ரணில் நாளை வடக்கு விஜயம்!!

Ranil

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளிநொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். அத்­துடன் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்­களில் யாழ்ப்­பா­ணத்தில் பல நிகழ்­வு­களில் கலந்து கொள்­ள­வுள்­ள­துடன், முக்­கிய பல பிர­மு­கர்­க­ளையும் சந்திக்கவுள்ளார்.

ஞாயிறு தினத்­தன்று கிளி­நொச்­சியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்பினர்­களை சந்­திக்­க­வுள்­ள­து­டன, முல்லைத்­தீ­விற்கும் பிர­தமர் விஜயம் செய்யவுள்ளார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பிறகு ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ரல சிறி­சேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமாரதுங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய மூவரும் கடந்த திங்­கட்­கி­ழமை வடக்கிற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டனர்.

இந்­நி­லையில் பிர­தமர் மாத்­திரம் நாளை வடக்கிற்கு விஜயம் செய்­ய­வுள்­ளமை விஷேட அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது. இதன்­படி வௌ்ளிக்­கி­ழ­மை­யான நாளை யாழ்ப்பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நல்லுர் கோயில் , நாவலர் ஜூம்மா மஸ்ஜித், மற்றும் ஆதினம் தேவஸ்­தானம் ஆகிய வணக்­கஸ்­த­ளங்­க­ளுக்கு சென்று வழி­பா­டு­களில் ஈடுப்படவுள்ளார்.

மேலும் யாழ் .மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம், தென் இந்­திய அருட்­தந்தை டெனியல் தியா­க­ராஜா ஆகிய மதத்தலைவர்களின் ஆசி­யையும் பெற­வுள்ளார்.

இந்த விஜ­யத்தின் போது மீள்­கு­டி­யேற்ற வேலைத்­திட்டம் மற்றும் புனர்­வாழ்வு பெற்ற இளை­ஞர்கள் தொடர்­பி­லான கலந்துரையாடிலும் பிர­தமர் பங்குகொள்ளவுள்ளார். மேலும் பெண்­களின்  பிரதி­நி­தி­க­ளையும் சந்­திக்­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்­திட்­டத்­திலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

அத்­தோடு மீன­வர்­க­ளையும் சந்­தித்து பேசவுள்ளார். இதன் பின்னர் பருத்­தி­து­றை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யாக கரு­தப்­படும் ஹார்ட்லி கல்­லுரி நிக­ழ­வொன்­றிலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

இதே­வேளை சனிக்­கி­ழமை யாழ் மாவட்ட தேசிய பாட­சாலை அதி­பர்­களை சந்­தித்து தற்­போது மாவட்ட பாட­சா­லையில் காணப்­படும் பிரச்­சினை குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க வடக்கு விஜ­யத்­தின்­போது நெடுந்­தீ­விற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

அத்­தோடு இந்த விஜ­யத்தின் போது பலாலி படைத்­த­லை­மை­ய­கத்­திற்கு சென்று பொலிஸ், விமா­னப்­படை உள்­ளிட்ட முப்­படை அதி­கா­ரி­க­ளுடன் விஷேட பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் பலாலி பாது­காப்பு தளத்­தையும் பார்­வை­யி­ட­வுள்ளார்.

இதனை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ,கிளி நொச்­சிக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.
ஞாயிற்று கிழமை காலை 9.30 மணி­ய­ளவில் கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திக்­க­வுள்ளார். இதன்­போது அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

