பேஸ்புக் மோகத்தால் 2 வயது குழந்தையை பறிகொடுத்த தாய்!!

1398597701wORLDதனது குழந்தையை கவனிக்காமல் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது குழந்தையயை பறிகொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாய் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டின் அருகாமையில் உள்ள நீர்நிலை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது.
இதையறியாத தாய் பின்னர் திடீரென தனது குழந்தையை காணவில்லை என அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார்.

எனினும் குழந்தை நீரில் மூழ்கி மயக்க நிலையிலேயே அவரால் குழந்தையை திரும்ப காணக்கிடைத்தது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதும் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக இறந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குழந்தை குளத்தினருகே விளையாடும்போது அவர் தாய் பேஸ்புக்கில் கவனம் செலுத்தி இருந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில் குழந்தை மீது போதிய கவனம் செலுத்தாமல் உயிரிழக்க காரணமாக இருந்த தாய் மீது வழக்கு பதிந்த பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா சொத்து வழக்கு – விசாரணை 6 வாரம் ஒத்திவைப்பு??

M_Id_404165_Tamil_Nadu_CM_Jayalalithaசொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளது. இதே போல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மனுக்கள் மீது 3 வாரத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வருகிற 12ஆம் திகதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 6 வார கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு வாரம்!!

5721439493428.originalஇணைய பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் விதமாக சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இந்த திட்டத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிலையத்தின் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

இதன்போது இணைய பயன்பாட்டின் சம்பந்தமாக மற்றும் கணினி அமைப்புகள் பாதுகாப்பு சம்பந்தமாகவும் மக்களை தௌிவூட்டும் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

இலங்கைக்கு 6வது இடம்!!

2110565249Media22ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டிக்கப்படாத நாடுகள் பட்டியலில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது.

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற இம்முறை

அந்த அறிக்கையின் படி முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் ஈராக்கும் உள்ளன. மற்றும் சிரியா மூன்றாவது இடத்திலும் பிலிபைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இலங்கையைவிட முன்னிலையில் இருக்கின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தை விட புதிய அரசாங்கத்தினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவருவதனால் இலங்கை இந்தமுறை இரண்டு இடங்கள் பின்தள்ளி 6வது இடத்தில் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலியில் இறப்பர் தொழிற்சாலையில் தீ

1788559439Fire22காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு ​செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது.

தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

Request for Informationசிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும் அதில் அதிகமானவை சம்பந்தமில்லாத அழைப்புக்கள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு 1290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 1202 முறைப்பாடுகள் தேவையற்றது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவற்றில் சிறுவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள், சர்வதேச பாடசாலைகளின் கட்டணப் பிரச்சினைகள், வீடு, காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிதிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கும் போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பிரச்சினைகளை முறையிடும் சந்தர்ப்பங்கள் இழக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைகளை மாத்திரம் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்ட பிக்குவிற்கு விளக்கமறியல்!!

sri-lanka-monk-arrestedபுத்த பிக்கு ஒருவர் பதி­னொரு வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்­டமை தொடர்­பான வழக்கில் சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

தெகி­யத்த கண்­டிய நீதிவான் நீதி­மன்­றத்தில் மேற்­படி வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது நீதி­பதி ஜி.எம்.பிரி­ய­தர்­ஷினி சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

தெகி­யத்த கண்­டிய பகு­தியில் மொர­தெ­னிய விஹா­ரையின் புத்த பிக்கு ஒருவர் விஹா­ரையின் அரு­கே­யுள்ள வீடொன்­றிற்குள் புகுந்து தனி­மையில் இருந்த 11 வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மாரி பொழிந்­துள்ளார். இதனை அச் சிறுமி பெற்­றோ­ரிடம் கூறி­ய­தை­ய­டுத்து பெற்றோர் தெகி­யத்த கண்­டிய பொலிஸ் நிலை­யத்தில் புகார் செய்­தனர். இப் புகாரின் பேரில் பொலிஸார் சம்பந்தப்பட்ட புத்த பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

73 அகதிகள் நாடு திரும்பினர்!!

