வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

11

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .

க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க அரிய சந்தர்ப்பம்.

17  வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்  தொடர்ந்தும் கற்பதற்கான அல்லது தொழிலை தேடுவதற்கான பயிற்சி நெறிகளை  வவுனியா தொழில்நுட்ப கல்லூரி 2016  இல் ஆரம்பிப்பதற்குரிய  விண்ணபங்களை கோரியுள்ளது.

மேற்குறித்த பயிற்சி நெறிக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும்வழங்கப்கபடுவதோடு NVQ  levels 3,4,5  தரச் சான்றிதழ்களும் வழங்க படும்.

அனைத்து கற்கை நெறிகளும் இலவசம்!

விண்ணப்பங்களை வவுனியா மன்னார் வீதி நெளுகுளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பெற்றுகொள்ள முடியும் .

விண்ணப்ப முடிவு திகதி : 30.10.2015(வெள்ளிக்கிழமை )

தொடர்புகளுக்கு : அதிபர் தொழில்நுட்ப கல்லூரி வவுனியா

 தொலைபேசி :024-2223664 ,024-2226720,024-2050177

கனடா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி!!

Canada

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

மனிதவுரிமை ஆர்வலருமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ஷரூச்பார்க் இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இதேவேளை புதிய சனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் இத் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகளால் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இதன் மூலம் 9 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்குவந்துள்ளதுடன், ஜஸ்டின் ட்ருதா தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது மாத காலப் பகுதியில் 2200 பேர் விபத்தினால் உயிரிழப்பு!!

Accidnt

2015 ஆம் ஆண்டின் முதல் 09 மாத காலப்­ப­கு­திக்குள் 2,200 பேர் வீதி விபத்துக்களால் உயி­ரி­ழந்­துள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது.

2014 ஆம் ஆண்டு வீதி விபத்­துக்­களால் 36,050 பேர் காய­ம­டைந்த நிலையில் அவர்­களுள் 2,440 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வீதி விபத்­துக்­களால் உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­ரிக்­கின்­றமை கவ­னித்துப் பார்க்க வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும். எனவே வீதி விபத்­துக்­களை குறைத்து அதன் மூலம் உயி­ரி­ழப்­புக்­களை குறைக்க உட­னடி நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

வீதி விபத்­துக்­களை குறைக்க வேண்­டு­மாயின் அது தொடர்பில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வை ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அத்­துடன் வீதிப் பாது­காப்பு தொடர்பில் புதிய சட்ட திட்­டங்­க­ளையும் அமு­லுக்கு கொண்டு வர­வேண்டும் வீதி பாது­காப்பு தொடர்பில் புதிய தேசிய கொள்­கையை அமுல்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். இதற்கென நீண்ட கால திட்டமொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற தர்சிகா!!

Dharsika

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எப்பொழுதும் முன்வைத்தே சுவிஸ் அரசியலில் ஈடுபடுவேன் என சுவிஸ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற தர்சிகா தெரிவித்துள்ளார்.

இவர் பாராளுமன்றத்திற்கான தகுதியை இழந்திருப்பினும் போட்டியிட்ட வெளிநாட்டவர்களுள் அதிகளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 25 பேர் கொண்ட பெண்கள் அணியின் சார்பில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

மேலும் இதில் இத் தேர்தலில் போட்டியிட்ட அநேகமான வேட்பாளர்கள் 2ம், 3ம் முறையும் போட்டியிட்டுள்ளனர்.. அவர்களையும் பிந்தள்ளி ஈழத் தமிழ் பெண் வேட்பாளரான தர்சிகா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமை போட்டியிட்ட ஏனைய வெளீநாட்டவர்கள் மத்தியில் அபரிதமான வளர்ச்சியைக் காட்டுவதாக சுவிஸ் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர் போட்டியிட்ட SP கட்சி எதிர்வரும் காலங்களில் கட்சி சார்ந்த ஒரு முக்கிய பதவியை தர்சிகாவுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவ் வருட இறுதியில் தூண் மாநகர சபை உறுப்பினர் பதவியும் தர்சிகாவுக்கு கிடைக்கவுள்ளமையும் இங்கு குறிப்ப்டத்தக்கது.

டயலொக் கிரிக்கெட் விருதுகள் : குஷல் பெரேராவிற்கு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது!!(படங்கள்)

இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது.

​மேலும் குமார் சங்கக்காரவுக்கு பீப்பில்ஸ் பிளையர் ஒப்த இயர் விருதும் அஞ்சலோ மெத்தியூசுக்கு டயலொக் கிரிக்கெட்டர் ஒப்த இயர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8

50 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு!!

cigarettes2

கடுகன்னாவ பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த, ஒருதொகை சிகரட்டுக்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

187,000 சிகரட்டுகளுடன் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றை இன்று மாலை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இன்றும் மழை!!

