உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!!

Love

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக தற்போது உள்ளது.

உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.

பேசுவதற்கு மேலாக அவரை நன்கு கவனியுங்கள். மகிழச்சியானவரா, சந்தேகப் பேர்வழியா, சக ஜமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா என ஆராயுங்கள்.

அந்தக் குணாதியசியங்கள் உங்களது குணாதியசியங்களுடன் ஒத்துபோக கூடியதா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள். கலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.

அதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவராக இருப்பவராக இருக்க வேண்டும். மனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள்.

அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சுமுகமான உறவு இருக்கின்றதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் விஷயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும்.

உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு, உடை, நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும்.

அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.

புகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.

புதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும்.

ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள். தரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. எவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று பொறுமையாக இருங்கள். சற்றுக் கால அவகாசம் கேட்டு பின் முடிவிற்கு வருவதே நல்லது.

மருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை : விநாயகரின் மறுபிறவி என படையெடுக்கும் மக்கள்!!

Baby

உத்தரப்பிரதேசத்தில் தும்பிக்கை போன்ற உடலமைப்புடன் பிறந்த பெண் குழந்தையை, விநாயகரின் மறுபிறவி என்று எண்ணி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள கிராமத்த்தில் கடந்த வியாழக் கிழமையன்று பெண் ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண் குழந்தையின் இரு கண்களுக்கு இடையில் மூக்குக்கு மேலே தும்பிக்கை போன்றதொரு பாகமும் இணைந்துள்ளதால், இந்த பெண் குழந்தை விநாயகரின் மறுபிறவி என்று அக்கம் பக்கத்தில் செய்தி பரவியுள்ளது.

இதையடுத்து அந்த குழந்தையை பார்க்க செல்லும் பொது மக்கள் காணிக்கையும் செலுத்துகின்றனர்.

மேலும், மருத்துவர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், இது ஒரு உபரி சதை வளர்ச்சி என்றும் பெற்றோர் விரும்பினால் குழந்தை வளர்ந்த பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றிவிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் இலவச WIFI சேவை!!

WIFI

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட இலவச வைபை (WIFI) வசதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இன்று நடைபெறவுள்ளன.

இதன்படி இன்று முதல் 26 பொது இடங்களில் வைபை (WIFI) இணையத் தொடர்பு வசதிகளை பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 250ஆக அதிகரிக்க யோசனை!!

Parliment

பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலிருந்து 250 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டுமெ­ன்ற பரிந்துரையுடன் தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய புதிய தேர்தல் முறைக்கான யோசனையை இன்று அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளிடம் முன்வைக்கவுள்ளார்.

இப்­பு­திய தேர்தல் முறையின்படி 140 உறுப்பினர்கள் தொகுதி வாரி­யா­கவும் 80 உறுப்பினர்கள் மாவட்ட விகி­தா­சார முறையிலும் 30 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதன் அடிப் படையிலேயே தேர்தல்கள் ஆணை­யாளர் கட்சித் தலை­வர்­க­ளிடம் முன்வைக்­க­வுள்ள புதிய தேர்தல் முறை யோசனை அமைந்துள்ளது.

இதேவேளை, பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலை­மையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தப் புதிய தேர்தல் முறை ஆராயப்­ப­ட­வுள்­ளது. தேர்தல் ஆணையாளர் முன்­வைத்­துள்ள இந்­தப்­பு­திய தேர்தல் முறை­யின்­படி 140 தேர்தல் தொகு­தி­களின் எல்லை நிர்ணய செயற்பாடுகள் கட்­சித்­த­லை­வர்­களின் அங்­கீ­காரம் கிடைத்­ததன் பின்பே நடைபெற­வுள்­ள­தாக தேர்தல் திணைக்­களம் தெரி­விக்­கி­றது.

இன்று இந்த புதிய தேர்தல் முறை பற்றி ஆரா­ய­வுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் மீண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி ஒன்று கூடி இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்­பு­திய தேர்தல் முறைமை பற்றி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முண்­ண­னியின் பாரா­ளு­மன்ற குழுவும் இன்று கூடி ஆரா­ய­வுள்­ளது. ஐ.ம.சு. முன்­னணி இது பற்றி ஆராய்ந்த பின்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியின் பாரா­ளு­மன்றக் குழுவின் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்ற பின்பே இறு­தித்­தீர்­மா­னத்தை எடுக்கவுள்ளது.

18 வருடங்களுக்கு பின்னர் தாயுடன் இணைந்த இலங்கை யுவதி!!

பொப்பி என்ற 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டார்.

இதன் பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்த நிலையில் தமது பெற்றோர் இலங்கையில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் அவர்களை தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தமது பெற்றோரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் விஜயம் செய்த பொப்பிக்கு தமது பெற்றோர் இருப்பது போர் இடம்பெறாத பெருந்தோட்டப் பகுதி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த தோட்டத்துக்கு சென்ற அவர் ஆங்கிலத்தில் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, அருகில் இருந்து சிறிய பெண் ஒருவர் தம்மை கட்டித்தழுவியதாக பொப்பி தெரிவித்துள்ளார்.

தாம் நம்பவில்லை என்றபோதும் அதுவே தம்மை பெற்றதாய் என்பதை கண்டு பொப்பி ஆனந்தமடைந்தார். இந்த நிலையில் தமது சகோதரிகளில் ஒருவர் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் அதேநேரம் மற்றும் ஒருவர் ஆசிரியையாக பணியாற்று வருவதாக பொப்பி அறிந்துள்ளார்.

இது குறித்து பொப்பியின் தாய் குறிப்பிடுகையில், ஏற்கனவே இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான தமது கணவர், குடிப்பழக்கம் காரணமாக இறந்துவிட்டார். அவர் இறக்கும் போது தாம் பொப்பியை வயிற்றில் சுமந்திருந்ததாக காலிங்கா என்ற அந்த தாய், குறித்த குழந்தையை வளர்க்க முடியாமையால் தமது தோட்டத்துக்கு உல்லாச பயணிகளாக வந்த பிரித்தானிய தம்பதியினருக்கு தத்து கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த குழந்தையான பொப்பி மீண்டும் வந்து தம்மை சந்திப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும் காலிங்கா குறிப்பிட்டுள்ளார்.GIrl23

க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறு வௌியானது!!

OL

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இணையத்தில் வௌியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிடலாம்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  28-03 -2015 சனிக்கிழமை பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது.

பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாக சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.

இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.இக் கதையை சித்தரிக்கும் முகமாக மேற்படி திருவிழா கொண்டாடபடுகிறது சிவன் கோவில்களில்  தொடர்ந்து  வசந்த மண்டப பூஜையின் பின் சிவபெருமான் பிச்சண்டியாகவும்  விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானும் சண்டேஸ்வர பெருமானும்  உள்ளவீதி வெளி வீதி  வந்தனர்.

மீண்டும் மாலையில்ஆறுமணிக்கு வசந்த மண்டபபூஜையை  தொடர்ந்து அழகிய  மலர் தண்டிகையில் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயிலிலும்  விநாயகர்  மூசிக வாகனத்திலும் பவனி வந்தனர்.

20150328_111659 20150328_111732 20150328_112051 20150328_113956 20150328_114052 20150328_115030 20150328_115207 20150328_120609 20150328_120726 20150328_185207 20150328_190707 20150328_191251 20150328_192129 20150328_193907 20150328_194158 20150328_194309 20150328_194317 20150328_194648 20150328_195856 20150328_200909 20150328_201513 20150328_201913

வகுப்­புக்கு மகனை அனுப்ப தாய் எடுத்த யுக்தி உயிரை பறித்­த பரி­தா­பம்!!

