ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து!!

ENG

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கிண்ண தொடரின் 14வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பாக மொயீன் அலி 128 ஓட்டங்களையும், இயன் பெல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஸ்கொட்லாந்து அணி சார்பாக ஜோஷ் டெவி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 304 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 42.2 ஓவர்களிலே சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கொட்லாந்து அணி சார்பாக கோயிட்சர் அதிகபட்சமாக 71 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

பந்துவீச்சில் ஃபின் 3 விக்கெட்டுகளையும், அண்டர்சன், வோக்ஸ், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஸ்கொட்லாந்து அணியை துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் மிரட்டிய மொயீன் அலி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

விமல் வீரவன்சவின் மனைவி கைது!!

VImal

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொய்யான தகவல்களை வழங்கி பெற்றுக்கொண்ட சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே, சஷி வீரவன்ச மாலபே பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சஷி வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவரே தாமாக சென்று வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

பஸ்-லொறி விபத்தில் 50 பேர் காயம்!!

accident-logo

தம்புள்ளை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 50 பேரளவில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை – திஹம்பத்தன பகுதியில் பஸ்ஸொன்று லொறியொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் -2015!!(அறிவித்தல்)

karumari2

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழா

நிகழும் ஜய வருடம் மாசி மாதம் 11ஆம்நாள் (23.02.2015)திங்கட்கிழமை பஞ்சமி திதியும்  அஸ்வினி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.00மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி மாசிமாதம் 20தாம்  நாள் (04.03.2015)புதன்கிழமை  மாசிமக நன்நாளில் தீர்தோற்சவத்துடன் நிறைவுபெற ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் திருவருளும் குருவருளும் நிறைந்துள்ளதால்  அனைவரும் வருகை தந்து திருவிழாகளிலில் கலந்து கொண்டு அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு   அன்புடன் அழைக்கிறோம் .

தகவல் :ஆலய பரிபாலன சபை

தொடர்புகளுக்கு :0242225034

10984548_966143083405645_1620819970960551410_o

சமந்தாவை காண வந்த ரசிகர்களுக்கு தடியடி கொடுத்து விரட்டிய பொலிசார்!!

 

Samantha

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.இவர் அவ்வப்போது புடவைக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு சென்று வருவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று ஐதராபாத்தில் வணிகவளாகம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த சமந்தாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.சிலர் கையைப்பிடித்து இழுக்கவும் முயற்சி செய்தனர்.

இதனையடுத்து பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தி சமந்தாவை காரில் ஏற்றி அனுப்பினர்.

என்னைக் களங்கப்படுத்த சதி நடக்கிறது : நடிகை லட்சுமி மேனன் குமுறல்!!

Laxmi menon

லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணையதளங்களிலும், வட்ஸ் அப் குழுக்களிலும் பரவி வருகிறது. இதனால் திரைப்பட துறையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது இந்த வீடியோவை குறித்து லட்சுமி மேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தனுஷுடன் எனக்கு மோதலா : அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்!!

Danush

நடிகர் தனுஷுடன், சிவகார்த்திகேயனுக்கு சண்டை என்ற செய்தி சமீபகாலமாக வைரலாக பரவி வருகிறது. அதற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது,

நானும், தனுஷும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் எந்த மோதலும் கிடையாது. அவர் காக்கி சட்டை புரொமோஷன்களில் கலந்து கொள்ளாததற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. முதலில் எங்களை தூக்கி விட தனுஷ் வந்தார்.

