செல்லுபடியான வாக்குகள் 1,266,085 (98.83 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,009 (1.17 %)
அளிக்கப்பட வாக்குகள் 1,281,094 ( 81.49 %)
மொத்த வாக்காளர்கள் 1,572,051
இலங்கையில் இடம்பெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
நான் மைத்திரிபாலவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையில் அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். ஒரு நெருங்கிய நண்பன், அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷத்தின் முன்னணி கிரிக்கெட் வீரரான ருபெல் ஹொசைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பெண்தோழியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் நோக்கில் அவரை திருமணம் செய்துகொள்வதாக போலியாக உறுதியளித்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இப்படியானக் குற்றச்சாட்டை அவரது முன்னாள் பெண் தோழியும் திரைப்பட நடிகையுமான நஸ்னீன் அக்தர் ஹாப்பி சுமத்தியுளார்.
பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் நோக்கில் திருமணம் செய்துகொள்வதாக உத்தரவாதம் அளித்து ஏமாற்றுவது பங்களாதேஷ சட்டத்தின்படி பாலியல் வல்லுறவாகக் கருதப்படும்.
அடுத்த மாதம் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணியில் அவர் இடம்பெறுகிறார்.
ஆனால் அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரால் அப்போட்டியில் பங்கேற்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 75% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இன்று (09.01) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.