இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல பகுதிகளில் பாரிய நிலநடுக்கம்!!

Earthquake

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, வடஇந்தியாவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இருந்து சுமார் 256 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது, இந்துகுஷ் மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதுதொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

கட்டிடங்கள் குலுங்கியதை தொடர்ந்து அவர்கள் வேகமாக கட்டிங்களை விட்டு தெருவிற்கு ஓடிவந்துள்ளனர். பாகிஸ்தானில் சேதம் குறித்தான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பாகிஸ்தானிலும் மின்சார மற்றும் தொலைதொடர்பு சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதுடெல்லி, குர்கான், அரியானா, சண்டிகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து அச்சமடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர், ​மேலும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஒருசில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், சண்டிகார், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி சேவை தடைபட்டுள்ளதடன் மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் 2005 ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 86,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான், இந்தியா, நிலநடுக்கம், பாகிஸ்தான்

லிபியா கடற்கரையில் 40 சடலங்கள் : தொடரும் அகதிகளின் சோகம்!!

libiya

சஹாரா துணைகண்டத்தில் உள்ள ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 70 அகதிகளை ஏற்றிவந்த படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் நேற்று கவிழ்ந்து, மூழ்கியுள்ளது.

குளிர்ந்த கடல்நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 40 பேரின் சடலங்கள், லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் கிழக்கேயுள்ள ஸ்லிட்டன், கோம்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செம்பிறை தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மீதமுள்ள 30 பேரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

Court

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு தனியார் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

மரபணு அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கினை எதிர்வரும் 09ம் திகதி வரை ஒத்திவைப்பதாக யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கிற்கு மாணவி வித்தியாவின் தாயார் மற்றும் சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!

SL

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் மிலிந்த சிறிவர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதில் இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் கே.சி. ப்ரதாவைடே 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் இரண்டாவது இன்னிங்ஸில் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணி 72 ஓட்டங்களால் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக சிறிவர்தனவும் தொடரின் நாயகனாக ரங்கன ஹேரத்தும் தெரிவுசெய்யப்பட்டனர்.

கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழா!!(படங்கள்)

கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய 20 ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் 24.10.2015 சனிக்கிழமை கண்டி திருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

அகில இலங்கை ரீதியில் கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய ஆக்க இலக்கியப் போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். தர்மினி பத்மநாதன் கட்டுரைப் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் , நாடகப் பிரதியாக்கப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.

இன் நிகழ்வில் கல்வி ராஜாங்க அமைசர். ராதாகிருஸ்ணன், உடுவை தில்லைநடராஜா, பேரா.துறை மனோகரன், கலாபூசணம் அகிலம் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1896934_1124795960905286_5772397295681228237_n 12177438_1124976500887232_1895779330_o 12177977_1124976697553879_1593498080_n 12178108_1124977010887181_1279866381_n 12182297_1124976927553856_1960802955_n 12185651_1124976977553851_1340993188_o 12186078_1124976920887190_576635001_o 12188427_1124976950887187_436832055_n 12190395_1124976287553920_419963095_o IMAG8687

வவுனியா தமிழ் மாமன்றத்தின் இரண்டாவது நிர்வாக சபை தெரிவு!!(படங்கள்)

தமிழ் மாமன்றத்தின் இரண்டாவது நிர்வாக சபையை தெரிவு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் நேற்று (25.10.2015) மாலை 3.30 மணிக்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் இடம் பெற்றது.

முதலாவது நிர்வாக சபை முழுமையாக கலைக்கப்பட்டு, புதிய இரண்டாவது நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.
அதனடிப்படையில்,

மேற்சபையின் தற்காலிக உறுப்பினராக முன்னாள் தலைவர் இ.இராஜேஸ்வரன் அவர்களும்,

தலைவராக சு.கிருபானந்தகுமாரன் அவர்களும்,

உபதலைவராக சு.வினோத் அவர்களும்,

இணைச்செயலாளர்களாக ஜெசிதா ஆனந்தமூர்த்தி மற்றும் சி.துஷாரன் ஆகியோரும்,

துணைக்குழுவுக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக சபைக் கட்டமைப்புடன் தமிழ் மாமன்றதின் ஆக்கபூர்வமான பணிகளை முன்னரை விட மிகச் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளதாக நிர்வாகசபையினர் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வவுனியாவில் மட்டுமன்றி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் தமிழ் மற்றும் கலை இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் மாமன்றம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாமன்றத்தின் சேவை மென்மேலும் வளர வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1 2 3 4 5

 

நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர்!!

pothai

ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஆய்வின்படி போதைவஸ்துக்கு ஆட்பட்டுள்ள ஒரு லட்சம் பேரில் 60 ஆயிரம் பேர் இளைஞர்களாவர்.

