வீரகேசரி இணையத்தளம் விசமிகளால் முடக்கம்!!

Hack

வீரகேசரி இணையத்தளம் இன்று காலை முடக்கப்பட்டிருந்தது. ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இணையத்தள சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக வீரகேசரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்காக 500 கோடி ரூபாய் பந்தயம் : கோலி, அப்ரிடி மீது அதிக பந்தயம்!!

Ind

இந்தியா பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இந்தியாவில் மாத்திரம் 500 கோடிக்கு மேல் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

இந்தியாவின் பெங்களூர் பகுதிகளில் சுமார் 300 கோடிகளுக்கும் அதிகமாக சூதாட்டம் நடைபெற்றுள்ளது.

அதுமாத்திரமின்றி மைசூர் போன்ற மாநிலங்களின் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுமார் 200 கோடிகளுக்கும் அதிகமான சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் இந்திய வீரர்களான விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா மற்றும் முஹமது ஷமி மற்றும் பாகிஸ்தான் வீரர்களான யுனிஸ்கான், அப்ரிடி, மிஸ்பா ஆகியோர் மீதும் அதிகளவில் பந்தய பணம் கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் பூமியதிர்ச்சி!!

Earthquake

அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தை பூமியதிர்ச்சிகள் இன்று திங்கட்கிழமை தாக்கியுள்ளன.

அரிதாக தாக்கிய இந்த பூமியதிர்ச்சிகள் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவில் உணரப்பட்டுள்ளன.

முதலாவது 5.2 ரிச்டர் பூமியதிர்ச்சி எயிடஸ் வோல்ட் நகருக்கு அருகில் தாக்கியுள்ளது.

அதற்கு சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து இரண்டாவது பலவீனமான பூமியதிர்ச்சி அந்நகருக்கு அயலிலுள்ள மவுண்ட் பெரியில் தாக்கியுள்ளது. இதனால் மின் துண்டிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்படி பூமியதிர்ச்சிகளால் எவரும் காயமடைந்ததாக அறிக்கையிடப்படவில்லை

வவுனியாவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (16.02) அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு ஒன்று முற்றாக எரிந்துள்ளது.

தீப்பொறியொன்று காற்றில் பறந்து வந்து வந்து வீட்டின் மீது வீழ்ந்ததனாலேயே இச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் பாடசாலை மாணவர்கள் இருவரது கற்றல் உபகரணங்கள் உட்பட வீட்டின் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டார் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

3 2 1

கைபேசியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே பேசியதால் வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

mobile

கர்நாடகவில் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் வாலிபர் ஒருவர், கைப்பேசியை சார்ஜ் செய்து கொண்டே பேசியதில் மின்சாரம் பாய்ந்து வெடித்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், மைசூர் நகரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்றாம் திகதி இவரது செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்த போது தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து விடுவிக்காமலேயே அவர் பேச முயன்றபோது பயங்கர சத்தத்துடன் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட அவசர சிகிச்சையில் அந்த நபரின் சிதைந்த முகத்தில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து ஒட்டி தையல் போட்டுள்ளனர்.

மேலும், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த முக அமைப்பை மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு காலமும் ஆகும் என தெரியவந்துள்ளது.

கார் மோதி பெண் காயம் : நடிகை கைது!!

Pooja_Gandhi

தமிழில் கொக்கி, திருவண்ணாமலை, தலையெழுத்து போன்ற படங்களில் பூஜா காந்தி நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூஜா காந்தி பெங்களூரில் உள்ள ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார்.

காரை அவர் வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த வர்ஷா சகானி என்ற 55 வயது பெண் மேல் அவரது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பூஜா காந்தி காரை நிறுத்தாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து ஜெயநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பூஜா காந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, பூஜா காந்தியை அவரது வீட்டில் கைது செய்தோம். பெண் மேல் காரில் மோதி விட்டு உடனே அவர் தலைமறைவாகி விட்டதால் விபத்து குறித்து போலீசுக்கு தெரிய படுத்தாமல் அவர் மறைந்தது குற்றமாகும். பூஜா காந்தியிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெறப்பட்டு உள்ளது என்றனர்.

அந்த வீடியோவில் இருப்பது ஹன்சிகாவா : அதிர்ச்சியில் திரையுலகம்!!