பிர­தமர் ரணில் வி்க்கிர­ம­சிங்­கவின் மூன்று நாள் விஜ­யத்தில் இறுதியாக முல்லைதீவிற்கு சென்று அங்குள்ள பொது மக்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த விஜயத்தினை பிரதமர் முன்னெடுக்கவுள்ளமை விஷேட அம்சமாகவே கருதப்படுகிறது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 24/03/2015செவ்வாய் கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள் ஆரம்பமாகி நாற்குரவர்களான  திருஞானசம்பந்தர் திருநாவுகரசர் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் ஆகிய மூர்த்திகளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி  விசேட அபிசேகங்கள்  ஆராதனைகள் முதலியவற்றுடன் சண்டேஸ்வரர் பெருமானும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கும் விசேட கிரியைகள் நடை பெற்று   பன்னிரு திருமுறைகள ஓதப்பட்டு  நாற்குரவர்களுடன் சண்டேஸ்வரப் பெருமானும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் முருகப்பெருமான் விநாயகர் முதலானோர் உள்வீதி  வெளி வீதி வலம் வந்து சுப்ரமணியகோமம் கலைக்கப்பட்டு பகல் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

மீண்டும் மாலை நான்கரை மணிக்கு பபூஜைகள் ஆரம்பமாகி   மாலை ஏழு மணியளவில் சண்டேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலானோர் உள்வீதி வெளிவீதி வலம் வந்து மாலை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

19121_518676284939610_9049910459450403668_n 19188_518676688272903_2707054849029217196_n 603778_518676884939550_403577647041117288_n 988901_518778868262685_973687519668424983_n 1012929_518778634929375_8543572446325190765_n 1560712_518778474929391_4085673791799738954_n 1607001_518778604929378_8580943253653778903_n 10368233_518677031606202_7754562401029579133_n 10389611_518676484939590_8789494061390329536_n 10404224_518676171606288_8200675670134373949_n 10649601_518778578262714_7668725642952844351_n 11026285_518648981609007_1396435517331099996_n 11037478_518676981606207_8391522278054008696_n 11064751_518644201609485_7917874622260227867_n 11066508_518643958276176_4197594812315119250_n 11079052_518644124942826_1645247826405363937_n 11081094_518645544942684_6722732824025073160_n 11082668_518677198272852_7113415910729162688_n 11091417_518676631606242_7681712587864557311_n

கள்ளக்காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தீவிரவாதிகள் : வேடிக்கை பார்த்த மக்கள்!!

stone

ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

கொலை, கொள்ளை, கள்ளக்காதல் மற்றும் மத அவமதிப்பு போன்றவைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொல்லப்படுகின்றனர்.

அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்தது. வட ஈராக்கில் தங்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்ட மொசூல் நகரில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடிகள் இழுத்து வரப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் கூடும் நடுத் தெருவில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொன்றனர். இக்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று பார்த்தனர்.

யாழ்ப்பாணம் ஏழாலை பாடசாலை நீர்தாங்கில் நஞ்சு கலந்தவர் கைது!!

Arrest

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை   செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட பாடசாலை காவலாளிகள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் கடந்த 18 ஆம் திகதி இரவு நஞ்சு குடிநீரில் கலக்கப்பட்டது. மறுநாள் அந்நீரைப் பருகிய 26 மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீர்த்தாங்கியினுள் இருந்து நஞ்சு போத்தல் ஒன்றை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வருகிறது தலைக்கவசத் தடை!!

Helmet

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய தடை விதிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

முன்னதாக முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்து பின்னர் அதனை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அத்திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளது.

நாளை இந்திய அணி வெற்றிபெற்று 23 ஆண்டு வரலாற்றை தொடருமா?

IND

உலக கிண்ண கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

1992ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992ம் ஆண்டு உலக கிண்ணத்தை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் கைப்பற்றின.

இதன் பிறகு 1999ம் ஆண்டு பாகிஸ்தான், 2003ம் ஆண்டு இந்தியா, 2007ம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று போனது.

2011ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலக கிண்ணத்தில் இரு ஆசிய அணிகள் இறுதிச்சுற்றில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும்.

நடப்பு உலக கிண்ண திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ் கால்இறுதியுடன் வெளியேறிவிட்டன. இப்போது ஆசிய அணிகளில் இந்தியா மட்டுமே எஞ்சி இருக்கிறது. சிட்னியில் நாளை நடைபெறும்  அரைஇறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் களம் காண்கின்றது.

