வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 68வது விளையாட்டு விழா

13177874_809449362523351_4033517776200065682_n

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் 68வது நிறைவையொட்டி நடாத்தும் 16வது விளையாட்டுவிழா சனிக்கிழமை (04.06.2016) காலை 7 மணிக்கு புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறுவுள்ளது.

பொதுவான போட்டிகள், வடக்கு-கிழக்கு மாகாணம் மட்டுப்படுத்தப்பட்ட 115 மைல் சைக்கில் ஓட்டம், 4பேர் கொண்ட 30நிமிட நேர கரப்பந்தாட்டம், வவுனியா மாவட்டங்களுக்கான போட்டியில் 10 மைல் மரதன் ஓட்டம், ஆண்கள் 5மைல் மரதன் ஓட்டம், பெண்கள் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெறவுள்ளன.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரசித்தி பெற்ற கழகமாக கடந்த 67ஆண்டுகளைத்தாண்டி 68வது ஆண்டில் கால்பதிக்கும் இவ்வேளையில் 16வது விளையாட்டு விழா சனிக்கிழமை இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விளையாட்டு விழாவில் கடந்த வருடங்களில் இடம்பெற்றது போன்று பெறுமதியான பரிசில்களையும் வழங்கி வடக்கு கிழக்கு வீர வீராங்கனைகளை ஊக்குவிப்பதுடன் நிகழ்வில் பங்கு பற்றவுள்ள வீர வீராங்களைகள் குறித்த விளையாட்டுக்கழகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

0771108423
0775381742

13310405_141859746226593_8291351619634892242_n 13331077_141859846226583_955401811687414875_n 13333004_141859772893257_4985240450808458943_n 13346803_141859709559930_1915842072884444055_n

வவுனியாவில் மாதிரிக் கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

 
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் மாதிரிக் கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(02.06) காலை 10 மணியளவில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீடமைப்பு அதிகார சபையின் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் செமட்ட செவன திட்டத்தின் அனைவருக்கும் நிழல் மாதிரிக் கிராமத்திற்கான 50 வீட்டிற்கான திட்டத்தில் முதற்கட்டமாக 25வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இடம்பெயர்ந்து வீடுகள், காணிகள் அற்ற குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா மானிய அடிப்படையிலும் மூன்று இலட்சம் ரூபா கடனடிப்படையிலும் இத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதனுடன் இணைந்து குடாக்கச்சக்கொடி பகுதியிலும் இன்று 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் பி.ஏ.கருணதாசா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் ஊடக இணைப்பாளர் சிவலிங்கம் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், அப்பகுதி கிராம உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC04314 DSC04316 DSC04317 DSC04324 DSC04331 DSC04341

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞன் பலி : நால்வர் படுகாயம்!!

 
வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல்கட்டிப் பகுதியில் நேற்று(01.06.2016) மாலை உறவினர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட முரண்பாட்டில் ஏற்ப்பட்ட கத்திக்குத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல்கட்டி பிரதேசத்தில் நேற்று மாலை உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கத்திக்குத்து வரை சென்றுள்ளது. இக் கத்திக்குத்தில் பழனியாண்டி ஜெயசீலன் ( 28வயது) என்ற இளைஞன் பலியானதுடன் இருபெண்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபரும் காயமடைந்துள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3

கணவன் இறந்தால் மனைவி குழந்தை பெற புதிய சட்டம்!!

1 (9)

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.ஸ்பெயினை சேர்ந்த மரியானா கோமெஸ் தூரி என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். இந்நிலையில் தனது கணவரின் விந்து அணுக்களை பாதுகாத்து வைத்திருந்த மரியானா அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவர் விரும்பினார்.

இவர்கள் இருவரும் பாரிசில் வாழ்ந்த வந்த போது இது தொடரபான பிரான்சின் சட்டம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். பிரான்சில் செயற்கை கருவூட்டல் என்பது மலட்டு ஜோடிகளுக்கு மட்டுமே நடைமுறையில் அதிகம் உள்ளது. இதனால் இவரின் விருப்பத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.இந்நிலையில் சட்டங்கள் ஒருவரின் உரிமைகளை பறிக்க கூடாது என்று கூறி மரியானா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை ஒரு சிறப்பு வழக்காக எடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.

 

தாமதமாக வந்த அஞ்சலி படத்திலிருந்து நீக்கம் : படக் குழுவினரின் அதிரடி முடிவு!!

Actress-Anjali-New-Photos-From-Geethanjali-Movie-Songs-Launch-9

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின் கால்ஷிட் கிடைப்பதே பெரிது. அவர்கள் கால்ஷிட் கொடுத்தாலும் சொன்ன நேரத்திற்கு வருவார்களா? என பலரும் காத்திருப்பார்கள்.இந்நிலையில் கன்னட சினிமாவில் சக்கரவர்த்தி என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க கமிட் ஆனார்.

முதல் நாளே படப்பிடிப்பிற்கு அஞ்சலி லேட்டாக வர, படக்குழுவினர்கள் பேசி அந்த படத்திலிருந்து அஞ்சலியை நீக்கி விட்டார்கள். தற்போது இவருக்கு பதிலாக தீபா சன்னதி நடிக்கவுள்ளார்.

