வவுனியா நகரில் சூடுபிடித்துள்ள பொங்கல் பண்டிகை வியாபாரம் : கொள்வனவு செய்ய திரண்டுள்ள மக்கள் கூட்டம்!!(படங்கள்)

10934660_945663708786916_368751491_nநாளை கொண்டாடப்படும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலைமுதல்  மாலை வரை  வவுனியா நகரில்   பெருமளவிலான பொதுமக்கள் திரண்டு கொள்வனவு  நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்குரிய  புதிய பானை அகப்பை மற்றும் பொங்கல் பொருட்களான  கரும்பு இஞ்சி மஞ்சள்  மற்றும் பழவகைகள்  பட்டாசுகள் பூந்திரிகள்  முதலியவற்றை முண்டியடித்து கொள்வனவு  செய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டியிருந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாளான இன்று பாடசாலைகளுக்கு  விடுமுறை  அறிவிக்கபட்டிருப்பதால்  பெருமளவிலான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வவுனியா நகரில் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் .

புதிய ஆட்சி  மாற்றத்தின் பின்னரான இந்த பொங்கல் பண்டிகையில்  பொதுமக்கள் தற்போதைய  ஆட்சியாளர்களின்  வருகையும்  அதன்பின்னர்  ஏற்படபோகும்   மாற்றங்கள்  தொடர்பாக  வர்த்தகர்களுடன்  அளவளாவியபடியே  கொள்வனவு  நடவடிக்கையில்  ஈடுபட்டனர் .

வவுனியா நகரிலிருந்து வாசகன்

 

வவுனியாவில் பாப்பரசரின் வருகையை முன்னிட்டு 8 சிறைக் கைதிகள் விடுதலை!!

va

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலலில் வைக்கப்பட்டிருந்த 8 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் வருகையை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்தாமையாலும் சிறைவாசம் அனுபவிப்போர் 1000 பேர் நாடுதழுவிய ரீதியில் விடுவிக்கப்படுகின்றனர்.

இதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சிறு குற்றங்களின் கீழ் விளக்கமறியலில் இருந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது விளக்கமறியலில் இருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே. யு.எச்.எம்.அக்பால் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தில் பாப்பரசர் : ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்!!

புனித பாப்பரசர் அருட்தந்தை பிரான்சிஸின் உலங்கு வானூர்தி மூலம் வடக்கின் மடு தேவாலயத்திற்கு வருகைதந்துள்ள நிலையில் விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளது.

பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்டத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கூடியுள்ளனர்.

இதேவேளை மடு தேவாலயத்தை சூழ பொலிசார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

12 13 14 11

அமைச்சர் பதவிகளை ஏற்கப் போவதில்லை : 100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கிறேன் : பா. உ. செல்வம் அடைக்கலநாதன்!!

selavam

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசாங்கத்தில் தனக்கு எந்தவிதமான அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்ற வேண்டிய மக்களுக்கு மீண்டும் நிலங்கள் மற்றும் நிரந்தர வீடுகள் பெற்று கொடுக்க வேண்டியது குறித்து ஜனாதிபதியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

ஊவா மாகாண புதிய முதலமைச்சராக ஹரின் பெர்ணான்டோ பதவியேற்பு!!

Harin

ஊவா மாகாணசபை முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஹரின் பெர்ணான்டோ இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் சற்றுமுன்னர் இடம்பெற்றது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சசீந்திர ராஜபக்ச முதலமைச்சராக செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து ஊவா மாகாணசபையிலும் ஐந்துபேர் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.

இதனையடுத்து ஊவா மாகாணசபையில் ஐக்கிய தேசியக்கட்சியில் 17 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 15 உறுப்பினர்களும் என்ற அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது இதனை எதிர்கட்சி தலைவராக இருந்த ஹரின் பெர்ணான்டோ ஆளுநரிடம் நேற்று அறிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே ஆளுநர் இன்று ஹரின் பெர்ணான்டோவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.

பாப்பரசரின் திருப்பலி ஆராதனையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு!!

