வவுனியாவில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு!!

வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று(30.03) வவுனியா உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ், செட்டிகுளம், வவுனியா வடக்கு பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஜயதிலக உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

1 2

வவுனியா இலங்கை  மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தினரின் வாடிக்கையாளர் சேவை  தொடர்பாக பொதுமக்கள் விசனம்!!

ceylon-electricity-board

வவுனியாவில்  இலங்கை மின்சார சபையினரின் சேவைகள் தொடர்பாக இன்னமும் பொதுமக்கள் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார பாவனையாளர் சேவைநிலையம் மற்றும் பிரதம பொறியியலாளர் பணிமனை என்பவற்றுகிடையில் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் பாவணையாளர் சேவை நிலையத்தில் உள்ள காவலாளி தன்னுடைய கடமைக்கு மேலதிகமாக பாவணையாளர் சேவையினையும் வழங்கி சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள்  அவரே விசாரித்து  அவர்களை வாயிலிலேயே வைத்து திருப்பி அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாவணையாளர் குறைகள் நிவர்த்தி செய்வதற்கென  அலுவலகத்தினுள் அதிகாரிகள் இருந்தும் திங்கட்கிழமை  மற்றும் புதன்கிழமை என்பவற்றை பொதுமக்கள் சந்திப்புக்கென ஒதுக்கி அதனையும் மதியம் ஒரு (1.00PM) மணிவரை மட்டுப்படுத்தி அதன்பின்பு வருகின்ற  வாடிக்கையாளர்களுக்கு காவலாளியே பதில் கூறி அனுப்புகின்ற நடைமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

திங்கள் மற்றும் புதன்கிழமை என்பவற்றை அலுவலக நாட்களாக வைத்திருத்தல் என்பது வழமையான நடைமுறையாக இருக்கின்ற பொழுதும் அதனை பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிவரையாவது தொடர்ந்தால் பாடசாலையில் கடமைபுரிகின்றவர்கள்  தங்களுடைய தேவைகளை இரண்டுமணிக்குப் பின்னர்தான் மேற்கொள்ளவேண்டிய  சூழ்நிலை உள்ளமையால்  பாவணையாளர் சேவை நிலைய அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவது விரும்பத்தக்கது .

அத்துடன் மின்சார பாவணையாளர் சேவை நிலையத்திற்கு வருகின்ற பொதுமக்கள் யாவரும் நகரில் இருந்து வருபவர்கள் அல்ல என்பதை அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த முறைப்பாட்டினை  எழுதுகின்ற  வாடிக்கையாளரான நான்  சுமார் ஒருவருடமாக   அலைக்கழிக்கபடுவதும்  அதன் போது நான் அவதானித்த விடயங்களையுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

படித்த மற்றும் பாமரமக்கள்  அலுவலகத்துக்கு வருகின்றபோது அவர்களுக்குரிய பிரச்சனைகளுக்கு உரிய பதிலை அல்லது அறிவுறுத்தல்களை தெளிவாக பாவணையாளர் சேவை நிலையத்தில் இருக்கின்ற   அதிகாரிகள்  வழங்கவேண்டும். மிகவும் தூர இடங்களிலிருந்து வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு தெளிவான அறிவுறுத்தலை வழங்கவேண்டியது வாடிக்கையாளர் சேவை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களது கடமையாகும்.

பொதுமக்கள் ஒரு மின்இணைப்பைப் பெறுவதற்கு எந்தனை தடவைதான்  அலுவலகத்திற்கு அலைக்கழிக்கபடுகின்றனர். அதுவும் சிலசமயங்களில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில்  கடமையாற்றும் ஒரு சில  ஊழியர்களின் சில்லறைத்தனமான பதில்களால் பாவணையாளர்கள் விசனமடைந்துள்ளனர். அதாவது முறைப்பாட்டை  பதிந்து ஒரு பற்றுசீட்டு வழங்கிவிட்டு   வருவார்கள், பார்ப்பார்கள் என பதிலளித்துவிட்டு அடுத்த வாடிக்கையாளர் பிரச்சினையை பார்க்க தலைப்படுகின்றனர்.

