சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை!!

D02d0s2dsdகொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடைப் பெண்­களின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தக பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குற்றச் செய­லொன்­றுடன் தொடர்­பு­பட்­டது அல்ல என பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

சீருடை மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­ன மாண­வியின் பாட்­டி­யினால் மாண­வியின் வீட்டில் ஒப்­ப­டைக்­கு­மாறு கொடுத்து அனுப்­ பப்பட்­டது என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன தைத் தொடர்ந்து கைதான 23 வய­து­டைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நேற்று முன்தினம் கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடை, பெண்­க ளின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒரு­வரை பொது மக்கள் பிடித்து தாக்­கு­வ­தாக புசல்­லாவ பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த இளை­ஞனை கைது செய்தனர்.

இதன்­போது முச்­சக்­கர வண்­டி­யுடன் கை தான சந்­தேக நபர் 23 வய­து­டை­யவர் என வும் கட்­டுக்­கித்­துலை பிர­தே­சத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர். அதனைத் தொடர்ந்து பாட­சாலை சீரு­டை கள் மற்றும் புத்­த­கப் பை, உள்­ளா­டைகள் தொடர்பில் விசா­ரணை செய்­துள்­ளனர்.

இதன்­போதே உண்மை தெரி­ய­வந்­துள்ளது. சீருடை மற்றும் புத்­தகப் பைக்கு சொந்­த­ மான மாண­வியின் பாட்டி வீடு பாட­சா­லைக்கு அருகில் உள்ள நிலையில், குறித்த மாணவி பாட்டி வீட்­டுக்கு சென்­று­விட்டு உடை­களை மாற்­றிய பின்னர் தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார். இதன்­போது அவர் சீரு­டை­க­ளையும் புத்­தகப் பையி­னையும் அங்­கேயே வைத்­து­விட்டு சென்­றுள்ளார். மறு நாள் அவர் பாட­சாலை செல்ல வேண்டும் என்­ப­தற்­காக பாட்டி, அவற்றை குறித்த முச்­சக்­கர வண்டி சார­தி­யிடம் கொடுத்து மாண­வியின் வீட்டில் கொடுக்­கு­மாறு கொடுத்­த­னு ப்­பி­யுள்ளார்.

இதனை பாட்டி, மாணவி மற்றும் சந்­தேக நபர் உள்­ளிட்ட பலரின் வாக்கு மூலங்கள் ஊடாக பொலிஸார் உறுதி செய்­துள்­ளனர்.

இந் நிலையில், முச்­சக்­கர வண்­டியில் இருந்த உள்­ளா­டைகள் தொடர்பில் விசா­ரணை நடத்­திய பொலிஸார், குறித்த இளை­ஞ­னுக்கு பெண்­களின் உள்­ளா­டை­களை சேர் க்கும் ஒரு வகை மான­சீக பிரச்­சினை உள்­ளதைக் கண்­ட­றிந்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து நேற்று சந்­தேக நபரை மன்றில் ஆஜர்­ப­டுத்­திய பொலிஸார் விசா­ரணை அறிக்­கை­யையும் மன்­றுக்கு சமர்­ப்பித் ­தனர். விசா­ர­ணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்­ப்பித்த பொலிஸார் அந்த இளை­ஞனை மனநல வைத்­தியர் ஒரு­வ­ரிடம் சிகிச்­சை­க­ளுக்­காக அனுப்­பு­மாறு கோரினார்.

எனினும் இதன்­போது மன்றில் இளை­ஞனின் உற­வி­னர்கள் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலை யில், பொலி­ஸாரின் கோரிக்கையை நிரா­க ரித்த நீதிவான் இளை­ஞனை உறவி­னர்­க­ளிடம் ஒப்ப­டைத்­த­துடன், அவர்கள் மன நல மருத்துவர் ஒருவரை நாடலாம் என ஆலோசனை வழங்கினார் என்றார்.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன் : பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!!