தற்போது நாங்கள் வளர்ந்து விட்டதால், உங்களை நீங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கலந்துக் கொள்ளவில்லை என்றார்.ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு தொலைகாட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் வெளியேறிவிட்டார். இது அவர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

ஈழ உணர்வைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற ஜெசிக்கா : சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதம்!!

jasikka

தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாடல் போட்டியான சுப்பர் சிங்கரில் முதன்முறையாக ஈழத்தைச் சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் பரிசாக அவருக்குக் கிடைத்த 1 கிலோ தங்கத்தை இந்திய மற்றும் ஈழத்தில் உள்ள அனாதைக் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால் ஜெசிக்கா ஈழ உணர்வை வைத்துத்தான் வெற்றிபெற்றார் என்றொரு கருத்தை சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தனது வெற்றிக்காக ஈழ உணர்வைப் பயன்படுத்தியதை எதிர்த்து பலர் தங்களது விமர்சனங்களை கூறியுள்ளனர். அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் வருமாறு..

போட்டியின் ஆரம்பத்தில் தமிழில் சரியாக பேச முடியாமல் நடுவராக கலந்துகொண்ட மூத்த பாடகி சித்ராவினால் ” தமிழுக்காக போராடுவதாக கூறும் உங்களுக்கு தமிழே பேசத் தெரியவில்லை.. இது பெருமையான விடயமா?” என விமர்சனத்திற்கு உள்ளானவர் ஜெசிக்கா. பின்னர் ஓரளவு தமிழை பேசக் கற்றுக் கொண்டார்.

இவர் பாடிய ஒவ்வொரு சுற்றிலும் “எக்ஸ் மச்சி வை மச்சி”, “நெஞ்சினிலே நெஞ்சினிலே”, “அட என்னாத்த சொல்வேனுங்கோ” என எல்லாவகையான இசை வடிவங்களிலும் பாடித்தான் தனது திறமையை நிருபித்துள்ளார்.

வைல்ட் காட் சுற்றில் தான் மக்களிடம் வாக்குக் கேட்டார். அப்போதும் கூட தான் ஒரு ஈழத்துப் பெண் என்று கூறி வாக்குக் கேட்கவில்லை. நான் திறமையானவர் என நீங்கள் நம்பினால் எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்டிருந்தார்.

இறுதிப் போட்டியில் ஈழ உணர்வைக் காட்டி அனைவரினதும் உணர்வுகளைத் தூண்டி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். கனடாவிலே பிறந்து வளர்ந்த இவரால் உண்மையில் ஈழ உணர்வை வெளிப்படுத்த முடியுமா?

ஈழ உணர்வு இன்று அரசியல்வாதிகளால் மட்டுமன்றி பலரால் சுய தேவைக்காக பயன்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது என பலர் தமது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

4 கோடிக்கு ஏலம் போன மோடி அணிந்த கோட்!!

Modi

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகையின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த கோட் 4.31 கோடிக்கு ஏலம் போனது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, “நரேந்திர தாமோதர் தாஸ்” என்று பெயர் பொறிக்கப்பட்ட ஆடையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தார்.

இதன் விலை 10 லட்சம் என்று கூறப்பட்டது. இதை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கிண்டல் செய்தனர். ஆனால் மோடி அணிந்த கோட் ஏலம் விடப்படும், அதில் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மைத் திட்டத்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சூரத் நகரில் கடந்த 18ம் திகதி காலை தொடங்கிய ஏலம், 20ம் திகதி மாலை வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் மோடி பதவியேற்ற பின் கடந்த 7 மாதங்களில் அவருக்கு வந்த 455 பரிசுப் பொருட்களும் ஏலத்துக்கு வந்தன.

முதல்நாளான 18ம் திகதி மாலையில் அதிகபட்சமாக குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விரால் சவுக்கி என்பவர் 1.11 கோடிக்கு ஏலம் கேட்டார்.

தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே செல்ல, கடைசியில் சூரத்தில் தர்மானந்தா வைர நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் லால்ஜி படேல் அவருடைய மகன் ஹிதேஷ் படேல் இருவரும் சேர்ந்து 4.31 கோடிக்கு ஏலம் எடுத்தனர்.

சொத்திற்காக பெற்ற தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கிணற்றில் வீசிய மகன்!!

Blood

கர்நாடகாவில் தந்தை ஒருவரை அவரது மகனே துண்டு துண்டாய் வெட்டி கொன்று கிணற்றில் வீசிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்பள்ளாபூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (57) என்பவருடைய மகன் சுதாகர் (21).

