இறந்தவர்களை நினைவுகூர்ந்து 5 இலட்சம் மரங்களை நடுவதற்கு வடமாகாண சபை ஏற்பாடு!!

Tree

எதிர்வரும் கார்த்திகை மாததத்தில் ஐந்து இலட்சம் மரக் கண்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது. இந்த மர நடுகை மாதத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திகை முதலாம் திகதியில் இருந்து 31ஆம் திகதி வரை மரநடுகை தினங்களாக வடமாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ளது என்றும் இதற்கான மரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் ஐங்கரநேசன் கூறியுள்ளார்.

போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவது கார்த்திகை மாதம் என்றும் இறந்தவர்களுக்கு வணக்க அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஐங்கரநேசன் இறந்தவர்களை நினைவு கூர்ந்து மரங்களை நடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மர நடுகை மாதத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்ற முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் மரங்கள் நடப்படும் என்றும் வடமாகாண விவசாய அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஐபிசி தமிழுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மர நடுகை மாதத்தில் படையினர் இடையூறுகளை விளைவித்திருந்தனர்.புலனாய்வு பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைளும் அதிகரித்திருந்தன. முர நடுகையில் ஈடுபட்ட பலர் படையினரால் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மர நடுகை மாதத்தில் குழப்பங்கள் ஏற்படாது என வடமாகாண சபை நம்புவதாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா மரையடித்தகுளம் சித்திவினாயகர் ஆலயத்திற்கு தியாகராசா அவர்கள் உதவி!!

கடந்த 20.10.2015 வவுனியா மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்ட சித்திவினாயகர் ஆலயத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு. மயில்வாகனம் .தியாகராசா அவர்களினால் நிதி உதவி வழங்கப்பட்டது

வவுனியா பகுதியிலே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத் திட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு ஒர் ஆலயம் அமைப்பதற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு. மயில்வாகனம்.தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் கலச்சாரத்திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ.நித்தியானந்தம் மற்றும் ஆலய பரிபாலனசபை செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங் மாதர் அபிவிருத்திச்சங் அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.

1 2 IMG_5535 IMG_5546 IMG_5548 IMG_5554 IMG_5568 IMG_5574 IMG_5577

இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

Maithiri

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.

பின்னர் சேற்றில் சிக்கிய வாகனத்தை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டெடுத்தனர்.

சந்திரனுக்கு சென்று வந்த கைக்கடிகாரம் 10½ கோடிக்கு ஏலம்!!

Watch

கடந்த 1971ம் ஆண்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரனுக்கு பயணம் செய்த அமெரிக்க விண்வெளி வீரர் டேவ் ஸ்காட் அணிந்து சென்ற கைக்கடிகாரம் 10½ கோடிக்கு ஏலம் போனது.

1971ம் ஆண்டு ´அப்பல்லோ 15´ என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு விண்வெளி வீரர் டேவ் ஸ்காட் கட்டளையிடக்கூடியவராக இருந்தார்.

இதன்போது அவர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புலோவா குரோனோகிராப் என்ற கைக்கடிகாரத்தை அணிந்து இருந்தார்.
சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் இவர் மட்டுமே கைக்கடிகாரம் அணிந்து சென்றுள்ளார்.

அந்த கை கடிகாரம் 10½ கோடிக்கு ஏலம் போனது. இந்தக் கைக்கடிகாரத்தை புளோரிடாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார்.

திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு நடந்த கொடுமை!!

Fire

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் முன்னாள் காதலன்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய 20 வயதுடைய சோனியா பீபி என்ற பெண்ணே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதேபகுதியைச் சேர்ந்த லத்தீப் அகமது (24) என்ற வாலிபர் குறித்த யுவதி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் முறிந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் குறித்த யுவதியை சந்தித்த காதலன் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். அதற்கு சோனியா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் சோனியா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார்.

படுகாயமைந்த சோனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் தீவைத்த காதலனை கைது செய்தனர்.

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் தாக்குதல் : முகாமையாளர் பலி!!

Crime

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் அந்த விடுதியின் முகாமையாளர் அலக்சாண்டர் விக்ரமத சொய்சா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குறித்த நபருக்கு சொந்தமான இந்த இரவு விடுதி, அந்தப் பிரதேசத்தில் பிரபலமானது என்பதுடன் அந்த இரவு விடுதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்றும் விசாரணையில் உள்ளது.

