பணத்துக்காக நண்பனை கடத்தி கொன்ற ஐந்து சிறுவர்கள் கைது..!

MURDERஅசாமில் ஒன்பதாம் வகுப்பு படித்த சிறுவன் ஒருவனை பணத்திற்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமை சேர்ந்த சிறுவன் பிரேசெஞ்சித் லகர், இவர் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தார். இந்த சிறுவன் இம்மாதம் 1ம் திகதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை.

மகனை காணவில்லை என்று அச்சமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். சில நாட்கள் கழித்து, சிறுவனின் வீட்டிற்கு, தாங்கள் சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவன் உயிருடன் திரும்பவேண்டுமேன்றல் 15 இலட்சம் ரூபாய் பணம் வேண்டுமென்றும் கூறி ஒரு தொலைபேசி அழைப்பும், எஸ்.எம்.எஸ் செய்தியும் வந்துள்ளது.

தொலைபேசி எண்ணை வைத்து பொலிசார் விசாரித்தப்போது 5 சிறுவர்கள் பிடிப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறுவனை சோனாப்பூர் என்னும் இடத்திற்கு அழைத்து செல்வதாக் கூறி, அவனை கடத்தியுள்ளனர்.

பின்னர், அச்சிறுவனை பாதுகாப்பதில் சிக்கல் வந்ததால் ஐந்து பேரும் சேர்ந்து அவனை கொன்றுவிட்டு வீடு திரும்பினர்.

விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கூறிய தகவல்கள் படி, பலியான சிறுவனின் புத்தகப்பை, உடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

சிறுவனின் சடலம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வர்த்தகரை கடத்திய 9 பேர் தமிழகத்தில் கைது..!

arrest1இந்தியாவில் இலங்கை பிரஜை ஒருவரை, சி.பி.ஐ., பொலிஸார் எனக் கூறி, கடத்திச் சென்ற ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 45 வயதுடைய முகமது இம்தியாஸ் ஆடை தொழிலில் புரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர், தமிழ்நாடு – ஏழுகிணறில் வசிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், இம்தியாசை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்று, மறுநாள் காலை, செங்குன்றம் அருகே விட்டுச் சென்றது.

இதுகுறித்து, இம்தியாஸ், ஏழுகிணறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

விசாரணையில், சி.பி.ஐ., பொலிஸார் என்றும், சட்ட விரோதமாக தங்கியுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் எனக்கூறியும் மர்மகும்பல், இம்தியாசை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையில், இலங்கையை சேர்ந்த முகமது ரிஞ்ஜான், தண்டையார்பேட்டையை சேர்ந்த குமார், ஜெய்கமல், திருவொற்றியூரை சேர்ந்த பிரேம்குமார், மணலியை சேர்ந்த மகாராஜா, மண்ணடியை சேர்ந்த இஸ்மாயில், ஏழுகிணறை சேர்ந்த ரைஸ்அகமது, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துவாரகன், ராயபுரத்தை சேர்ந்த துளசி ஆகியோர் முகமது இஸ்மாயிலிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்துடன் கடத்திச் சென்றதாக தெரியவந்த நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க திட்டம்..!

sajithசஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க இணங்கினால் மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்க முடியும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜே.ஆர். ஜயவர்தனவைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஜனாதிபதிகளும் தாங்கள் கட்சித் தலைவர்களாக இல்லாத காலத்திலேயே ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்.

அதேபோன்று சஜித் பிரேமதாசவிற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்,

ரணில் கட்சித் தலைமைப் பதவியை வகிக்கின்ற போது, சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் சிக்கல்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை..!

vavuniyaஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30மணி தொடக்கம் மாலை 5மணி வரை வவுனியாவில் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நெளுக்குளம், கூமாங்குளம், பண்டாரிகுளம், வேப்பங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தவேலைகள் மற்றும் வீதீயோர மரங்களை வெட்டும் பணிகளுக்காகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 5மணிக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(பாஸ்கரன் கதீஸன்)

ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்..!

dayaதமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தனர்.

இதன்போது குறுக்கிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் கொச்சைப்படுத்த முடியாது என்று அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன் மீது கட்சி நடவடிக்கை – சிவாஜிலிங்கம்..!

adaikalanathanஇலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத் தலைவர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை கணக்கில் எடுக்காது தமிழரசுக் கட்சி தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக டெலோ அமைப்பிலிருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே, முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் முன்னால் நடந்த பதவிப் பிரமாண நிகழ்வை தாம் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும் புறக்கணித்ததாகவும் அவர் கூறினார்.