Hansika

தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக தான் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதையும் தாண்டி, கதாநாயகிகள் ஸ்கிரீனுக்கு வெளியே எடுக்கும் சில தனிப்பட்ட புகைப்படங்களை யாரோ நெட்டில் வெளியிட, அவர்களுக்கு இது பெரிய தலை வலியாகிறது.

அதே போல் பிரபல நடிகை ஹன்சிகா குளிப்பது போல் ஒரு வீடியோ தான் தற்போதைய வட்ஸ் அப் வைரல். இதற்கு முன் பல நடிகைகளின் படங்கள், வீடியோக்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், இதில் இருப்பது ஹன்சிகா இல்லை மார்பிங் செய்யப்பட்டது என பலர் கூறி வருகின்றனர்.

காளையால் வெறித்தனமாக தாக்கப்பட்ட இளைஞன் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற காளை பிடிக்கும் திருவிழாவில், அமெரிக்கர் ஒருவரை காளை குத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள Ciudad Rodrigo நகரில் வருடந்தோறும் நடைபெறும் del Toro என்ற காளை பிடிக்கும் திருவிழா உலகம் முழுவதும் பிரபலம் வாய்ந்தது.

இந்த திருவிழா சமீபத்தில் தொடங்கிய நிலையில், காளை பிடிக்கும் விளையாட்டை கண்டுகளிக்க நேற்று உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் Ciudad Rodrigo நகரில் திரண்டனர்.

இவர்களில் அமெரிக்க நாட்டின் Georgia மாகாணத்தை சேர்ந்த பெஞ்சமின் மில்லர் என்பவர் தனது அமெரிக்க நண்பர்களுடன் காளை பிடிக்கும் திருவிழாவிற்கு வந்துள்ளார்.

விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக திடலுக்குள் திமிறிக்கொண்டு வந்தன. அதில் ஒரு காளை கூட்டதில் புகுந்து அங்கே நின்றுக்கொண்டிருந்த மில்லரை தாக்கத் தொடங்கியது.

காளையிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது, அது மில்லரின் மேலாடையை கிழித்து அவரது தொடையில் கொம்பை இறக்கியது.
தொடையை கிழித்தவாறே அவரை நெடுந்தூரம் தூக்கி சென்றது. இதில் அலறி துடித்த மில்லரை காப்பாற்ற அவரது நண்பர்கள் காளையின் வாலை பிடித்து இழுத்து முயற்சி செய்தனர்.

சில நிமிடங்கள் போராட்டங்களுக்கு பிறகு காளையிடமிருந்து மில்லரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
மில்லரை பரிசோதித்த மருத்துவர் மில்லரின் தொடையில் சுமார் 40 செ.மீ அளவிற்கு ஆழமாக காயம் ஏற்பட்டுள்ளது.

காளை தாக்கி இவ்வளவு ஆழமான காயத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை எனக்கூறிய அவர், மில்லருக்கு சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தார். வருடந்தோறும் நடைபெறும் இந்த காளை திருவிழாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

11 12 13 14 15

தெலுங்கு நடிகை தற்கொலை : காதலனிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

Sucide

தெலுங்கு நடிகை தீப்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு என்பவரின் மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி.

இவருக்கும், விஜயநகரம் பார்வதிபுரத்தில் பெயிண்டராக வேலை பார்க்கும் சங்கர் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார்.

தீப்தி என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும் அகவனம், லக்கிலட்சுமி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

தற்போது ஹைதராபாத் பட்டேல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்-மனைவியாக வசித்து வந்தார்.

ரமேஷ்குமாரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தீப்தி மர்மமான முறையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்த காதலன் ரமேஷ்குமார் சடலத்தை இறக்கி பொலிசிற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தீப்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகமடைந்த பொலிசார், தீப்தி காதலன் ரமேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் கூறுகையில், நேற்று காலை வீட்டிற்கு வந்தேன். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, தீப்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் ஜன்னல் வழியாக சென்று பிணத்தை இறக்கினேன் என்று கூறியுள்ளார். தீப்தி தனது தற்கொலையை ‘ஐ பேடில்’ பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

act

இந்தியாவைச் சென்றடைந்த மைத்திரியை வரவேற்ற மோடி : காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திய மைத்திரி!!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் மைத்திரி சந்திக்கிறார். இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவாத்தையும் இடம்பெறவுள்ளது.

காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார் மைத்திரி

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

மனைவி மற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளோடு காலை ராஜ்காட் சென்ற சிறிசேன, காந்தி சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்ற சிறிசேனவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதன்போது ஜனாதிபதி சிறிசேனவுக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

1 2 3

8ஆவது ஐ.பி.எல் : மத்தியூஸ் 7 கோடிக்கு விற்பனை, மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஏலத்தில் எடுபடவில்லை!!

sanga8ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, டில்ஷான் ஆகியோர் ஏலத்தில் விற்கப்படவில்லை.

உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடர் முடிந்த மறு கணமே ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. 8ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்க உள்ளன.

8ஆவது ஐ.பி.எல். போட்டிக்காக அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களும், புதிய வீரர்களும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல். ஏலம் பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் தற்போது நடைபெறுகிறது.

யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை 60 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூசை 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லாவை ஆகியோரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

முரளி விஜயை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 1.5 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை 3.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

அமித் மிஸ்ராவை 3.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

தினேஷ் கார்த்திக்கை 10.5 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை 2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

குசேல் ஜனித் பெரேராவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை

பத்திரிநாத்தை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 30 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

கெமரூன் வயிட், பிராட் ஹொட்ஜ், ரோஸ் டெய்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

புஜாரா, மைகேல் கார்பெர்ரி, மெத்தீவ் வேட், லூக் ரோஞ்சி, தினேஷ் ராம்டின், பிரெண்டென் டெய்லர் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

மைகேல் ஹசியை 1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியது.

டில்ஷான், சாமுவேல்ஸ், இர்பான் பதான் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

சீன் அபோட்டை 1 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

சகிர் கான்,அபிமன்யு மிதுன்,முனாப் படேல் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஜெயதேவ் உனட்கட்டை 1.1 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்டை 3.8 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

லக்ஷ்மி ரடன் சுக்லாவை 30 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

பிரவீன் குமாரை 2.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 1.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

டெரன் சமியை 2.8 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் ரவி போபரா 1 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம் மை 50 இலட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

அஜந்த மெண்டிஸ், நெதன் மெக்லம், எல்பி மோர்கல் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

டேவிட் ஹசி, ரொபின் பீட்டர்சன், அசார் முஹம்மத் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

டேவிட் வைசை 2.8 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

பர்விஸ் மஹ்ரூப், சுரங்க லக்மால், பார்ஹான் பெஹர்டீன், ஜோனதன் கார்ட்டர், நாதன் ரியர்டன் , டெக் பிரேஸ் வெல், கிரான்ட் எல்லியோத்ட், என்டன் தேவ்சிச், சுதீப் த்யாகி, ஷோன் டைட் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

லக்ஷ்மிபதி பாலாஜி, ஆர்.பி.சிங், பொலிஞ்சர் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

கெயில் அபோட்டை 30 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியது.

மிட்செல் மெக்லேனகானை 30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஷர்பாராஸ் கானை 50 லட்சத்துக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

ஹனுமா விஹாரியை 10 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

ஸ்ரெயர் ஐயரை 2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

டெரன் பிராவோ, ரிச்சர்ட் லெவி, வேணுகோபால் ராவ், கல்லும் பெர்குசன் ஆயயோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

பிராட் ஹொட்சை 50 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

ராகுல் ஷர்மாவை 30 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

பிரக்யன் ஓஜாவை 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

நியூசிலாந்து வீரர் ஹெடம் மைனை 70 லட்சத்துக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

வவுனியா பூவரசங்குளத்தில் பாடசாலையிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!!

Sivasaththi Aananthan

வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்பப் பாடசாலையில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பூவரசு ஆரம்பப் பாடசாலையில் விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தடையாகயுள்ளது.

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தனியார் காணிகளில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அப்புறப்படுத்தப்பட்டு அக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முந்தைய அரசாங்கமும் இது தொடர்பில் அக்கறைகாட்டவில்லை, எமது கோரிக்கைகளை புதிய அரசாங்கம் செவிமடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிசார் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே இங்கு கல்வி பயிலும் சுமார் 125 மாணவர்களின் நலன் கருதி விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு அவர் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

21 கிறிஸ்தவர்களை தலை துண்டித்து படுகொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்!!(வீடியோ இணைப்பு)

Terror

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்போது லிபியாவிலும் பல பகுதிகளை கைப்பற்றி அங்கும் காலூன்றி உள்ளனர். இவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்று தலை துண்டித்து படுகொலை செய்கின்றனர்.

