பட்டிருந்த செல்லத்துரைக்கு என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சின்னலெப்பை அலாவுதீன் கொலை செய்யப்பட்ட போது அவரின் மனைவியான கலந்தர் ரூபியா குறித்த வீட்டிலேயே இருந்துள்ளார்.
அத்துடன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையினால் இந்த மரணம் சம்பவிக்கவிலை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தர்.
இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
வவுனியாவில் நேற்று (05.06.2016) காலை தனியார் பேரூந்து நடத்துநர்கள் இருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அங்கிருந்தவர்களின் தலையீட்டால் சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில் குறித்த நடத்துனர், இளைஞர்கள் சிலருடன் வவுனியா முதலாம் குறுத்குத் தெருவில் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் புதூர் கோவிலுக்குச் செல்வதற்கு பேரூந்துகள் நிறுத்தப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக அவ்விடத்திற்கு வாள், கத்தி, மதுப் போத்தல்கள், தடி என்பனவற்றுடன் வந்து குறித்த வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலைத் தடுக்க முற்பட்ட தனியார் பேரூந்து சாரதி ஜெயசீலன் (28) மீது மதுப்போத்தலால் தாக்குதல் மேற்கொண்டபோது தலையில் படுகாயமடைந்த நிலையில் அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடாத்திய இளைஞர் குழுவில் ஆறுபேருக்கு மேல் இருந்ததாகத் தெரிவித்த தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர், தாக்குதல் நடத்த வந்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இன்று (06.06.2016) தாக்குதல் நடத்திய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் மேலும் சிலரை பொலிசார் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
நேற்று இரவு இளைஞர்கள் குழுவினரின் தாக்குதல் சில நிமிடங்கள் நீடித்ததாகவும் பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை கட்டுப்படுத்தியதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேரூந்துகளும் சேதத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குரங்கு ஒன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
நகைக்கடையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில்,குண்டூரில் உள்ள நகைக் கடை ஒன்றின் கண்ணாடி கதவை மெதுவாக திறக்கும் குரங்கு பின்னர், அங்குள்ள காசாளர் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்கிறது.
சிறிது நேரத்தில் அங்கிருந்த மேசையை மெதுவாக திறந்து அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணக்கட்டு ஒன்றை கட்டை எடுத்துக்கொண்டு தாவிக்குதித்து வெளியே ஓடிவிடுகிறது.
இதனைக் கண்ட கடை ஊழியர், அந்தக் குரங்கை துரத்திச் சென்று பணத்தை வெற்றிகரமாக மீட்டுள்ளார்.
ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விதம் விதமாக கபாலி ‘டி–சேர்ட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
ரஜினியின் கபாலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரை 2 கோடிக்கும் அதிகமானோர் இணைய தளத்தில் பார்த்தனர். இது உலக அளவில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கபாலி பாடல் வெளியீட்டு விழா வருகிற 12ம் திகதி நடைபெறுகிறது. அடுத்த மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி இளமையாகவும், இப்போதைய தோற்றத்திலும் நடித்திருக்கும் இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடந்ததால் அந்த நாட்டு ரசிகர்களிடம் இந்த படத்துக்கு தனி மவுசு இருக்கின்றது.
ஹொலிவுட் நடிகர் ஜக்கிஜான், கபாலி படத்தின் ‘டி–சேர்ட்’ அணிந்து போஸ் கொடுப்பது போன்ற படம் சமீபத்தில் இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விதம் விதமாக கபாலி ‘டி– சேர்ட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
இதில் ரஜினியின் பல்வேறு கபாலி தோற்றம், மலேசிய பின்னணியிலான கோபுரங்களுடன் ரஜினி படம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.
ஜெகன்நாதனின் பேராண்மை, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் அரவான் படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகை ஆனவர் தன்ஷிகா. தற்போது ரஜினியின் கபாலியில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட்டு இருக்கின்றார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் அக்காவின் மகன் அவிஷேக் கதாநாயகனாக நடிக்கும் காத்தாடி படத்தில் தன்ஷிகா அவரது ஜோடியாகி வருகின்றார். எஸ்.கல்யாண் இயக்கியுள்ள இப் படத்துக்கு பவன்–தீபன் இசை அமைத்திருக்கிறார்கள். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தன்ஷிகா…
நான் நடிப்பை மிகவும் நேசிக்கின்றேன். சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்க முடியாவிட்டாலும் இனி எல்லாமே நடிப்புதான் என்று இருந்தேன். ஆரம்ப காலத்தில் எத்தனையோ பிரச்சினைகளை, சிரமங்களை சந்தித்தேன். அவற்றில் இருந்து என்னை காப்பாற்றி வழி நடத்தியது என் தந்தையும், எனது மாமா ஒருவரும்தான்.
நான் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் பல விடயங்களை கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். இது மட்டுமல்ல ஜிம்னாஸ்டிக்கும் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த எனக்கு நல்ல படங்கள் அமைந்தன.
பெரிய இயக்குனர்கள், பெரியபடங்கள் என்று பயணித்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (06.06.2016)சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.
