அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு!!

Interview-Questions_large

இலங்கையில் வெற்றிடமாக உள்ள சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை (13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

வெற்றிடங்களுக்கு 2 பேர் தெரிவு செய்வதற்கான பயற்சிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக பயற்சியை நிறைவு செய்த 2 பேர் கடமையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வரையில் அலுக்கோசு பதவிக்கு எவரும் இல்லாத நிலையில் நாளைய நேர்முகத் தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

thuukku1

ஹொரணை – அகு­ரு­வா­தோட பிர­தே­சத்தில் பாட­சாலை மாணவர் ஒருவர் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.நேற்று காலை தனது வீட்­டுக்கு அருகில் உள்ள மர­மொன்றில் அவர் தூக்­கிட்டுக் கொண்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

சம்­ப­வத்தில் 9 வய­தான சிறுவன் ஒரு­வரே பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
எவ்­வா­றா­யினும் குறித்த மாண­வனின் மரணம் குறித்து சந்­தேகம் நில­வு­வ­தா­கவும் அதனால் சடலம் பிரேதப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக பாணந்­துறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

சம்­பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிருமியோருவரின் ஆடைகள் பாதணிகளுடன் இளைஞன் கைது!!

arrest_39

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்றில் சிறுமி ஒரு­வரின் பாட­சாலை சீருடை, உள்­ளாடை, பாதணிக­ளுடன் இளைஞர் ஒருவர் இருந்ததை கண்ட பிர­தே­ச­வா­சிகள் குறித்த இளை­ஞனை மடக்கிப் பிடித்­துள்­ளனர். பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்ட இளைஞர் புஸல்­லாவை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.காட்­டுப்­ப­கு­திக்குள் ஓடி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

பிர­தே­ச­வா­சி­க­ளிடம் மாட்­டிக்­கொண்ட இளைஞன் சிறுமி குறித்து எந்தத் தக­வ­லையும் வழங்­க­வில்லை. இதே­வேளை சிறு­மி­யொ­ருவர் தேயிலை மலைக்குள் ஓடி ஓளிந்­த­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­தனர்.சந்­தேக நப­ரான இளைஞர் சிறுமி தொடர்பில் எதுவும் கூறா­ததால் பிர­தே­ச­வா­சிகள் குழப்ப நிலை அடைந்­தனர். இத­னை­ய­டுத்து பிடி­பட்ட இளைஞர் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

இது இவ்வாறு இருக்க சந்­தேக நபரை பொலிஸார் குறித்த இடத்­தி­லி­ருந்து அழைத்துச் செல்ல முற்­பட்­ட­போது அதற்கு மக்கள் சம்­ம­திக்­கா­த­தினால் பொலி­ஸா­ருக்கும் மக்­க­ளுக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. பின்னர் புஸல்­லாவை பொலிஸ் நிலைய நிர்­வாக பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சம்பத் விக்­ர­ம­ரத்­னவின் முயற்­சியால் சந்­தேக நபர் குறித்த இடத்­தி­லி­ருந்து பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

சிறு­மியை தேடும் பணியில் தோட்ட மக்­களும் கிராம மக்­களும் ஈடுப்­பட்ட போதும் சிறுமி கிடைக்­க­வில்லை. இதனால் மக்கள் அச்­சத்தில் காணப்­ப­டு­வ­துடன் மேல­திக விசா­ர­ணை­களை புஸல்­லாவை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஹேரத் தலை­மையில் நிர்­வாக பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சம்பத் விக்ரமரத்னவின் குழு மேற்கொண்டு வருகின்றது.

ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்ய உத்தரவு!!

1264745144Untitled-1வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல­பொடஎத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து சர்சையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களில் இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த விடயங்கள் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது குறித்த மூவரும் ஆஜராகத் தவறியமையால் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வீட்டுத் திட்டத்தை வழங்குவதில் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக புகார்!!

house_2இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது:

வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால், பாலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என, தமிழ்ப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக, 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கூட்டு விசாரணையை தொடங்கியுள்ளன. இது போன்ற செயலை, இந்தியா பொறுத்துக் கொள்ளாது என, இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார், என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்களுக்காக, இந்தியா, 50,000 வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசுடன், இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களும், இப்பணியை மேற்பார்வையிட்டு வருகின்றன.

வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய, செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர், பாலுறவுக்கு அழைத்ததாக, விதவைப் பெண் ஒருவர் கடந்த மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுபோல் பல புகார்கள் குவிந்து வருகின்றன.

வெலிகடை சிறையில் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்!!

