வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார். இருவருடங்களுக்கு முன்பு இப்படம் வந்தது. தொடர்ந்து விஷ்ணு ஜோடியாக ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை, ஜி.வி.பிரகாசுடன் பென்சில் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா பெயரில் ஆபாசப் படங்கள் இணையத்தளங்களில் வெளி வந்துள்ளன. ஆடையின்றி நிர்வாணமாக செல்பியில் தன்னை படம் எடுப்பது போல் இந்த படங்கள் இருக்கின்றன. ஸ்ரீதிவ்யா தலையை வேறு பெண் உடலோடு ஒட்டி மாபிங் செய்து இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, நிக்கிகல்ரானி, லட்சுமிமேனன் போன்றோர் பெயரில் ஆபாசப் படங்கள் வந்தன. அந்த படங்கள் மாபிங் செய்யப்பட்டவை என்று அவர்கள் மறுத்துள்ளனர்.
ஹன்சிகா பெயரிலும் ஆபாசப் படம் வந்தது. அந்த படத்தில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவர் தரப்பில் மறுக்கப்பட்டது. தற்போது ஸ்ரீதிவ்யா பெயரிலும் ஆபாசப் படங்கள் பரவி வருகின்றன. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்திப்பட உலகினர்.
நடிகர்களின் சம்பள பட்டியலில் சல்மான்கான் முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு இவர் வாங்கும் சம்பளம் 50 கோடி. இளம் கதாநாயகர்கள் பலர் வந்து இருந்தாலும் சல்மான்கான் மார்க்கெட் கொஞ்சமும் சரியவில்லை. 50 வயதை எட்டிய பிறகும் கூட முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். இவரது படங்கள் வசூலை குவிக்கின்றன. கமர்ஷியல் பட நடிகர் என்ற இமேஜை தக்கவைத்துள்ளார்.
அக்ஷய்குமார் ஒரு படத்துக்கு 45 கோடி சம்பளம் வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரை இந்தி பட உலகில் ‘கலெக்ஷன் கிங்’ என வர்ணிக்கிறார்கள். ‘மினிமம் கேரன்டி’ என்றும் தயாரிப்பாளர்களிடம் பெயரெடுத்து உள்ளார்.
அமீர்கான் 40 கோடி சம்பளம் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்களும் வசூல் குவிக்கின்றன. பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் 35 கோடி சம்பளம் வாங்குகிறார். இவர் படங்களும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுகின்றன.
அஜய் தேவ்கானும் 35 கோடி சம்பளம் பெறுகிறார். இவர் சமீபத்தில் நடித்த சிங்கம் படம் வெற்றிகரமாக ஓடின. ஹிருத்திக் ரோஷன் 25 கோடி சம்பளம் வாங்குகிறார். இவரது படங்களுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ரன்பீர் கபூர் 20 கோடி சம்பளம் பெறுகின்றார்.
சிம்பாவே அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில், D/L முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இன்று நடைபெற்ற B பிரிவு லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- சிம்பாவே அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஹோல்டர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
தொடக்க வீரரான டுவைன் ஸ்மித் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க கிறிஸ் கெய்ல்- சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தனர், மிக பொறுப்பாக விளையாடி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர்.
சதமடிக்கும் வரை நிதானித்து விளையாடிய கிறிஸ் கெய்ல் அதற்கு பின் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
147 பந்துகளை சந்தித்த கிறிஸ் கெய்ல் இரட்டை சதம்(10 நான்கு ஓட்டங்கள் , 16 ஆறு ஓட்டங்கள்) அடித்து உலக சாதனை படைத்தார், இவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய சாமுவேல்ஸ் 133 ஓட்டங்கள் எடுத்தார்.
முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 372 ஓட்டங்கள் எடுத்தது.
373 என்ற இமாலய ஸ்கோரை துரத்திய சிம்பாவேக்கு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கின. இருப்பினும் இறுதிவரை போராடிய சிம்பாவே அணி 44.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று, D/L முறைப்படி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணி வீரர் உபுல் தரங்க மெல்போன் நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
தற்போது இலங்கை சார்பில் உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றியுள்ள ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக உபுல் தரங்க அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
உலகக் கிண்ணப் போட்டியின் போது தனது மனைவியை கழிப்பறைக்குள் ஒளித்து வைத்திருந்ததாக கூறியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்.
கடந்த 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்த போட்டிகளின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள், தங்களது மனைவிகளை உடன் அழைத்து சென்றிருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதால் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியது, எனவே அணி நிர்வாகம் வீரர்கள் தங்களது மனைவிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
உடனே அனைத்து வீரர்களும் தங்களது மனைவிகளை திருப்பி அனுப்ப, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் மட்டும் அவரது மனைவி சனாவை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பாமல் தனது அறைக்குள்ளேயே வைத்திருந்தார்.
மேலும் அணியின் மேலாளரோ அல்லது பயிற்சியாளரோ திடீரென வந்தால், அலுமாரி அல்லது கழிப்பறைக்குள் ஒளிந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இந்த விடயம் மற்ற வீரர்களுக்கும் தெரியும் என சக்லைன் தெரிவித்துள்ளார்.
