முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதா??

refrigerated-eggs-jpgதற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குளிர்சாதனப்பெட்டில் சமைத்த உணவுகள் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.

அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப்பெட்டில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர்சாதனப்பெட்டில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.

ஐரோப்பிய முட்டை சந்தை ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும்போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்லுமாம்.

எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா இருந்து, அதனை குளிர்சாதனப்பெட்டில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும்.

வாங்கிய முட்டை பிரஷ்ஷாக உள்ளதா அல்லது கெட்டுப்போயுள்ளதா என்பதை அறிய, ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முட்டையைப்போட்டு, முட்டை மிதந்தால், அந்த முட்டை கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம்.

சுவைமிக்க பழங்களை உண்ணும் ஆர்வத்தால் 16 அடி உயரமான மரத்தில் ஏறிய ஆடுகள்!!

goat_0

தமக்குப் பிடித்த பெரி பழத்தை உண்ணும் முகமாக 16 அடி உயரமான பெரி மரத்தின் மீது ஆடுகள் ஏறி நிற்பதை வெளிப்படுத்தும் இந்த அரிய காட்சி மொரோக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது.

மரத்தில் கொத்துக் கொத்தாக கனிந்து தொங்கும் பெரி பழங்கள் நிலத்தில் விழும் வரை காத்திருக்கப் பொறுமையில்லாத ஆடுகள், உயரமான அந்த மரத்தில் ஏறி கிளைகளில் தொங்கிய பழங்களை உண்டுள்ளன.

கிளி போன்ற தோற்றத்தை பெற காதுகளை அறுவைசிகிச்சை மூலம் துண்டித்த நபர்!!

parrot-birdஉலகில் தமது அழகை மேம்­ப­டுத்த பலரும் அழகு சத்­திர சிகிச்சை செய்து கொள்­வது வழமை. ஆனால் பிரித்­தா­னிய பிறிஸ்டல் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது முகத்தை கிளி போன்ற உரு­வ­மு­டை­ய­தாக மாற்ற தனது காது­களை 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் துண்­டித்துக் கொண்­ட­துடன் தனது மூக்­கையும் கிளியின் சொண்டு போன்று மாற்­று­வ­தற்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்து கொள்­ள­வுள்ளார்.

ரெட் றிச்சர்ட்ஸ் (56 வயது) என்ற மேற்படி நபர் தனது உடலில் 110 பச்சை குத்­தல்­களை மேற்­கொண்­டுள்­ள­துடன் 50 துளை­க­ளையும் இட்டுள்ளார். அத்­துடன் அவர் தனது நாக்­கையும் துண்­டித்­துள்ளார்.

அவர் எல்லி, தியகா, ஜேக், திமெனெக், பபி ஆகிய பெயர்­க­ளை­யு­டைய கிளி­களை வளர்த்து வரு­கிறார்.
கடந்த பல வருட கால­மாக தான் கிளி போன்ற தோற்­றத்தில் காட்­சி­ய­ளிக்க நீண்ட கேசத்தை வளர்த்து தனது காதுகளை மறைத்து வந்ததாக ரெட் றிச்சர்ட்ஸ் கூறினார்.

விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store!!

android-app-store-logoandroid-app-on-google-play-01-logo-install-or-not-iryqke2h

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.

இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து அறிமுகம் செய்ய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக மென்பொருள் பொறியியலாளரான Kirill Grouchnikov என்பவர் தனது கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

இனி காளான் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்யலாம்!!

_For-cellphone-Mushrooms-will-be-charged_SECVPFஒரு­புறம் சூரிய ஆற்­ற­லி­லி­ருந்து மின்­னுற்­பத்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக நடந்து கொண்­டி­ருந்­தாலும், முடிந்தளவு மின்-­க­ழி­வு­களை வெளி­யி­டாத மின்­சார மூலங்­களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வரு­கின்­றனர் ஆய்­வா­ளர்கள்.

அப்­ப­டிப்­பட்ட ஓர் ஆய்வின் விளை­வுதான் இந்தக் காளான் பெட்­ட­ரிகள். அமெ­ரிக்­கா­வி­லுள்ள கரோ­லினா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மாணவர் குழு மாற்று மின்­னுற்­பத்தி என்ற தளத்தில் மேற்­கொண்ட ஆராய்ச்­சியில், ’போர்­ட­பெல்லோ’ எனப்­படும் குறிப்­பிட்ட வகைக் காளான்­களைக் கொண்டு மின்­க­லங்­களை, அதா­வது பேட்­ட­ரி­களை, மின்­னூட்டம் செய்ய முடியும் என்று கண்­ட­றிந்­துள்­ளது.

