பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு??

Jffna_Trader-450x330

எதிர்­வரும் சில தினங்­களில் அத்­தி­யாவ­சிய உணவுப் பொருட்கள் உள்­ள­டங்­க­லாக பொருட்கள் சில­வற்றின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரியவரு­கி­றது.

பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்­களின் விலை­களே அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் சமையல் எரி­வாயு, இறக்­கு­மதி செய்­யப்படும் விவ­சாயப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாத­னங்­களின் விலையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரியவரு­கி­றது.

இலங்கை ரூபாவின் பெறு­மா­னத்தை நிலை­யாகப் பேணத் தவ­றி­ய­மையே குறித்த விலை அதி­க­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தி­ருப்­ப­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

எனவே, உலக வர்த்­தக சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலையில் வீழ்ச் சி ஏற்­பட்­டுள்­ள­போ­திலும் இலங்கை ரூபாவின் நிலை­யான பெறு­மா­னத் தைப் பேணத் தவ­றி­யதன் கார­ண­மாக அந்த விலை வீழ்ச்­சியை நுகர்வோர் அனு­ப­விக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் அமைக்கப்­பட்ட புதிய அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத்­திட்­டத்­திற்­கி­ணங்க சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால வரவு – செல­வுத்­திட்­டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் சில­வற் றின் விலை குறைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும் அதன் பின்னர் குறித்த சில உணவுப் பொருட்­களின் விலை யில் அதி­க­ரிப்பு ஏற்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யி­லேயே எதிர்­வரும் சில தினங்­களில் விலை அதி­க ­ரிக்­கப்­ப­ட ­வுள்­ள­தாகத்தெரிய வரு­கி­றது. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்க ளின் விலை அண்மையில் அதிகரிக் கப்பட்டபோதிலும் மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் தெரிய வருகிறது.

பெண் சிவாஜி மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள் : நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா!!

Manorama

நகைச்சுவை அரசியை தமிழகம் இழந்து விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மனோரமா உறுப்பினர் போலத்தான். கிட்டத்தட்ட தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து விட்டது போன்ற உணர்வில் தமிழகம் தத்தளிக்கிறது.

நகைச்சுவை அரசி மனேராமா பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா தனது இளமை பற்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகளவில் “அம்மா’ கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார்.

டிவி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எழுத்தாளர் சோ’, மனோராமாவை ‘பெண் சிவாஜி’ என்று குறிப்பிட்டு பேசினார்.

தில்லானா மோகனம்பாள், அனுபவி ராஜா அனுபவி,சம்சாரம் அது மின்சாரம், சின்னக்கவுண்டர், நடிகன், சின்னதம்பி, கிழக்கு வாசல் போன்ற படங்களில் நடிகர் மனோரமா முத்திரை பதித்திருப்பார்.

1985ஆம் ஆண்டு மனோரமா ஆயிரம் படங்களில் நடித்து விட்டார். மொத்ததில் 1500 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு மனோரமா- நடிகர் எஸ்.எம். ராமநாதன் திருமணம் திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 1966ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார் மனோரமா. ஒரே மகன் பூபதி.

பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்ததால் ‘ஆச்சி’ என்று அன்பு அடைமொழி சேர்ந்துகொண்டது.

‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற படத்தில் ‘தில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே ‘என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது.

உணவுக் கட்டுப்பாடு ஆச்சிக்கு அதிகம். செவ்வாய், வெள்ளி அசைவம் கிடையாது. புதன், ஞாயிறு கண்டிப்பாக அசைவம் உண்டு!

நெருங்கிய தோழிகளான எம்.என்.ராஜம், ஸ்ரீப்ரியா. இருவரும் ஆச்சியின் உடல் நலத்தில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார்கள். அடிக்கடி ஆச்சியைச் சந்திப்பவர்கள் கமல், ரஜினி!

வீட்டில் செல்லமாகக் கூப்பிடுவது ‘பாப்பா’. ரசிகர்களுக்கு ‘ஆச்சி’. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு ‘அம்மா’!

முருகனின் அடிமை. அறுபடை வீடுகளும் அவ்வளவு இஷ்டம்.

மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை ‘சகோதரன்’ என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி கணேசன். இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, ‘அண்ணே’ என்றுதான் அழைப்பார் ஆச்சி!

காரில் செல்லும்போது, ‘மெள்ளப் போ, மெள்ளப் போ’ என ஓட்டுநரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், எந்த நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்குச் செல்ல வேண் டும் என்பதில் குறியாக இருப்பார்!

ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. ஆச்சிக்கே பிடித்தது ‘சின்னக் கவுண்டர்’, ‘நடிகன்’. “ஒரு துளி விரசம் இல்லாமல் ‘நடிகன்’ படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்” என்பார்!

பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் படித்துவிடுவார். படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாதது எதுவும் இல்லை!

மனச் சோர்வு இருந்தால்கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார்.

அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டுவார்!

‘ஆச்சி இன்டர்நேஷனல்’, ‘அல்லி ராஜ்யம்’, ‘காட்டுப்பட்டிச் சத்திரம்’ என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்!

இவரது நடிப்புத் திறமை, நாடகக் கலைக்கான பங்களிப்பைப் பாராட்டி அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன், ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்றோர் பேசியதை இன்னமும் மனதில் சேமித்துவைத்துள்ளார் ஆச்சி!

‘வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன். பேசலாமா’ என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல். சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்!

மஞ்சள் குங்குமம்’ என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை கட்டுவிரியன்’ பாம்பு கடித்து விட்டது. சிகிச்சைக்கு பின் மனோரமா உயிர் பிழைத்தார்.

5 முதல்வர்களுடன் இணைந்து நடித்த பழம்பெரும் நடிகை மனோரமா மரணம்

தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகிய ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே.

அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனை காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.

நாடகத் துறையில் ஒரு பயணம் ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார். திரைப்படத்துறையில் அவரது பயணம் அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். கலையுலக வெற்றிப் பயணம் தன்னுடைய முதல் திரைப்படத்திற்குப் பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.

1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரைப் பதிவு செய்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகிய ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள் ‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார்.அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’. 2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார். மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’. கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’. ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’. சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது. சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனை படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள்.

திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகை ஆட்சி செய்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.இதனால் அவருக்கு மரியாதை செய்ய வேண்டி திரையுலகின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெண் நடிகர் திலகம் நடிகை மனோரமா’- நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா புகழாரம்

மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பழம்பெரும் நடிகையான மனோரமா நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் மனோரமா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுதாவூரில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தி.நகர் சென்றார். அங்கு மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, “மனோரமா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. திரையுலகில் எனது மூத்த சகோதரியாக விளங்கியவர் மனோரமா. நடிப்பில் மேதையான மனோரமாவை பெண் நடிகர் திலகம் என்றே சொல்லலாம். எம்ஜிஆர், சிவாஜியின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் மனோரமா. தமிழ் திரையுலகில் மனோரமாவை போன்ற சாதனையாளர் இருந்ததில்லை” என்றார்.

வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலய பழையமாணவர் ஒன்றுகூடல்!!(படங்கள்)

வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலய பழையமாணவர் ஒன்றுகூடல் நேற்று (10.10.2015) திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதுவரை காலமும் இயங்காதிருந்த பழையமாணவர் சங்கம் எதிர்வரும் 17.10.2015 ஞாற்றுக்கிழமை அன்று ஒன்றுகூடி நிர்வாக கட்டமைப்பை தெரிவுசெய்ய உள்ளது.

அனைத்து பழைய மாணவர்களும் எதிர்வரும் 17.10.2015 அன்று வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
பழைய மாவர்கள்.

12088546_699303116837974_1388993819855887786_n 12112179_699301566838129_2185164862508598293_n 12122575_699301710171448_7457759150812153393_n

வறுமையிலும் சாதித்த நொச்சிமோட்டை க.உ. வித்தியாலய மாணவன் சு.துபாகரன்!!

image-d4d907d58ff31f2d774b0382ee73074eca30dcb7c09d4cd169cd6a20ea5d8193-V

தரம் 5 புலமைப்பரீட்சை முடிவுகளின்படி வவுனியா நொச்சிமோட்டை க.உ. வித்தியாலயத்தில் சுரேஷ்காந்தன் துபாரகன் 157 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் மிகவும் வறுமையிலும் மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.

