வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலத்தில் இன்று இடம்பெற்ற வாணி விழா! (படங்கள் இணைப்பு)

 வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலத்தில் இன்று(21.10.2015) வாணிவிழா காலை நிகழ்வுகள் அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் வித்தியாலயத்தில் நடை பெற்றன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கௌரவ மாகாணசபை உறுப்பினர்களான திரு.M.P.நடராஜ் அவர்களும்,இந்திரராஜா அவர்களும்,சிறப்பு விருந்தினராக முன்னைநாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.பாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு விழாவை அலங்கரித்து ,உரைகளும் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சிகள்யாவும் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழையும் பிரதிபலிப்பனவாக அமைந்திருந்தன.

சிவதாண்டவம் எனும் நடனம்,கரகம் மாணவமாணவிகளின் குழுப்பாடல்கள்,கவிதைகள் தேவிமகத்துவம் எனும் பஜனைப்பாடல்கள் ,மனிதவாழ்வை மேம்படுத்துவது ஆன்மீகமா?அறிவியலா? எனும் பட்டிமன்றம் சிலம்புடைத்த கண்ணகி என்ற நாடகம் என்பன நிகழ்வை மெருகூட்டின.


இங்கு உரைநிகழ்த்திய மாகாணசபை உறுப்பினர் கௌரவ M.p.நடராஜ் “பாடசாலைஎன்னும் சமூகநிறுவத்தின் பயனாளிகளான மாணவர்களும்,பெற்றோரர்களும் அந்நிறுவனத்தின் உண்மையான பங்காளிகளாகவும் மாற வேண்டும்,பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்பினால் போதும் என்று இருந்துவிக்கூடாது” என்று தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவரைத்தொடர்ந்து உரைநிகழ்த்திய கௌரவ மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா “பாடசாலையின் உயர்ச்சிக்கு என்றும் நான் துணைபுரிவேன் எனது உதவிகளை இப்பாடசாலைக்கும் வழங்குவேன்” என்றார்.


சிறப்பு விருந்தினர் திரு.மு.பாலசிங்கம் தனதுரையில் “புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வந்தவுடன் நகரப்புறங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பாடசாலைப்பிள்ளைகளின் பெறுபேற்றுக்கு தாங்கள்தான் காரணம் எனக்கூறி உரிமை கொண்டாடுகிறார்கள், பதாதைகள் கட்டுகிறார்கள் இதில் வேடிக்கையான இன்னுமொரு விடயம் என்னவென்றால் தான்கற்பிக்கும் பாடசாலைபப் பிள்ளைகளின் பெறுபேற்றை உயர்த்துமளவிற்கு கற்பிக்காது தனியார் வகுப்புக்களில் கற்கும் ஆசிரியர்களில் சிலர் ஏனைய பாடசாலைப் பிள்ளைகளின் பெறுபேற்றுக்கு உரிமைகூறுகிறார்களே! இதில் பெற்றோர்கள் விழிப்படைய வேண்டும். உண்மையாக,பிள்ளைகளின் பெறுபேற்றுக்கு உரிமை கூறக்கூடியவர்கள் தனியார் கல்விநிலையம் செல்லாத வறிய குடும்பங்களைச்சேர்ந்த, பாடசாலைப்படிப்பை நம்பிப் பிள்ளைகள் படிக்கின்ற கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தைப் போன்ற பாடசாலை அதிபர்,ஆசிரியர்களே!”எனகுறிப்பிட்டிருந்தார்.

படங்கள்:தம்பிப்பிள்ளை சுதன்

1506583_452911034910419_5232472557631956211_n 10356015_452910951577094_8248950765887525352_n 11223640_452910834910439_2867307139713840731_n 11224513_452910534910469_7282725554296572343_n 12111951_452910668243789_601818784049978581_n 12112027_452911201577069_2581835208508805888_n 12115777_452911101577079_7000114467877330265_n 12115958_452910624910460_5552230117262033587_n 12118662_452910744910448_1683519011442046070_n 12119153_452910874910435_4688776838491099217_n

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளபிள்ளைகளுக்காக விழிப்புணர்வுத் திட்டம்!

