கணணி சாதனங்களின் உற்பத்தியை தாண்டி வேறு சில சேவைகளையும் அப்பிள் நிறுவனம் வழங்கி வருகின்றமை அறிந்ததே.அதில் ஒன்றுதான் அந் நிறுவனத்தின் உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய Apple Pay சேவையாகும்.இச் சேவையானது தற்போது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.
அப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள இச் சேவையை மேலும் சில நாடுகளுக்கு விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அவை எந்த நாடுகள் என்ற தவகல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் என கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம்.
அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடிமாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
இதனால் தான் ஆடிமாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்–மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர். மேலும் ஆடிமாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்றுவீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வந்த கணவர், உடலை அங்கேயே விட்டு விட்டு உடனே அவுஸ்திரேலியா திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா தொழில் அதிபரான Mahanth Narla என்ற நபருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது வரதட்சணையாக தங்கமும், 50 லட்சம் ரூபாயும் ரம்யாவின் பெற்றோர் வழங்கியுள்ளனர்.திருமணத்திற்கு பின் கணவருடன் ரம்யா அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்துள்ளார், Mahanth Narlaவிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட ரம்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.உடனே இறந்து போன தனது மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையம் கொண்டு வந்து சேர்த்து விட்டு Mahanth உடனே அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியுள்ளார். வரதட்சணை தராதால் தான் Mahanth தனது மகளை கொன்றுவிட்டதாக ரம்யாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவுஸ்ரேலியா நாட்டில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் குளத்தில் குளிக்க சென்றபோது முதலைக்கு இரையாகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குயின்ஸ்லேண்ட்டில் உள்ள Thornton என்ற கடற்கரை ஓரம் தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் உள்ள குளம் ஒன்றில் எண்ணற்ற முதலைகள் வசித்து வருவதால், இதனைசுற்றி எச்சரிக்கை பலகைகள் பல வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் பெயர் வெளியிடப்படாத 46 மற்றும் 47 வயதுடைய இரு பெண்கள் இந்த குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த ராட்சதமுதலை ஒன்று 46 வயதான பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. ’என்னை முதலை ஒன்று பிடித்து விட்டது’(Acroc has got me) என்ற கடைசி வார்த்தையை கூறிய பிறகு அப்பெண்ணிடமிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.பெண்ணுடன் வந்த தோழி எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
ஜேர்மனி நாட்டில் 91 வயது மூதாட்டி ஒருவரின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச் சென்ற நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஜேர்மனியில் உள்ள லோயர் லாக்ஸோனி நகருக்கு அருகில் உள்ள Langwedel என்ற பகுதியில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் உள்ள ரயில் பாதையை 91 வயதான மூதாட்டி ஒருவர் தினமும் கடந்து சென்று வீடு திரும்புவார்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ’வாக்கிங் ஸ்டிக்’ ஒன்றை ஊன்றிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது.
தண்டவாளத்தின் மத்தியில் நின்றுக்கொண்டுருந்த மூதாட்டி ‘இனி தப்பிக்க முடியாது’ என தீர்மானித்து தனது கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை அருகில் வீசிவிட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளார்.வேகமாக வந்த ரயில் அவர் உடல் மீது ஏறிச்சென்றுள்ளது. அப்போது, மூதாட்டி வீசிய வாக்கிங் ஸ்டிக் ரயில் சிக்கி இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.
’காட்டு விலங்கு மீது மோதி விட்டோம்’ என கருதிய ரயில் ஓட்டுனர் அடுத்ததாக வந்த Verden என்ற ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்துள்ளார்.அங்கு, மூதாட்டி பயன்படுத்திய வாக்கிங் ஸ்டிக் சிதைந்து இருந்ததை அண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘முதியவர் மீது ரயிலை ஏற்றிவிட்டோம்’ என அச்சம் அடைந்த ஓட்டுனரால் ரயிலை தொடர்ந்து ஓட்ட முடியவில்லை.இந்நிலையில், எதிர்புறமாக சென்ற ரயில் ஓட்டுனர் ஒருவர் தண்டவாளத்தின் மத்தியில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றபோது, மூதாட்டி கூலாக எழுந்து நின்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, ‘உண்மையில் மூதாட்டி மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில், தண்டவாளத்தில் படுத்துள்ளபோது ரயில் ஏறிச்சென்றால், உடலில் உள்ள உடுப்புகள் ரயில் சிக்கி நபரை இழுத்துச்சென்று சிதைத்திருக்கும்.
