துருக்கியில் அகதிகள் முகாமில் இருந்த எட்டு சிரிய நாட்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
துருக்கி நாட்டின் தெற்கு காஜியண்டெப் மாகாணத்திலுள்ள நிஜிப் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. சிரிய எல்லைப்பகுதியில் இந்த முகாம் உள்ளது. இந்த முகாமில் 10, 800 பேர் தங்கியிருந்தனர்.
இந்த முகாமில் இருந்த எட்டு சிரிய நாட்டு சிறுமிகளை அந்த முகாமில் வேலை செய்த 29 ஊழியர் எர்டல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளமை கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு துருக்கி நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் குற்றவாளிக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் 289 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுற்றாடல் தினம் இன்றாகும். வனவிலங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பதே இம்முறை உலக சுற்றாடல் தினத்தின் தொனிப் பொருளாகும்.
1972 ஆம் ஆண்டு சுவீடனில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இன்றைய நாள் உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) முற்பகல் மாத்தளை எட்வட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சுற்றாடல் வாரத்தை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சூழல் மற்றும் மஹாவலி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ஏ.ஆர்.ஆர்.ரூபசிங்ஹ குறிப்பிட்டார்.
வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் இன்று (04.06.2016 காலை 8.00 மணியளவில் பண்டாரிக்குளம் கிராம அலுவலர் ஆர்.சுஜனித்தா தலைமையில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி நடைபெற்றது.
இச் சிரமதானப்பணியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, ஸ்ரேயா போன்ற கதாநாயகிகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போடுகிறார்கள். இதனால் அவர்களின் பெற்றோர்கள் தவிப்பில் உள்ளனர்.
சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகிறார்கள். பிரியாமணியும், சமந்தாவும் தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.
பிரியாமணி தொழில் அதிபரை மணக்கிறார். இவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்தது. சமந்தா இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
ஆனால் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா உள்ளிட்ட சில கதாநாயகிகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டுக் கொண்டு வருகிறார்கள். இவர்களிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தால், பிடித்த மாப்பிள்ளை இன்னும் கிடைக்கவில்லை, திருமணத்துக்கான நேரம் வரவில்லை என்றெல்லாம் காரணங்கள் சொல்லி நழுவுகிறார்கள்.
நயன்தாராவுக்கு 31 வயதாகின்றது. இவரது இரண்டு காதல்களும் தோல்வியில் முடிந்தன. முதலில் சிம்புவை காதலித்து பிறகு அவருடன் சண்டை போட்டு பிரிந்தார். பின்னர் பிரபுதேவாவுடன் நெருக்கமாகி அவரை மணப்பதற்காக மதமும் மாறி சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். அந்த காதலும் முறிந்து இப்போது முழு நேரமும் சினிமாவே கதி என்று இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் மூன்றாவது காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன.
அனுஷ்காவுக்கு 34 வயதாகின்றது. அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என்று சவாலான வேடங்களில் நடித்து சினிமாவின் உச்சத்தை தொட்டுவிட்டார். கடந்த வருடமே திருமணத்துக்கு அவர் தயாராகிவிட்டதாக தகவல்கள் வந்தன. இதுபற்றி கேட்டால் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டி உள்ளது. திருமணத்துக்கு இன்னும் நேரம் வரவில்லை என்கிறார்.
காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகவர்வாலுக்கு இரண்டு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. அடுத்து காஜலுக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை. இன்னும் காலம் இருக்கிறது என்று சொல்லி விட்டு ஒதுங்குகிறார்.
திரிஷாவுக்கு 33 வயது. இவருக்கும் பட அதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள். ஆனால் கடைசி நேரம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.
திரிஷா இப்போது சினிமாவில் மீண்டும் பிஸியாகிவிட்டார். திருமணம் என்பது சொந்த விஷயம். அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லி விட்டு அவரும் ஒதுங்குகிறார்.
தமிழ், தெலுங்கு படங்களில் ஓஹோ என்று இருந்த ஸ்ரேயாவுக்கு இப்போது படங்கள் இல்லை. 33 வயதாகும் அவரிடம் எப்போது உங்கள் திருமணம் என்று கேட்டால் நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்கிறார்.
திருமணம் செய்து கொண்டாலோ, அல்லது அதுபற்றி பேசினாலோ படவாய்ப்புகள் குறைந்து சினிமா வாழ்க்கை பாதித்து விடும் என்று பயந்தே அதனை இவர்கள் தவிர்க்கிறார்கள். தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை முடித்துத் தருவது வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டுத்தான் இவர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள்.
