பல மொழிகளில் நாயகியாக கலக்கி வந்தவர் பிரியாமணி. அண்மையில் இவருக்கும் முஸ்தப்பா ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.அந்த புகைப்படத்தையும் தன்னுடைய வலைப்பகுதியில் ஷேர் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரியாமணி.
இந்நிலையில் தனது நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்களின் மோசமான பார்வையால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அமெரிக்காவில் கொரில்லாவை அடைத்து வைத்திருந்த கூண்டுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக 17 வயதான கொரில்லாவை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.ஒஹியோ மாநிலம், சின்சினாட்டி பகுதியில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் கொரில்லாக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையிலான பகுதி உள்ளது.
இங்கு கொரில்லாவை அடைத்து வைத்திருக்கும் 1 0 முதல் 12 அடி உள்ள குழிக்குள் 3 வயது குழந்தை தவறி விழுந்துள்ளது.இந்த கூண்டுக்குள் 3 கொரில்லாக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன, மற்ற இரு கொரில்லாக்கள் தூரத்தில் இருக்கவே ஒரு கொரில்லா மட்டும் குழந்தையின் அருகில் நின்றுள்ளது.
இதனைப்பார்த்த பலரும் அச்சத்தில் கத்தியுள்ளனர், மேலும் குழந்தையை மீட்பதற்காக பொலிசார் 10 நிமிடம் முயற்சி செய்தனர், ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை.இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என கருதிய பாதுகாவலர்கள் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் கொரில்லா உயிரிழந்துள்ளது, பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தையை மீட்க கொரில்லாவுக்கு மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தியிருக்கலாம் என அமெரிக்காவில் கண்டனமும் எழுந்திருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியை, கணவனே ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் அடகு வைத்த இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரவீந்தர் சிங் என்ற நபர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் ஜஸ்மீட் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கான்பூரின் கோவிந்த் நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் பொருள் உள்ளிட்டவற்றை இழந்த நிலையில், ரவீந்தர் சிங், அவரது மனைவி கவுரை அடகு வைத்து விளையாடி இழந்துள்ளார். தற்போது ரவீந்தர் சிங் காணாமல் போனதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சூதாட்டத்தில் வெற்றிபெற்ற ஆண்கள் சிலர் ஜஸ்மீட் கவுரை துன்புறுத்தி வந்துள்ளனர், பாதிக்கப்பட்டுள்ள கவுர், சமூக ஆர்வலர்கள் சிலர் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது தொடர்பாக அளித்துள்ள புகாரில் ஐபிஎல் போட்டிகளின் போது தன் கணவர் பணம் பொருள் உள்ளிட்டவற்றை இழந்த நிலையில் தன்னை வைத்து தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் அவர் தோற்றதால் தற்போது சம்பந்தபட்ட நபர்கள் தம்மை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் புகாரில் தன்னை துன்புறுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் கலாபவன் மணி (வயது 45) கடந்த மார்ச் 6ம் திகதி திடீரென மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆபத்தான நிலையில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
சம்பவத்துக்கு முன்தினம் தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் கலாபவன் மணி இறந்ததாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் அவரது நண்பர்களான நடிகர் ஜாபர், ஷாபு உள்பட சிலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது உடலில் பூச்சி மருந்து இருந்ததாகவும், மெத்தில் அல்கஹால் எனப்படும் மெத்தனால் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியானது. இதனால் கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தது.
எனவே கலாபவன் மணியின் உடல் பாகங்களை தடயவியல் சோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர். அங்கு கலாபவன் மணியின் உடல் பாகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதற்கிடையே கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். எனவே இந்த மர்மச்சாவு தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கலாபவன் மணியுடன் மது அருந்தியவர்களிடம் விசாரணை நடத்தினர்.மேலும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும் இந்த வழக்கில் பொலிசாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணை மந்தமடைந்தது.இந்த நிலையில் ஐதராபாத் தடயவியல் துறை கலாபவன் மணியின் உடல்கூறு சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் கலாபவன் மணியின் உடலில் மெத்தில் அல்கஹால் எனப்படும் நச்சு கலந்த மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.கள்ளச்சாராயம் எனப்படும் போலி மதுவில் போதைக்காக சேர்க்கப்படும் இந்த மெத்தனால் நச்சுப்பொருள் ஆகும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் இது எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படும். அப்படித்தான் கலாபவன் மணியின் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளதாக தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.
தடயவியல் துறையின் இந்த அறிக்கையால் கலாபவன் மணியின் சாவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கலாபவன் மணிக்கு நச்சு கலந்த அந்த மதுவை கொடுத்தது யார் என பொலிசார் விசாரணையை முடுக்கி விட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பலாங்கொடை சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை 41 வயதான திருமணமானவர் என்றும், குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆசிரியை கலந்துக்கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆசிரியையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே குறித்த படை முகாமில் உள்ள பலரும் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கூரகல பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரியான கேர்ணல் புஞ்சி பண்டாரவினால் குறித்த ஆசிரியையின் கைத்தொலைபேசி பரிசோதிக்கப்பட்டதாகவும் இதன்போதே ஆபாசபடங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது. அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பரினால் அண்மையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கனேடிய கெடட் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருது அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கெடட் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
மணி டன்ஸ்டன் – மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்புக் லைவ் (facebook live) மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க் உரையாடவுள்ளார்.