Rain

மழையுடனான காலநிலையை இன்றும் எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 9 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 07.30முதல் இன்று இரவு 07.30 வரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுபிலி குறிப்பிட்டுள்ளார்.

கனடா பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி : ராதிகா உட்பட ஐவர் தோல்வி!!

hari

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.

ஹரி ஆனந்தசங்கரிக்கெதிராக இனவாதம் கலந்த வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும், அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

கனடியப் பல்லினத்தவரிடையே மாத்திரமல்லாது, உலகத் தமிழ் தலைவர்களிடமும் மிகுந்த நட்பைப் பேணும் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலில் போட்டியிட்ட போதும் இதேபோலவே அவரிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை முறியடித்து அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்தக் கட்சியின் சார்பான வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான கட்சி உள்ளகத் தேர்தலின் போது, உலகத் தமிழர் பேரவை வன.பிதா. இமானுவேல், கௌரவ இரா.சம்பந்தன் உள்ளிட்ட 72 தலைவர்கள் ஹரி ஆனந்தசங்கரியை ஆதரித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அன்றைய காலகட்டத்தில் பார்க்கப்பட்டது.

இன்று அத்தெரிவுகள் சரியானவை என்பதை நிரூபிப்பதாக அவர் பெற்ற வெற்றியுள்ளது. வெற்றிக் கொண்டாடங்கள் ஸ்காபரோ நகரத்தின் பாரிய மண்டபமொன்றில் வெகு உற்சாகத்தோடும் பலரது பங்களிப்போடும் இடம்பெற்று வருகின்றது.

 

கனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால், ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இவர் தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர். தந்தையின் தொடர்பில்லாமல் தாயாராலேயே வளர்க்கப்பட்டவர். பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள் கலாச்சாரா பிரழ்வால் வழிதவறிச் செய்ய முயன்ற போது அவர்களிற்காக உதவும் அமைப்பை ஸ்தாபித்து தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகின் தமிழ்த் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவர்.

ராதிகா சிற்சபைஈசன். இந்தத் தேர்தலில் வெற்றிக் கனியை சில ஆயிரம் வாக்கால் தவறவிட்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்றவர்.

இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறியவர். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விவாகரங்களிலும் அக்கறை கொண்டவர். நுடநஉவழைn_உயயெனய_வயஅடைல-293ஒ150-உழில

போதகர் கந்தரத்தினம் சாந்திக்குமார். ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், இங்குள்ள தொலைதொடர்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.

மார்க்கம் தோன்கில் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா இத் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். தமிழர்களின் விளம்பரங்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி என்ற கைக் கொத்தின் பதிப்பாளராகவுள்ளார்.

ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரத்தினம் லிபரல் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.

கனடாவிற்கு 2007ம் ஆண்டு வருகை தந்து பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர். இலங்கையில் பிறந்த இவர் தனது மூன்று வயதில் இந்தியா சென்று அங்கு தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.

பிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் வெற்றிபெறவில்லை.

இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறிய கார்த்திகா குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள்இ நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

Ca

-கனடா மிரர்-

16 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சிக்கல்!!

Abuse

16 வயதான தனது மகளுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கிய தந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளம் – மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாட்டாளரான தாய் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கணவரைப் பிரிந்து கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் தங்கியுள்ளார்.

இதன்படி இவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளையும் சந்தேகநபர் பொறுப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தனது மூத்த மகள் சுகவீனமுற்றிருப்பதாக அறியக் கிடைத்ததை அடுத்து ஆராய்ந்து பார்த்த வேளை அவர் ஆறு மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளை துஷ்பிரயோகம் செய்தது தனது கணவர் என, தன்னிடம் அவர் குறிப்பிட்டதாகவும் தாய் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. புத்தளம் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர்சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் முழுப்பட்டியல்!!

Vishalll

நடிகர் சங்க தேர்தல் 10 வருடங்களுக்கு பிறகு நேற்று தான் நடந்தது. இதில் பாண்டவர் அணி, சரத்குமார் அணி என முதன் முறையாக இரண்டு அணிகள் கடுமையாக மோதியது.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே பாண்டவர் அணி வெற்றிப்பெற்றது.

இந்த தேர்தலில் 29 பதவிக்கான போட்டியில் 25 பேர் பாண்டவர் அணியிலும், 4 பேர் சரத்குமார் அணியிலிருந்தும் வெற்றி பெற்றனர். பாண்டவர் அணி சார்பில் நடிகர் சங்க தலைவராக சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொது செயலாளர்:விஷால்
பொருளாளர்:கார்த்தி
துணை தலைவர்கள்:கருணாஸ்,பொண்வண்ணன்

இவர்களை தவிர பாண்டவர் அணி சார்பில் 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்கள்..

