ஒரு கிராமத்தையே மண்ணில் புதைத்த கொஸ்லாந்தை : இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!

koslanda.jpg

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடத்தில் இதேபோன்றதொரு நாளில் காலை 7.15 க்கு மண் சரிவு ஏற்பட்டது.

இயற்கையின் கோரத் தாண்டவத்தினால், இலங்கை திருநாட்டின் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு, பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை அனைவரது மனதிலும் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தியுள்ளது.

விடியும் பொழுதை மகிழ்வுடன் எதிர்கொள்ள காத்திருந்த மக்களுக்கு, மண்சரிவு உடனிருந்தவர்களையும், உறவுகளையும் மூழ்கடித்து, ஆறாத் துயரத்தை தோற்றுவித்திருந்தது.

இந்த மண்சரிவில் சிக்குண்டு 30 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், மீட்பு பணிகளின் போது 12 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இயற்கைதான் தம்மை வஞ்சித்தது என இளைப்பாற இடம் தேடிய கிராம மக்கள் அங்கும் உரிய வசதிகள் இன்றி, ஒளியற்ற எதிர்காலத்தை நோக்கி கனத்த இதயத்துடன் வாழ்நாட்களை கடத்திவருகின்றனர்.

வயது வேறுபாடின்றி, சிறுவர், முதியோர், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட இந்த அனர்த்தம் ஏற்பட்டு 365 நாட்கள் கடந்துள்ள நிலையில், தாம் கவனிப்பாரற்று இருப்பதாக மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பான வாழ்விடம் தமக்கு எட்டாக் கனியாக காணப்படுவதாகவும், அதனை வழங்குவதாக உறுதியளித்த அதிகாரிகள் இப்போது மௌனம் காப்பதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் மலையக மக்கள், மண்சரிவு, மண்மேடு சரிந்துவிழுதல் போன்ற இயற்கை அனர்த்தங்களால் வருடாந்தோறும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார பெருவிழா!!(படங்கள்)

ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார விழா பண்பாட்டு பேரவைத் தலைவரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருமான திரு.குருபரன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (27.10.2015) அன்று பிரதேச பண்பாட்டு பெருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், வைத்தியகலாநிதி ஜெயகுலராசா, வரலாற்று ஆய்வாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அருணா செல்லதுரை, முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன், கற்சிலைமடு பாடசாலை அதிபர் நாகேந்திரராசா, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி தில்லையம்பலம், இவர்களுடன் கலைஞர்கள், படைப்பாளிகள், பிரதேச செயலக பணியாளர்கள், பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பிரதேசத்தின் மூத்த கலைஞர்களான ஓய்வு பெற்ற அதிபர் தில்லையம்பலம், ஒட்டுசுட்டான் இ.த.க. அதிபர் திருமதி நித்தியகலா, ஒட்டுசுட்டான் தர்ஷன், கூழாமுறிப்பு வினாயகமூர்த்தி, கற்சிலைமடு தயாபரன் என்போர் தகைநிலை சார்ந்தவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

இக் கலை விழாவில் பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 000000000000000001 0000000001 000001 00001 001 01 000000000000000000000011 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 33 34 35 36 37 38 39

விற்பனைக்கு வரும் கடவுச் சொற்கள்!!

 

pasword_selling_002

இணையத்தளங்களில் எந்தவொரு கணக்கினை ஆரம்பிப்பதற்கும் கடவுச் சொற்கள் (Password) அவசியப்படுகின்றன.

இக் கடவுச்சொற்களின் பாதுகாப்பு தன்மை குறைவாக காணப்படுவதனால் அண்மைக்காலங்களில் திருடப்பட்டு தனிநபர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன.

இவற்றினைக் கருத்தில் கொண்ட அமெரிக்காவின் நியூயோர்க்கில் வசிக்கும் 11 வயது மாணவியான Mira Modi என்பவர் உயர் பாதுகாப்புடைய கடவுச்சொற்களை உருவாக்கி அவற்றினை விற்பனை செய்து வருகின்றார்.