மீண்டும் அதே பற்றுசீட்டுடன்   குறித்த வாடிக்கையாளர்  வருகின்றபோது   தாமதத்திற்கு அல்லது இடையூரிற்கு  மன்னிப்பு கோருவதைவிடுத்து  மீண்டும் பழைய பல்லவியாக முதல்வாரம் கொடுத்த பதிலையே திரும்பக் கொடுப்பதும் அல்லது  எங்களுக்கு நீங்கள் மட்டும்தான் வாடிக்கையாளர் அல்ல ஏராளமான பாவணையாளர்களது  பிரச்சனைகள் உள்ளது. நீங்கள் முறைப்பாடு செய்துள்ளீர்கள் எங்களுடைய சேவைபிரிவினர்  வருவார்கள் என்பதும் அல்லது பிரதம பொறியியலாளர் பணிமனைக்கு செல்லுங்கள் எனச்  சொல்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

CEB_CI

(மேலும் எமக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்று)  எனது பிரச்சினை தொடர்பாகவும் சிலவற்றை இங்கு தெளிவு படுத்தவிரும்புகிறேன். எனது வீட்டு மின்மானி தொடர்பாக கடந்த வருடம் முறைப்பாடு செய்து அவர்கள் பரிசோதனை மின்மானி (Test Meter ) பொருத்தி அதனை மீண்டும் கழற்றிப் போனார்களே தவிர அது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மீண்டும் நான்  எமது மின்மானி தொடர்பாக முறைப்பாடு செய்யச் சென்றபோது அவர்கள் என்னை பிரதம பொறியியலாளர் பணிமனைக்கு அனுப்பி  பரிசோதனை மின்மானி சம்பந்தமான அறிக்கையை வாங்கி வரும்படி அனுப்பினர். ஆனால்  சேவைப்பிரிவினரால்  அந்த அறிக்கை வழங்கங்கபட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்  பிரதம பொறியிலாளர் அலுவலகத்தினால்  மீண்டும் ஒருவாரத்தின் பின் புதிய மின்மாணியை மாற்றுவதற்கான  கட்டளை வழங்கப்பட்டும்(REF:CM132)  இன்னமும் புதிய மின்மானி பொருத்தப்படபடவில்லை. அதற்கும் பாவனையாளர் சேவை நிலையம் உரிய கருவிகள் இல்லை அது வந்தவுடன் பொருத்துகிறோம் என காலம் கடத்தி வருகின்றனர். என்பதை மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்..

இனி வரும்காலங்களிலாவது மின்சார பாவனையாளர் சேவைநிலையம்   மற்றும் அதன் வாடிக்கையாளர் சேவை நிலைய உத்தியோகத்தர்களது தரமான சேவையை எதிர்பார்க்கின்றோம். எதையும் உயரதிகாரிகள் மட்டத்தில் எடுத்து சென்று அவர்களின் சிபாரிசின்மூலம் செய்வது எளிதான விடயமாக இருந்தாலும் கீழ்மட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்களை நாடிச்சென்று ஒரு சேவையினை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதென்பது கல்லில் நார் உரிக்கும் செயலுக்கு ஒப்பானதாகவே காணப்படுகிறது. இது மின்சார சபையில் மட்டுமல்ல அனைத்து அரச அலுவககங்களிலும் உள்ள ஒரு பொதுவான நிலைப்பாடாகவே உள்ளது.

அத்துடன் பாவணையாளர் சேவை அலுவலக அதிகாரிகள் பொதுமக்களை நேரடியாக சந்திக்கக் கூடியவகையில் பாவணையாளர் சேவை மாற்றியமைக்கப்படவேண்டும். காவலாளி அலுவலக  உத்தியோகத்தர்கள் சார்பில் பதிலளிப்பது மற்றும் வாசலுடன் திருப்பியனுப்புவது போன்றவிடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை   மேற்கொள்ளவேண்டும் என்பதும் எமது விருப்பமாகும்..

மேலும் பாவணையாளருக்கு இலகுவாக விளங்கக் கூடிய வகையில் அறிவுறுத்தல்கள்,  அலுவலக கடமைநேரங்கள், பாவனையாளர் சந்திப்பு நேரங்கள் மற்றும் கட்டண விபரங்கள் சேவைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளை காட்சிபடுத்தல்  சாலப்பொருத்தமானதாகும்.

(இக்கட்டுரை தனிப்பட்ட பிரச்சனையின் பேரிலோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ எழுதபட்டது அல்ல. மாறாக இது பாவனையாளர்சேவை  முறைபாடுகள் தொடர்பாகவே எமக்கு கிடைத்தவற்றை கொண்டு இச்செய்தி பிரசுரமாகிறது)

இலங்கைச் சிறுமியைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் பாண்டிச்சேரியில் கைது!!