ஆனால், மூதாட்டி தண்டவாளத்தின் மீது நேர்த்தியதாக படுத்திருந்ததால், அவரது உடல் உறுப்புகள் மற்றும் உடுப்புகள் எதுவும் ரயிலில் சிக்கவில்லை.எனினும், மூதாட்டிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூரில் பாம்பு பிடித்து வரும் வாலிபரை கடிக்கும் கொடிய வகையான பாம்புகள் அதே இடத்தில் உயிரிழக்கும் சம்பவம் அதிசயத்தை எற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் அடுத்த அன்னாண்டபட்டியை சேர்ந்தவர் ராபர்ட்(24). இவர் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளை லாவகமாக பிடிப்பதில் வல்லவராக உள்ளார். இதனால் இவர் ‘ஸ்நேக்’ ராபர்ட் எனஅழைக்கப்படுகிறார்.
இவர் பாம்புகளின் நடமாட்டத்தை தனது நுகரும் தன்மை மூலமே கண்டறிந்து கைகளாலேயே பிடித்து அசத்தி வருகிறார். இதில் பெரிய அதிசயம் என்னவென்றால், இவரை கடிக்கும் எந்த கொடிய வகையான பாம்பாக இருந்தாலும் உடனே இறந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடிவிரியன், ராபர்ட்டை கடித்து விட்டது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு வந்த போது ராபர்ட்டை கடித்த பாம்பு அதே இடத்தில் இறந்து கிடந்தது.அதன் பின்அந்த அதிசயம் தொடர்வதால் அவருக்கு‘ஸ்நேக் ராபர்ட்’ என்ற பெயர் வந்தது என்கின்றனர். வனத்துறையினர் கூட தங்களால் பிடிக்க முடியாத பாம்புகளை ஸ்நேக் ராபர்ட் மிகவும் சாதாரணமாக பிடித்து விடுகிறார் என கூறியுள்ளனர்.
கேரளாவில், சொத்து தகாராறு காரணமாக சொந்த தந்தையை, மகன் கொன்று துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.ஜாய் வி ஜான்(வயது-68)பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்துள்ளார், சமீபத்தில் கேரளாவின், செங்கன்னூர் பகுதியில் உள்ள தனது பரம்பரை வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்கள் முன் வெளியே சென்ற தனது மகன் Sherin ஜானையும் தனது கணவர் ஜாய் வி ஜானையும் காணவில்லை என அவரது மனைவி மாரியம்மா பொலிசில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்த பொலிஸ் விசாரணை நடத்த தொடங்கிய போது, தான் தன் தனது தந்தை கொன்றதாக 36 வயதான Sherin பொலிசில் சரணடைந்துள்ளார். sherlin ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சொத்து தகராறு காரணமாக Sherin தந்தையை கொன்றதாகவும், ஜாய் வி ஜானின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் அருகில் உள்ள இடங்களில் புதைத்ததாகவும் கூறியுள்ளார். sherlin உதவியுடன் புதைக்கப்பட்ட ஜானின் உடல் பாகங்களை பொலிசார் கண்டெடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் sherlin மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த ஒருவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பல்லம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இரவு 08.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், பல்லம – மண்டலான பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண் சிலாபம் – பங்கதெனிய பகுதியிலுள்ள அரச நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தற்கொலை செய்து கொண்ட அவரது கணவர் வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று அண்மையில் நாடு திரும்பிய ஒருவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.காணிப் பிரச்சினை ஒன்றே சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்.காரைநகர் சிவன்கோவில் பகுதியில் கடந்த 15ம் திகதி தன்பேரனால் தாக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிப மாது ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலு ம் தெரியவருவதாவது, சுப்பிரமணியம் சீதாலட்சுமி(வயது73) என்ற வயோதிப மாது கணவனை பிரிந்த தன் மகள் மற்றும் மகளின் இருபிள்ளைகள், மனைவியை பிரிந்த மகன் ஆகியோருடன் வாழ்ந்து வந்த நிலையில்,குறித்த வயோதிப மாதுவின் மகளுடைய மகன் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.