டெலோ அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண அமைச்சர்கள் தெரிவினையும் அங்கீகரித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் கட்சி ஏற்கனவே எடுத்திருந்த முடிவுக்கு மாறாக நடந்துகொண்டதையிட்டு டெலோ கட்சியின் பொதுக்குழு உடனடியாகக் கூடி முடிவெடுக்கும் என்று சிவாஜிலிங்கம் கூறினார்.

வவுனியா பாடசாலைகளுக்கிடையில் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி..!

netballவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியியல் கல்லூரிக்கும் வவனியா மாவட்ட பாடசாலைகளுக்குமிடையில் சமூக உறவை வலுப்படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் சுற்றுப்போட்டியில் வலைப்பந்தாட்ட அணிகள் 15 பங்கு கொள்ளவுள்ளதுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும் நடைபெறவுள்ளமையினால் அச் சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்கு கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் கண்பார்வையற்றோருக்கான கிரிக்கட் போட்டி..!

cricketவவுனியா மாவட்ட வலவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் கண்பார்வையற்றோருக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருபது ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக ஒலியெழுப்பும் தன்மை கொண்ட பந்தில் விளையாடவுள்ள கண்பார்வையற்றவர்கள் அணியானது யாழ்ப்பாண, இரட்மலானை, தங்காலை, கொழும்பு, இராகமை, பிலியந்தலை, குருணாகலை, முல்கிரியாகல ஆகிய இடங்களில் இருந்து பங்குகொள்ளவுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ள இப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவித்தார்.

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியாவில் கல்விக்கண்காட்சி..!

ucவாசிப்பு மாத்தை முன்னிட்டு வவுனியாவில் கல்விக்கண்காட்சியும் புத்த கவிற்பனையும் எதீர்வரும் திங்கள் முதல் வெள்ளிக்கழமை வரை வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க. உதயராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்குவலய கல்விப்பணிப்பாளர் தீருமதி செ. அன்ரன் சோமராஜா, வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் தீருமதி ப. கணேசலிங்கம் வவுனியா தேசிய கல்வியியல் கலலூரியின் கல்வியும் தரமேம்பாடும் உப பீடாதிபதி கு. சிதம்பரநாதன், நிதிநிர்வாக உப பீடாதிபதி க. சுவர்ணராஜா ஆகியோரும்,

கௌரவ விருந்தினராக வவனியா தெற்கு வலய நிர்வாக பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர், கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி என். மாணிக்கவாசகம். ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வவுனியாவில் சேகுவேரா நினைவு மோட்டர்வாகனப் பவனி (படங்கள்)..!

சேகுராவின் நினைவுகளை சுமந்து அவரின் கொள்கையுடன் ஒன்றுபட்ட மக்களாக இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் சோசலிச இளைஞர் சங்கத்தால் மோட்டர்வாகனப் பவனி மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆஜென்ரீனாவில் பிறந்த சேகுரா உலகின் எல்லா இடங்களிலும் வாழும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு இனம், மதம், மொழி, சாதி வேற்றுமைகளற்ற சிறந்ததோர் சமுதாயத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக உயிர் தியாகத்துடன் போராடி பொலிவியாவில் கொலை செய்யப்பட்டார்.

இவர் கியூபா, பொலிவியா, கொங்கோ ஆகிய நாடுகளில் மக்களின் விடிவுக்காக போராடினார்.

சகோதரத்துவ கொள்கையுடன் சமாதானமான வாழ்வுக்காக போராடிய சேகுராவின் நினைவுகளைச் சுமந்து அவரின் வழியில் சகோதரத்துவத்திற்கான வாழ்க்கைப் பயணத்தைக் கட்டியெழுப்பும் முகமாக ஜே.வி.பி இன் சோசலிச இளைஞர் சங்கத்தால் இவ் மோட்டர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 8 ம் திகதி இருநூற்றுக்கு மேற்பட்ட மோட்டர் சைக்கிள்களுடன் 400 வரையானோர் இந்த பேரணியை ஆரம்பித்து காலி, அம்பாந்தோட்டை, மிகிந்தலை, பதுளை, அனுராதபுரம் என பவனி வந்து இன்று வவுனியாவை வந்தடைந்தது.