நேற்றிரவு 11.15 மணியளவில் உள் நுழைந்த 20 பேரைக் கொண்ட ஒரு கும்பல், அவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மூவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ள ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரயில் பாதை ஒன்று அமைக்கத் திட்டம்!!

Track

மருதானையிலிருந்து பத்தரமுல்ல வரையான புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

மருதானையில் இருந்து தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை இந்த புதிய ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் முதல்கட்ட நடவடிக்கையாக தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு உகந்த 06 தரைமார்க்க பகுதிகள் இணங்காணப்பட்டுள்ள.

அந்த 06 தரைமார்க்க பகுதிகளிலும் மிகச்சிறந்த பகுதியை தெரிவு செய்து செயலாக்க ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிடுகின்றார்.

தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை 10 கிலோமீட்டர் தூரமான பாதை அமைக்கப்படவுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

Accidnt

நேற்று (24.10) இரவு வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா குருமண்காட்டில் இருந்து வவுனியா நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து துவிச்சகரவண்டியில் பயணித்த மாணவி மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனும் மாணவியும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் அதிகரித்துவரும் திருட்டுக்கள் : பொலிசார் எச்சரிக்கை!!

திருட்டு2

வவுனியாவில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கட்டுப்படுத்த பொது மக்களை விழிப்பாக இருக்குமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியாவில் இந்த மாதத்தில் இதுவரை கத்தி முனையில் ஒரே பாணியிலான நான்கு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கோவில்குளம், தட்சன்குளம், சாம்பல்தோட்டம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.

இதன் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொன்னாவரசன்குளம் பகுதியில் இரு வீடுகளுக்குள் கத்தி, வாள்களுடன் புகுந்த குழு அவர்கள் அணிந்திருந்த தோடு, சங்கிலி உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள கடை ஒன்றும் நள்ளிரவில் உடைக்கப்பட்டு 43,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை மறைத்தவாறு, கறுப்பு நிற ஜக்கெட் அணிந்து வீட்டின் பின் பகுதியூடாக உள்நுழைந்து கத்தி, வாள் என்பவற்றை காட்டி மிரட்டுவதுடன் வீட்டில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடி வருகின்றனர்.

இந்த திருட்டு நடவடிக்கைகளில் நான்கு, ஐந்து பேர் குழுவாக செயற்படுகின்றனர். கூடுதலாக ஒரே பாணியில் இடம்பெறும் இத் திருட்டுக்களில் தனிமையில் இருக்கும் வீடுகள் அதிகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் இவ்வாறான திருட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்கவும். தமது வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளுடனும், பொலிஸ் நிலையங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி திருடர்கள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும்.

அயல் வீடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக தெரியப்படுத்தினால் அவர்களின் உதவியுடன் திருடர்களை கைது செய்ய முடியும். தற்போது இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஐ.நா தீர்மானம் எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் ஒன்றுபட்டு செயற்படுத்த வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்!

10462375_1497848127178059_4088882850332594407_n
ஐ.நா தீர்மானம் நாம் எதிர்பர்த்த அளவு இல்லை என்றாலும் நாங்கள் ஒன்று பட்டு அதனை செயற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தை வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கான கௌரவிப்பு நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்களித்த நீங்கள் பல பிரச்சனைகளுடனேயே இன்றும் வாழ்கின்றீர்கள் என்பது எமக்கு தெரியும்.

இப் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிரந்தர வீடுகள், மலசலகூடம், போக்குவரத்து வீதிகள் என பல இன்னும் கிடைக்கவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் கூட சரியான முறையில் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் சில அதிகாரிகளும் இணைந்து அவற்றை தவறான முறையில் வழங்கியுள்ளனர். இங்கு அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது. மைத்திரிபால சிறிசேன  தற்போது ஜனாதிபதியாக இருப்பதற்கு தமிழ் மக்களினுடைய வாக்குகளே காரணம்.

அதன் பின் நாடாளுமன்றத் தேர்தல் கூட மாற்றங்களை தந்துள்ளது. இந்த இரண்டு தேர்தல்களும் இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 வருட போராட்டத்தில் நாம் ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் என்பவற்றை இழந்துள்ளோம்.

இந்த தியாகங்கள் தான் ஐ.நா சபையிலே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஐ.நாவின் கதைவைத் தட்டியுள்ளது.

