சென்னை, ராஜஸ்தானுக்குப் பதிலாக இரு புதிய அணிகள்!!

CSK

இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நிலைமை என்ன என்பதை தீர்மானிக்கும் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

ஆனால், இரண்டு அணியையும் வெட்டிவிட பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. அந்த இரண்டு அணிகளும் அடுத்த இரண்டு சீசனில் இடம்பெறாது. அதற்குப் பதில் இரண்டு புதிய இரண்டு அணிகள் 2016, 2017-ல் கலந்து கொள்ளும்.

2018-ல் 8 அணியில் இருந்து 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும். அதில் இரண்டு அணிகளும் இடம்பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கிலுள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?

Fb

நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டுமல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங்களையும் உலகோடு பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை நாடுகின்றோம்.

பிரிந்துபோன காதலி/காதலனுடன் மகிழ்ந்த நிமிடங்களை என்றைக்கோ பதிவு செய்திருந்ததை, பிரிந்து வேறு ஒருவரை மணமுடித்த பின்னர் பல ஆண்டுகள் கழித்து திடீரென பேஸ்புக் ஞாபகப்படுத்தினால்..

இதுபோன்ற சோதனையான சூழ்நிலைகளுக்கு நாம் தள்ளப்படாமலிருக்க www.facebook.com/onthisday.. இந்த பக்கத்திற்குச் சென்று நோட்டிபிகேஷன் பொத்தானை அழுத்தி, அதில் வேண்டிய மாற்றத்தை செய்துகொள்ளலாம்.

இதேபோல, நியூஸ்ஃபீட் பக்கத்திலும் நீங்கள் யாருடைய கருத்துக்களைப் பார்க்க விரும்புகின்றீர்களோ அதற்கேற்ப ‘பிரிபரன்ஸ்’ பொத்தானை அழுத்தி மாற்றம் செய்துகொள்ளலாம்.

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை!!

Sun

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது பூமிகளின் அளவாக இருப்பதாகவும், இதன் காந்தப் புலம் அதிகவேக சூரிய காற்றை வீசுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைக் கடந்த அக்டோபர் 10ம் திகதி எடுக்கப்பட்டுள்ள படம் மூலம் நாசா உறுதி செய்துள்ளது. இந்த ஒளிவட்டத் துளையானது, புற ஊதா அலைநீளத்தினால் நமது கண்களால் காணமுடியாத நிலை உள்ளதாக நாசா

டெல்லியில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பரயோகம்!!

Abuse

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு சிறுமிகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இரண்டரை வயது மற்றும் 5 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு டெல்லியின் நங்கோலி பகுதியில், வசித்து வந்த இரண்டரை வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இரண்டு பேர், பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதேபோல் கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் கடத்திச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

Tab

மிஹிந்தலை பகுதியில் மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றரை வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுகயீனம் காரணமாக குறித்த சிறுமியை அவரது தந்தை நேற்று காலை மிஹிந்தலை பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்தியர் வழங்கிய அறிவுரையின் படி மருந்துகளை சிறுமிக்கு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து தொண்டையில் மருந்து சிக்கியதில் மூச்சுவிட ஏற்பட்ட சிரமம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

30 வருட அனுபவமுடைய பாகனையே அடித்துக் கொன்ற யானை!!

Ele

கோடகவெல – மல்வத்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பாகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (18.10) காலை யானைக்கு உணவு வைக்கச் சென்ற வேளையே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே அவர் பலியாகியுள்ளார்.

மேலும் 50 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக யானைப் பாகனாக இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியாவில் இருவேறு இடங்களில் கத்தி முனையில் துணிகர திருட்டு!!

Kollai

வவுனியாவில் சனிக்கிழமை இரவு இருவேறு இடங்களில் கத்தி முனையில் துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, தட்சங்குளம் பகுதியில் சனிக்கிழமை இரவு உட்புகுந்த ஐந்து, ஆறு பேர் அடங்கிய குழுவொன்று கத்தி முனையில் அவ்வீட்டில் இருந்த மற்றும் வீட்டு இருந்தவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, காதணி உள்ளிட்ட 6 பவுண் நகைகளை திருடிக் கொண்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பூந்தோட்டம் பகுதியில் வீட்டு உரிமையாளர் வெளியில் சென்றமையால் பூட்டப்பட்டிருந்த வீடு உடைக்கப்பட்டு சுமார் ஒன்றரைலட்சம் மூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நடிகர் விஷால் மீது இரும்புக் கம்பியால் தாக்கியதில் திடீர் மயக்கம் : நடிகர் சங்கத் தேர்தலில் பரபரப்பு!!

