அஜித்தால் அழுத பிரபல பாடலாசிரியர்!!

Ajith

தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் அஜித் தான் பேவரட். அப்படியிருக்க ஒரு பாடலாசிரியர் சமீபத்தில் அஜித்தால் அழுதுள்ளார் என்றால் நம்புவீர்களா.

நீங்கள் நினைப்பது போல் இல்லை.டங்காமாரி, டண்டனக்கா போன்ற ஹிட் பாடல்களை எழுதிய ரோகேஷ் தீவிர அஜித் ரசிகராம். இவர் தான் முதலில் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு பாடலை எழுத வேண்டியதாம்.

இப்பாடலை எழுத ரோகேஷுக்கு போன் செய்யும் போது அவரால் எடுக்க முடிய வில்லையாம். இதனால், இந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு போக, தல கூட வேலை செய்ய முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுதுள்ளாராம்.

கொம்பன் படத்தின் சர்ச்சைக்கு படக்குழு விளக்கம்!!

Komban

கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ஏப்ரல் 2ம் திகதி திரைக்கு வரவிருக்கும் படம் கொம்பன். இப்படத்தில் ஒரு சாதியினை இழிவுப்படுத்தியதாக கூறி, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ‘ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கொம்பன்’ திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் எந்த ஒரு சாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.

யூகத்தின் அடிப்படையில் ‘கொம்பன்’ திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. ‘கொம்பன்’ திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

வவுனியாவில் கடையை உடைத்து திருடர்கள் கைவரிசை!!

vavuniya

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(30.03) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அழகுபொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் மேசை ஆகியவற்றை உடைத்து அதில் இருந்த பணத்தையும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீதியோர வியாபாரங்கள் நகரசபையால் அகற்றப்பட்டன!!

Vav

வவுனியா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாடு நகரசபையினால் இன்று (31.03) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா நகர்ப் பகுதியில் வீதியோர வியாபாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனால் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு பாரிய இடையூறாக உள்ளதாகவும் நகரசபைக்கு பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனையடுத்து, 23ஆம் திகதிக்கு முன்னர் வவுனியா நகர சபையுடன் தொடர்புகொண்டு வியாபாரத்திற்கான இடத்தை ஒதுக்கி கொள்ளுமாறும், வீதியோர வியாபாரத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் நகரசபையின் அறிவுறுத்தல்களை மீறி தொடர்ந்து வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் வகையிலேயே இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசையில் 2ம் இடத்தில் சங்கக்கார!!

sanga

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்டத்தில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இதன்படி தென்னாபிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் முதலாவது இடத்திலும், இலங்கை அணியின் குமார் சங்கக்கார 2 ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி வீரர் ஹசிம் அம்லா மூன்றாவது இடத்திலுமுள்ளனர்.

பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் முதலிடத்திலுள்ளார். தென்னாபிரிக்க அணி வீரர் இம்ரான் தாஹிர் 2 ஆவது இடத்திலுள்ளார்.

இதேவேளை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடாத பாகிஸ்தான் வீரர் சயிட் அஜ்மல் புள்ளிகள் அடிப்படையில் 3 ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு ஆடு, 2 முழுக் கோழிகள் : அதிய மனிதரின் ஒருநாள் உணவு!!

Fat

ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் காலை உணவாக 24 முட்டைகளையும் மதிய உணவாக 2 முழுக் கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகளையும் இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2 லீற்றர் பால் மற்றும் 15 அரேபிய ரொட்டிகளையும் உணவாக உட்கொண்டு வருகிறார்.

ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் 301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் ஆவார். அவரது நிறை 301 கிலோவையும் தாண்டி அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் குறித்த நபரால் உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்த முடியாததால், நிரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்க குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள கடந்த 16ஆம் திகதி ஈராக்கிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பை சுற்றியும் அதிக அளவில் கொழுப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு laparoscopy சிகிச்சையை மேற்கொள்ள மருத்தவர்கள் முடிவு செய்தனர்.

