புதிய முறையில் உள்ளூராட்சித் தேர்தல்!!

ballot-box-உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் புதிய முறை­மையில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற் ­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெறும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யா ற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கை யில்,

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை புதிய தேர்தல் முறை­மையில் நடத்­தவே எதி ர்­பார்க்­கின்றோம். அதனை தாம­தப்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­வில்லை.

அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெறும்.ஆனால் கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை மீள் நிர்­ணயம் தொட ர்பில் சிக்­கல்கள் உள்­ளன. கடந்த காலங்­களில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான வகையில் எல்லை மீள் நிர்­ண­யங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அவற்றை விரைவில் மறு­சீ­ர­மைத்து எதிர் ­வரும் மார்ச் மாத­ம­ளவில் தேர்தலை நடத்து வதே எமது நோக்கமாகும். அதற்கான ஏற்பா டுகளை மேற்கொண்டுவருகின்றோம். தேவை எனின் இரண்டு மாதங்கள் அளவில் தாமதம் ஏற்படலாம் என்றார்.

ரயிலில் பிச்சை எடுக்க தடை !!

540850423_7167e677a6ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் மாதம் 01ம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

ரயிலில் பிச்சை எடுத்தல் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தடையை மீறி ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

224223

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 227 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கைகழுவுதல் தினம்!!(படங்கள்)

கைகழுவுதல் தினமான 15.10.2015 அன்று வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களின் 100 000 ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் ,வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜா அவர்களின் 50 000 ரூபாய் நீதி ஒதுக்கீட்டிலும் உருவாக்கப்பட்ட கைகழுவும் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இங்கு கைகழுவுதலின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

IMG_5395 IMG_5397 IMG_5409 IMG_5412 IMG_5417

அரசாங்கத்தின் உறுதி மொழியை ஏற்க முடியாது! அரசியல் கைதிகள்!

தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதியில் இருந்து கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள உறுதி மொழியை ஏற்கமாட்டோம் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யபடவுள்ளதாக ஜனாதிபதியின் உறுதி மொழியினை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் வழங்கியுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை தாம் ஏற்க முடியாது என அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இன்று(16) நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் மற்றும் சட்டத்தரணிகளான அன்ரன் புனிதநாயகம்,திருச்செல்வம் திருஅருள்  ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று அவர்களின் நிலை தொடர்பாக பார்வையிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிக மோசமாக மாறிவருகிறது.

இன்று 5 வது நாளாக நாட்டின் 14 சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு விடுதலை கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறு குற்றச் சாட்டுக்கள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் இவ்வாறு பல வருடங்களாக சிறைகளில் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்துவைக்கபட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி நம்பிக்கை ஊட்டும் வகையில் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு நல்லாட்சியின் உண்மை தன்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த அரசாங்கம் முன்மாதிரியாக செயற்பட்டு சிறைகளில் பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் நான் கேட்டபோது சிறைகளில் அடைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அடுத்த மாதம் 7ம் திகதி முதல் கட்டம் கட்டமாக விடுதலை செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் உறுதிமொழியினை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் அக்கருத்தை ஏற்றுகொள்ளவில்லை என்று தெரிவித்ததுடன், தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து நம்பிக்கை ஊட்டும் வகையில் விடுதலைக்கான உறுதிமொழியினை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் மேலும் ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரியுள்ளனர்.

எனினும் அது நடைபெறாத பட்சத்தில் வட மாகாண முதல்வர் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கொழும்பில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்கும்படி  கோரியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

12096293_10153162968696088_3468434495996731875_n 12109788_10153162968466088_3173281297023765453_o dont_relice_003

வவுனியா அருளகம் சிறுவர் இல்லத்துக்கு வடமாகாண உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனால் போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவில் அனுசரணையுடன் இயங்கும்  அருளகம் சிறுவர் இல்லத்துக்கு  வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜீ.ரி.லிங்கநாதன் அவர்களது குறித்தொதுக்கபட்ட நிதியிலிருந்து போட்டோ பிரதி இயந்திரம்(photo copier) ஒன்று அருளகம் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரின் வேண்டுகோளின்பேரில்  வழங்கபட்டது.