இது குறித்துப் பேட்­டி­ய­ளித்த, அவ்­விஞ்­ஞானக் குழுவின் தலைமை விஞ்­ஞா­னி­யான ப்ரென்னன் கேம்ப்பெல், “இன்று நாம் பயன்­ப­டுத்தும் மின்­க­லங்கள் பெரும்­பாலும் லித்­தியம் அய­னி­களைக் கொண்டே உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.இந்த லித்­தியம் மின்­க­லங்­களை மின்­னூட்டம் செய்­வ­தற்கு கரியின் உலோகக் கல­வை­யான ‘க்ராஃபைட்’ அதி­க­மாகத் தேவைப்­ப­டு­கி­றது. இந்த க்ராஃபட்டைத் தயா­ரிக்க அதிக செலவு ஏற்­ப­டு­வ­தோ­டல்­லாமல் இதன் கழி­வுகள் சுற்­றுப்­பு­றத்தைப் பெரிதும் மாசு­ப­டுத்­து­கின்­றன. அது மட்­டு­மன்றி, இந்த லித்­தி­ய -­மின்­க­லங்­களைச் சுத்­தி­க­ரிக்க ‘ஹைட்­ரோஃப்­ளூரிக் ஆசிட்’ எனப்­படும் அடர்­தி­ரவம் தேவை­யா­கி­றது. இந்த திரவம் புறச்­சூ­ழ­லுக்குத் தீங்கு விளை­விக்கும் அமிலக் கழி­வாகும். என­வேதான் இந்த மாற்று மின்­கல முயற்­சியை மேற்­கொண்டோம்” என்­கிறார்

தொடர்ந்து, இந்தக் காளான் பேட்­ட­ரியின் இயக்கம் குறித்துத் தெளி­வு­றுத்­து­கின்­றனர் ஆய்­வுக்­கு­ழு­வினர். ’அகா­ரிக்கஸ் பைஸ்­போரஸ்’ எனப்­படும் இந்தக் குறிப்­பிட்ட வகைக் காளானில் ’ஸ்போர்ஸ்’ எனப்­படும் நுண்­து­ளைகள் மிக அதிகம்.
இத்­த­கையத் துளை­களின் வழி­யாக, மின்-­தி­ர­வங்கள் எளிதில் போக்­கு­வ­ரத்து மேற்­கொள்ள முடியும் என்­பதால் இதில் மின் கடத்தல் செய்­வது மிகவும் சுலபம். மேலும் இந்­த­வகைக் காளானில் பொட்­டா­சியம் தன்மை அதி­க­மாக இருப்­பதால் இது மின்­னுற்­பத்­திக்கு மிகவும் ஏற்­ற­தொரு கல­மாகும்.

நாள்­போக்கில் இதன் மின்­னூட்­டத்தை ஊக்­கு­விப்­பது சுலபம். அதற்கு எந்­த­வித வேதி­யியல் திர­வங்­களும் தேவை­யில்லை. மேலும் இயற்­கை­யா­கவே உக்­கி­விடும் பொரு­ளென்­பதால் சுற்­றுப்­பு­றத்­திற்கு எந்­த­விதத் தீமையும் விளை­விக்­காத மின் கல­மாக இது தொடர்ந்து செயற்­படும் என்­கின்­றனர் அறி­வி­ய­லா­ளர்கள்.

தற்­போது முதற்­கட்ட உற்­பத்­தியில் இருக்கும் இந்த மின் கலங்கள், விரைவில் சந்­தைக்­கான உற்­பத்­தியை எட்டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றதுறது. மழைநாட்களில் முளைக்கும்போதெல்லாம், தேவையற்றது என்று பிடுங்கியெறிப்படும் காளான் நம் அலைபேசியின் மின்னூட்டத்திற்கு உதவுமென்றால், இனி அவற்றைத் தேடித் தேடி வளர்ப்போம் தானே!

என் மகள் மிகவும் சந்தோஷப்பட்டாள்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!!

1 (20)தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்.சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற அழகான மகளும் உண்டு.

சமீபத்தில் ஆராதனா பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறியது மட்டுமின்றி நிறைய பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் என அனுப்பியுள்ளனர்.இவை அனைத்தையும் தன் மகளிடன் சிவகார்த்திகேயன் காட்டினாராம், அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்

வாக்களிக்க அஜித் வராதது குறித்து முதன் முதலாக பேசிய நாசர்!!