காலி முகதத்திடலில் தற்போது இடம்பெறும் பரிசுத்த பாப்பரசரின் திருப்பலி ஆராதனைக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர். காலி முகத்திடலிற்கு நேற்றிரவிலிருந்து மக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 2

வவுனியாவிலிருந்து மடுத்தலம் நோக்கி பாப்பரசரை தரிசிக்க புறப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் !(படங்கள் )

இன்றைய தினம் இலங்கை வந்துள்ள பாப்பரசர் நாளை14/01/2015  மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்கையில், அவரைச் சந்தித்து, காணாமல் போயுள்ள தமது உறவுகளை  தேடிக் கண்டு பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோருவதற்காக காணாமல் போயுள்ளவர்களின் குடும்பத்தினர் வவுனியாவில் இருந்து மடுதிருத்தலம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

காணாமல் போயிருப்பவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு எண்ணற்ற தடவைகள் இலங்கை அரசாங்கத்திடமும், முன்னாள் ஜனாதிபதியிடமும் தாங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் எதுவித பதிலும் கிடைக்காத சூழ்நிலையில் மேற்படி விஜயத்தை ஒழுங்கு செய்துள்ளனர்  .

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை  உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமும் தாங்கள் தமது கோரிக்கையை முன்வைத்ததாகவும், ஆயினும் பயனேதும் ஏற்படாத நிலையில், இலங்கை வந்துள்ள புனித  பாப்பரசரிடம் தமது கோரிக்கையை முன்வைத்து மன்றாடுவதற்காகத் புறப்பட்டு  செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மடுத்திருப்பதிக்கு விசேட உலங்கு வானூர்தி மூலமாக வருகை தரவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், அங்கு நடைபெறும் விசேட பூஜையில் கலந்து கொள்வார்.

மடுத்திருப்பதியில் ஒரு மணித்தியாலம் தங்கியிருக்கும் பாப்பரசர் அங்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் யுத்தத்தினால் அவயவங்களை இழந்தவர்கள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் போன்றோரையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

timthumb (1) timthumb (2) timthumb (3)

 

அமெரிக்க இராணுவ டுவிட்டர், யூடியூப் தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் !

2073317_cyber-attack_7hqdjmj4am3d2cszxsyeykq4xpncurxrbvj6lwuht2ya6mzmafma_610x457

வாஷிங்டன்: அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் (@CENTCOM)  டுவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த ஹேக்கிங் செயலுக்கு, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டிக் கொண்ட ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் சதி வேலைதானா என்பது குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி சரியாக 12.30 மணியளவில், (@இஉNகூஇOM)டுவிட்டர் பக்கத்தில் விஷமிகள் சிலர் அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட வீரர்கள் பலரின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை Cyber Caliphate என்ற ஹேஷ்டேகை உருவாக்கி பதிவிட தொடங்கினர். இதனையடுத்து, அமெரிக்க இராணுவ டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சைபர் பாதுகாப்பு, சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக உரையாற்றவிருந்த வேளையில், இராணுவ டுவிட்டர் பக்கத்தில் அத்துமீறப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், அமெரிக்க ராணுவ டுவிட்டர் பக்கத்தில் ”நாங்கள் வருகிறோம். ஏற்கனவே உங்கள் பாதுகாப்பு வலைப்பக்கங்களில் ஊடுருவிவிட்டோம். இனி அமெரிக்காவின் பாதுகாப்பு மையங்களில் இருக்கும் ஒவ்வொரு கணினியிலும் ஊடுருவுவோம்” என தீவிரவாதிகள் எச்சரிக்கை நிலைத்தகவல் பதிவிட்டுள்ளனர். தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் பக்கம் அந்நிறுவனத்தின் உதவியுடன் 30 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து, டுவிட்டர் பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எனக் கூறிய நபர்கள் பதிவு செய்திருந்த ஹேஷ்டேக்கும் எச்சரிக்கை நிலைத்தகவலும் நீக்கப்பட்டன.

மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியரக வானூர்தி மீட்பு! அருகில் நாமலின் வாகனமும் மீட்பு!

