யாழ் மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!!

மைத்திரிபால சிறிசேன   10885    69.17%
மஹிந்த ராஜபக்ஷ                 4607   29.27%
சுந்தரம் மகேந்திரன்                 73    0.46%

யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்!!

மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை   38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை              13300

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் : அனைத்து மாவட்டங்களும்!!

Presidential Election

 

முடிவுகளை தெரிந்துகொள்ள தேவையான மாவட்டத்தின் மீது கிளிக் செய்யுங்கள்..

வவுனியா [RELEASED]
மன்னார் [RELEASED]
முல்லைத்தீவு [RELEASED]         வன்னி தேர்தல் மாவட்டம் [RELEASED]
யாழ்ப்பாணம் [RELEASED]
கிளிநொச்சி [RELEASED]
கொழும்பு [RELEASED]
மட்டக்களப்பு
அம்பாறை
திருகோணமலை
இரத்தினபுரி
கம்பஹா
களுத்துறை
கண்டி
மாத்தளை
நுவரேலியா
காலி
மாத்தறை
அம்பாந்தோட்டை
குருநாகல்
புத்தளம்
அனுராதபுரம்
பொலநறுவை
பதுளை
மொனராகலை
கேகாலை

அம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!!

மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை            10295
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை   5620

பொலனறுவை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!!

மைத்திரிபால சிறிசேன 9480
மஹிந்த ராஜபக்ஷ 4309

தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : அனைத்து மாவட்டங்களும்!!

உங்கள் மாவட்டத்தின் மீது கிளிக் செய்யவும்..

இரத்தினபுரி [RELEASED]
கொழும்பு  [RELEASED]
கண்டி [RELEASED]
நுவரெலியா [RELEASED]
அம்பாந்தோட்டை [RELEASED]
யாழ்ப்பாணம் [RELEASED]
வன்னி [RELEASED]
மட்டக்களப்பு [RELEASED]
திருகோணமலை [RELEASED]
அனுராதபுரம் [RELEASED]
பொலநறுவை [RELEASED]

காலி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஷ 42956
மைத்திரிபால சிறிசேன 37095

மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8281
மைத்திரிபால சிறிசேன 7513

மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8483
மைத்திரிபால சிறிசேன 8394

மாத்தறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 13270
மைத்திரிபால சிறிசேன 10382

பதுளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 13115
மைத்திரிபால சிறிசேன 13031

அம்பாறை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 11917
மஹிந்த ராஜபக்ஷ 9713

கம்பஹா மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 20386
மஹிந்த ராஜபக்ஷ 20296

புத்தளம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 4864
மஹிந்த ராஜபக்ஷ 4721

அநுராதபுரம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 23032
மஹிந்த ராஜபக்ஷ 19643

களுத்துறை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 12962
மஹிந்த ராஜபக்ஷ 14830

இரத்தினபுரி தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!!

 

மஹிந்த ராஜபக்ஷ               11864   56.72%
மைத்திரிபால சிறிசேன      9053   43.28%
மற்றவர்கள்                                   59    0.28%

செல்லுபடியானவை          20,976  98.47 %
நிராகரிக்கப்பட்டவை              326    1.53 %
அளிக்கப்பட்டவை              21,302  98.48 %
மொத்த வாக்காளர்கள்      21,630

வவுனியாவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல்களால் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு : இன்றைய நிலவரம்!!(படங்கள்)

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று 08.01.2015 வவுனியாவில் மிகவும் நேர்மையான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் வாக்குச் சாவடிகளில் திரண்ட பெருமளவிலான பொதுமக்கள் வரிசை வரிசையாக வாக்களிக்க காத்திருந்தனர். காலைமுதல் திரண்டுவந்த வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் நண்பகலுக்கு முன்னதாகவே (50%) ஐம்பதுசதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தன.

எனினும் மாலை நான்கு மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பில் வவுனியாவின் மொத்த வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களில் அறுபத்தைந்துக்கும் (65%) அதிக சதவீதமான வாக்குகள் அளிக்கபட்டிருந்ததை வவுனியா தேர்தல்கள் அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்ற அதேவேளை வவுனியாவின் பலபகுதிகளிலும் கைக் குண்டுதாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்துக்கு முன்னால் இனம் தெரியாத நபர்களால் கைக்குண்டு வீசப்பட்ட சம்பவமும் அதேபோன்று வவுனியா நகரில் தமிழ் மகாவித்தியாலய வளாகத்தில் கைக்குண்டு வீசப்பட்ட சம்பவங்களாலும் வவுனியாவின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வவுனியா செயலகத்துக்கு எடுத்து செல்லும் சமயம் பார்த்தே மேற்படி குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்காரணமாக வாக்குபெட்டிகளை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வவுனியாவின் பல பிரதேசங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன் குறிப்பிடும்படியாக எவ்வித வன்முறைகளும் இடம்பெற்றிராத சூழ்நிலை காணப்பட்டதும், ஆளும்தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பெருமெடுப்பில் இடம்பெற்றபோது கூட எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியதாக இல்லை.