ஆனால் இந்த நடிகைகளின் பெற்றோர்கள்தான் மகள்களுக்கு திருமண வயது தாண்டுகிறதே என்ற தவிப்பில் இருக்கிறார்கள்.
பிரான்ஸில் கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் நகரின் செயின் ஆற்றின் நீர்மட்டம் அதன் சாதாரண நீர்மட்டத்தைக் காட்டிலும் 6 மீட்டர் வரை உயர்வடைந்துள்ளதுடன் இந்த நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.
மத்திய ஐரோப்பாவில் நிலவும் மழையுடனான வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸில் இருவரும், ஜெர்மனியின் தென் பகுதியில் 10 பேரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாரிஸின் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 20,000 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை ஏற்பட்ட சேதங்களின் மதிப்பீடு 600 மில்லியன் யூரோவையும் கடந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலும், பாரிஸிலுள்ள உலக பிரசித்திபெற்ற இரண்டு அருங்காட்சியங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விலைமதிப்பற்ற கலைப்படைப்புக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலையால் பெல்ஜியம்,போலந்து ஆகிய நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா. ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஹிராடா, கடந்த ஆண்டு ‘செராமிக்’ பிரிவில் தனது இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இதற்கான பட்டம் அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், உலகிலேயே மிக அதிகமான வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதற்கான கின்னஸ் விருது ஹிராடாவுக்கு நேற்று வழங்கப்பட்டதாக ஜப்பான் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விருது குறித்து ஹிராடா, ‘100 வயது வரை வாழ்வதே இலட்சியம். உடல் தகுதி இருக்கும்பட்சத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்காக கல்லூரிக்குச் செல்வேன்,’ என தெரிவித்துள்ளார்.
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் விமானப்படையில் இவர் பணியாற்றியுள்ளார்.
ஜப்பான் நாட்டில் 100 வயதுக்கும் அதிகமாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100 வயதுக்கும் அதிகமான 59,000 பேர் ஜப்பானில் வசித்து வருகின்றனர்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள கிரீட் கடற்கரை அருகே சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில், நான்கு பேர் பலியாகியுள்ளதோடு 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு, ஹெலிகொப்டர்களையும் கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
படகில் எத்தனை அகதிகள் பயணம் செய்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர், எங்கு செல்ல இருந்தனர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.
லிபியாவில்
இதற்கிடையில், லிபியா கடற்கரையில், 104 பேரின் சடலம் ஒதுங்கியொள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. அளவுக்கதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டதால், சுமை தாங்காமல் படகு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூபா, தாரா மோடி குல்பர்க் சமூகத்தில் வாழும் ஒரு பார்சி ஜோடி, கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது தங்கள் குழந்தை அசாரை இழந்ததுள்ளனர்.
கலவரத்தில் அசார் காணமல் போகும் போது அவருக்கு வயது 14, சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்தும், இதுவரை அசாரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் சட்டத்தின் படி குறிப்பிட்ட ஆண்டுகளில் காணமல் போனோர் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக கருத வேண்டும்.
ஆனால், அசாரின் பெற்றோர் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை வைத்துள்ளனர், மேலும், விருதுபெற்ற பர்ஜானியா என்னும் இந்தி படத்தை உத்வேகமாக வைத்து, நம்பிக்கை இழக்காமல் தனது மகனை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அசாரின் தாய் ரூபா மோடி கூறுகையில், எப்பொழுதெல்லாம் என் செல் போனுக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வருகின்றதோ, அப்பொழுது எனக்கு ஒரு நம்பிக்கை வரும், யாரோ என் மகனை குறித்து தகவல் தர அழைக்கின்றார்கள் என எண்ணுவேன்.
பர்ஜானியா படத்தில்,ஒரு காணமல் போன பையன் குறித்த போஸ்டரில், தொடர்புகொள்ள செல் போன் எண் கொடுத்திருப்பர்கள், பல பேர் குறித்த எண்ணுக்கு அழைத்து, அவர்களின் மகனை கண்டதாக தகவல் தெரிவிப்பார்கள், அது ஒரு நம்பிக்கையை எற்படுத்தும்.
சமீபத்தில், கேரளா மற்றும் டெல்லியில் இருந்து சிலர் அழைப்பு விடுத்து அசாரை போல் ஒருவரை கண்டதாக தகவல் தெரிவித்தனர், அது எங்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது. எங்கள் மகன் கிடைக்கும் நாள் வரை, எங்களின் தேடுதல் தொடரும், இல்லையெனில் எங்கள் இறுதிமூச்சி இருக்கும் வரை தேடுவோம் என ரூபா மோடி கூறியுள்ளார்.