Sri-Lanka-Air-Port

இந்­தி­யாவின் தமி­ழ­கத்தில் தங்­கி­யுள்ள இலங்கை அக­தி­களில் 73 பேர் நேற்று நாடு திரும்­பி­யுள்­ளனர். ஐக்­கிய நாடுகள் அக­திகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே இந்த 73 பேரும் நாடு திரும்­பி­யுள்­ளனர்.

நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவு­னி­யா­வி­லி­ருந்து இந்­தி­யா­விற்கு சென்றோம். ”நாம் மண்­டபம் முகா­மிற்கு செல்லும் போது எனக்கு ஒன்­பது வயது. எனினும் நாங்கள் மீண்டும் எமது சொந்த நாட்­டுக்கு செல்­லவே விரும்­பு­கின்றோம்” என்று இந்­தி­யாவில் வைத்து இலங்கை திரும்பும் வழியில் இலங்­கையர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார்.

2009 ஆம் ஆண்டு இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்­தது. எனினும் இன்னும் ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட இலங்கை அக­திகள் இந்­தி­யாவின் தமி­ழ­கத்தில் பல முகாம்­களில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்­ப­குதி வரை 12, 500 இலங்கை அக­திகள் நாடு திரும்­பி­யுள்­ள­தா­கவும், அவர்­க­ளுக்கு உத­வி­களை வழங்கியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினையை தீர்க்க முத்தரப்பு அணுகுமுறை அவசியம்- சம்பந்தன்!!

1 (47)இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் டில்­லி­யுடன் மட்டும் பேச்­சு­வார்த்தை­ நடத்­தாது தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­ நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.

இலங்கை – இந்­திய கடற்­ப­டை­யினர் இணைந்து கூட்டுச் சேர்ந்து சேவையை மேற்­கொள்­வதன் மூலம் இந்­திய மீன­வர்கள் வட­ப­குதி கட­லுக்கு வரு­வதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சபையில் குறிப்பிட்டார்.

இந்­திய மீன­வர்கள் இலங்கை கடல் எல்­லையில் அத்­து­மீறி மீன்பி­டிப்­பது தொடர்பாக நேற்று வெள்ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் ஜே.வி.பி. எம்.பி விஜித ஹேரத் முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்புவேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்­திய மீன­வர்கள் எமது கடல் எல்­லையில் விசே­ட­மாக வட­ப­குதி கடல் எல்­லையில் அத்­து­மீறி “பொட்­டம்­ரோ­லர்­களை” பயன்­ப­டுத்தி மீன் பிடிக்­கின்­றனர். இதனால் எமது மீன் வளங்கள் அனைத்­தையும் இந்­திய மீன­வர்கள் அள்ளிக் கொண்டு போவ­தோடு எமது கடல் வளமும் முழு­மை­யாக சுரண்­டப்­ப­டு­கி­றது. எமது மீன­வர்கள் இதனால் தமது வாழ்­வா­தா­ரத்தை இழக்­கின்­றனர்.

வடக்கு கி­ழக்கு மீன­வர்கள் இப்­பி­ரச்­சி்­னைக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தோடு இப் பிரச்­சினை கார­ண­மாக இரு நாட்டு மக்­க­ளி­டை­யேயும் பகை­யு­ணர்வு ஏற்­ப­டு­கி­றது. எனவே இதனை தடுக்க அர­சாங்கம் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு நான் வேண்­டுகோள் ஒன்றை விடுக்­கிறேன். அதா­வது மீனவர் பிரச்­சினை தொடர்­பாக டில்லி மத்­திய அர­சாங்­கத்­துடன் மட்டும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தாது தமிழ் நாட்­டு­டனும் அதன் முத­ல­மைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடதத் வேண்டும்.இலங்கை, இந்­தியா, தமிழ்­நாடு என முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்­தைகள் நடத்த வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தாகும்.

அத்­துடன் இலங்கை கடற்­ப­டை­யி­னரும், கட­லோர காவல் படையும் இணைந்து கூட்டு ரோந்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும். இவ்­வா­றான நடவடிக்கைகளினால் இந்­திய மீனவர்கள் எமது கடல் எல்­லைக்குள் வருவதை தடுக்க முடி­வ­தோடு பிரச்­சி­னை­க­ளையும் குறைத்துக் கொள்ள முடியும்.

