மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்!!

சிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

சிலாபத்தில் உள்ள ஆனந்தா தேசிய பாடசாலையின் நுழைவாயில் முன்பாக நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக உண்ணாவிரதமிருந்த நிர்மலி பெரேரா எனும் பெண்மணி கருத்து வெளியிடுகையில் , இந்தப் பாடசாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளேயே எங்கள் வீடு அமைந்துள்ளது. எனது மூத்த பிள்ளைகள் இரண்டு பேரும் இதே பாடசாலையில் தான் கல்வி கற்கின்றார்கள்.

இருந்தும் கடந்த பத்து மாத காலமாக எனது மகனுக்கு இந்தப் பாடசாலையில் அனுமதி கேட்டுப் போராடியும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவனது ஒரு வருடப் படிப்பு பாழாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உண்ணாவிரதமிருந்த பெண்ணை பாடசாலையின் பாதுகாவலர்கள் விரட்டியடிக்க முற்பட்ட சமயத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகர அவ்விடத்துக்கு வருகை தந்துள்ளார்.

கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி இப்பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து நிர்மலி, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

1 2

ரயிலில் பிச்சை எடுத்தால் நாளை முதல் கைது!!

Train

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இணைந்து நாளைய முதல் சுற்றி வளைப்புக்களை நடாத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இழைக்கப்படுகின்ற சிரமங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

வேற்றுகிரக விண்கலம் வீடியோவில் தெளிவாக பதிவானதால் பரபரப்பு!!

Kirakam

ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எத்தனையோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஏலியன்களின் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவாகியிருப்பது ஏலியன் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ போஸ்டன் நகரில் கடந்த 24ம் திகதி இரவு 07.00 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு!!

Hang

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் (23 வயது) குர்கான் நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 5.1.2014 அன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து ரயிலில் வந்த எஸ்தர் லோக்மானிய திலக் பஸ் நிலையம் அருகே திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்து, பொலிசார் தேடிவந்த நிலையில் 16.1.2014 அன்று பந்தப் புறநகர் பகுதியில் உள்ள விரைவு நெடுஞ்சாலையில் எஸ்தரின் பிரேதம் அழுகிய நிலையில் கிடந்தது.

பிரேதத்தை கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் இருந்த 36 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து சுமார் 2500 பேரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதன் விளைவாக, சந்திராபன் சனாப் (29) என்பவனை கைது செய்து பொலிசார் விசாரித்தபோது, பஸ் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த எஸ்தருக்கு ‘லிப்ட்’ தருவதாக கூறி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று பலாத்காரம் செய்து கொன்றதை அவர் ஒப்புகொண்டார்.

இதையடுத்து, மும்பை ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி, பின்னர் சாரதியாக மாறிய அவர் மீது மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சனாப்புக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வ்ருஷாலி ஜோஷி இன்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை அரிதிலும் அரிதானதாக கருதி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிரியும்வரை குற்றவாளியை தூக்கிலிட்டு கொல்லுமாறும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை மோதலில் 12 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!

Boy

மாத்தறை, திஹகொட, கபுதுவ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் பின்னர் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

திஹகொட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த 8ஆம் ஆண்டு மாணவன் தனஞ்சய பஸ்நாயக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த 20 வயது இளைஞனொருவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலசலகூட குழியில் விழுந்து 3 வயதுச் சிறுமி பலி!!

toilet-01

காத்தான்குடி – ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (30.10) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டினுள் இருந்து வெளியில் சென்ற குழந்தை வெகு நேரம் திரும்ப வராததால் உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தயாராது மூத்த சகோதரியின் வீட்டில் நீர் நிரம்பி இருந்த மலசல கூட குழியில் இருந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அங்கு மரணமடைந்துள்ளார்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கார் தீயில் எரிந்து முற்றாக சேதம்!!