மடவளை மதீனா மத்திய கல்லூரிக்கு முன்னால் மஞ்சள் கோட்டுக் கடவையில் ஆசிரியை ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளது.
பாதசாரிகளின் நன்மை கருதி மஞ்சள் கடவைகள் போடப்பட்டுள்ளன. இதில் பாதசாரிகள் எவ்வளவு கவனமாக கடந்து சென்றாலும் வாகனத்தை செலுத்தும் சாரதிகளின் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுவது உண்டு.
கடந்த 2 ஆம் திகதி மடவளை மதீனா மத்திய கல்லூரி முன் உள்ள மஞ்சள் கோட்டுக் கடவையில் ஒரு ஆசிரியை பல முறை இரு பக்கமும் பார்த்து பாதையைக் கடக்க முயற்சிக்கிறார்.
தன்னுடன் வந்த சக ஆசிரியை கடந்து செல்லும் போது அவர் பின்னே அவரும் கடந்து செள்று பாதித்தூரத்திற்கு மேல் சென்று விட்டார்.
ஆனால் அச்சமயம் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து அவர் மீது மோதும் காட்சி அருகில் பொருத்த்பட்டிருந்த ஒரு சி.சி.டி.வி ல் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை கண்டி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
´நள்ளிரவில் என் தலையை தடவி, தன் மகன் வீடு திரும்பி விட்டான் என்பது தனது கனவல்ல, உண்மை தான் என்பதை என் தாய் உறுதிபடுத்திக் கொள்வார்´´ தனது இயல்பான தொனியில் நிசாரூதின் கூறிய வாக்கியம் இது.
தன் வாழ்க்கையில் 23 வருடங்களை சிறையில் கழித்து விட்டு, இந்திய தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள குல்பர்கா நகரில் உள்ள தன் வீட்டுக்கு நிசாரூதின் திரும்பியுள்ளார் என்பதனை அறியும் வரையில், அவரின் வாக்கியத்தில் உள்ள ஆழமான உணர்ச்சியை புரிந்து கொள்வது சிரமமாகும்.
யாரையும் காயப்படுத்தியதாலோ, ஏமாற்றியதாலோ அல்லது கொலை செய்த காரணத்தாலோ அவர் சிறையில் காலம் கழிக்கவில்லை. 1994-ஆம் ஆண்டு ஹைதராபாத் போலீசார் குற்றம்சாட்டியது போல், ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிலையம் மீதோ அல்லது ஆந்திர பிரதேச விரைவு ரயில் மீதோ அவர் நிச்சயமாக வெடிகுண்டு வீசவில்லை.
நிசார் மற்றும் அவரின் மூத்த சகோதரர் ஜாஹிரூதின் மற்றும் மேலும் இருவர் கூறிய ஒப்புதல் வாக்குமூலங்களை சார்ந்தே போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதால், உச்சநீதிமன்றம் அவரை சிறையில் இருந்து விடுவிக்க கடந்த மாதம் உத்தரவிட்டது. அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்டவையாகும்.
´´நிசாரின் மீது சுமத்தப்பட்ட குற்றமும், வழங்கப்பட்ட தண்டனையும் முற்றிலும் சட்டரீதியான் வலுவற்றவை ´´ என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் தங்களின் உத்தரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எ ஃ ப். எம். கலி ஃ புல்லா மற்றும் யூ. யு. லலித் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
´´வாக்கு மூல சாட்சியத்துக்கு ஆதாரமளிப்பது போல் எந்த ஆவணமும் கையிருப்பில் இல்லாத நிலையில், உடன் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து மட்டும் ஜாஹீரின் மீது குற்றச்சாட்டும், தண்டனையும் வழங்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது´´ எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுருங்கக் கூறுவதென்றால், போலீசாரால் கட்டமைக்கப்பட்டுள்ள ஜோடனை வழக்கில் நிசார் மற்றும் ஜாஹீர் சிக்க வைக்கப்பட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
ஆனால், என்ன நடந்ததென்று தனது இயல்பான, உண்மையான தொனியில் நிசார் விவரிக்கிறார்.
1994-ஆம் ஆண்டு, ஜனவரி 15-ஆம் தேதியன்று தான் படிக்கும் மருந்தியல் கல்லூரிக்கு நிசார் கிளம்பினார். அதற்கடுத்த வாரம், அவருக்கு கல்லூரி தேர்வு இருந்தது. இந்நிலையில், அவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அவர் பிபிசி ஹிந்தி சேவையிடம் பேசுகையில், ´´43 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்த நான், இறுதியாக ஒரு மாஜிஸ்டிரேட் நீதிபதியின் முன் ஆஜர் செய்யப்பட்டேன். என்னைத் தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்” என்றார்.