ஆகவே ஐ.நா சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நாங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்த அநீதிகளுக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். அது வரவில்லை. இரண்டாம் கட்டமாக ஒரு கலப்பு விசாரணையை எதிர்பார்த்தோம் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தற்சமயம் ஒரு உள்ளக விசாரணை வந்துள்ளது. அதுவும் ஒரு சில பொதுநலவாய நாடுகளினுடைய நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காணாமல் போனவர்கள் விடயம், அரசியல்கைதிகள், வாழ்வாதாரப் பிரச்சினை, நிரந்தரமான குடியேற்றம் என அனைத்தையும் நாம் பெறுவதற்கான ஒரு சந்தர்பம் இந்த தீர்மானம். அது நடைமுறைப்படுத்தப்படுவதில் இருந்து தான் நாம் இவற்றைப் பெற முடியும்.

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். அங்கு இனவாதிகள் பலர் போரில் ஈடுபட்டு கொடூரமாக செயற்பட்ட அரசியல்வாதிகள், இராணுவத்தை காப்பாற்றுவது தொடர்பாக பேசினர்.

ஆனால் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது. அவர்கள் அதனை செய்ய வேண்டும். அதனையே நாம் வலியுறுத்துகின்றோம்.

இது தவிர, புதிய வரவு செலவுத் திட்டம் வரவிருக்கிறது. அதில் எமது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். நிதி அமைச்சர் கூட இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு புரட்சிகரமான வரவு செலவுத் திட்டம் என கூறியுள்ளார்.

எனவே எமது மக்களின் தேவைகளை இந்த மாற்றங்களின் பின் மாகாணசபையும், நாங்களும் இணைந்து பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என கருதுகின்றேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது வவுனியா வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், இ.இந்திராசா, ம.தியாகராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா ஓமந்தை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு!(படங்கள்)

24.10.2015 சனிக்கிழமை அன்று ஒமந்தை மகாவித்தியாலயத்தில்  5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வு  இடம்பெற்றது .

அத்துடன்  வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தன் அவர்களையும் வரவேற்க்கும்  நிகழ்வும்  நேற்று  ஒமந்தை மகாவித்தியலயத்தில் நடைபெற்றது .

மேற்படி நிகழ்வில்  வடக்குமாகாண சுகாதாராஅமைச்சர் ப . சத்தியலிங்கம்   மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள்  ஜி.ரி.லிங்கநாதன் தியாகராஜா ,இந்திரராஜா  மற்றும் எம் பி  நடராஜ் ஆகியோருடன் அதிபர் அசிரியர்கள்  மாணவர்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் எனப் பலரும் கலந்து சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசுப்பொருட்களும் வழங்கி வைத்தனர் .

17222_1497847857178086_4458503323479302207_n 1781988_1497848390511366_1090979393624140683_n 10462375_1497848127178059_4088882850332594407_n 11061316_1497848503844688_3954978024392614011_n 12004002_1497848067178065_5324150273786036971_n 12011206_1497847803844758_1775807351169029204_n 12038010_1497848187178053_8119352873679491222_n 12039244_1497848217178050_8188335285929710137_n 12042961_1497847620511443_5150538302899718339_n 12046687_1497848003844738_3010266406244668301_n 12049280_1497848253844713_6282516528762288246_n 12063374_1497847943844744_8919768759157014880_n 12065854_1497847590511446_5973363721507130727_n

கிளிநொச்சியில் இடம்பெற்ற வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா!(படங்கள்)

வடக்கு மாகாண இலக்கிய பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றன. இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள் பி.ப 1.30 மணியளவில் தபாலகம் முன்பாக ஆரம்பமாகியது.

தமிழ், சிங்கள, இஸ்லாமிய கலாசார விழுமியங்களை தாங்கி கலாசார நடனங்கள்,கலாசார ஊர்திகள் பவனி கூட்டுறவு மண்டபத்தினை வந்தடைந்தது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், தமிழ்தாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்றைய நிகழ்வின் தலைமையினை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இராவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்விற்கு முதலமைச்சர் வரவழைக்கப்பட்ட போதிலும் சுகவீனம் காரணமாக அவர் சமூகம் அளிக்காததை அடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவரது செய்தியை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன், கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தன. இன்றைய நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் விருது, சிறந்த நூலிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

clr_north_001 clr_north_002 clr_north_003 clr_north_004 clr_north_005 clr_north_007 clr_north_008 clr_north_009 clr_north_019 clr_north_025 clr_north_028 clr_north_029

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் உள்ள அழகுப்பொருள் விற்பனை நிலையம் ஒன்று நேற்று(23.10.2015) நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் உள்ள பிரபா மல்ரி சொய்ஸ் எனும் அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் நள்ளிரவில் இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு 70 000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

1 2 3 4 5 6 7

மன்னார் பரப்பாங்கண்டலில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்!(படங்கள்)

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது.

நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் உள்ள அருட்சகோதரி ஒருவர் குறித்த நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறியுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த அருட்சகோதரி விடயம் தொடர்பாக பரப்பாங்கண்டல் பங்கு தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணை தற்பொழுது பங்கு தந்தையின் வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் பொது மக்களுக்கு தெரிந்ததை அடுத்து இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அப்பகுதிக்கு சென்று இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணையை பார்வையிட்டு பயபக்தியோடு வழிபடுபதை காணக்கூடியதாக உள்ளது.

நற்கருணை மாற்றம் பெற்று இரத்தமும் சதையுமாக மாறி மனிதனின் இதயம் போலவும் அதற்கு அருகில் குழந்தையின் உருவம் போலவும், மேலும் அன்னை மரியாவின் உருவம் போலவும் காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2 3 4

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டங்கள்   வவுனியா மாவட்ட  அபிவிருத்தி  நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள் மன்றத்தினால்  முன்னெடுக்க பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் கடந்த 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை  பூந்தோட்டம் அகத்தியர் வீதியை புனரமைக்கும் பணிகள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி  நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள்  மன்றத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது .

மேற்படி வீதி புனரமைப்பு பணிகளானவை கைத்தொழில் வணிக அமைச்சர்  ரிஷாத் பதியுதீன் அவர்கள் தேர்தல் காலங்களில் அளித்திருந்த  வாகுறுதிகளுக்கமைவாக    முன்னெடுக்கபட்டு  வருவதாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி  நிகழ்ச்சி திட்டத்துக்கான பட்டதாரிகள்  மன்றத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தெரிவித்தார் .

10996155_169114400101168_6878122103721804798_n (1) 10996155_169114400101168_6878122103721804798_n 12063749_169114223434519_6779969392054956807_n 12065806_169114246767850_2956290764757144841_n 12074880_169114043434537_6821675986838910107_n

வவுனியா செயலகத்தில் இடம்பெற்ற எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விழிப்புணர்வுத் திட்டத்தின் இறுதி நிகழ்வு!(படங்கள்,வீடியோ)

சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் இறுதி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில்  பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளான சிறுவர்களின் பாதுகாப்பிற்கான சத்தியப்பிரமாணம் அடங்கிய  செய்தியினை   மங்கள வாத்தியம் சகிதம் எடுத்துவந்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சரஸ்வதி மோகனாதனிடம்  சக்தி வானொலி  மற்றும் நியூஸ் பெஸ்ட் அதிகாரிகள் செல்டன் அன்டனி மற்றும் ஜெகநாத்  ஆகியோர் கையளித்தனர் .

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் சர்வமத வழிபாடுகளின் பின்னர் விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதனையடுத்து “பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளான சிறுவர்களின் பாதுகாப்பிற்கான சத்தியப்பிரமாணம்  மும்மொழிகளிலும் எடுக்கின்ற நிகழ்வு காலை 10.10 மணியளவில் இடம்பெற்றது .

தொடர்ந்து வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றதுடன் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களது பிள்ளைகளின் மகிழ்சிக்காக  விழிப்புணர்வு திட்டம் தொடர்பான உரை இடம்பெற்றது . தேசிய கீதத்துடன்  நிகழ்வு நிறைவு பெற்றது .

மேற்படி  வவுனியா செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா மேலதிக அரச அதிபர்  பிரதேச செயலாளர் மற்றும் சர்வ மத தலைவர்கள் அத்துடன் வவுனியா மாவட்ட பிரதேச  மற்றும் செயலககங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்களும் கலந்து கொண்டனர் .

இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவுநாள் நிகழ்வுகளையொட்டி யாழ்ப்பாணம்,  மட்டக்களப்பு, நுவரெலியா .மாத்தறை, அனுராதபுரம், கேகாலை, கண்டி, காலி ஆகிய பிரதேச செயலங்களிலும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நியூஸ்பெஸ்ட், சட்டம் மற்றும் ஒழுங்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து கடந்த மூன்று வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

for-our-children

20151023_095355 20151023_095518 20151023_095524 20151023_095659 20151023_095740 20151023_095752 20151023_095942 20151023_100132 20151023_100535 20151023_100854 20151023_101233 20151023_101531 20151023_101834 20151023_101845 20151023_102059 20151023_102128 20151023_102211 20151023_102824 20151023_102957 20151023_103239