அவுஸ்திரேலியாவில் நடந்த வீதி விபத்தில் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பல்கலைகழத்தில் படித்துக் கொண்டே மருத்துவத் தாதியாக பணியாற்றி வந்தவர் அன்ஜூமோல் (வயது 23). இவரது சகோதரியான ஆஷா மேத்யூ(18) என்பவரும் அதே பல்கலைகழகத்தில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் திகதியிலிருந்து இருவருடன் எந்தவித தொடர்பும் இல்லாத காரணத்தினால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருவரும் வீதி விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது.
குயின்ஸ்லாந்து பகுதியில் சாலையை கடந்து காரில் செல்ல முயன்ற போது, மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர்களது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக உறவினர்கள் இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சமிந்த பண்டாரவை தொடரில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் துஷ்மந்த சமீரவை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும் சிகிச்சைகளைப் பெற சமீர இலங்கைக்கு திரும்புகிறார்.
இந்தநிலையிலேயே இவருக்கு பதிலாக சமிந்த பண்டார அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதோடு, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குழந்தைவரம் தருவதாக பெண்களை மயக்கி, பலாத்காரம் செய்து, அந்த ஆபாச காட்சிகளை வீடியோவாகவும் எடுத்த போலி சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பரமானந்த பாபா என்ற போலி பெயருடன் உலவிவந்த ராம் சங்கர் திவாரி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு சிறப்பு பரிகாரப் பூஜை செய்வதாக கூறி, இவர் பல பெண்களை பலாத்காரம் செய்து, சீரழித்ததாக முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், அந்த புகார்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் பரமானந்த பாபாவின் பித்தலாட்டம் வெளியுலகுக்கு வெட்டவெளிச்சம் ஆகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இதுதொடர்பான ஆதாரத்துடன் பொலிசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான். முன்பு நமது அப்பா, தாத்தா போன்றவர்கள் உடலுக்கு திறன் கொடுக்கும் வேலைகளை அதிகம் செய்து வந்தனர்.
ஆனால், இன்று நம்மில் 50% மேலானவர்கள் உட்கார்ந்த இடத்தில் கணினியின் முன்னே மணிக்கணக்கில் வேலை செய்து வருகிறோம். இதில் ஷிபிட் வேலைகள் வேறு, இவை ஒட்டுமொத்தமாக நமது உடல்நலத்திற்கு ஆப்பு வைக்கும் செயல்கள் ஆகும். எனவே, முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்
உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்களுக்கு முப்பது வயதை தாண்டும் போது எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம்.புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க பகுதியில் சுரக்கும் ஓர் சுரப்பி. முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
முப்பது வயதில் உடற்பயிற்சி செய்யவில்லை எனிலும் யோகாவில் ஈடுபடுவது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனநிலையில் சமநிலையின்மை ஏற்படலாம். யோகா உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும். ஆண்கள் முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
உங்கள் உடலில் ஏதுனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மருத்துவரை ஏமாற்றுகிறேன் என்று, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இது பின்னாளில் அபாயமாக கூட அமையலாம்.
உலக அளவில் 15 முதல் 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்துவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். விதைப்பை வலி, கடினமாக உணர்வது, மார்பு வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள் என கூறப்படுகிறது.
நமது உணவு மற்றும் வேலை முறை மாற்றத்தினால் உடல் வலிமை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்கள் தங்கள் உடல் வலிமை குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, உணவு தேர்வு, வேலையின் போது அவ்வப்போது சிறு ஓய்வு மற்றும் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடல் இலகுவாக இருக்க உதவும்.
பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற இளைஞரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.தெற்கு பிரான்சிலுள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.இவர் கடந்த புதன்கிழமை வெளியே சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.
அந்த பெண் லிப்டில் செல்லும் போது அவரிடம் குறித்த இளைஞர் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.இதனையடுத்து தனது முழு பலத்தையும் காட்டி அந்த இளைஞரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார் அந்த பெண்.ஆனால் இளைஞரின் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. பின்னர் இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என நினைத்த அப்பெண் சாமர்த்தியமாக அந்த நபரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்துள்ளார்.இதனால் உற்சாகமடைந்த இளைஞர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் முத்தம் கொடுத்துள்ளார்.
இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பலம் முழுவதையும் திரட்டி இளைஞரின் நாக்கை பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார்.வலியால் துடித்த இளைஞர் லிப்ட் நின்றதும் இரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்து, லிப்ட்டில் சோதனை செய்தபோது, அங்கு இளைஞரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில், பாதி நாக்குடன் தப்பிய நபரை அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது பொலிஸார் கைது செய்தனர்.இதையடுத்து அவர் மீது பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் மலையகத்தின் ஹட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்சியடைந்துள்ளதால் தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களுக்கு மரக்கறிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா, வெளிமடை, வெள்ளவாய, பண்டாரவளை பகுதிகளிலிருந்தே குறிப்பிட்ட அளவிலான மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடிக்கின்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சகல மரக்கறி வகைகளும் 160 ரூபாய்க்கு மேல் விலையேற்றம் பெற்றுள்ளதுடன் போஞ்சி ஒரு கிலோ 270 ரூபாய், கறிமிளகாய் ஒரு கிலோ 280 ரூபாய், கரட் 1 கிலோ 200 ரூபாய், தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள 70,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களில் எட்டு வலயங்களைச் சேர்ந்த மாணவர்களேஇவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு வலயத்தைச் சேர்ந்த 6882 பேர், ஜயவர்த்தனபுர வலயத்தைச்சேர்ந்த 10,994 பேர், ஹோமாகம கல்வி வலயத்தைச் சேர்ந்த 5281 பேர், களனி கல்விவலயத்தைச் சேர்ந்த 31,868 பேர் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் நீர் கொழும்பு கல்வி வலயத்தின் 4611 மாணவர்களும், ஹொரன கல்விவலயத்தின் 252 மாணவர்களும் வௌ்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டடுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், சீருடை, காலணிகள்மற்றும் புத்தகப் பை என்பன தேவையாகவுள்ளதோடு, இவற்றை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 10,000 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் தேவை என்பதோடு அவற்றை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையப் பாவனையால் மன நோளாளிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு உள தாக்கங்களால் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, தற்போதையை காலக்கட்டத்தில் இணையப் பாவனைகளால் புதுவித மன நோயாளிகள் உருவாகி வருவதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் வைத்தியரான ரமணி ரத்னவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே வைத்தியர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, ஆசிய நாடுகளில் 45 வீதமானோர் “இன்டநெட் எடிக்ஸன் சின்ட்ரோம்”என்ற மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரிய நாட்டிலே இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சிறுவர்களும் இணையப் பாவனைக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் ரமணி ரத்னவீர குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த மனநோயால் மூளை செயலிழப்பதாகவும், இறுதியில் இந்த நோயால் மரணங்கள் சம்பவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை கந்தளாயில் சட்டவிரோதமான முறையில் மின்மானியில் திருட்டு வேலைகளை மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் நேற்று (24) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பேராறு பிரதேசத்தில் பொலிஸாருடன் இணைந்து மின்சாரசபையின் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் பேராறு பகுதியைச் சேர்ந்த 51, மற்றும் 29 வயதுடை நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அம்பாறை – தெய்யத்தகண்டிய கஜூவத்த பகுதியில் பௌத்த மடத்தில் உள்ள பிக்கு ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, மடத்துக்கு அருகில் வந்த காட்டு யானையே பிக்குவை தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.இது குறித்து தெய்யத்த கண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் அதிகமான கவர்ச்சியாக நடித்துவருகிறார். ஆங்கில பத்திரிக்கைகளின் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கவர்ச்சியை மட்டும் நம்பி நடிகைகள் சினிமாவில் நீடிக்க முடியாது, திறமையுடன் கூடிய கவர்ச்சி மட்டுமே நிலைக்க முடியும்.நான் கவர்ச்சியாக இருப்பதால், எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான். எப்போதுமே நான் கவர்ச்சிக்கு ஒரு எல்லை வைத்திருக்கிறேன் என்றும் அதை தாண்டமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தன் கையில் இப்போது ஆறு படங்களை வைத்திருக்கிறார்.தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்த வருகிறார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் பஸ்ட் லுக் வரும் ஜுன் 9ம் தேதியும், படத்தின் பாடல்கள் ஜுன் மாத இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜுன் மாதமே படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானாலும், படத்தை இரண்டு மாதம் கழித்து செப்டம்பர் 9ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் செப்டம்பரில் தான் வெளியாகி ஹிட் அடித்ததாம். எனவே ரெமோ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
கபாலி டீசர் பல சாதனைகளை படைத்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் ரஜினி, விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலி டீசரை பார்த்த விஜய் ‘சார் சூப்பர் ஸ்டார வச்சு கலக்கிட்டீங்களே சார்’ என கலைப்புலி தாணுவிடம் கூறினாராம்.அதேபோல் ரஜினி ‘தெறி சூப்பர் தாணு, எப்போ வெற்றிவிழா’ என கேட்டாராம்.
டெல்லியின் தென்மேற்கில் Najafgarh பகுதியின் Kair கிராமத்தில், மருத்துவ விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.the AlchemistPharma Companyக்கு சொந்தமான ஏழு பேர் பயணிக்கும் வசதி கொண்ட King Air C90 விமானம் இன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.
பயணத்தின் போது விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் செயல் இழந்துள்ளது, இதை அறிந்த விமானி, டெல்லி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கு உதவுமாறு கோரியுள்ளார்.எனினும், விமானம் முழுமையாக செயல் இழந்ததை தொடர்ந்து Kair கிராமத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி தரையிறக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வண்டிகளும், அவசர சேவை அதிகாரிகளும் சம்பவயிடத்திற்கு விரைந்ததுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.விமானியின் சாதுரியமான திறமையால், குறித்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், விமானத்தில் பயணித்த இரண்டு பேர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு கடந்த நேற்று முன்தினம் (23.05.2016) அன்று கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் நிறுவனத்தில் நடைபெற்றது.
அல்லையூர் சிவா செல்லையா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . இன் நிகழ்வில் ஜெர்மனியில் இருந்து வருகைதந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் ஜெகநாதன், அமெரிக்காவில் இருந்து வருகைதந்த கோபி மோகன், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், பொருளாளர் த.நிகேதன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இவ் நிகழ்விற்கு வருகை தந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் ஜெகநாதன் அவர்களினால் வேறு ஒரு தினத்தில் விசேட உணவு வழங்குவதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
அமெரிக்காவின் முன்னணி இணையத்தள நிறுவனமான கூகுள் தலைமையகத்தில் வரி ஏய்ப்பு மோசடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்றைய தினம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மத்திய பரீஸில் இருந்த கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் நேற்றையதினம் சுமார் 100 வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர்.
பிரான்ஸ் அரசாங்கத்துக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் டொலர்கள் வரி செலுத்தப்படாதுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கூகுள் நிறுவனத்தின் கட்டமைப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆகியவற்றினால் விதிக்கப்படும் வரித்தொகையை செலுத்தாது விடுவதற்கு ஏதுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.