2397-student-special-needs-passes-scholarship-exam2000661697

அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும், பரீட்சையில் சித்திபெற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என எண்ணியதாக அம்மாணவன் தெரிவித்துள்ளார்.

பிறக்கும் போதே இரண்டு கைகைகளும் ஒழுங்காக செயற்படாத போதிலும் தனது விடா முயற்சியால் பரீட்சையில் சாதித்துக்காட்டிய இம்மாணவனை நாமும் வாழ்த்துவோம்.

வவுனியா மெனிக்பாம் முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினரால் தளபாடங்கள் வழங்கல்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் 4ம் யூனிட் உதயதாரகை முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் 4ம் யூனிட் உதயதாரகை முன்பள்ளிக்கு தளபாடம் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் உதயதாரகை முன்பள்ளி பாலர்பாடசாலை அபிவிருத்திக்குளு அங்கத்தவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் மாதர்சங்கத் தலைவி அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.

IMG_4856 IMG_4858 IMG_4859 IMG_4861 IMG_4865 IMG_4868 IMG_4870 IMG_4894 IMG_4901 IMG_4904 IMG_4908

வவுனியாவில் த.தே. இளைஞர் கழகத்தினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!!

வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் 14 மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையில் பின்தங்கிய தமிழ் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் (தரம் – 11) பெறுபேறுகளை முன்னேற்றும் முகமாக, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இம் மாத காலப்பகுதிகளில் இலவச கல்விக் கருத்தரங்கை கணித, விஞ்ஞான பாடங்களில் நடாத்துகின்றனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு கடந்த சில தினங்களாக வவுனியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலிய, மொனராகலை, கண்டி, மாத்தளை ஆகிய 14 மாவட்டங்களில் 180 இற்கும் அதிகமான பாடசாலைகளை உள்ளடக்கி 88 மையங்களில் சுமார் 10,000 சாதாரண தர மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கை நடாத்துகின்றனர்.

இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகமும் அனுசரணை வழங்குகின்றது. வடக்கு கிழக்கில் தமிழர்களின் கல்வி, கலை, கலாசார, விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டில் கடந்த 02 வருடங்களுக்கு மேல் முக்கிய பங்காற்றி வரும் தமிழ் தேசிய இளைஞர் கழகம் இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்றைய தினம் (11.10.2015) ஞாயிற்றுக்கிழமை பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சார்பாக கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், கழகத்தின் பொருளாளர் த.நிகேதன் மற்றும் கழகத்தின் உறுப்பினர் த.பிரியதர்சன் ஆகியோரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் தமிழ் மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ் வழிகாட்டல் கருத்தரங்கு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்களினால்” தொடர்ந்து 06வது வருடமாக கல்விச் சமூகத்தின் வரவேற்புடன் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_1835 IMG_1842 IMG_1844 IMG_1847 IMG_1849 IMG_1855 IMG_1857 IMG_1858 IMG_1879 IMG_1881

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயது மாணவனின் சகோதரியும் தூக்கிட்டு தற்கொலை!!

horana-boy

ஹொரணை – அகு­ரு­வா­தோட பிர­தே­சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயதுடைய மாணவனின் சகோதரியும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும் தனது மகனின் மரணம் தொடர்பில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக உயிரிழந்த மாணவனின் தந்தை அகு­ரு­வா­தோட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வியறிவை பாதிக்கும் வீடியோ கேம்கள். அதிரடி ஆய்வு!!

Playstation-banned

தற்காலத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதில் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் உள்ளடங்குகின்றனர்.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் பரீட்சைகளில் குறைந்த புள்ளி பெறுவதற்கு காரணமாக அமைவது சமூகவலைத்தளங்களா? அல்லது வீடியோ கேம்களா? என்ற ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஆய்விற்காக 14 தொடக்கம் 16 வயது உடையவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களின் நாளாந்தம் இணையத்தளத்தினை பயன்படுத்தும் 81 சதவீதமானவர்களின் பரீட்சைப் புள்ளிகளில் பாதிப்பு இல்லை எனவும், எஞ்சிய 19 சதவீதமான வீடியோ கேம் விளையாடுபவர்களின் பரீட்சைப் புள்ளிகளில் பாரிய வீழ்ச்சி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சமூகவலைத்தளங்களை விடவும், வீடியோ கேம்களே அதிகளவில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக காரம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா??

