வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 (படங்கள், காணொளி)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 27.02.2015 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின்  தலைமையில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ் .சிதம்பரநாதன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார் .அத்துடன் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் பழையமாணவர் சங்கத்தினர் கல்விவலய உத்தியோகத்தர்கள்  மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலகர்கள் பெற்றோர் என பல்வேறு பட்ட அமைப்பினரும் கலந்துகொண்டனர் .

மேற்படி விளையாடுபோட்டியில் மோனிகா இல்லம் முதலாவது இடத்தையும்  லியோனி  இல்லம் இரண்டாம் இடத்தையும் இமெல்டா இல்லம் மூன்றாம்இடத்தையும்  ஏஞ்சலினா இல்லம் நான்காவது இடத்தையும்  எமிலி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுகொண்டன.  மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் திரேசம்மா சில்வா உரையாற்றும் போது கடுமையான சிரமங்கள் மற்றும்  மோசமான வானிலை காரணமாக நிகழ்வினை நடத்துவதில் பெரும் இடைஞ்சல்களை சந்தித்ததாகவும் இருந்தபோதும் என்னுடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்போடு மிகவும் சிறப்பான முறையில் இறைவனின் ஆசியோட்டும் வெற்றிகரமாக நடத்தமுடிந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சிதம்பரநாதன் அவர்கள் உரையாற்றுகையில் 125 வருட நிறைவை கொண்டாட உள்ள இந்த பாடசாலையானது அகில இலங்கை ரீதியில் ஒரு பழம்  பெரும் பாடசாலையாக திகழ்வதோடு இந்த கல்லூரியின்  மாணவர்கள் எல்லாகாலங்களிலும்  கல்லூரிக்கு பெருமை தேடி தந்தவர்களாகவே இருகின்றனர் . இந்த பாடசாலையில் இருந்து கல்வி விளையாட்டு மற்றும் இணைபாட விதான செயல் பாடுகளில் மிகவும் திறமை மிக்கவர்கள் உருவாக்கபடுகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டார் . மேலும் மாணவர்கள் பெரியோரை மதிக்கின்ற பண்பினை கொண்டவர்களாக இருந்தாலே அது அவர்களின் வாழ்வில் உயர்ச்சியை ஏற்படுத்தும் என வலியுறுத்தினார் .

இறுதியில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கான பரிசில்கள் பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டதோடு விளையாட்டு குழுவின் தலைவரான   வேணி ஆசிரியையால் நன்றி பகரப்பட்டு பாடசாலை கீதத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது .

 

11037719_968966889789931_5493954104313181592_n 11025810_968949233125030_6008553377262922893_n 11025123_968964743123479_194682657590829174_n 11021091_968950313124922_6787115141128753065_n 10998862_968966679789952_4177936071076593200_n 10996090_968964296456857_1615949216824243894_n 10995496_968966863123267_1205562638149218869_n 10919002_968949786458308_4120650477503534596_n 10672247_968964466456840_2163287579660490690_n 10406919_968966976456589_3995572453822549412_n 1528458_968951263124827_4730847545990341309_n 524241_968964669790153_6939982582064439633_n

 

விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்!!

Act

திருவந்தரபுரத்தில் டெம்போ ஒன்று மோதி பிரபல மலையாள நடிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரத்தை அடுத்த பத்தனம்திட்டா பாரிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் சரத்குமார் (23).

ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமாக திகழ்ந்த இவர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது மினி டெம்போ மோதியதால், தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

இவரை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இவ்விபத்து பற்றி தகவல் அறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் சங்க கட்டிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் அடக்கம் நடந்தபோது அதில் ஏராளமான தொலைக்காட்சி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

அரசுடனான தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் : வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன்!!

Wigneswaran

பாதிக்கப்பட்டுள்ள தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணனுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அதற்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக கல்வி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கல்வியமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி அது குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கணவரை சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை போராட்டம்!!

Thamarai

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார்.

´உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்´ படத்தில் எழுதிய மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா, ´தெனாலி´ படத்தில் எழுதிய இன்சிரங்கோ இன்சிரங்கோ´, ´வாரணம் ஆயிரம்´ படத்தில் வரும் உன்ன உன்ன தேடி வந்தேன் அஞ்சல பாடல்கள் ஹிட்டாகின. ´வேட்டையாடு விளையாடு´, ´காக்க காக்க´, ´கஜினி´ உள்பட ஏராளமான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

தாமரைக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை கவிஞர் தாமரை தனது மகன் சமரனுடன் சூளைமேடு பெரியார் பாதை முல்லை தெருவில் கணவர் தியாகு வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டு வாசலில் மகனுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அப்போது தாமரை நிருபர்களிடம் கூறியதாவது..

