பிரபல நடிகரும், இயக்குனருமான ஆனந்த் மரணம்!!

actor-balu-anand

தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் இன்று காலை கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார்.

ஆனந்த தொல்லை, அண்ணா நகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இவரது பிரிவு தமிழ் சினிமா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

கொழும்பில் 2500 டொன் குப்பைகள்!!

c0c573e5dc7131bbef234c1db8be04d8_XL
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2500 டொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் கொலன்னாவ குப்பை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

500க்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகளுடன் இணைந்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கொலன்னாவ, மீதொட்டமுல்லை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, அங்கொடை, கொத்தட்டுவ, சேதவத்தை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

அனுமதியின்றி யானைகளை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

samburu-elephants_3642_610x343
அனுமதியின்றி எவரேனும் யானைகளை வைத்திருப்பார் எனின் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு வலுவாதார அபிவிருத்திகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு யானைகளை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பொது மக்கள் தமது தகவல்களை தமது அமைச்சுக்கோ அல்லது இரகசிய பொலிஸாருக்கோ அல்லது சட்டத்தரணிக்கோ அறிவிக்க முடியும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வன ஜீவராசிகள் பொறுப்பில் உள்ள யானைகள் ஒரு போதும் விடுவிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் விஹாரை உற்சவங்களுக்கும் யானைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்கள் விளக்கமறியலில்!!

50f8e9503c40607fa3af5ddb20c717b4_L
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை சந்தேகநபர்களின் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில வழக்கு தவனைகளின் போது வித்தியாவின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.அதன்படி இது தொடர்பாக விசாரனை செய்யுமாறு ஊர்காவல்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

 

வௌ்ளவத்தையில் பெண்களை அச்சுறுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது!!

Woman-arrested

வௌ்ளவத்தை பகுதியில் வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பெண்களை அச்சுறுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீடுகளுக்கு சென்று கூரிய ஆயுதத்தை காட்டி பெண்களை அச்சுறுத்தி அவர்களின் தங்கச் சங்கிலிகளை அபகரித்து வந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் தொடர்பில் தமக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதா பொலிஸார் கூறினர்.

மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாசப் படம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சித் தகவல்!!

Film

அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா என்ற பல்கலைக்கழகம் முதன்முதலாக ஆபாச படங்கள் பார்ப்பவரை வைத்து குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகளாக செய்து வருகிறது.

1000 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆபாச படங்கள் பார்ப்பது பற்றியும், அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டன. மேலும், ஆய்வில் கலந்து கொண்டவர்களின் நடத்தையை 6 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வந்துள்ளனர்.

முடிவில் அவர்கள் சில உண்மைகளை கண்டறிந்துள்ளனர். அதாவது, வாரத்தில் பலமுறை ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கும் உள்ளவர்கள், அதிக கடவுள் பக்தி உடையவர்களாக மாறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் போது, நம் மதக் கோட்பாட்டின் படி நாம் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு பயம் ஏற்படுகிறது. அந்த பயம் கடவுள் பக்தியை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை செய்த சிறியதாய் கைது!!

Girls

சகோதரிகளான சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சிறுமிகளின் சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான 8 வயது மற்றும் 10 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் நன்நடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகரிலுள்ள குறித்த வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், சிறுமிகளைப் பரிசோதித்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்மைக்கான தழும்புகளுடன் சிறுமிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்துவந்த சிறிய தாய் மற்றும் அவரது உறவினர்களும் தொடர்ந்து சித்திரவதையை மேற்கொண்டு வந்தமை தொடர்பில் சிறுமிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமிகள் இருவரும் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் இதன் போது தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது சிறுமிகளை தனது தங்கையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1 2 3 4 5 6

மதம் மாறியதால் சொந்த மகளையே அடித்துக் கொலை செய்த தாய் கைது!!

Murder

இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தனது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 21 வயதான செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குற்றத்தினை ஒப்புக்கொண்ட கொலை செய்யப்பட்டவரின் தாயார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் ஐந்தாவது பிள்ளையான செல்வநாயகம் ஜனனி திருமணம் முடித்து கணவன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

தனது கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தினை தழுவி வந்த ஜனனி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 31ஆம் திகதி தனது தாயாரின் வீட்டிற்கு வந்த ஜனனிக்கும், தாய்க்கும் இடையில் மதம் மாறியமை தொடரிபில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது கட்டில் பலகையினை கொண்டு தாய் தாக்கியதையடுத்து ஜனனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த மகளின் உடலை தனது வீட்டிற்கு பின்பகுதியில் உள்ள நிலத்தில் புதைத்ததுடன், தனது மகளை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது குற்றத்தினை ஒத்துக்கொண்ட தாய், இச்சம்பவத்தினை பொலிஸாருக்கு வாக்குமூலமாகவும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபரை இன்று மாலை கைது செய்துள்ள பொலிஸார், சடலத்தினை தோண்டுவதற்காக நீதிமன்ற அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கம்!!

Mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பின் ஒரு தொகுதி இதற்கு முன்னதாக நீக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய படை அதிகாரிகளும் இராணுவ உத்தியோகத்தர்களும் இன்று வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இன்று அல்லது நாளை அளவில் முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளனர்.

மஹிந்தவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உத்தியோகத்தர்களின் ஒரு தொகுதியினர் மே மாதம் 2ம் திகதி நீக்கப்பட்டிருந்தனர்.

ஏனையவர்களை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சில வாரங்களுக்கு முன்னதாக உத்தரவிட்ட போதிலும், பின்னர் அந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம் பெவிதி ஹன்ட அமைப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலியை பலாத்காரம் செய்து கொன்ற காதலன் : உயிருக்கு மன்றாடிய போதும் வீடியோ எடுத்து வெறிச்செயல்!!

Karen Parez

அமெரிக்காவில் ஒருவர் தனது 15 வயது காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது காதலியை கொலை செய்த போது காதலியின் கெஞ்சலையும் கண்டுகொள்ளாமல் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

டெக்ஸாசில் KarenParez என்ற 15 வயது பெண் காணாமல் போய்விட்டதாக பொலிசில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் அவரது காதலன் வீட்டில் Karen Parez உடல் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

Karen Parez உறவுக்கு மறுத்த நிலையில் அவரது காதலன் அவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Karen Parez உயிருக்கு கெஞ்சிய போதும் மனமிறங்காத காதலன் அவரை கொலை செய்யும் நிகழ்வுகளை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

சொந்த வீட்டில் வைத்தே காதலியை கொலை செய்த பின்னர் அவரது உடலை தனி அறையில் போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். வீட்டில் சடலத்தை பார்த்த அவரது தந்தையே பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து காதலனை அதிரடியாக கைது செய்துள்ள அமெரிக்க பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்!!

Kidney

சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன.

இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக கடும் முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் சியோலின், அண்மையில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஸ்கேன் பரிசோதனையின் போது இவருக்கு 4 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது ஒருவகை நோய் என்றே இது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1,500 பேரில் ஒருவருக்குத்தான் இதனால் மரணம் ஏற்படும் என்றும், சிலருக்கு இத்தகைய நோய் இருப்பது தெரியாமலேயே முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துள்ளனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், இந்த கூடுதல் சிறுநீரகங்களால் எந்த வித பயனுமில்லை. ஏற்கெனவே செயலில் இருக்கும் சிறுநீரகங்களுடன் இவை தொடர்புபட்டிருப்பதால் இவற்றை அகற்றி சிறுநீரகம் பழுதடைந்தவர்களுக்குப் பொருத்தும் வாய்ப்பு அரிதே.

என்றாலும் அதனை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியின் போது பிளாடரையும், சிறுநீரகத்தையும் இணைக்கும் குழாய் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சியோலினின் கூடுதல் சிறுநீரகங்களை அகற்றியுள்ளனர்.

தற்போது சியோலினின் உடல் நிலை நன்றாகத் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!!

11

காணாமல்போன எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டியானது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலிருந்து எகிப்து நோக்கிப் பயணித்த எகிப்துக்குச் சொந்தமான விமானமொன்று கடந்த மாதம் 66 பேருடன் காணாமல் போயிருந்தது.
குறித்த விமானம் காணாமல்போனதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒலி அலைகளின் சமிக்ஞைகள் மூலம் குறித்த விமானத்தின் கறுப்புப்பெட்டியானது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பல் ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப்பெட்டியின் உதவியுடன் குறித்த விமானம் பற்றிய பல புதிய தகவல்கள் வெளிவருமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

12

உலகைக் கலக்கும் 10 வயதுப் பெண் நிருபர்!!

 
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஜான்னா ஜிஹாத் என்ற 10 வயது சிறுமி இளம் நிருபராக உலகையே கலக்கி வருகிறார்.