இதற்கு முன்பு அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த பிணைக் கைதிகளை தலை துண்டித்து கொன்றனர். தற்போது எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை அதே பாணியில் கொலை செய்துள்ளனர்.

அண்டை நாடான லிபியாவில் எகிப்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு சிர்தே நகரில் தங்கியிருந்த ஏராளமான கிறிஸ்தவர்களை கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடத்தி சென்று பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர்.

அவர்களை ஈவு இரக்கமின்றி தலைகளை துண்டித்து படுகொலை செய்தனர். அதுவும் ஒரே நேரத்தில் இவர்களை கொன்றனர்.

இது குறித்த புதிய வீடியோவை அவர்களது தபிப் ஒன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதில், வழக்கம் போன்று பிணைக் கைதிகள் ஒரஞ்ச் நிற உடை அணிந்திருந்தனர். அவர்கள் கடற்கரையில் நடத்தி அழைத்து செல்லப்படுகின்றனர்.

கைவிலங்கிடப்பட்ட அவர்கள் அனைவரையும் முழங்காலிட வைக்கின்றனர். கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் அவர்களது தலைகளை கத்தியால் துண்டிக்கின்றனர். இந்த வீடியோ காட்சி 5 நிமிடங்கள் ஓடியது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

லிபியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது எகிப்து குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு நாடுகள் எகிப்தில் தளங்கள் அமைத்து குண்டு வீச்சு நடத்தின.

மேலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தலைவர் பின்லேடனை கொன்று அவரது உடலை கடலில் அமெரிக்கா புதைத்தது. எங்கு அவர் புதைக்கப்பட்டார் என்று வெளி உலகுக்கு அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இது போன்ற காரணகளுக்கு பழிவாங்க ஐ.எஸ். தீவிரவாதிகள் கிறிஸ்தவ பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்ததாக தெரிகிறது. மேலும் எகிப்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்களின் மனைவிகள் கமிலா ஷெஹாடா, வாபா கர்னஸ்டன்டின் ஆகியோர் இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்பினர். அதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பழிவாங்கவும் இந்த நடவடிக்கை மேற் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே கிறிஸ்தவர்கள் படுகொலைக்கு எகிப்து அதிபர் அபல்தெல் பாத் அல் – சிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட கொலைகாரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றார்.

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!!

Irland

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரில் 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியில் அசத்தியது. இதனால் 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணிக்கு சிமன்ஸ் 102 ஓட்டங்களையும், டெரன் சமி 89 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

பந்து வீச்சில் அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டாக்ரெல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கெவின் ஓ பிரையன், ஜான் மூனி, அண்டி மெக்பிரைன் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

305 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற திணறினர்.

இதன் காரணமாக அயர்லாந்து அணி 45.5 ஓவர்களிலே இலக்கை எட்டியது. அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்டு 23 ஓட்டங்களையும், எட் ஜோய்ஸ் 84 ஓட்டங்களையும், நியால் ஓ பிரையன் 79 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் ஜான் மூனி 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், டெய்லர் 3 விக்கெட்டுகளையும், கெய்ல், சாமுவேல்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டு முறை உலகக் கிண்ணம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை பலம் குன்றிய அணியாக கருதப்படும் அயர்லாந்து வீழ்த்தி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு : 4 பாகை செல்சியஸில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்!!

Nuwaralia

இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இவ்வாறு காலநிலை காணப்பட்டால் மரக்கறி வகைகளுக்கும் தேயிலை செடிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளா் தெரிவித்தார்.

கடும் குளிர் காரணமாக பாடசாலை மாணவர்களும் வேலைக்குச் செல்வோரும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

21 வயது இளம் தாயை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பிழைப்பு நடத்திய மூவர் கைது!!

Abu

21 வயது இளம் தாய் ஒருவரை நடமாடும் விபச்சார சேவையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதிகள் மூவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஒற்றர்கள் மூலம் சந்தேகநபர்களும் இளம் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் 3000 ரூபா பெறும் முச்சக்கர வண்டி சாரதிகள் இளம் தாய்க்கு 1000 ரூபா வழங்குவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (16.02) தம்புள்ளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.