எனக்கும் தியாகுக்கும் 14 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். தமிழ் உணர்வு போராட்டங்களுக்கு அவருக்கு பக்கபலமாக இருந்தேன். கடந்த வருடம் திடீரென ஒரு திருடன் மாதிரி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பிறகு வீட்டுக்கு வரவே இல்லை. என்னை பிரிந்ததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

இப்போது நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன். தியாகு மீண்டும் வீட்டுக்கு வந்து என்னோட வாழ வேண்டும். முடிவு தெரியாமல் இங்கு இருந்து கிளம்பமாட்டேன். தமிழ் அமைப்பினர் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று தாமரை கூறினார்.

திருமதி மைதிலி தயாபரனின் படைப்புக்கள் ஓர் அறிமுகம்!!

“திருமதி மைதிலி தயாபரனின் படைப்புக்கள் ஓர் அறிமுகம்” நிகழ்வு 01.03.2015 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கலைத் தூது கலையரங்கம், திருமறைக் கலாமன்றம், டேவிட் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

திரு.வேலணையூர் தாஸ் (தலைவர்- யாழ் இலக்கியக் குவியம்) தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை திரு.வினோத் அவர்களும், வாழ்த்துரையை கவிஞர் ந.சத்தியபாலன் அவர்களும் வழங்கவுள்ளனர்.

“விஞ்சிடுமோ விஞ்ஞானம்” கவிதை நூல் அறிமுகவுரையை ந.குகபரன் (ஆசிரியர், இலக்கிய விமர்சகர் வழங்கவுள்ளார்.

“மைதிலி தயாபரனின் நாவல்கள் அறிமுகமும் ஆய்வும்” திரு.சி.ரமேஷ் (இலக்கிய விமர்சகர், ஆய்வாளர்) அவர்களால் வழங்கப்படவுள்ளது. மேலும் இவ் விழாவிற்கான ஏற்புரையை நூலாசிரியர் திருமதி மைதிலி தயாபரன் வழங்கவுள்ளார்.

இன் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

Mithili

257 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி!!

SA

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் குயின்டன் டி கொக் (12) ஏமாற்றமளித்த போதும், காசிம் அம்லா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த கையோடு ஆட்டமிழந்தார்.

பின்னர் டு பிளசி 62 ஓட்டங்களையும், ரில்லி ரொஷோவ் 61 ஓட்டங்களையும் (39 பந்துகள்) விளாசிய நிலையில் வௌியேற, அணித் தலைவர் டிவிலியர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சாளர்களை சரமாரியாக பதம் பார்த்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்த அவர், 66 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 17 நான்கு ஓட்டங்கள், 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 162 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த அந்த அணி 408 ஓட்டங்களை விளாசியது.

விஷேடமாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணியால் 150 ஓட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 409 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கிரிஸ் கெய்ல் 3 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அத்துடன் அந்த அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் (56) மட்டுமே அரைச்சதம் கடந்தார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வரிசையாக வௌியேற, 33.1 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடித்த மேற்கிந்திய தீவுகள், 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாகீர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக டிவிலியர்ஸ் தெரிவானார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபைத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை!!

Puthukkudiyiruppu

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை (28.02) நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் தேர்தலை மார்ச் 27ம் திகதிவரை நடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு மரணம்!!

Maranam

வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் இளையகுட்டி கேதீஸ்வரன் உழவியந்திர பெட்டிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(27.02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி மாறாயிலுப்பை பகுதியில் தனது சகோதரரின் வீட்டில் இருந்து உழவு இயந்திரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி தனது வீட்டில் பறிப்பதற்கு முயற்சி செய்த போது உழவு இயந்திரத்திரப் பெட்டியின் டிப்பர் பம் சீராக இயங்காததால் அதனை சீர்செய்ய முயற்சித்த போது பெட்டியின் டிப்பர் பம் வெடித்து உழவு இயந்திரப்பெட்டி அவர் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இவர் மாறாயிலுப்பை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருமாவார். 42 வயதான கேதீஸ்வரன் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். இந்த விபத்து குறித்து நெடுங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-மலரும்-

ஊனமுற்ற மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!

Girl

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஊனமுற்ற வைத்திய பீட மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008 தேசத்திற்கு மகுடம் இடம்பெற்றபோது கண்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கண்காட்சிகூடம் இடிந்து வீழ்ந்து சமிதா சமன்மலி என்ற அப்போதைய வைத்தியபீட மாணவி ஊனமுற்றார்.