5d40fdfF

நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருப்பு கம்பியால் தாக்குதலுக்குள்ளான விஷால் மயக்கமுற்றதாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை சரத்குமாரின் உதவியாளராக கூறப்படும் கிச்சா என்பவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வந்தது. இந்நிலையில், பகல் 12 மணியளவில் திடீரென வாக்குச்சாவடி அருகே சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர், நடிகைகளும் வாக்குச்சாவடியை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், செய்தியாளர்களை உள்ளே விட பொலிசார் அனுமதிக்கவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், ‘விஷால் தாக்கப்பட்டதாகவும், சரத் அணிக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரச்சினைக்குக் காரணமாக கூறப்படுவதாவது:

நடிகை சங்கீதா வாக்களிக்க வந்தபோது அவரை சரத்குமார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விஷால் தட்டிக் கேட்டதாகவும், அப்போது சரத்குமாரின் அருகே இருந்த அவரது உதவியாளரான கிச்சா என்பவர் தாக்கி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலில் விஷால் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரே வெளியேறி வந்ததாகவும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vishal

மரண அறிவித்தல் திரு. ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்

மரண அறிவித்தல் 

Untitled-1

திரு ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்

(சமாதான நீதவான்)
மலர்வு : 7 யூன் 1936 —                                          உதிர்வு : 18 ஒக்ரோபர் 2015

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வசிப்பிடமாகவும், வவுனியா கோவில் குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கோணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலேஸ்வரன்(ஜெர்மனி), பாலேஸ்வரி(ஆசிரியை- வவு/ இந்துக்கல்லூரி), கணேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரி(லண்டன்), தனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சோதியம்மா, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கைக்கே றுமெல், சிவகுலசிங்கம், சங்கீதா, சுரேஸ்வரன், ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற முத்துசாமி, நாகரெத்தினம், சுந்தரலிங்கம், சோமலிங்கம், பூலோகசுந்தரம் பிள்ளை, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிநாத், சாருகா, கிரிஷாந், கோபிந், பிரவிந், தானுகா, சகானா, ஜெயந், ஜயனுகா, பிரணவன், பானுகா, பாவனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கோவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778652462

 

பாலேஸ்வரி சிவகுலசிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94242223227

 

கணேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442082003771

 

கணேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756734999

 

ஜெகதீஸ்வரி சுரேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442082058959

 

தனேஸ்வரி ஜனகன் — கனடா
தொலைபேசி: +15143421536

பார்வையிழந்தோரும் புகைப்படங்களை அறிய பேஸ்புக் வழங்கும் புதிய டூல்!!

Facebook-wants-to-help-blindபல்வேறு தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக புதிய டூலை பேஸ்புக் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியியலாளராக முதன்முதலாக பணிபுரிகின்ற மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம், புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களை பார்வையிழந்தோர் தெரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு இயற்கைக் காட்சி கொண்ட புகைப்படத்தை இயற்கை, வானம் என இது அடையாளப்படுத்தும்.இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த புதிய டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி பசி இல்லை – சாப்பாடு இல்லை – சூரியன் மட்டுமே!!

chiness-500x500உடல் பருமனைக் குறைக்க அறிவியல் ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளாமல், பச்சிலை சாறுகளை குடித்து வாழ்ந்து வருபவர்கள் அதையும் தாண்டி தற்போது ஒரு வித்தியாசமாக மேனியைப் பேணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

உடலின் அழகை அளவாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் முழுப்பட்டினி முதற்கொண்டு எத்தனையோ முறைகளை டயட்டிங் வெறியர்கள் பொதுவாக கையாண்டு வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது புதிதாக சூரியனை வெறித்துப் பார்க்கும் பயிற்சியும் இணைந்துள்ளது.