Fire

ரியூசன் வகுப்­புக்கு செல்ல மறுத்த மகனை மிரட்டும் வகை யில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தான் தீக்­கு­ளிக்க போவ­தாக எச்­ச­ரித்த தாயொ­ருவர் தற்­செ­ய­லாக சமை­ய­ல­றைக்கு சென்ற வேளை அவர் மீது தீப்­பற்றிக் கொண்­டதில் அவர் தீ யில் கருகி பரிதா­ப­க­ர­மாக பலி­யானார்.

இந்தப் பரி­தாப சம்­பவம் யாழ்.சுன்­னாகம் சூராவத்­தையில் இடம்­பெற்­றுள்­ளது. அண்மையில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் மரண­மா­னவர் ந.சிவ­சோதி என்ற தாயாவார். இவ­ரது மரண விசா­ர­ணையை யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை திடீர் மரண விசா­ரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

50 ஆயிரத்துக்கு சிறுமியை விற்பனை செய்த சித்தப்பா கைது!!

Arrest

சிறுமி ஒருவரை பணத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

எட்டு வயதுடைய சிறுமி ஒருவரையே அவரது சிறிய தந்தை உறவு முறையுள்ள ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான கனடா விமானம்!!(படங்கள்)

கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள்.

ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் நோவா ஸ்கொட்டியாவின் ஹெலிபெக்ஸ் விமான நிலையத்தில் ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 தரையிறங்க முயன்றபோது அங்கு நிலவிய சீரற்ற வானிலையால் உடனே தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரம் பறந்து கொண்டிருந்தது.
பின்னர் தரையிறங்கியபோது விமானியால் ஓடுபாதையை தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 137 பேர் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

ஆனால் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டதால் மொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 2 3

60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி – நாளை முதல் அறிமுகம்!!

WIFI
இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நாளை முதல் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இலவச Wi-Fi சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று(29.03) நடந்த விபத்தில் கார் ஒன்று சேதமடைந்தது.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனமும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் கார் பலத்த சேதமடைந்ததுடன் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

-பாஸ்கரன் கதீசன்-

10 11 13 14 15

5வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : தகர்ந்தது நியூஸிலாந்தின் உலகக் கிண்ண கனவு!! (படங்கள்)

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது.

ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது.

உலகின் மிகப்பெரிய ஆடுகளமான மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறற இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் அரையிறுதி வரை தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்த நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் பெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதல் ஓவரிலேயே ஸ்டார்க் வீசிய பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் பிரண்டென் மக்கலம். தொடர்ந்து 11.2வது ஓவரில் மெக்ஸ்வெல் வீசிய பந்தில் போல்ட் ஆகி அதிரடி வீரர் குப்திலும் வெளியேறினார்.

அடுத்து, வில்லியம்சன் ஜோன்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய டெய்லர் மற்றும் எலியட் இருவரின் ஆட்டத்தால் நியூஸி. 100 ஓட்டங்களை கடந்தது. இந்நிலையில், ஜேம்ஸ் போல்கனர் வீசிய பந்தை அடித்தபோது ஹேடினிடம் பிடி கொடுத்து 40 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார் டெய்லர்.

அடுத்து களமிறங்கிய அண்டர்சன் அதே ஓவரில் போல்ட் ஆனார். பின்வந்த, ரோஞ்ச் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. பின் களத்தில் இருந்த எலியட்டுடன் வெட்டோரி கைகோர்த்தார்.

39 ஓவர்களில் 159 ஓட்டங்களை நியூஸிலாந்து எடுத்திருந்தது. பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெட்டோரியும் வெறும் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதையடுத்து, நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எலியட் 83 ஓட்டங்களுடன் ஹெடினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை எடுத்தது.

184 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது அவுஸ்திரேலியா. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் போல்ட் வீசிய பந்தில் ஆரோன் ஃபிஞ்ச் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே அதிர்ச்சி தோல்வி கண்டார்.