27 வயதான மேற்படி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் தினசரி வீட்டின்கதவை பூட்டி திறப்பை கையில் வைத்துக் கொண்டு தன்னுடைய அனுமதி இல்லாமல்யாரும் வீட்டுக்குள் போகக் கூடாது என வீட்டில் இருந்தவர்களை வற்புறுத்துவதைவழக்கமாக கொண்டிருந்துள்ளான்.இந்நிலையில் கடந்த 15ம் திகதி மேற்படி இளைஞனின்தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மழை காரணமாக வீடு திரும்பாத நிலையில்மேற்படி வயோதிப மாது தன் பேரனை சோறு சாப்பிடுமாறு கேட்டிருக்கின்றார்.அதற்குபேரன் மறுத்த நிலையில் இல்லை கட்டாயம் சாப்பிடவேண்டும் என கேட்டவாறு மேற்படிவயோதிப மாது குசினிக்குள் சென்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன்(பேரன்)தனது அம்மம்மாவை மர சட்டத்தால் தாக்கி விட்டு வீட்டின் தாள் வாரத்தில் கொண்டுவந்து போட்டுள்ளான்.
இந்தச் சம்பவத்தின் போது குறித்த வயோதிப மாதுசத்தமிட்ட போதும் அயலவர்களோ வீட்டில் இருக்கிறவர்களோ வீட்டுக்கு வராத நிலையில்மறுநாள் 16ம் திகதி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் தாய் வந்து தனது தாயைகாப்பாற்ற முயன்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சைவழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின்திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்
மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றி வரும் அர்ஜூன் மகேந்திரனை மீளவும் அந்தப் பதவிக்காக நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடிதம் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தினேஸ் குணவர்தன, திஸ்ஸ விதாரண, மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் டியு.குணசேகர ஆகியோர் இந்த கோரிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் மற்றும் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய வங்கி ஆளுனரின் பதவிக் காலம் விரைவில் பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு குறைபாடுகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன.அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் முடிவடையும் காரணத்தினால் வேறும் பொருத்தமான ஒருவரை பதவிக்கு நியமிக்குமாறு கோருவதாக கூட்டு எதிர்க்கட்சியினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில்களில் மேற்கொள்ளப்படும் மிருகப் பலியிடலை தடுக்கும் வகையில்அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்து கலாசார திணைக்களம் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.இதன்கீழ் தற்போது வரைபு தயாரிக்கப்பட்டு அரச சட்டவரைஞர் திணைக்களத்தின் அனுமதியும்பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய இடங்களில் இந்த மிருகப் பலியிடல் நடவடிக்கைகள்பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மலையகத்திலும் குறிப்பிடத்தக்க அளவான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.இந்தநிலையில் இதனை கட்டுப்படுத்த முன்னர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும்எதிர்ப்புக்கள் காரணமாக அவை விடப்பட்டன.எனினும் இந்து மதக் கோட்பாடுகளில் இந்த விடயத்துக்கு இடமில்லை என்ற வகையில்பலியிடலை தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக திணைக்களம்குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்த பிரஜாவுரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் வசிக்கும் 1885 இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. களுகங்கையின் மில்லகந்த பிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் சற்று வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது.