இதில் இந்தியா வெற்றி பெற்றால், 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்த அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

துறைமுக நகரான சிட்னியில் நேற்று மழை பெய்தது. இன்றும் பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டி நாளன்று மழை வாய்ப்பு 10 சதவீதம் மட்டுமே நிலவுகிறது. .

ஆனாலும் முந்தைய நாள் மழையால் ஆடுகளத்தின் தன்மை மாறக்கூடும். மழை மிரட்டல் இருந்தாலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன.

ரசிகர்கள் எங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து இருப்பார்கள் : நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம்!!

Maclum

நியூசிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் நேற்று மோதிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரைஇறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1 பந்து எஞ்சி இருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய தென்னாபிரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் குவித்தது. மழையால் டக்வத் லுவிஸ் விதிப்படி நியூசிலாந்துக்கு 298 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 42.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 299 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 6 முறை (1975, 1979, 1992, 1999, 2007, 2011) அந்த அணி அரைஇறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.  நியூசிலாந்து அணியின் தலைவர் மக்கலம் நிருபர்களிடம் கூறியதாவது..

தென்னாபிரிக்க அணி எப்போதும்போல் சிறப்பாக விளையாடியது. இந்த ஆட்டம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப்பெரிய விளம்பரமாகும். இந்த போட்டியுடன் சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து இருப்பார்கள்.

எங்களுக்கு வாழ்நாளில் மறக்க இயலாத மகிழ்ச்சி நேரமாகும். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்களின் உற்சாகம் ஒரு காரணம்.

நாங்கள் 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் கடைசி வரை போராட வேண்டியிருந்தது. எலியட் மிகவும் அருமையாக விளையாடினார். தொடக்கத்திலேயே ஓட்ட சராசரியை  உயர்த்தியதால் நெருக்கடி குறைந்தது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்காவுக்கு எனது பாராட்டுக்கள்.

அந்த நேரத்தில் யாருடன் மோதப் போகிறோம் என்பது பற்றி கவலை இல்லை. இரு அணிகளுமே தலைசிறந்தவையாகும். இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரி!!

Maithiri

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார்.

யு.எல்.868 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (25.03) பகல் 1.30 அளவில் சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்றுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வில்வித்தையில் தேசிய சாதனை படைத்த 3 வயதுச் சிறுமி!!

2

கடந்த 2010ம் ஆண்டு பொதுநலவாய போட்டிக்குப் பின்னர் நிகழ்ந்த வீதி விபத்தில் சர்வதேச வில்வித்தை வீரர் செருகொரி லெனின் மரணமடைந்தார். அவரது இளைய சகோதரி ஷிவானி. அண்ணனை போலவே வில்வித்தையில் கலக்குகிறார் 3வயதே ஆன ஷிவானி. தனது தந்தையார் சத்யநாராயணா நடத்தி வரும் வோல்கா ஆர்செரி இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்று வரும் ஷிவானி வில்வித்தை போட்டியில் புதிய சாதனை படைத்து தேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

5 மீட்டர் முதல் 7 மீட்டர்கள் வரையிலான தூரத்தில் 36 ஏரோ ஷொட்டுகளில் 388 புள்ளிகளை ஸ்கோர் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் இந்த லிட்டில் ஷிவானி. இந்தியா புக் ஒஃப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி விஷ்வாஜிர் ரே மற்றும் இந்திய விளையாட்டு ஆணையப் பிரதிநிதி ராம கிருஷ்ணா இந்த சாதனையை உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் ஷிவானிக்கு சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டது. பிரபல வில்வித்தை வீரர்கள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் நான்காம் நாள் உற்சவம் கைலாய திருக்காட்சி!(படங்கள் வீடியோ)!