மேற்படி போட்டோ பிரதி  இயந்திரம் வழங்கும் நிகழ்வானது நேற்று  16.10.2015  வெள்ளிகிழமை சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தின விழாவின் போது வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கபட்டது .மேற்படி நிகழ்வில் வடமாகாண சுகாதார  அமைச்சர் ப .சத்தியலிங்கம் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

DSC_0178 DSC_0180 DSC_0182 DSC_0184 DSC_0190

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தின விழா -2015(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவில் அனுசரணையுடன் இயங்கும்  அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் சிறுவர் முதியோர் தின விழா  இன்று  16.10.2015  வெள்ளிகிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தின் உள்ளக கலையரங்கில்  இடம்பெற்றது  .

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்கள்(வடமாகாண சுகாதார அமைச்சர்)கௌரவ விருந்தினராக திரு .ஜி.ரி.லிங்கநாதன்(வடமாகாண சபை உறுப்பினர்)சிறப்பு விருந்தினர்களாக திரு.கா. உதயராசா அவர்கள்(பிரதேச செயலாளர் வவுனியா)   திரு .க.பரந்தாமன் அவர்கள்(பிரதேச செயலாளர் வவுனியா வடக்கு)DR.S.சிவதாஸ் அவர்கள்(மனநல சிகிச்சை பிரிவு பொது வைத்தியசாலை வவுனியா)திரு.திருமதி.சியாமலி திசாநாயக்க அவர்கள்(பொலிஸ் பொறுப்பதிகாரி-சிறுவர் பெண்கள் பிரிவு)  மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும்  வைத்தியர்களான  சூரியகுமார், சுதாகரன் வவுனியா  இறம்பை ககுளம்  மற்றும் சமணங்குளம் கிராமசேவகர்கள்  அத்தோடு வவுனியாவில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் ஆலயங்கள்  பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட  அருளகம் சிறார்கள் மற்றும் ஊழியர்கள்  சிவன் முதியோர் இல்ல ஊழியர்கள் மற்றும் முதியவர்கள்  மற்றும் வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தினர் என பல்வேறு பட்ட தரப்பை சேர்ந்த வர்களும் கலந்து கொண்டனர் .

மேற்படி நிகழ்வின் போது அதிதிகள் மங்கள வாத்தியங்களுடன்  வரவேற்க்கப்பட்டு     மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது .அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் நாகதீசன்  வரவேற்புரையை வழங்கினார் .

தொடர்ந்து கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் திரு .ஜீ .ரி .லிங்கநாதன் அவர்கள் உரை நிகழத்தினார். அவர் தனதுரையில் அருளகம் சிறுவர் இல்லம்  மற்றும் சிவன்முதியோர் இல்லங்கள்  ஆரம்பிக்கபட்டு போரின் தாக்கத்தினால்    நிர்கதியான சிறார்கள் மற்றும் முதியவர்களின்  வாழ்வில்   மறுமலர்ச்சிய  உண்டு பண்ணுகின்ற அளப்பெரிய சேவையை வழங்குவதாக குறிப்பிட்டார் . மேலும் வடமாகாண சபை உறுப்பினராக  பதவியேற்ற பின் தன்னால் மேற்கொள்ளபட்ட  வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் மத்தியில் விளக்கினார் .

தொடர்ந்து உரை நிகழ்த்திய வடமாகாண சுகாதார மற்றும் சுதேச பெண்கள் விவகாரம் சிறுவர் நன்னடத்தை என்பவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் திரு .ப.சத்தியலிங்கம் அவர்கள்  எமது சமூக அமைப்பு ஒவ்வாதவை  இந்த சிறுவர் காப்பகங்கள்  இருந்தாலும் காலத்தின் தேவை மற்றும் போரின் பிடியில்  நிர்கதியான சிறார்கள் மற்றும் முதியவர்களை பேணுவதற்கு  எமக்கும் வேறெந்த தெரிவுகளும் அற்ற நிலையில்  நாம் இப்படியான காப்பகங்களை தொடர்ந்தும் நடாத்தி செல்லவேண்டிய நிலையில் தான் உள்ளோம் என குறிப்பிட்டார் . அத்துடன்  வன்னியில்  அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவறின் சேவைகள் மகத்தானவை எனவும் அருளகம் போன்ற சிறார் இல்லங்களில் இருந்து வெளிவரும்  ஒவ்வொரு சிறார்களின்  எதிர்காலம்  ஒளிமயமானதாக அமைய வேண்டும் எனவும் அதற்க்கு வடமாகாணத்தில் புதிய திட்டங்கள் வகுக்கபடும் எனவும்  குறிப்பிட்டார் .