சூரியனில் இருந்து சோலார் பட்டரிபோல மனிதர்கள் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் முறையை தற்போது சீனாவின் ஹாங்காங்கில் உள்ள சாம் கா கிராமத்தின் கடற்கரையில் சில பெண்கள் கடைபிடித்துவருகின்றனர். இவர்களைப் பொருத்தவரை, உணவு உண்பதற்கு பதிலாக, சூரிய சக்தியை பெற்றுக் கொள்வதே போதுமாம்.

சூரியன் மாலையில் மறையும்போது அதை வெறித்து நின்று பார்ப்பது, நமக்கு உணவு அளிக்கும் கலோரிகளுக்கு இணையான கலோரிகளை நமது உடலுக்கு வழங்குமாம். இந்த சிகிச்சை முறையினை முழுமையாக முடித்தவர்கள் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்வர். மற்றவர்கள் உணவை அறவே தவிர்கின்றனராம். இந்த சிகிச்சையில் இருக்கும் சிலர், இந்த பயிற்சியை கடவுளை வழிபடுவதில் ஓர் அங்கமாகவும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம்!! (வீடியோ இணைப்பு)

emma_sponge_002

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார்.

தமது 3 வயதில் குளியலறை பஞ்சை முதன் முறையாக சுவைத்து பார்த்த Emma அதைத் தொடர்ந்து சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சை சாப்பிட துவங்கியுள்ளார். Pica எனப்படும் ஒருவித நோயால் பாதிக்கப்படுபவர்கள் இது போன்று சத்துக்கள் எதுவும் இல்லாத பொருட்களை உணவாக உட்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாத்திரம் துலக்கும் திரவத்தில் ஏற்கனவே ஊறப்போட்டு வைத்திருந்த பஞ்சுகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதால் தமக்கு புது தெம்பு கிடைப்பதாக Emma தெரிவித்திருக்கிறார்.

வாரம் 6 பவுண்டுகள் பஞ்சுக்காகவே தாம் செலவிடுவதாக தெரிவித்துள்ள அவர், சிலர் புகைக்கின்றனர், அதுபோல் தாம் பஞ்சு சாப்பிடுவதாகவும், அது தீய பழக்கம் அல்ல எனவும் Emma வாதிட்டுள்ளார்.

சில நேரம் பஞ்சை அப்படியே முழுங்கி விடுவதாகவும், அல்லது சுவைத்து தின்று விடுவதாகவும் தெரிவித்துள்ள Emma, ஆப்பிள் பழம் போன்று சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது குழந்தைகள் வெவ்வேறு குணம் படைத்தவர்கள்: இளவரசர் வில்லியம்!!

wIpcIxvsfTdl

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது இரண்டு குழந்தைகளின் குணாதிசயங்கள் குறித்து கல்லூரி விழா ஒன்றில் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில், நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக இளவரசர் வில்லியம் கலந்துகொண்டார்.

இதில் அவர் பேசுகையில், தற்போது, உங்கள் முன்னிலையில் நின்று பேசுவதில் பெருமைப்படுகிறேன். நான் இந்த கல்லூரியில் விவசாயம் தொடர்பான பாடத்திட்டத்தை 12 வாரங்கள் பயின்றுள்ளேன், அது எனது எதிர்காலத்தில் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிறுவயதில், எனது தேவைகளை உணர்ந்துகொண்ட தாயார், அவை நிறைவேறுதற்காக எனக்கு உதவியாக இருந்துள்ளார். மேலும், எனது இரு குழந்தைகளும் எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்று கூறிய வில்லியம், எனது 5 மாத பெண் குழந்தையான சார்லோட், பெண்களுக்கே உரித்தான குணாதிசயங்களோடு இருக்கிறார்.

ஆனால், எனது மகன் ஜார்ஜ் மிகவும் கலகலப்பானவன் என்று கூறியுள்ளார். தற்போது வில்லியம், விமான அவசர ஊர்திப்பிரிவில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்ய மறுத்த 12 வயது சிறுவன்: 450 அடி உயரத்தில் இருந்து தள்ளி விட்ட கும்பல்!!

angel_found_dead_004குவாத்தமாலாவில் கொலை செய்ய மறுத்த 12 வயது சிறுவனை 450 அடி உயரத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து தள்ளி விட்டு கொலைகார கும்பல் ஒன்று பழி தீர்த்துள்ளது.மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாத்தமாலாவில் பாடசாலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான் 12 வயதான ஏஞ்சல் அரியல் பேரிஸ்.