12118635_985766971483561_2999237308027352272_n

சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்புக்காக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன்  நியூஸ்பெஸ்ட்  மற்றும் சக்தி  சிரச  வலையமைப்புடன் இணைந்து முன்னெடுக்கும் ”பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் நாடுதழுவிய ரீதியில் பத்து மாவட்டங்களில் இடம்பெறுகின்றது .

அவற்றில் வடமாகாணத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா அரச அதிபர் எஸ் . பந்துல ஹரிச்சந்திர தலைமையில்  நாளை மறுதினம் 23.10.2015  வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற உள்ளது.

வவுனியாவில்  நடைபெறும் இந்த நிகழ்வில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான சத்திய பிரமாணம் எடுக்கும் இந் நிகழ்வில்  அனைத்து தரப்பு பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள்  ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் இளைஞர் கழகங்கள்   உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது .

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் வாணி விழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவுகள்!(படங்கள்)

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் வாணிவிழாவில் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக 16.10.2015 அன்று சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் s.sவாசனின் முப்பெரும் தேவிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது .

தொடந்து திங்கட்கிழமை யா/யூனியன் கல்லூாியிஆசிரியர் திரு.த.ஶ்ரீ பிரகாசின் மாணவா்கள் சந்தை மதிப்பு என்னும் உரையும் இடம் பெற்றது தெடா்ந்து ஆசியா் செல்வராசாவின் உரையும்,வித்தியாரத்னா வரதன் ஆசிாியாின் உரைகளும் நடைபெற்றன.

படங்கள்:தம்பிப்பிள்ளை சுதன்

12109006_452890614912461_1333160243924209216_n10380314_452890638245792_1443404886861723604_n 12105716_452890678245788_806588213560597538_n  12115761_452890798245776_7862187033917353092_n 12144913_452890748245781_6961603087621129094_n 12166715_452017951666394_1913265602_n 12168083_452017948333061_226388612_n

சமாதான சுதந்நிர தமிழர் சகவாழ்வு சர்வதேசத்தின் பொறுப்பு : வன்னிமாவட்ட பா.உ சி.சிவமோகன்!!

16.10.2015 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலம் சென்ற சிவமனி செல்வராசா (ஆசிரியர் புதுக்குடியிருப்பு) அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டர். இதில் தெரிவுசெய்யப்பட்ட 89 பயனாளிகளுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டது. சி.தவசீலன் (லண்டன்) அவர்களின் அனுசரணையுடன் இடம்பெற்றது. தொடர்ந்து வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள்; உரையாற்றுகையில்.

என்றும் தமிழர்களை ஏமாற்ற வரும் அரசுகள் மட்டுமல்ல சிங்கள அரச அதிகாரிகளும் முன்நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி பெற்றுத்தர குரல் கொடுக்காத சர்வதேசம் வெறுமனே வெறும் பேப்பர் அறிக்கைகளை நிறைவேற்றி எவ்வித பயனும் இல்லை பல பசப்பு வார்த்தைகளை கூறி எமது விடுதலைப்போராட்டத்தை மழுங்கடித்த சர்வதேச நாடுகள் இன்று மௌனமாக இருப்பது உலகநீதி செத்துவிட்டது என்பதற்கு சான்றாகிறது.

உடன் எமது சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டு பயங்கரவாத சட்டங்கள் நீக்கப்பட்டு ராணுவமேலாதிக்கம் நீக்கப்பட்டு எமது மக்கள் நின்மதியாக வாழ வழிஏற்படுத்தி தரப்படுவது சர்வதேச நாடுகளின் பொறுப்பாகும் இல்லையேல் சர்வதேச நாடுகள் சமாதான பேச்சுவார்த்தை ஏன்ற போர்வையால் எமது விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்த சந்தர்ப்பம் வழங்கியிருக்ககூடாது எனவே சமாதான சுதந்திர தமிழர் சகவாழ்வு உறுதிப்படுத்துவது சர்வதேசத்தின் பொறுப்பு ஆகும் என்று தெரிவித்தார்.

