வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மீது கைதடி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று இரவு 9 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிலில் பேரூந்தை பின்தொடர்ந்து வந்த இனம்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இக் கல்வீச்சுத் தாக்குதலில் பேரூந்தின் ஓட்டுனர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பயணிகள் சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கைதடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (04.06.2016) சனிக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்திரு சத்தியராஜ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் திருவிழாவின் இறுதிநாளான 13.06.2016 அன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அந்தோணியாரது திருச்சொருப பவணி இடம்பெறும்.
கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவிசாவளை – கொழும்பு பிரதான பாதை, கொஸ்கம பிரதேசத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சுமி மேனன் கல்லூரிப் படிப்பை நிறுத்தினார் என கேரள சினிமா உலகில் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.
இது பற்றி லட்சுமி மேனனின் அம்மா தெரிவித்தபோது, படங்கள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து கல்லூரிக்கு செல்ல முடியாமல் போனது. அதனால் தொலைதூரக் கல்வியாக மாற்றி படிக்கவிருக்கிறார். ஆனால் படிப்பையெல்லாம் நிறுத்தவில்லை எனத் என்றார்.
கல்லூரி பற்றிய கேள்விக்கு அது ஒரு பெரிய கதை. ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போனா, சினிமாவுல காட்டுற மாதிரி கெத்தா ஜாலியா இருக்கும். செமையா என்ஜாய் பண்ணலாம்’னு நினைச்சேன். அங்கே போனாத்தான் தெரியுது ஸ்கூலைவிட காலேஜ் வெரி ஸ்ட்ரிக்ட். அதுவும் எங்க இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் செம மொக்கை. மூணு மாசம்தான் காலேஜ் போனேன். அதுலயும் பாதி நாள் க்ளாஸுக்குப் போகலை. ஏகப்பட்ட அசைன்மென்ட்ஸ் வேறு. அடப் போங்கப்பானு காலேஜுக்கு டாட்டா பை பை சொல்லிட்டேன்.” என்று லட்சுமி மேனன் தெரிவித்தார்.
வேதளம்’ படத்தில் அஜித்துக்குத் தங்கச்சியாகவும், மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்த லட்சுமி மேனன் தற்சமயம் ரத்ன சிவாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்தில் நடித்து வருகிறார்.
கும்பகோணம், காரைக்குடி, மற்றும் மதுரை பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் லட்சுமி மேனன் கல்லூரி மாணவியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனனுடன் லட்சுமி மேனன் இணைந்து நடித்த சிப்பாய் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் சிப்பாய் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் எதிலுமே ஆண்களுக்கு சலைத்தவர்களல்ல. படிப்பு, வேலை, குடும்ப பொறுப்பு என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் தான். ஆண்கள் பெண்களை கவிழ்க்க என்ன செய்வதென்று விழிபிதுங்கி நிற்கும் போது, தங்கள் ஒற்றை பார்வையில் அவர்களை கவிழ்க்கும் திறன் பெண்களுக்கு இருக்கிறது.
“அட, நீங்க பாத்தா மட்டும் போதும்..” என்ற வகையில் நிறைய இருந்தாலும் பொசிடிவ் நெகட்டிவுடன் தானே சேரும். பெண்களும் தங்களை திரும்பி பார்காத ஆண்களை தான் விரட்டி விரட்டிக் காதலிக்கின்றார்கள். இப்படி காதலிக்கும் போது, தான் விரும்பும் ஆணை கவிழ்க்க பெண்கள் என்னெவெல்லாம் செய்வார்கள் எனப் பாப்போம்.
கேலி செய்வது..
அதிகமாக கிண்டல் கேலி என உங்களை வாட்டி எடுப்பார்கள். சம்மந்தமே இல்லாமல் கலாய்க்க செய்வார்கள்.
விளையாட்டைப் பற்றி பேசுவது..
பெண்களுக்கு பொதுவாக விளையாட்டு மீது பெரியளவில் ஆர்வம் இருக்காது. ஆனால், ஆண்கள் விளையாடிற்காக தேர்வை கூட உதாசீனம் செய்வார்கள். எனவே, விளையாட்டை பற்றி சந்தேகங்கள் கேட்க ஆரம்பிப்பார்கள்.
வழி கேட்பது..
வழி தெரியவில்லை என்னுடன் வருகிறாயா என மறைமுகமாக உங்களை தங்களுடன் அழைத்து செல்ல திட்டம் போடுவார்கள்.
கண்களை பார்ப்பது
பேசும் போது 99% உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
துடுக்காக இருப்பது
உங்களுடன் வெளியே செயல்வது, பேசுவது, நேரம் செலவழிப்பது என அனைத்திற்கும் துடுக்காக செயல்படுவார்கள்.