இதற்கு உதவியாக இருந்த மாணவரின் பெற்றோர், கற்பித்த ஆசிரியை திருமதி.குகதாசன் ஜீவராணி, பாடசாலை அதிபர் ஆகியோரை பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.

மேலும் இவ் மாணவன் சாதனைக்கு உழைத்த அனைத்து உள்ளங்களுக்காகவும் பாடசாலைச் சமூகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

இவருக்கு எமது வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கின்றோம்.

image-d4d907d58ff31f2d774b0382ee73074eca30dcb7c09d4cd169cd6a20ea5d8193-V - Copy

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய மக்கள் கலந்துரையாடல்!!

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற் சங்க சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தகவல் அறியும் உரிமை யாருக்காக? எனும் தலைப்பிலான மக்கள் கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இன் நிகழ்வினை கிளிநொச்சி ஊடக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த சம்மேளனமானது, காலை 10 மணியளவில் பரந்தன் பொது நோக்க மண்டபத்தில் ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு.தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கருத்துரைகளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மக்கள் தொடர்பாடல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோஸலி மனோகரன், யாழ் பல்கலைக்கழக மொழியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சாமிநாதன் விமல் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

metting (1) metting (2) metting (3) metting (4) metting (5) metting (6) metting (7) metting (8) metting (9)

கின்னஸ் சாதனை நடிகை ஆச்சி மனோரமா காலமானார்!!

Manorama

தமிழ்த் திரையுலகில் “ஆச்சி´ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.

களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் உள்பட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்த மனோரமா, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு இறந்தார். அவர் இறக்கும்போது மகன் பூபதி, பேரன் டாக்டர் ராஜராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நகைச்சுவை நடிகையாக…: மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா. இவரது பெற்றோர் காசி கிளாக் உடையார் மற்றும் ராமாமிர்தம். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிறந்த மனோரமா, சிறு வயதில் வறுமை காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தார்.

படிக்கும்போதே மேடை நாடகங்களில் பாட்டு பாடி நடிக்கத் தொடங்கினார். கவியரசு கண்ணதாசன் தயாரித்த “மாலையிட்ட மங்கை´ திரைப்படத்தில் முதன்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். செட்டி நாட்டில் வசித்ததால் “ஆச்சி´ என்ற பெயரைப் பெற்றார்.

தேசிய விருதான பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 1989-இல் நடிகர் பார்த்திபனின் புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசித்திர நடிகை என்ற தேசிய விருதைப் பெற்றார்.

இயக்குநர்கள் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களின் படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, அஜீத், விஜய் உட்பட அனைத்து பிரபல நடிகர்களுடனும் நடித்தவர். குறிப்பாக, பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் நடிகை மனோரமா.

திரைப்படங்களில் நடிகை மனோரமா பாடிய பாடல்களும் பிரபலமானவை. “வா வாத்தியாரே´ (பொம்மலாட்டம்), “தில்லிக்கு ராஜான்னாலும்´ (பாட்டி சொல்லைத் தட்டாதே) “மெட்ராச சுத்திப் பாக்க´ (மே மாதம்), “தெரியாதோ நோக்கு தெரியாதோ´ (சூரியகாந்தி), “பார்த்தாலே தெரியாதா´ (ஸ்ரீ ராகவேந்திரா) உள்ளிட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் (மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் இல்லம் அருகில்) நடிகை மனோரமாவின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன பெண்ணொருவரை சுட்ட இராணுவ வீரர்கள் : பரபரப்பு காணொளி!!

Arme

பலஸ்தீன பெண்ணொருவரை இஸ்ரேல் வீரர்கள் சுடும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபுலா நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் பல முரண்பாடான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.

குறித்த பெண் இஸ்ரேலிய இராணுவத்தை கத்தியால் குத்த முயன்றமையாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட் ட தாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. அப்பெண் தீவிரவாதி எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் பலஸ்தீன ஊடகங்கள் சில இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் கைதாகியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் உ.விதுரா 166 புள்ளிகளைப்பெற்று முதலிடம்!!

20151009_124509

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..