இந்தநிலையில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் நாட்டின் நீதியில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பாரியளவில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போதைவஸ்து பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் திட்டம் தோல்வி கண்டுள்ளதாக ரட்நாயக்க ஊடகம் ஒன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வாழைப்பழத்திலிருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!

Banana

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வாழைப்பழத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துவ குணம் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழக நிபுணர்கள் வாழைப்பழத்தில் பனானா லெக்டின் அல்லது பான் லெக் எனப்படும் புரோட்டீன்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.

இவற்றை பகுப்பாய்வு செய்து பிரிக்கும்போது எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, சளிக்காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய மருந்துக்களை தயாரித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் எய்ட்ஸ் நோயாளிகளின் உடலில் இதை செலுத்திய போது பக்கவிளைவுகள் ஏற்பட்டன.

தற்போது இவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு எலிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அதில் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே இதை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஹம்பாந்தோட்டையில் பெய்த சிவப்பு மழை!!

Red rain

ஹம்பாந்தோட்டை – அம்பலந்தோட்டை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் மழை பெய்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வழித்தவறி பாகிஸ்தான் சென்ற சிறுமி இன்று நாடு திரும்புகிறார்!!

Pak

15 ஆண்டுகளுக்கு முன்பு வழித்தவறி பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண் கீதா, இன்று டெல்லி திரும்புகிறார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற ரயிலின் ஒரு பெட்டியில் ஏறி பாகிஸ்தான் சென்ற அவர், நாகூர் ரயில் நிலையத்தில் அழுது கொண்டிருந்தார்.

அப்போது 9 வயதான சிறுமி கீதாவுக்கு பேச முடியாது. காது கேட்கும் திறனும் கிடையாது. இதனால் சிறுமியால் தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவரை மீட்ட அந்நாட்டு பொலிசார் அவரிடம் இருந்து எந்த தகவலும் பெற முடியாததால், கராச்சியில் உள்ள எத்தி என்ற தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில் இஸ்லமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் கீதாவின் உறவினர்கள், பீகாரில் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று நாடு திரும்பும் சிறுமி கீதாவை வரவேற்க அவரது சொந்த கிராமம் தயாராக உள்ளது.

லண்டன் மாநகரை அணுகுண்டு மூலம் அழிக்க திட்டமிட்ட ரஷ்யா!!

London

இங்கிலாந்தை சேர்ந்த மறைந்த அணுசக்தி துறை ஒருவரின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் லண்டன் மீது சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட ரஷ்யா திட்டமிட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1954ம் ஆண்டு சக்தி வாய்ந்த 4 அல்லது 5 அணு குண்டுகளை லண்டன் நகரத்தின் முக்கிய பகுதிகள் மீது போட ரஷ்யா திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா திட்டமிட்டபடி செயல்படுத்தி இருந்தால் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியில் இருந்து 3 மைல்கள் தூரம் வரை ஒட்டுமொத்தமாக 30 மைல்கள் சாம்பலாக மாறியிருக்கும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணு குண்டுகளை விட அவை சக்தி வாய்ந்தது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த தென்னாபிரிக்க அணி!!

SA

தென்னாபிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு..

* 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2வது முறையாகும். அரிய நிகழ்வுகளில் ஒன்றான இத்தகைய அளப்பரிய சாதனையை இதற்கு முன்பும் தென்னாபிரிக்கா தான் செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்களில் அம்லா (153 ரன்), ரோசவ் (128 ரன்), டிவில்லியர்ஸ் (149 ரன்) சதம் அடித்திருந்தனர்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்படுவது இது 6வது முறையாகும்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 17 முறை 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை தென்னாபிரிக்கா தட்டிச்சென்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து தென்னாபிரிக்கா 6 முறை 400 ரன்களை தாண்டியுள்ளது. இந்திய அணி 5 முறை 400 ரன்களை கடந்திருக்கிறது.