விண்வெளியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த விண்வெளி நிலையம் பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகிறது.
அங்கு தங்கியுள்ள டிம் கோப்ரா, ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் டிம்பீக் ஆகிய விண்வெளி வீரர்களுடன் facebook live மூலம் மார்க் மார்க் சக்கபேர்க் வருகிற ஜூன் முதலாம் திகதி உரையாட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வினை நாசா மையத்தின் பேஸ்புக் பக்கத்தின் மூலம் உலக மக்கள் கண்டுகளிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்புத் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, விண்வெளியில் உள்ள வீரர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் தங்கபுரம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (29.05) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகைளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் முதல் ரோபோ மொபைல் போன் (RoBoHon) ஜப்பானில் விற்பனைக்கு வந்ததுள்ளது.
ஜப்பான் மின்னணு நிறுவனம் ஸார்ப் (Sharp) மின் பொறியாளர் Tomotaka Takahashi இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மனித வடிவில் இருக்கும்.
இதன் விலை 1,800 டொலர் இந்த ரோபோ நமது உத்தரவிற்கு ஏற்ப கை, கால்களை கொண்டு நடக்க மற்றும் நடனமாடவும் செய்யும்.
மொபைல் போனாக செயல்படுவது மட்டுமல்லாமல் 390 கிராம் எடையும் 19.5 செனறிமீற்றர் உயரமும் உள்ள இந்த ரோபோ, ப்ரொஜெக்டர் போல் செயல்பட்டு வீடியோ, புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் காட்டவும் பயன்படும்.
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது.
அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது.
எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அருகிலுள்ள வேறு பாடசாலைகளை ஒதுக்கி கொடுக்கவுள்ளதாகவும் இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமுடைய பேஸ்புக் வலைதளத்தில் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்ய இளம்பெண்கள் எங்களிடம் உள்ளனர் என்ற வகையில் வெளியாகியுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களிடம் சிக்கும் நபர்களில் ஆண்களை கொடூர கொலை செய்து விடுகின்றனர். பெண்களை தங்களது தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர் என பலமுறை செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கடந்த மே 20ம் திகதி பேஸ்புக் வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவில், அடிமையை விலைக்கு வாங்க விரும்பும் அனைத்து சகோதரர்களுக்கும், இது 8 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவை வெளியிட்ட நபர் தன்னை அபு ஆசாத் அல்மேனி என்ற ஐ.எஸ். போராளி என அடையாளப்படுத்தி உள்ளார்.
அந்த புகைப்படத்தில், 18 வயது கொண்ட இளம்பெண் ஒருவர் முகத்தில் கறுப்பு துணியால் மறைக்கப்பட்ட நிலையில் அமர்ந்துள்ளார். அந்த படத்திற்கு இடப்பட்ட தலைப்பு: இவள் விற்பனைக்காக என்று உள்ளது. இந்த புகைப்படம் வெளியான ஒரு சில மணிநேரங்களில், அதே நபர் மற்றொரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
அந்த படத்தில் அழுது கண்கள் சிவந்து வாடிய நிலையில் இளம்பெண் ஒருவர் காணப்படுகிறார். அதன் பதிவில், மற்றொரு சபீயா (அடிமை), இவளும் 8 ஆயிரம் அமெரிக்க டாலர். வேண்டுமா அல்லது வேண்டாமா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுகளை சில மணிநேரங்களில் பேஸ்புக் நீக்கி விட்டது. இந்த பதிவினை, தொடர்புடைய நபர் விற்பனை செய்வதற்காக வெளியிட்டுள்ளாரா அல்லது பிற போராளிகளால் பெண்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் வெளியிட்டுள்ளாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் வழக்கத்தில் இல்லாத வகையில் வெளியான இந்த பதிவு, நூற்றுக்கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக ஐ.எஸ். அமைப்பினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளது அதிகரித்து உள்ளது என்பது தெரிகிறது என்று தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நகரி தொகுதியில் இருந்து வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ரோஜா.
இவர் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது தனது முழு சொத்து விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், எனவே அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அறிவிக்க கோரி புத்தூரை சேர்ந்த எஸ்.எஸ்.ராயுடு என்ற வழக்கறிஞர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து எஸ்.எஸ்.ராயுடுவின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரோஜா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த 2 வழக்குகளையும் ஒரே நேரத்தில் விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி 2 வழக்குகளும் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, 2 வழக்குகளையும் ஒரே நேரத்தில் விசாரிப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும் தனது வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி ரோஜா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ரோஜாவின் வக்கீல் ரமேஷ் கூறினார்.
9வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 8 ஓட்டங்களால் பெங்களூர் அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி முதன்முறையாக சம்பியன் பட்டம் வென்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களான தவான் (28), அணித்தலைவர் வார்னர் (69) நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
அடுத்து வந்த யுவராஜ் சிங் (38), பென் கட்டிங் (39) ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவரில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுக்கு208 ஓட்டங்கள் குவித்தது.
பெங்களூர் அணி சார்பில் அரவிந்த 2 விக்கெட்டுகளையும், ஜோர்டான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டினார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 76 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய அணித்தலைவர் விராட் கோஹ்லி (54) அரைசதம் கடந்தார். தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர்.
அந்த அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த நிலையில், 20 ஓவரில் அந்த அணியில் 7 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.