குறித்த மாணவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (பிஎம்ஐசிஎச் நிர்வாகி) மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

வவுனியா பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி!!(படங்கள்)

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வியாழக்கிழமை (26.02) முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.த.அகிலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ம.தியாகராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி.மங்களகுமார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்களும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

IMG_6854 IMG_6855 IMG_6858 IMG_6859 IMG_6861 IMG_6870 IMG_6873 IMG_6874 IMG_6879 IMG_6881 IMG_6887 IMG_6890 IMG_6901 IMG_6906 IMG_6908

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு நாளை தேர்தல் : இன்று வாக்குப்பெட்டி விநியோகம்!!

Puthukkudiyiruppu

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று (27.02) விநியோகிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை 28ம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த பிரதேச சபைகளில் 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 95 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 6 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 90 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுவொன்றை சேர்ந்த 72 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

உயர்தரத்திற்கு கணிதப் பாடம் அவசியமில்லை!!

AL-result

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு, இந்த சலுகையால் அவற்றில் இருந்து விடுபட இயலாது எனவும் மேலும் கூறியுள்ளது.

தேர்தல் முறையை மாற்­றிய பின்­னரே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும் : அரசாங்கம்!!

Rajitha

நாட்டின் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட பின்­னரே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. காரணம் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

தேர்தல் முறையை மாற்­றி­னால்தான் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. எனவே மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் திருத்தம் நிறை­வேற சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவு தேவை­யாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் எனது தனிப்­பட்ட கருத்­தா­னது தற்­போதை முறை மாற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தாகும். இதில் எந்த சிக்­கலும் இருக்க முடி­யாது. தேர்தல் முறையை மாற்­றினால் நான் சில வேளை எதிர்­வரும் தேர்­தலில் தோல்­வி­ய­டை­யலாம். ஆனால் இந்த முறை மாற­வேண்டும் என்­பதே முக்­கி­ய­மாகும்.

கேள்வி: அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன?

பதில்: நாட்டின் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட பின்­னரே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. காரணம் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடி­யாது. தேர்தல் முறை மாற்­றத்தின் பின்­னரே தேர்தல் நடை­பெறும் .இதற்­கான நட­வ­டிக்­கை­கயை நாங்கள் எடுப்போம்.

கேள்வி: 19 ஆவ து திருத்தச் சட்டம் எப்­போது வரும்?

பதில்: மார்ச் மாதத்தில் வரும்.

கேள்வி: தேசிய அர­சாங்கம் அமைக்க தயாரா?

பதில்: கட்­டு­நா­யக்­கவில் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­ல­மர்வில் தேசிய அர­சாங்கம் குறித்து ஆரா­ய­ப­பட்­டது. இறு­தியில் தேசிய அர­சாங்கம் அமைக்க சுதந்­திரக் கட்சி இணங்­கி­யது. இன்று ( நேற்று) சுதந்­திரக் கட்­சியின் மத­திய குழு கூட­வுள்­ளது. அந்தக் குழுவில் இறுதி முடிவு எடுக்­கப்­படும்.

கேள்வி: தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் வலு­வான எதிர்க்க்­கட்சி இல்­லா­து­போய்­வி­டுமே?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் விடு­தலை முன்­னணி இட­து­சாரி கட்­சிகள் என பல உள்­ள­னவே.

கேள்வி வலு­வான எதிர்க்­கட்சி?

பதில்: தேசிய அர­சா­ஙகம் நீண்­ட­கா­லத்­துக்கு நீடிக்­காது. பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் கூட இரண்டு வருடங்களே தேசிய அரசாங்கம் இருககும். அதன் பின்னர் தனித்தனியாக சென்றுவிடுவோம்.

கேள்வி: தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றனவா?

பதில்: சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் ஆராயப்படும்.

வவுனியா ஓமந்தையில் நடந்த விபத்தில் 7 பேர் படுகாயம்!!

Accident

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26.02) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், ஒருவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சுன்னாகம், ஏழாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த வானில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 அறிவித்தல் !

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கல்லூரி அதிபர்  திரேஸம்மா சில்வா தலைமையில் நாளை 27.02.2015 வெள்ளிகிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது .

மேற்படி விளையாட்டு போட்டிக்கு பிரதமவிருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரநாதன் கலந்துகொள்கிறார் .

v1

v2

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல்!!(படங்கள்)

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதேவேளை நேற்று இரவு வடமாராட்சி கிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அறுத்தெறியப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஊடாக மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

1 2 3 4 5 6 7