உலகின் 41ஆவது செல்வந்தரான சவூதி இளவரசர் இலங்கை வருகிறார்!!

gettyimages-479123616
2016 ஆம் ஆண்டு போர்பஸ் பட்டியலின்படி உலக பணக்காரர் வரிசையில் 41 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள சவூதி இளவரசர் அல் வாஹீட் பின் தலால் இலங்கை வரவுள்ளார்.இந்த விஜயம் விரைவில் இடம்பெறும் என்று செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று அவர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக பிரதி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இளவரசர், இலங்கையின் வெள்ள அனர்த்த பாதிப்புக்களின் சீரமைப்புக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக தருவதற்கு அறிவித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இளம்பெண்ணுடன் சேஷ்டை விட்ட இளைஞர் நையப்புடைக்கப்பட்டார்!!

attacked-5487ew-e1457769058106
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் இளம் பெண்ணுடன் சேஷ்டை விட்ட இளைஞர்ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேற்படிச் சம்பவம் தொடர்பாகமேலும் தெரிய வருவதாவது.குறித்த பகுதியால் தனது சகோதரியை தனியார் கல்விநிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாதமுறையில் நடக்கமுயன்றுள்ளார்.

இதனை குறித்த பெண் தன் தந்தைக்கு கூறிய நிலையில் தந்தைநியாயம் கேட்க சென்ற நிலையில் தந்தையை தாக்கிய குறித்த நபர் அங்கிருந்துதப்பிச் செல்ல முயன்றுள்ளார்.இந்நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் குறித்தஇளைஞனை மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்ஒப்படைத்துள்ளனர்.இந்த இளைஞன் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் வசிப்பவர்களை அச்சுறுத்தும் புதிய தொல்லை!

Colombo

கொழும்பு புறநகர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து தற்போது துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலைமையானது கொழும்பின் புற நகர் பகுதிகளான கொடிகாவத்தை ,முல்லேரியா,கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசௌகரிய நிலைக்கு மாநகராட்சியிடம் இருந்து எந்த சேவைகளும் கிடைக்கப் பெறவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். கொழும்பில் இருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் இந்த பிரதேசங்களில் கொட்டப்படுவதே இந் நிலைக்கு காரணம் என பிரதேச மக்கள் மேலும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மீண்டும் வீதியில் திரண்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

வவுனியா தரணிக்குளம் புனித ஜோசப் வாஸ் ஆங்கில முன்பள்ளின் விளையாட்டு விழா!!

 
வவுனியா தரணிக்குளம் புனித ஜோசப் வாஸ் ஆங்கில முன்பள்ளின் விளையாட்டு விழா இன்று (28.05.2016) வண.அருட்தந்தை வி.பீற்றர் அமல்ராஜ் (கப்புச்சின் மறைப்பணி இல்லம் தரணிக்குளம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கெளரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மதகுருமார்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

IMG_2996 IMG_2997 IMG_2998 IMG_3000 IMG_3008 IMG_3014 IMG_3015 IMG_3020 IMG_3023 IMG_3024 IMG_3026 IMG_3027 IMG_3029 IMG_3030 IMG_3033 IMG_3036 IMG_3039 IMG_3040 IMG_3042 IMG_3044 IMG_3045 IMG_3046 IMG_3047 IMG_3055 IMG_3064 IMG_3066 IMG_3067 IMG_3068

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிய லொத்தர் அறிமுகம்!!

Lottery

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக புதிய லொத்தர் ஒன்று அறிமுகப்படுத்துவதாக தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது.

நிதியமைச்சின் அனுமதியுடன் அந்த லொத்தரை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்திருப்பதாக அந்த சபை கூறியுள்ளது.

அந்த லொத்தருக்கு மனிதாபிமான செயற்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளைய தினம் அந்த லொத்தர் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது.

ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் ஆலய சூழலை துப்பரவு செய்யும் இராணுவத்தினர்!!

 
ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் கோவிலைச் சூழவுள்ள வெளிவீதி பற்றைக்காடாக இருந்த போதும் இதை சம்பந்தப்பட்ட எவரும் துப்பரவு செய்யாமையால் இராணுவத்தினர் இப்பகுதியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தமை காணமுடிந்தது.

எனினும் இப்பிரதேச மக்கள் எவரும் இப்பணியினை மேற்கொள்ளாத நிலைகண்டு சிலர் மனவருத்தப்படமையும் காணமுடிந்தது.