AAA

இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட இரண்டு பேர் கோட்டகுப்பம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 வயதான சிறுமியை அனிச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஆர். பாலா, 22 வயதான கே. பிரபு ஆகியோர் கசூரினா கிரேவ் என்ற .இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கோட்டகுப்பம் பொஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த பாலா என்பவர் தற்போது அனிச்சிகுப்பம் பிரதேசத்தில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி!!

Suicide

இன்று வெளியான 2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லையென முஸ்லிம் மாணவியொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மதுரங்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியே வீட்டில் இருந்த மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் அறிந்து உடனே மாணவியை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.

யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரியில் 28 பேர் 9A , இந்துக் கல்லூரியில் 18 பேர் 9A பெற்று சாதனை!!

JHC

தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் யாழ்.வேம்படி வேம்படியில் 246 மாணவர்கள் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.

இதில் 28 மாணவர்கள் 9ஏ சித்தியையும் குறிப்பாக 11 மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் 9ஏ சித்தியையும், 17 மாணவர்கள் தமிழ் மொழிமூலம் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.

மேலும் யாழ்.இந்துக்கல்லூரியை பொறுத்த வரையில் க.பொ.த சாஃத பரீட்சையில் தோற்றிய 263 பேரும் முழுமையாக சித்தியெய்தியுள்ளனர்.

மேலும் இதில் 18 மாணவர்கள் 9ஏ சித்தியையும் குறிப்பாக 8 மாணவர்கள் தமிழ்மொழியிலும்,10 மாணவர்கள் ஆங்கிலமொழியிலும் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை யாழ்.இந்துக் கல்லூரி யாழ்.மாவட்டத்தில் ஆண்கள் பாடசாலையில் முன்னிலை வகிக்கும் அதேவேளை பெண்கள் பாடசாலையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சா/த பரீட்சையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம்!!

OL

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரியைச் சேர்ந்த சந்தினி நவரஞ்சன அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

விசாக்கா கல்லூரியைச் சேர்ந்த அமாலி நிவரத்தன மற்றும் கண்டி மஹாமாயா கல்லூரியைச் சேர்ந்த எச்.அபேசிங்க, ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலய மாணவி நுவனி நெத்சரனி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

விபரம் வருமாறு
01.தரிந்து நிர்மல் – கொழும்பு நாலந்தா கல்லூரி
02.சந்தினி நவரஞ்சன – கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரி
03.எச்.அபேசிங்க – கண்டி மஹாமாயா கல்லூரி
03. அமாலி நிவரத்தன – விசாக்கா கல்லூரி
03.நுவனி நெத்சரனி – ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலம்
04.தேவினி ருவன்கா ஹேமசிங்க – விசாகா மகளிர் மகா வித்தியாலயம்
05.திவ்யாஞ்சலி உத்தரா ராஜபக்ஷ – தேவி பாலிகா மகா வித்தியாலயம்
06.ரன்சிக லசன் குணசேகர – தேர்ஷ்டன் கல்லூரி
06.திலினி சந்துனிகா பரிஹக்கார – சுஜதா கல்லூரி – மாத்தறை
06.அஞ்சன ரெவிரங்க அபயதீப மதரசிங்க – மொரவக்க கீர்த்தி அபேவிக்ரம மத்திய மகா வித்தியாலயம்.

பல சாதனைகளுடன் விடைபெற்ற உலகக் கிண்ணம் : சாதனை விபரம்!!

WC

எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு..

முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை எடுக்கப்பட்டுள்ளது.

சிம்பாவேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் வீரர் கெய்ஸ் 215 ஓட்டங்களைக் குவித்தார். இதில் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் எடுத்து சாதனை புரிந்தார்.

அதைத்தொடர்ந்து நியூசிலாந்து வீரர் குப்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 237 ஓட்டங்களைக் குவித்தார்.

இதுவே உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனையாக உள்ளது. 1996ம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரிஸ்டன் 188 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

இதன்படி 19 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது.

இலங்கை வீரர் சங்கக்கார தொடர்ந்து 4 சதங்கள் அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவர் பங்களாதேஷூக்கு எதிராக 105 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ஓட்டங்களையும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ஓட்டங்களையும் தொடர்ந்தும் எடுத்து முத்திரை பதித்தார்.

வேறு எந்த ஒரு வீரரும் தொடர்ந்து 4 சதம் அடித்தது கிடையாது.

மேலும் சங்கக்கார விக்கெட் காப்பிலும் புதிய சாதனை படைத்தார். பிடி மற்றும் ஸ்டம்பிங் மூலம் 54 பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார். இதன் மூலம் கில்கிறிஸ்ட் சாதனையை (52) அவர் முறியடித்தார்.

எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு 38 சதங்கள் அடிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் சதம் அடிக்கவில்லை.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ஓட்டங்களை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே குறைந்த பந்துகளில் அரைசதம், சதம் அடித்த சாதனை வீரராக அவர் திகழ்ந்தார்.

கிறிஸ்கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி சிம்பாவேக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு 373 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் எந்த ஒரு ஜோடியும் எவ்வளவு அதிகமான ஓட்டங்களை எடுத்தது இல்லை.

இதேபோல தென்னாபிரிக்காவின் மில்லர்– டுமினி ஜோடி 5வது விக்கெட்டுக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சைமான் அன்வர்- ஜாவித் ஜோடி 7வது விக்கெட்டுக்கு உலகக் கிண்ணத்தில் சாதனை படைத்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 417 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது. இதன்படி இந்தியாவின் உலகக் கிண்ண சாதனை (413) முறியடிக்கப்பட்டது.

இந்த உலகக் கிண்ணத்தில் மூன்றுமுறை 400 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி அயர்லாந்துக்கு எதிராக 411 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டங்களையும் குவித்தது.

350 ஓட்டங்களில் இருந்து 400 ஓட்டங்களுக்கு மேல் 7 முறை எடுக்கப்பட்டது சாதனையாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா 275 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதன் முலம் இந்தியாவின் உலகக் கிண்ண சாதனை (257 ஓட்டங்களில் பெர்மூடாவை வீழ்த்தி இருந்தது) முறியடிக்கப்பட்டது.

இதேபோல இந்த உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவும் 257 ஓட்டங்களில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இருந்தது.

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 688 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. இது சாதனையாகும்.

கடந்த உலகக் கிண்ணத்தில் இந்தியா – இலங்கை மோதிய ஆட்டத்தில் மொத்தம் 676 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

துடுப்பெடுத்தாட்ட ஸ்ட்ரைக் ரேட் இந்த உலகக் கிண்ணத்தில் தான் அதிகமாக இருந்தது.

28 முறை 4 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றப்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஸ்டீவ்பின், தென்னாபிரிக்க சுழற்பந்து வீரர் டுமினி ஆகியோர் ஹட்ரிக் சாதனை புரிந்தனர்.

இந்த உலகக் கிண்ணத்தில் இந்திய அணி தொடர்ந்து 7 முறை எதிர் அணியை ‘ALL OUT ’ செய்து சாதனை படைத்தது.

70 விக்கெட்டுகளில் உமேஷ் யாதவ் அதிகமாக 18 விக்கெட் கைப்பற்றினார். அவருக்கு அடுத்தப்படியாக முகமது ஷமிக்கு 17 விக்கெட்டுக்கள் கிடைத்தன.

இரசிகர்களின் ஆதரவு இந்த உலகக் கிண்ணத்தில் அமோகமாக இருந்தது. மைதானத்தில் சென்று பார்த்த இரசிகர்களின் எண்ணிக்கையும், தொலைக்காட்சியில் நேரில் பார்த்தவர்களில் எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்த உலகக் கிண்ணத்தில் பெரும்பாலான ஆட்டங்களில் மிகுந்த பரபரப்பு, விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது. ஒரு பக்க ஆட்டமாகவே அமைந்தது.

நேற்றைய இறுதிப் போட்டி, இந்தியா – அவுஸ்திரேலிய அரை இறுதி, 4 கால் இறுதி மற்றும் பெரும்பாலான ஆட்டங்களில் சுவாரசியம் இல்லாமல் ஒரு பகுதி ஆட்டமாகவே இருந்தது.

தென்னாபிரிக்கா – நியூசிலாந்து மோதிய அரை இறுதி, அவுஸ்திரேலியா – நியூசிலாந்து மோதிய லீக் ஆட்டம், ஆப்கானிஸ்தான்– ஸ்காட்லாந்து, சிம்பாவே – ஐக்கிய அரபு இராஜ்ஜிய ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி யானை பலி!!(படங்கள்)

வவுனியா வடக்கு -கனகராயன்குளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தபால் புகையிரதத்துடனே குறித்த யானை மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியானது, யானைகள் குறுக்கிட்டு செல்லும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டடுள்ளது. குறித்த பகுதியில் யானை செல்கையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இறந்த யானை 35 தொடக்கம் 40 வயதுடையது என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுவதுடன், குறித்த பகுதி யானைகள் குறுக்கிடும் பகுதி என அடையாளமிடப்பட்டுள்ள போதிலும், புகையிரத சாரதிகள் அவதானமின்றி செலுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த யானை மீது வேகமாக வந்த புகையிரதமே மோதியதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் குறித்த விபத்தினால் பொக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4

கமராவை துப்பாக்கி என எண்ணி சரணடையும் சிறுமி : சிரியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

Baby

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

உள்நாட்டுப் போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார்.