1-அயுப் கான்
2-ஜீனியர் பாலய்யா
3-குட்டி பத்மினி
4-கோவை சரளா
5- பூச்சி முருகன்
6- நந்தா
7- பிரேம் குமார்
8 – பிரசன்னா
9- ராஜேஷ்
10- ரமணா
11- ஸ்ரீமன்
12- சிவகாமி
13- சங்கீதா
14- சோனியா
15-தளபதி தினேஷ்
16- உதயா
17 -விக்னேஷ்
18- பால தண்டபானி
19-பிரகாஷ்
20 -பசுபதி

சரத்குமார் அணியில் வெற்றி பெற்றவர்கள்
1) நளினி
2) டி.பி.கஜேந்திரன்
3) ராம்கி
4) நிரோஷா.

வவுனியா கற்பகபுரம் படசாலைக்கு திறந்தவெளி மேடை அமைப்பதற்கான நிதி வழங்கிவைப்பு!! (படங்கள்)

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியகராசா அவர்களினால் வவுனியா கற்பகபுரம் அ.த.க. படசாலைக்கு திறந்தவெளி மேடை அமைபதற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினரான ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ஆம் நிதியிலிருந்து வவுனியா தெற்க்கு வலயத்திற்கு உட்பட்ட வவுனியா கற்பகபுரம் அ.த.க. படசாலைக்கு திறந்தவெளி மேடை அமைப்பதற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பாடசாலை அதிபர் அபிவிருத்திக்குழுச் செயலாளர் அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

01 IMG_5242 IMG_5245 IMG_5247 IMG_5249 IMG_5251 IMG_5253 IMG_5256 IMG_5259 IMG_5260 IMG_5265 IMG_5267 IMG_5268 IMG_5269 IMG_5275 IMG_5286

வவுனியாவில் கருத்தரங்கின் போது மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்!!

Fight

வவுனியாவில் இடம்பெற்ற கல்விப் பொதுச் சாதாரண தரப் பரீட்சைக்கான கருத்தரங்கின் போது மாணவர் குழுக்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுச்சாதாரண தரப்பரீட்சையில் தோற்றும் வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாட கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது சில மாணவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு கருத்தரங்கின் சிறிய இடைவேளையின் போது கைகலப்பாக மாறியது. இதனையடுத்து மாணவர்கள் பாடசாலைகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர்.

இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்ட பூங்கன்றுகள், புற்தரைகள் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

Baby

மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திவிமினி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாலியல் வன்முறைகளுக்குள்ளான ஆண்களுக்கான உலகின் முதலாவது புரட்சிகர சிகிச்சை நிலையம்!!

ab

பாலியல் வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளான ஆண்­க­ளுக்­கான உலகின் முத­லா­வது புரட்­சி­கர நிலையம் சுவீ­டனில் திறந்து வைக்கப்பட்டுள்­ளது.

நோயா­ளர்­களை பரா­ம­ரிப்­பதில் பாலியல் சமத்­துவம் பின்­பற்­றப்­படு­வதை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே சொடர்ஸ்­ஜு­ஹுஸெட் என்ற மேற்­படி மருத்­து­வ­மனை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

சுவீ­டனில் பாலியல் வன்­மு­றைக்கு உள்­ளான பெண்­க­ளுக்­கான நிலையம் ஏற்­க­னவே திறந்துவைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த நிலை­யத்தில் வரு­டாந்தம் 600-–700 பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்தப் புதிய மருத்­து­வ­மனையில் பாலியல் பலாத்­காரம் மற்றும் பாலியல் தாக்­கு­த­லுக்கு உள்­ளான ஆண்­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்கும் சிகிச்சை அளிக்­கப்­பட்­வுள்­ள­தாக தெரி­வித்த சுவீடன் லிபரல் கட்­சியின் பேச்­சாளர் ரஸ்முஸ் ஜொன்லன்ட், பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பெண்­க­ளுக்­கான சிகிச்சை நிலை­யத்தைத் தொடர்ந்து ஆண்களுக்கான முதலாவது சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்துள்ளதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

விஷால் அணியின் வெற்றிக்கு காரணம் என்ன?

Vishal

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதிக்கொண்டன. இது பெரும் போர்க்களம் போலவே சித்தரிக்கப்பட்டது.

வழக்கமாக நடிகர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதில் பெரும் போட்டி இருக்காது. ஆரவாரம் இல்லாமல் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்ற செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை நடந்த நடிகர் சங்க தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் இறங்கியது. இதனால் ஏற்பட்ட மோதல் அரசியல் கட்சிகளையும், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.