* தென்னாபிரிக்கா மலைக்க வைத்த 438 ரன்களே, மும்பை வான்கடே மைதானத்தில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு 2011-ம ஆண்டு உலக கோப்பையின் போது கனடாவுக்கு எதிராக நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்சுக்கு இது 23வது சதமாகும். இதன் மூலம் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலியுடன் 5வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

* தென்னாபிரிக்க தொடக்க ஆட்டக்காரர் 32 வயதான ஹஷிம் அம்லா நேற்று 15 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன் மூலம் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். 126 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று அதில் களம் இறங்கிய 123-வது இன்னிங்சிலேயே இந்த மைல்கல்லை அம்லா கடந்துள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் விராட் கோலி கடந்த ஆண்டு தனது 136வது இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்களை எட்டியதே இந்த வகையில் உலக சாதனையாக இருந்தது. அதனை அம்லா தகர்த்துள்ளார்.

* தென்னாபிரிக்கா மயிரிழையில் சாதனை ஒன்றை நழுவவிட்டது. 2006ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் சேர்த்ததே இந்த நாள் வரை ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் உலக சாதனை என்ற நிலைமையில்,தென்னாபிரிக்க அணி கடைசி 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

* தென்னாபிரிக்கா தனது இன்னிங்சில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசியது. ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த 2வது அணி என்ற சிறப்பை தென்னாபிரிக்க அணி பெற்றது. 2014ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்சர்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

* குயின்டன் டி கொக் இந்தியாவுக்கு எதிராக 9 இன்னிங்சில் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் ஒரு அணிக்கு எதிராக 5 சதங்கள் அடித்தவர் என்ற சாதனை அவர் வசம் ஆனது. பாகிஸ்தானின் சல்மான்பட் இதே இந்தியாவுக்கு எதிராக 18 இன்னிங்சில் 5 சதங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

* 2002ம் ஆண்டில், பாகிஸ்தானின் அப்ரிடி ஒரு நாள் போட்டியில் 48 சிக்சர்கள் துவம்சம் செய்ததே ஒரு ஆண்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது. அந்த நீண்ட கால சாதனைக்கு டிவில்லியர்ஸ் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். டிவில்லியர்ஸ் இந்த ஆண்டில் மட்டும் 58 சிக்சர்கள் (20 ஆட்டம்) அடித்திருக்கிறார். இதில் நடப்பு தொடரில் எடுத்த 20 சிக்சர்களும் அடங்கும்.

சொந்தமண்ணில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

SA

ஐந்­தா­வது ஒரு நாள் கிரிக்கெட் போட்­டியில் தென்­னா­பி­ரிக்கா 214 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றிபெற்­றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3–-2 என வெற்றிபெற்றது. இந்­தி­யா­விற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்­கேற்­றது.

முதல்நான்கு போட்­டி­களின் முடிவில் தொடர் 2–2 என சம­நி­லையில் இருந்­தது. ஐந்­தா­வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்­கடே மைதா­னத்தில் நேற்று நடை­பெற்­றது. இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற தென்­னா­பி­ரிக்க அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்மானித்தது.

தென்­னா­பி­ரிக்க அணிக்கு கொக், அம்லா சிறப்­பான ஆரம்­பத்தைக் கொடுத்­தனர். அம்லா 23 ஓட்டங்க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, அடுத்து கள­மி­றங்­கினார் டுபிௌசிஸ்.

இந்­திய பந்­து­வீச்சை எளி­தாக சமா­ளித்த இந்த இரு­வரும் சதம் விளா­சினர். இந்­நி­லையில் 102 ஓட்டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார் கொக். அதன்பின் இணைந்த டுபிௌசிஸ், டிவி­லியர்ஸ் ஜோடி அதி­ர­டி­யாக ஓட்டக் குவிப்பில் ஈடு­பட்­டது.

இரு­வரும் மாறி மாறி பவுண்­ட­ரி­க­ளாக விளா­சினர். சதம் கடந்த டுபிௌசிஸ் 133 ஓட்­டங்கள் பெற்றிருந்த வேளையில் காயம் கார­ண­மாக ‘ரிட்­டையர்ட் ஹர்ட்’ முறையில் வெளி­யே­றினார்.