கடந்த வாரம் வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வவுனியா மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்வதாகவும் தொடர்ந்தும் அந்த நிம்மதியான வாழ்கையை தான் பெற்றுத்தருவதாகவும் தேர்தல் பிரச்சார மேடையில் முழங்கியதும், பொதுமக்கள் தனக்கு அமோக ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வவுனியாவின் இயல்பு நிலையானது தேர்தலின் பின் இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் மனதில் பெரும் பீதியைக்கிளப்பியுள்ளது. போலீசார் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் வாக்குகள் எண்ணப்படும் வவுனியா செயலகம் மற்றும் வவுனியா நகர்ப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளும் தீவிரபடுத்தபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

நாளை வெளியாகும் தேர்தல்கள் முடிவுகள் எவ்வாறு அமையும் யார் வெற்றிபெறப்போகின்றார் அடுத்த ஆட்சியில் அமரப்போகும் அந்த ஜனாதிபதி, அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்த நிலைபாடுகள் தெரியாத நிலையில் வாக்களித்த இலங்கைவாழ் மக்கள் நாளை விடியும் நல்ல பொழுதிற்காக காத்திருக்கின்றனர்.

-பண்டிதர்-

VTN VTN1

v1v2 v3v4 v5

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்குப் பின் வெளியாகும்!!

Presidential Election

7வது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் முதலாவது தேர்தல் முடிவை இரவு 10 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அது தபால் மூல முடிவாக அமையும் என்றும் ஏனைய வாக்களிப்பு முடிவுகள் 12 மணிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும் இறுதி முடிவு வெளியாவது எப்போது என்று கூற முடியாதென்றும் இறுதி முடிவு வெளிவர நாளை மாலையாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கைகள் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி நிறைவுபெற்றுள்ளன. தேர்தல் காலத்தில் மக்கள் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை கவலைஅளிக்கிறது. பலியான நபரின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இனி இவ்வாறு நடைபெறாமல் தவிர்ப்பது நன்று.

தேர்தல் முடிவு வெளிவரும் போது தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம். தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், பொலிஸார், ஊடகவியலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தேசிய முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிவரை 328 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றில் பாரிய முறைப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை.

ஆனால் வாக்களிப்பு நிலையங்களில் பென்சில் பாவனை, வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லல், குறித்த நபருக்கு வாக்கு அளிக்கச் சொல்லுதல் போன்றன தொடர்பிலான முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றன. மேலும் வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லப்படும் போது மாற்றப்படும் அல்லது வாக்குச்சீட்டு களவாகத் திணிக்கப்படும் என்றெல்லாம் முன்வைக்கப்பட்டும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை. அவை பொய் பிரச்சாரங்கள்.

வாக்கெண்ணும் நடவடிக்கையை கைவிடும் தேவை இல்லை. தேர்தல் செயலகத்தை எஸ்ரிஎப் சூழ்ந்துள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை. தேர்தல் செயலகம் பாதுகாப்பாகவே உள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் 72,618 (66%) பேர் வாக்களிப்பு : ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்!!(படங்கள், வீடியோ)

வவுனியாவில் 72,618 பேர் (66%) வாக்களித்துள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் வவுனியா மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர். அமைதியான முறையில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

வவுனியா மாவட்டத்தின் 134 நிலையங்களில் வாக்குகள் பதிவு நடைபெற்றதுடன் இம்முறை தேர்தலில் வாக்களிக்க 109705 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி-

வவுனியா – 65%
யாழ்ப்பாணம் – 58%
கிளிநொச்சி – 64%
முல்லைத்தீவு – 73%
மன்னார் 68%

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையத்திலிருந்தும் வாக்கு பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந் நிலையில் 15 வாக்குஎண்ணும் நிலையங்களில் 9 நிலையங்களில் சாதாரண வாக்குகளும் 6 நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் எண்ணப்படவுள்ளது.

தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்..

v1v2 v3v4 v5

வாக்களிப்பின் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் (படங்கள் வீடியோ )

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இன்று காலையிலேயே வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களித்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரிலும், எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் வடமராட்சிக்கிழக்கு குடத்தனையிலும் வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்திலும் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார் .