டில்­லியில் நான் இருந்த சந்­தர்ப்­பத்தில் அந்­நாட்டின் உயர் அதி­கா­ரி­க­ளுடன் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். இதன்­போது அவர்கள் தெரி­வித்த கருத்தானது இந்­திய, இலங்கை மீன­வர்கள் அனை­வ­ரையும் ஆழ்­க­டலில் மீன்­ப­டிப்­ப­தற்கு பழக்­கப்­ப­டுத்த வேண்டும் என்பதாகும்.அதற்­கான தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கவும் தாம் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.

இப் பிரச்­சி­னையை தொட­ர­வி­டக்­கூ­டாது, இது எமது மீன­வர்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சினை. எனவே விரை­வாக தீர்க்க நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொள்ள வேண்டும். வடக்கு மீன­வர்­களின் வாழ்­வா­தாரம் பாது­காக்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார். அது நிறை­வேற்­றப்­பட வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.

யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு மீன­வர்கள் கடலில் மீன்­பி­டிப்­பது தடுக்­கப்­பட்­டது. இக்­கால கட்­டத்தில் அம் மக்கள் கடன் வாங்­கியே வாழ்க்கை நடத்­தினர். அப்­போது எமது கடல் எல்­லையில் மீன்­பி­டியில் இந்­திய மீன­வர்கள் ஈடு­பட்­டனர்.

இன்று யுத்தம் முடிந்து விட்­டது எமது மீன­வர்கள் மீண்டும் கட­னா­ளி­களாகி மீன்­படி உப­க­ர­ணங்­களை கொள்­வ­னவு செய்து மீன்­பி­டிக்க முயற்சிக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளுக்கு மீன்கள் கிடைப்­ப­தில்லை. இந்­திய மீன­வர்கள் எமது மீன்களை அள்ளிக் கொண்டு போகின்றனர். அதனால் மீன் வளங்கள் குறைந்து போகின்றன. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் முறைகளால் மீன் உற்பத்தி அழிகறது.

எனவே எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டத்துடன் வாழ்கின்றனர். இதனால் அரசாங்கம் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் .

வவுனியாவில் கத்தி முனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

Robbery-at-knife-point

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வீடு புகுந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியர் சாம்பல் தோட்டம் பகுதியில் இரவு வேலையில் புகுந்த 6 பேர் கொண்ட குழு கத்தி முனையில் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த ஒன்றரைலட்சம் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திருட்டில் ஈடுபட்டவர்கள் முகத்தை துணினளால் மூடிக் கட்டியிருந்ததுடன் கறுப்பு ஜக்கெட் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நாடாளுமன்றத்தில் தனியறை கோரும் மஹிந்த!!

1 (9)நாடாளுமன்றத்தில் தனக்கு தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போதே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் தனியான அறைகள் ஒதுக்கப்படும் சம்பிரதாயம் இல்லை என அதிகாரிகள் அவருக்கு தெரியப்படுத்தினர். எனினும் தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், தனது நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் அலுவலக அறையொன்று ஒதுக்கப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச வாதிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகியோருக்கு தவிர எதிர்க்கட்சியின் அங்கம் வகிக்கும் எவருக்கும் நாடாளுமன்றத்தில் அலுவலக அறைகள் ஒதுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் தற்போது சாதாரணமான நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே மஹிந்த தனியான அலுவலகம் ஒன்றை கோருகிறார் எனவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மதிய உணவில் பூரான் – அரசுப் பள்ளியில் அவலம்!!

pooran

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்டபள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் போது, ஒரு மாணவனின் உணவில் பூரான் செத்துக் கிடந்தது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மாணவன், இது குறித்து சத்துணவு அமைப்பாளர் விஜயனிடம் தெரிவித்தார். மேலும், அந்த உணவுகளை மற்ற மாணவர்களும் சாப்பிடாமல் அதை கீழே கொட்டினர். இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு காரணமான சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த வாழப்பாடி பி. டி. ஓ. சுந்தர்ராஜ், துணை பி. டி. ஓ. கந்தசாமி ஆகியோர் சம்பவ இத்திற்கு விரைந்த சென்று, இனிமேல் இது போன்று நடக்காது என உறுதி அளித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானம் செய்தனர்.