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம்   நாளான நேற்று  23-03 -2015 திங்கட்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம்  குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் இடப வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.

நேற்று  மாலை எல்லாம் வல்ல எம் பெருமான் ஈரேழு உலகங்களையும் ஆட்சி புரிகின்ற கயிலை நாதன் வடிவில் கயிலாயத்தில் அருள்புரிகின்ற கயிலை  காட்சிக்குரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  கயிலைத் திருக்காட்சி  கொண்டு இடப வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

11082539_518329124974326_7586950255511875079_n 11082647_518329358307636_1433558084490971736_n 11083667_518210698319502_972454113410122996_n

11081143_518210388319533_236091195517238006_n 11073575_518210294986209_5488895721346111414_n 11020255_518210264986212_3123945788637719945_n 11009908_518330394974199_5192670691279662038_n 11009381_518329034974335_3718008495034505021_n 10947323_518210664986172_4097369235794138014_n 10897986_518210601652845_2445751860422130617_n

18385_518329228307649_4716362214133480885_n 20725_518328748307697_8805234723841875762_n 10259903_518328671641038_4780110713495811041_n 11020255_518210264986212_3123945788637719945_n 11009908_518330394974199_5192670691279662038_n 11009381_518329034974335_3718008495034505021_n 10947323_518210664986172_4097369235794138014_n 10897986_518210601652845_2445751860422130617_n

142 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது!!

Flight

ஜெர்மனி ஏர்பஸ் ஏ 320 என்ற விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் டிக்னே பகுதிக்கு அருகில் விபத்துக்கு உள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

துசெல்டொர்ப் பகுதியில் இருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது.

விமானத்தில் 142 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்ப்படுத்துவதற்கான வயதெல்லை அதிகரிப்பு!!

children_3

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதில் இருந்து 12 வயது வரை அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்காகவும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தவறுகளை திட்டமிடப்பட்ட குற்றங்களாக கருத முடியாது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தவறு செய்யும் சிறுவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைப்பதே மிகவும் சிறந்ததென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிலிர்ப்பூட்டும் அரையிறுதிப் போட்டி : இறுதிவரை போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து : கண்ணீரால் அரங்கத்தையே அழவைத்த தென்னாபிரிக்க வீரர்கள்!!

ஒக்லண்டில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 38 ஓவர்கள் நிறைவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனை அடுத்து போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டுப்லசிஸ் 82 ஓட்டங்களையும் டி வில்லிர்ஸ் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் டக்வத் லுவிஸ் அடிப்படையில் 298 ஓட்டங்களை பெற்றால் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி மட்டுப்படுத்தப்பட்ட 42.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக பிரண்டன் மக்கலம் 59 ஓட்டங்களையும் எலியட் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும் அன்டர்சன் 58 ஓட்டங்களையும் பெற்றனர். நியூசிலாந்து அணி சார்பாக மோர்கல் 3 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி உலக கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டி ஒன்றில் எதிர்வரும் 29ஆம் திகதி களமிறங்கவுள்ளது.

கிரிக்கெற்றின் அதிஷ்ரமில்லாத அணி எனக் கருதப்படும் தென்னாபிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுதமை தென்னாபிரிக்க ரசிகர்களை மட்டுமன்றி நியூசிலாந்து ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது.

S S1 S3 S4

கர்ப்பிணி தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய மூவருக்கு விடுதலை : சாரதி கைது!!

கர்ப்ப்பிணித் தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள மூவரிடம் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டு, விடுதலை செய்துள்ளது.

ஒரு தனியார் தொகை கடை உரிமையாளருக்கும், இவ்வாறான பொருட்களை பெற்றுக்கொண்ட கினிகத்தேனை கூட்டுறவு சங்கத்தின் தலைவருக்கும், பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உத்தியோகத்தர் ஒருவருக்கும் தலா 15000 ரூபா படி 3 பேருக்கும் 45000 ரூபா தண்டப் பணமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபா்களை நேற்று ஹற்றன் நீதவான் ஐ.பி.டி.லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தும்போது மேற்படி நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொருட்கள் வழங்கும் நிகழ்வு 21.03.2015 அன்று நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இடம்பெற்றது.