D0650d

மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானமொன்று கொழும்பு 5இல் உள்ள பொருளாதார வலயத்தில் பொலிஸாரினால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இருந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சீ.எஸ்.என் நிறுவனத்தின் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே மேற்படி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இருவர் பயணிக்கலாம் எனவும் இந்த விமானத்தை இயக்குவதற்கு தேவையான பொருட்கள் அவ்விடத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் சாதனை நாயகன் சங்கக்கார!!

Sangakaara

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தென் ஆபிரிக்க அணி(124 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. அவுஸ்திரேலிய அணி (118 புள்ளிகள்) 2வது இடத்தையும், இங்கிலாந்து அணி (104 புள்ளிகள்) 3வது இடத்தையும், பாகிஸ்தான் அணி (103 புள்ளிகள்) 4வது இடத்தையும், நியூசிலாந்து அணி (99 புள்ளிகள்) 5வது இடத்தையும், இலங்கை அணி (96 புள்ளிகள்) 6வது இடத்தையும் வகிக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வி கண்ட இந்திய அணி (95 புள்ளிகள்) 6வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது.

துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்கார (909 புள்ளிகள்), தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்சை (908 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் சங்கக்கார மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சு தரவரிசையில் தென் ஆபிரிக்க வீரர் ஸ்டெயின் முதலிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் ரையான் ஹரிஸ் 2வது இடத்திலும், இலங்கை வீரர் ஹேரத் 3வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் அண்டர்சன் 4வது இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் ஜோன்சன் 5வது இடத்திலும் உள்ளனர்.

சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் வங்கதேச வீரர் ஷகிப் அல்-ஹசன், தென் ஆபிரிக்க வீரர் பிலாண்டர், இந்திய வீரர் அஸ்வின் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.

ஐ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் : தயாரிப்பாளர் உறுதி!!

III

ஐ என்ற பிரமாண்ட படத்தை தயாரித்தவர் ஒஸ்கர் ரவிச்சந்திரன். இப்படம் நாளை உலகம் முழுவது பல இடங்களில் ரிலிஸாக உள்ளது.

இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் ‘சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும் நாளை புதன்கிழமை படம் வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைனிலும் நாளை படம் திரைக்கு வருகிறது.மேலும், இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் பெப்ரவரி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அப்போது ‘ஐ’ படத்தை அங்கு திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இதேபோல் ஜப்பானிலும் அடுத்த மாதம் வெளியிடப்படும். உலகம் முழுவதும் இந்தப் படம் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

வெளியாக முன்பே சாதனை படைத்த ஐ திரைப்படம்!!

I

ஐ படத்தை நாளை காண கோடான கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது. சமீபத்தில் வந்த தகவலின் படி நேற்றே பல திரையரங்குகளில் இந்த வார இறுதி வரை ஹவுஸ் புல் ஆகிவிட்டதாம்.மேலும், வெளி நாடுகளிலும் இப்படத்தின் புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தவிருக்கும் த்ரிஷா!!

Trisha

த்ரிஷா- வருன் மணியனின் நிச்சயதார்த்தம் ஜனவரி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இவர்கள் திருமணம் குறித்து அன்றையே திகதியில் அறிவிக்கப்படும் எனவும், திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தலாம் என யோசித்து வருகிறார்களாம். த்ரிஷா நடிப்பில் என்னை அறிந்தால், பூலோகம் ஆகிய படங்கள் வெளிவர ரெடியாக உள்ளது.

இணையத்தில் வெளியான பிரபல நடிகையின் நிர்வாணப் படங்கள்!!

act

இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரபல நடிகை ராதிகா ஆப்தேயின் ஆபாசப் படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வட்ஸ் அப்பில் நடிகை வசுந்தரா, காதலனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனை மாபிங் செய்து வெளியிட்டு விட்டதாக கூறியதுடன், டுவிட்டர் பக்கத்திலிருந்தும் வசுந்தரா வெளியேறினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோல் சிக்கலில் சிக்கி இருக்கிறார் ராதிகா ஆப்தே.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், உலா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் குளியலறையில் ஆடையின்றி குளிப்பது போன்ற படங்கள் வட்ஸ் அப் பகுதியில் வெளியாகி உள்ளது. இதெல்லாம் ராதிகாவே எடுத்ததா அல்லது அவரது புகைப்படங்களை யாராவது மாபிங் செய்து வெளியிட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.