925af0f5-0762-4949-8a53-f7239311be0d_S_secvpfசிலருக்கு உணவுகள் காரமாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் உணவுகளில் மிளகாயை அதிகம் சேர்ப்பார்கள். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் மிளகாயை சேர்த்து உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறைக்கலாம். இதுப்போன்று ஏராளமான நன்மைகள் காரமான உணவுகளை உட்கொள்வதால் கிடைக்கும்.

யார் ஒருவர் உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்கிறாரோ, அவரது உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேராமல் இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், உணவில் மிளகாயை அதிகம் சேர்ப்பதால், அதில் உள்ள காப்சைசின் என்னும் பொருள் உடலின் வெப்பத்தை அதிகரித்து, அதிகப்படியான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, அதனால் உடல் எடை குறையும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

மிளகாயை உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்தத்தில் கொழுப்புக்களின் அளவு அதிகமாவதைத் தடுக்கலாம். காரமான உணவுகள் நல்ல மனநிலையை உணர வைக்கும் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, கோபத்தைக் குறைத்து, மனநிலையை அமைதியாக்கி மேம்படுத்தும். மிளகாயை உணவில் சேர்ப்பதால், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மிளகாய் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஒளிப்பதிவாளர் நட்டியுடன் இணையும் மங்காத்தா நாயகி!!

natraj_lakshmi_raai001ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராகவும் வெற்றிபெற்று வருபவர் நட்டி. இவர் சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு புலி படத்தில் ஒளிப்பதிவு செய்வதில் பிஸியாக இருந்து வந்தார்.தற்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

புதுமுக இயக்குனர் தாஜ் கூறிய ஒற்றை வரி கதை மிகவும் பிடித்துபோக அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நட்டி.பயணக்கதையாக உருவாகும் இப்படத்தில் லட்சுமி ராயை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

அடுத்த ஜென்மத்தில் உன் மகளாக பிறக்க வேண்டும். பிரபல நடிகரிடம் தெரிவித்த ஆச்சி மனோரமா!!

manorama004ஆச்சி மனோரமாவின் இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே வருத்தம் தான். இவரின் இறுதி சடங்கில் கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, கமல், அஜித், விஜய், என அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர் ..இந்நிலையில் நடிகர்+இயக்குனர் பார்த்திபன் கூறுகையில், ‘சினிமா இருக்கும் வரை மனோரமாவின் புகழ் இருந்து கொண்டிருக்கும்.

நாடக நடிகர், திரைப்பட நடிகர், நடிகைகள் என யார் இறந்தாலும் முதல் ஆளாக வந்து நின்றவர் மனோரமா. அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் என் படமான புதிய பாதைக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. நான் பிள்ளைகளை வளர்க்கும் முறையை பார்த்து என்னை பாராட்டினார். அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்’ என மிக நெகிழ்ச்சியாக கூறினார்.

ஓவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகன்!!