குடிப்பழக்கம் உடைய சுதாகர், தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து தந்தையிடம் நிலத்தை தன் பெயரில் எழுதி கொடுக்க மிரட்டியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுத்த வெங்கடேசப்பா, உனக்கு இப்போது எதுவும் எழுதி தரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசப்பாவை வெட்டி கொலை செய்தார்.

பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி துணியால் சுற்றி அருகில் உள்ள கிணற்றில் வீசி விட்டு ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பத்தலவள்ளி பொதுமக்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து சென்ற பொலிசார் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கொலைவழக்கு பதிவு செய்து சுதாகரை வலைவீசி தேடி வருகின்றனர்.

செவ்வாய்கிரகத்தில் குழந்தையைப் பெற்றுடுக்கப் போகும் பெண்!!

marsbaby_birth_002

செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த ‘Mars One’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ‘The Mars 100’ என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டத்தின் மூலம் பூமியிலிருந்து சுமார் 100 நபர்களை தெரிவு செய்து, 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேற்ற முடிவெடுத்தது.

இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசம் நிறைந்த பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் நபர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்தனர்.

இவர்களில் ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், பொலிவியா, வியட்நாம், ஜப்பான், ஈராக், உக்ரெய்ன் மற்றும் சீனாவை சேர்ந்த 100 நபர்களை இறுதியாக தெரிவு செய்யும் பணி கடந்த வாரத்தில் நடந்து முடிந்தது.

இந்த பயணத்திற்கு தெரிவான ஒக்ஸ்போட் பல்கலைக்கழக மாணவரான ரியான் மெக்டொனால்ட் கூறுகையில், இந்த உலகத்தில் இருப்பவர்கள் வழக்கமாக செய்வதை விட வித்தியாசமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது எனது லட்சியம்.

மேலும், இந்த முயற்சி மற்றவர்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 24 வயதான மேகி லியூ என்ற பெண் தெரிவாகியது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளதாக வியப்பூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

செவ்வாய்கிரகத்தில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமா இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 நபர்கள் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டொலர்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்குபெறுபவர்கள் அனைவருக்கும் வருடக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரம்மாண்ட பயணத்தை உருவாக்கியவரும் மற்றும் The Mars 100 திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ்டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்க போகும் இந்த பயணத்தை நேரடியாக செவ்வாய் கிரகத்திலிருந்து ஒளிப்பரப்ப போகிறோம்.

தொலைக்காட்சி மற்றும் இணையதள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்த பயணத்தை கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (21.02.2015) பாடசாலை அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ திரு.ப.சந்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.லிங்கநாதன், திரு.இ.இந்திரராஜா, திரு.ம.தியாகராஜா அவர்களும், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக திரு.இ.சிவலிங்கம்(வவுனியா தெற்கு பிரதேசசபைத் தலைவர்) அவர்களும், திரு.M.P.நடராஜா (கோட்டக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா நகரம்) அவர்களும், ஜனாப் அ.முகமட் சுபைர் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-உடற்கல்வி) அவர்களும், திரு.S.கனேசபாதம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-உடற்கல்வி) அவர்களும், திரு.லலித் ஜயசேகர (மாவட்ட விளையாட்டு அதிகாரி, நகரசபை உறுப்பினர்) அவர்களும், திரு.யூட் பரதமாறன் (உடற்கல்வி ஆலோசகர்) அவர்களும், திரு.ப.தர்மலிங்கம் (பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

-பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5

தென் ஆபிரிக்க அணியை 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி!!

Ind

இன்று நடைபெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிராக உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலக கிண்ணப் போட்டிகளில் இன்று நடைபெறும் 13வது லீக் போட்டியில் இந்தியாவும்- தென் ஆபிரிக்காவும் பலப் பரீட்சை நடாத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களை எடுத்தது.