தொடர்ந்து சிறுவர் முதியோர் தினத்தையொட்டி இடபெர்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய  சிறுவர் சிறுமியார் மற்றும் முதியவர்கள் மற்றும் ஊழியர்களுக்காண பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றதோடு  அருளகம் சிறார்களின்  கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

வவுனியா நெற் அலுவலக செய்தியாளர்

DSC_0091 DSC_0096 DSC_0100 DSC_0106 DSC_0108 DSC_0117 DSC_0120 DSC_0124 DSC_0129 DSC_0133 DSC_0138 DSC_0144 DSC_0145 DSC_0148 DSC_0152 DSC_0157 DSC_0159 DSC_0162 DSC_0164 DSC_0166 DSC_0189 DSC_0190 DSC_0196 DSC_0199 DSC_0203 DSC_0204 DSC_0206 DSC_0214 DSC_0218 DSC_0228 DSC_0229 DSC_0249 DSC_0255 DSC_0271 DSC_0282 DSC_0283 DSC_0287 DSC_0295 DSC_0304 DSC_0315 DSC_0318 DSC_0323 DSC_0325 DSC_01172 DSC_01315 DSC_01528 DSC_01581 DSC_01912

முல்லைத்தீவு மாவட்டத்தில் பனம் விதைகள் நடுகை செயற்திட்டம்!!(படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (15.10.2015) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவின்கீழ் காரிப்பட்ட முறிப்புக்கும் மணவாளன்பட்ட முறிப்புக்கும் இடையில் ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் இரு மருங்கிலும் பனை அபிவிருத்திச் சபையினால் 9500 பனம் விதைகள் நடுகைசெய்யப்பட்டன.

இந்நிகழ்வு பனை அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பா.றஜிபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மணவாளன்பட்டமுறிப்பு கிராம அலுவலர் த.தனபால்ராஜ், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2015.10.06, 07, 08 ஆம் திகதிகளில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 13000 பனம் விதைகளும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 16000 பனம் விதைகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_5633 IMG_5645 IMG_5647

வவுனியா இளைஞர்களின் புதிய முயற்சி : “Spiritism” குறும்படம் விரைவில்!!(Trailer இணைப்பு)

unnamed-500x300

வவுனியா இளைஞர்களின் புதிய முயற்சியில் Spiritism என்ற குறும்படத்தின் முதற்காட்சி நேற்று (15.10) வெளியிடப்பட்டுள்ளது. ஆன்மாக்களை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குறும்படத்தின்,

இயக்கம் & தயாரிப்பு – விபிசன்
ஒளிப்பதிவு – மில்டன் ரவி
படத்தொகுப்பு – சார்லஸ்
நடிகர்கள் – மேஹலாதரன், கிஷாந்த், சிவப்பிரியன், சர்மிலன், சௌமியன் ஆகியோரின் பங்களிப்பில் இவ் குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

unnamed

வீடியோ கதையாக்கச் செயற்றிட்டம் : இளம் நாடக, திரைப்பட மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்!!

unnamed

வீடியோவை ஊடகமாகப் பயன்படுத்தி பின்தங்கிய மக்களின் கதைகளை வெளிஉலகிற்கு எடுத்துக்கூறி, அச் சமூகத்தினை வலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது.

இத்தகைய கதைகூறல் மூலம் இளம் வீடியோ தயாரிப்பாளர்களும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களும் ஒன்றாக இணைந்து சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை குறுந்திரைக் கதைகளாக உருவாக்கலாம்.