kidney1சமை­ய­லறை ஒவன் உப­க­ர­ணத்தை சுத்­தி­க­ரிப்­ப­தற்­கான இர­சா­யன திர­வத்தை அருந்­திய பால­க­னொ­ரு­வனின் உடல் உள் உறுப்­புகள் கடு­மை­யான எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­ன­துடன் அவ­னது சிறு­நீ­ர­கங்­களும் செய­லி­ழப்­புக்கு உள்­ளா­கிய விப­ரீத சம்­பவம் பிரித்­தா­னிய பிர்­மிங்­ஹாமில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் பிரித்­தா­னிய ஊட­கங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. எலியஹ் மோலி என்ற மேற்­படி பால­கனின் (ஒரு வயது) தந்­தை­யான ஜிம்மி ஒவன் உப­க­ர­ணத்தை சுத்­தி­க­ரித்துக் கொண்­டி­ருந்த போது, அங்கு தவழ்ந்து வந்த பாலகன் மேற்­படி சுத்­தி­க­ரிப்பு இர­சா­யன திர­வத்தை அருந்­தி­யுள்ளான்.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக மோலி, பிர்­மிங்ஹாம் சிறு­வர்கள் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டான்.அங்கு அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்ட பால­க­னுக்கு அவ­னது சுவாசத் தொகு­தியில் ஏற்­பட்ட பாதிப்பை சீர்­செய்ய சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து பாலகன் தனது முத­லா­வது பிறந்­த­நாளை மருத்­து­வ­ம­னையில் கொண்­டாட நேர்ந்­துள்­ளது.வீட்டுப் பாவனை இர­சா­ய­னத்தை உரிய முறையில் கவ­ன­மாக கையாளத் தவறி தமது சின்­னஞ்­சிறு மக­னுக்கு தாம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதையிட்டு தாம் பெரிதும் துயரமும் குற்ற உணர்வும் அடைந்துள்ளதாக பாலகனின் பெற்றோரான ஜிம்மியும் டியனியும் தெரிவிக்கின்றனர்.

மதுபான போத்தலில் பல்லி. குடிமகன் அதிர்ச்சி!!

மதுபான போத்தல்தமி­ழகம் கோவை­யி­லுள்ள மது­பானக் கடை யில் வாங்­கப்­பட்ட மது­பானப் போத்­தலில் பல்லி கிடந்த சம்­பவம் குடி­ம­கன்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.தமி­ழகம் கோவை மாவட்டம் அன்னூர் எல்­லப்­பா­ளையம் கிரா­மத்தைச் சேர்ந்­தவர் நெச­வுத்­தொ­ழி­லாளி ஒருவர், மது­பானக் கடை ஒன்றில் கல் போத்தல் அள­வி­லான மது­பானப் போத்தல் ஒன்றை வாங்­கி­யுள்ளார்.

மதுவைக் குடிப்­ப­தற்­காக மூடியை திறந்த அவர், உள்ளே பல்லி கிடந்­ததை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார். தொடர்ந்து, மது­பானக்கடை ஊழி­யர்­க­ளிடம் அவர் முறை­யிட்டும் எந்தப் பலனும் கிடைக்­க­வில்லை. இது தொடர்பில் குறித்த மது­பானக் கடை ஊழி­யர்கள் தெரி­விக்­கையில்,

“மது போத்­தல்­களை மீண்டும் பயன்­பாட்­டுக்கு கொண்டு வரும் போது, அதை அப்­ப­டியே எடுத்து மதுவை நிரப்­பு­கி­றார்கள்.நீண்ட நாட்­க­ளாக குப்­பையில் கிடைக்கும் போத்­தல்­களில் எது இருந்­தாலும் அப்­ப­டியே மது நிரப்­பப்­ப­டு­கி­றது.

போத்­தல்களை முறை­யாக மறு சுழற்சி செய்து பயன்­ப­டுத்­தாமல் அப்படியே பயன்ப டுத்துவ தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் தோற்றது இந்தியா!!

South-Africa_0தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரை இழந்­தி­ருந்­தி­ருந்த இந்­தியாஅணி, ஒருநாள் போட்­டி­யிலும் தென்னா­பி­ரிக்­கா­விடம் வீழ்ந்­தது.

இந்­தி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணி இரு­ப­துக்கு 20 தொடரில் இந்­திய அணியை 2–-0 என வீழ்த்­தி­யது. இதை­ய­டுத்து இரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்­கி­யது.