7 பவுண்டரிகளுடன் டேவிட் வோர்னர் 45 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் 2-வது விக்கெட்டாக எலியட் வீசிய பந்தை அடித்து ஹென்றியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு, ஸ்மித் மற்றும் கிளார்க் ஆகியோரின் ஆட்டத்தால் அவுஸ்திரேலியா 100 ஓட்டங்களை கடந்தது.

கிளார்க் 1 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஹென்றி வீசிய பந்தில் போல்ட் ஆனார். ஸ்மித் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வொட்சன் 2 ஓட்டங்களை எடுத்தார்.

33.1 ஓவர்களின் முடிவில் 186 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

2 3 4 1

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு!(படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை  விஜயம் மேற்கொண்ட  கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது.  தொடர்ந்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது .

மேற்படி  நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் அவர்களுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக எஸ்.விநோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், ஹீனைஸ் பாறுக், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜெயதிலக, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13171_853925254669481_7877359079163679707_n 1530477_853927071335966_6463295043342432938_n 10422045_853925558002784_4173265285315479057_n 10425099_853927228002617_3464163766275031511_n 10998004_853926051336068_6330000093609192236_n 11048644_853925541336119_7432070931359055379_n 11052008_853927501335923_3015458227738680768_n 11078037_853926774669329_6740133823077240669_n 11080968_853925564669450_4658583754291256390_n 11081093_853926854669321_6049820285111006359_n 11081296_853926638002676_6921716169249158840_n 11081462_853926331336040_4854803099849154992_n 11083878_853927221335951_1899752607581710007_n 11094684_853925198002820_198977857931555889_n 11102733_853925894669417_3624905217302916466_n 11102796_853926474669359_3770203532674855030_n

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் எட்டாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!!

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம்  நாளான நேற்று  27-03 -2015 வெள்ளிக் கிழமை காலை முதல்மகோற்சவ   குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம்  குருக்கள் தலைமையில்  காலையில் சங்காபிசேகம் நடைபெற்று  பின்னர் தைலாப்பிய உற்சவத்துக்குரிய அபிசேகங்கள் நடை பெற்று மதியம் நேற்று பொழிந்த கடும் மழை காரணமாக உற்சவ மூர்த்திகளை அகிலாண்டேஸ்வர பெருமானின் பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வந்தனர் ..

மீண்டும்  மாலை உற்சவத்துகுரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

மேலும் அகிலாண்டேஸ்வரத்தில் உற்சவகாலங்களில் மகேஸ்வர பூஜை என்று சொல்லபடுகின்ற  அன்ன தான நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதுண்டு. அகிலாண்டேஸ்வரதுக்கு வருகின்ற பக்தர்கள் மனநிறைவோடு இறைவனை வழிபட்டு பின்னர் அவர்கள் வயிறார உண்பதற்கு  அன்னதானமும் வழங்கப்படுவது சிறப்பாகும்.

20150327_110912 20150327_111228 20150327_125410 20150327_125254 20150327_123838 20150327_112131 20150327_111312

20150327_203125 20150327_201818 20150327_201516 20150327_195413 20150327_195406 20150327_192455 20150327_191808 20150327_191605 20150327_131859 20150327_131717

 

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவம் ஆரம்பம்!(படங்கள்)

 வவுனியா குட்செட் வீதியில் புகையிரதநிலையத்துகருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரியும்   ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழக்கிழமை  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.

மேற்படி மகோற்சவ கொடியினை ஆலய பிரதம குருவும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் தலைவருமாகிய சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் ஏற்றிவைத்தார் . மேற்படி விஞ்ஞாபனத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 03.04.2015 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில் இடம்பெறும் .

10351260_1594642364086214_7986915433996809851_n 10868024_1594495524100898_2072126833662936336_n

10407408_1594495574100893_3808111535703930863_n 11015807_794881150593137_6509189583604852114_n 11037698_1594635844086866_650237382816108521_n 11069491_794881080593144_3560960184790868160_n 11075157_1594498844100566_4518409953586433652_n 11084271_1594495800767537_5319520416905909466_n