 

திருமணத்திற்கு மறுத்த பெண்ணை உயிருடன் எரித்த கொடூரம்!!

jj

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா சதகத்(வயது 19).இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே கோரிக்கையை நிராகரித்துள்ளார்.இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார்.அவரும், நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு மரியாவை கொடுமைப்படுத்தியதுடன், உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மரியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பாடசாலை மாணவனால் கர்ப்பமடைந்த ஆசிரியை!!

Teacher-got-herself-pregnant-by-13-year-old-student
அமெரிக்காவில் 13 வயது பள்ளி மாணவன் மூலம் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.Houston நகரில் உள்ள Stovall நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த Alexandria Vera என்பவர், தனது வகுப்பை சேர்ந்த 13 வயது மாணவன் மீது காதல் கொண்டுள்ளார்.

பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அம்மாணவனுடன் பேசிய அவர், ஒருநாள் அம்மாணவனின் கைப்பேசி எண்ணை வாங்கியுள்ளார்.கைப்பேசி மூலம் உறவை வளர்த்துக்கொண்ட அவர், ஒருநாள் இம்மாணவனின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவனது வீட்டிற்கு சென்று உறவு கொண்டுள்ளார்.

பலமுறை இவ்வாறு நடந்ததன் மூலம் ஆசிரியை கருவுற்றார், இந்த ஆசிரியைக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவனுடன் ஏற்பட்ட தவறான உறவால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தன் காரணமாக கருவை கலைத்துள்ளார், ஒரு கட்டத்தில் இவர் மீது வகுப்பு மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் வகுப்பறையில் மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தியுள்ளார், இந்நிலையில் இவர் மீது பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.விசாரணையின் போது மாணவனின் குடும்பத்திற்கு தெரிந்தே தான் பழகியதாகவும், மாணவன் தன்னை பெற்றோரிடம் பெண்தோழி என்றே அறிமுகம் செய்ததாகவும், பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் தான் பங்கேற்றதாகவும் Vera குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது இவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜரான Vera 1 லட்சம் டொலர் தொகையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

வவுனியா வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை வெளியே வைத்தால் சட்டநடவடிக்கை : பொலிசார்!!

424

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள், குப்பைகள, பொலித்தீன் பைகள் போன்றவற்றை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக வைத்தால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கம் துண்டுப்பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

அப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின்படி இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுப் பொருட்களை கூடையில் அல்லது பைகளில் போட்டு வைத்து நகரசபையின் குப்பை அகற்றும் வாகனம் வரும்போது அவர்களிடம் கையில் எடுத்துக் கொடுக்கவும். குறிப்பாக இரவு நேரங்களில் கடைக்கு வெளியே குப்பைகள், கூடைகள், பைகள் என்பவற்றை வைக்க வேண்டாம்.

மேலும் வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேறும் பொலித்தீன் கழிவுகளை எக்காரணம் கொண்டும் வியாபார நிலையத்திற்கு முன்னால் போடவேண்டாம். இவ்வேண்டுகோளிற்கு வர்த்தக நிலையத்தினர் ஒத்துழைப்பு வழங்கி நகரை சுத்தமாக வைத்திருந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்வதுடன் இவ் அறிவித்தலை கருத்திற் கொள்ளாது செயற்படும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். என்று மேலும் அத் துண்டப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணத்திற்கு பரிசாக கிடைத்த மரணம்!!

lovelydisgrace.com - acidente fatal- imagens fortes
திருச்சி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.லால்குடி வட்டம், டால்மியாபுரம் அருகேயுள்ள கல்லகம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் இளையராஜா (26). லாரி ஓட்டுநர்.இவர் இதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தியை (17) காதலித்து, கடந்த 21-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு நிலவியது.இந்நிலையில், ஆனந்தியின் அண்ணன் அருண், இளையராஜாவை அடித்து கொலை செய்துள்ளார்.தகவலின் பேரில், பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இளையராஜாவின் உறவினர்கள் கல்லக்குடி காவல் நிலையம் முன்புசாலை மறியலில் ஈடுபட்டனர்.கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக பொலிசார் உறுதி அளித்ததன் பேரில், மறியல் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக கல்லக்குடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளம் வரும் விடயம் முன்கூட்டியே தெரிந்தமையால் தான் பாராளுமன்றத்தை பாதுகாத்தோம் – அமைச்சர் சம்பிக்க!!

