உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.
உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலரும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எடுத்தனர்.
இந்நிலையில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் நேற்றைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அவுஸ்திரேலியா 328 ஓட்டங்கள் குவித்ததை பார்த்த அவர் கவலை அடைந்தார்.
உடனே அவர் இந்தியா வெற்றி பெற உதவுமாறு கடவுகள்களை வேண்டிக் கொண்டு கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்துக் கொண்டார். வலியால் துடித்த அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிரிய இராணுவத்தில் பெண்கள் பங்கேற்பது என்பது நான்கு வருடங்களுக்கு முன்னர் அறியப்படாத விடயமாக இருந்தது. ஆனால் தற்போது பெண்கள் இராணுவத்தில் அங்கம் வகிப்பதோடல்லாமல் அவர்கள் முன்னரங்குகளில் பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் செயற்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரிய டமஸ்கஸ் நகரின் புறநகர் பகுதிகளை கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் முகமாக பீரங்கிப் படையணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் படைவீரர்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜொபார் பிராந்தியத்தில் மேற்படி பெண்கள் படையணியை சேர்ந்தவர்கள் கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட போதே இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் சிரிய இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு 2013ம் ஆண்டிலேயே முதல் முதலாக அனுமதி வழங்கப்பட்டது.
‘பெண் சிங்க பாதுகாப்பு படையணி’ என செல்லப் பெயரால் அழைக்கப்படும் இந்த பெண்கள் படையணியில் தற்போது 800 பெண்கள் வரை அங்கம் வகிக்கின்றனர்.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேரந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசாவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
இது தொடர்பாக கி.தேவராசாவுடன் வினவியபோது, வவுனியா வடக்கு நெடுங்கேணி மத்தியில் அமைந்துள்ள தனது பத்திரிகை விற்பனை நிலையத்திற்கு இன்று வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் இந்த அறிவிப்பு கடிதத்தை தந்துள்ளனர்.
அக்கடிதத்தில் இப்பிரதேசத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக எதிர்வரம் 30ஆம் திகதி கொழும்பில் உள்ள புதிய அரசாங்க அதிபர் கட்டிடத்தில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் இரண்டாம் தள அதிகாரியை சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவிருந்த நிலையில், தேவராசாவிற்கு கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை தாயாருடன் ஒப்படைக்க கிளிநொச்சி நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஜெயக்குமாரி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவருடைய மகள் விபூசிகா நீதிமன்றின் உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி தனது மகளை தன்னுடன் சேர்க்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சார்பில் ஆஜராகியிருந்த அதிகாரிகள், விபூசிகாவை அவருடைய தாயாருடன் இணைப்பதில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதன் பின்னர் விபூசிகாவை ஜெயக்குமாரியுடன் சேர்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
1000 மீட்டர் அகலம் கொண்ட இராட்சத விண்கல் ஒன்று நாளை (27.03.2015) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இராட்சத விண்கல்லானது மணிக்கு 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘2014 ஒய்.பி.35’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
பூமிக்கு மிக நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
1000 மீட்டர் அகலம் கொண்ட இந்த இராட்சத விண்கல் மோதினால் பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். கடந்த 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்காவில் விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சைபீரியாவில் விண்கல் மோதியதால், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அப்போது உணரப்பட்டது. விண்கல் மோதியபோது 80 மில்லியன் மரங்கள் அழிந்தது, சுமார் 5.0 அளவில் அதிர்வு காணப்பட்டது. துங்குஸ்காவில் விழுந்த விண்கல் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது.
தைவிட ‘2014 வய்.பி.35′ விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பில்நேப்பியர் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில்,
“துங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியதுதான்,இதன் பாதிப்பு உண்மையில் மிகவும் ஆபத்தானது. அப்போது நாம் இதுபோன்ற விண்கல்களை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. எனவே நாம் பாதிப்பை சம்மாளிக்க தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்தோம்.
ஆனால் ‘2014 வய்.பி.35’ போன்ற விண்கற்கள் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நிகழ்வுகளை தடுக்கவும் வழி ஒன்று உள்ளது. விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வுதான். இருப்பினும், விண்கற்களால் ஏற்படும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.” என்றார்.
பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விண்கற்கள், மிகவும் அருகே வரும்நிலையில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், பூமிக்கு அருகே விண்கற்கள் வருகிறது என்பது, பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்று பொருள் ஆகாது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போன்ற எச்சரிக்கை உள்ளது என்பதே பொருள் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்கற்கள் பூமியை நெருங்கி செல்வது என்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்திய அணியின் இரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது.
இதனால் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லி பல திரையுலக பிரபலங்கள் தமது வாழ்த்துக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டுள்ளார்கள்.
அவர்களில், இந்திய அணி இதுவரை சென்றதற்கு வாழ்த்துக்களையும், போட்டியில் தோல்வியைத் தழுவியதற்கு கவலையினையும் பல இரசிகர்களோடு திரைப் பிரபலங்களான சுஷ்மிதா சென், சரத்குமார், சிம்பு, நிதின் சத்யா, அபிசேக் பச்சன் ஆகியவர்கள் தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவேற்றியுள்ளனர்.
இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதன்படி இறுதிப்போட்டிக்குள் நுழையும் கனவுடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியினர் அபாரமாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்களை பெற்றனர்.
அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் இரண்டு சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் அடங்களாக 93 பந்துகளில் 105 ஓட்டங்களை பெற்றார். மேலும் அவுஸ்திரேலிய அணி வீரரான பின்ச் 81 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் யாதவ் 10 ஓவர்கள் பந்துவீசி 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிட்த்தக்கது.
இந்நிலையில் 329 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதனால் அவுஸ்திரேலிய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி சார்பாக MS டோனி அதிகூடிய ஓட்டங்களான 65 ஓட்டங்களை பெற்றார்.
அவுஸ்ரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் புளுக்னர் 3 விக்கெட்டுக்களையும் ஜோன்சன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிட்த்தக்கது.
வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்துகின்றன.
இந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தமையாலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் இந்த வாரம் வலியவன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. கதையெல்லாம் பிடித்து போக, இயக்குனர் சொன்ன ஒரு கண்டிஷனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
அது என்னவென்றால் பொப் கட்டிங் வெட்ட வேண்டும் என்று கேட்க, ஆண்ட்ரியாவிற்கு இதில் விருப்பம் இல்லையாம்.
இந்திய அரசு கடந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான தேசிய விருதுகளை நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த பட்டியலில் சிறந்த பாடகிக்கான விருது உன்னிகிருஷ்ணனின் மகளான உத்ராவிற்கு கிடைத்துள்ளது. சைவம் திரைப்படத்தில் ‘அழகே” பாடலுக்காகவே இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
உன்னிகிருஷ்ணனும் தான் பாடிய முதல் பாடலுக்கே விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கமல்- ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1978 இல் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிய படம் சிகப்பு ரோஜாக்கள் இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். கமல் இந்த படத்தில் பெண்களை கொலை செய்யும் சைக்கோ வில்லனாக நடித்தார்.
சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை பாரதிராஜா மகன் மனோஜ் இயக்குகின்றார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியுள்ளார்.
ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருகிறார். எனவே சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட,கிழக்கு வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ரூபா 1,75,000 பெருமதியான ஊடக கற்கை நெறியினை மாணவர்களுக்கு இலவசமாக பெற்றுதர தமிழ் தேசிய இளைஞர் கழகம் தீர்மானித்துள்ளது.
ஆர்வமுள்ள மாணவ மாணவியர் தங்கள் சுயவிபரக் கோவையினை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பி அரிய வாய்ப்பினை உரியதாக்குங்கள்.
நைஜீரியாவில் போராளிகளிடமிருந்து மீளக் கைப்பற்றப்பட்ட நகரொன்றிலிருந்து 11 வயது மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட வயதுடைய சுமார் 500 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போகோ ஹராம் போராளிகளிடமிருந்து இந்த மாத ஆரம்பத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட டமாஸக் நகரிலிருந்தே மேற்படி சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
போராளிகள் அந்த நகரை விட்டு வெளியேறிச் செல்லும் போது தம்முடன் சிறுவர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.