தொட்டுப் பேசுவது
பெண்கள் அவ்வளவு சீக்கிரமாக தொட்டுப் பேச மாட்டர்கள். நெருங்கிய நண்பர்களாக இருப்பினும் கூட. ஆனால், தாங்கள் விரும்பும் ஆண்களை செல்லமாகத் தொட்டுப் பேசுவார்கள்.
சூசகமான புன்னகை..
இதழ்கள் இன்றே பூத்த ரோஜா மீது கோர்த்து நிற்கும் பனித்துளி போல அழகாக, சூசகமாக ஒரு புன்னகையை உங்கள் மீது தினமும் தூவிச் செல்வார்கள்.
அன்புப் பரிசு..
காரணமின்றி அவ்வப்போது உங்களுக்கு பரிசு தருவார்கள். இதை வைத்தே நீங்கள் அந்த பெண் உங்களை காதலிக்கிறார் என முடிவு செய்துவிடலாம்.
முக பாவங்கள்..
உங்களிடம் பேசும் போது மட்டும் நவரசத்தையும் தாண்டி பல ரசங்கள் வெளிப்படும். கியூட் என்ற பெயரில் பலவகையிலான முக பாவங்களை வெளிப்படுத்துவார்கள்.
முடியுடன் விளையாடுவது..
நீங்கள் பேசும் போது முடியை கோதிவிட்டுக் கொண்டே ஓர் பார்வையை உங்கள் மீது படரவிடுவார்கள்.
முன்னிரிமை
குறுஞ்செய்தி அனுப்புவதில் இருந்து, தன் வாழ்வில் அந்நாளில் நடந்த அனைத்து செய்தி மற்றும் விடயங்களை உங்களுடன் தான் முதலில் பகிர்ந்துக் கொள்வார்கள்.
கடன் பிரச்சினையால் 2 மகன்களையும் கொன்றுவிட்டு பனியன் நிறுவன அதிபர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூரை அடுத்த பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைகண்ணன்(வயது 40), பனியன் நிறுவன அதிபர். அவரது மனைவி பிரபாவதி(35), மகன்கள் தனுஷ்(14), அனுஷ்(8). ஒரு தனியார் பள்ளியில் தனுஷ் 8ம் வகுப்பும், அனுஷ் 4ம் வகுப்பும் படித்துவந்தனர்.
தாமரைகண்ணன் சில ஆண்டுகளாக நொச்சிப்பாளையத்தில் தனது நண்பருடன் சேர்ந்து பனியன் நிறுவனம் நடத்திவந்தார். பல்லடம் அருகே 4 மாடி கட்டிடம் கட்டி, 4–வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். கட்டிடத்தின் 3 தளங்களில் பனியன் நிறுவனம் புதிதாக தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்துவந்தார்.
தாமரைகண்ணன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, மகன்களுடன் காரில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். இரவு தாமரைகண்ணனின் கைபேசிக்கு அவருடைய தம்பி சதீஷ் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பிரபாவதியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது அவரும் எடுக்கவில்லை. இதுபற்றி சதீஷ் தனது தந்தை ராஜமாணிக்கத்திடம் கூறினார்.
ராஜமாணிக்கம் நேற்று காலை தாமரைகண்ணனின் வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜமாணிக்கம் அக்கம்பக்கத்தினர் துணையுடன் கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றார். 4வது மாடியில் உள்ள அறையில் தாமரைகண்ணன், பிரபாவதி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தனித்தனி அறைகளில் தனுசும், அனுசும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதைப்பார்த்து ராஜமாணிக்கம் கதறி அழுதார். இதுகுறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.
தாமரைகண்ணன், பிரபாவதி ஆகியோர் தங்களின் வாயையும், கண்ணையும் துணியால் கட்டியிருந்தனர். போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் இருந்த கணினியில் தாமரைகண்ணன், கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் டைப் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
பொலிசார் கூறும்போது, தாமரைகண்ணனுக்கு தொழில் சம்பந்தமாக கடன் பிரச்சினை இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளான அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். முதலில் தனது இரு மகன்களை நைலோன் கயிற்றால் தூக்குப்போட்டு கொலை செய்துவிட்டு, அதன்பிறகு கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது என்றனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் நிகழ்ச்சியின் போது, தீவுத்திடல் அருகே மரப்பாலம் உடைந்து விழுந்ததில், சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.
சென்னை தீவுத்திடலில் பிங்கத்தான் தனியார் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.
தீவுத்திடலில் இருந்து அடையாறு வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தானில் பெண்கள் மட்டுமே பங்குபெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தீவுத்திடலில் கூவம் ஆற்றை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை மரப்பாலம் என்றே அனைவரும் அழைத்து வருகிறார்கள். இந்த பாலம் வழியாக எளிதாக தீவுத்திடலை அடையலாம். இந்நிலையில் மாரத்தானில் பங்கேற்க வந்திருந்த பெண்கள் இந்த மரப்பாலத்தின் வழியாக தீவுத்திடலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரே நேரத்தில் அதிக பெண்கள் பாலத்தில் ஏறி, கடக்க முயற்சித்தனர்.