1. உ.விதுரா – 166 புள்ளிகள்
2. உ.சுதர்சனா – 162 புள்ளிகள்
3. ந.தர்மிகா – 156 புள்ளிகள்
4. பே.பெல்வின்கஸ்ரோ– 153 புள்ளிகள்

இவர்களின் சிறந்த பேறுபேற்றிற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர் பூலோகசிங்கம், வகுப்பாசிரியர் திருமதி சி.மணிவண்ணன் மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது

இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

அஜித் பிரியாணியை ஸ்ருதி சாப்பிட மறுத்தது ஏன்? வெளிவந்த தகவல்!!

Shruti-Hassan-Photos-6அஜித் தன் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அனைவரையும் அன்பாக பார்த்துக்கொள்வார். அனைவருக்கும் ஒரு நாள் பிரியாணி செய்து கொடுத்து அசத்துவார்.

அப்படி ஒரு நாள் அஜித் செய்து கொடுத்த பிரியாணியை ஸ்ருதிஹாசன் சாப்பிட மறுத்து விட்டாராம். அதற்கு அவர் விளக்கம் தருகையில் ‘சார் நான் பிராமண பெண்ணாக இருந்தாலும் அசைவம் சாப்பிடுவேன்.ஆனால், தற்போது கொஞ்சம் டயட் அதனால் தான்’ என கூற அஜித்தும் சிரித்துக்கொண்டே சரி என்றாராம்.

சிம்புவிற்கு இதுக்கூட தெரியாதா? விஷால் அதிரடி !!

simbu_vishal001சிம்பு நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக நிற்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன் விஷாலை திட்டிய வீடியோவையும் நாம் பார்த்திருப்போம்.இதில் விஷால் தன் சொந்த பிரச்சனைக்காக தான் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என கூறினார்.

இதுகுறித்து விஷால் ஏதும் பதில் அளிக்கவில்லை.நேற்று திருச்சியில் நாடக நடிகர்களை சந்தித்த விஷால் ‘நான் என் சொந்த பிரச்சனைக்காக செய்கிறேன் என்றால், என் பின்னால் யாருமே வந்திருக்க மாட்டார்கள். இது கூடவா அவர்களுக்கு தெரியாது.அப்படி வந்தாலும் இத்தனை நாட்கள் என்னுடன் எப்படியிருப்பார்கள், மேலும், திரையுலகில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் அண்ணன் மட்டும் தான்’ என சிம்புவிற்கு பதிலடி கொடுத்தார்.

பேஸ்புக்கில் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிபடுத்தும் புதிய பட்டங்கள்!!

facebook-emojis-haha-happy-faceபேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படுவது பற்றி பரிசிலித்து வருவதாக கடந்த மாதம் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் 6 புதிய பட்டன்களை சோதனை அடிப்படையில் இன்று முதல் ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த புதிய 6 பட்டன்களும் லைக் பட்டனுக்கு பக்கத்தில் தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து குளிர் அறையில் இருந்தால் எலும்பு தேயும் அபாயம்!!

room-acஇன்று நம்மில் பலருக்கு உடற்பயிற்சிகள் செய்வதற்கு நேரமின்மை, குளிர் அறையில் வேலை செய்தல், விற்றமின் மற்றும் புரதக் குறைபாடு போன்ற காரணங்களால் எலும்பு தேயும் அபாயம் ஏற்படக்கூடும்.

எலும்பு தேய்வுக்கு உள்ளாகும் முன் அறிகுறிகள் எதுவும் தென்படாது. எலும்பு முழுவதும் தேய்வு அடைந்தபிறகுதான் அதற்கான அறிகுறிகள் கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

உடல் களைப்பு மற்றும் வலி, சிறிய அளவில் அடிபடுவதன் காரணமாக இடும்பு எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் முறிவு (Fracture) ஏற்படுதல் ஆகியன எலும்பு தேய்ந்து போனதற்கான அறிகுறிகள் ஆகும். எலும்புத் தேய்வு பாதிப்பு வருவதைத் தடுக்க முடியும். ஆனால், முழுமையாக குணப்படுத்த முடியாது.