மாங்குளம் – நீதிபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 70 வயதுடைய நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை குஷ்பு மீதான ருத்ராட்ச மாலையில் மாங்கல்யம் அணிந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கும்பகோணம் உமாமகேஸ்வரபுரம் சாரங்கபாணிபேட்டை பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான பாலா, நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யம் அணிந்திருந்த படத்தை வாரப் பத்திரிகை ஒன்றில் கண்டு அதிருப்தி அடைந்துள்ளார்.
இதையடுத்து குஷ்பு மீது கும்பகோணம் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் சரவணபவனிடம் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ருத்ராட்ச மாலை என்பது சிவனடியார்களும், சிவபக்தர்களும் அணியக்கூடியது. குஷ்பு அணிந்திருக்கும் 3 முகம் கொண்ட ருத்ராட்ச மாலை சிவசக்தி வழிபாடு உள்ளவர்கள் மட்டுமே அணியக்கூடியது.
ஆனால் குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை கோர்த்திருப்பது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது.
அவர் இந்து சமயத்தின் மீதும், இந்து கடவுளின் மீதும், இந்து சமய சின்னங்களை களங்கப்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295ன் படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மனுவை வி்சாரித்த நீதித்துறை நடுவர் சரவணபவன், மனுதாரர் பாலா வாரப்பத்திரிகையை பார்த்து அதில் அதிருப்தி அடைந்ததாக கூறியுள்ளார். நேரில் பார்த்த சாட்சிகளை இந்த மனுவில் குறிப்பிடவில்லை.
எனவே இந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் ஷாப்பிங் சென்று திரும்புவதற்கு நேரமானதால் ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக ஐதராபாத் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய மந்திரியும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடமைகள் அனைத்தும் ஏற்றப்பட்டுவிட்ட நிலையில், விமானம் மாலை 7 மணியளவில் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது, பயணிகளுக்கான இறுதி அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி இறுதி அழைப்பு நேரம் வரையில் விமானத்தில் ஏறவில்லை.
விமானத்தில் இருந்த அவரது உடமைகளை உடனடியாக இறக்கிவிட முடியாத காரணத்தால், விமான நிலைய பணியாளர்கள் ரேணுகா சவுத்ரியின் பெயரை பலமுறை அழைத்ததோடு விமானமும் காத்திருந்தது.
இறுதியாக ஷாப்பிங் செய்த களைப்புடன் விமான நிலையத்துக்குள் அவர் நுழைந்தபோது, விமானம் புறப்படுவதற்கு அளிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டது.
இதனால் மீண்டும் புதிய அறிவிப்பு வரும்வரை விமானி காத்திருந்தார். இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விமானம் சுமார் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள ரேணுகா சவுத்ரி, நான் ஷாப்பிங் சென்றதால்தான் விமானம் தாமதமாக புறப்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது ஏர் இந்தியா இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இளம் வயது சிறுவர்களுக்கான தீவிரவாத பயிற்சி வழங்கும் காணொளியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
இராணுவப் பயிற்சி மற்றும் அணிவகுப்பில் 100 க்கும் அதிகமான சிறுவர்கள் ஈடுபடுதலை உள்ளடக்கியதான ஒன்பது நிமிடங்களைக் கொண்ட காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் கொடி பறந்துகொண்டிருக்க, சீருடைகள் அணிந்த சிறுவர்கள் கறுப்பு நிற நாடாக்களைக் கட்டியவாறும் பயிற்சியாளரின் கட்டளை பிறப்பித்தல்களுடனும் குறித்த காணொளி இடம்பெற்றுள்ளது.
இந்த படையை ‘இளம் புலிகள்’ என இஸ்லாமிய தேச இயக்கத்தின் காணொளி குறிப்பிடுகின்றது.
இந்த சிறுவர் படையில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களும் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வவுனியா சிதம்பரபுரம் பூந்தோட்டம் நலன்புரி முகாம்களில் வசிப்பவர்களை அதே இடத்தில் குடியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மீள் குடியேற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கௌரவ ஆ.சுவாமிநாதன் அவர்கள்,
மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு,
146, காலி வீதி, கொழும்பு 03
இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பானது
மேற்படி விடயம் தொடர்பாக தங்களின் மேலான கரிசனைக்கு பின்வரும் விடயங்களை தயவுடன் முன்வைக்கின்றேன்.