நேற்று இந்­தியா கான்­பூரில் நடை­பெற்­ற இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற தென்­னா­பி­ரிக்க அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. தென்­னா­பி­ரிக்க அணித் தலைவர் டிவி­லி­யர்ஸின் அதி­ரடி சதத்தால் தென்­னா­பி­ரிக்க அணி 5 விக்­கெட்­டுக்கள் இழப்­பிற்கு 303 ஓட்­டங்­களைக் குவித்­தது.

தென்­னா­பி­ரிக்க அணியின் கொக்(29), அம்லா (37), டுபெ­லஸிஸ்(62) என்று தென்­னா­பி­ரிக்க வீரர்கள் தங்கள் பங்­குக்கு ஓட்­டங்­களைச் சேர்த்­தனர். அணித் தலைவர் டிவி­லியர்ஸ் 104 ஓட்­டங்­களை விளா­சினார். நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்கள் நிறைவில் தென்­னா­பி­ரிக்கா 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 303 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

304 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய இந்­திய அணிக்கு, ரோஹித் ஷர்மா 150 ஓட்­டங்கள் அதி­ர­டி­யாகச் சேர்த்­துக்­கொ­டுத்தும் பய­ன­ளிக்­காமல் போய்­விட்­டது. இந்­தப்­போட்­டியில் இந்­தியா 5 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. தவான் (23), ரஹானே(60), தோனி (31) என்று ஓட்­டங்­களைப் பெற்றுக்கொண்டனர்.

50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் இந்தியா தோல்வி யைத் தழுவிக்கொண்டது.

தென்னாபிரிக்கா சார்பாக பந்து வீசிய தாஹிர் மற்றும் ரபடாஆகியோர் தலா 2 விக்கெட் டுக்கள் வீதம் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை டிவிலியர்ஸ் பெற்றுக்கொண்டார்.

இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்திற்கு பின் ஓய்வு : ரங்கன ஹேரத்!!

2Rangana-Herath-l10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

37 வயதாகும் ஹேரத், இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 278 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். அதேபோல் 71 ஒரு நாள் போட்டிகளில் 74 விக்கெட்டுக்களையும், 9 இருபதுக்கு 20 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இவர் கூறியது: காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை. பந்துவீச்சு பற்றி எவ்வித உத்தரவாதமும் என்னால் தர முடியாது.

ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, டெஸ்டில் கவனம் செலுத்த உள்ளேன். நடக்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என கூறியுள்ளார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் முன்னோக்கி சரிந்த விமானம்!!

singapore-airlinesசிங்­கப்பூர் சங்கி விமா­ன­நி­லை­யத்­தி­லி­ருந்து ஞாயிற்­றுக்­கி­ழமை புறப்­ப­ட­வி­ருந்த சிங்­கப்பூர் எயார் லைன்ஸ் விமா­ன­மொன்று அதன் முன் பகுதி நிலத்தில் மோத சரிந்­ததால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஹொங்­கொங்­கிற்கு புறப்­ப­ட­வி­ருந்த ஏ330 –-300 விமா­னமே இவ்­வாறு முன்­னோக்கி சரிந்­துள்­ளது.

எனினும் சம்­பவம் இடம்­பெற்ற போது அந்த விமா­னத்தில் பொறி­யி­ய­லாளர் ஒரு வர் மட்­டுமே இருந்­த­தா­கவும் அதில் பய­ணி­களோ அன்றி விமான ஊழி­யர்­களோ இருக்­க­வில்லை எனவும் விமான நிலைய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.மேற்­படி சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை.இத­னை­ய­டுத்து பாரந்­தூக்கி உப­க­ரணம் மூலம் அந்த விமானம் நிமிர்த்­தப்­பட்­டது.

இந்த சம்­பவம் கார­ண­மாக அந்த விமானம் ஏற்­க­னவே நிர்­ண­யிக்­கப்­பட்ட பயண நேரத்துக்கு 40 நிமிடம் கழித்து ஹொங்கொங்கிற்கான பயணத்தை மேற் கொண்டது.