புதிதாக களம் இறங்கிய விஷால் அணியினர் சரத்குமார், ராதாரவி ஆகியோர் நடிகர் சங்க நிலத்தில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டிக் கொள்ள போட்ட ஒப்பந்தம் போட்டதை பெரும் தவறு என்று குற்றம் சாட்டினார்கள். பல முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்த சரத்குமார் இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நடிகர் சங்கத்துக்கு நிரந்தர வருமானம் வருவதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்றார்.

இதற்கு பதில் சொன்ன விஷால் நாங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என்றார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்க கட்டிடம் தனியார் கட்டுப்பாட்டுக்கு போய் விடும். நடிகர் சங்கம் என்ற அடையாளமே இருக்காது என்றார்.

அரசியல் கட்சிகளின் பிரசாரம் போல இரண்டு அணியினரும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தனர். நாடக நடிகர்களை சந்தித்தார்கள். சென்னையில் இருக்கும் நடிகர் நடிகைகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஓட்டு கேட்டார்கள்.

முதலில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களை சந்தித்தனர். அடுத்து விஷால் அணியினர் தனி பஸ் பிடித்து ஊர் ஊராகப் போய் நாடக நடிகர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு அணியினரும் தங்கள் அணிதான் பலமானது என்று காட்டுவதற்காக திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்தினார்கள்.

இதில் பேசியவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டார்கள். சரத்குமார் அணியில் அவரது பேச்சு தங்கள் அணியை நியாயப்படுத்தவதாக இருந்தது. ஆனால் ராதாரவி, சிம்பு ஆகியோர் ஒருமையில் எதிர் அணியினர் பற்றி பேசியது நடுநிலையாக இருந்த நடிகர்களை முகம் சுளிக்க வைத்தது. பல்வேறு மாநிலம், மொழி சார்ந்த நடிகர் சங்கத்தில் சாதி பற்றிய பேச்சும் எழுந்தது. இது மூத்த நடிகர்களையும், நடுநிலையாளர்களையும் காயப்படுத்துவதாக இருந்தது.

சரத்குமாருக்கு மூத்த நடிகர்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. நாடக நடிகர்களில் பெரும்பாலானோரும் இந்த அணியைதான் ஆதரித்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் நிலைமை மாறியது.

விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் தீவிரமாக வேலை பார்த்தனர். நாடக நடிகர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தனர். நலிந்த நடிகர்களை கை தூக்கி விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர். இது நாடக நடிகர்களின் ஒரு பிரிவினருக்கும், நடுநிலையில் இருந்த மற்ற நடிகர் – நடிகைகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு சரத்குமார் அணியினரும் பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அது ஏற்கனவே நடிகர் – நடிகைகள் எடுத்த முடிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

‘மாற்ற வேண்டும்’ என்று விஷால் அணியினர் எழுப்பிய கோஷம் நடிகர் – நடிகைகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தியது. வெளியூர் நாடக நடிகர்களின் ஓட்டுகள் சரத்குமார் அணிக்கு சாதகமாக இருந்தன. என்றாலும் இளைஞர்கள் நிறைந்த விஷால் அணியின் முயற்சியும், நீண்ட நாட்கள் பதவியில் இருந்தவர்களை மாற்றலாம் என்ற எண்ணமும் சேர்த்து விஷால் அணிக்கு இந்த வெற்றியை பெற்றுத் கொடுத்திருக்கிறது.

எங்கள் நாட்டை மீள எடுத்துக்கொள்ளுங்கள் : இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சும் அமெரிக்கர்!!

Eng

அரசியல்வாதிகளின் பேச்சை சகிக்கமுடியாத ஒரு அமெரிக்கர் ’தயவு செய்து எங்கள் நாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட நடந்துவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்கட்சியை சேர்ந்த 11 வேட்பாளர்கள், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இவர்களின் விவாதத்தை பார்த்து கடும் வெறுப்படைந்த ஒரு அமெரிக்கர், இங்கிலாந்து ராணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் ”பிரிட்டனின் அரசாட்சிக்கு கீழ் அமெரிக்காவை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க மக்கள் சார்பில் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் விவாதத்தை நீங்கள் பார்த்திருந்தால் என்னுடைய இந்தக் கடுமையான நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் என்பது புரியும். நன்றி. ராணியை ஆண்டவன் காப்பாற்றுவாராக”என தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தை இங்கிலாந்து ராணிக்கும், பிரதமர் டேவிட் கேமரூனுக்கும் கடந்த மாதம் எழுதியிருந்தார். இதற்கான பதில் அளித்துள்ள, பக்கிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பு அதிகாரி ”இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் விவகாரத்தில் ராணி தலையிட விரும்பவில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.