இந்தியாவிலிருந்து 1996 ஆண்டுகளில் வருகை தந்த ஒருதொகுதியினர் வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெருமளவிலானோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மீதமாகவுள்ள ஒருதொகுதியினர் தொடர்ந்தும் அதே பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வடககு மாகாணத்தில் வேறெந்த பகுதியிலும் சொந்தக்காணி இல்லாத நிலையில் இவர்களை குடியிருக்கும் அதே இடத்தில் காணிகளை வழங்கி குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சிதம்பரபுரத்திலுள்ள மேற்படி மக்கள் வாழ்ந்துவருகின்ற காணி 2013 ஆண்டில் அரச நிலஅளவையாளர்களால் நிலஅளவீடு செய்யப்பட்டு 41.7491 ஹெக்ரேயராக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் 29.4409 ஹெக்ரேயர் மக்கள் குடியிருப்பு அமைப்பதற்கும், (ஒவ்வொரு குடும்பத்திற்கும் 0.1518 ஹெக்ரேயர் ஒதுக்கப்பட்டுள்ளது) 5.8300 ஹெக்ரேயர் பொது தேவைக்கும்; 6.4782 ஹெக்ரேயர் உள்ளக வீதி அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிதம்பரபுரத்தில் 177 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் பூந்தோட்டத்தில் 70 குடும்பங்கள் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பூந்தோட்டத்திலுள்ள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மக்கள் நடமாற்றமற்ற காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் மீள்குடியேற்றம் செய்வதற்கு மாவட்ட செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட பகுதியானது காட்டுப்பகுதி மட்டுமல்லாது மழைகாலத்தில் வெள்ளம் நிற்கக்கூடிய குடியிருப்பு அமைப்பதற்கு பொருத்தமற்ற காணியாகும்.
அன்றாட வருமானமாக பெரும்பாலும் கூலித்தொழிலை செய்துவரும் இக்குடும்பங்களின் தமது வாழ்வாதாரத்திற்காக வவுனியா நகரத்திலேயே தங்கியுள்ளனர். அத்துடன் இவர்களது பிள்ளைகளும் தமது கல்வியை நகரப்பாடசாலைகளிலேயே தொடர்கின்றனர்.
எனவே இவர்களை சிதம்பரபுரத்திலேயே காணிகளை பகிர்ந்தளித்து குடியேற்றுவதே சாலப்பபொருத்தமாகும். ஆகவே தயவுகூர்ந்து தங்கள் பிரதிநிதியொருவரை வவுனியா மாவட்டத்திற்கு அனுப்பி உண்மையான களநிலவரத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்வதோடு தங்களின் நடவடிக்கைகளுக்கு மாவட்ட மட்டத்தில் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்க தயாராவுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி,
மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம்,
சுகாதார சுதேச வைத்தியத்துறை, சமூக சேவைகள், புனர்வாழ்வு, சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர்.
வடக்கு மாகாணம்.
ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலை சமூகம் மற்றும் பொதுசன அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன போராட்ட பேரணியை நடாத்தி இருந்தனர்.
குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தி வெளியிடப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாகவும், அதனை காலம் தாழ்த்தாது மார்ச் மாதமே வெளியிட வேண்டும் என கோரியுமே இப்போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைகழக பரமேஸ்வரன் ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி பலாலி வீதி ஊடாக நல்லூர் வீதியை சென்றடைந்தது.
நல்லூர் ஆலய வீதியில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு சமர்பிக்க என மகஜர் ஒன்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த கண்டன போராட்ட பேரணியில் பல்கலைகழக சமூகம், பொதுசன அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தென் மாகாண சபையின் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இன்று மாட்டு வண்டியொன்றில் பயணப்பட்டே சபைக்குச் சென்றிருக்கிறார்.
தமது சொந்த கப் ரக வாகனத்தை, ஜனாதிபதி செயலக வாகனம் எனக்கூறி அரசாங்கம் சுவீகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே தாம் இவ்வாறு மாட்டவண்டியில் பயணப்பட்டு சபை அமர்வுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இன்று நடக்கும் பி பிரிவு ஆட்டத்தில் சிம்பாப்வே- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் சிம்பாப்வேயின் பந்தை துவம்சம் செய்த கிறிஸ் கெய்ல், இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கெய்ல் எட்டினார்.
147 பந்துகளை சந்தித்த கெய்ல் 215 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன் தென்னாபிரிக்காவின் கிறிஸ்டன்(188*), இந்தியாவின் கங்குலி(183) அதிக ஓட்டங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரை இன்று(24.02.2015) பயணத்தை ஆரம்பித்துள்ளது. மேற்படி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தில் சிறிது நேரம் தரித்து நின்றபோது ஏராளமான பொதுமக்கள் குழுமி பார்வையிட்டனர் .
என்னதான் புதியவை அறிமுகமானாலும் பழையவைக்குஎப்போதும் மவுசு குறைவதும் இல்லை . புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது.இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரை இன்று பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கைத்தொழில் புரட்சியின் பின் கண்டுபிடிக்கபட்ட இயந்திரங்களில் மிக முக்கியமானவை இந்த நீராவி இயந்திரங்களாகும் .
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவது சுட்டிக்காட்டதக்கதாகும்.தற்போதைய காலகட்டத்தில் இயங்கும் புகையிரத்தில் சாரதிகளுக்கு பல வசதிகள் இருந்தாலும் அக்காலத்தில் இயங்கிய நீராவி புகையிரதத்தில் சாரதிகளுக்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பயணித்த இந்த புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதிகளவான மக்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கூடிய எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கணிணி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்னஞ்சல் ஊடாக பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் போது போலியான மற்றும் மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தமது பிரிவினருக்கும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.