“நான் என்ன தவறு செய்தேன் என்று அறிந்து கொள்ள அவர்களிடம் கெஞ்சியும், வேண்டியும் கேட்டுக் கொண்டேன்”.
“ஜோடிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் என் கையெழுத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர்´´ என்று நிசார் கூறினார்.
´´அவ்வாறு கையெழுத்து வாங்கியது எனது விடுதலைக்காக என்று என்னிடம் அவர்கள் தெரிவித்தனர். ´தடா´ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதியாக சிறையில் நுழைந்த போது தான், என்ன குற்றத்தின் பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிந்து கொண்டேன்.
இரண்டு வருடங்களுக்கு பின்னர், உள்ளூர் தடா நீதிமன்றம் தடா கைதிகள் தொடர்பான விதிகள் எனக்கு பொருந்தாது என்று கூறினர்´´ என்று நிசார் மேலும் தெரிவித்தார்.
நிசாரின் வழக்கறிஞர் ஷதான் ஃபர்சாத் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ´´பொதுவாக, ஒரு போலீஸ் அதிகாரி முன்னர் தெரிவிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது.
ஆனால், தடா சட்டத்தின் கீழ் போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தர வரிசையில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி முன்னர் தெரிவிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆனால், இந்த வழக்கில் ஒரு மூத்த அதிகாரியின் அனுமதியின்றி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அப்போதே இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிபிஐ அமைப்பு, ரயில்வே வழக்கில் அளிக்கப்பட அதே ஒப்புதல் வாக்குமூலத்தை, ஆஜ்மீர் தடா நீதிமன்றத்திலும் சமர்பித்தது. இதனால், நிசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது´´ என்று நிசாரின் வழக்கறிஞர் ஷதான் ஃபர்சாத் தெரிவித்தார்.
´´எனக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்ததால், எனக்கு ஜாமீன் கிடைத்தது. எங்களுக்கு உச்சநீதிமன்றம் செல்லவும், இறுதியாக விடுதலையாகவும் 12 ஆண்டுகள் ஆனது´´ என்று ஜாஹிர் கூறினார்.
தனது விடுதலையின் போது எழுந்த மன உணர்ச்சிகள் குறித்து கருத்து தெரிவித்த நிசார், ´´சிறையிலுருந்து வெளியே வந்த அன்று, விடுதலையானதாகவே என்னால் நம்ப முடியவில்லை.
பொதுவாக, சிறையில் இருந்து ஒருவர் விடுதலையானால் ஒரு விதமான மகிழ்ச்சியான சூழல் நிலவும். நான் விடுதலை செய்யப்பட்ட போது, என்னால் எந்த மகிழ்ச்சியையும் உணர முடியவில்லை. வீடு திரும்பிய பின்னர் தான், நான் விடுதலையடைந்ததாக உணர்ந்தேன். ஆனால், எல்லாம் மாறிவிட்டது. என் சொந்த ஊரில், என்னை ஒரு அந்நியனாக உணர்ந்தேன்.
என் மருமகள்களையும், மருமகன்களையும் எனக்கு முறையாக அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. என் சகோதரிகளையும், சகோதரர்களையும் எனக்கு அடையாளம் தெரிந்தது. இத்தனை ஆண்டுகள் எனக்காக போராடி வந்த என் தந்தை மறைந்து விட்டார்.
என் வீட்டை சுற்றிலும் இருந்த எல்லாம் மாறி விட்டது. ஆனால், உடைந்த சுவர்கள் மற்றும் ஒழுகும் கூரையுடன் இருந்த என் வீட்டின் நிலை மட்டும் மாறவில்லை.
என்னை சுற்றியிருந்த உலகம் தன் போக்கில் நகர்ந்து விட்டது´´ என உணர்ச்சி ததும்ப நிசார் தெரிவித்தார்.
தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்ட நிசார் இனி என்ன செய்வது என்று ஆழமாக சிந்திக்கவில்லை. ´´20 வயதில் என்னை கைது செய்தனர். 43 வயதில் ஒருவர் தன் வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றால், ஏதோ ஒரு விதமான வாழ்க்கையை தான் எதிர்பார்க்க முடியும்.´´ என்று கூறிய நிசாருக்கு ஒரு விருப்பம் உள்ளது.
´´எனது அம்மா தனது மகனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலை மற்ற தாய்களுக்கு வரக்கூடாது. சிறையில் இருக்கும் பலரும் அழுகி விட்டனர், இன்னமும் பலர் அழுகிக் கொண்டிருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?
சிறையில் இருப்பவர்கள் பாதிப்படைந்தால், அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கக் வேண்டும்.