Prisoner+in+jail+cell+prisonவெலிகடை மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறைச்சாலைகள் ஆணையாளர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக, அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைதானவர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆச்சி மனோரமாவின் உடல் தகனம் : காணமுடியாத இறுதிக் காட்சிகள்!!(காணொளி)

பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக வைத்தியாசாலையில் உயிர் இழந்தார். இவருக்கு வயது 78. அவரது உடல் நேற்று இரவு 7 மணியளவில் மைலாப்பூர் கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937ம் ஆண்டு பிறந்தார். நாடக நடிகையாக வாழ்க்கையை தொடங்கிய மனோரமா, படிப்படியாக முன்னேறி திரையுலகில் நுழைந்தார்.
நகைச்சுவை வேடம், குணச்சித்திர வேடம் என மொத்தம் 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கடந்த சில காலமாக மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அங்கு இரவு 11.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது.

இவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மனோரமாவின் மரணச் செய்தி கேள்விப்பட்ட திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து மனோரமாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலை 4 மணியளவில் மனோரமாவிற்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மைலாப்பூரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமானோர் கூடி அஞ்சலி செலுத்தினர்.

மாலை 6.30 மணியளவில் மைலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மயானத்தை வந்தடைந்தது.பின்னர் 7 மணியளவில் மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மயானத்திற்கு வந்திருந்த மக்கள் அனைவரும் மனோரமாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்தனர்.

11-1444546584-vijay-pays-homage-to-legendary-actress-manorama-aachi Celebs-Pays-Homage-To-Legendary-Actress-Manorama-Photos-55 goundamani-pays-homage-to-legendary-actress-manorama-aachi_144453848300 jayalalithaa-pays-homage-to-legendary-actress-manorama-aachi_144455764420 manorama-death-stills-034 sivakarthikeyan-pays-homage-to-legendary-actress-manorama-aachi_1444560089100 t-rajendra-pays-homage-to-legendary-actress-manorama-aachi_1444540934140 vijayi-paid-tribute-to-manorama-stills-009 vishal-pays-homage-to-legendary-actress-manorama-aachi_144454108630

இன்று முதல் வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம்!

yal-devi-train

வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவனை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு,மட்டக்களப்பு மற்றும் தலைமன்னார் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் ரயில்களின் நேர அட்டவனையே மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்திலான கொழும்பு – காங்கேசன் துறை மற்றும் கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவைகளின் நேர அட்டவனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு ரயில் மார்க்கத்தில் ஈடுபடும் கொழும்பு – திருகோணமலை மற்றும் கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய ரயில் சேவைகளின் நேர அட்டவனையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க சுட்டிக்காட்டினார்.இந்த நேர அட்டவணை இன்று முதல் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பிதிர்க் கடன்களை நிறைவேற்றி முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை!!(புரட்டாதி மாலையம்)

201510061538257846_Perspective-WorshipMakalaya-Amavasai_SECVPF

மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங் களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படு கிறது.

இது பிதுர் தேவதைகளுடைய திருப்தி யின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை சிறப்பு வாய்ந்ததாகும்.

தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன்களைச் செய்வது சாலச்சிறந்தது.

சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலஷேத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.

தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படு கிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங் களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபாவசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார் களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் புலமைபரிசில் பரீட்சையில் சித்தி!

12092384_449944768540379_625154005_n

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய மாணவி திருமேனன் ரினுசியா இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில்பரீட்சையில்   158 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதல் நிலையில் உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் இம்மாணவி இவ்வாண்டில் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.இவருக்கு பாடசாலை சமூகம் தமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றது ,

பிள்ளையான் கைது!!

Pillayan

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர்.

முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் இருவர் கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-அத தெரண தமிழ்-

9 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

Sucide

ஹோரன – அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் 9 வயதான சிறுவன் ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பாணதுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் ஓய்வு பெறும் முதல்வர் செல்வி உமா இராசையா அவர்களின் மணிவிழா!!

வன்னியின் மத்தியான வவுனியா நகரில் புகழ்பெற்ற வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி தமிழுக்கும், கல்விக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி வருகின்றது.

இக்கல்லூரியின் புகழ் அகிலமெங்கும் பரவ கடந்த இரு தசாப்தங்களாக பிரதி அதிபர் மற்றும் அதிபர் என இருவேறு பதவிநிலையினை ஏற்று கல்லூரியை முன்னேற்றி ஓய்வு பெறும் மதிப்பிற்குரிய அதிபர் செல்வி. உமா இராசையா அவர்களை எண்ணும்போது மனம் நெகிழ்கிறது.

இவரது வாழ்வின் பெரும்பகுதி கல்வி கற்பதிலும் கற்றுக்கொண்டே கல்விப்பணியை மேற்கொள்வது என உருண்டோடி இவர் ஓய்வு நிலைக்கு வந்துள்ளபோதிலும், மதிப்பிற்குரிய அதிபர் செல்வி. உமா இராசையா அவர்களை அந்நிலையில் வைத்துப் பார்க்கமுடியவில்லை.