இவ்வாறு வழங்கிய போசனை பொதியில் கெளப்பீ 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பயறு 1 கிலோ, கடலை 1 கிலோ, சோயா 500 கிராம், நெத்தலி 500 கிராம், செமன் டின் 2, சிவப்பு அரிசி 2 கிலோ ஆகியன அடங்கிய பொதியையே வழங்கியுள்ளனர்.

இவ்வாறு வழங்கிய பொதியை பார்க்கும்போது அதில் இருந்த கெளப்பீ, கடலை, நெத்தலி ஆகியவற்றில் புழுக்கள் இருக்கின்றதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கர்ப்பிணி தாய்மார்கள் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொதிகள் வழங்கிய இடத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகா்கள் அதனை சோதனை செய்யும் போது இவ்வாறு 130 பொதிகளில் புழுக்கள் இருந்ததை உறுத்திப்படுத்தினார்கள்.

அதன்பின் இந்த அத்தியாவசிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு தனியார் தொகை கடையை 22.03.2015 அன்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்கள் சுற்றி வளைப்பினை மேற்கொண்டபோது அங்கு விற்பனைக்காக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த சில அத்தியா வசிய பொருட்களை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

அத்தோடு 23.03.2015 அன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் இவ்விடயத்தை ஆஜர்ப்படுத்தும் போது பாவிக்க முடியாத நிலையில் இருந்த பொருட்களை அழிக்குமாறு சுகாதார பரிசோதகருக்கு நீதவான் உத்திரவிட்டதையடுத்து, அப்பொருட்கள் நேற்று சுகாதார பரிசோதகர் பி.எல்.கே வசந்தவினால் அழிக்கப்பட்டது.

1 2 3 4 5 6

வவுனியா புதியவேலர்சின்னகுளத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய புலம்பெயர் தமிழர்!!(படங்கள்)

யுத்தத்தின் பின் 2012 இல் மீளகுடியேறிய ஓமந்தை புதியவேலர்சின்னகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறநெறி பாடசாலையில் கற்கும் 35 மாணவர்களுக்கு கோவில் தலைவர் குமரேஸ் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்கொட்லாந்தில் வசிக்கும் கமலசீலனின் நிதி அனுசரணையில் நேற்று(23.03) கற்றல் உபகரணங்கள் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது.

கோவில் தலைவர் குமரேஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி ஜீவமலர், கோவில் செயலாளர் தினேஷ் உட்பட கிராம மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSCN5352 DSCN5370 DSCN5372 DSCN5376 DSCN5378 DSCN5381 DSCN5383 DSCN5386 DSCN5401 DSCN5410

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான நேற்று  22-03 -2015 ஞாயிற்றுக்கிழமை  காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ.ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.

மீண்டும்  மாலை கற்பகதரு காட்சிக்குரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.


17825_517816358358936_1159636335538769943_n 21241_517816091692296_8635478217142897792_n 1462859_517817168358855_6920337451971607944_n 10476154_517678155039423_3478361144760365831_n 10959104_517816475025591_3222816287570445446_n 10986473_517678838372688_1213846169130456069_n 10995582_517679528372619_1455361412177214863_n 11007732_517815185025720_853153680443478937_n 11036659_517678115039427_5316784317210023271_n 11046362_517816278358944_9156410500654378813_n 11046463_517815778358994_8637051106342915295_n 11061226_517678535039385_5490962720618309506_n 11064693_517678281706077_5750978398223955453_n 11075125_517815341692371_6620697764670339643_n 11076270_517679571705948_5018922758667001356_n 11080872_517815135025725_8975848184057716576_n 11081040_517678241706081_1844798447040108671_n