சர்வதேச சிறுவர் முதியோர் தினம் நேற்று (15.10.2015)வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சரஸ்வதி மோகநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கியின் நெடுங்கேணி கிளை முகாமையாளரும், மக்கள் வங்கியின் அதிகாரியும், Plan Sri Lanka நிறுவனத்தின் அதிகாரிகளும் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்,
மேலும் இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே. ஆயாகுலன், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா. நாகேஸ்வரபாலா , வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் , பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா வடக்கு செய்தியாளர் நிரேஷ்