வவுனியா வடக்கில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தினத்தையொட்டிய விளையாட்டு நிகழ்வு!(படங்கள்)

சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தையொட்டி  வவுனியா வடக்கு பிரதேச  செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (15.10.2015) வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் ஏராளமான பாடசாலை சிறார்களும் முதியவர்களும் கலந்துகொண்டனர் .மேற்படி நிகழவில்  பலூன் ஊதி உடைத்தல் பழம் பொறுக்குதல்  சங்கீத கதிரை  கிடுகு பின்னுதல்  முயல் மற்றும் தவளை பாச்சல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது .

வவுனியா வடக்கு  செய்தியாளர் நிரேஷ்

12065489_427959550727075_7918620465572590388_n 12072705_427958750727155_8564087621347158902_n 12072709_427958684060495_7174835519527111146_n 12072834_427958737393823_6935219878835310448_n 12072834_427959060727124_625536861573392854_n 12088427_427959804060383_1452039701163504278_n 12088467_427958427393854_7602988106671836862_n 12105789_427958620727168_9028531698845523685_n 12105917_427958327393864_8692354137737750814_n 12112139_427959130727117_5596789017753782007_n 12112296_427958807393816_7306390577207367270_n 12112455_427958257393871_988874776048103369_n 12118601_427960137393683_6001981772494608900_n 12118730_427960184060345_4921923497297505808_n 12141689_427958280727202_7825270976439864337_n 12143199_427959050727125_7656800711407581057_n 12144703_427958900727140_4642446169345355762_n 12144715_427959047393792_1941930786980180626_n

வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர்களால் போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு !(படங்கள் )

12.10.2015 அன்று  வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியகராசா மற்றும் இ.இந்திரரா சா அவர்களினால் நிழல் பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபைஉறுப்பினர்களனா திரு.ம.தியாகராசா மற்றும் இ.இந்திரராசா அவர்கள் தங்களுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு நிழல்ப்பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) மற்றும் புகைபடக்கருவி என்பன வழங்கி வைக்கப்பட்டும் இன் நிகழ்வானது பெரிய கோமரசன்குளம் பாடசாலையில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் கள் போட்டோக் கொப்பிஇயந்திரத்தை அதிபர் ஆசிரியரிடம் கையளிக்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.

11148315_1496087817354090_9143179514140966056_n 12063324_1496087670687438_8986111858159354777_n 12088452_1496087844020754_8469409465695881929_n 12096605_1496087784020760_2945881811314610795_n

வவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச உள நல தினம் ஒருபார்வை! (படங்கள் )

வடமாகண கல்வித்திணைக்களமும், சுகாதாரதிணைக்கமும் ,வவுனியா நகரசபையின் அனுசரணை யோடு நடாத்திய உளநல தின நிகழ்ச்சிகள் நகரசபை மண்டபத்தில் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில்இன்று(15.10.2015) நடைபெற்றது.இந் நிகழ்வரிற்கு பிரதம அதிதியாக. கௌரவ சுகாதா அமைச்சர் P.சத்தியலிங்கம் கலந்துகொண்டுடிருந்தார்.

தலைமையுரையினைமுத்து இராதாககிருஸ்ணன் நிகழ்த்தினார் வரவேற்புரையினை வவுனியா பொதுவைத்தியசாலையின் உளநல வைத்தியர் S.சுதாகரன் நிகழ்த்தினார் அதனைத்தொடர்ந்து உளவழத்துணை ஆசிரியர்களால் சீர்மிய கீதம் இசைக்கப்பட்டது.


ஆசியுரையினை கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறையின் செயலாளர் இ.இரவீந்திரன் நிகழ்த்தினார்.மேலும் இந்நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய பார்வையைச் செலுத்தினால், இறம்பபைக்குளம் மகளீர் கல்லூரிமாணவிகளும் தமிழ் மத்திய மாகாவித்தியாலய மாணவர்களும் இணைந்து நிகழ்த்திய பட்டிமன்றம் -(சினிமாசமூகத்தைசீர்படுத்துகிது-சீர்டுத்தவில்லை)என்ற வாதப்பிரதி வாங்கள் சமூகச்சீர்கேடுகளைதடுக்க என்னசெய்யலாம்?எது நல்ல சினிமா? என்பது பற்றி மாணவர்களை சிந்திக்கத்தூண்டியிருக்கும். யா/மல்லாகம் மகாவித்தியா மாணவி செல்வி.வைசா நடித்த. தொழில்நுட்பத்தின் கையில் வாழ்க்கை என்னும் ஓராள் அரங்கஆற்றுகை முகநூல்பாவனையின் அவலங்கள் பற்றிப்பேசிது, செட்டிக்குளம் மமகா வித்தியாலமாணவ,மாணவிகள் இணைந்து நடித்த ‘திறமைக்கு கைகொடுப்பகோம் ‘என்னும் நாடகம் பெற்றேர்கள் பிள்ளைகள் மீது கல்வியை திணிப்பதால் ஏற்படும் எதிர்வினைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருந்தனர்,