இன்னும் ஒரிரு வாரங்களில் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

20160528_123607 20160528_123615 20160528_123619 20160528_123628 20160528_123635 20160528_123655 20160528_124134 20160528_124145 20160528_124158    20160528_130640

வவுனியா நெடுங்கேணியில் காணி அபகரிப்பு : மக்கள் போராட்டம்!!

 
வவுனியா நெடுங்கேணி சின்னடம்பன் கிராமத்தில் நேற்று (27.05.2016) காணியை கையகப்படுத்த முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை குடியேற்றுவதற்காக சின்னடம்பன், செங்கல்படை குளத்தின் கீழான விவசாயக் காணிகளை துப்பரவு செய்யும் பணி லைக்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த காணி சின்னடம்பன் மக்களால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமைக்கான உறுதிப்பத்திரங்கள் காணப்படுகின்றன.

இதனையடுத்து நேற்று (27.05.2016) இப்பகுதி காணிகளை துப்பரவு செய்யும் வேளையில் மக்கள் தமது உறுதிப்பத்திரங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகண சபை உறுப்பினர்களாக லிங்கநாதன், தியாகராசா, கிராம அலுவலர் ஆகியோர் தலையிட்டு காணி துப்பரவுப் பணியினை தற்காலிகாமக இடைநிறுத்தினர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10) news (11) news (12) news (13) news (14)

வவுனியாவில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தொழிற்சந்தை!!

 
வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சந்தை நேற்று காலை வவுனியா பல்கலைக்கழக பம்பைமடு வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நேற்றையதினம் அனைத்துப் பட்டதாரிகள் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காவும் நடைபெற்றிருந்தது. இன்றைய தினம் (28.05.2016) அனைத்து தொழில் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்காக நடைபெற்றது. இவ் இரண்டு நாட்களிலும் 300 இற்கும் மேற்பட்டவர்கள் சமூகமளித்ததாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இத் தொழிற்சந்தையில் பல தனியார் நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வின் மூலம் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தனர்.

இத் தொழிற்ச்சந்தை தொடர்பாக ஒருவர் கருத்து தெரிவிக்கையில் , இந்த தொழிற்சந்தை பயனுள்ளதாக காணப்பட்டது. புல்வேறு நிறுவனங்கள் வருகைதந்திருந்தன. நான் ஒரு நிறுவனத்தின் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

20160528_132115 20160528_132117 20160528_132140 20160528_132240 20160528_132247 20160528_132252 20160528_132323 20160528_132339 20160528_132633 20160528_132705 20160528_132708 20160528_133103 20160528_133114 20160528_135831 20160528_140758

காதலிக்காமல் சிங்கிளாக இருந்தால் கிடைக்கும் நிம்மதி!!

17924498-Free-happy-elated-beach-woman-in-freedom-joy-concept-Beautiful-girl-smiling-with-arms-out-looking-up-Stock-Photo

காரணம் காதல் செய்தால், இப்படி தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கும், சுதந்திரம் இருக்காது. இவை ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அவ்வாறு சிங்கிளாக இருப்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களிடம் காதல் பற்றி கேட்டால், “முட்டாள்கள் தான் காதலில் விழுவார்கள்” என்று சொல்வார்கள்.

* சிங்கிளாக இருக்கும் போது நண்பர்கள் தான் காதலர்கள். ஏனெனில் இந்த நேரத்தில் நமது சந்தோஷம் மற்றும் துக்கத்தை பகிர்ந்து கொள்பவர்கள் நண்பர்கள் தான். அத்தகையவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சினிமாவிற்கு போகலாம். அதுவும் உயிர் தோழனாகவோ அல்லது தோழியாகவோ அல்லது நண்பர் கூட்டத்துடனோ இருக்கலாம். இதுவே காதலன்/காதலி இருந்தால், நண்பர்களுடன் நிம்மதியாக நேரத்தை செலவழிக்கவே முடியாது. அடிக்கடி போன் வந்து டென்சன் இருந்து கொண்டே இருக்கும்.