DSC_9484 DSC_9490 DSC_9495 DSC_9499 DSC_9503 DSC_9512 DSC_9516 DSC_9517 DSC_9521 DSC_9525 DSC_9542 DSC_9544

வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு ஆலயத்திற்கு வடமாகாண சபை உறுபினரால் நிதி உதவி!!

வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு பகுதியிலே உள்ள பாலையடி பிள்ளையர் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபன நிதிக்காக வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் கலாச்சாரத் திணைக்கள உத்தியோகத்தர் நித்தியானந்தம் மற்றும் ஆலய பரிபாலனசபை செயலாளர் அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.

IMG_5322 IMG_5324 IMG_5327 IMG_5331 IMG_5332 IMG_5333 IMG_5334 IMG_5337 IMG_5339 IMG_5341 IMG_5343

பிறந்த நாளில் ஓய்வை அறிவித்தார் சேவாக்!!

Shewag

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். துபாயில் இருந்து இன்று இந்தியா திரும்பியதும் அவர் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சேவாக். இதேபோன்று 2001-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சதம், 38 அரை சதங்களுடன் 8273 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

105 டெஸ்ட் போட்டிகளில் 23 சதம், 32 அரைசதங்களுடன் 8586 ஓட்டங்களை எடுத்துள்ளார். 19 டி20 போட்டிகளில் 394 ஓட்டங்களை குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரரான சேவாக் (3013), இரண்டு முறை முச்சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். பல போட்டிகளில் அணி வெற்றி பெற முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறாமல் இருந்த சேவாக், தனது பிறந்த நாளான இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இணைவதையொட்டி அவர் ஓய்வு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. சேவாக்கிற்கு இன்று 37-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா!!

Watch

அமெரிக்காவில் கடிகாரம் ஒன்றை செய்து பாடசாலைக்கு எடுத்து சென்றதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மாணவரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் படிக்கும் முஸ்லிம் மாணவரான அகமது முகமது, சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது அதை வெடிகுண்டு எனக் கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அகமது முகமதுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஒபாமா அழைப்புவிடுத்திருந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் விண்வெளி அறிஞர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிக்கையில் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட அகமது முகமது, அதிபர் ஒபாமாவுடன் கை குலுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

ஒஸ்லோவின் பிரதி மேயராக இலங்கை தமிழ் பெண் தெரிவு!!

kamsayini

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் – ஒஸ்லோ – துணை நகர முதல்வர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.

பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோ ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. இதுபற்றி முன்பே பதிவிட்டிருக்க வேண்டும். தாமதம், இந்த நல்ல செய்தியைச் சேர்த்துப் பதிவிட வைத்துள்ளது.

பல்வேறு “புகழ்பெற்ற” தொழில்களை எமது இரண்டாம் தலைமுறையினர் (உண்மையில் பெற்றோர்கள்) தேடிக் கொண்டிருக்கையில் அரசியலைத் தனது முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட கம்சி ஒஸ்லோ தொழிற்கட்சியின் துணைத் தலைவராக இளம் வயதிலேயே தெரிவானவர். இளைஞரணியில் தலைவராக இருந்து, கட்சியின் ஒஸ்லோ துணைத் தலைவராகப் பெரும் ஆதரவோடு தெரிவானவர்.

ஒப்பீட்டளவில் எம்மவர்கள் – குறிப்பாகப் பெண்கள் – அரசியலில் ஈடுபடுவது நோர்வேயைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பாகிஸ்தானியப் பின்னணி கொண்ட பெண்கள் பலர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, ஒருவர் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தாய்நாட்டை நோக்கிய அரசியற் செயற்பாட்டில் இருந்த ஈடுபாடு, எம்மிற் பலருக்கு இந்த நாட்டின் தேசிய அரசியலில் இருக்கவில்லை என்பதே உண்மை.