வீடியோ மூலும் கதைகூறும் இத்தகையமுறை, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இதன் மூலம் மக்கள் தமது அபிவிருத்திசார் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வினையும் காணமுடிவதுடன் தமதுகதைகளை எடுத்துக் கூறவும் முடிகின்றது.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றம் இத்தகைய மூன்று செயற்றிட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு செயற்றிட்டங்கள் மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அமுல்படுத்தவுள்ளன.

மூன்றாவதுதிட்டம் பல்கலைக்கழகங்கள், சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் நலன்கருதி நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

இத்திட்டங்களின் நோக்கம் இளைஞர்களிடம் உள்ள வீடியோ மூலம் கதைசொல்லும் திறணைஊக்குவித்து, பின்தங்கிய கிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் அபிவிருத்திசார் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதாகும்.

18-25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். சகல செயற்றிட்டங்களிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்றுவிப்பாளர்களிடம் பயிற்சிபெறும் வாய்ப்பு உள்ளது. பயிற்சிமுடிவில் பங்குபற்றும் சகலரும் வீடியோ மூலம் கதைகளைஉருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பர். இப் பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்களும்வழங்ப்படும்.

மூன்றுசெயற்றிட்டங்களும் இலவசமாக இடம்பெறஉள்ளதால் குறித்ததொகையினர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவர்.

கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடம்பெறவுள்ள இரண்டு செயற்றிட்டங்களில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு அதிகமுனுரிமை வழங்கப்படும். அத்தோடு, நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள செயற்றிட்டத்தில் இளம்பட்டதாரி, பல்கலைக்கழக, தனியார் ஊடகமற்றும் தொழிநுட்ப மாணவர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், இளம் வீடியோ ஆர்வலர்கள் போன்றோர் பங்குபற்றலாம்.

விண்ணப்பமுடிவுத்திகதி : 15.11.2015
ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் [email protected] மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களைஅணுப்பிவைக்கலாம்.

தபால் மூலம் விண்ணப்பிக்கவிரும்புவோர்

இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்,
இல. 249, 2/1, நாவலவீதி, ராஜகிரிய
எனும் முகவரிக்குவிண்ணப்பங்களைஅனுப்பலாம்.

தொடர்புகளுக்கு : 0117209511 மற்றும் 0776653694 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!!

இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று(16.10) வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராசா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்,

வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,எம்.பி.நடராஜ், எம்.தியாகராசா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வன்னி அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ், புதிய மாக்கிசிஸ லெனினிசக்கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள்,

அரசியல் கைதிகளின் பெற்றோர், காணாமல் போனோரின் பெற்றோர் உள்ளிட்டோர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், முற்சக்கர வண்டி உரிமையாளர்கள், வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

katheeeshan (1) katheeeshan (2) katheeeshan (3) katheeeshan (4) katheeeshan (5) katheeeshan (6) katheeeshan (7)

வவுனியா வெளிக்குளம் க.உ.வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாராட்டுவிழா!!

வவுனியா வெளிக்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா எதிர்வரும் 23.10.2015 வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெறஉள்ளது.

வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுடன் சித்தியடைந்த மாணவர்களையும் இதற்காக இரவு பகல் பாராது உழைத்த ஆசிரியர்களும் பாராட்டப்படவுள்ளனர்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC00630 DSC00631 DSC00632

வவுனியாவில் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக 10 அம்சக் கோரிக்கை கையளிப்பு!!

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக 10 அம்சக் கோரிக்கைகளை வடமாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மக்கள் பிரதிநிதிகளிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்தது.

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற வடமாகாண மீனவர் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வின் போதே இது கையளிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையிலும் வடபகுதி மீனவர்கள் பல பிரச்சனைகளை முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வகையில்இ சட்டவிரோத மீன்பிடி முறை, இந்திய மீனவர்களின் ஊடுருவல், பருவகால மாற்றங்களின் போது தென் பகுதி மீனவர்களின் வருகை, கடற்படை மீனவர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் மற்றும் அச்சுறுத்துதல், மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மீனவருக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கிய மகஜரே மக்கள் பிரதிநிதிகளிடம் இதன் போது கையளிக்கப்பட்டது.