2011ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பின்னாட்களில் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளையும் கடந்து நடைபெற்று வரும் இப்போரில் இதுவரை 2 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 40 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகவும் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

சிரியாவின் பள்ளிகள், வைத்தியசாலைகள் கூட இருதரப்பு தாக்குதலில் இருந்து தப்பிக்கவில்லை. இங்குள்ள குழந்தைகள் கதை புத்தகங்களையோ, கார்ட்டூன் படங்களையோ அறிந்ததில்லை.

மாறாக, உடல்களில் இருந்து சதை பிய்ந்து தொங்க, இரத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் முதியோர் மற்றும் குழந்தைகளின் மரண வேதனையைதான் கண்டு வருகின்றனர்.

இவர்கள் வசந்தகால பூப்புகளையோ, புல்லினம் பாடும் பூபாள ராகத்தையோ, வானவில்லையோ கண்டும் கேட்டும் இரசித்ததில்லை. சீறிப்பாயும் ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட் வெளியிடும் கந்தக புகை, பீரங்கிகளின் காதை துளைக்கும் குண்டின் முழக்கம், வீடுகள் தீக்கிரையாகி கொளுந்து விட்டு எரியும் தீயின் கோர நாக்கு ஆகியவற்றை தினந்தோறும் கண்டு, பீதியில் உறைந்துப் போய் கிடக்கின்றனர்.

சமீபத்தில், இங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்பது தொடர்பாக செய்தி சேகரிக்க காசாவை சேர்ந்த புகைப்பட நிருபரான நாடியா அபு ஷபான் என்பவர் சிரியாவில் உள்ள ஒரு நகரத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு குண்டு வீச்சில் சிதிலம் அடைந்த ஒரு பகுதிக்கு சென்ற அவர், ஒரு தெருவில் தனியாக சோகத்துடன் நின்றிருந்த சுமார் 4 வயது சிறுமியை தனது கமராவால் படம் பிடிக்க நினைத்தார்.

அதற்கான கோணத்தை தயார் செய்து, சிறுமியை கமரா லென்சால் குறிபார்த்தார். துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்டவர்கள் எதிரியிடம் சரணடையும் பாணியில் கைகள் இரண்டையும் தனது தலைக்கு மேலே உயர்த்திய அந்த சிறுமி திகிலில் அழும் நிலைக்கு சென்று விட்டாள்.

நெஞ்சை பிழியும் இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நாடியா அபு ஷபான், சிரியாவில் குழந்தைகளின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்பதை விளக்க இந்த புகைப்படம் ஒரு சோற்றுப் பதம் என அவர் விளக்கக் குறிப்பும் பதிவு செய்துள்ளார்.

அவரது இந்த பதிவினை உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் ‘டுவீட்’ செய்து வருகின்றனர்.

யேமன் மோதலால் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!!

Yeman

யேமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களால் அங்கு பணிபுரிந்த 120 இலங்கையர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்கவென வெளிவிவகார அமைச்சு அண்மைய நாட்களில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

யேமனின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இலங்கையர்களை கடல் வழியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்கக்காரவுக்கு இடம் : இந்திய அணி வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை!!

ICC

2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மக்கலம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 44 நாட்களாக இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை மூலைக்கல்லாக நின்று வழிநடத்திய மக்கலம் 4 அரைச்சதங்களை பெற்றதுடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஐ.சி.சி. யின் கனவு அணியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஐவரும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மூவரும் தென்னாபிரிக்க வீரர்கள் இருவரும் இலங்கை வீரர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 433 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணியின் பிரண்டன் டெய்லர் 12 ஆவது வீரராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ண அணி வீரர்களின் பெயர்கள் வருமாறு,

பிரண்டன் மக்கலம் ( நியூசிலாந்து, அணித் தலைவர்)

மார்டின் குப்தில் (நியூசிலாந்து)

குமார் சங்கக்கார ( இலங்கை, விக்கெட் காப்பாளர்)

ஸ்டீபன் ஸ்மித் ( அவுஸ்திரேலியா )

ஏ பி டி வில்லியர்ஸ் ( தென்னாபிரிக்கா)

கிளன் மெக்ஸ்வெல் ( அவுஸ்திரேலியா)

கோரி அண்டர்சன் (நியூசிலாந்து)

டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)

மிச்செல் ஸ்ரார்க் ( அவுஸ்திரேலியா)

டிரென்ட் போல்ட் ( நியூசிலாந்து)

மோர்னே மோர்கல் ( தென்னாபிரிக்கா)

12 ஆவது வீரர் பிரண்டன் டெய்லர் ( சிம்பாப்வே )

அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் : அணிகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு!!