கலைப்பட்டம், பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளமோ, முகாமைத்துவ டிப்ளமோ போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், இவரது கல்விப்பணிக்கு கட்டியம் கூறுமாப்போல் இலங்கை அரசினால் கல்விப்பணிச் சேவைக்கென வழங்கப்படும் உயரிய விருதான பிரதீபா பிரபா விருதை கடந்த 2013ஆம் ஆண்டில் இவர் பெற்றுள்ளார்.

இவருக்கு கல்வி நிர்வாக சேவை தரம் III கிடைத்தபோதும் தான் நேசித்த கல்லூரிக்காகவும், அங்குள்ள பிள்ளைச் செல்வங்களுக்காகவுமாய் தன்னை நாடிவந்த உயர்பதவியை ஏற்றுக்கொள்ளாமை தனது கல்லூரியின்மீது அவர் வைத்திருந்த அளப்பரிய பாசப்பிணைப்பை எடுத்துரைக்கின்றது.

இவர் தானும் உயர்ந்து தான் நேசித்த பிள்ளைகளையும் கட்டுக்கோப்புடன் கல்வித்துறையில் முன்னேற்றி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் புகழை உலகறியச் செய்தவர்.

வடக்கில் கடைசியாக நடைபெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் நிமித்தம், பாடசாலை உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான முகாமாகச் செயற்பட்டபோதிலும் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தடைபடாமல் செயற்பட்டமையானது இவரது முகாமைத்துவத்துக்குச் சான்று பகர்கின்றது.

கல்விப்பணியோடு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஆதரவற்றவர்களின் காப்பகமாக விளங்கும் வவுனியா இந்து அன்பகத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், வவுனியா மத்தியஸ்த சபையின் சிரேஸ்ட உறுப்பினராகவும் விளங்கி சிறந்த சமூகசேவையாளராகவும் வலம் வருகின்றார்.

கல்லூரி அபிவிருத்திக்குழுவின் செயலாளரும், மணிவிழாக்குழு தலைவருமான செல்லத்துரை ஸ்ரீநிவாசன் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் 11.10.2015 இன்று நடைபெற்றபோது…

பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அமிர்தலிங்கம், தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் இளையதம்பி,

வடக்கு உதவிக்கல்வி பணிப்பாளர் வாகீசன், கல்வி அதிகாரிகள், மதத்தலைவர்கள், கல்லூரியின் புதிய அதிபர் திருமதி கமலேஸ்வரி பாக்கியநாதன், தமிழ்மணி அகளங்கன், அதிபர்கள், சைவப்பிரகாச ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலை சமுகத்தினர் கலந்துகொண்டு, செல்வி உமா இராசையா அவர்களின் முப்பது ஏழு வருட ஆசிரியர் – அதிபர் சேவையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து கௌரவித்தனர்.

news1 (22)news1 (1) news1 (2) news1 (3) news1 (4) news1 (5) news1 (6) news1 (7) news1 (8) news1 (9) news1 (10) news1 (11) news1 (12) news1 (13) news1 (14) news1 (15) news1 (16) news1 (17) news1 (18) news1 (19) news1 (20) news1 (21)

வவுனியா நெளுக்குளம் பாலர்பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினரால் தளபாடங்கள் வழங்கல்!!

வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா நெளுக்குளம் பாலர் பாடசாலைக்கு தளபாடம்

வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வானது நெளுக்குளம் பாலர் பாடசாலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இன் நிகழ்வில் நெளுக்குளம் பாலர்பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.

1 (2) 1 (3) 1 (4) 1 (5) 1 (6) 1 (7) 1 (8) 1 (12) 1 (13) 1 (14)

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆட்சேர்ப்பில் 424 தமிழ் இளைஞர்கள் பங்கேற்பு!!(படங்கள்)

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வவுனியா காமினி வித்தியாலயத்தில் இன்று(11.10.2015) இடம்பெற்றது.

இதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 424 தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்கா, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றது.

5.5 அடி  உயரத்தைக் கொண்ட தேக ஆரோக்கியம் மிக்கவர்கள் இதில் உள்வாங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, யாழில் நேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 650 இளைஞர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4

படவிழாவில் கண்ணீர் விட்டு அழுத நடிகர்!!

Actor-Prajin

பிரஜன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. இதில் பிரஜனுடன் ரிச்சர்ட், நிஷாந்த் ஆகிய நாயகர்களும், அஸ்மிதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய பிரஜன்,
இந்த படம் வெற்றிப்படமாக ஆகவேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இசை வெளியீட்டு விழா நடத்த சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் கேட்டு அவர்கள் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் போட்டு அவர்களுக்கு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் விழாவிற்கு யாரும் வரவில்லை.

நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படத்தின் பாடல்களும் படமும் சிறப்பாக இருக்கும். பாடல்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதார்.

எனது நண்பர்களாக இருக்கும் சில நடிகர்கள் மட்டும் வந்து வாழ்த்தினார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் இதுபோல் நடக்காமல் ஒரு வரைமுறைப்படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொகிறோம் என்று கூறினார்.