இவ்விடயங்களை நாடாளுமன்றத்திலும் வடமாகாண சபையிலும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மகஜர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

IMG_0973-720x480 IMG_0980

இந்த கிளி செய்கிற வேலையை பாருங்கள்..! (VIDEO)

green-indian-ring-necked-parakeet-236நாம் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவதெல்லாம் இளம் பிராயத்தில்தான். முதல் துளி மழை, சாக்லேட், சைக்கிள், முதல் கைக்கடிகாரம், முதல் கவிதை இது போன்ற சில விஷயங்களெல்லாம் நமக்கு ஒரு காலகட்டம் வரை பெரியளவில் மகிழ்ச்சி தந்துவந்தது.

இந்தச் சிறு கிளியிடம் ஒரு திசுக் காகிதம் கிடைத்ததும் அந்த காகிதத்தை என்னென்னவோ செய்து கொண்டாடி மகிழ்கிறது. சிறு குழந்தைகள் தம்மிடம் கிடைக்கும் பொம்மைகளை உருட்டி, பிரட்டி அதில் என்ன இருக்கிறது என ஆராய்ச்சி செய்யும் அல்லவா! அதுபோல, இருக்கின்றது.
கொண்டாடும் உணர்வு இருந்தால் போதும் என உணர்த்தும் கிளியின் சேட்டை வீடியோ நீங்களும் சிறு குழந்தையாகி மகிழ.. உங்கள் பார்வைக்கு..,

 

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் முதியோர் தின விழா -2015(படங்கள்)

சர்வதேச சிறுவர் முதியோர் தினம் நேற்று (15.10.2015)வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சரஸ்வதி மோகநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கியின் நெடுங்கேணி கிளை முகாமையாளரும், மக்கள் வங்கியின் அதிகாரியும், Plan Sri Lanka நிறுவனத்தின் அதிகாரிகளும் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்,

மேலும் இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே. ஆயாகுலன், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா. நாகேஸ்வரபாலா , வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் , பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு  செய்தியாளர் நிரேஷ்

12108306_428121337377563_1449463925572565561_n

16515_428123627377334_1561637023706443789_n 1557488_428121474044216_761671072236689317_n 10352280_428122067377490_6877298177401461509_n 10868049_428123544044009_571114542483368561_n 12063338_428121820710848_3768184991775326756_n 12072597_428125767377120_5366189075635356791_n 12079285_428120660710964_2975003504741425540_n 12079600_428122944044069_8661185139454555933_n 12079618_428120550710975_7881193075687874222_n 12079618_428121727377524_2526813006115795246_n 12088224_428122467377450_807984421384281633_n 12106754_428124047377292_5009772831794984634_n 12106919_428121370710893_7112875366190084681_n 12107778_428124184043945_1686259010524072268_n 12108036_428124934043870_5714596255738234432_n 12115503_428122787377418_3520486102713573310_n 12115935_428122600710770_2580353395829781462_n 12115979_428122544044109_1206726463372015834_n 12118649_428124387377258_5300158610401748275_n 12119126_428123590710671_787387574004322276_n 12140689_428122344044129_439919025699483586_n 12141521_428125067377190_9182700078975050427_n

தாலாட்டைக் கேட்டு உறங்கும் 3 வார யானைக்குட்டி! (VIDEO)

baby-elephant-sleeping-jpgஇந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது.

வாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய் ஆர்க்கிட் என்னும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு பாதுகாத்து வருகின்றது. சில தினங்களுக்கு முன் யூடியூபில் வெளியான இந்த வீடியோ லட்சக்கணக்கானோரின் விருப்பமாக அமைந்துள்ளது.

தற்போது இந்த குட்டி யானையைக் கவனித்து வரும் இந்த அமைப்பு, இந்த யானைகளின் குடும்பத்துக்கான வாழ்வாதாரமாக சரணாலயம் அமைக்க மக்களின் ஆதரவை நாடி இந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றது.