* எந்த ஒரு பாய் ப்ரெண்ட் அல்லது கேர்ள் ப்ரெண்ட் இல்லையென்றால், சொந்தம் கொண்டாட யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே தனியாக இருப்பதால், எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் நீங்களே ராஜா, ராணி. உங்களுக்கு மனதில் தோன்றுவதை செய்ய யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

* காதலிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் காதலன்/காதலியை ஷாப்பிங் அழைத்துச் செல்லும் போது, எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிலும் பிடிக்கவில்லை என்று சொன்னாலும், மற்றவருக்குப் பிடித்தால் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வாங்கி தராவிட்டால், சிறிய சண்டை ஏற்படும். என்ன கொடுமை சரவணா இது, இந்த மாதிரியான சண்டையெல்லாம் தேவையா? ஆனால் அதுவே சிங்கிளாக இருந்தால், அந்த பணத்தை வைத்து, எத்தனை விருப்பமானதை மட்டும் வாங்கி மகிழலாம். பணமும் மிச்சமாகும்.

* முக்கியமாக யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். காதலித்தால், அந்த உரிமை போய்விடும். எப்படியெனில் நீங்கள் சைட் அடிக்கும் போது, உங்கள் துணை பார்த்துவிட்டால், பிறகு அவ்வளவு தான். * மன நிம்மதியுடன் எந்த ஒரு விளையாட்டையும், நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடலாம். ஆனால் காதலித்துவிட்டால், எப்போது பார்த்தாலும் போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பாருங்கப்பா, ஒரு விளையாட்டை கூட நிம்மதியா விளையாட முடியலைன்னா எப்படிப்பா முடியும்?

தவ­ளையை பிர­ச­வித்த பெண் : ஸிம்­பாப்­வே நாட்டில் பரபரப்பு.!!

Women-gives-birth-frog

ஸிம்­பாப்­வேயை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தவ­ளை­யொன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக கூறு­கிறார். 30 வய­தான நொன்­செபா என்­கியுப் எனும் இப்பெண் சுமார் 10 மாத கால கர்ப்­பத்தின் பின் இத் ­த­வ­ளையை பிர­ச­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. புல­வாயோ நகரைச் சேர்ந்த இப்பெண் ஒரு வர்த்­த­க­ராவார். பல்­வேறு நிறு­வ­னங்­களை இவர் நடத்தி வரு­கிறார்.

இப்பெண் கர்ப்பம் தரித்­தி­ருந்த நிலையில் இவரின் வயிற்றில் மனிதக் குழந்­தைக்கு பதி­லாக வித்­தி­யா­ச­மான உயி­ரி­ன­மொன்று வளர்­வ­தாக மத­குரு ஒருவர் கூறி­யிருந்­தாராம். அதனால் இப்பெண் தங்­கி­யி­ருந்த உள்ளூர் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் தேவா­ல­ய­மொன்று அவ­ருக்­காக விசேட பிரார்த்­த­னை­யொன்றை நடத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இப்­பி­ரார்த்­தனை நடை­பெற்­றதை மத­குரு ஒருவர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.இந்த விசி­த்­திர பிர­ச­வத்­துக்குப் பின்னர் நொன்செபாவும் அவரின் கணவரும் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளரெனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால்!!

Kajal Aggarwal Open Mouth And Cute Eyes In Pink Dress

இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால் – Cineulagamகாஜல் நடித்து சமீபத்தில் வந்த பல படங்கள் தோல்வி. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து மீண்டும் தன் மார்க்கெட்டை தக்கவைக்க போராடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘நான் காதலித்து தான் திருமணம் செய்துக்கொள்வேன். தற்போதைக்கு என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டும் தான்.ஆனால், ஒரு போதும் சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்’ என கூறியுள்ளார்.

உடல் எடை ஏற்றியதன் விளைவு- சிம்பு வருத்தம்!!

Simbu

சிம்பு தற்போது பழைய உற்சாகத்துடன் உள்ளார். மிகவும் பக்குவப்பட்டு ஒவ்வொடு அடியையும் நிதாமனாக வைக்கின்றார்.இந்நிலையில் ஒரு படத்திற்காக மிகவும் உடல் எடையை கூட்டியுள்ளார்.

ஆனால், நான் உடல் எடையை அதிகரித்தது என் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.ஏனெனில் முன்பு போல் என்னால் வேகமாக நடனமாட முடியவில்லை, இதனால் எப்படியாவது குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

வவுனியா குருமன்காட்டில் விபத்து : பெண் படுகாயம்!!(படங்கள்)

 
வவுனியா குருமன்காட்டில் இன்று (28.05.2016) மதியம் 2.15 மணியளவில் நடந்த முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியிலிருந்து மன்னார் வீதிக்கு திரும்ப முற்ப்பட்ட முச்சக்கரவண்டி மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கில் அதிக வேகத்துடன் பயணித்தாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

            1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

இஸ்ரேலில் முதன் முறையாக திருநங்கையர் அழகிப் போட்டி!!

662444907Miss

கிறிஸ்தவ மத அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவரும் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வாகியுள்ளார்.இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேற்று அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தேசிய திருநங்கையர் அழகிப்போட்டி நடைபெற்றது. இறுதிச்சுற்றில் மொத்தம் 12 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வானார்.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான தலீன், இந்த வெற்றி பற்றி குறிப்பிடுகையில், ‘எனது உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையில் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர என்நாடு அனுமதியளித்தது.இந்த போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் பார்செலோனா நகரில் நடைபெறும் உலக திருநங்கையர் போட்டியில் கலந்துகொண்டு எனது தாய்நாட்டுக்கு வெற்றியை தேடி தருவேன்’ என்று கூறினார்.

 

இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த கரு : வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!!

boy-with-unborn-twin

மலேசியாவில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்த இறந்துபோன கருவினை அறுவை சிசிக்கையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.Hasmah Ahmad (38) என்ற பெண்ணின் 15 வயது மகனான Mohd Zul Shahril Saidin(15)- க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துபோன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,

அதில், ஒரு கருவானது Mohd- யின் தொப்புள் கொடியின் வழியாக அவனது வயிற்றுக்குள் சென்றுள்ளது.இது அறியாத Hasmah தனக்கு ஒரு குழந்தை தான் பிறந்துள்ளது என நினைத்து Mohd- யினை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், Mohd வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது.ஆனால், முகத்தில் உள்ள பாகங்கள் மட்டும் சிறிது வளர்ச்சி அடையவில்லை, இது 500,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிதான ஒன்றாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

இரட்டை கருக்கள் உருவாகும் பட்சத்தில்,அதில் ஒரு கரு மற்றொரு கருவின் தொப்புள் கொடியின் வழியாக சென்று அங்கு வளர்ச்சியடையும், ஆனால் எப்போது தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவருகிறதோ அப்போதே, இந்த கருவானது உயிரிழந்துவிடும், இக்கரு வாழ்வதற்கான எவ்வித சாத்தியக்கூறும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது, Mohd- க்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அவன் வயிற்றில் இருந்த கரு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

 

பலாத்காரம் செய்தவரை திருமணம் செய்துக்கொள்ள மகளை வற்புறுத்திய தந்தை : நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

Small-Girl-Raped-In-Hafizabad
அமெரிக்க நாட்டில் கற்பழித்த நபரையே திருமணம் செய்துக் கொள்ள மகளை கட்டாயப்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது.Idaho மாகாணத்தை சேர்ந்த கெய்த் ஸ்ட்ரான் என்பவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தந்தை வெளியே சென்றுருந்த நேரத்தில் 14 வயதான மகளை 25 வயதான நபர் ஒருவர் கற்பழித்து விட்டார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் தந்தைக்கு தெரிய வர அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Idaho மாகாண சட்டப்படி 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்வது குற்றமாகும். இதனை சிந்தித்து பார்த்த தந்தை ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.உடனடியாக கர்ப்பமான மகள் மற்றும் அவரை கற்பழித்த நபரை அழைத்துக்கொண்டு 1,000 மைல்கள் கடந்து Missouri மாகாணத்திற்கு சென்றுள்ளார். ஏனெனில், இந்த மாகாணத்தில் சில விதிமுறைகளை பின்பற்றி 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளலாம். மேலும், கற்பழித்த நபரையே திருமணம் செய்துக்கொள்ளும்படி தந்தை மகளை மிகவும் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், மகளுக்கு இதில் விருப்பம் இல்லை.

இந்நிலையில், சிறுமியின் கர்ப்பம் திடீரென கலைந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இறுதி வாதத்திற்கு பிறகு, 14 வயது சிறுமியை கற்பழித்த 25 வயதான நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், மகளை திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, கற்பழித்த நபரையே மகளின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக தந்தைக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.