எருமைக்கும் முதலைக்கும் இடைப்பட்ட தோற்றத்துடன் பிறந்த கன்றுக்குட்டி!!

half-crocodile-half-buffalo-born-thai-villageஎருமை மாடொன்று முத­லைக்கும் எரு­மைக்கும் இடைப்­பட்ட தோற்­ற­மு­டைய விநோத தோற்­ற­மு­டைய கன்­றுக்­குட்­டியை ஈன்ற சம்­பவம் தாய்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.

வாங்ஹின் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஹைரொக் எனும் இடத்தில் பிறந்த இந்தக் கன்றால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அந்தக் கன்று பிறந்து சிறிது நேரத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளது.

முத­லையைப் போன்ற முகத்­தையும் தோலையும் கொண்ட இந்தக் கன்று, எரு­மையை ஒத்த உட­லையும் கால்­க­ளையும் கொண்­டுள்­ளது. இந்தக் கன்றை ஈன்ற எருமை மாடு இதற்கு முன் ஆரோக்­கிய நிலையில் கன்றுக் குட்­டி­களை ஈன்­றி­ருந்­த­தாக கிரா­ம­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த கன்­றுக்­குட்­டியின் பிறப்­பா­னது தமது கிரா­மத்­திற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என கிராமவாசிகள் நம்புகின்றனர்.

தோனியின் தலைவர் பதவிக்கு ஆப்பு வைப்பாரா கோலி??

1662204849Spotஇந்திய கிரிக்கெட்டின் 3 நிலை போட்டிகளிலும் இரண்டு அணித்தலைவர்கள் உள்ளனர். 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு டோனியும், டெஸ்ட் போட்டிக்கு வீராட் கோலியும் அணித்தலைவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டியில் தோனிக்கு பதிலாக வீராட்கோலியை அணித்தலைவராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு உறுப்பினருமான மொகீந்தர் அமர்நாத் வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி டெஸ்டுக்கும், ஒருநாள் போட்டிக்கும் ஒரே அணித்தலைவர் இருக்க வேண்டும். 20 ஓவர் போட்டிக்கு மற்றொருவர் தலைவராக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி பல்வேறு சவால்களை சமாளித்து இருக்கிறார்.

இதனால் ஒருநாள் போட்டி கேப்டனுக்கு அவர் தகுதியானவர். தோனிக்கு பதிலாக வீராட்கோலியை ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு உறுப்பினருமான மொகீந்தர் அமர்நாத் வலியுறுத்தி உள்ளார்.

22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில் லயனல் மெஸ்ஸி!!

downloadவரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார்.

மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட் சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவா ய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

2007 முதல் 2009ஆம் ஆண்டுவரை சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மெஸ்சியும் அவரது தந்தைஜோர்ஜ் கார்சியோவும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற் றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக லயனல் மெஸ்சி நீதிமன்றத்தில் அளித் துள்ள மனுவில், ” தனது வரி தொடர்பான விவகாரங்களை தந்தை ஜார்ஜ் கார்சியாதான் கவனித்து வந்ததாகவும் தனக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாது. எனவே தான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம். அந்நாட்டு சட்டப்படி, இந்த வழக்கில் மெஸ்சிக்கும் அவ ரது தந்தைக்கும் 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீதியில் சென்ற வாகனங்களுக்கு சில யார்கள் உயரத்தில் விமானம் பறந்து சென்றதால் பரபரப்பு!!  

2D3461A900000578-3265088-Incredibly_airport_authorities_have_claimed_the_descent_was_comp-a-69_1444317099960

கொஸ்தாரிக்­காவில் பய­ணிகள் விமா­ன­மொன்று வீதி­யொன்றில் சென்ற வாக­னங்­க­ளுக்கு சில யார் கள் உய­ரத்தில் பறந்து சென்­றதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஸ்பெயினின் மட்றித் நக­ரி­லி­ருந்து கொஸ்தா ரிக்­கா­வி­லுள்ள சான் ஜோஸ் நக­ருக்கு பய­ணித்த எயார்பஸ் 340 விமா­னமே இவ்­வாறு பறந்­துள்­ளது.

இந்த விமானம் சான் ஜோஸ் நக­ரி­லுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கத் தயா­ரான நிலையில் கடும் காற்று கார­ண­மாக அந்த விமா­னத்தின் இயக்­கத்தில் மாற்றம் ஏற்­பட்­டமை கார­ண­மா­கவே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.