தந்தையை காப்பாற்றிய 6 வயது சிறுவனுக்கு ”இளம் ஹீரோ” விருது!!

Boy

கனடாவில் அர்ஜூன்பால் காட்றா என்ற 6 வயது சிறுவன் யோர்க் பிராந்திய பொலிசாரிடமிருந்து துணிச்சலுக்காக ”இளம் ஹீரோ” என்ற விருதினை பெற்றுள்ளான்.

ரோறொன்ரோ பெரும்பாக உள் கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் தலைவர்களுக்கான தெரிவு விழாவில் காட்றாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த இளம் தலைவர்கள் விருதுகள் Intercultural Dialogue Institute of the GTA நிறுவனத்தால் வருடந்தோறும் வழங்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் 9ம் திகதி இரவு, வளவிற்குள் நடந்து கொண்டிருக்கையில் காட்றாவின் தந்தை தவறான அடியை எடுத்து வைத்ததால் 25அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் விழுந்துள்ளார்.

அப்போது காருக்குள் தூங்கி கொண்டிருந்த காட்றா, தந்தையை காணவில்லை என்று கவலையுடன் தேடிச்சென்ற போது கிணற்றுக்குள் கிடப்பதை கண்டுள்ளான்.

தந்தையை காப்பாற்ற வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்த முனைந்துள்ளான். வீடுகளின் கதவுகள் பலவற்றை தட்டிய முயற்சியில் ஒரு வீட்டிலிருந்தவர் ஒருவர் உதவ முன்வந்தார்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த அவசர சேவை பிரிவினர் ஏணி ஒன்றை கொடுத்து வெளியே எடுத்தனர்.

அந்த இளம் சிறுவனை ‘என்ன ஒரு தைரியமான இளைஞன்’ என பாராட்டியதோடு அவனது புகைப்படத்தையும் சேர்த்து யோர்க் பிராந்திய பொலிசார் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த விருது வழங்கும் விழாவை நடத்தும் Const. Andy Pattenden கூறுகையில், ஆறு வயதில் பீதியடையாது நடு இரவில் உதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு செயலாற்றியது அற்புதம் என தெரிவித்துள்ளார்.

ஏர் ஏசியா விபத்துக்குள்ளானது எப்படி : வெளியான புதுத் தகவல்!!

Airasia

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய தகவல் ஒன்றை மீட்பு படையின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது கருப்பு பெட்டியும், அதன் மற்றொரு பாகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது தொடர்பாக புதிய தகவல் ஒன்றை மீட்புப் படையின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி.சுப்ரியாடி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

இதுவரை மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களில் ஏற்பட்டுள்ள சிதைவை ஆய்வு செய்து பார்த்த வகையில், கடல் பகுதியை நோக்கி வேகமாக கீழே இறங்கியபடி பறந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புவி ஈர்ப்பு விசையின் மாற்றத்தால் விமானத்தின் கெபின் பகுதியில் அழுத்தம் அதிகமாகி இருக்கலாம்.

அந்த அழுத்தத்தை சமன்படுத்துவதற்குள் தரையை நோக்கி பாய்ந்த விமானம் கடலின் மீது மோதி விழுந்ததில் அது வெடித்து சிதறியிருக்கலாம் என கூறியுள்ளார்.

இதற்கு சான்றாக விமானத்தின் இடதுப் புற இறக்கை அதிகமாக சிதைந்துள்ளதையும், சம்பவ தினத்தன்று அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் பயங்கர வெடிச் சத்தத்தை கேட்டதாகவும், கடல் பகுதியின் மேற்பரப்பில் இருந்து புகை வந்ததை கண்டதாகவும் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.