வவுனியாவில் இருந்து மீண்டும் அனுராதபுரம் சென்ற அங்கு இடம்பெறவுள்ள மாபெரும் கூட்டத்தில் இப் பேரணி இணையவுள்ளது.
vavuniya1

vavuniya2

இணையத்தில் வெளியானது ஷங்கரின் ஐ – அதிர்ச்சியில் ஷங்கர்..!

vikramவிக்ரம் – எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ´ஐ.´பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை இண்டர்நெட்டில் பல இணையதளங்களில் ரிலீஸ் ஆகி, ஷங்கரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக ஷங்கர் படம் என்றாலே கதையை உதவி இயக்குனர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும். ஆனால் இந்த படத்தின் விரிவான கதை இணையத்தில் வெளியாகியுள்ளதால் ஷங்கர் அதிர்ச்சியில் உள்ளார். இனி கதை என்ன என்பதை பார்போமா?

கதைப்படி சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞராக வருகிறாராம் விக்ரம். உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட விக்ரம், ஜிம்மிற்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக முறுக்கேற்றுகிறார்.

மாடலிங் பெண்ணான எமி ஜாக்சன், விக்ரம் செல்லும் ஜிம்மிற்கு அருகில் உள்ள பெண்கள் ஜிம்மிற்குச் செல்கிறார். இருவரும் எதார்த்தமாக அங்கு சந்தித்துக் கொள்ள, பதார்த்தமாக பற்றிக் கொள்கிறது காதல். பிறகென்ன, தமிழ் சினிமாவின் வழக்கப்படி எமியின் அண்ணன் சுரேஷ் கோபிக்கு இவர்களின் காதல் தெரிய வருகிறது. எல்லா அண்ணன்களைப் போல சுரேஷ் கோபியும் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் ´ஆணழகன் போட்டி´க்கான அறிவிப்பு வருகிறது. அதில் கலந்து கொள்ள விரும்பும் விக்ரம், போட்டிக்காக இரவு – பகலால ஜிம்மிலேயே பழியாகக் கிடந்து உடற்பயிற்சி செய்கிறார்.

அப்போது சயின்டிஸ்டான சுரேஷ் கோபி சற்று வித்தியாசமாகச்(?) சிந்திக்கிறார். விக்ரம் – எமியின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பிப்பது போல நடிக்கிறார். போட்டியில் வெற்றிபெற தான் உதவுவதாகச் சொல்லும் சுரேஷ் கோபி, விக்ரமுக்கு ஒரு ஊசி போடுகிறார். அந்த ஊசி விக்ரமின் உடலைச் சிதைத்து, ஸ்லிம் விக்ரமாக மாற்றுகிறது.

இதனால்,போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார் விக்ரம். இந்த நேரத்தில், வேறு ஒருவரை எமிக்கு மாப்பிள்ளையாகப் பேசிமுடிக்கிறார் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபியின் கபடத்தை உணரும் விக்ரம், வெகுண்டு எழுந்து தன் உடலை பழையபடி முறுக்கேற்றி போட்டியில் ஜெயிப்பதுடன்,எமியையும் கைப்பிடிக்கிறார்.

கென்யாவின் மிஸ்.பேபுலஸ் – மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் அழகிப்போட்டி..!

kenyaகென்யாவில் வித்தியாசமான ஒரு அழகிப் போட்டி நடந்துள்ளது. இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களின் உடல் அழகை வைத்தோ அல்லது வனப்பை வைத்தோ பட்டம் தரப்படவில்லை. மாறாக மாற்றுத் திறனாளிகள்தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அசத்தினர். உலகெங்கும் இப்போது தடுக்கி விழுந்தால் அழகிப் போட்டிதான். விதம் விதமான பெண்கள், உலகப் பந்தில் ஏதாவது ஒரு மூலையில் நடந்தபடிதான் உள்ளனர். ஆனால் வழக்கமான அழகிப் போட்டி போல இல்லாமல், வித்தியாசமான ஒரு அழகிப் போட்டியை நைரோபியில் நடத்தியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி இது. குள்ளமானவர்கள், சக்கர நாற்காலியில் நடமாடுவோர், நடப்பதற்கு முடியாதவர்கள் என விதம் விதமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
மிஸ் பேபுலஸ் அழகிப் போட்டி என்று இதற்குப் பெயர். இது 4வது ஆண்டாக நைரோபியில் உள்ள 680 ஹோட்டல் என்ற ஹோட்டலில் நடந்தது.