உயர் பாதுகாப்புடைய கடவுச் சொற்கள் தேவையானர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு கடவுச்சொற்களும் தலா 2 டொலர்கள் பெறுமதியில் வழங்கி வருகின்றார்.

மேலும் கடவுச்சொற்களை தனது கையினால் எழுதி மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பிவருகின்றார்.

 

படப்பிடிப்பில் 200 பேரைக் காப்பாற்றிய ரஜினி!!

Kabali

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்டமாக மலேசியாவில் படமாகவிருக்கிறது. சென்னையில் முக்கியமான காட்சிகளை பாரமவுண்ட் ஸ்டுடியோவில் படமாக்கினர்.

அப்போது, படத்தின் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக் காட்சியில் பற்றி எரியும் தீயில் சிக்கித் தவிக்கும் மக்களை ரஜினி காப்பாற்றுவதுபோல் படமாக்கியுள்ளனர்.

இந்த சண்டைக் காட்சியில் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த காட்சி மிகவும் அற்புதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக் காட்சி படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

அவமதிப்பு வழக்கில் வைரமுத்து நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Vairamuthu

சென்னை, தி.நகரில் கடந்த மாதம் ஓய்வுப் பெற்ற நீதிபதி கைலாசம் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உள்பட பல நீதிபதிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வுப் பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கி விடுகின்றனர்’ என்று பேசினார்.

இவரது பேச்சு நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வைரமுத்து 4 வாரத்துக்குள் நேரில்வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அஜித் பற்றி எனது பெயரில் அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!!

Karunas

நடிகர் அஜித்குமார் பற்றி நகைச்சுவை நடிகர் கருணாஸ் அவதூறான கருத்துக்களை டுவிட்டரில் பதவு செய்திருப்பதுபோல வட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து நடிகர் கருணாசை பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர்.

அதன்பின்னரே தனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கருணாஸ் இன்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘டுவிட்டர் வலைதளத்தில் எனது பெயரில் தவறான கருத்துக்களை பதிவு செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியபோது..

நடிகர் அஜித்குமாரை வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்றும், எந்த ஒரு உதவியும் கேட்டு அவரது வீட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நான் பதிவு செய்ததுபோல எனது பெயரை பயன்படுத்தி யாரோ சிலர் டுவிட்டரில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் வெங்கட்பிரபு கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது பெயரில் டுவிட்டர் வலைதளம் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒருசில படங்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதன்பின்னர் டுவிட்டரில் எந்தவிதமான கருத்துக்களையும் நான் பதிவு செய்யவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.

இந்நிலையில்தான் எனது பெயரை பயன்படுத்தி இதுபோன்ற தகவல்களை பரவ விட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற அபத்தமான, ஆபத்தான கருத்துக்களை பதிலிடுவது என்பது சரியான செயல் இல்லை.

சில நேரங்களில் அதுபோன்ற கருத்துக்கள் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. நான் மட்டும் இதுபோன்று பாதிக்கப்படவில்லை. பெண்கள் பலரும் சமூக வலைதளங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை பற்றி தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன.

எனவே காவல் துறையினர் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு ராஜபக்சவிடம் நான் 10 லட்சம் ரூபாய் வாங்கி விட்டதாக அவதூறு பரப்பினார்கள்.

ஒருநாள் இரவிலேயே சினிமாவில் நான் இந்த இடத்தை பிடித்து விடவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனது பெயரையும், புகழையும் கெடுப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அவர்கள் யார் என்பதை பொலிசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ சர்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 2015!!

IMG_06761

வவுனியா தோணிக்கல் அண்ணாவீதி ஸ்ரீ சர்வ விநாயகர் ஆலய பாலஸ்தான மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் வரும் 22.11.2015 ஞாற்றுக்கிழமை காலை 8.50-10.00 மணி சுபவேளையில் நடைபெறவுள்ளது.