 

புலியை ஓரங்கட்டிய ருத்ரமாதேவி

puli_rudhramadevi001ருத்ரமாதேவி திரைப்படம் தான் அனுஷ்காவின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் வெளிவரும் படம். அதாவது, சோலோ ஹீரோயினாக அனுஷ்கா நடித்த அதிக பட்ஜெட் இந்த ருத்ரமாதேவி.இப்படம் தெலுங்கில் இன்றும், தமிழில் அடுத்த வாரமும் ரிலிஸ் ஆகவிருக்கின்றது.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் புலி படத்தை நீக்கிவிட்டு ருத்ரமாதேவியை திரையிட்டுள்ளனர்.இதன் மூலம், புலி படத்தின் தியேட்டர் எண்ணிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் குறைந்துள்ளது.

நடிகையின் மகளின் அம்பலமான சில்மிஷங்கள்!!

ளச-ைஸ்ரீதேவியின் மகள் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது. ஆனால் ஸ்ரீதேவி அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தற்போது அவரது இரண்டாவது மகள் குஷி பற்றிய செய்தி இணையத்தை அதிர வைத்துள்ளது. அமெரிக்க பாப் பாடகர் ஜாக் கிலின்ஸிக்கு அவர் கொடுத்த முத்தம் தான் இதற்கு காரணம், இதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்துள்ளார்.

ஏன் வாழ்கையில் மிக சிறந்த தருணம் இது தான் என குஷி ட்விட் செய்ய, புகைப்படம் தற்போது வைரலாக மாறியிருக்கிறது. ஜாக் கிலின்ஸியின் ‘வைல்ட் லைஃப்’ என்ற 2014 வெளிவந்த ஆல்பம் அனைவராலும் வெகுவாக புகழப்பட்ட ஒன்றாகும். மேலும் ஜாக்குக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம். அதில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் ஒருவர்.

48 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிரையின் கருப்பையில் குட்டி!!

2D2BC09200000578-3263780-A_horse_like_creature_that_died_48_million_years_ago_has_beenஜேர்­ம­னியில் 48 மில்­லியன் ஆண்­டுகள் பழை­மை­யான குதி­ரை­யொன்­றுக்­கு­ரிய எச்­சத்தின் கருப்­பையில் பிறக்­காத நிலை­யி­லி­ருந்த குட்டி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

டார்ம்ஸ்டத் எனும் இடத்­தி­லுள்ள கல் அகழ்வு தளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இந்த எச்சம் கருப்­பையில் பிறக்­காத நிலை யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட முலை­யூட்­டியொ றின் மிகப் பழை­மை­யான எச்­ச­மாகக் கரு­தப் ­ப­டு­கி­றது. மேற்­படி தாய்க் குதி­ரை­யா­னது நிறைமாத கர்ப்ப நிலையில் இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

உணவு மோகத்தால் அவலநிலை!!

800-pound-man-claims-he-was-kicked-out-of-hospital-for-ordering-pizzaஉடல் பரு­ம­னுக்­காக சிகிச்சை பெற அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வேளை மருத்­து­வர்­க­ளுக்கு தெரி­யாமல் பீஸா உணவை வர­வ­ழைத்­த­மைக்­காக மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 800 இறாத்தல் நிறை­யு­டைய நபர், தனது தந்­தையின் வாக­னத்தில் வாழும் நிர்ப்­பந்­தத்­­திற்கு உள்­ளான சம்­பவம் அமெ­ரிக்க ரொட் தீவில் இடம்­பெற்­றுள்­ளது.

ரொட் தீவு மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த கடந்த சில மாதங்­களில் ஸ்டீவன் அஸன்தி (33 வயது) என்ற மேற்­படி நபரின் நிறை சுமார் 20 இறாத்­தலால் குறைந்­தி­ருந்­தது.

எனினும் அவர் உடல் பருமன் சிகிச்சை குறித்து தனக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த மருத்­து­வ­மனை விதி­களை மீறி பீஸா உணவை வர­வ­ழைத்து உண்­டதால் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேற்­ற­ப்பட்டார்.

இந்­நி­லையில் தனது மகனை வீட்­டுக்கு அழைத்துச் சென்றால் அவர் மேலும் அதி­க­ள­வான உணவை உண்டு தனது உயிருக்கு அபா­யத்தைத் தேடிக் கொள்வார் என அஞ்சிய ஸ்டீவன் அஸன்தியின் தந்தை ஸ்டீவன் வியலட் அவரை தனது வாகனத் தில் தங்க வைத்துள்ளார்.