குணநாயகம் மகிழ்ச்சிகரன் இயக்கத்தில் வெளியான. வாழ்வைத்தேடி,தவிப்பு,அமைதி இக்நேசியஸ் இயக்கத்தில் உருவான அசப்பு ஆகிய குறும்படங்கள். சமகால பிரச்சினைபற்றிப்பேசி சிந்திக்கவைக்கின்றன.இவ்வாறு இவைஒருபரிமாணத்தை காட்டிநிற்க வவுனியா வறோட்நிறுவனம்,முல்லைத்தீவு இனியஇல்ல மாற்றுத்திறநாளிகளின் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு வியந்து நின்றனர். ஒரு அரங்கில் குறும்படம்,நூல்வெளியீடு,கலைநிகழ்ச்சிகள்,உரைகள் என பல்துறை அம்சங்களையும் கண்டு இன்புற்றிருந்த நிறைவுடன், மீண்டும் சந்திப்போம்.

 படங்கள் :தம்பிப்பிள்ளை சுதன் 

11226002_451646741703515_9190583832882829526_n 12088266_451644681703721_6368931572747389172_n 12144759_451644468370409_5196099782479323751_n 12144948_451646621703527_8109395534635158421_n 12144949_451646668370189_6715581713465431816_n

12115779_451620588372797_6596528210765037360_n

12115679_451620685039454_1113780328247802821_n

வவுனியாவில் சர்வதேச கைகழுவுதல் தினம்!!

சர்வதேச கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் ஆரப்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் பாடசாலை மட்டத்திலிருந்து சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் நோக்குடன் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரித்து கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயன்முறை விளக்கங்களுடன் சுகாதார விளக்கங்களையும் வழங்கி பாடசாலை மட்டத்தில் சுகாதார விழிப்புனர்வை ஏற்படுத்தயதுடன் மாணவர்களுக்கு சுகாதாரப் போட்டிகள் நடாத்தி பரிசில்களும் வழங்கிவைத்தனர்.

IMG_0949-720x480 IMG_0959

தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை : யாழில் சம்பவம்!!

1 (40)தந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய கிருபாகரமூர்த்தி ராஜநந்தினி ஆவார்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு!!

howlers464_002பிரித்தானியாவில் ஓநாய் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு தங்களது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க ஓநாய் போன்று ஊளையிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.பிரித்தானியாவில் உள்ள லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் இந்த விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஓநாய் விரும்பிகள் 464 பேர் ஒன்று திரண்டு ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.குறிப்பிட்ட நிமிடத்துக்கு இவர்கள் அனைவரும் தொடர்ந்து ஓலமிட்டு அந்த நகரையே மிரட்டியுள்ளனர்.

இந்த சிறப்பு சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் பலர் தங்களுக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்திருந்தனர்.இந்த மாத இறுதியில் வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் இந்த சாதனை நிகழ்வு அமைந்துள்ளது.

முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் செயின்ட் க்ளவுட் பல்கலைக்கழகத்தில் 296 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊளையிட்ட சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கும் ஒரு குவார்ட்டர் சொல்லுங்க”: கணவரை திருத்த குடிமகளாக மாறிய மனைவி

lilly_tasmac_002தமிழகத்தில் குடிபழக்கத்துக்கு அடிமையான தனது கணவரை திருத்த நினைத்த பெண்மணி ஒருவர் மதுபாருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளார். கோவை கணபதி நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயக்குமார் தினமும் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

சம்பள பணத்தில் பெரும்பகுதியை குடித்து அழித்ததோடு, தினமும் தகராறும் செய்து வந்ததால் அவரது மனைவி லில்லி மிகவும் சிரமப்பட்டுள்ளார். குடிபழக்கத்தை கைவிடுமாறு எவ்வளவு கெஞ்சியும் ஜெயக்குமார் கேட்காத நிலையில் தான், லில்லி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.

நேற்று காலை 11 மணியளவில் கணவர் தினமும் மது அருந்தும் அத்திப்பாளையம் அருகே உள்ள மதுபாருக்கு சென்ற லில்லி, உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
மதுபாருக்குள் திடீரென்று ஒரு பெண் வந்து அமர்ந்ததால் அங்கு குடித்து கொண்டிருந்த ஆண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் லில்லியை வெளியே போக சொல்லியபோது, எனது கணவர் இங்கேதான் தினமும் மது குடிக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து மது குடிக்கப் போகிறேன் என லில்லி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஜெயக்குமார் பாரின் உள்ளே தனது மனைவி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இங்கே ஏன் வந்தாய்? என மனைவியை திட்டியுள்ளார்.