இதில், திடீரென்று மரப்பாலத்தின் நடுப்பகுதி சரிந்து, உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக பாலத்தில் சிக்கியிருந்த பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கூவம் ஆற்றில் நீர் குறைவான அளவே இருந்ததால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாதை அடைக்கப்பட்டது. இதையடுத்து மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. ஏற்கனவே மரப்பாலத்தின் உறுதித்தன்மையை சோதிக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணியை மேற்கொண்டு புதிய தடுப்பு கட்டைகள் போட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், இத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா கேபா சுவிசேஷ சபைக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா ஸ்ரேசன் வீதி கேபா சுவிசேஷ சபைக்கு பிளாஸ்ரிக் கதிரைகளை கேபா கிறிஸ்த ஆலய போதகரிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் சபை விசுவாசிகளும் கலந்துகொண்டார்கள்.
இன்றைய தினம் (05.06.2016) உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் முத்துமாரி அம்மன் ஆலய வளாகங்களில். சிரமதானம் நடைபெற்றது.
இச் சிரமதானப் பணியில் கிராம மட்ட அமைப்புக்ககளின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்ககள் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தான் தூங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றிலும் மறுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பப்பியுள்ள மறுப்பறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் நான் தூங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுப்பதுடன் அந்த செய்தி முற்றிலும் பொய் என்றும் அறியத்தருகின்றேன்.
கடந்த 02.06.2016அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் (நான்) ஆகிய எங்களின் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக முல்லைத்தீவு வைத்தியசாலை காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளை நான் அங்கிருந்த வைத்தியர் ஒருவருடன் சிறிது நேரம் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை கேட்டுக்கொண்டிருந்ததால் சற்று குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல் போனதால் நான் காணிப்பிரச்சினை என்னவானது? எனக் கேட்டேன். அவ்வாறு நான் கேட்டதற்கு வருந்துகிறேன்.
அத்துடன் ஊடகங்களில் வெளியான அளவிற்கு சபை அதிரும் வகையில் அங்கு எதுவுமே இடம்பெறவில்லை. அங்கிருந்த ஏனைய இணைத்தலைவர்களும் வருகை தந்திருந்தவர்களும் எனக்கான கௌரவத்தை வழங்கினார்கள்.
அத்துடன் சில இணைய ஊடகங்களில் (பா.உ) மஸ்தான் முன்னிலையில் சட்ட விரோத மாடு கடத்தல் என செய்திகளும் வெளிவந்துள்ளன இவைகள் அனைத்தும் முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்திகளாகும் , இவ்வாறான செய்திகள் எனக்கு மன வருத்தத்தையும் அளிக்கிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் எந்த ஊடகமும் என்னை தொடர்புகொண்டு கேட்கவில்லை. மறாக அந்த செய்தியை பிரசுரிப்பதில் மும்முரம் காட்டினார்கள்.
நான் அரசியலுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் என்றாலும் சமூக சேவைகளில் நாங்கள் பழமை வாய்ந்தவர்கள்தான் அதனாலேயே எந்த அரசியல் பின்புலமும் இல்லாத என்னை மக்கள் தேர்ந்தெடுத்தனர், என்றும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்தும் நான் நிறைவேற்றுவேன்.
ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மதிக்கப்படவேண்டியவர்கள். எம்மை சமூகத்தில் அடையாளப்படுத்துவதும் அதனை இல்லாமல் செய்வதும் அவர்களது எழுத்துக்களில் தங்கியுள்ளது.
ஆனாலும் சில அரசியல்வாதிகளின் பின்னுள்ள ஊடக பிச்சை வாங்கிகளால் எழுதப்படும் சில குறிப்புக்களால் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் இனிவரும்காலங்களில் என்மீதான இவ்வாறான பொய்ப்பிரச்சாரம் செய்யும் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் ஊடகவியலாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், நான் அரசியலுக்கு வந்தமை விஸ்தரிக்கப்பட்ட சமூக சேவைக்காகவும்,சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கவும், நேர்மையான அரசியல் செய்யவுமே என இந்த ஊடக மறுப்பறிக்கையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறைவி திரைப்படத்தில் தயாரிப்பாளர்களையும், தமிழ் இன உணர்வாளர்களையும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அசிங்கப்படுத்தியுள்ளார் என அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தனது படைப்பைப் பற்றிப் பேச வேண்டுமென அவர் வேண்டுமென்றே கூட இப்படிச் செய்திருக்கலாம் என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
திரைப்படத்தில் இயக்குநராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் முடங்கிப் போன திரைப்படத்தின் பெயர் மே 17. அதோடு ஒரு காட்சியில் தமிழ் தமிழ் என பேசறவங்களுக்கு சரியான செருப்படி கொடுத்தீங்க என்றதொரு வசனமும் தமிழ் இன உணர்வாளர்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் திரைப்படம் எடுத்துக் கொண்டு தமிழர்களையே கேவலப்படுத்துவதா என அவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
அதோடு எஸ்.ஜே.சூர்யாவின் திரைப்படம் முடங்கிப் போவதற்குக் காரணமாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் இருக்கிறார் என காட்சிகள் உள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இதற்கு முன் இயக்கி வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அவருக்கும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவரான கதிரேசனுக்கும் இடையே பிரச்சனை இருந்தது.