sampika
சீரற்ற காலநிலையினால் வெள்ளம் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே தெரிந்துக் கொண்டமையால் பாராளுமன்றத்தையும், அதனைச் சூழுவுள்ள பிரதேசத்தையும் பாதுகாக்க முடிந்ததாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.மேலும், எமது உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் வெள்ள நிலைமையின் போது செயற்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட அதிகமான இடங்களுக்கு தனியாகவும், குழுவாகவும் சென்று பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்கள் எனவே அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் குநிப்பிட்டுள்ளார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அனர்த்த நேரத்தின் போது விமானப்படையினர், இராணுவத்தினர்மற்றும் கடற்படையினர்,பொலிஸாரின் சேவைகள் அளப்பரியதாகக் காணப்பட்டது. எனவே அவர்களுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19 ஆம் திகதி பெய்த அடைமழையின் போது பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாம் அனைவரும் யோசித்தோம்.இதேப்போல் தான் 2010இல் பாராளுமன்றம் வெள்ளத்தால் மூழ்கியதால் பல நட்டங்கள் எமக்கு ஏற்பட்டது.ஆனால், இம்முறை கடற்படையினர் முன்கூட்டியே பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனால் தான் பாராளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து மீட்டெடுக்க முடிந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இன்று உலக நாடுகள் அனைத்தும் இயற்கை அனரத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம் இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல.ஆனால், ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க எம்மால் முடியும்.

அதனால் தான் கொழும்பு நகரில் காணப்படும் சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வாகனங்களின் விலை அதிகரிப்பை பத்திரிகை ஊடாகவே அறிந்தேன் – ஹர்ஸ!!

Harsha-De-Silva-640x400
வாகனங்களின் விலை அதிகரிப்பை தான் பத்திரிகை வாயிலாகவே அறிந்துக்கொண்டதாக பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன் எனது அமைச்சுப் பதவிக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.இதேவேளை , வாகனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சர் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்கூட்டியே நடத்தவில்லை என்று தெரிவித்த பிரதிஅமைச்சர் வரி அதிகரிப்பே வாகனங்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று நிதிஅமைச்சர் கூறும் கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்!!

Fat

1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

2. கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

3. சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

4. பெருஞ்சீரகத்தைப் பொடியாக்கி, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

5. எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

6. நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

7. சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்ப்பூசணி, புரூகோலி, அப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

8. நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள் : இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு!!

Cement

சீமெந்தின் விலையானது 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த விலை அதிகரிப்பு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை வழங்கியுள்ளது.

இதற்கமைய 870 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து ஒரு மூட்டையின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக 5 வகையான சீமெந்து நிறுவனங்களின் சீமெந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருமகனால் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி மரணம்!!

1 (67)
மருமகனால் தாக்கப்பட்ட ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி இன்று (02) உயிரிழந்துள்ளார்.கடந்த மாதம் 25ஆம் திகதி குறித்த பொலிஸ் அதிகாரியின் மருமகன் தனது மனைவியையும், மாமியாரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த நபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரியின் மனைவி பலத்த காயங்களுக்குள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.மேலும் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆடை விற்பனை – இந்தியர்கள் இருவர் கைது!!

arrest (1)
சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுப்பட்டு வந்த இரு இந்தியர்கள் உட்பட இலங்கைப் பெண் ஒருவரை கண்டி சுற்றுலாத் துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாரின் திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களான இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த இந்தியர்கள், இலங்கை பெண் ஒருவரின் ஆதரவுடனேயே இவ்வாறு ஆடை விற்பனைகளில் ஈடுப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபர்களான மூவரும் இன்று கண்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு தகுதிபெறாத மேற்கிந்தியத் தீவுகள் அணி!!

WI

மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 1998 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை 2 ஆவது முறையாக வென்று வரலாறு படைத்தது.

இதற்கிடையே, 50 ஓவர் உலகக் கிண்ண போட்டி இடம்பெற்று வருவதால் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் அவசியமற்றது என தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) சம்பியன்ஸ் கிண்ண போட்டியை இரத்து செய்வதாகவும், அதற்கு பதிலாக டெஸ்ட் சம்பியன்ஷிப் அறிமுகம் ஆக இருப்பதாகவும் அறிவித்தது.

ஆனால் அடுத்த ஆண்டே டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்று கூறிய ஐ.சி.சி. மீண்டும் 2017 ஆம் ஆண்டு முதல் சம்பியன்ஸ் கிண்ண போட்டி தொடரும் என்று அறிவித்தது.

இதன்படி 8 ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிக்கு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் தகுதி பெறவில்லை.

இந்த நிலையில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி ‘ஏ’ பிரிவில் உலக சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 18 ஆம் திகதி இடம்பெறும். அப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (ரிசர்வ் டே) அந்த போட்டி மீள நடத்தப்படும்.

போட்டி அட்டவணையை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும் போது, ‘ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம் குறுகிய காலத்தில் நடத்தப்படும் துல்லியமான ஒரு போட்டித் தொடராகும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இந்த போட்டி உற்சாகமாக இருக்கும்.

இந்த சம்பியன்ஸ் கிண்ணம் வெறும் ஒரு நாள் போட்டித் தொடர் மட்டும் அல்ல. இந்த போட்டி முடிந்து அடுத்த 3 மாதங்களில் 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கான தரவரிசை தகுதி காலம் முடிவுக்கு வருகின்றது. எனவே சம்பியன்ஸ் கிண்ண போட்டியின் மூலம் ஒவ்வொரு அணிகளும் பெறும் தரவரிசை புள்ளி மிக முக்கியமானதாக இருக்கும்’ என்றார்.