அதற்கு லில்லி, எனக்கும் சேர்த்து மது வாங்குங்கள் இருவரும் சேர்ந்து மது குடிப்போம் என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மனைவியை சமானதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து போக முயன்ற போது, முடிவு தெரியாமல் போக மாட்டேன் என்று லில்லி செல்ல மறுத்துள்ளார்.

பின்னர், மதுக்கடையில் கணவன் மனைவியிடையே தகராறு நடப்பதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.லில்லி பொலிசாரிடம், என் கணவர் மது குடிப்பதை நிறுத்தும்படி பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை.

இதனால்தான் இது போன்று நடந்து கொண்டதாக லில்லி கூறியதை அடுத்து பொலிசார் ஜெயக்குமாரை கண்டித்துவிட்டு இருவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், எனது கணவர் மீண்டும் மது குடித்தால், நான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று லில்லி பொலிசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரலில் மோதிரம் போன்று அணியக்கூடிய மிகவும் சிறிய கையடக்கத்தொலைபேசி!!

clockசுட்டு விரலில் மோதிரம் போன்று அணியக் கூடிய முழு­மை­யாக செயற்­படும் ஐபோன் கைய­டக்கத்தொலை­பேசி தொடர்பில் முன்­னணி தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான அப்பிள் அறி­வித்­துள்­ளது.

‘ஸ்மார்ட் மோதிரம்’ என அழைக்­கப்­படும் இந்த சின்­னஞ்­சிறு கைய­டக்கத்தொலை­பேசி சிறிய தொடுகை உணர்­வுள்ள திரையைக் கொண்­டுள்­ளது.

பெரு­வி­ரலால் செயற்­ப­டுத்­தக்­கூ­டிய இந்தக் கைய­டக்கத் தொலை­பே­சியைப் பயன்­ப­டுத்தி எழுத்து வடிவ செய்­தி­களை அனுப்­பவும் புகைப்­ப­டங்­களை எடுக்­கவும் பல்­வேறு மென்­பொருள் நிகழ்ச்சித் திட்­டங்­களை கையா­ளவும் முடியும்.

அப்பிள் கடி­கா­ரங்கள் போன்று இந்த மோதி­ரமும் பயன்­பாட்­டா­ள­ரது ஐபோன் கையடக்கத் தொலைபேசியுடன் இணைப்பைக் கொண் டுள்­ளது.

வீட்டுச்சுவரை இராட்சத தொலைக்காட்சி திரையாக மாற்றும் ஸ்மார்ட் மோதிரம்!!

clock_0ஒரு­வரின் கை அசைவில் இலத்­தி­ர­னியல் உப­க­ரணங்­க­ளையும் காட்சித் திரை­க­ளி­லி­ருந்து ஸ்மார்ட் ஒளிகள் வரையும் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய ஸ்மார்ட் மோதி­ர­மொன்று இஸ்­ரேலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் எம்­யுவி இன்­ட­ரக்டிவ் நிறு­வ­னத்தால் உரு­வாக்­கப்­பட்­டுள் ­ளது.

‘பேர்ட்’ என்ற மேற்­படி மோதி­ர­மா­னது பயன்­பாட்­டாளர் எவ்­வாறு தனது கையை அசைக்­கிறார் என்­பதை கிர­கித்து அதற்­கேற்ப செயற்­ப­டக்­கூ­டிய நுண் உணர்­க­ரு­வி­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது.

இது மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­களின் குருதி ஒட்­சிசன் மட்­டங்­க­ளையும் இரு­தயத் துடிப்­பு­க­ளையும் கண்­கா­ணிக்கப் பயன்­படும் உப­க­ர­ணத்தை ஒத்­த­தாக காணப்­ப­டு­கி­றது.

மேற்­படி பேர்ட் உப­க­ரணம் குரல் மற்றும் குரல் அழுத்தம் என்­ப­ன­வற்­றையும் உணரும் ஆற்­றலைக் கொண்­டுள்­ளது.

இந்த உப­க­ரணம் கம்­பி­யில்லா முறைமை மூலம் தொலைக்­காட்சி மற்றும் படத்தை திரை­யிடும் கருவி என்­ப­வற்­றுடன் தொடர்பைக் கொண்­டுள்­ளது.