Koottam_Movie_Stills969dbda664e46763837da4b369f01ce2நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என பாண்டவர் அணி புத்துணர்ச்சியுடன் செயல் பட்டு வருகின்றது.இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முதன் முதலாக பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த நாசாரிடம் அஜித், நயன்தாரா ஆகியோர் ஏன் வாக்களிக்க வரவில்லை என கூறியுள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்த் நாசர் ‘யாரும் வாக்களிக்க வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சந்தானம் கூட அன்று படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை, இதேபோல் அவர்களுக்கு ஏதாவது வர முடியாத சூழல் இருந்திருக்கும்’ என கூறியுள்ளார்.

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை- மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்!!

1 (41)மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 200 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து ஏமாற்­ற­ம­ளித்­த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது.

இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டி­வ­ரு­கி­றது. இத் தொடரின் முதல் போட்டி காலியில் நடை­பெற்­றது. இப்­போட்­டியில் இலங்கை அணி அபார வெற்­றி­யீட்­டி­யது.

இந்­நி­லையில் இத்­தொ­டரின் இரண்­டா­வதும் கடை­சி­யு­மான போட்டி நேற்று பி.சரா ஓவல் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது. சோபர்ஸ் -– திஸரா என்று பெய­ரி­டப்­பட்ட இக்­கிண்­ணத்தின் இரண்­டா­வது போட்­டிக்­கான நாணய சுழற்­சியில் இலங்கை அணி வெற்­றி­பெற்­றது.

இப்­போட்­டிக்­கான நாணய சுழற்­சிக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட நாணயம் விசே­ட­மாக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்­டக்­காரர் சோபர்ஸ் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் திஸரா ஆகி­யோரின் உருவம் பொறித்த நாணயம் இதற்­காக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி கரு­ணா­ரத்ன மற்றும் சில்வா ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் சில்வா ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழந்து வெளி­யே­றினார். அதன்­பி­றகு மெண்டிஸ் கள­மி­றங்­கினார். இவரும் 13 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய கரு­ணா­ரத்­னவும் 13 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க ஒரு கட்­டத்தில் 34 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றி­யது இலங்கை அணி.

அதன்­பி­றகு சந்­தி­மா­லுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தி­யூஸும் 14 ஓட்ட­ங்க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க சிறி­வர்­தன கள­மி­றங்­கினார். இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்­ணிக்கை சற்று உயர்த்­திக்­கெண்டு போக 25 ஓட்­டங்­க­ளுடன் சந்­திமால் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து 68 ஓட்­டங்கள் பெற்று ஆடிக்­கொண்­டி­ருந்த சிறி­வர்­தன ஆட்­ட­மி­ழந்தார். ஹேரத் ஆட்டமிழக்காமல் 26 ஓட்­டங்­களைப் பெற்று களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 200 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

பந்­து­வீச்சில் மிரட்­டிய மேற்­கிந்­தியத் தீவு­களின் வோரிக்கன் 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். அதன்­பி­றகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் 2ஆம் நாளான இன்று மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களைப்பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறி வருகின்றது.

நடு வானில் நிர்வாணமாக விமானப் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவளித்த பயணி!!

BANNER_DREAMS-TAKE-FLIGHTபோர்ச்சுக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்ச்சுகல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்டது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் இருந்த பயணி ஒருவர் மது போதையில் ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமான அப்பயணி, விமானப் பணிப்பெண் ஒருவரிடமும் தகாத முறையில் நடக்கத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணையில், ரகளை செய்த நபர் அயர்லாந்து நாட்டுக்காரர் எனத் தெரிய வந்தது.

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்!!

1444698804Amaravathiஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரை ஓரம் சர்வதேச தரத்தில் அமராவதி நகரம் அமைய உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று குண்டூர் மாவட்டம், தூளூர் மண்டலம், உத்தண்டராயுனி பாளையத்தில் நடைபெற்றது. அமரவாதி என்ற பெயரில், 16.9 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் இந்தத் தலைநகரம் உருவாக்கப்படவுள்ளது.

மின்சாரம், நீர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு இல்லாத, மாசு ஏற்படாத தூய்மையான நகராகவும் இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில், வெளி நாடுகளிலிருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்குவது என்றும் அதுவரை ஐதராபாத்தில் தற்காலிகமாக செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆந்திராவிற்கான புதிய தலைநகரமாக அமராவதி அமைக்கப்படுகிறது.

வவுனியாவைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை ரீதியான இலக்கியப் போட்டிகளில் சாதனை!!

Ach

அகிலம் சஞ்சிகையும், கண்டி கலை இலக்கிய இரசிகர் மன்றமும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியான இலக்கியப் போட்டிகளில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஐவர் பரிசு பெற்றுள்ளனர்.

திறந்த போட்டிப் பிரிவில் கட்டுரைப்போட்டியில் யாழ் தர்மினி பத்மநாதன் முதலாம் இடத்தினையும், அனுஷா கணேசராசா மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

திறந்த பிரிவு நாடகப் பிரதியாக்கம் போட்டியில் யாழ் தர்மினி பத்மநாதன் இரண்டாம் இடத்தினையும் வவுனியா தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை கஜரதி பாண்டித்துரை ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளனர்.

திறந்த மட்ட கவிதைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஆ.கௌரிதாசன் மற்றும் வல்வெட்டித் துறையை சேர்ந்த சக்திவேல் கமலகாந்தன் ஆகியோர் ஆறுதல் பரிசினை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் எதிர்வரும் 24ஆம் திகதி 2 மணிக்கு கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பணியிலிருந்து நீக்கியதால் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் கூரைமீதேறி போராட்டம்!!

கொட்டபொல, கிரிவான ஓய ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்னுற்பத்தி நிலையமொன்றின் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டுபேர் கூரைமீதேறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மின்னுற்பத்தி நிலையம் தற்போது ஜப்பான் நிறுவனமொன்றுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குறித்த பாதுகாப்பு ஊழியர்களின் பணி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் மின்னுற்பத்தி நிலையக் கூரை மீதேறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்கள். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே போராட்டக்காரர்களின் மனைவிமார் கூட அவர்களைச் சந்திக்க விடாது தடுத்துள்ள நிர்வாகம், சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

10 11

வவுவனியாவில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் தொலைபேசி உரையாடல் ஊடாக விசாரணை!!

police

வவுனியாவில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் தொலைபேசி உரையாடல் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பொலிஸ் நிலைய விசேட சுற்றி வளைப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணமாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் துரிதகதியில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வீடு செல்வதாக தெரிவித்திருந்த ஜீ.குணதிலக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தினத்தில் இரவு 11 மணி முதல் 11.45 மணி வரையில் அவர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கள்ளக்காதலனிடம் தன் மகளைக் கைவிட்டுச் சென்ற தாய்: நண்பர்களுடன் கூட்டாக துஷ்பிரயோகம்!!

Abuse

தான் பெற்ற மகளையே கள்ளக்காதலனிடம் கைவிட்டு, இன்னொருவருடன் ஓடிப் போன தாயின் செயல் காரணமாக எட்டுவயதுக் குழந்தையொன்று கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குருநாகல் கட்டுபொத்த பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கட்டுபொத்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் சிறுமியின் குடும்பம் வசித்துள்ளது. அக்காலப்பகுதியில் சிறுமியின் தகப்பன் வேறொரு பெண்ணுடன் பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் நடுத்தர வயதைக் கடந்த ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், சிறிது காலத்தின் பின் இன்னொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது முன்னைய காதலனிடம் தனது இரு பெண்குழந்தைகளையும் கைவிட்டு தாயார் தனது நண்பனுடன் வேறு பிரதேசத்துக்கு ஓடிப் போயுள்ளார்.

இந்நிலையில் எட்டு வயதான மூத்த பெண் குழந்தையை தாயின் கள்ளக் காதலன் பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளான். மேலும் தனது நண்பர்கள் மூவரையும் அழைத்து வந்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளான். இச்சம்பவம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த சிறுமி மற்றும் தங்கை அவர்களின் தாய்வழிப் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதன்போதே அவர்களின் உறவினர்கள் சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம் குறித்து அறிய நேர்ந்துள்ளது.

இதனையடுத்து பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் கள்ளக் காதலன் மற்றும் அவனுடைய மூன்று நண்பர்களும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏவுகணை சோதனையை நடத்திய ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம்!!

Iran

அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் மீது ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொலைதூரத்திற்கு சென்று எதிரியின் இலக்கை மிகத்துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை ஒன்றை கடந்த ஒக்டோபர் 10ம் திகதி ஈரான் மேற்கொண்டிருந்தது.

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி, ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில், அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது.

இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை சோதனை மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளன.

யாழில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

Arr

60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இந்தியாவின் – இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதானவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.