எனது ஒரே விருப்பம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான். இந்த செய்தி ஆட்சியாளர்களின் கவனத்துக்கு செல்ல வேண்டும்.´´ என்று நிசார் வேண்டுகோள் விடுத்தார்.
தீங்கிழைக்கும் வழக்கு விசாரணைகளுக்கு ஏதாவது தீர்வு உள்ளதா? இது தவறான வழக்கு விசாரணையல்ல; சரியாக சொல்வதானால், தீங்கிழைக்கும் வழக்கு விசாரணை. ஏனென்றால், நிசாரின் ஒப்புதல் வாக்குமூலம் கூட உண்மையானது இல்லை.
நிசார் மற்றும் ஜாஹீரின் வாழ்க்கை சீரழிந்ததற்கு இழப்பீடு பெற வாய்ப்புண்டு. ஆனால், அது ஒரு மற்றொரு நீண்ட பயணமாக அமையக்கூடும்.
எம்மில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான்.
காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது.
இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.
வவுனியா நெடுங்கேணி ஒலுமடுவில் கடந்த 27.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி வவுனியா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ள போதிலும் தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல மறுத்து வருவதுடன் எனக்கு பாடசாலை செல்ல பயமாக இருக்கிறது, அவ்வாறு நான் பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் எனது பாடசாலையின் முன் உள்ள தேநீர் கடையை அங்கிருந்து அகற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அவ்வூர் மக்கள்,
2009 ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின் நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது துஸ்பிரயோக சம்பவமாக இது பதியப்பட்டுள்ளது. யுத்தத்தின் காரணமாக மோசமாக பாதிப்பிற்குள்ளான எமது ஊரில் அதிகாரிகளுடன் கதைப்பதற்கே எமது மக்கள் பயப்படுகிறார்கள்.
இதன் காரணமாக ஒலுமடு கிராம மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருப்பதாகவும் அச்சத்துடன் தெரிவிக்கும் மக்கள் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கருதப்படும் தேநீர்க்கடையானது தொடர்ந்தும் சட்டத்துக்கு புறம்பான லேகியம் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
துஸ்பிரயோகம் மேற்கொண்டவராக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்நிலைப்படுத்த திட்டங்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
ஒருசில அதிகாரிகளின் நேர்மையற்ற நடவடிக்கை காரணமாக நல்ல அதிகாரிகளையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு எங்கள் பெண் பிள்ளைகள் நிம்மதியாக பாடசாலை செல்ல வேண்டுமானால் பாடசாலையின் முன் அமைந்துள்ள தேநீர்க்கடை மூடப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.
பொலன்னறுவை-கங்கயாய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனது மகனின் வீட்டிற்கு சென்றிருந்த போதே குறித்த பெண், யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நபர் ஒருவர் தனது வளர்ப்பு தாயை திருமணம் செய்துக் கொள்ளப்போவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸின் டாபோ (Dabo) எனும் சிறு கிராமத்தை சேர்ந்த சேர்ந்த எரிக் ஹோல்டர் (Eric Holder Age-45) என்ற நபர் தனது தந்தையின் 2வது மனைவியான எலிசபெத் (Elisabeth Age-48) என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
திருமணத்திற்காக பல மாதங்களாக அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த எரிக் தற்போது மணமுடிக்க அனுமதியை பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு யூன் மாதம் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தில், எலிசெபத்தின் கணவரும், எரிக் ஹொல்டரின் தந்தையுமான ஸ்டீவனும் (Steven) பங்கேற்கவுள்ளார்.
மேலும் இவர்கள் இருவரும் இரத்த உறவுகள் இல்லை என்பதால் பிரான்ஸ் சட்டத்தின் கீழ் இந்த திருமணம் செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து எலிசபத் கூறுகையில், இது எங்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான தருணம் என்றும் எங்களை போல் உள்ள மற்ற தம்பதியினருக்கு எங்களது திருமணம் ஒரு எடுத்துகாட்டாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு வை.எம்.சி.ஏ யின்(YMCA) அனுசரனையுடன் வவுனியா வை.எம்.சி.ஏ யில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்வு வவுனியா வை.எம்.சி.ஏ யின் தலைவர் திரு பாரதி ஆனந்தம் தலைமையில் நேற்று (03.06.2016) வவுனியா வை.எம்.சி.ஏ யில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் (YMCA of Hong Kong Polytechnic University Team) கொங் கொங் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் இணைந்து வவுனியா வை.எம்.சி.ஏ யின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் வை.எம்.சி.ஏ யின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மிகவும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் பங்குகொண்டு பயனடைந்தார்கள்.