தான் செய்யும் பணியாலும், பேசும் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்துவிடும் இச்சிறுமி தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்தினரின் கொடுமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இஸ்ரேலில் உள்ள நபி சலே என்ற கிராமத்தை சேர்ந்த இச்சிறுமி, மிகவும் இளம் வயதிலேயே போர் கொடூரங்களை கண்டு துவண்டுபோயிருக்கிறாள்.

தன்னை விட சிறியவனான தனது தோழனை இஸ்ரேல் இராணுவம் தன் கண்முன்னே சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்த அச்சிறுமியின் மனதுக்குள் தான் நிருபராக வேண்டும் என்று கனவு மொட்டுவிட ஆரம்பித்துள்ளது.

தான் தங்கியிருக்கும் இருப்பிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இராணுவத்தினராலும், தீவிரவாதிகளாலும் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து நிலைகுலைந்து போனார்.

இதனால், தன்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாள் இரவிலும் எழுதி வைக்க ஆரம்பித்தாள், தன்னுடைய உறவினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது, மேலும் சில அக்கிரமங்கள் போன்றவற்றை எழுதிவைத்துக்கொண்டே வந்த இவர், நாளடைவில் தனது ஐபோனை வைத்து அதனை படம்பிடிக்க ஆரம்பித்தாள்.

7 வயதில் நிருபராக அவதாரம் எடுத்த இச்சிறுமி, தான் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சர்வதேசஅமைதிப் போராட்டக்காரர்கள், பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

இச்சிறுமி குறித்து அவரது தாயார் கூறியதாவது, எனது மகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன், சிறு வயதிலேயே வன்முறையை எதிர்த்து போராடுகிறான் என்பது இந்த உலகத்துக்கு எவ்வளவு பெரிய பாடம் என கூறியுள்ளார்.

தனது நிருபர் பணிகுறித்து சிறுமி கூறியதாவது, கண்ணில் காண்பவற்றை எல்லாம் புகைப்படம் எடுக்கமாட்டேன், வன்முறை செயல்கள் எங்கு அத்துமீறி நடக்கின்றனவோ அதனைத்தான் உலகுக்கு அம்பலப்படுத்துவேன்,

தொலைக்காட்சி, யூடியுப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி தீவிரவாதிகள்மட்டும் இராணுவத்தினரின் குற்றங்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறேன், நான் செய்யும் பணிமிகவும் ஆபத்தானது, பலமுறை எனது வீடு இராணுவ வீரர்களின் கண்ணீர்புகை குண்டுகளுக்கு ஆளாகியுள்ளது என கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டு உலகின் மிகச் சிறிய நிருபராக ஜான்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் அம்மாவுடன் ஜெருசலம், ஹெப்ரான், நப்லஸ், ஜோர்டான் பகுதிகளுக்கு பயணம் செய்து, அனுபவங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

1 2 3 4 6

ரஜினியை கௌரவிக்கும் மலேசிய அரசு!!

Rajani

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை கௌரவிக்க அஞ்சல் தலை வெளியிட மலேசியா அரசு முடிவு செய்துள்ளது.

அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன.

அங்கு வாழும் மலாய் மற்றும் தமிழ் மக்களிடம் ரஜினி நன்றாக பேசி மகிழ்ந்தார். மேலும், ரஜினி படத்துக்காக பல்வேறு இடங்களில் படம்பிடிக்க சிறப்பு அனுமதியும் அந்நாட்டு அரசு அளித்தது.

இந்த நிலையில் ரஜினியைக் கெளரவிக்க சிறப்பு அஞ்சல் தலை வெளியிடவும் மலேசியா அரசு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் தயாசிறிக்கும் எனக்கும் முரண்பாடுகள் இல்லை : டில்சான்!!

tillakaratane-dilshan

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும், தனக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அணியின் வீரரான திலகரட்ன டில்சான் மறுத்துள்ளார்.

மேலும் ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே என குறிப்பிட்டுள்ள டில்சான் தானும், அமைச்சரும் சந்தித்து ஏறக்குறைய 4 மாதங்கள் ஆவதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக அமைச்சர் தயாசிறியை பங்களாதேசில் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போதே சந்தித்ததாக டில்சான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரம் என்றும் டில்சான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தகவல்களை டில்சான் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை டில்சானின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் நேற்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடக செயலாளரும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டு யானை தாக்கியதில் 6 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு : தந்தை படுகாயம்!!

Elephant attack

 

காட்டு யானை தாக்கியதில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

6 வயதுடைய இராசையா ரோஜினி என்ற சிறுமியே காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சிறுமியின் தந்தை படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 9.00 மணியளவில் வவுணதீவு கற்பகக்கேணி கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

பலியான சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிசார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.