அமுக்க அடுப்பு வெடித்ததால் காலை இழந்த 2 வயது குழந்தை!!

baby_18வீட்­டி­லி­ருந்த அமுக்க அடுப்பு (பிரஷர் குக்கர்) வெடித்­ததால் 2 வயது பால­கி­யொ­ருவர் தனது காலொன்றை இழந்த விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சமந்தா கொன்­ஸாலெஸ் என்ற மேற்­படி பால­கியின் பாட்டி சம்­பவ தினம் சமை­ய­ல­றையில் அமுக்க அடுப்பில் சமைத்துக் கொண்­டி­ருந்­துள்ளார். அச்­ச­மயம் அங்கு வந்த பாலகி அழுக்­காக இருப்­பதை அவ­தா­னித்த பாட்டி, சமையல் நீர் தொட்­டியில் பால­கியின் உடலைக் கழுவி சுத்­தி­க­ரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார்.

இதன்­போது திடீ­ரென அமுக்க அடுப்பு வெடித்துச் சித­றி­யுள்­ளது. இதனால் சமந்­தா­வுக்கு உடல் முழு­வதும் கடும் எரி­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து பாலகி மருத்­து­வ­ம­னைக்கு உட­ன­டி­யாக கொண்டு செல்­லப்­பட்டார். அங்கு அந்தப் பால­கியின் மோச­மாக எரிந்து கரு­கிய இடது கால் வெட்டி துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம் ஏனைய காலி­லுள்ள விரல்­களும் வெட்டி அகற்­றப்­பட்­டன. இந்த சம்­ப­வத்தில் சமந்­தாவின் பாட்டிக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

மருமகனுடன் தொடர்பு: மனைவியின் தலையை வெட்டி வீதியில் கொண்டு சென்ற நபர்!!

1601290608Untitled-1தன் மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், தன் மனைவியின் தலையை வெட்டி வீதியில் நடந்த கணவரைப் பற்றி தகவல் வெளிவந்திருக்கிறது. பூனேவில், முதியவர் ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில் பிடித்தவாறு வீதியில் நடக்கும் காட்சியை அங்குள்ள தொலைக்காட்சிகள் நேற்று ஒளிபரப்பியது.

அவர் அப்படி நடக்கும் போது, வீதியில் அதை பார்த்தவர்களும், அந்த வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். அந்தக் கொலையின் பின்னனி இன்று வெளிவந்திருக்கிறது. அந்த முதியவரின் பெயர் ராமுசவான் (60). வீட்டின் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியாக பணிபுரிகிறார்.

இவரின் மனைவி சோனுபாய்க்கும் அவரின் மருமகனுக்கும் (மகளின் கணவன்) கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ராமுசவான் பலமுறை எச்சரித்தும் அவரின் மனைவி இவரின் பேச்சைக் கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் (9) தன் வீட்டிற்கு திடீரென சென்றிருக்கிறார் ராமுசவான். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. அவர் நெடுநேரம் கதவைத் தட்டியும் கதவு திறக்கவில்லை. பிறகு அவரின் மனைவி கதவை திறந்திருக்கிறார். வீட்டின் உள்ளே அவரது மருமகன் இருந்திருக்கிறார். இவரைக் கண்டதும், அவரது மருமகன் ஓடிவிட்டார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராமு, மனைவிய அடித்து உதைத்திருக்கிறார். அருகிலிருந்த கோடாரியை எடுத்து கழுத்தில் வெட்டியிருக்கிறார். அதில் அவரின் தலை துண்டானது. துண்டான தலையை ஒரு கையிலும், வெட்டியை கோடாரியை இன்னொரு கையிலும் பிடித்தவாறு பொலிஸ் நிலையத்திற்கு நடந்திருக்கிறார் ராமு.

கையில் வெட்டிய தலையோடி அவர் நடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியானார்கள். சிலர் அதை தனது மொபைலில் படம் எடுத்தார்கள். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.