சமீபத்தில் இந்த சிகிச்சையை இரு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக்குழு ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்தவர் டீப் கோயல் கருத்துத் தெரிவிக்கையில்,

சிகிச்சை முடிந்த 5 நாட்களில் அலியின் உடலில் இருந்து 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும் அடுத்த ஓராண்டிற்குள் 151 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அலி தெரிவிக்கையில்,

அதிக எடையுடன் நான் ஒவ்வொரு நாளும் அவதியுற்று வந்தேன். தற்போது மருத்துவர்கள் எனக்கு திரவ உணவுகளை அளித்துவருவதால் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் நான் ஒரு சராசரி மனிதரைப் போல் வாழ்க்கையை தொடங்குவேன் எனமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

டுபாயில் யுவதியை கத்திமுனையில் வல்லுறவு செய்த இலங்கையர்!!

valluravu

டுபாயில் பெண் ஒருவரை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞன் 2 வருடம் 2 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

துபாய் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. தண்டனை காலம் முடிந்ததும் சமயல்காரரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு மே மாதம் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து W.S என குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் 23 வயதுடைய இலங்கை இளைஞன் சக நண்பியான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயது பெண்ணை குடிபோதையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் குறித்த பெண்ணுக்கு மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது குறித்த பெண்ணுடன் உடலுறவு கொண்டதை சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனினும் பெண்ணை கத்திமுனையில் பாலியல் வல்லுறவு செய்யவில்லை என்றும் அவரது சம்மதத்தில் உடலுறவு கொண்டதாகவும் சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது மது அருந்தியிருந்தமை சந்தேகநபர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணே தனது முகத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதாக இளைஞன் கூறியுள்ளார்.

இந்நிலையில் நண்பர் வீட்டில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது இளைஞன் தன்னை தாக்கியதாக பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நண்பர் வீட்டில் இல்லாததை அறிந்த அவர் தன்னை அறைக்குள் அழைத்துச் சென்று கத்திமுனையில் பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டதாகவும் பின்னர் தான் ஒருவழியாக தப்பிச் சென்று காவலரிடம் முறையிட்டதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு குறித்து பிரதிவாதி 15 நாட்களில் மேன்முறையீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கையை மணக்கும் பலமான குள்ளமனிதர்!!(படங்கள்)

டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில் ஒருவராவார். ஆணழகனான இவர் பளுதூக்கும் போட்டியில் 4 முறை சாதனை படைத்துள்ளார்.

இவரது உயரம் 4 அடி 4 அங்குலம். ஆனால் தனது உடல் எடையை விட 4 மடங்கு அதிகமான எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

நியூயோர்க்கில் வசிக்கும் இவர் புளோரிடா கடற்கரையில் இளைப்பாற சென்றுள்ளார். அங்கு ஆணாக பிறந்து திருநங்கையாக மாறிய சைனா பெல் என்ற திருநங்கையை சந்தித்தார்.
கடந்த சில மாதங்களாக சைனா பெல்லை காதலித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து சைனா பெல் கருத்துத் தெரிவிக்கையில், அன்டன் மிகவும் கவர்சிகரமானவர். அவர் எனக்கு கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

அவரும் வித்தியாசமானவர். நானும் வித்தியாசமானவள். இந்த வேறுபாடுகள் நன்மை பயக்கும். ஆண்மையானது உயரம் மற்றும் குள்ள உருவத் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை.

தன்னைவிட நான்கு மடங்கு எடையைத் தூக்கி சாதனை படைக்கும் ஆற்றல் கொண்டவரை மணப்பது என்பதை எண்ணி தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அன்டன் கிராஃப்ட் கூறுகையில், திருநங்கையுடனான எனது வாழ்க்கை நன்றாக உள்ளது. ஏனெனில் அவர் ஆணாக பிறந்தவர். அவர் முடிந்தவரை பெண்ணாக செயல்படுகிறார்.

ஆனால் பெரும்பாலான பெண்கள் தாங்களை பெண்ணாகக் காட்டி கொள்ள மிகுந்த நேரத்தை செலவிடுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

3031 32 33 34

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் மஞ்சம் பத்தாம் நாள் உற்சவம் !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம்  நாள்உற்சவம்   29-03 -2015 ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் ஆரம்பமான அபிசேகங்களை  தொடர்ந்து மதியம் வசந்த மண்டப பூஜையின் பின் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  சிங்க வாகனத்திலும்  விநாயகர்    வள்ளி தெய்வானை சமேத  முருகபெருமான்  ஆகியோர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .

அன்றைய தினம் மாலையில்  மஞ்ச திருவிழாவிற்குரிய  உற்சவங்கள் கிரியைகளின் இறுதியில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  சிங்க வாகனத்திலும்  விநாயகர்    வள்ளி தெய்வானை சமேத  முருகபெருமான்  ஆகியோர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .

21095_520598891414016_2424185128210727116_n 21153_520591958081376_8095038272031615336_n 1911807_520749164732322_199759099951784751_n 10346103_520750074732231_3704768061500785594_n 10426862_520745861399319_3821863754792544761_n 10435662_520598931414012_680516674072894370_n 10476985_520593424747896_2917225124594320338_n 10628455_520746111399294_8340880027479491890_n 10987332_520592548081317_4610309602670747543_n 10995460_520591641414741_8752830614225802051_n 11010008_520750841398821_8270033062335696874_n 11026128_520593211414584_4701724098537059436_n 11050801_520591871414718_8598315080260992614_n 11051965_520592674747971_711043086916203163_n 11052514_520596664747572_6416727186022013705_n 11055285_520592134748025_4583388097393939933_n 11066616_520598554747383_640361938506943609_n 11078125_520749788065593_5123962923190647046_n 11079610_520593284747910_3968268185444419163_n 11081175_520593074747931_4253330219379484126_n 11081240_520591564748082_949079740182073247_n 11081440_520593984747840_3021169840159132286_n 11083664_520749194732319_4878023602399462393_n 11091242_520747978065774_7176871920700142711_n

வவுனியாவில் தந்தை செல்வாவின் 117வது ஜனனதினம் மற்றும் இரத்ததான முகாம்!!(படங்கள்)

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனனதினம் வவுனியாவில் இன்று(31.03) செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா தாயகம் அலுவலகத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவரும் வடமாகாண சுகாதார அமைச்சருமான வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் க.சிவலிங்கம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

-படங்கள் விதுஷன்

 11 12 14 15 16 17 18 19 20 22 23 28 29

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் ஏன் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

Lemon

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் தமிழர் இடையே அதிகமாகக் காணப்படுகின்றது. இது மூட நம்பிக்கை என்று பரவலாக் பேசப்பட்டாலும், உண்மையைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம், மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் போனட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.

அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகமாகவும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஒயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஒரு வாரம் மட்டுமே இந்த வாயு மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் கிடைக்கப்பெறும். அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது.

மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்யக்காரணம் பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது.

பாருங்கள் எம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிரார்கள் என்று!!

இதனை நண்பர்களுடன் பகிர்ந்து செய்து எம் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்.

டேனியல் வெட்டோரி, பிராட் ஹடின் ஓய்வு!!

Vittori

நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி. நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாத அவர் உலகக் கிண்ண அணியில் இடம் பெற்றிருந்தார்.

சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இந்த உலகக்கிண்ணத்தின் 9 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நியூசிலாந்து அணி மெல்போர்னில் விளையாடிய இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதனைத்தொடர்ந்து அந்த அணி வீரர்கள் நியூசிலாந்தில் உள்ள ஒ க்லாந்து வந்தடைந்தனர்.

அப்போது நிருபர்களை சந்தித்த வெட்டோரி, தான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது ‘‘உலகக் கிண்ண போட்டிதான் நியூசிலாந்து அணிக்காக நான் விளையாடிய கடைசி போட்டி. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அது சிறப்பானதாக முடிந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.

18 வயதில் 1997ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் இளம்வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய வெட்டோரி 4000 ஓட்டங்களையும் 300 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

32 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி 36 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் பிராட் ஹடின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த பிறகு ஹடின் கூறியதாவது..

லீக் போட்டியில் நியூசிலாந்து சென்று விளையாடியபோது நியூசிலாந்து வீரர்கள் எங்களிடம் அமைதியாகவும், நல்ல விதமாகவும் நடந்து கொண்டார்கள். என்னால் அப்படி விளையாட முடியாது.

இதுபற்றி அணி ஆலோசனை கூட்டத்தில் நான் பேசும்போது, ‘உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் மறுபடியும் அவர்களுடன் மோத நேர்ந்தால், களத்தில் அவர்களை கடுமையாக சீண்டப் போகிறேன்.

