மரண அறிவித்தல்

திரு ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்
|
(சமாதான நீதவான்) |
மலர்வு : 7 யூன் 1936 — உதிர்வு : 18 ஒக்ரோபர் 2015 |
யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வசிப்பிடமாகவும், வவுனியா கோவில் குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கோணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேஸ்வரன்(ஜெர்மனி), பாலேஸ்வரி(ஆசிரியை- வவு/ இந்துக்கல்லூரி), கணேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரி(லண்டன்), தனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சோதியம்மா, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கைக்கே றுமெல், சிவகுலசிங்கம், சங்கீதா, சுரேஸ்வரன், ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற முத்துசாமி, நாகரெத்தினம், சுந்தரலிங்கம், சோமலிங்கம், பூலோகசுந்தரம் பிள்ளை, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிநாத், சாருகா, கிரிஷாந், கோபிந், பிரவிந், தானுகா, சகானா, ஜெயந், ஜயனுகா, பிரணவன், பானுகா, பாவனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கோவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |