சீனாவை சேர்ந்த வயதான தம்பதி 42 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்களது திருமண புகைப்படங்களை எடுத்துள்ளனர்.ஜாவோ மற்றும் எல்வி என்பவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் Mao Zedong அவரின் கலாச்சார புரட்சியின் போது திருமணம் செய்து கொண்டனர். அதாவது 1974ம் ஆண்டு ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.
சர்வாதிகாரி ஆட்சியின் அந்த காலக்கட்டத்தில் சில விடயங்களால் இருவரும் வேறு வேறு இடங்களில் வேலைப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அப்போது திருமண புகைப்படங்கள் எடுக்க முடியாமல் போனது.தற்போது இவர்களுக்கு 66 வயதாகிறது. இந்த நிலையில் தனது மகனை அவுஸ்திரேலியாவில் சந்திக்க அவர்கள் சென்றிருந்தனர்.
அப்போது சிட்னியில் இவர்களது திருமண புகைப்படத்திற்கு அவரது மகன் ஏற்பாடு செய்திருந்தார். இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய அவர்கள், புதுமண தம்பதி போல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக்காரர் ராபார் வென் கூறுகையில், இந்த வயதான தம்பதி அவரது மகன் மற்றும் பேரக் குழந்தைகளை பார்க்க இங்கு வந்தனர்.அவர்களுக்கு இப்படி புகைப்படம் எடுக்கப் போகிறோம் என்று தெரியாது. நானும் இதுபோன்ற ஒரு வித்தியாசமான புகைப்படங்களை எடுத்ததும் இல்லை என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் 16 வயது சிறுமியை 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்பழித்துள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அந்நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரேசில் நாட்டு கடற்கரை ஓரத்தில் Rio de Janeiro என்ற நகர் அமைந்துள்ளது. இதே நகரில், பெயர் வெளியிடப்படாத 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை சந்திப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.சிறுமி வந்ததும் அவருக்கு தெரியாமல் வாலிபர் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.இதன் பிறகு சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். ஆனால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நினைவு வந்து எழுந்தபோது, அவர் வேறொரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், தனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் தன்னை சுற்றி எண்ணற்ற நபர்கள் நின்றுக்கொண்டு இருந்ததை கண்டு சிறுமி அலறியுள்ளார்.உடனடியாக அங்கிருந்து வெளியேறிய சிறுமி தனது வீட்டை அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு முன்னதாகவே சிறுமியை கற்பழித்ததாக கூறப்படும் அந்த நபர்கள் அந்த சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவை சிறுமியின் குடும்பத்தினரும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த அது உடனடியாக நீக்கப்பட்டது. சுமார் 40 வினாடிகள் பதிவாகியுள்ள வீடியோ பொலிசாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியிடம் தொடர்புடைய வாலிபர் உட்பட தற்போது 30க்கும் அதிகமான நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பிரேசில் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு மட்டும் காவல் துறையில் 47,636 கற்பழிப்பு புகார்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த ஸ்டாலின் தற்போது குடும்பத்தினருடன் மலேசியா சென்றுள்ளார்.அவருடன் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கீர்த்திகா உதயநிதி, 2 பேர குழந்தைகள் உடன் சென்றனர்.
காலை 10.45 மணிக்கு புறப்பட்டு விமானத்தில் அவர்கள் சென்றுள்ளனர். தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தனிப்பட்ட பயணமாக மலேசியா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் முதிய வயது தம்பதி உணவின்றி பட்டினியால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூர் நகர ஆயுதப் படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் வினோபா ராவ் (80). இவர் பெங்களூர் சுல்தான் பாலையாவில் உள்ள தனது வீட்டில் மனைவி கலாவதி பாய் (72) உடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வினோபா ராவ் வீட்டில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை துர்நாற்றம் வந்ததால் அருகில் வசித்தவர்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது வீட்டின் வரவேற்பு அறையில் வினோபா ராவும், படுக்கையறையில் அவரது மனைவி கலாவதிபாயும் இறந்து, உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடல்களை மீட்ட பொலிஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பெங்களூரு ஆர்.டி.நகர் பொலிசார் கூறும் போது, “வினோபா ராவ் தம்பதி நீண்டகாலமாக தனிமையில் வசித்துள்ளனர். அவர்களுக்கு பிள்ளைகளோ நெருங்கிய உறவினர்களோ இல்லாததால் ஆதரவற்ற நிலையில் தவித்துள்ளனர்.
இருவரும் இயற்கையான முறையிலே இறந்துள்ளனர். இதில் கலாவதி பாய் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம்.வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு சமீபத்தில் உணவு சமைத்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. முதல்கட்ட விசாரணையில் பட்டினி மற்றும் ஆதரவற்ற நிலை காரணமாகவே இருவரும் இறந்துள்ளனர்.வினோபாராவ் தம்பதி வசித்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. வீட்டை பராமரிக்க யாரும் இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் காவிரி குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே நீரும், மின்சாரமும் இல்லாத வீட்டிலேயே இருவரும் வசித்துள்ளனர்” என்றனர்.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 19வது ஆண்டு நிறைவு விழா கலாநிதி.தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இன்று (28.05.2016) காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நித்தியவாணி திருமதி.சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நிருத்திய நிகேதன நுன்கலைக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பான இந் நிகழ்வில்,
சிறப்பு விருந்தினராக கா.உதயராசா(வவுனியா பிரதேச செயலாளர்), சைவப்புலவர் இ.நித்தியானந்தன் (வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்), விசேட விருந்தினராக திருமதி.அன்ரன்.எஸ்.சோமராஜா (வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்), கௌரவ விருந்தினர்களாக நா.சேனாதிராசா (சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர்), சி.சுப்பிரமணியம் (ப.நோ.கூ.சங்கம் வவுனியா), ரி.இராஜலிங்கம் (வவுனியா வர்த்தக சங்கத்தலைவர்),
கி.கிருபானந்தா(யாழ் இலக்கிய வட்டம் -செயலாளர்) , எஸ்.எஸ்.வாசன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்) மற்றும் சமூக ஆர்வலர்கள், அரச அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வைத்தியத்துறையில் அளப்பெரும் சேவையாற்றிய வைத்தியத் தம்பதிகள் வைத்தியர்.சுப்பிரமணியம் சின்னத்துரை, வைத்தியர். செந்தில்வள்ளி சின்னத்துரை மற்றும் ஆங்கிலக் கல்வித்துறையில் வவுனியாவில் அளப்பெரும் சேவையாற்றி வரும் திருமதி.இமெல்டா ஜெயநாயகி சிவகுரு அவர்களை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன்.எஸ்.சோமராஜா அவர்களும் சான்றோர் என கௌரவம் வழங்கி கௌரவித்தனர்.
வவுனியா பண்டாரிக்குளம் முதலியார் ச.தியாகராஜா அவர்களின் மகன் பொறியியலாளர் கவிஞர் தி.மகேஸ்வரராஜா அவர்கள் வழங்கும் வவுனியா பண்டாரிக்குளம் முதலியார் ச.தியாகராஜா நினைவு மாணவச் சாதனையார்கள் விருது -2016 நடைபெற்றது.
பாடசாலைக் காலத்தில் தமிழியல் சார்ந்த துறைகளில் மாணவர்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபா 10 000 பணப் பரிசும் சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாருதம் சஞ்சிகையின் 18வது இதழ் வெளியீடு நடைபெற்றது. இதன் முதற் பிரதியினை வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் இராஜலிங்கம் பெற்றுக்கொண்டார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணியின் சிறந்த களத்தடுப்பு காரணமாக இங்கிலாந்து அணி 310 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்த போட்டியில் நாணயச் சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த முதலாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை தக்கவைத்துக்கொள்ள இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டர் குக்கிற்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த இலக்கை பெறுவார் என்று ரசிகர்கள் நினைத்த போதிலும் 2 ஆவது டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸில் இலக்கை தவறவிட்டு ஆட்டமிழந்தமை இங்கிலாந்து ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இங்கிலாந்து அணியின் முதல் நாள் ஆட்டத்தின்போது அணியின் சார்பாக அதிகபட்சமாக அலெக்ஸ்ஹெல்ஸ் 83 ஓட்டங்களையும்,ஜோ ரூட் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளையும், சிறிவர்தன 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய கால கட்டத்தில் இணையமும் மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் இணையத் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்த பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக Li-Fi எனும் மின்குமிழ் மூலம் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் சாத்தியம் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது இத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜேர்மன் பொறியியலாளர் குழு ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது செக்கனுக்கு 6 ஜிகாபிட்ஸ் வேகத்தில் 37 கிலோ மீற்றர் தூரத்திற்கு தரவுகள் கடத்தப்பட்டுள்ளது.
இந்த வேகத்தின் ஊடாக டிவிடியிலுள்ள தரவுகளை வெறும் 10 செக்கன்களிலேயே பரிமாற்றம் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் விசேட அம்சம் என்னவென்றால், வழமையாக இணைய வேகத்தின் சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் மென்பொருட்களை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படும்.
ஆனால் இவ் ஆராய்ச்சியானது நிஜமாகவே இணைய இணைப்பினை உருவாக்கி வெற்றி காணப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் நீர்நிலைகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானமக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மழைபெய்யும் பிரதேசங்களில் கடுமையான காற்று வீசும் எனவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மழையுடனான காலநிலை மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், நீர்நிலைகளின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதனை அண்மித்து வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் இன்று (28.05.2016) சற்றுமுன் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி விபத்தில் பொலிசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து மன்னார் வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் அதே பாதையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த பொலிசார் சிறு காயங்களுக்குள்ளாகினார்.
இவ் விபத்தினை நேரில் பார்த்தவர் தெரிவிக்கையில், வவுனியாவிலிந்து மன்னார் வீதியினுடாக பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் வாகனம் வருவதைக் கண்டு வீதியின் அருகே மோட்டார் சைக்கிளை திருப்பிய போது. அதே பாதையில் பயணித்த துவிச்சக்கர வண்டியில் மோதியதாக தெரிவித்தார்.
அனைத்து வகையான அன்டிபயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்ச திறன் கொண்ட கொலிஸ்டின் என்ற அன்டிபயோட்டிக் மருந்தை எதிர்க்கும் திறன்கொண்ட இ-கொலி கிருமி, நடுத்தர வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியிருந்தது. அதன் மூலமாகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்டிபயோட்டிக் மருந்துகள் திறனற்றதாகப் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தாமஸ் ஃபிரைடென் தெரிவித்துள்ளார்.
அன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் திறன்கொண்ட கிருமிகள், ஏற்கெனவே கனடா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணிப்பவர்களிடம் அறவிடப்படும் அபராதம் 3000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அத்துடன் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்கும் நபரிடமிருந்து ரயில் பயணம் ஆரம்பித்த நிலையத்திலிருந்து பயணமுடிவிடம் வரை, அந்த நபர் பயணித்த வகுப்புக்கு அமைவாக அபராத தொகைக்கு மேலதிகமாக இரட்டிப்பு கட்டணமும் அறவிடப்படும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
பயணச்சீட்டின்றி ரயில்களில் பயணிப்பது அதிகரித்துள்ளமை, பயணச்சீட்டுக்குரிய வகுப்பில் பயணிக்காமை, பயண முடிவிடத்திற்கும் அப்பால் பயணிப்பது, சிறிய கட்டணத்துடன் நீண்டதூரம் பயணித்தல் உட்பட பயணச்சீட்டு தொடர்பிலான ஏனைய மோசடிகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த இழப்பை ஈடுசெய்வதற்காகவும், ஒழுங்கான முறையில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவும் அபராத தொகையை 3000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் சுமார் பத்து வருடங்களாக, வெளியுலகத் தொடர்பின்றி மூன்று படை கிணற்று வீடொன்றினுள் தன்னந்தனியனாக வாழ்ந்து வந்த பொறியியலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த பவளன் என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் (வயது 57) எனும் பொறியியலாளரே இவ்விதம் மரணமானவர்.
இவர் இருவாரங்களுக்கு முன்பு மரணித்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஏனெனில் சடலம் உருக்குலைந்தநிலையில் காணப்பட்டது. இவரின் சடலம் நேற்று முன்தினம் சம்மாந்துறைப் பொலிசாரின் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்தவர் பற்றி அவரது உறவினர்கள் கூறியதிலிருந்து தெரியவருவதாவது,
காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை நடேசானந்தம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்றவர். பட்டப்பின்படிப்பின் பின்பு சீறா நிறுவனத்தில் பணியாற்றிருந்தார். திருமணமாகவில்லை.
பின்பு காயத்திரி மந்திரத்தில் பற்றுப்பிடித்த அவர் அவரது சகோதரியின் வீட்டின் வெளிச்சமின்றிய அறையில் தனிமையாக தியானத்தில் வாழ்ந்து வந்தார்.
சிலவேளை மெழுகுதிரி மட்டும் எரியுமாம். சூரியஒளி புகாவண்ணம் கும்மிருட்டிலே நிர்வாணமாக தியானத்திலிருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கான உணவு ஒரு வழியால் அனுப்பட்டு வந்தது.
சுனாமியின் பின்பு அவர் தனக்கென பிரத்தியேகமாக அவரால் வடிவமைக்கப்பட்ட கிணறு வடிவமான பெரிய வீடொன்றை காரைதீவு பொது நூலகத்திற்கருகாமையில் காத்திரமாக நிர்மாணித்தார். அவ் விசித்திரமான வீடு மூன்று படைகளை அதாவது 3 சுவர்களை கொண்டு கிணறு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. குழாய்நீர் வசதி மின்சார வசதி சகலதும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வீட்டினுள் அவர் 2007 அளவில் குடியேறி இறக்கும்வரை சூரியவெளிச்சமின்றி தன்னந்தனியனாக வெளியுலகத் தொடர்பின்றி வாழ்ந்து வந்திருக்கின்றார். அவருக்குத் தேவையான உணவுகள் அவரின் உறவினரால் ஆனால் ஒருவரால் மட்டும் குறிப்பிட்டவழியால் வழங்கப்பட்டு வந்தது. வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கலுக்காக ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இறக்கும் வரை யாருமே உட்செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. ஒரு தடவை விசேட அதிரப்படையினர் தேடுதலின் போது சென்றுவந்ததாகவும் தகவலொன்று தெரிவிக்கிறது.
இறுதிக்காலகட்டத்தில் அவர் தானே சமைத்து உண்பதாக தெரிவித்தமையினால் உணவுப்பொருட்கள் கொள்வனவின் நிமித்தம் கடைக்காரரொருவருக்கும் இவருக்கும் தொடர்பிருந்துள்ளது. இதுதவிர உறவினரொருவரிடமும் செல்போனில் பேசுவாராம்.
மரண சந்தேகங்கங்களுக்கான காரணங்கள்!
இத்தொடர்புகள் கடைசி ஒருவாரம் தடைபட்டிருந்ததாகவும் அவருக்கு செல்லும் குழாய்நீர் மானி (இது வீட்டிற்கு வெளியிலிருக்கிறது) வேலை செய்யாமலிருந்ததாகவும் வழமையாக வெளியில் எரியும் மின்குமிழ்கள் எரியாமலிருந்ததாகவும் வீட்டைச்சுற்றி ஒருவித துர்நாற்றம் வீசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வியாழனன்று காலை அவரது உறவினரொருவர் இவர் வாழ்ந்து வந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் பிணமாக கட்டிலின் குறுக்காக கிடந்தாராம். ஆனால் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசியநிலையில் கிடந்தார். பொதுமக்கள் பலரும் சென்று பார்த்துள்ளனர்.
அம்பாறைக்கு அனுப்பி வைப்பு!
சம்மாந்துறைப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே அவர்களும் வந்து பார்வையிட்டு மாலை நீதிவான் வரும்வரை பாதுகாப்பாக இருந்து நீதிவானின் உத்தரவிற்கமைய சடலத்தை மேலதிக சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அம்பாறைக்கு அனுப்பிவைக்கத் தயாரானார்கள்.
பெருந்திரளான பொதுமக்கள் இச்சம்பவத்தை கேள்வியுற்று இவ்விடத்தில் கூடியிருந்தனர். மரணித்தவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் கூடியிருந்தனர். வெண்ணிற பொலிதீனினால் சுற்றப்பட்ட சடலத்தை கொண்டு செல்லும் போது கவலையுடன் கதறியழுதனர்.
மாலை 6.20மணியளவில் சிறிய லொறியில் சடலம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையிலிருந்த செல்வந்தரான இவர் சிலவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் சகல விசாரணைகளும் பரிசோதனைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
57 வயதுடைய பொறியியலாளரான இவர் ஏன் இவ்வாறு 10 வருட காலம் வெளியுலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்துவந்தார் என்பது இன்றும் இன்னும் மக்கள் மத்தியில் புரியாத புதிராகவுள்ளது.
டேவிட் வோர்னர் தனி ஆளாக நின்று அடித்தாட, இறுதியில் அவருக்கு துணையாக நின்று பிபுல் ஷர்மா அதிரடிகாட்ட குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது ஹைதராபாத் அணி.
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியை சந்திக்கிறது ஹைதராபாத் அணி.
இறுதிச்சுற்றுக்குள் நுழையும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸும்இ ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணியும் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வோர்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழஇ மறுமுனையில் கணிசமான ஓட்டங்களையும்
சேர்த்தபடி இருந்தது. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது குஜராத்.
குஜராத் அணியில் அதிகபட்சமாக பிஞ்ச் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக் களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
டேவிட் வோர்னர் இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற் றிக்கு அழைத்துச் சென்றார். இவர் இந்தப் போட்டியில் 93 ஓட்டங்களை விளாசினர். இவரைத் தவிர இவருக்கு துணை நின்ற ஷர்மா 27 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
அணித் தலைவர் என்ற பொறுப்பை சரியாக நிறைவேற்றிய வோர்னர் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்து வந்திருக்கிறார்.