அப்போது மறைந்திருந்த கொலைகார கும்பல் ஒன்று சிறுவன் பேரிஸ் ஐ பிடித்து மிரட்டி, அப்பகுதியில் பேருந்து ஓட்டுனர் ஒருவரை கொலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் பேரிஸ் ஐ தண்டிக்கும் பொருட்டு அவனுக்கு இரண்டு வாய்ப்புகளை அந்த கும்பல் வழங்கியுள்ளது.

அதில் மத்திய அமெரிக்கா பகுதிகளில் பயன்படுத்தும் Machete எனப்படும் அகலக்கத்தியால் மரணமடைவது, அல்லது உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது.

Perez பாலத்தில் இருந்து குதித்து சாவதை விரும்புவதாக தெரிவிக்கவே, அந்த கும்பல் அவனை 450 அடி உயரம் கொண்ட ஒரு பகுதிக்கு இட்டுச்சென்று அங்கிருந்து தள்ளி விட்டுள்ளது.

பாடசாலை விட்டு திரும்பிய மகனை காணவில்லை என தேடி அலைந்த அவனது தந்தை Luis Escalante மீட்பு படையினரின் உதவியால் மூன்று நாட்கள் கடந்து கண்டு பிடித்தனர். உயரமான அமைப்பில் இருந்து குதித்த சிறுவன் பேரிஸ்அங்கிருந்த மரக்கிளைகளில் சிக்கி படுகாயமுற்று புதரின் நடுவே விழுந்து கிடந்துள்ளான்.

மீட்பு படையினருடன் வந்து சிறுவனை மீட்ட Luis குற்றுயிராக கிடந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் Perez 15 நாட்கள் கடந்து உயிரிழந்துள்ளான். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து வீராங்கனை!!

Eng`

வரலாற்றில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஒருவர் கலந்துக்கொண்டு விளையாட உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப்- போர்ட் அடிலெய்டு அணிகள் மோதும் இரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இதில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர், வடக்கு மாவட்டங்கள் கிளப் அணிக்காக விளையாடுகிறார்.

கடந்த 1987ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆண்கள் அணியில் இணைந்து பெண் ஒருவர் விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.

இது பற்றி சாரா டெய்லர் கூறுகையில், “பதற்றமாகவும், அதே சமயம் உற்சாகமாகவும் இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் போட்டியில் பந்து அதிக வேகமாகவும், அதிக பவுன்சராகவும் வரும். அதை சமாளிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கியுள்ளேன். மேலும், வீரர்கள் என்னை மற்ற வீரர்களைப் போன்று பார்த்து வாய்மொழி துஷ்பிரயோகம் செய்தால் கூட நான் மரியாதையாக ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 98 ஒருநாள் மற்றும் 73 T 20 போட்டிகளில் விளையாடி உள்ள சாரா, கடந்த வருடத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் வென்றுள்ளார்.

20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு வைத்த கணவன்: பொலிசில் சிக்க வைத்த மனைவி!!

1 (65)திருமணமான இளைஞர் ஒருவர் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை கண்டுபிடித்த மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டியை சேர்ந்த சல்மா (19) என்பவருக்கும், கோபி குருமந்தூரை சேர்ந்த நிவாசுக்கும் (26) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

கடந்த 3 மாதங்களாக சல்மாவிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு நிவாசும், அவரது தாயார் குர்ஷித் உன்னிசாவும் கொடுமைப் படுத்தியுள்ளனர். மேலும், சல்மாவை ஆபாசப்படம் எடுக்க நிவாஸ் முயன்றுள்ளார். பின்னர் அவரது செல்போனை சல்மா ஆய்வு செய்தபோது, அதில் 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டுபிடித்துள்ளார்.

இதன்மூலம் நிவாஸ், பெண்களை ஊட்டி போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததும், வீட்டிற்கே பல பெண்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நிவாசின் தாயார் குர்ஷித் உன்னிசாவிடம், சல்மா இது பற்றி கேட்டபோது, என் மகன் அப்படித்தான் இருப்பான் என பதிலளித்துள்ளார்.எனவே சல்மா அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசில் தன் கணவர் மீதும் மாமியார் மீதும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரையடுத்து பொலிசார் நிவாசின் செல்போனை ஆய்வு செய்து அவரையும் அவர் தாயையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.