அவிசாவளை கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் முகாமை அண்மித்து காணப்படும் பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தீ முழுமையாக அணைக்கப்பட்ட போதும் ஆயுத களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
இராணுவ முகாமை சுற்றி காணப்படும் பிரதேசத்தில் விழுந்து கிடக்கின்ற ஆயுதங்களையும் ஆயுதங்களின் பாகங்களையும் அகற்றி துப்பரவு செய்வதற்கு 96 மணிநேரம் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் 96 மணி நேரத்தின் பின்னரே இராணுவ முகாமை சுற்றியுள்ள பிரதேசங்களை பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்க முடியும்.
வீடுகளுக்குள்ளும் வெளியிலும் ஆயுத களஞ்சியத்திலிருந்து சிதறிய ஆயுதங்களின் துண்டுகளும் பாகங்களும் வந்து விழுந்துள்ளன. சில ஆயுதங்கள் முழுமையாக விழுந்து காணப்படுகின்றன.
எனவே 96 மணித்தியாலத்திற்கு பின்னரே குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தி கூறமுடியும்
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் Instagram, Twitter, LinkedIn and Pinterest போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் Ourmine என்னும் ஹேக்கர் குழுவே இச்செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பெருமைப்படும் வகையில் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர், அதில் அவர்களை தொடர்பு கொள்ள ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
பலர் ஜூக்கர்பெர்க்கின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டுள்ள டுவிட்டர் கணக்கை கடைசியாக கடந்த 2012ம் ஜூக்கர் பெர்க் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley(என்ச்லே) நகரில் மார்ட்டின் துரம் மற்றும் கிலென்னா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் அதிகமாக காணப்படும் சாம்பல் நிறத்தில் உள்ள கிளி ஒன்றை மார்ட்டின் தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் அவசர தகவல் ஒன்றை பெற்ற பொலிசார் மார்ட்டின் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு, உடல் முழுவதும் 5 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் மார்ட்டின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
அருகில் மார்ட்டினின் மனைவியான கிலென்னா தலையில் குண்டு காயம் பட்டு உயிருக்கு போராடியுள்ளார். கிலென்னாவை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் தற்போது குணமாகி வருகிறார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரங்களுக்கு பிறகு மார்ட்டினின் தந்தை கொலை நடந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த சாம்பல் நிறக்கிளி அடிக்கடி எதையோ கூறி கத்திக்கொண்டு இருந்துள்ளது.
கிளியின் முனங்களை அவர் கூர்ந்து கவனித்தபோது, ‘Don’t shoot’( தயவு செய்து சுடாதே) என்ற வார்த்தைகளை அந்தக் கிளி அடிக்கடி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது, மார்ட்டினை துப்பாக்கியால் சுட்டபோது அவர் கடைசியாக Don’t shoot என்ற வார்த்தைகளை தான் பேசியுள்ளார். இதனை அருகில் இருந்த அந்த சாம்பல் நிறக் கிளி கேட்டுள்ளது.
ஆபிரிக்காவில் காணப்படும் இந்த சாம்பல் நிறக்கிளிகளுக்கு சாதாரண கிளிகளைவிட அறிவு கூர்மையானது. ஏதாவது ஒரு ஒலியை கேட்டால், அதனை அப்படியே திருப்பி பேசும் திறன் படைத்தது.
குறிப்பாக, ஒரு ஒலியை ஒருமுறை கேட்டால் கூட அதனை அப்படியே இந்த கிளிகள் திரும்ப கூறும். எனவே, மார்ட்டினை சுட்டபோது இந்த கிளியும் அந்த இடத்தில் இருந்துள்ளது.
மார்ட்டினின் உடல் அருகில் அவரது மனைவியான கிலென்னாவும் குண்டு காயத்துடன் இருந்ததால் அவர் தான் மார்ட்டினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிலென்னா ‘சம்பவம் நிகழ்ந்தபோது எனக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த நினைவும் இல்லை’ என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், கொலை நடந்த இடத்தில் கிலென்னா எழுதியிருந்த 3 தற்கொலை கடிதங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
ஒரு கடிதத்தை கிலென்னாவின் முன்னாள் கணவருக்கும், மற்ற 2 கடிதங்களை அவரது இரு மகள்களுக்கும் எழுதியுள்ளார்.
அதில், ‘மகள்களே, என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் இருவரையும் நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக உங்கள் இருவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.
இந்த கடிதங்கள் மற்றும் மார்ட்டினின் தந்தை தற்போது பொலிசாரிடம் கிளி பேசியதாக கூறப்பட்டுள்ள அந்த புகாரை பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார்களின் அடைப்படையில், மார்ட்டினின் கொலையில் அவரது மனைவியான கிலென்னாவிற்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவரை விரைவில் விசாரணை வட்டத்தில் கொண்டு வரவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (06.06.2016) காலை முதல் நாளை 07.06.2016 காலை வரை இந்த விஷேட பஸ் சேவை நடைபெறவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.