இரண்டிலும் சரியான அக்கறையோடு பங்கேற்று இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் கம்சாயினி. ஒஸ்லோவில் மூன்றாம் இடத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அவர் வென்றார் என்பது அவரது உழைப்புக்கு வாக்காளர்கள் கொடுத்த பரிசன்றி வேறென்ன?

பாரம்பரியமாகத் தமிழர்கள் தெரிவு செய்யும் கல்வி – தொழிலைத் தெரிவு செய்யாமல், அரசியலில் முன்னோடியாக வர அவரை ஊக்குவித்த பெற்றோரையும், அடிக்கும் அலையோடு அள்ளுண்டு போகாமல், இந்தத் துறையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி சூடியுள்ள கம்சாயினிக்கும் மனம் நிறைய வாழ்த்துகள்.

தகாத உறவு மூலம் 300 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய ஆட்டோ சாரதி!!

saleem_-_the_auto_driver

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், 300 பெண்களுக்கு தனது நோயைப் பரப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற 31 வயதுடைய குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு, ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு இருந்துள்ளது. அண்மையில் இவரை, நண்பரின் வீட்டில் திருடியதாக கூறி பொலிசார் கைது செய்து விசாரித்தபோது, இந்த உண்மைகள் தெரியவந்ததுள்ளன.

இவர் விலைமாதர்களைத் தேடி உறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் தனது முச்சக்கர வண்டியில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் தாய்மார்களையும் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் அவர் பாதுகாப்பில்லாமல் பெண்களுடன் உறவு கொண்டுள்ளார்.இவ்வாறு இவர் சுமார் 300 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் தொடர்பு வைத்திருந்ததால் அவர்களுக்கும் எச்ஐவி நோய் தொற்றியிருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில், திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் விஷால் கைது!!

1 (8)மும்பையை சேர்ந்த ஹிந்தி நடிகர் விஷால் தக்கர்(வயது27). இவர் ஹிந்தியில் வெளியான ‘முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’., ‘டாங்கோ சர்லி’, ‘சாந்தினி பார்’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார். மேலும் பல்வேறு டி.வி. தொடர்களிலும் நடித்து உள்ளார்.

இந்தநிலையில், விஷால் தக்கர் மீது மும்பை சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் 26 வயது டி.வி. நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் தெரிவித்தார். அந்த புகாரில், சம்பந்தப்பட்ட நடிகர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்ததாகவும், அதன்பின்னர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விஷால் தக்கர் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் நடிகர் விஷால் தக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது!!

1 (11)

பதவிய – ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26 வயதான பட்டதாரியாவார். மேலும் சம்பவத்தில் 09 – 10 வயது மதிக்கத்தக்க மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைதாகியுள்ளனர். சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொண்டைய்யாவுக்கு பிணை – இரு வழங்குகளில் இருந்து விடுவிப்பு!!

1691896055Untitled-1

கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவுக்கு பிணை வழங்கி கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இரண்டு வழங்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழங்கில் கைதாகி, பின்னர் குற்றத்தை தானே செய்ததாக ஒப்புக் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இவரது மரபணு சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுவுடன் ஒத்துப் போகவில்லை. அத்துடன் கொண்டைய்யாவின் சகோதரர் சமன் ஜெயலத் என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப்போனது.

இதனையடுத்து கொண்டைய்யா குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

வெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் போதைப் பொருளுடன் கைது!!

1 (8)

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.போருல்லே பகுதியில் வைத்து இவர் உள்ளிட்ட மூவர் 111 கிராம் 540 மில்லி கிராம் போதைப் பொருளுடன் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசம் இருந்து பல்வேறுபட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போருல்ல பகுதியிலுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று பகல் மற்றும் மாலை இவர்கள் கைதாகியுள்ளனர்.

இலங்கை வரும் ஐ.நா அதிகாரி மிரொஸ்லாவ் ஜென்கா!!

miroslav jenca_CI (1)

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும், அத்துடன் அவர் இலங்கையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார்.

மேலும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு!!

1 (68)அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தௌிவுபடுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது.

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!!

16332744660xnfdj67நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியதோடு, தாயின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.