இக் கும்பாபிஷேக நிகழ்வுகளில் விநாயக பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

IMG_06731

 

வீதிகளை சுத்தம்செய்து வறுமையில் வாழ்ந்த யுவதி அழகு ராணியாகத் தெரிவு!!

Untitled-1

வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார்.

அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

12 13 14 15 16 17 18 19 20 21

வவுனியாவில் நடைபெற்ற “முத்தான வியர்வை” கண்காட்சியும் விற்பனையும்!!(படங்கள்)

வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் “முத்தான வியர்வை” என்னும் தொனிப் பொருளில் தேசிய ரீதியில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக வவுனியாவில் இன்று (28.10) கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது.

உள்ளூர் உற்பத்திகளை காட்சிப்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய ரீதியில் ‘முத்தான வியர்வை’ என்னும் வேலைத்திட்டம் நடைபெற்றுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்திலும் அந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

1 2 3 4 5

9 வயதில் உலகின் பார்வையை ஈர்த்த சம்பவத்திற்கு 52 வயதில் சிகிச்சை பெறும் பெண்மணி!!

Vitnam

வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடி வந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது.

உலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற வியட்நாம் போரில் 1955ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை கம்யூனிச ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும், கம்யூனிச எதிர்ப்பு தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்கா போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன. இதனால் ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக இது பார்க்கப்பட்டது.

போரின் வீரியத்தை உணர்த்தும் இந்தச் சிறுமி ஓடிவந்த காட்சியை படம்பிடித்த உட் என்பவருக்கு புகைப்படத்துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

போர் முடிந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நாபாம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிம் புக்குக்கு (52) இத்தனை காலமாக அந்தத் தழும்புகளைப் போக்கவோ, வலியை குறைக்கவோ தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை.

இந்நிலையில், கனடா நாட்டில் தனது கணவனோடு தற்போது வசித்து வரும், கிம் புக்குக்கு இலவசமாக லேசர் சிகிச்சையளிக்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகர மருத்துவர் முன்வந்துள்ளார்.

நாபாமின் தாக்கத்தால் கிம் புக்குக்கு பொதுவான அளவுள்ள தோலைக்காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாகியுள்ளது. இவரைப் பரிசோதித்த மருத்துவர், ‘கிம்முக்கு இருப்பதில் பாதி வலி இருந்திருந்தால் கூட யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள 1972ம் ஆண்டு ஜூன் 8ம் திகதி தொடங்கிய கிம்மின் ஓட்டம் இன்னும் பத்து மாதங்களில் நிற்கும் என இந்த மருத்துவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இறந்த பின்னரும் வருமானம் ஈட்டும் மைக்கல் ஜக்சன்!!

Michal

இறந்த பிறகும் கூட தொடர்ந்து சம்பாதித்துக் கொட்டுகிறார் மறைந்த பொப் இசை மன்னன் மைக்கல் ஜக்சன். மரணமடைந்த பிரபலங்கள் வரிசையில் அதிகம் சம்பாதிப்பது மைக்கல் ஜக்சன்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் மைக்கல் ஜாக்சன் 75 மில்லியன் பவுண்கள் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது. கிட்டத்தட்ட 30 வருடம் பொப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மைக்கல் ஜக்சன் மொத்தமாக 7000 கோடி வரை சம்பாதித்திருந்தார்.

ஆனால் அவரது மறைவுக்குப் பின்னரும் கூட அவரது வருமானம் குறையாமல் சிறப்பாகவே உள்ளது. அவரது மறைவின் பின்னர் 2009ம் ஆண்டு முதல் இதுவரை கிட்டத்தட்ட 6500 கோடியை அவர் சம்பாதித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் வரிசையில் மட்டுமல்லாமல் உயிருடன் உள்ள கலைஞர்களுக்கும் சரியான போட்டியாக இருக்கிறார் மைக்கல் ஜக்சன்.