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்கவின் கார் நேற்று (30.10.2015) தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் குறித்த காரினை அதன் சாரதி செலுத்திக் கொண்டிருந்த போது, வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது சாரதி கதவினை திறந்து வெளியில் பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு தண்ணீர் பவுசர்கள் வரவழைக்கப்பட்டு நீர் பாய்ச்சி தீ அணைக்கப்பட்டது. எனினும் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இத்திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கின்ற போதிலும், விபத்திற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

C1 C2

வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் இளைஞர் குழு கைது!!

arrests

வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்தியில் நின்று சண்டையிட்ட குழுவொன்றை கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இளைஞர்களின் ரவுடித்தனம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏ9 வீதியில் தடிகள், பொல்லுகள் மற்றும் வாள்களுடன் நின்று சண்டையிட்ட இளைஞர் குழுவைச் சேர்ந்த 7 பேரை நேற்று முன்தினம் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுள் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை பொலிஸார் தேடிவருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா, கற்குழி பகுதியில் சகோரர்களுக்கிடையில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று மாலை முச்சக்கரவண்டியொன்றில் வாள்களைக் கொண்டு சென்ற சாரதியொருவரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு விண்ணப்பித்த இருவரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

unnamed255

வவுனியா, நெடுங்கேணியில் இருந்து இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கு விண்ணப்பித்த இரு இளைஞர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயமகா தெரிவித்துள்ளார்.

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகமாநட்டின் போது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கேட்ட போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்..

இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் ஒருவர் மாத்திரம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்.

இதற்கமைவாக, வவுனியாவில் இருவர், வவுனியா தெற்கில் இருவர், செட்டிகுளத்தில் ஒருவர், நெடுங்கேணியில் இருவர் என 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நெடுங்கேணியில் இருந்து விண்ணப்பித்த இருவரினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவர்களது வேட்புமனுக்களில் பொலிஸ் நற்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமையே காரணம். ஏனைய ஐவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் எனத் தெரிவித்தார்.

நெஞ்சில் பலகை குத்திய சிறுவன் பலி!!

1027073008Untitled-3நெஞ்சில் பலகை குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ம் திகதி, புளத்சிங்கல – கலஹேன பகுதியில் மா மரத்தில் ஏறிய 16 வயதான குறித்த சிறுவன் அதிலிருந்து விழுந்து, நெஞ்சு பகுதியில் பலகை துண்டு பாய்ந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், நெஞ்சில் குத்திய பலகை அகற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலூன்கள் மூலம் இணையத்தள இணைப்பு வழங்கும் கூகுள்!!

Google

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணையத்தள பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையத்தள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும்.

அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையத்தள வசதிகளைப் பெறமுடியும்.

பிரஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டமானது நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பிரேசில் நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் கூகுள் அல்பபெட் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்த 4 மொபைல் சேவை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்குபெற்றார்கள்.

மலை மற்றும் காடுகளால் சூழப்பட்ட 1700 தீவுகளில் வசிக்கும் 100 மில்லியன் இந்தோனேசியர்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 300 பலூன்களை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் நடிக்க வரும் பூவே உனக்காக சங்கீதா!!

25-sangeetha8-600தமிழில் ‘பூவே உனக்காக’, ‘கங்கா கௌரி’, ‘சீதனம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. மலையாள வரவான இவர், ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ் மட்டுமில்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ள இவருக்கு மீண்டும் மலையாள திரையுலகமே கைகொடுத்திருக்கிறது. மலையாளத்தில் நடிகரும், திரைக்கதையாசிரியரும், இயக்குனருமான சீனிவாசன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஷிபு பாலன் என்பவர் இயக்குகிறார்.

சீனிவாசனும், சங்கீதாவும் ஏற்கெனவே 1998-வது வருடம் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்துக்காக சங்கீதாவுக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது கிடைத்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒலிம்பிக் பதக்க கனவை நனவாக்குவோம்- விளையாட்டுத்துறை அமைச்சர்!!

dayasiri-jayasekara-upfa

விளை­யாட்டுத்துறை சார்ந்த பிரச்­சினை­க­ளுக்­கான தீர்­வினை முன்­வைக்க அதி­கார சபை ஒன்றை ஸ்தாபிக்க உத்­தே­சித்­துள்­ள­தாக விளை­யாட்டுத்துறை அமைச் சர் தயா­சிறி ஜய­சே­கர தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கம் என்­பது எமது நாட்டை பொறுத்­த­வரை கன­வா­கவே அமைந்­துள்­ள­தா­கவும் அதனை நன­வாக்­கு­வ­தற்கும் பிர­தேச கிராம ரீதி­யி­லான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­தி­ப்பி­லேயே விளை­யாட்டுத் துறை அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

விளை­யாட்டுத்துறை சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை முன்­வைக்­கவும் தேசிய ரீதி­யி­லான சட்­ட­திட்­டங்­களை உரிய முறையில் பின்­பற்­றவும் எதிர்­வரும் காலங்­களில் அதி­கார சபை ஒன்றை ஸ்தாபிக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. மறு­புறம் விளை­யாட்டுத் துறை சார்ந்த குழுக்­களின் அங்­கத்­த­வர்­களை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் ஒன்­றுக்கும் செல்­ல­வுள்ளோம்.