இந்தப் போட்டியில் மிஸ் பேபுலஸ் ஆபிரிக்கா2013 பட்டத்தை சல்லி மைனா என்பவர் தட்டிச் சென்றார். 21வயதான இந்த கென்ய நாட்டு மாடல் அழகி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்காக பாடுபடப் போவதாக கூறியுள்ளார். 2011ம் ஆண்டுதான் இந்த வித்தியாசமான அழகிப் போட்டி பிறந்தது. அப்போது கென்யாவில் நடந்த மிஸ் கான்பிடன்ஸ் என்ற அழகிப் போட்டியில் ரூத் முயனி என்பவர் பட்டம் வென்றார். இவர் மிகவும் குள்ளமானவர். இந்தப் போட்டிக்குப் பின்னர் அவர் பிரபலமானார்.

இவரது முயற்சியால் உருவானதே இந்த மிஸ் பேபுலஸ் அழகிப் போட்டியாகும். இவர்தான் தன்னைப் போல வித்தியாசமானவர்களாக உள்ள பெண்களை ஊக்குவிப்பதற்காக இந்த அழகிப் போட்டியை நிறுவினார். அதேசமயம், இந்தப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்லாமல் சாதாரண மாடல் அழகிகளும் கூட கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டியை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்பதே ரூத் முயனியின் ஒரே குறிக்கோளாகும்.

எனது வெற்றிக்கு ரஜினியின் உதவி தேவையில்லை – கார்த்தி..!

karthiஅட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு காளி என பெயர் வைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் தொடக்க விழாவின்போது டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ‘காளி பட டைட்டில் வைக்காமல் இயக்குனர் பின்வாங்கியது ஏன்? என்று விசாரித்தபோது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

‘காளி என்பது கடவுள் பெயர். சரஸ்வதி சபதம், திருவிளையாடல் என சில பக்தி பட டைட்டில்களை வைத்தபோது எதிர்ப்பு கிளம்பியது. அதுபோல் இதற்கும் எதிர்ப்பு கிளம்பிவிடக்கூடாது என்று எண்ணினர். அது மட்டுமே காரணம் கிடையாது. இன்னொரு காரணமும் உள்ளது.

ரஜினி நடித்த ‘நான் மகான் அல்ல என்ற டைட்டிலை தன் பட தலைப்பாக வைத்து கார்த்தி நடித்திருக்கிறார். ‘மூன்றுமுகம் படத்தில் ரஜினியின் அதிரடி போலீஸ் கேரக்டரான ‘அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் பெயரையும் தனது பட தலைப்பாக வைத்து கார்த்தி நடித்தார். ஆனால் நான் மகான் அல்ல ஓடிய அளவிற்கு அலெக்ஸ்பாண்டியன் ஓடவில்லை. எனவே கதையும் நடிப்பும் நன்றாக இருந்தாலே போதும், படம் ஓடிவிடும். ரஜினி தலைப்பு தேவயில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

மீண்டும் ரஜினி சம்பந்தப்பட்ட பட டைட்டிலாக வைத்தால் அவரையே ரிப்பீட் செய்வதுபோல் இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே பட டைட்டிலை மாற்ற கார்த்தியும் இயக்குனரும் முடிவு செய்திருக்கிறார்களாம். ரஜினி தலைப்பு இல்லாமலும் தன்னால் வெற்றிப்படம் கொடுக்க முடியும் என நிரூபிக்க கார்த்தி களம் இறங்கிவிட்டார்.

ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மூன்று அரைநிர்வாண பெண்கள்..!

spainஸ்பெயின் பாராளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்த மசோதா நிறைவேறிக்கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த மூன்று பெண்கள் திடீரென எழுந்து அரைநிர்வாணமாக மாறி, அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியான Popular Party என்ற கட்சியால் புதிய திருத்தப்பட்ட கருக்கலைப்பு குறித்த மசோதா நிறைவேறுவதாக இருந்தது.

அந்த மசோதா குறித்த குறிப்புகளை பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்த FEMEN அமைப்பைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென எழுந்து தங்கள் மேலாடைகளை நீக்கி, அரைநிர்வாணமாக மசோதாவை எதிர்த்து கோஷம் போட்டனர்.