இதன்­போது பயன்­பாட்­டாளர் காட்­சிப்­ப­டுத்­தப்­படும் காட்­சியை தூரத்­தி­லி­ருந்து கையை அசைப்­பதன் .மூலம் விரும்­பி­ய­வாறு மாற்­றவோ சரி­செய்து கொள்­ளவோ முடியும்.

அத்­துடன் இந்த மோதிரத்தின் மூலம் ஒருவர் தனது வீட்டின் சுவரை இராட்சத காட்சித் திரையாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவிற்கு எதிராக நடக்கும் பெரிய சதி!!

simbu-1சிம்பு வாலு படத்தின் பிரச்சனையில் இருந்து தற்போது தான் மீண்டு வந்தார். இதை தொடர்ந்து கான், அச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.இதில் சமீபத்தில் கான் படம் நிதி நெருக்கடியால் நின்றது அனைவரும் அறிந்ததே.

ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், இப்படத்தை சிலர் வேண்டுமென்றே தான் நிறுத்தினார்களாம்.அதேபோல் சிம்புவை நடிகர் சங்க தேர்தலில் நிற்க சொல்லி, பின் கடைசி நேரத்தில் ஒரு நடிகர் விலகி விட்டாராம். அவர் தான் சிம்புவின் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

எங்களை பார்த்து கெட்டுப்போகாதீர்கள்- தமன்னா வருத்தம்!!

tamannah001பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் தமன்னா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்றைய கால பெண்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இதில் ‘நான் சினிமாவிற்காக இப்படி நடிக்கின்றேன், ஆனால், வீட்டில் இருக்கும் போது சாதரண பெண்களை போல் தான் உடைகளை அணிகிறேன்.சினிமா ஹீரோயின் போல் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய கால பெண்கள் பலரும் அவர்களை போலவே ஆடைகளை அணிவது தவறு’ என கூறியுள்ளார்.

அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன!!

dimuthஇலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது டெஸ்ட் இன்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடி வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தனது 3வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

சிரிய பெண் கடற்கரையில் குழந்தை பிரசவம்!!

syria-refugee-baby

துருக்­கி­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட சிரி­யாவைச் சேர்ந்த நிறை மாதக் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர், கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் கடற்­க­ரையில் ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்­துள்ளார்.

அவர் மேற்­படி கடற்­க­ரையை வந்­த­டைந்து சிறிது நேரத்தில் குழந்­தையைப் பிர­ச­வித்­துள்ளார். அவ­ருக்கு குழந்­தையைப் பிர­ச­விக்க மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களும் பிர­தே­ச­வா­சி­களும் உத­வி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அவர் மேல­திக மருத்­துவ கவ­னிப்­புக்­காக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். குடி­யேற்­ற­வா­சி­களை அடை­யாளம் கண்டு பதி­வு­செய்­வ­தற்­கான முத­லா­வது நிலை­யத்தை எதிர்­வரும் 10 நாட்­க­ளுக் குள் திறப்­ப­தாக கிரேக்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்­நாடு ஒவ்­வொரு இரு மாதங்­க­ளுக்கு ஒரு தடவையும் 10,000 குடியேற்ற வாசிகளையும் அகதிகளையும் மீளக் குடி யமர்த்த எதிர்பார்த்துள்ளது.

பிரேசில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகள்!!

9668045Cowபிரேசிலில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்த நிலையில் கரையொதுஙகி இருப்பதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில், லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் ஐந்தாயிரம் மாடுகள் மற்றும் 750 டன் எண்ணெய்யுடன் பாரா பகுதிக்கு வந்தது. விபத்தில் சிக்கிய இந்தக் கப்பல், கடலில் மூழ்கியதால், கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழந்து கரை ஒதுங்கின.

தொன்கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால், கடல் உயிரினங்கள் மட்டுமில்லாமல், அப்பகுதி மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இறந்த மாடுகள் கரைஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளகியுள்ளனர். கப்பல் மூழ்கியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏவுகணை வளாகத்திற்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டது!!

kalam+PTI_1_0_1_0_0_0_0_0_0_1_0_0_0_0_0_0_0_0_0இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று பாராட்டப்பட்ட அப்துல் கலாமின் 84வது பிறந்த தினம் இன்று (15ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபடுகிறது .

இந்த நிலையிலேயே ஏவுகணை வளாகத்திற்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பில் பார்வையற்றோர் ஊர்வலம்!!

school_6சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஏற்பாடு செய்த விழிப்புலனற்றோரின் ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் துளசி மண்டபத்தில் நிறைவடைந்தது.

தரிசனம் பாடசாலை தலைவர் முருகு.தயானந்தா தலைமையில் வெள்ளைப்பிரம்பை தாங்கிய பெரும் எண்ணிக்கையிலான விழிப்புலனற்றோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு செயலமர்வு கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.