இதனால் நான் சில ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவது இல்லை. ஏனெனில் உலகக் கிண்ணத்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவது இல்லை’ என தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் பிராட் ஹடின் இனிமேல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அந்த அணியின் தலைவர் கிளார்க் உலகக் கிண்ண இறுதிப்போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்புப் பகிஷ்கரிப்பு!!(படங்கள்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று (31.03) செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நுண்கலைப்பீட துறைத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதிலும் மாணவர்களின் கோரிக்கைளுக்கு உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததையடுத்தே மீண்டும் நுண்கலைப் பீட இறுதியாண்டு மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கான செயற்திட்டத்திற்கு பொறுப்பான ஆசிரியரை நியமிக்க வேண்டும், 2ம் தவணையை ஆரம்பிக்க வேண்டும் போன்ற மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் போது மீண்டும் கடந்த 17ஆம் திகதியும் வகுப்புப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1234

கணிதப் பாடத்தில் சித்தியடையாதமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!!

Sucide

புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தற்கொலை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. மேற்படி மாணவி புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லாரியில் தரம் 12 இல் கலைப்பிரிவில் கல்விபயின்று வருகின்றார். 2013ம் ஆண்டு கல்வி பொது சாதாரண தர பரீட்சை எழுதிய இவர் கணித பாடத்தில் சித்தியடையவில்லை. தொடர்ந்து 2014ம் ஆண்டு கணித பாடத்தை இரண்டாம் தடவை எடுத்து தருவதாக கூறி கல்வி பொது உயர்தர பயின்று வந்துள்ளார்.

அதன் படி 2014ம் ஆண்டு கணித பாடத்தை பரீட்சை எழுதிய இவர் தற்போது வந்துள்ள பெறுபேற்றினை கையடக்க தொலைபேசியில் பார்த்து விரக்த்தி அடைந்த நிலையிலேயே இந்த தற்கொலை நேர்ந்துள்ளது.

அதேவேளை பெறுபேறு வந்த போது பெற்றோர் உட்பட உறவினர்கள் சில ஆசிரியர்கள் அவரை கண்டித்துள்ளதாகவும். பாடசாலையில் உயர்தரத்திற்கு இனைத்துக் கொள்ளும் போது கணித பாடத்தை 2014 ஆம் ஆண்டு பெற்று தரா விட்டால் உயர்தரத்தை தொடர முடியாது என்ற வகையில் கடிதம் ஒன்றை பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்ட போது நாங்கள் அவ்வாறான கடிதம் ஒன்றை பெறவில்லலைபுதிய சுற்றிக்கையின் படி கணித பாடம் இல்லாமல் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும் அதனை நாங்கள் மாணவர்களுக்கு அறிவித்தும் உள்ளோம்.

குறித்த மாணவி நல்ல பழக்கவழக்கம் உள்ள நன்கு கல்வி கற்க கூடியவர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாம் தவனை பரீட்சைக்கு வெள்ளிக்கிழமை (2015.03.27) வரை சமூகம் தந்துள்ளார். இருந்தும் இந்த துரதிஷ்ட்டமான நிகழ்வு குறித்த தனது பாடசாலை கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்பா பாடசாலையின் அதிபர் அம்மா ஆசிரியர் இவர்கள் இருவரும் பாடசாலை சென்று விட்டனர். இரு சகோதரிகள் ஒரு சகோதரன் இவர்களும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எப்போதும் தனிமையை விரும்பும் இவர் தற்கொலைக்கு முன் தன்னுடைய கடந்தகால புகைப்படங்களை பார்த்துள்ளார். கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார். அதில் தானே தற்கொலை காரணம் எனவும் தனக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று எமுதியுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் குறித்த மாணவியின் பெற்றோர் தனது பிள்ளைகளை விருப்பத்திற்கு ஏற்ப வளர்த்தாகவும் இவ்வாறான நிலையில் அப்பா, அம்மா இருவரினதும் கனவை தனக்கு நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையிலும் நண்பர்கள் மத்தியில் தனக்கு தாழ்வு மனப்பான்மை தோன்றியதாலும் இந் நிலை தோன்றியுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

சம்பவம் நிகழ்ந்து குறிப்பிட்ட நேரத்தில் சகோதரன் (தரம் 03) பாடசாலை விட்டு வீடு திரும்பி வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவு திறப்படவில்லை. பின் ஜன்னல் வழியாக பார்த்த போது அக்கா தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

பின் அயலவர்களிடம் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த அம்மா கல்வி கற்பிக்கும் பாடசாலைக்குச் சென்று அம்மாவை அழைத்து வந்து அயலவர்களின் உதவியுடன் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருந்தும் உயிர் பிரிந்தே இந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் பொலிஸ் விசாரணை மரண விசாரனைகள் மூலம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்டு நாளை தகன கிரிகைகளுக்கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டுள்ளன.