இதனால் பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பெண் காவல்துறையினர் அழைக்கபப்ட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

யானைகளுடன் மூன்று நாட்கள் கழித்த எமி ஜாக்சன்..!

emiஐ படப்பிடிப்பில் படுபிஸியாக இருந்த எமி ஜாக்சனுக்கு புத்துணர்ச்சி பெறுவதற்காக ஷங்கர் மூன்று நாட்கள் விடுமுறை அளித்தாராம். அந்த விடுமுறையாக ஜாலியாக அனுபவைக்க எமி ஜாக்சன் தன் பள்ளித்தோழிகளுடன் கேரளாவில் உள்ள யானைகள் சரணாலத்திற்கு சென்று மூன்று நாட்களும் யானைகளோடு ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

கேரளா மற்றும் கொடநாட்டில் உள்ள Kodanad Elephant Sanctuary சென்று, அங்கிருந்த யானைகளுக்கு உணவுகள் கொடுத்து சந்தோஷமாக அனுபவித்தாராம். அந்த மூன்று நாட்கள் ஆபிரிக்காவில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக கூறும் எமி, இனிமேல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் இந்த காட்டுப்பகுதிக்கு வருவேன் என அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் எமி ஜாக்சன், பிரிட்டனில் உள்ள யானைகளின் தந்தங்களை பாதுகாக்கும் டிரஸ்ட் ஒன்றில் உறுப்பினராக இருக்கின்றாராம். அவ்வப்போது அந்த டிரஸ்டுக்கு பண உதவியும் அளித்து வருகிறாராம். இந்த டிரஸ்டில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்ஸும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷல் வங்கியின் CSR நிதியத்தின் மூலம் இரண்டு வவு­னியா மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்விக்கு அனுசரணை..!

கொமர்ஷல் வங்­கியின் சமூகப் பொறுப்பு நிதி­ய­மா­னது (CSR நிதியம்) பெங்­க­ளூரில் உள்ள பெங்­களூர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் இணை நிறு­வ­ன­மான Sambhram முகா­மைத்­துவ கற்­கைகள் நிலை­யத்தில் கல்வி கற்­ப­தற்­கான புலமைப் பரி­சிலை வென்ற வவு­னியா பகுதி மாண­வர்கள் இரு­வ­ருக்கு அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது.

வர்த்­தக முகா­மைத்­துவம் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் முகா­மைத்­துவம் ஆகிய பிரி­வு­களில் கற்­கவே இவர்கள் தெரி­வாகி இருந்­தனர். கொமர்ஷல் வங்கி ஊழி­யர்கள் தொழிற்­சங்க வங்கி ஊழி­யர்கள் கிளையால் இந்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

vavuniya

படத்தில் இரண்டு பட்­ட­தா­ரி­களும் (இட­மி­ருந்து இரண்­டா­வதும் மூன்­றா­வதும்) கொமர்ஷல் வங்கி சமூகப் பொறுப்பு நிதி­யத்தின் அதி­கா­ரி­க­ளான (இட­மி­ருந்து) பிரி­யந்தி பெரேரா- ஒருங்­கி­ணைப்­பாளர், கொமர்ஷல் வங்கி முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரியும், மற்றும் சமூகப் பொறுப்பு நிதி­யத்தின் நிதிப்­பொ­றுப்­பாளர் ரவி டயஸ், நிதி­யத்தின் தலை­வரும் பணிப்­பா­ள­ரு­மான லக் ஷ்மன் ஹுலு­கல்ல, பணிப்­பா­ளரும் நிதிப்­பொ­றுப்­பா­ள­ரு­மான பேரா­சி­ரியர் உதித்த லிய­னகே, வங்­கியின் சந்­தைப்­ப­டுத்தல் பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதிப்பொறுப்பாளரான ஹஸ்ரத் முனசிங்க, வங்கியின் சமூகப் பொறுப்பு பிரிவு உறுப்பினர் விவேகானந்தன் பரிதீபன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இந்­தி­யாவில் மூன்­றாண்டு கால கற்கை நெறிக்­காக இவர்கள் தெரிவு செய்­யப்­பட்ட போது அவர்­க­ளுக்­கான அனு­ச­ரணை வழங்­கு­மாறு இந்த கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

பட்­ட­தா­ரி­க­ளான பி.எஸ்.கே. சேத­ரத்ன மற்றும் பி.எம்.ரி.எல். ஜய­சேன ஆகியோர் தமது பட்­டப்­ப­டிப்­பினை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்து கொண்டு அண்­மையில் நாடு திரும்­பினர். இவர்­களின் மேல­திக கற்கை தேவை­க­ளுக்­காக கொமர்ஷல் வங்கி சமூகப் பொறுப்பு நிதியம் அவர்­க­ளுக்கு மடிக் கண­னி­களை வழங்­கவும் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.