இந்­திய பந்­து­வீச்சை சித­ற­டித்த டிவி­லியர்ஸ் 119 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். இது இந்தத் தொடரில் டிவி­லியர்ஸ் பெற்ற 3ஆவது சத­மாகும். 50 ஓவர்கள் முடிவில் தென்­னா­பி­ரிக்கா 4 விக்கெட்­டுக்கள் இழப்­பிற்கு 438 ஓட்­டங்­களை குவித்­தது.

கடின இலக்கை விரட்­டிய இந்­திய அணி 36 ஓவர்­க­ளி­லேயே 224 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­து படு­தோல்­வி­ய­டைந்­தது.

இதன் மூலம் தென்­னா­பி­ரிக்கா 214 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. இதன் மூலம் இந்தி­ய மண்ணில் ஒருநாள் தொடரை முதல்­மு­றை­யாக கைப்­பற்றியுள்ளது தென்னாபிரிக்க அணி.

இந்த போட்­டியில் இந்­தியா தோல்­வி­ய­டைந்­ததன் மூலம் ஒருநாள் அரங்கில் தனது இரண்­டா­வது மோச­மான தோல்­வியை சந்­தித்­துள்­ளது. இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு சார்­ஜாவில் நடந்த இலங்கை அணிக்கு எதி­ரான போட்­டியில் இந்­திய அணி 245 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோல்விய­டைந்­தது.

இந்­திய அணியின் ரஹானே அதி­க­பட்­ச­மாக 87 ஓட்­டங்­களும் தவான் 60 ஓட்­டங்­களும் எடுத்­தனர்.

ஒரு நாள் அரங்கில் 3 ஆவது அதி­க­பட்ச ஓட்ட எண்ணிக்கைஇதுவாகும். முத­லி­டத்தில் இலங்கை, நெதர்லாந்திற்கு எதிராக பெற்ற 443 ஓட்டங்கள் இருக்கி றது.

வான்கடே மைதானத்தில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.தொடர் நாயகனாக டிவிலியர்ஸும், ஆட்ட நாயகனாக கொக்கும் தேர்வு செய்யப்
பட்டனர்.

ஹசிம் அம்லா புதிய சாதனை!!

Amla

சர்வதேச ஒரு நாள் தொடரில் குறைந்த போட்டிகளில் விரைவாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்து தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் அம்லா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் கடைசி ஒரு போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார் ஹஷிம் அம்லா.
கோலி இதற்குமுன்னர் 136 போட்டிகளில் 6000 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஹசிம் அம்லா 123 போட்டிகளில் 6000 ஓட்டங்களை எடுத்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணியை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்டது!!

SA

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகின்றது..

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இதன் படி தென்னாபிரிக்கா அணி திரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டி கொக் 87 பந்துகளில் 109 ஓட்டங்களையும், டுப்லசிஸ் 115 பந்துகளில் 133 ஓட்டங்களையும்
அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 61 பந்துகளில் 119 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை தென்னாபிரிக்க அணி வீர்கள் அனைவரும் தும்சம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்ட சாதனையை 5 ஓட்டங்களால் தவறவிட்டது. இலங்கை அணியே ஒருநாள் போட்டிகளில் 443 ஓட்டங்களை பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவிடம் சிக்கிய மற்றொரு திருட்டுச் சம்பவம்!!

Palitha

வவுனிய வெஹரதென பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகளில் காணப்படும் பெறுமதிவாய்ந்த கருங்காலி, முதிரை போன்ற மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும குறித்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் அங்கு சென்றவேளை கருங்காலி, முதிரை போன்ற பெறுமதியான மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்ததுடன் மேலும் சில மரங்கள் வெட்டப்பட்டு கடத்திச் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர முல்லைத்தீவு பன்சல்கந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டும் இடத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும சென்றுள்ளார்.

அவர் அங்கு சென்றவேளை மிகவும் பெறுமதியான, பழமை வாய்ந்த கருங்காலி, முதிரை போன்ற மரங்கள் வெட்டப்பட்டிருப்பதை அவரால் அவதானிக்க முடிந்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.