ஒலிம்பிக் பதக்கம் என்­பது இலங்­கையை பொறுத்­த­வரை கன­வா­கவே காணப்ப­டு­கின்­றது அந்­த­வ­கையில் அந்தக் கனவை நன­வாக்கும் முக­மா­கவும் பல்­வேறு செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் தேசிய ஒலிம்பிக் குழு­மத்தின் தலை­வ­ருடன் நாம் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எதிர்­வரும் காலங்­களில் விளை­யாட்டுத்துறை சார்ந்த அனைத்து பிரச்சி­னை­களும் தீர்க்­கப்­ப­டுவ­தோடு பிர தேச கிராம மட்டங்களில் இருந்து சகலதுறைசார்ந்த விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களின் திறமை களை முன்வைப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் பங்களாதேஷில்!!

asia-cup-2016_0

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது.இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்­பா­லான போட்­டி­களில் பங்­கேற்று விளை­யாடி இருந்­தன.

13ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்­டியை பங்­க­ளாதேஷ் நடத்­து­கி­றது. சிங்­கப்­பூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்­டத்தில் இந்த முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது.அடுத்த ஆண்டு பெப்­ர­வரி 24ஆம் திகதி முதல் மார்ச் 6ஆம் திகதி வரை நடக்­கி­றது. பங்­க­ளா­தேஷில் தொடர்ந்து 3ஆவது முறை­யாக ஆசிய கிண்ணப் போட்டி நடை­பெ­று­கி­றது. இந்த ஆசிய கிண்ணக் கிரிக்கெட் 20 ஓவர் முறையில் நடக்­கி­றது.

தற்­போது முதல் முறையாக 20 ஓவர் முறையில் இப்போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன்!!

1 (65)

தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.

திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது.
அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார்.

மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது.

இதனையடுத்து தனது மனைவியை தனக்கு துரதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் ஒருவர் எனக் கருதிய அந்தக் கணவர், அவரை விவாகரத்துச் செய்வதற்கு முடிவெடுத்ததாக சவூதி அரேபிய ஊடகமான அல்- மர்ஸாத் அறிக்கையிட்டுள்ளது.

இறந்துபோன நபருக்கு குழந்தை பிறந்த மருத்துவ விநோதம்!

iStock_000001279386Medium_4x3அமெரிக்காவில் கருவிலேயே இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை கருவூட்டலுக்காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் ரத்தப் பிரிவை சோதித்தபோது, AB+ வகையை சேர்ந்தது என்பது தெரியவந்தது. பெற்றோர் இருவருமே A- ரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் ஏதோ குளறுபடி ஏற்பட்டு விந்தணு மாறிவிட்டதாக தம்பதியினர் எண்ணினர்.

இதையடுத்து அந்த மருத்துவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். எனினும், விசாரணை முடிவில், இந்தத் தம்பதிகளின் விந்தணுக்களுக்குள் எவ்வித குளறுபடியும் நிகழவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, சமீபத்தில் அந்த தந்தையிடம் மேற்கொண்டு பரிசோதனை செய்தபோது, ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதன்படி, குழந்தையின் தந்தை கருவாக உருவானபோது இரட்டையராக உருவாகினர் எனவும், அதில் ஒருவர் கருவிலேயே அழிந்துவிட்டதாகவும் தெரியவந்தது. ஆனால், அந்த சிதைந்துபோன குழந்தையின் டி.என்.ஏ. இவரது உடலுடன் சேர்ந்துள்ளது.அந்த டி.என்.ஏ. மூலமாகவே தற்போது குழந்தை பிறந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதாவது கருவில் இறந்துபோன தனது சகோதரனின் குழந்தைக்கு அவர் தந்தையாகியுள்ளார்.கைமேரா (Chimera) என அறியப்படும் இந்தப் பிரச்சனை மிகவும் அரிதாகவே மருத்துவ உலகில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.