இதற்கிடையே மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களை வரைபடமாக தயாரிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த வரைபடத் தகவல் தயாரிப்பில் கடற்படையினரின் உதவியும், கள ஒருங்கிணைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள், களனி மற்றும் அத்தனகல ஆற்றோரங்கள் என்பவற்றில் தற்போதைக்கு கடற்படையின் விசேட பயிற்சி பெற்ற பிரிவினர் வரைபடத் தயாரிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வட் வரி அதிகரிப்பை அடுத்து, முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்தது.
இந்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில், முச்சக்கரவண்டி இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று இடம்பெற்றதாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஜீ.சுதில் ஜயருக் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் வாரத்தில் தீர்க்கமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சார்பில் டினேஷ் சந்திமால் சற்று முன்னர் தனது ஆறாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
பலோ ஒன்னில் தனது இரண்டாவது இனிங்ஸை தொடரும் இலங்கை அணி மதிய உணவு இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 403 ஓட்டங்களை குவித்திருந்தது. சந்திமால் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் ரங்கன ஹேரத் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
முன்னதாக தனது முதலாவது இனிங்ஸில் இலங்கை அணி சகல் விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
புதுக்குடியிருப்பு நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டு தமிழ் மண்ணின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர். இதுவே யுத்த முடிவின் பின் தமிழன் திரண்டெழுந்த நிகழ்வு எனலாம்.
சிவப்பு, மஞ்சல் கொடிகள் வீதி எங்கும் பறக்க மைதானம் நிறைந்த மக்களுடன் சிவப்பு, மஞ்சல் கொடிகள் மீண்டும் ஒரு முறை சங்கமித்தது. முத்தமிழ் விழா பதாகைகள் பழைய வரலாற்றை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி நின்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து உரையாற்றிய வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிக்கையில் ஈழம் என்பதற்கு தமிழில் நீரில் இருந்து எடுக்கும் தங்கம் என்று பொருள். பாலியாற்றில் மணல் கரைகளில் இன்றும் தங்க துகள்கள் அடிபட்டு செல்வதை காணலாம் என்றார். தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், உடமைகளை இழந்தனர், தாம் வாழ்ந்த பூர்வீக மண்னை இழந்தனர், தமது சுய பாதுகாப்பை இழந்தனர்.
ஆனால் தமது கல்வியையும், கலாச்சாரத்தையும் இழக்கவில்லை. இந் நிகழ்வு தமிழனின் கலாச்சாரத்தையும் கலையையும் நிலை நிறுத்தும் ஒரு நிகழ்வு. கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் அடையாளம். இன்று எமது தனித்துவத்ததை தமிழன் மீண்டும் ஒரு முறை கலாச்சார நிகழ்வு மூலம் நிறைவேற்றியிருக்கின்றான். முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் வரலாறு முடிந்துவிட்டது என கூறியவர்களுக்கு சிவப்பு மஞ்சல் கொடிகள் மீண்டும் புதிய கதைபேசி நிற்கின்றது.
அன்று அடங்காபற்றில் அரசோச்சிய தமிழன். தனது மண்ணில் கலாச்சார எழுச்சி மூலம் மீண்டெழுவான் என்ற எமது உரிமையை காக்கும் செய்தியை கூறி நிற்கிறான் என்றார். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். முன் நடந்து செல் வன்னித் தமிழா. காத்திடு உன் கலாச்சாரத்தை, நிலை நிறுத்திடு உன் தமிழினத்தின் அடையாளத்தை என்றார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன்.
மேலும் நடந்த மேடை நிகழ்வுகளில் கோவலன் கூத்து, காத்தவராயன் கூத்து, அரிச்சந்திர மயான காண்டம், பண்டார வன்னியன் ஆகியவை மேடையேறியது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தென் இந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் இந்த மக்கள் வலி கண்டவர்கள், எனவே அவர்களுக்குத்தான் முடியும் சிறந்த ஈழமண் படைப்புக்களை படைப்பதற்கு, ஈழ வரலாற்றை எழுதக்கூடியவன் ஈழமண்ணில் இருந்துதான் உருவாக வேண்டும் என்றார்.