இந்த நிலமை குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெயரத் தொடர்பு கொண்ட போது, புஸ்ஸல்லாவ பிரதேசத்தை பொறுத்தவரையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருகின்றதுஇதனை தடை செய்ய பல நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டும் பாடசாலைகள்தோரும் கூட்டங்களும் நடாத்தப்பட்டும் வருகின்றன.

மாணவர்களுக்கு பாடங்களை தவிர விளையாட்டு, கலை, கலாச்சார விடயங்களில் ஈடுப்பட வாய்ப்பளிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களின் தன் நம்பிக்கையை வளர்க்க வேலைத்திட்டங்களை பாடசாலைகள் தோரும் அதிபர்கள் நடவடிக்கை எடுத்து ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையிலேயே இவ்வாறான பிரைச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என்று கூறினார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் இரட்டைப்பாதை அட்டபாகை தோட்டம், வகுகப்பிட்டிய சவுக்குமலை தோட்டம், புசல்லாவ பிளக்போரஸ்ட் தோட்டம், புசல்லாவ நகரம், புசல்லாவ ரொத்சைல்ட் தோட்டம், உட்பட தற்போது புசல்லாவ பிளக்போரஸ்ட் கிராம மாணவி தற்கொலை அடங்களாக மொத்தமாக 6 யுவதிகள் தற்கொலை செய்து கொண்டதுடன் புசல்லாவ ரொத்சைல்ட் தோட்ட மாணவன் ஒருவனும் புசல்லாவ நகர வர்தகர் அடங்களாக சுமார் 8 தற்கொலைகள் புசல்லாவவையில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு தற்கொலைகள் அதிகரித்து வரும் புசல்லாவ பிரதேசத்தில் இதனை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயமானதாகும்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 8 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

RAMBAIKULAM

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி விசேட(A) சித்திபெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.

வவுனியாவின் முன்னணி பெண்கள் பாடசாலையான இப் பாடசாலையில் இருந்து 9A சித்திகளைப் பெற்ற மாணவிகள் விபரம் வருமாறு..

கம்சனா மகேந்திரன்
இலக்கியா கேதீஸ்வரன்
கேதிகா சண்முகானந்தன்
திவியா திருநாவுக்கரசு
தபோசினி சூரியச்செல்வன்
நிலாணி சிவராஜா
நிதுர்சா வதனகுமார் ஆகிய தமிழ் மொழி மூல மாணவிகளும் தனுராகவி தாமோதரபிரசாத் என்னும் ஆங்கில மொழி மூல மாணவியுமாக 8 மாணவிகள் அதி விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஆங்கல மொழிமூல மாணவிகள் உட்பட 22 மாணவிகள் 8 பாடங்களில் அதி விசேட சித்திகளையும் ஒரு பாடத்தில் B தர சித்தியையும் பெற்றுள்ளனர்.

வவுனியாவில் 15 வயதில் இருந்து 5வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கிறிஸ்தவ மதகுருவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!!

11102709_859899660749611_4695519566756431041_n

தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர் வவுனியா செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று(29.03) ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியும், யுவதியை சிறு வயதில் பராமரித்து வந்த பெண் ஒருவரும் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாய், தந்தையை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவரது 11 ஆவது வயதில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் மதபோதகர், பராமரிப்பு நிலையில் இருந்து குறித்த யுவதியை பொறுப்பெடுத்து தனது வீட்டில் வளர்த்து வந்தார் என்றும்,

மதப்போதகரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த யுவதியை மிரட்டி (அப்போது 15 வயது) பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும், ஐந்து வருடங்களாக இவ்வாறு தொடர்ச்சியாகத் தான் துன்புறுத்தப்பட்டுவந்தார் எனவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மலரும்-