146 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான், 137 ஓட்டங்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார்.
மேலும் அங்கித் ரஹானே 79 ஓட்டங்களையும், விராத் கோஹ்லி ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆபிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் விக்கட்டுகளை சீரான இடைவெளியில் இழந்த தென்னாபிரிக்க அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

எனவே இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டுபிலசிஸ் 55 ஓட்டங்களையும் டி விலியர்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி சார்பாக அஸ்வின் 3 விக்கட்டுகளையும், சமி மற்றும் மோகித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட ஷிகர் தவான் ஆட்ட நாயனாக தெரிவு செய்யப்பட்டார்.

வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் : பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்ரம் எச்சரிக்கை!!

Pak

உலகக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று நடந்த 10ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தானும் மோதின. போட்டியில் பாகிஸ்தானை 160 ஓட்டங்களுக்குள் சுருட்டி மேற்கிந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்து இருப்பதால் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

எஞ்சிய 4 ஆட்டங்களில் குறைந்தது 3இல் வெற்றி பெற்றால் தான் கால்இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியினை ரசிகர்கள் பெரிதும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுங்கள், அல்லது முன்னதாகவே நாட்டிற்கு திரும்பிவிடுங்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி எதிர்வரும் மார்ச் 1ம் திகதி சிம்பாவே அணியினை எதிர்க்கொள்கிறது. பாகிஸ்தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றநிலையே உள்ளது. இந்நிலையில் வெற்றி பெறுங்கள் அல்லது விளையாட்டி முடித்துக் கொண்டு நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என்று வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வசிம் அக்ரம் “அவர்களால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது, ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றால் முன்னதாகவே நாட்டிற்கு திரும்பட்டும்,” என்று கூறினார்.

மைதானத்தில் விளையாட்டை பார்ப்பவர்களையும், நாட்டில் தொலைக்காட்சிகளில் போட்டியை பார்ப்பவர்கள் குறித்தும் அவர்கள் உணரவேண்டும் என்று பெரிதும் காட்டமாக கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு இதேபோல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் போட்டி நடைபெற்றபோது பாகிஸ்தான் அணியே வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது. அப்போதைய பாகிஸ்தான் அணியில் முக்கிய இடம்பிடித்தவர் வசிம் அக்ரம் பாகிஸ்தான் கிர்க்கெட் அணியின் நிர்வாகத்தையும், அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் விவகாரம் தொடர்பாக நான் கடந்த பலமாதங்களாக கூறி கொண்டே இருக்கின்றேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து 4 பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகின்றனர். அவர்களது வலுவானநிலையை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகின்றனர்.

நாம் கூடுதல் துடுப்பாட்ட வீரர்களை கொண்டு விளையாடினால், எதிர்அணியை பின்தொடர முடியும். பின்னர் ஏமாற்றம்தான் இருக்கும், இன்னும் பிரச்சனையில் பாகிஸ்தான் தரையிறக்கும். அவர்கள் விரைவில் அணியை மீண்டும் பலமானதாக கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறிய அக்ரம், அயர்லாந்திடம் தோல்வி அடைந்து அதிரடி காட்டிய மேற்திந்திய அணியே பாகிஸ்தானுக்கு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதால் 9 வயதுச் சிறுவனை கடுமையாக தாக்கிய உறவினர்கள் : கிளிநொச்சியில் சம்பவம்!!

Boy

பரீட்சையில் குறைவான புள்ளி பெற்ற ஒன்பது வயது பாடசாலை மாணவனான சிறுவனை உறவினர்கள் மோசமாக தாக்கியதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை செல்லும் வசதிக்காக விஸ்வமடு தொட்டியடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தார்.

இதன்போது பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்தமைக்காக குறித்த உறவினர் இவரை தாக்கி காயப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம்யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை : காரணம் என்ன!!

Hand

ஊர்காவற்துறை – நாராந்தனை வடக்கு பிரதேச வீடொன்றில் இளம்யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாராந்தனை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் தொடர்பாடல் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.