அதை மனதில் வைத்து இந்த இறைவி திரைப்படத்தில் வேண்டுமென்றே காட்சிகளை வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இறைவி விவகாரங்கள் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
இலங்கையை விட்டு இங்கிலாந்து புறப்படும்போது கண்டிப்பாக 2 சதங்கள் விளாச வேண்டும் என்று முடிவெடுத்ததாக இலங்கை வீரர் சந்திமால் கூறியுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சந்திமால் 126 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இருப்பினும் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9ம் திகதி லோட்சில் தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்து சந்திமால் கூறுகையில், இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படும் போது நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அப்போது கண்டிப்பாக 2 சதங்கள் விளாச வேண்டும் என்று நான் சபதம் எடுத்துக் கொண்டேன்.
இந்த முறை இங்கு ஆடுவது சவாலான விடயமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இதற்கு எல்லாம் தயாராக தான் வந்திருக்கிறோம்.
செஸ்டர்-லீ-ஸ்டீர்டில் முதல் நாள் பயிற்சியை தொடங்கும் போது 3 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. இது போன்ற குளிரை தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னால் துடுப்பாட்ட மட்டையை கூட பிடிக்க முடியவில்லை. கடினமான சூழ்நிலையாக இருந்தது.
கடந்த வருடம் காலி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 163 ஓட்டங்கள் எடுத்ததை மறக்க முடியாது. அது போன்று இங்கு செயல்படவேண்டும்.
மேலும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் அபாரமாக பந்துவீசி வருகிறார். அவருக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டியது அவசியமானது என்று கூறியுள்ளார்.
ஜேர்மனியில் நிலவி வரும் மோசமான காலநிலையின் காரணமாக ஒரே நேரத்தில் 80 நபர்கள் மீது மின்னல் தாக்கியதால் முக்கியமான இசை நிகழ்ச்சி ஒன்று அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இப் பெருமழைக்கு இதுவரை 11 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜேர்மனியில் புகழ்பெற்ற Rock am Ring என்ற இசை நிகழ்ச்சி பிராங்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள Mendig என்ற விமான நிலையத்தில் நடைபெற்று வந்துள்ளது.
நேற்று இசை நிகழ்ச்சியின் நிறைவு நாள் என்பதால், சுமார் 92,000 ரசிகர்கள் நிகழ்ச்சியை கண்டுகளிக்க திரண்டுள்ளனர்.
இச்சூழலில் இடி, மின்னலுடன் மழை தொடர அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் தங்குவதற்கு இடம் இன்றி தவித்துள்ளனர். ஒரு சிலர் நிறுத்தப்பட்ட வாகனங்களில் கீழ் தஞ்சம் அடைந்தனர்.
காலநிலை மோசமானதை தொடர்ந்து, திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் மின்னல் தாக்கியுள்ளது.
இதில், 80 ரசிகர்கள் பாதிக்கப்பட்டதுடன், 11 பேர் அவரசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இக்கட்டான நிலையை உணர்ந்த நகராட்சி அதிகாரிகள் இசை நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்து, ரசிகர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் பேசியபோது, ‘இறுதி நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்.
ஏனெனில், நிகழ்ச்சியை விட ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது பேருந்து மோதியதில் மூன்று வாகனங்களும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது, இதில் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் சதாரா நகரில் இருந்து மும்பைக்கு கிளம்பியது. பேருந்து இன்று காலை மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இனோவா மற்றும் ஸ்விப்ட் கார்கள் மீது பயங்கரமாக மோதி மூன்று வாகனங்களும் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 10 பெண்கள், 6 ஆண்கள், 6 மாத குழந்தை என மொத்தம் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2500 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த நான்கு நாட்களாக 6,000 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு இன்று (05.06) கூறியுள்ளது.
இதேவேளை, அதிகளவான குப்பைகள் கோடிகாவத்தை, கொலன்னாவ, மீதொட்டுமுல்லை, சேதுவத்தை, கொகிலவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் காணப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த குப்பைகளை மீட்க்கும் பணிகளுக்காக 100 இற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன்போது, இராணுவம், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு ஆகியன இணைந்து, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.