WC

2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச சிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகள் 2019ம் ஆண்டு மே 30ம் திகதி முதல் யூலை 15ம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும். 8 அணிகள் நேரடியாகவும், 2 அணிகள் தகுதி சுற்று மூலமாகவும் தெரிவாகும்.

போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் அணிகளின் எண்ணிக்கையை 14ல் இருந்து 10 ஆக குறைக்க எடுத்த முடிவு சரியானதே என்று சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சச்சின்!!

Sachin

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியத்தில் , உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது.

சிட்னி நகருக்கு சுற்றுலா சென்றவர்களில் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தற்போது சச்சினின் மெழுகு சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சிலைக்கு உலகக்கிண்ண டி20 போட்டியின் போது இந்திய விளையாட்டு வீரர்கள் அணிந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு முன்னர் சச்சின் எப்போதும் டி20 விளையாடியதே இல்லை.

இந்த விபரம் தெரிய வந்ததால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாங்கொக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அநாவசியமான சொற்களை தவிர்க்கும் புதிய மென்பொருள்!!

App

E-books எனப்படும் இலத்திரனியல் புத்தகங்களை வாசிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

எனினும் குறித்த இலத்திரனியல் புத்தகங்களில் காணப்படும் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் அந்த மென்பொருட்களில் காணப்படுவதில்லை.

ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader எனும் மென்பொருளில் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

தமது மகளின் வேண்டுகோளுக்கு இணங்க Jared மற்றும் Kirsten Maughan தம்பதிகளின் கூட்டு முயற்சியால் இந்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

iOS மற்றும் Andorid சாதனங்களில் இந்த application னைப் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக கோப்பு ஒன்றினை வாசிப்பதற்கு iTunes தளத்தில் அக்கோப்பினை பதிவேற்றம் செய்த பின்னர் குறித்த Application னில் திறக்க முடியும்.

இதில் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கு 3 வடிகட்டும் (Filter) முறைகள் காணப்படுகின்றன.

இதில் சில அநாகரிகமான சொற்களை அவற்றிற்கு நிகரான நாகரிகமான சொற்களாகவும் மாற்றித்தரும் வசதியும் காணப்படுகின்றது.

வவுனியா வடக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது அகவையை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ரி.ஆர்.ரி வானொயிலின் ஏற்பாட்டில், ‘இணையும் கரங்கள்’ அமைப்பின் தலைவர் வீரசிங்கம் சசிகுமார் தலைமையில் நேற்று (29.03) நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு நூறு குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். அங்கு அவர் தனது உரையில்,

யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களை கடந்துள்ள போதிலும்கூட, அப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது நாளாந்த வாழ்வாதார தேவைகளுக்காகவும், மருத்துவ வசதிகளுக்காகவும் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளன.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 540 பேர் அவையங்களை இழந்தும், கடும் காயமுற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் 160 பேர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வைக்காண, புதிய அரசு விசேட செயலணியை உருவாக்கி, அதன் ஊடாக முழுமையான தகவல் திரட்டுகளை மேற்கொண்டு, மாதாந்த உதவித்தொகையும், வாழ்வாதாரத்துக்கான நிரந்தர உதவியும், மருத்துவ உதவிகளையும் வழங்கும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் எனவும் ஆனந்தன் எம்.பி கேட்டுக்கொண்டார்.

15வது அகவையை எய்தும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களுக்கு ‘இணையும் கரங்கள்’ அமைப்பினர் தமது பிறந்தநாள் வாழ்த்துகளையும், தேவமனோகரன் குடும்பத்தினருக்கும் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தினருக்கும் தமது உளம்நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தனர்.

20 21 22 23 24 25 26 27 28

வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப்பொதி வழங்கல் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய்க்கான உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா தலைமையில் நேற்று (29.03) நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, தர்மபால, ஜெயதிலக்க ஆகியோரும், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மோகநாதன், உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணா, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் கெனடி, கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

1 2 3 4 6 7 8 9 10 11