பளையில் 5 மாணவிகள் துஷ்பிரயோகம் : ஒருவர் விளக்கமறியலில்!!

Abuse

பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை – உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுத்துறை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் பளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கடந்த 26ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் பாடசாலை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்த தொண்டர் ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.

10 வருடங்களின் பின் ஒஸ்ரியா : இலங்கை விமான சேவை!!

Aus

10 வருடங்களின் பின்னர் ஒஸ்ரியா மற்றும் இலங்கைக்கு இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி வியன்னா நகரில் இருந்து விமானம் ஒன்று இன்று காலை 07.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விமானத்தில் 125 பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

முதற் கட்டமாக வாரத்திற்கு ஒரு விமானம் வியன்னாவில் இருந்து கட்டுநாயக்கவுக்கும் கட்டுநாயக்கவில் இருந்து வியன்னாவுக்கும் பயணிக்கவுள்ளது.

மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்தில் மூன்று தடவைகள் விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒஸ்ரியா விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்து!!(படங்கள்)

Acc

வவுனியா A9 வீதி புளியங்குளம் பகுதியில் நேற்று (27.10) மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. A9 வீதியால் வேகமாகச் சென்ற கண்டர் ரக வாகனம் ஒன்று வீதியில் பயணித்த மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததுடன் பலத்த சேதங்களுக்கும் உள்ளானது. மேலும் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

A9 வீதியில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 7 8

வவுனியாவில் கடை உடைத்துக் கொள்ளை : திருடனை கண்டுபிடிக்க பொலிஸிற்கு உதவிய சிறுவன்!!

Capture

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது.

இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது. பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை நாடினர் பொலிசார்.

அவனது தாயும், தந்தையும் பேசமாட்டாதவர்கள் என்பதால் சைகை மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான் கிருசாந்தன். இதனால் அவன் பொலிஸ் விசாரணைக்கு பெரிதும் உதவினான். இதனையடுத்து வவுனியா பொலிசார் சிறுவனை பாராட்டியதுடன் இச்சிறுவனுக்கு விருதுக்கு பரிந்துரை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிருசாந்தன்..

மரவேலை செய்யும் பட்டறையுடன் கூடிய தங்கள் வீட்டுக்கு வந்த வாய்பேசமாட்டாத இளைஞன் ஒருவன் தனது தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அதன்பின் அவனது செயற்பாடுகளில் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதினால் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து தேடிய போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள ஒரு கடை ஒன்றின் பின்புறமாக குறித்த இளைஞன் படுத்திருந்துள்ளான் என தெரிவித்த சிறுவன் விடிந்ததும் பார்த்த போது அவன் படுத்திருந்த கடைக்கு அருகிலுள்ள கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது என தெரிவித்தான்.

-உதயன்-

வவுனியாவில் நடைபெற்ற 141ஆவது உலக அஞ்சல் தினம்!!(படங்கள்)

141ஆவது உலக அஞ்சல் தினம் நேற்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் அஞ்சல் மா அதிபதி டி.எல்.பி. றோகன அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பணியாளர்களின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வுகள், கடந்த காலத்தில் அஞ்சலகத்திற்கு வருமானம் பெற்றுக் கொடுத்த ஊழியர்களுக்கான விருதுகள், சிறந்த அஞ்சல் அலுவலகங்கள் என தெரிவு செய்யப்பட்டு சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்ட ஊழியர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, பிரதி அஞ்சல் மா அதிபதி நிருவாகம், பிரதம கணக்காளர் கே.பி. வசந்ததிலக வடமாகாண பிரதி அதிபாரக இருந்த வி.குமரகுரு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அத்தியட்சகர்கள், வடமாகாணத்தில் பணியாற்றும் அஞ்சலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5 6 7 8 9 10