குறிப்பாக இன்றைய தினம் 12 மணிவரை மாவட்டத்தில் 20வீத வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்..

இதேவேளை மக்களின் வாக்களிப்பு வீதம் மற்றும் குறைவடைந்திருக்கவில்லை என தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. மேலும் யாழ்.கொல்லங்கலட்டி பகுதி யில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா மற்றும் இருபாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் வாக்களிப்புச் செய்திருக்கின்றனர். வாக்களிப்பின் பின்  பத்திரிகையாளர்களை  சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்  தேர்தல் தெரிவத்தாட்சி  அலுவலகர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் இன்று இடம்பெறும் வாக்களிப்பு தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் தெரிவித்த கருத்துக்கள் காணொளி வடிவில்

sri_sumanthiran_002

12

 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வாக்குச் சாவடி மீதும் கைக்குண்டுத் தாக்குதல்!!

vttm

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் வாக்குச் சாவடிக்கு அண்மையில் சற்றுமுன்னர் 4.00 மணியளவில் கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி கைக்குண்டு வெடிக்காததினால் சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், அப்பிரதேசம் எங்கும் பதட்டநிலை காணப் படுகின்றது. அத்துடன் மேற்படி குண்டை செயலிழக்க செய்ய, பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப் பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்த வாக்கு சாவடியில் இருந்து வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய வாக்குச் சாவடி மீது கைக்குண்டுத் தாக்குதல் : மக்கள் பதற்றம் : வெறிச்சோடிய வவுனியா நகரம்!!(படங்கள் இணைப்பு)

இலங்கையின் 7வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நாடு முழுவதும் இறுதிகட்ட வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

வவுனியாவிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன் நிலையில் 2.40 மணியளவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவத்தையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியத்திற்கு பின்னர் வவுனியா நகரம் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பாஸ்கரன் கதீசன்-


12 13 1514

காலையிலேயே சுறுசுறுப்பாக ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த, மைத்திரி இருவரும் வாக்களிப்பு!(படங்கள், வீடியோ)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

7வது ஜனாதிபதிக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தர் வாக்களித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் சென்ற அமைச்சர் அவர்கள் தமது வாக்கை பதிவு செய்துள்ளார் .

vote_mahi_my3_001vote_mahi_my3_002

mahintha_vote_002

1555444_927796327254999_4325724743577605758_n

 

மும்முரமாக நடைபெறும் 7வது ஜனாதிபதித் தேர்தல் : தேர்தல் மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்!!!

Mahinda

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் 12,316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

ஜனா­தி­பதி தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்பில் 19 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­வ­துடன் பிர­தா­ன­மாக இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கு இடையில் கடும் போட்டி நில­வு­கின்­றது.

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவும் பொது எதி­ர­ணியின் சார்பில்பொது வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் இவர்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லேயே கடு­மை­யான போட்டி காணப்­ப­டு­கின்­றது.

இலங்கை ஜனா­தி­பதி தேர்­தல்கள் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­ வ­கித்த ஒருவர் மூன்­றா­வது தட­வை­யாக போட்­டி­யி­டு­கின்றார்.

கடந்த 2005ம் ஆண்டு மற்றும் 2010ம் ஆண்­டு­களில் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச இம்­முறை மூன்­றா­வது தட­வை­யா­கவும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.

மாவட்டங்கள் வாக்காளர் எண்ணிக்கை

கொழும்பு                 15,86,598
கம்பஹா                  16,37,537
களுத்துறை              8,97,349
கண்டி                        10,49,160
மாத்தளை                  3,79,675
நுவரெலியா             5,34,150
காலி                            8,19,666
மாத்தறை                  6,23,818
அம்பாந்தோட்டை 4,62,911
யாழ்ப்பாணம்          5,29,239
வன்னி                        2,53,058
மட்டக்களப்பு           3,65,167
திகாமடுல்ல            4,65,757
திருகோணமலை 2,56,852
குருணாகலை      12,66,443
புத்தளம்                    5,53,009
அனுராதபுரம்          6,36,733
பொலன்னறுவை 3,07,125
பதுளை                     6,20,486
மொனராகலை      3,39,797
இரத்தினபுரி            8,10,082
கேகாலை                6,49,878

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,504,490

2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500

2015 ல் 14,15,990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய வாக்குச் சாவடி மீது கைக்குண்டுத் தாக்குதல்!!

Nelu
இலங்கையின் 7வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நாடு முழுவதும் இறுதிகட்ட வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

வவுனியாவிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன் நிலையில் சற்று முன்னர் 2.40 மணியளவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தின் மீது இனந்தெரியாத நபர் கைக்குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர் என்று தெவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.